July 30, 2007

செல்போனா! ஐயோ வேண்டாம்!! எச்சரிக்கை!!!

நன்றி : நண்பர் தொண்டி முகமது அலி - சவூதி அரேபியா (NPC)

செல்போன் என்பது அத்யாவசியமான ஒன்றாகிப்போன இன்றையச் சூழலில், கோவில் வாசலில் பிச்சைக்காரர்களிடம் சில்லறை இல்லையப்பா என பத்து ரூபாய் நோட்டைக் காட்டினால், அவர் "சார் கொஞ்சம் இருங்க!...... ஹலோ! தம்பி நான் கோயில் வாசல்ல இருந்து "குருசாமி" பேசுறேன், ஒரு பத்து ரூபாய்க்கி சில்லறை எடுத்துட்டு வா, நான் சாயாந்தரம் வந்து மொத்தமா கணக்க சரி பண்ணிர்றேன்" என்று தன் செல்போனில் யாரிடமோ பேசி நொடிப்பொழுதில் பையன் சில்லறையோடு வந்து நிற்க, அடுத்த நொடியில் நமது கையில் ஒரு ரூபாய் போக ஒன்பது ரூபாய் பாக்கியைக் கணகச்சிதமாகத் திணித்துவிட்டு போகச்சொல்லும் காலமாகி விட்டது. என்ன செய்ய? அனைவரும் அவரவர் தொழிலில் அதிபர்களாகி விட்டனர். ஆனால் ஆபத்து எங்கு காத்திருக்கிறதென்றால், நீண்ட நேரம் காதுகளில் செல்போனை வைத்துப்பேசி, கழுத்து ஒரு பக்கம் இழுத்து, காக்காவலிப்பு வந்தவர்போல நடப்பது போய், மூளையில் கட்டி, புற்றுநோய் அளவுக்குக் கொண்டுபோய்விடுவதாக வந்துள்ள தகவல் அதிர்ச்சியளிக்கிறது.
எனது மரியாதைக்குரிய நண்பர் முகமது அலி (NPC) அவர்கள் சவூதி அரேபியாவிலிருந்து அனுப்பி வைத்த இந்தத் தகவலை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். இதுபற்றி முழுமையாகத் தொடர்ந்து படிக்க இணைப்பில் செல்க:http://navneethsmart.googlepages.com/MobilePhoneAlert.tif

வைத்தார்கள் ஆப்பு

அமெரிக்காவில் 'ஸ்பைக்' (Spike) என்றொரு தொலைக்காட்சிச் சேனல் இருக்கிறது. அதில் "The World's Amazing Videos and The World's Wildest Police Videos” என்றொரு நிகழ்ச்சி. உலகத்தில் நடந்த மிக அபூர்வமான விசயங்களை யாராவது வீடியோவில் திட்டமிட்டோ, எதிர்பாரா விதமாகவோ பதிவு செய்து வைத்திருந்தால் அதனை இவர்கள் விலைக்கு வாங்கித் தொகுத்து வழங்குகிறார்கள். இதில் சாதாரணமாக திருடு, கொலை, கொள்ளை, கத்திமுனையில் கடத்தல், வாகன விபத்து, போலீஸ் விரட்டிப்பிடிப்பது, மழை, வெள்ளம் மற்றும் தீ விபத்துக்களின் போது சிக்கிக்கொண்டவர்களை தீயணைப்பு வீரர்கள் எப்படியெல்லாம் சிரமப்பட்டுக் காப்பாற்றுகிறார்கள் என்பதையெல்லாம் பார்க்க முடியும். மேலும் பல நாடுகளில் நடந்த அரசியல் கட்சிகளின் வேலைநிறுத்தம், ஊர்வலம், கலவரம், அவ்வப்போது நடைபெற்ற அடிதடி, பாராளுமன்ற, சட்டமன்ற வளாகங்களுக்குள் நடக்கும் கோமாளித்தனம் அனைத்தும் பார்க்க முடியும்.


