December 07, 2007

திடீரென எனக்கு மாரடைப்பு வந்தது....

(ஆங்கிலத்திற்கு மன்னிக்க.....) This is e-mail received from my friend working in a Software Company .............

Dear colleagues, I am working in Blore Software City ... I wanted to share an incident of my life with you, hoping that it may be an eye opener to you so that you can live more years.

On 27th October afternoon, I had severe heart attack symptom and I was rushed to the hospital.
After reaching to the hospital, the doctors prescribed a test called angiogram. This test is basically to identify blood flow of heart arteries. When they finished the test they found a 94% block in the main artery, please see the image below with red circle.
At this point, I wanted to share my living style, which has caused this block in my heart arteries. Please see the below points of my life style, if any of these points are part of your life style then you are at risk, please change yourselves.

1. I was not doing any physical exercise for more than 10 years , not even walking 30 minutes a day for years .
2. My food timings are 11:00 AM Breakfast or no Breakfast, 3:00 PM to 4:00 PM Lunch and dinner at 11:00 PM to 12:00 AM.
3. Sleeping in very odd timings, going to bed between 12:00 AM and 3:00 AM. Waking up at between 9:00 AM and 10:30AM ....... Some times spending sleepless nights.
4. I used to eat heavily because of long gaps between lunch and dinner and I used to make sure that Non-Veg is available most of the time, there were times when I did survey on city hotels to find delicious Non-Veg dishes. I was never interested in vegetable and healthier food.
5. Above all I was chain smoker from years.
6. My father passed away due to heart problems, and the doctors say the heart problems are usually genetic.

Once they identified the major block they have done immediately a procedure called angioplasty along with 2 Stints, mean they will insert a foreign body into the heart arteries and open the blocked area of arteries. Please see the below image after the procedure.
I learnt from the doctors that 60% people will die before reaching the hospital, 20% people will die in the process of recovering from heart attack and only 20% will survive . In my case, I was very lucky to be part of the last 20%.

Doctors instructions:
  1. Need to have physical exercise for minimum of 45 minutes daily.
  2. Eat your food at perfect timings , like how you eat during your school days. Eat in small quantities more times and have lot of vegetables and boiled food, try to avoid fry items and oily food. Fish is good than other non-vegetarian food.
  3. Sleep for 8 hours a day, this count should complete before sun rising.
  4. Genetic problems, we cannot avoid but we can get away from it by having regular checkups.
  5. Find a way to get relived from the stress (Yoga, Meditation,Talk with ur frnds etc).

So I urge you all to please avoid getting into this situation, it is in your hands to turn the situation up side down, by just planning / changing your life style, by following simple points above. Because life is wealth and GOD gives you life only once. I pray to GOD that no one should face this situation. If you find it's useful you can forward this mail to your friends and loved ones.....

இன்றைய குறள்

அறங்கூறா னல்ல செயினும் ஒருவன்
புறங்கூறா னென்றல் இனிது

அறநெறியைப் போற்றாமலும், அவ்வவழியில் நடக்காமலும்கூட இருக்கின்ற சிலர் மற்றவர்களைப் பற்றிப் புறம் பேசாமல் இருந்தால், அது அவர்களுக்கு நல்லது
அறத்துப்பால் : புறங்கூறாமை

பின்னனிப்பாடகர் கிரிஷ்

அப்துல் கலாமின் ஆதரிசக் கனவுகளை இதுபோன்ற சிறுவர்கள் கட்டாயம் நிறைவேற்றுவார்கள்!

