May 21, 2008

"ஜெயமோகன் ஒரு மனநோயாளி" : கனிமொழி - பகுதி : 1

மலேசிய தமிழர்கள் கொந்தளித்தது ஏன்? மக்கள் ஓசை ஆசிரியர் நேர்காணல்

மலேசியாவின் 'மக்கள் ஓசை' தினசரிப் பத்திரிகையின் முதன்மை ஆசிரியர் ராஜன் என்ற எம்.ராஜேந்திரன்,சமீபத்தில் தமிழகத்துக்கு குறுகிய கால வருகையை மேற்கொண்டிருந்தார். அவர், மலேசிய தமிழ் பத்திரிகை உலகில் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கும் மேலாக தடம் பத்திது வருபவர்.

மறைந்த பத்திரிகையாளர் ஆதி.குமணனின் பாசறையில் கூர் தீட்டப்பட்டவர். ’மலேசிய நண்பன்’ பத்திரிகையின் ஆசிரியராக நீண்ட காலம் பணிபுரிந்தவர். தற்பொழுது ‘மக்கள் ஓசை’ எனும் முன்னணி பத்திரிகையை ஒரு புதிய பார்வையில் நடத்திக் கொண்டிருப்பவர். அவரிடம், மலேசியாவின் நடப்பு அரசியல் விவகாரங்கள், இந்திய சமூகத்தின் நிலைமை, ஹிண்ட்ராப் இயக்கத்தின் போக்கு.. இப்படி நம்முடைய பல விதமான கேள்விகளை கோடையின் ஒரு நண்பகல் பொழுதில் முன்வைத்தபொழுது...

* மலேசிய இந்தியர்களின் பூர்வீக வரலாற்றிலிருந்து ஆரம்பிக்கலாமே....

மலேசியா என்பது மூவின மக்களைக் கொண்ட நாடு.அவர்களில் மலாய்க்காரர்கள் முதன்மையான எண்ணிக்கை கொண்டவர்கள்.2-வது பெரும்பானமையாக சீனப் பெரு மக்கள் உள்ளனர்.3- வது சிறுபான்மை இனமாக இந்திய சமூகத்தினர் உள்ளனர்.இந்திய சமூகத்தின் பூர்வீகம் இந்தியாதான்.

பிரிட்டிஷ் காலத்தில் இந்தியாவிலிருந்து குறிப்பாக தமிழகத்திலிருந்து அடிமைகளாக கொண்டுவரப்பட்டவர்கள்தான் அவர்கள். அவர்களால்தான் நாடு செப்பனிடப்பட்டது. காடுகளாய் இருந்த மலேசியாவை ஒரு புதிய பூமியாக மாற்றிய பெருமை நம் தமிழர்களையே சேரும்,அதற்கு அவர்கள் உரமாக ப்யன்ப்டுத்தப்பபட்டார்கள். கிட்டத்தட்ட அடிமை வாழக்கை முறைதான் வாழ்ந்தார்கள். ஆங்கிலேயர்கள் எந்த வசதிகளையும் நம்மவர்களுக்கு செய்து கொடுக்கவில்லை. படிப்போ, சுகாதாரமான தங்குமிடமோ, உணவோ இப்படி எதுவும் சரிவரக் கொடுக்கப்படவில்லை.

பிறகு நாடு சுதந்திரத்துக்குப்பின் கொஞ்சம் நிலைமை மாறியது. விழிப்புணர்ச்சி ஏற்பட்டது. தொழில் மய நாடாக மாறி இருக்கும் மலேசியாவில் இன்றைய நம்முடைய இந்தியர்கள் மூன்றாம் தலைமுறையை சேர்ந்த மலேசியக் குடிமக்கள்.


* இன்றைய மலேசிய இந்தியர்களின் கல்வி, அரசியல், பொருளாதார நிலைப்பாடு எப்படி இருக்கிறது?

அன்றைய முதல் பிரதமர் தேசத்தந்தை துங்கு அப்துல் ரஹ்மான் காலத்திலிருந்து இன்றையப் பிரதமர் டத்தோ அப்துல்லா படாவிவரை ஐந்து பிரதமர்களை நாடு கண்டுள்ளது. சுதந்திரத்திற்குப் பிறகு நிறைய உரிமைகளி நம் சமூகத்திற்கு அரசாங்கம் வழங்கியது. சமய உரிமை, ஆலய வழிபாடு, தமிழ்ப் பள்ளிகள், அரசுத் துறைகளில் வேலை வாய்ப்பு, வர்த்தகங்களில் பங்கு இப்படி நிறையச் செய்தனர் என்பது மறுக்கப்பட முடியாத உண்மை.

