எனது முகநூல் பக்கம்
▼
July 07, 2007
இன்றைய குறள்
அன்றறிவாம் என்னா தறஞ்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை
பொன்றுங்கால் பொன்றாத் துணை
பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று நாள் கடத்தாமல் அறவழியை மேற்கொண்டால் அது ஒருவர் இறந்தபின் கூட அழியாப் புகழாய் நிலைத்துத் துணை நிற்கும்
அறத்துப்பால் : அறன் வலியுறுத்தல்
தமிழோசை
இன்றைய (ஜுலை 07 சனிக்கிழமை) "BBC" நிகழ்ச்சிகளைக் கேட்க 'க்ளிக்' செய்க BBCTamil.com Radio Player
எனை ஈன்ற தந்தைக்கும் தாய்க்கும் திணையளவு நலமேனும் கிடைக்குமென்றால், செத்தொழியும் நாள் எனக்கு திருநாளாகும்

- பாரதிதாசன்
தமிழுக்கும் அமுதென்று பேர்! -
அந்தத்தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்!
தமிழுக்கு நிலவென்று பேர்! - இன்பத்தமிழ்
எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர்!
தமிழுக்கு மணமென்று பேர்! - இன்பத்தமிழ்
எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்!
தமிழுக்கு மதுவென்று பேர்! - இன்பத்தமிழ்
எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்!
தமிழ் எங்கள் இளமைக்குப் பால்! - இன்பத்தமிழ்
நல்ல புகழ் மிக்க புலவர்க்கு வேல்!
தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்! - இன்பத்தமிழ்
எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்!
தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்! - இன்பத்தமிழ்
எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்!
தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்! - இன்பத்தமிழ்
எங்கள் வளமிக்க உளமுற்ற தீ!
தவறாமல் இந்தப் பாடலைக்கேட்கவும், இணைப்பில் செல்க.http://www.tamilnation.org/asx/thamizh.asx
காலத்தால் அழியாத பாடல்களைப் பாடிய எத்தனையோ பாடகர்களில் திருச்சி லோகநாதன் அவர்களின் குரலையும் தமிழ்பால் பற்றுள்ள எவரும் மறந்துவிட முடியாது
| Powered by eSnips.com |