பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து
தமக்கு இழைக்கப்படும் தீமையைப் பொறுத்துக் கொள்பவர்களை உலகத்தார் பொன்னாக மதித்துப் போற்றுவார்கள். பொறுத்துக் கொள்ளாமல் தண்டிப்பவர்களை அதற்கு ஒப்பாகக் கருதமாட்டார்கள்
அறத்துப்பால் : பொறையுடைமை
கடந்த ஐம்பதாண்டுகளில் அமெரிக்க கலாச்சாரத்தில் முக்கியமான நபராக திகழ்ந்த நார்மன் மெய்லர் தனது 84 வது வயதில் காலமாகியுள்ளார்.
இலங்கையின் வடக்கே இடம்பெற்ற மோதலில் பலர் பலி : இலங்கையின் வடக்கே மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களின் இராணுவ முன்னரங்க பகுதிகளில் வெவ்வேறு இடங்களில் இடம்பெற்ற வெவ்வேறு மோதல் சம்பவங்களில் 23 விடுதலைப் புலிகளும், இராணுவச் சிப்பாய ஒருவரும் கொல்லப்பட்டுள்ளதாகத் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் கூறியிருக்கின்றது"மொழிபெயர்ப்பின் மூலம் நான் அடைந்த வாசிப்பு அனுபவத்தை என் சக மனிதர்களும் அடையவேண்டும் எனும் ஆசையில் நான் மொழிபெயர்ப்பு செய்கிறபோது, நான் படைப்பாற்றல் அற்றவன் என்று எங்கே என்னை நினைத்து விடுவார்களோ என்ற அச்சம் என் தொடக்க நாள்களில் இருந்தது. இதனால் என் தொடக்க நாள்களின் மொழிபெயர்ப்புத் தொகுதிகளான 'அறைக்குள் வந்த ஆப்பிரிக்க வானம்', 'காற்றுக்குத் திசை இல்லை' ஆகிய நூல்களில் புத்தகத்தைத் திறந்தவுடன் என்னுடைய சொந்தக் கவிதை ஒன்றை வைத்து எனது திறமையை வெளிக்காட்டிவிடுவேன். நாளடைவில் எனது கவிதைத் தொகுதிகள் நிறைய வெளிவந்த பிறகுதான் என்னிடமிருந்து இந்தப் பழக்கம் விலகியது. தன்னம்பிக்கை பிறந்தது" - இந்திரன், எழுத்தாளர், பத்திரிகை பேட்டியில்