August 29, 2007


சாதனையாளர்கள் செய்வதை வித்தியாசமாகத்தான் செய்வார்கள்!!

இன்றைய குறள்

உடைமையுள் இன்மை விருந்தோமபல் ஓம்பா
மடமை மடவார்கண் உண்டு

விருந்தினரை வரவேற்றுப் போற்றத் தெரியாத அறிவற்றவர்கள் எவ்வளவு பணம் படைத்தவர்களாக இருந்தாலும் தரித்திரம் பிடித்தவர்களாகவே கருதப்படுவார்கள்

அறத்துப்பால் : விருந்தோம்பல்

நீ உன்னைக் கேட்டுக்கொள்ளவேண்டியது, “நான் அறிவாளியா? தகுதியானவனா? என்னால் முடியுமா? என்பவை அல்ல. நான் ஏன் அறிவாளியாக இருக்கக் கூடாது? நான் ஏன் தகுதியானவனாக இருக்கக்கூடாது? என்னால் ஏன் முடியாது? என்பவைதான்.

தமிழோசை

  • இந்தியாவின் ஒரிசா மாநிலத்தில் காலாரா நோய் காரணமாக நுறு பேர் வரை உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
  • பாக்தாத் தங்கும் விடுதியில் வைத்து எட்டு இரானியர்களை தவறுதலாக தாங்கள் கைது செய்ததை, இராக்கிலிருக்கும் அமெரிக்க கட்டளைத் தளபதிகள் ஒப்புக் கொண்டிருப்பதுடன், இது மிகவும் வருந்தத்தக்க சம்பவம் என்றும் தெரிவித்துள்ளனர்.
  • அப்கானிஸ்தானில் உள்ள தலிபான் தீவிரவாதிகளால், கடந்த ஆறு வாரங்களாக கடத்தி வைக்கப்பட்டிருந்த 19 தென் கொரியர்களில், 12 பேர் இன்று விடுவிக்கப்பட்டுள்ளனர்.
  • இராக்கிய ஷியாக் குழு தனது இராணுவ நடவடிக்கைகளை இடைநிறுத்துவதாக அறிவித்துள்ளது
  • இன்றைய (ஆகஸ்ட் 29 புதன்கிழமை 2007) "BBC" செய்திகள் கேட்க இணைப்பில் செல்க http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml?tamil_worldnews