சாதரணமாக எட்டு வயதுச் சிறுவனென்றால் விளையாட்டில்தான் கவனமாக இருப்பான். ஆனால் பெங்களூருவைச் சேர்ந்த கரன் டிராவிட் சற்று வித்தியாசமானவன். பழைய கம்ப்யூட்டர் இருப்பவர்களிடம் அவற்றைத் தானமாகப் பெற்று அதன்மூலம் ஏழைச் சிறுவர்களுக்கு ஆங்கிலம் சொல்லித் தருகிறான். சிறு வயதில் பிச்சை எடுப்பதையும் வீட்டு வேலை செய்வதையும் வெறுக்கும் இவனுக்கு விடுமுறை நாட்களில் கிராமங்களுக்குச் சென்று அங்குள்ள பழங்குடிச் சிறுவர்களுக்கு ஆங்கிலம் கற்றுத் தருவதுதான் பொழுதுபோக்கு. ஆறு மொழிகளில் எழுதப் பேசத் தெரியுமாம் இவனுக்கு. ஏழைகளுக்கு ஆங்கிலம் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்ற ஆர்வம் எப்படி வந்தது இந்தச் இறுவனுக்கு? ஒரு முறை அப்பாவிடம், "ஏன் சில சிறுவர்கள் மட்டும் ஆங்கிலம் தெரியாமல் இருக்கிறார்கள்?" என்று கேட்டபோது அவர்களுக்கு ஆங்கிலப் பள்ளிகளில் படிக்கப் பண வசதியில்லை என்று சொன்ன வார்த்தைகள்தான் தூண்டுகோலாக அமைந்தன. அப்துல் கலாமின் ஆதரிசக் கனவுகளை இதுபோன்ற சிறுவர்கள் கட்டாயம் நிறைவேற்றுவார்கள்!

பெற்றோரைக் கைவிடும் பிள்ளைகளுக்குச் சிறைத் தண்டனை: இந்தியாவில் புதிய சட்டம்

இந்தியாவில் வயது முதிர்ந்த பெற்றோரை கவனிக்காமல் கைவிடும் பிள்ளைகள், இனி சிறைத் தண்டனை பெறத் தயாராக இருக்க வேண்டும். இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கும் புதிய சட்டம் இதற்கு வழிவகுத்திருக்கிறது. பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலன் என்ற பெயரிலான அந்தச் சட்டத்தின்படி, பெற்றோரை நிராதரவாகக் கைவிடும் பிள்ளைகள், மூன்று மாத சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும். அதுமட்டுமன்றி, இந்தப் பிரச்சினையில் சிக்கிக் கொள்வோர், தங்களுக்கு எதிராக விதிக்கப்பட்ட சிறை தண்டனையை எதிர்த்து அப்பீல் செய்ய முடியாது என்றும் இந்தச் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட பிரிவைக் கொண்டு வந்திருப்பதற்கு, பிள்ளைகளுக்கு இருக்கும் நிதி வசதிகள், பெற்றோருக்கு இல்லை என்பதுதான் காரணம் என்று இந்திய நாடாளுமன்றத்தில் இச்சட்டத்தின் மீதான விவாத்தின்போது கருத்துத் தெரிவித்தார் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளிப்புத் துறை அமைச்சர் மீரா குமார். ஏற்கெனவே உள்ள குற்றவியல் நடைமுறைச் சட்டப்படி, பிள்ளைகளிடமிருந்து பெற்றோர் பராமரிப்பு வசதியைப் பெற முடியும் என்றாலும்கூட, அதில் அதிக செலவு பிடிப்பதுடன் பெற்றோர் தங்களுக்கு நியாயம் கிடைக்க நீண்ட காலம் காத்திருக்க வேண்டிய நிலையும் உள்ளது. அதனால்தான் புதிய சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது என்று மீரா குமார் விளக்கமளித்தார். சொந்தப் பிள்ளைகள் மட்டுமன்றி, முதியவர்களின் சொத்துக்களைப் பெற்ற உறவினர்களும் இந்தச் சட்டத்தின்கீழ் கொணடுவரப்பட்டிருக்கிறார்கள். இந்தியக் கலாசாரத்துக்கே உரித்தான கூட்டுக் குடும்ப முறை வேகமாக மறைந்து வருவதால், வயதான பெற்றோர்கள், குறிப்பாக விதவைகள் தனித்து விடப்படுகிறார்கள். அதனால் தேவையான ஆதரவு கிடைக்காமல் போவதுடன் கடுமையான மன-உளைச்சலுக்கும் ஆளாகிறார்கள் என்று புதிய சட்டத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. முதிர்ந்த வயது என்பது சமுதாயத்தில் மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது. அதனால் முதியோர் நலனில் அதிக அக்கறை செலுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்று அமைச்சர் மீராகுமார். இந்தப் புதிய சட்டத்தின் மூலம், அரசு தனது நோக்கத்தை நிறைவேற்ற முடியுமா என்பது பற்றி மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளிப்புத் துறையின் இணை அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன் அவர்களின் செவ்வியை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம் http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml?tamil_worldnews