இந்த நிகழ்ச்சியின் முக்கியக் காரணங்கள் : குற்றங்களைக் குறைப்பதும், மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதும்தான். இதில் பல நாடுகளின் பாராளுமன்ற சண்டைக்காட்சிகள் இடம்பெறுவதுண்டு. நான் இந்தியாவில் இருக்கும்போது நமது சட்டமன்ற, பாராளுமன்றக் காட்சிகளை சில வருடங்களுக்கு முன் செய்தித்தாள்களில் படித்ததோடு சரி, திரைப்படங்களில் சில காட்சிகளையும் பார்த்ததுண்டு. ஆனால் நடந்த உண்மைச் சம்பவங்களை நான் பார்த்ததில்லை. “நல்லவேளை! நமது இந்தியா இப்படியெல்லாம் இல்லை! நடந்திருக்கும! ஆனால் இவ்வளவு மோசமாக இருக்காது என்று சில காட்சிகளைப் பார்க்கும்போது நினைத்துப் பெருமைப்பட்டிருக்கிறேன். வைத்தார்கள் ஆப்பு. சமீபத்தில் வேறொரு ஊடகத்தின் வாயிலாக நான் அந்த வீடியோவைப் பார்த்து ஆடிப்போனேன்! உங்களுக்கு "எந்த விதத்திலும் நாங்கள் சளைத்தவர்கள் அல்ல” என்பது போல் இருந்தது. நீங்களும் பாருங்கள்!!


நாட்டில் வறுமை தாண்டவமாடிக்கொண்டிருக்கையில்.....பாராளுமன்றம் செல்பவர்களின் சொகுசு வாழ்க்கையையும் தெரிந்து கொள்வோம்.

Salary & Govt. Concessions for a Member of Parliament (MP)
Monthly Salary : 12,000

Expense for Constitution per month : 10,000
Office expenditure per month : 14,000

Traveling concession (Rs. 8 per km) : 48,000 ( eg.For a visit from kerala to Delhi & return: 6000 km)

Daily DA TA during parliament meets : 500/day

Charge for 1 class (A/C) in train: Free (For any number of times)
(All over India )
Charge for Business Class in flights : Free for 40 trips / year (With wife or P.A.)
Rent for MP hostel at Delhi : Free
Electricity costs at home : Free up to 50,000 units
Local phone call charge : Free up to 1 ,70,000 calls.
TOTAL expense for a MP [having no qualification] per year : 32,00,000 [i.e . 2.66 lakh/month]
TOTAL expense for 5 years : 1,60,00,000

For 534 MPs, the expense for 5 years :
8,54,40,00,000 (nearly 855 crores)
AND THE PRIME MINISTER IS ASKING THE HIGHLY QUALIFIED, OUT PERFORMING CEOs TO CUT DOWN THEIR SALARIES…..

This is how all our tax money is been swallowed and price hike on our regular commodities.......
And this is the present condition of our country:




நாலடியார்

1. அறத்துப்பால்

1.11 பழவினை

உறற்பால நீக்கல் உறுவர்க்கும் ஆகா,
பெறற்பா லனையவும் அன்னவாம் மாரி
வறப்பின் தருவாரும் இல்லை, அதனைச்
சிறப்பின் தணிப்பாரும் இல்


- சமண முனிவர்கள்

தமிழ் விளக்கவுரை
போன பிறவியில் செய்த நன்மை தீமையின் பலனால் வந்துசேரும் துன்பத்தைப் போக்க முனிவர்களால் கூட முடியாது. பெறக்கூடிய இன்பமும் அப்படியே! விதி வசத்தால் அமையும். மழையைப் பெய்ய வைப்பாரும் இல்லை. மழை அதிகமாகப் பெய்தால் நிறுத்துவாரும் இல்லை


- ஆதியக்குடியான்

ஆங்கில விளக்கவுரை
The effect of actions done in a former birth.
To avoid those things which are to happen, or to detain those who are to depart, is alike impossible even to saints, even as there is none who can give rain out of season, or prevent its falling in season.

