தமிழக அரசியல் போலவே இந்தப்பதிவும் தெளிவாக இருக்காது. சற்று உற்று நோக்கினால்தான் புலப்படும். இந்தப்பதிவைச் (அரசியலைச்)சற்று சீண்டித்தான் (அழுத்தித்தான்) பாருங்களேன். பிறகு தெளிவாகத் தெரியும். உண்மை புலப்படும்.
உடலின் அவ்வப்போதைய தேவைக்கு ஏற்ப அளவாக உணவு உட்கொள்வது.
உடலின் தேவையை அதிகரிப்பது - உடற்பயிற்சி செய்வது.
இன்சூலின் எடுத்துக் கொள்வது. இன்சூலின் மாத்திரையாக உட்கொள்ள முடியாது. ஏனெனில் அது ஒரு புரதம் எனவே நமது உடலில் அது செரித்து மாற்ற மடைந்து விடும். எனவே அதை ஊசி மூலம் உடலில் செலுத்த வேண்டும்.
க்ளுக்கோஸ் போன்ற உணவுப் பொருட்கள் உணவிலிருந்து நமது இரத்தத்தில் கலக்காமல் மாத்திரைகள் மூலம் தடுப்பது. மேலும் நமது உடலின் அனைத்து தசைகளையும் இரத்தத்தில் உள்ள அதிகமான க்ளுக்கோஸை உபயோகிக்க வைப்பது.
பலருக்கு முறையான, சரியான, ஒழுங்கான உடற்பயிற்சி மற்றும் உணவுக் கட்டுப்பாடு இவைகளிலேயே இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறைந்து விடும். சிலருக்கு நோயின் தீவிரத்தைப் பொறுத்து ஊசியும் மாத்திரைகளும் தேவைப்படும்.
நோயின் தன்மையைப் பொறுத்து தினமும் இன்சூலின் போடவேண்டுமா அல்லது தினசரி மாத்திரைகள் வேண்டுமா அல்லது இரண்டுமே சேர்த்து வேண்டுமா என மருத்துவர் தீர்மானிப்பார்.
இந்தியாவில் சர்க்கரை வியாதி உள்ளவர்கள் அதிகம். ஜனத்தொகையில் 7-9 சதவீதம் வரை சர்க்கரை வியாதி உள்ளவர்களே.
எந்த வியாதியாக இருந்தாலும் மனம் தளராமல் அதற்குரிய வழிமுறைகளை கடைபிடித்து அந்த வியாதியை கட்டுக்குள் வைத்திருப்பது நல்லது.
ஆசிய ஹாக்கிப் போட்டியில் இந்தியா வெற்றி : சென்னையில் நடைபெற்ற ஆசிய கோப்பை ஹாக்கிப் போட்டியை இந்தியா வென்றுள்ளது. இன்று மாலை சென்னை மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்தியா தென்கொரியாவை 7-2 என்கிற கோல் கணக்கில் வென்றது
நவாஸ் ஷெரீஃப்பின் ஆதரவாளர்கள் கைது : பாகிஸ்தான் அதிகாரிகள் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப்பின் ஆதரவாளர்களைத் தேடிப் பிடித்துக் கைது செய்து வருவதாக அங்கிருந்து கிடைக்கின்ற செய்திகள் கூறுகின்றன. நாட்டுக்கு வெளியே வாழ்ந்து வருகின்ற ஷெரீஃப் அவர்கள் மீண்டும் தாயகம் திரும்பப் போவதாக அறிவித்ததை அடுத்து இந்தக் கைதுகள் நடக்கின்றன
இராக்குக்குள் தீவிரவாதிகள் நுழைவதைத் தடுக்க இராக் உதவி கோருகிறது : இராக்கிய எல்லைக்குள் தீவிரவாதிகளும் கிளர்ச்சிக்காரர்களும் நுழைவதைத் தடுத்து நிறுத்துவதில் உதவுமாறு இராக் அண்டை நாடுகளைக் கேட்டுள்ளது
ஆசிய-பசுபிக் மாநாடு நிறைவுபெற்றது : ஆஸ்திரேலியாவின் ஸிட்னி நகரில் ஆசிய-பசிபிக் பகுதியைச் சேர்ந்த 22 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்ட மாநாடு தடைபட்டுப் போயுள்ள உலக வர்த்தக பேச்சுவார்த்தைகளை விரைவில் முடித்துக் கொள்வது என்ற தீர்மானத்தோடு முடிவடைந்துள்ளது
வஸிரிஸ்தான் தாக்குதலில் தீவிரவாதிகள் பத்துப் பேர் பலி: பாகிஸ்தான இராணுவத்தின் சார்பில் பேசும் அதிகாரி ஒருவர் ஆஃப்கான் எல்லைக்கருகே இருக்கின்ற பழங்குடிப் பிரதேசத்துக்குச் சென்று கொண்டிருந்த இராணுவ வண்டித் தொடரொன்றின் மீது திடீர்த் தாக்குதல் நடத்திய இஸ்லாமியத் தீவிரவாதிகளில் பத்துப் பேரை இராணுவம் கொன்றுள்ளது என்று தெரிவித்துள்ளார்