நிஜக் கரப்பான் பூச்சிகளை ஏமாற்றிய இயந்திர கரப்பான்

இயந்திரக் கரப்பானைக் கண்டு ஏமாறும் நிஜக் கரப்பான்கள்தொல்லை கொடுக்கும் கரப்பான் பூச்சிகளை ஏமாற்ற விஞ்ஞானிகள் புதிய வழி ஒன்றைக் கண்டுபிடித்துள்ளனர். அதாவது ஒரு கரப்பான் ரோபோவைச் செய்து அதனைக் கொண்டு உண்மையான கரப்பான்களை ஏமாற்ற வழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பெல்ஜியத்தின் பிரஸல்ஸில் உள்ள ஃப்ரீ பல்கலைக்கழகத்தின் ஜோஸ் கலோய் என்பவரே இந்த தானாக இயங்கக்கூடிய இந்த ரோபோ கரப்பான் பூச்சியை வடிவமைத்தவராவார். உண்மையான கரப்பான்களின் மணம் குணத்தை ஒரு பில்டர் பேப்பரில் பூசி அதனை இந்த ரோபோ கரப்பான் பூச்சியில் பொருத்தினார்கள் விஞ்ஞானிகள். பின்னர் உண்மையான கரப்பான்கள் வாழும் ஒரு இடத்தில் இந்த ரோபோ விடப்பட்டது. இந்த ரோபோ கரப்பானை உண்மையான கரப்பான்கள் ஏற்கின்றனவா, அதன் மூலம் கரப்பான்களின் கூட்டாக முடிவெடுக்கும் திறனில் தம்மால் செல்வாக்குச் செலுத்த முடிகிறதா என்றெல்லாம் விஞ்ஞானிகள் அறிய முயன்றனர். ஆம், அவர்களால் கரப்பான் பூச்சிகளை ஏமாற்ற முடிந்தது. போலி ரோபோ கரப்பானை உண்மையான கரப்பான் என்று நம்பி தம் கூட்டத்தில் கரப்பான்கள் சேர்த்துக்கொண்டன.

நீதிமன்றத்துக்கு வருமாறு இராமருக்கும் அனுமானுக்கும் உத்தரவு

இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஒரு நீதிபதி, சொத்து தொடர்பான வழக்கு ஒன்றைத் தீர்ப்பதற்காக இந்துக் கடவுள்களான இராமரையும், அனுமாரையும் நீதிமன்றத்துக்கு வருமாறு உத்தரவிட்டுள்ளார். இராமரும், அனுமாரும் நீதிமன்றத்துக்கு வரவேண்டும் என்று அவர்களுக்கு அனுப்பிய கடிதங்களுக்கு பதில் எதுவும் கிடைக்கவில்லை என்று கூறியுள்ள அந்த நீதிபதி, ஆகவே அவர்களை நேரடியாக நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு பத்திரிகையில் விளம்பரம் ஒன்றைப் பிரசுரித்துள்ளார். இந்த இரண்டு கடவுளர்க்கும் இரண்டு கோயில் அமைத்து வழிபடப்படுகின்ற ஒரு காணித்துண்டு குறித்தே, இந்த 20 வருடப் பிரச்சினை காணப்படுகிறது. அந்தக் காணி தனக்குச் சொந்தம் என்று கோயில் பூசாரி கூறுகிறார். ஆனால், அது இந்த இரண்டு கடவுளர்க்கும் சொந்தமானது என்று உள்ளூர்வாசிகள் கூறுகிறார்கள்