Translation of Selected Verses
by Rev.F.J.Leeper, Tranquebar

1992 ஆம் வருஷம் எவரெஸ்ட் ஏறத் தேர்வானேன். அந்த வருஷம் மே 12 ஆம் தேதியை மறக்கவே முடியாது. காயத்ரி மந்திரத்தை சொல்லிக்கொண்டு, கடவுளை நினைத்துக் கொண்டு ஒருவழியாக ஏறிவிட்டேன். அந்த உயரத்துல எனக்கு எதுவுமே புரியலை. அந்த உயரத்துக்குப் போன பிறகுதான் மனிதர்களான நமது எல்லைகள் என்னங்கிற பயம் வந்தது. கரணம் தப்பினா மரணம்-ங்கிற நிலமையில் ஒருவழியாகக் கொடியை ஏற்றி விட்டுத் திரும்பி விட்டேன். கடவுளுக்குப் பக்கத்துல போய் வந்த மாதிரி ஓர் உணர்வு
சந்தோஷ் யாதவ்
எவரெஸ்ட் சிகரத்தில் இரண்டு முறை கால் பதித்த உலகின் முதல் பெண்

இன்றைய குறள்

புகழ்புரிந் தில்லிலோர்க் கில்லை இகழ்வார்முன்
ஏறுபோல் பீடு நடை

புகழுக்குரிய இல்வாழ்க்கை அமையாதவர்கள், தம்மைப் பழித்துப் பேசுவோர் முன்பு தலைநிமிர்ந்து நடக்க முடியாமல் குன்றிப் போய் விடுவார்கள்

அறத்துப்பால் : வாழ்க்கைத் துணைநலம்

தமிழோசை

இன்றைய (ஜுலை 30 திங்கட்கிழமை) "BBC" செய்திகள் கேட்க இணைப்பில் செல்க

வானம் வசப்படும்!!

"சாதனையாளர்கள் செய்வதைப் புதுமையாகச்செய்வர்"
(Winners Dont Do Different Things But They Do Things Differently) என்பார் ஷிவ் கேரா. மனிதப்பிறவி என்பது மகத்தானது, அதிலும் எந்தக் குறையுமில்லாமல் பிறப்பதென்பது கடவுள் சித்தம் என்று நாம் நினைக்கிறோம். மனிதப்பிறவி மகத்தானதுதான். ஆனால் குறை என்பது மனதில் மட்டுமே இருக்கக்கூடாது, மனதில் தன்னம்பிக்கையும், உறுதியும், விடாமுயற்சியும், பொறுமையும் இருந்தால் சிகரம் என்ன? வானமே வசப்படும்!! இது வெறும் வாய் ஜாலம் இல்லை. இந்த வீடியோப் பதிவைப்பார்க்கும்போது கண்களின் கடைசி விளிம்பில் கண்ணீர் கசிவதை நிறுத்த முடியவில்லைதான்! ஆனால் இதயத்துக்குள் எங்கோ ஒரு மூலையில் மின்சாரம் பாய்வதையும் மறுக்க முடியவில்லை. நன்றி : நெடுவாசல் சுரேஷ் - பூனா, இந்தியா

கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் : ஆனால் இங்கு "உயிருக்கு உயிர்"
இந்தியா போன்ற பாரம்பரியமும், மனிதாபிமானமும் மிக்க நாடுகளில் கடும் துன்பம் இழைத்த, கொடூரமான தீவிரவாத செயல்கள் புரிந்த எத்தனையோ குற்றவாளிகளுக்குக்கூட, தூக்குத்தண்டனை மற்றும் மரணதண்டனை போன்றவற்றைக் குறைத்து தவறிழைத்தவர்களுக்கு, திருந்தி மறுபடியும் வாழ்வதற்கு வாய்ப்பளிக்கப் பரிந்துரைத்துப் போராடிவரும் மனித உரிமை மற்றும் தன்னார்வக்குழுக்கள் அன்றாடம் முளைத்துக்கொண்டிருக்கும் இந்தக் கணினிக் காலத்தில், மனித உயிரின் மதிப்புத்தெரியாத அவலம் இன்னும் இருக்கத்தான் செய்கிறது.
மனிதாபிமானத்துக்கும் சவூதி மக்களுக்கும் தூரம் அதிகம் என்பது நிரூபிக்கப்பட்டுவிட்டது!! ஒரு குழந்தை இறந்ததற்குக் காரணம் இன்னொரு குழந்தை உண்மைதான் என்றாலும், கொலைக்குக் காரணமான குழந்தையையும் கொன்றுவிடுவதால், கொலைசெய்யப்பட்ட குழந்தை திரும்பி வரப் போகிறதா என்று ஒரு கணம் அந்தப் பெற்றோர் யோசித்திருந்தால், இன்னொரு சிறுமியின் உயிர் காப்பாற்றப்பட்டுவிடும். மேலும் மூவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால்....எல்லாவற்றுக்கும் மேலாக புனிதர் நபிகள் நாயகம் நடமாடிய இந்தச் சவூதி மண்ணில் இன்னும் எத்தனை அப்பாவி உயிர்கள் பறிக்கப்படப்போகிறதோ??
ரிசானாவை காப்பாற்றும் முயற்சிகள் தோல்வி?
இலங்கைப் பணிப்பெண்ணான ரிசானாவுக்கு கருணை காட்ட உயிரிழந்த குழந்தையின் பெற்றோர் மறுத்துவிட்டதால் அவரைக் காப்பாற்றும் இலங்கை வெளிநாட்டமைச்சின் முயற்சிகள் தோல்வியடையும் நிலை ஏற்பட்டுள்ளது.
சவுதிஅரேபியாவில் இலங்கைப் பணிப்பெண்ணை ரிசானாவின் கவனக் குறைவால் 4 மாதக் குழந்தையொன்று உயிரிழந்ததையடுத்து அந்நாட்டு அரசு ரிசானாவுக்கு மரண தண்டனை விதித்தது.

