1957 – ல் குளித்தலைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு சட்டப்பேரவைக்குக் கலைஞர் 8 – ஆம் மாதம், நான்காம் நாள் கவர்னர் உரை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு தனது ‘கன்னி உரையை’ ஆற்றினார். “அவைத்தலைவர் அவர்களே! இன்று மேன்மை தங்கிய கவர்னர் அவர்களுடைய உரையைப் பற்றி நான் போற்றவும் வரவில்லை, தூற்றவும் வரவில்லை. என்னுடைய கருத்துரையை ஆற்றவே வந்திருக்கிறேன்”
என்பதுதான் அவர் சட்டமன்ற உறுப்பினராகப் பேசிய முதல் வாக்கியம்.