கவிஞர் மீராவுடன் ஓர் நேர்காணல் - அப்துல் ரகுமான்

"அப்துல் ரகுமான் என் வலது கண். சிற்பி என் இடது கண். இன்குலாப் என் இடதுகை. காமராசன் என் வலதுகை. பாலாவும் மேத்தாவும் என் இதயத்தின் இரு பக்கம். வைரமுத்து, தமிழன்பன், சிதம்பரநாதன், முருகுசுந்தரம், அபி, தேனரசன், புவியரசு, தமிழ்நாடன், தணிகைச்செல்வன், இந்திரன், காசிஆனந்தன், நவகவி, கல்யாண்ஜி, கலாப்ரியா, கந்தர்வன், அறிவுமதி, வெ.சேஷாசலம், க.வை.பழனிச்சாமி, நாஞ்சில் ஆரிது, வைகை வாணன், அப்துல்காதர், இக்பால், பஞ்சு, ரவி சுப்ரமணியன், வசந்தகுமார்- இவர்கள் எல்லாம் என் அங்கங்களைப் போல என்னுள் நிறைந்திருக்கிறார்கள். எனவே நான் நான் அல்ல. நான் எல்லோரும் கலந்த அவதாரம். ஆமாம், நான் செத்தாலும் வாழ்வேன்." என்று தனது புத்தகத்துக்கு முன்னுரையில் எழுதிய கவிஞர் மீரா இன்று இல்லை.ஆனால் அவரது சிந்தனைகளும், செயல்களும் இன்னுமிருக்கிறது. என்றென்றும் இருக்கும்.
அவரது நினைவைப் போற்றும் வகையில் அவரது நேர்காணலை இவ்விதழில் தருகிறோம். இனி..அப்துல் ரகுமானும் மீராவும் பேசுகிறார்கள். மீரா காற்று. ஓரிடத்தில் நிற்க மாட்டார். அவரை என் வீட்டில் மூன்று மணி நேரம் அடைத்து வைத்து உரையாடினேன். அதிலிருந்து சில பகுதிகள்....


எப்போது கவிதை எழுத தொடங்கினீர்கள்? அதற்கான தூண்டுதலாக இருந்தது எது? அல்லது யார்?

பள்ளிக்கூட நாட்களிலிருந்தே எனக்கு திராவிட இயக்கக் கொள்கைகளில் ஈடுபாடு இருந்தது. அண்ணா, பாரதிதாசன், கண்ணதாசன், மு.வ. ஆகியோரின் எழுத்துக்கள் என்னை எழுதத்தூண்டின. கல்லூரி நாட்களில் சுரதா, தாகூர், கலீல் ஜிப்ரானில் ஈடுபாடு ஏற்பட்டது. என் முதல் கவிதை 'தீபன் குன்றம்' பாரதி பற்றியது. அது 1959 இல் 'தாமரை'யில் வெளிவந்தது. அது மரபுக் கவிதை. எண்சீர் விருத்தம். பாரதிதாசன் பாதிப்பு அதில் தெரியும்.

அறிஞர் அண்ணா உஙகள் பெயரைக் குறிப்பிட்டிருக்கிறார் என்பதை அறிவேன், அவரோடு எப்படி அறிமுகம் ஆனீர்கள்?