இலங்கை பணிப் பெண்ணுக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனையை நீக்குமாறு இலங்கை அரசும் பல்வேறு மனித உரிமைகள் அமைப்புகளும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளன. இதன் ஒரு கட்டமாக இலங்கை வெளிவிவகார பிரதியமைச்சர் உசைன் பைலா பணிப்பெண்ணின் பெற்றோருடன் சவுதி சென்றார்.

அங்கு உயிரிழந்த குழந்தையின் பெற்றோரை சந்தித்து றிசானாவை மன்னித்து விடுதலையாக்கும்படி கேட்டபோதும் அவர்கள் அதற்கு மறுத்துவிட்டனர். இதனால் ரிசானாவை காப்பாற்றும் முயற்சிகள் தோல்வியடையும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் ரிசானாவின் பெற்றோரும் பிரதி அமைச்சர் உசைன் பைலாவும் நாடு திரும்பி விட்டனர்.
மூவருக்கு மரண தண்டனை:
சவூதி அரேபியாவில் ஜெட்டா நகரில் பெண் குழந்தை ஒன்றை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட இரு இலங்கையர்கள் உட்பட மூவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இத்தண்டனை விதிக்கப்பட்ட இலங்கையர்களில் ஒருவர் பெண்ணாவார். இவர் இந்தியர் ஒருவரைத் திருமணம் செய்துள்ளார்.

இவர்கள் தமக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆட்சேபித்து சர்வதேச மன்னிப்பு சபையிடம் புகார் செய்துள்ளனர்.

இலங்கைப் பெண்ணான ஹெல்மா நிஸ்ஸா அவரது கணவன் நௌஸாப் மற்றும் இலங்கையரான கே.எம்.எஸ். பண்டாரநாயக்க ஆகிய மூவருமே சவூதியில் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களாவர்.
இம்மூவரும் சவூதி அரேபியாவில் பொலிஸாரின் விசாரணையின் போது குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார்கள் என சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.
அத்துடன், குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் தடுப்புக்காவலில் இருக்கும்போது அவர் மீதான குற்றத்தை ஒப்புக் கொள்ளுமாறு மிக மோசமாக சித்திரவதைக்குள்ளான நிலையும் காணப்படுகிறது.
சவூதி அரேபிய அரசு தற்போது மரண தண்டனை குற்றவாளிகள் தொடர்பில் இறுக்கமான நடைமுறைகளைக் கையாள்வதன் காரணமாக இவ்வாண்டு இதுவரை 103 பேர் மரண தண்டனைக்குள்ளாகியுள்ளனர். இத்தொகை மேலும் அதிகரிக்க வாய்ப்புண்டு எனவும் சர்வதேச மன்னிப்பு சபை தெரிவித்துள்ளது.
சவூதி அரேபியாவில் மரண தண்டனை, சிரச்சேதம் செய்து வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.