எனது முகநூல் பக்கம்
▼
June 25, 2007
"சிங்கை இக்பால்"
புத்தகத்திற்கு'நூல்' என்று பெயர்
வைத்தவர்கள்
புத்திசாலிகள்
ஒன்று
கிழிந்த துணிகளைத்
தைக்கிறது
மற்றொன்று கிழிந்த
மனிதர்களைத் தைக்கிறது
தமிழ்க் கவிஞர் "சிங்கை இக்பால்" அவர்களின் நேர்முகம் படிக்கத் தயவுசெய்து இணைப்பை அழுத்துகTamil magazine Tamil news,poem,story,movie & song reviews
தமிழோசை
இன்றைய "BBC" (ஜுன் 25 திங்கட்கிழமை) 16 வயது சிறுவன் "சிசேரியன்" செய்த அவலம் பற்றிய செய்தி கேட்க கீழுள்ள இணைப்பை அழுத்தவும்.
BBCTamil.com Radio Player
BBCTamil.com Radio Player
சிவா என்ற ஒரு இணைய நண்பர் கேட்ட கேள்விக்கு நான் அளித்த பதில்கள்
1. கல்யாணம் அவசியமா?
வாழ்க்கையில் கஷ்டம் என்றால் என்ன என்பதை அறியாமலேயே இருக்க உங்களுக்கு ஆசையா?
2. நீங்கள் அடிக்கடி செல்லும் ஒரு இடம்? ஏன்?
கோவில். கல்யாணம் ஆகிவிட்டதே!
3. உங்கள் வீட்டில் நாய், பூனை ஏதாவது?
எனக்குத் தெரிந்து ஒன்றே ஒன்று இருக்கிறது
4. நீங்கள் அடிக்கடி விரும்பாமல் உண்ணும் உணவு?
எப்போதாவது விரும்பி உண்ணுவது
5. வித்யாசமான அனுபவம்?
நான், நீங்கள் சந்தித்துக் கொள்ளாமலே இப்படி இணையம் வழியாகப் பேசிக்கொள்வது
6. தவறான பஸ்ஸில் நுழைந்த அனுவபம்?
இல்லை, தவறாக நுழைந்திருக்கிறேன். ஆனால் தவறான பஸ் என்பது இதுவரை நான் கண்டதில்லை
யார் குற்றம்?
இந்தக் கணினி யுகத்தில் நாம் எங்கே போய்க்கொண்டிருக்கிறோம்?
- மாதவிலக்கு என்பது அவ்வளவு பெரிய குற்றமா?
- 10 வயதுப் பெண்ணை 50 வயது ஆண் திருமணம் செய்வதும்,
- 40 வயதுப் பெண் 10 வயது ஆண்களைத் திருமணம் செய்துகொள்வதும்,
- யார் யாரிடம் வேண்டுமானாலும் போகலாம்
என்ற ஒரு கலாச்சாரம் நமது பாரம்பரியம் மிக்கத் தமிழ்க் கலாச்சாரத்தில், நமது தமிழ்நாட்டில், கரூர் பக்கத்திலுள்ள ஒரு கிராமத்தில் இன்றும் நடந்து கொண்டிருக்கிறது என்பதைக் கேட்கும்பொழுது உங்களுக்கு மட்டுமல்ல எனக்கும்
தலைசுற்றுகிறது.
- இவர்களையெல்லாம் சுட்டுத்தள்ள வேண்டாமா?
- இது எப்படி இத்தனை காலம் நமக்குத் தெரியாமல் போனது??
தொடர்ந்து இந்த அவலத்தைப் பார்க்க இந்த வீடியோவைப் பார்க்கவும். உங்களைப் போலவே நானும் ஆயிராமாயிரம் கேள்விகளுடனும், அதிர்ச்சியுடனும்.......
கடைசிவரைக் கதையைச் சொல்லாமல் வைத்திருந்ததற்குக் காரணம் படத்தில் "கதை என்ற ஒன்றே இல்லை" என்பதுதான் என்று பலர் பலவாறு பேசினாலும் பாடல்கள் கேட்கும்படியாக உள்ளதால் உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன். "சிவாஜி" பாடல்கள் கேட்க கீழுள்ள "செயலி"யைப் பயன்படுத்திப் பாடல்களைக் கேட்கவும்
| Powered by eSnips.com |
இன்றைய குறள்
உரனென்னுந் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்து
உறுதியென்ற அங்குசம் கொண்டு, ஐம்பொறிகளையும் அடக்கிக் காப்பவன், துறவறம் எனும் நிலத்திற்கு ஏற்ற விதையாவான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்து
உறுதியென்ற அங்குசம் கொண்டு, ஐம்பொறிகளையும் அடக்கிக் காப்பவன், துறவறம் எனும் நிலத்திற்கு ஏற்ற விதையாவான்
அறத்துப்பால் : நீத்தார் பெருமை