'திராவிட நாடு', 'திராவிடன்', 'முரசொலி', 'தென்றல்', 'இன முழக்கம்', 'மன்றம்' இதழ்களில் என் கவிதைகள் வெளிவந்துகொண்டிருந்தன, எல்லாம் அரசியல் கவிதைகள், வேழவேந்தன் கவிதைத் தொகுதி வெளியீட்டு விழாவில் பேசும்போது - 1964 என்று நினைக்கிறேன். திராவிட இயக்கக் கவிஞர்கள் என்று சிலர் பெயர்களைப் பட்டியலிட்டார். அதில் 'மீ.இராசேந்திரன் என்ற ஒருவர்' என்று என் பெயரைக் குறிப்பிட்டார், 'தெருவோரச் சாக்கடையில் வருமா தெப்பம்' என்ற என் வரியை இருமுறை மேற்கோள் காட்டி எழுதி இருக்கிறார். 'பொங்கல் கொண்டாட வேண்டும்' என்று கூறும் என்னுடைய மற்றொரு கவிதையையும் குறிப்பிட்டிருக்கிறார். திருச்சியில் நடந்த தி.மு.க. மாநாட்டுக்குத் தொண்டர்களை அழைத்து எழுதிய கடிதத்தில், 'சாவா சந்திப்போம் : வாழ்க்கை நமக்கென்ன, பூவா புறப்படுபோம்: புல்லியரைத் தூள் செய்வோம்' என்ற என் கவிதை வரியை எடுத்துக்காட்டி எழுதியிருகிகிறார். ஒருமுறை நேரில் சந்திக்க முயன்றேன். முடியாமல் போய் விட்டது.


கலைஞரோடு எந்த அளவில் தொடர்பு?

"முரசொலி'யில் கவிதை எழுதியிருக்கிறேன். கலைஞர் தலைமையில் கவியரங்கத்தில் பாடியிருக்கிறேன். ஆசிரியர் போராட்டத்தின் போது அவரை பலமுறை சந்தித்திருக்கிறேன். எனக்கு வேறு இடத்தில் வேலைக்காகத் துணைவேந்தராக இருந்த மு.வ.விடம் பரிந்துரைத்திருக்கிறார். 1983-ல் மதுரை எட்வர்ட் ஹாலில் பாரதி நூற்றாண்டு விழாக் கவியரங்கம். அப்போது எனக்குப் பொதுவுடைமைக் கோட்பாட்டுச் சார்பு ஏற்பட்டிருந்தது. கலைஞர் பேச வந்திருந்தார். 'நீ லெனினைப் போல் புரட்சித் தலைவனாக வேண்டும்' என்று பாடினேன். கலைஞர் பேசும்போது 'தான் போனதுமல்லாமல் என்னையும் தூக்கிக்கொண்டு போகப் பார்க்கிறார். அவர் எங்கள் வண்டலில் விளைந்த பயிர் என்பதில் பெருமைப்படுகிறேன். அவர் எங்கிருந்தாலும் நன்றாக இருக்கட்டும்' என்று கூறினார்.


தி.மு.க.வில் இவ்வளவு தீவிரமாக இருந்த நீங்கள் பொதுவுடைமைக் கொள்கையின் பக்கம் எப்படிப் போனீர்கள்?

தி.மு.க. உணர்வோடு இருந்கபோதே பொதுவுடைமைக்கோட்பாட்டையும் நான் விரும்பினேன். 'ஐனசக்தி' படிப்பேன். பேராசிரியர் தர்மராஐன் தொடர்பால் நான் மார்க்சீயத்தின் பக்கம் போகத் தொடங்கினேன். மேலும் தி.மு.க. திராவிட நாடு கோரிக்கையைக் கைவிட்டது எனக்குப் பெருத்த ஏமாற்றமாக இருந்தது. ஆட்சிக்கு வந்த பிறகு இந்தி எதிர்ப்புப் போன்றவற்றில் ஏற்படுத்திக் கொண்ட சமரசம் இவையெல்லாம் சேர்ந்து என்னைப் பொதுவுடைமைப் பக்கம் தள்ளிவிட்டன.

புதுக்கவிதை எழுதத் தொடங்கியது எப்போது? எதனால்?