கால ஓட்டத்தில் கடந்த 25 ஆண்டுகளாக நமக்கு கிடைத்த வாய்ப்புகளும், வசதிகளும் சிறிது சிறிதாக நம்மை விட்டு போகத் தொடங்கின. அதுவும் குறிப்பாக கடந்த 5 ஆண்டு காலமாக இதன் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியது. அதற்கான் அண்மைய கால வெளிப்பாடுதான் கடந்த ஆண்டு நவம்பரில் மலேசிய இந்தியர்கள் நடத்திய பேரணி.

இதனை அரசாங்கம் கையாண்ட விதம் தவறாகிவிட்டது.ஒரு கோவில் திருத்தலத்தில் கூடியிருந்தவர்களை அப்புறப்படுத்துவதற்கு அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கை இந்தியர்களிடையே பெரும் கோபத்தையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியது. மேலும் ஆலய உடைப்பு போன்ற சில கசப்பான சம்பவங்கள்தான் பெரிய கொந்தளிப்பாக உருவெடுத்தது. அதுதான் கடந்த தேர்தலிலும் எதிரொலித்தது.

* ஓர் அரை நூற்றாண்டுக்கும் மேலாக அமைதியாக இருந்த இந்திய இனம் திடீரென கொந்தளித்தது எப்படி? அதற்கான அடிப்படைத் தேவை என்ன?

இது ஒரு நல்ல கேள்வி.எல்லா கால கட்டங்களிலும் இந்தியர்களை வழி நடத்தக் கூடிய அரசியல் கட்சி மலேசியன் இந்தியன் காங்கிரஸ் (ம.இ.கா.)தான். குறிப்பாக கடந்த 25 ஆண்டுகளாக ம.இ.கா.வை வழி நடத்தி வருபவரால்தான் ஏராளமான பிரச்சினைகள். அதற்குமுன் தலைவர்களாக இருந்த துன் சம்மந்தன், மாணிக்கவாசகம் இருந்த கால கட்டத்தில் எந்தப் பிரச்சினைகளும் இல்லை.சமுதாயத்தை வழி நடத்தக் கூடிய தலைமைத்துவப் பண்பும், சமுதாயத்தில் பிளவுகள் ஏற்படாமல் ஒருவித அரவணைப்பும் கொண்ட தீர்க்க தரிசனம் கொண்ட தலைவர்களாய் அவர்கள் இருவரும் இருந்தார்கள்.அதனால் அரசாங்கத்திடம் எல்லா உரிமைகளையும் பெற முடிந்ததது. எல்லாச் சலுகைகளும் கிடைத்தன. அதனால் கேள்விகள் இல்லை.

ஆனால் 1981-க்குப் பிறகு அதாவது டத்தோ சாமிவேலு தலைமைத்துவத்துக்குப் பிறகு பல்வேறு குழப்பங்கள்,குளறுபடிகள். இதனால் ம.இ.கா. எனும் பேரியக்கம் குளறுபடிகளால் சிதறிப் போனது. கட்சியில் ஒற்றுமைச் சீர்குலைவு ஏற்ப்பட்டது. இந்தக் கால கட்டத்திதான் இந்தியர்கள் பிளவுபட்டர்கள். இந்திய சமுதாயத்தின் ஐக்கியம் பிளவுபட்டதால் மக்களின் அடிப்படை உரிமைகள் அரசாங்கத்திடம் எடுபடாமல் போனது. இதுதான் அடிப்படைக் காரணம்.

* மலேசியாவில் மாற்றம் நிகழ்ந்தது எப்படி?
* ஹிண்ட்ராப்பின் எதிர்காலம்?
* ஹிண்ட்ராப்பைக் கண்டு மலேசிய அரசு பயப்படுகிறதா?
* மக்கள் செல்வாக்கை இழந்து டத்தோ. அப்துல்லா படாவி அரசு
தடுமாறுகிறதா?
* மலேசிய இந்தியர்களை எதிர்க் கட்சிகள் அரவணைக்குமா?
* டத்தோ சாமிவேலுக்கு எதிராக ம.இ.கா-வில் பெரிய எதிர்ப்புகள்
இல்லையே ஏன்? தமிழக முதல்வர் கலைஞரை கண்டித்தது எந்தவிதத்தில்
நியாயம்?
* மலேசியாவில் தமிழ் மொழி மீதான ஆர்வம் குறைந்து வருகிறது. பிறகு ஏன்
தமிழ்ப் பள்ளிகளை முன்னிலைப்படுத்தும் மோதல் தேவையா?... இப்படி
இன்னும் ஏராளமான கேள்விகளுடன் மலேசிய அரசியலின் முழு நிலவரம்
பற்றி மலேசிய 'மக்கள் ஓசை' பத்திரிகை ஆசிரியர் ராஜன் அவர்களுடன்