எனது முகநூல் பக்கம்

December 19, 2007

"மத்திய மாநில அரசுகள் ஒத்துழைத்தால் இந்திய பொருளாதார வளர்ச்சி வேகத்தை மேலும் அதிகப்படுத்த முடியும்" - பிரதமர் மன்மோகன் சிங்

இந்தியாவின் மத்திய மற்றும் மாநில அரசுகள் அர்ப்பணிப்புடன் செயற்படும் பட்சத்தில், இந்திய பொருளாதாரத்தின் தற்போதைய வளர்ச்சியை நிலைபெறச் செய்வதுடன், அதனை பத்து சதவீதம் உயர்த்தவும் முடியும் என்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அவர்கள் தெரிவித்துள்ளார். மாநில முதலமைச்சர்கள் மற்றும் மத்திய அமைச்சர்கள் பங்கேற்ற தேசிய வளர்ச்சி மன்றக் கூட்டத்தில் இன்று உரையாற்றிய பிரதமர் மன்மோகன் சிங் அவர்கள், உலக அளவிலான பொருளாதார நிலை குறித்து கவலையும் வெளியிட்டுள்ளார். இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய தமிழக முதல்வர் மு. கருணாநிதி அவர்கள், மாநில வாரியான நிதி ஒதுக்கீட்டை எளிமைப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
இந்திய ஆறுகளை இணைக்கும் திட்டத்தை ஒரு தேசியத் திட்டமாக அறிவித்து, அதற்காக கால வரையறையுடனான செயற்திட்டத்தையும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் கருணாநிதி கேட்டுக்கொண்டார்.

No comments:

Post a Comment