கல்லூரி நாட்களிலேயே தாகூர் கவிதைகளை வி.ஆர்.எம். செட்டியார் மொழிபெயர்ப்பில் படித்தபோது வசன கவிதை என்னை ஈர்த்தது. டி.எஸ். எலியட் 'வேஸ்ட் லேண்'டும் படித்தேன். முற்றிலும் புரியவில்லை என்றாலும் இந்தப் புதுமைப் போக்குப் பிடித்திருந்தது. தாகூர் 'காதல் பரிசின் பாதிப்பில் 1959-ல் 'காதல் கனி' என்ற வசன கவிதை எழுதினேன். இதுவே என் முதல் வசன கவிதை முயற்சி. தொடக்கத்தில் புதுக்கவிதையை வெறுத்த பொதுவுடைமையர் தி.க.சி 'தாமரைப் பொறுப்பேற்று (1970) வசன கவிதையை ஆதரித்த பிறகு, அதன் பக்கம் திரும்பினர். கைலாசபதியும் புதுக்கவிதை பற்றிய தம் வெறுப்பை மாற்றிக்கொண்டிருந்தார். 'வானம்பாடி'யும் வந்தது. இந்தக் காலக் கட்டத்தில்தான் முதலில் 'கனவுகள்+கற்பனைகள்=காகிதங்கள்' பிறகு 'ஊசிகள்' எழுதினேன்.

முற்போக்குத் திறனாய்வாளர்கள் பொதுவாகவே பெண்ணைப்பற்றி, காதலைப் பற்றி எழுதினால் கடுமையாக விமர்சிப்பர் 'க.க.கா' எழுதியபோது நீங்கள் இதைப் பற்றி நினைக்கவில்லையா?

நினைத்தேன். ஆனால் இடையிடையே, 'நிலத்தை மீட்கப்போனேன்,' 'நான் ஏங்கல்ஸின் மாணவன்,' 'புரட்சியில் மலர்ந்த சோவியத் பூமியின் கூட்டுப் பண்ணைகளைப் படங்களில் பார்த்து மலைக்கும், ஓர் இந்திய உழவனைப் போல்...'' என்ற வரிகளை இணைத்திருந்தேன். அதனால் முற்போக்கு வட்டத்தில் வரவேற்பே இருந்தது. தி.க.சி. பாராட்டிக் கடிதம் எழுதினார். 'தேசம் தழுவும் பொதுவுடைமைக்கு, வரவேற்புரை எழுதும்போதும், தேகம் தழுவும் எனக்கு-என் தனியுடைமைக்கு வாழ்த்துரை எழுதும் போதும்' என்ற வரியை மட்டும் 'இளவேனில்' கடுமையாக விமர்சனம் செய்து எழுதினார். பொதுவாகப் பொதுவுடைமைச் சார்புப் பத்திரிகைகள் பாராட்டி எழுதின.

நீங்கள் சிவப்பு வட்டத்துக்குள் இருக்கும் கவிஞர் என்பதால்தான் இந்தப் பாராட்டு. இந்த வட்டத்துக்கு வெளியே இருப்பவன் 'க.க.கா' போல ஒரு நூலை எழுதியிருந்தால் கிழித்திருப்பார்கள். சோவியத்தை நீங்கள் ஆழமாக நேசித்தீர்கள். அது சிதறி உடைந்துபோன போது உங்கள் மனநிலை எப்படி இருந்தது?

என் கனவுலகம் உடைந்ததுபோல் இருந்தது. தி.மு.க. திராவிட நாடு கோரிக்கையைக் கைவிட்ட போது ஏற்பட்டதுபோல் மனத்தில் கலவரம் ஏற்பட்டது.

சோவியத் சிதைந்ததற்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்?

கார்ப்பச்சேவ் கட்டுப்பாடுகளைத் தளர்த்தியதுதான் காரணம். மேலும் மக்களுக்கும் மேற்கத்திய கன்ஸ்யூமரிஸத்தில் ஒரு மோகம் இருந்ததும் காரணம்.

இது மட்டும்தான் காரணமா? ஊழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்தவனாயினும் ஆட்சி, அதிகாரம் என்று வந்துவிட்டால் அவனுக்கும் ஆளும் வர்க்கத்தின் குணங்கள் வந்துவிடும் என்பது என் கருத்து. அளவுக்கு மீறிய அதிகாரத்தைப் பயன்படுத்திச் சில அடிப்படை மனித உரிமைகளை ஒடுக்கினார்கள். உள்ளே குமுறிக்கொண்டிருந்த எரிமலை வெடித்துவிட்டது. இல்லை?

அதுவும் உண்மைதான் சோவியத் காலப்போக்கில் ஒரு 'ப்யூரக்ரேட் ஸ்டேட்'ஆக மாறிப்போய்விட்டது.

'க.க.கா' படிக்கும் போது அது கற்பனையாகத் தெரியவில்லை. சுயஅனுபவத்தின் கனல் தெரிகிறது சரிதானா?

சரிதான். கல்லூரி மாணவனாக இருந்தபோது எனக்கு நேர்ந்த சொந்த அனுபவத்தில் மலர்ந்ததுதான் 'க.க.கா.' இருந்தாலும் அதை வெறும் மானுடக்காதலாகச்சொல்லாமல் ஓர் ஆன்மீகப் பரிமாணமும் தந்திருக்கிறேன். பெண்ணை வெறும் பெண்ணாக அல்லாமல் ஓர் இலட்சிய சமூக அமைப்பின்- பரிபூரணத்தின் குறியீடாகவே கையாண்டிருக்கிறேன்.

பதிப்பாளர் மீராவால் படைப்பாளர் மீராவுக்குப் பாதிப்பு உண்டானதுப் பற்றி நினைத்து வருந்தியதுண்டா?

நான் பணியாற்றிய சிவகங்கை மன்னர் கல்லூரியில் பிரச்சினைகள் உண்டாகிப் போராட்டம் வெடித்தபோது இருமுறை நான் வேலையிலிருந்து நீக்கப்பட்டேன். இதனால் நிரந்தரமாக வேலை போய்விட்டால் என்ன செய்வது என்ற பயம் வந்துவிட்டது. அதனால் நான் விரும்பிய பதிப்புத்துறையைத் தேர்ந்தெடுத்தேன். அதற்கு நீங்களும் காரணம். 'அபி'யின் கவிதைகளை வெளியிடவிரும்பி நாம் சில பதிப்பாளர்களை அணுகியபோது, 'கவிதையா? விற்காதே' என்று அவர்கள் புறக்கணித்ததைக் கண்டு கொதித்துப்போய், 'நாமே பதிப்பித்தால் என்ன?' என்று நீங்கள் கூறினீர்கள். பதிப்பகத்திற்கு 'அன்னம்' என்ற பெயரும் நீங்கள்தான் சூட்டினீர்கள். நீங்களும், நானும் ஆளுக்குக் கொஞ்சம் பணம் போட்டு 'அன்னம்' தொடங்கினோம். விளையாட்டாய்த் தொடங்கியது வினையாகிவிட்டது. நான் அதிலேயே மூழ்கிப்போனேன். அதனால் எழுதமுடியாமல் போய்விட்டது. அதனால் எனக்கு வருத்தம் தான். 'அன்னம்' பொருளாதார வகையில் தோல்விதான் என்றாலும் தரமான புத்தகங்களை அழகாக வெளியிட்டவர்கள் என்ற பாராட்டைப் பெற்றிருப்பது ஆறுதலாக இருக்கிறது.

'அன்ன'த்தின் சாதனையாக எதைக்கருதுகிறீர்கள்?

இரண்டு. ஒன்று, புதுக்கவிதைக்குக் களம் அமைத்துக் கொடுத்தது. 'வானம்பாடி' பத்திரிக்கையாக இருந்து புதுக்கவிதைக்குப் பரவலான கவனத்தைப் பெற்றுத்தந்தது. 'அன்னம்', பதிப்பகமாக இருந்து அதே பணியைச் செய்தது. 'கவிதை எனறால் விற்காது' என்ற கருத்தை உடைத்தது. இரண்டு, கரிசல் இலக்கியத்தைப் பிரபலப்படுத்தியது. கி.ரா. மட்டுமல்லாமல் இன்னும் 5, 6 பேர்களுடைய நூல்களை அன்னம் வெளியிட்டது.

'அன்னம் விடு தூது' ஒரு நல்ல பத்திரிக்கையாக வந்துக்கொண்டிருந்ததே. ஏன் நிறுத்தினீர்கள்?

சிற்றிதழாக இல்லாமல் 'மிடில் மேகசினா'கக் கொண்டுவர வேண்டுமென்று நினைத்தேன். ஏஜென்டுகள் பணம் தராமல் ஏமாற்றிவிட்டார்கள். விளம்பரங்களும் பெற முடியவில்லை. அதனால் கையைக் கடிக்க ஆரம்பித்தது. தாங்க முடியாது என்ற நிலை வந்தபோது வேறு வழியின்றி நிறுத்திவிட்டேன்.

கவிஞர், உரையாளர், கல்லூரி ஆசிரியர், பத்திரிக்கை ஆசிரியர், ஆசிரியர் போராட்டத்தளபதி, பதிப்பாளர், அச்சக உரிமையாளர் என்று பல பணிகளில் முத்திரை பதித்திருக்கிறீர்கள். இன்னும் நிறைவேறாத ஆசை ஏதேனும் உண்டா? ஏதேனும் வருங்காலத்திட்டம்?

நிரந்தரமாக நிற்கும்படி ஒரு நல்ல இலக்கியம் படைக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. வசனகவிதையில் நாடகமாகவோ, காவியமாகவோ ஒரு நூல் எழுதும் எண்ணம் இருக்கிறது. அதிகமாக படைக்காமல் போனதை இதன் மூலம் ஈடு செய்ய விரும்புகிறேன்.
நன்றி: கவிக்கோ.

கடமை

(திண்ணையில் பிரசுரமான எனது சிறுகதை....) குருவிக்கூடு போல ஒரு சிறிய அழகான வீடு. அருகே உருளைக்கிழங்கு விளையக்கூடிய செழிப்பான ஒரு ஏக்கர் நிலம். பக்கத்தில் ரம்மியமான ஒரு நீரோடை. அங்கு கணவன், மனைவி, மகன் என மூவரும் மகிழ்ச்சி பொங்க வாழ்ந்து கொண்டிருந்தபொழுது, திடீரென அந்தத் தாய் தூக்கத்திலேயே இறந்து விடுகிறாள். தன் மகனோடு வாழ்ந்து கொண்டிருந்த அந்தப் பெரியவர் தாயைச் சின்ன வயிதிலேயே தன் மகன் இழந்துவிட்டதால் அவனை மிகச் செல்லமாக வளர்த்ததன் விளைவு, அவன் செய்த சில தவறுகளுக்குத் தண்டனையாகச் சிறையில் அடைக்கப்பட்டான். தன் தந்தையோடு இருக்கும்போது அவன் தந்தைக்கு மிகவும் உதவியாகவும், பாசமாகவும் இருந்தான். தன் வீட்டுக்கருகாமையில் இருந்த ஒரு உருளைக்கிழங்குத் தோட்டத்தைத் தவிர அவர்களுக்கு வேறு எந்தச் சொத்தோ வருமானமோ இல்லை. ஒவ்வொரு பருவத்திலும் செழிப்பாக இருக்கும் அந்தத் தோட்டத்தோடு தன் மனைவியின் ஆத்மாவும் கூட இருப்பதாகவே அந்தப் பெரியவர் நினைத்து வாழ்ந்துகொண்டிருந்தார். ஆனால் இந்த முறை மகன் இல்லாததால் தான் தனியாளாக அந்த நிலத்தைத் தோண்டி, உருளை பயிரிட முடியாத ஒரு நிலை. இதையெல்லாம் நினைத்து வருந்திய அந்தப் பெரியவர் சிறையில் இருக்கும் தன் மகனுக்கு எழுதிய கடிதத்தில்... தொடர்ந்து வாசிக்க இணைப்பில் செல்க.. http://www.thinnai.com/?module=displaystory&story_id=10712065&format=html