October 11, 2007

சிங்காரச் சென்னையைப் பிரிந்து வெளிநாடு/வெளியூர்களில் வாழும் நண்பர்களுக்காக

சங்கமம் நேரடி ஒளிபரப்பு

இன்றைய குறள்

ஒன்றானுந் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்
நன்றாகா தாகி விடும்

ஒரு குடம் பாலில் துளி நஞ்சுபோல், பேசும் சொற்களில் ஒரு தீய சொல்லாக இருந்து துன்பம் விளைவிக்குமானாலும், அந்தப் பேச்சில் உள்ள நல்ல சொற்கள் அனைத்தும் தீயவாகிவிடும்
அறத்துப்பால் : அடக்கம் உடைமை

சூட்சுமமான ஓர் உறவு

"மு.க. அழகிரியும், தி.மு.க.வும் இல்லாதிருந்தாலும் கூட காங்கிரஸ் இந்தத் தேர்தலில் ஜெயித்திருக்கும்" - ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், மத்திய அமைச்சர்.

*****

"கடந்த ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலோடு தி.மு.க-வுடனான உறவு முடிந்து விட்டது. தி.மு.க-வுக்கும் பா.ம.க-வுக்கும் ஏற்பட்டது தேர்தல் கூட்டணிதான்" -டாக்டர் ராமதாஸ், பா.ம.க. தலைவர்

நோபல் பரிசைப் பெறும் மிக அதிக வயதானவரான, டோரிஸ் லெஸ்ஸிங்க்குக்கு 87 வயதாகிறது

  • இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெறும் பிரிட்டிஷ் எழுத்தாளர் :
    டோரிஸ் லெஸ்ஸிங் பிரிட்டிஷ் எழுத்தாளர், டோரிஸ் லெஸ்ஸிங், இலக்கியத்துக்கான நோபல் பரிசை வென்றிருக்கிறார். நெருப்பு, அவநம்பிக்கை, மற்றும் தீர்க்க தரிசன சக்தி போன்றவற்றுடன் பெண்கள் பார்வையிலான அனுபவத்தைப் பற்றி அவர் எழுதினார் என்று இந்தப் பரிசை அறிவித்த, ஸ்வீடிஷ் அக்காடமி கூறியது. இந்தப் பரிசைப் பெறும் மிக அதிக வயதானவரான, டோரிஸ் லெஸ்ஸிங்க்குக்கு 87 வயதாகிறது. 60 ஆண்டுகளுக்கு முன்னர், தனது முதலாவது புதினமான, புல் பாடுகிறது, தி க்ராஸ் இஸ் சிங்கிங், என்ற புத்தகத்தில் அவர், தனது குழந்தைப்பருவத்தைக் கழித்த ரோடிஷியாவில் காலனிய அரசின் வீழ்ச்சி குறித்து எழுதினார். அதிலிருந்து அவர் 20க்கும் மேற்பட்ட புதினங்களை எழுதியுள்ளார்.
  • நேபாள நாடாளுமன்றத்தில் மன்னராட்சியை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்த விவாதம் : நேபாள மன்னர்நேபாளத்தில் மன்னராட்சியை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பிலான தீர்மானத்தை அந்நாட்டு நாடாளுமன்றம் விவாதித்து வருகிறது.
    இந்த ஆண்டின் துவக்கத்தில் நாடாளுமன்றத்தில் சேர்ந்துள்ள, ஒரு முன்னாள் மாவோயிஸ்டால் இந்த தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது
  • இலங்கையில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் லூயிஸ் ஆர்பரைச் சந்தித்தனர் : இலங்கையில் காணாமல் போனவர்களது உறவினர்கள் பலர் இன்று, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான விவகார ஆணையர் லூயிஸ் ஆர்பர் அவர்களை சந்தித்துப் பேசியுள்ளனர்
  • கிழக்கு மாகாண பள்ளிவாசல்கள் சம்மேளனம் ஜனாதிபதிக்குக் கடிதம் : பள்ளிவாசல்கள் சம்மேளனத் தலைவர் ஹனீபா இலங்கையில் மத வழிபாட்டுத் தலங்களில் ஒலி பெருக்கிகள் பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படவிருப்பதாக வெளியாகியுள்ள தகவல்கள் குறித்து கிழக்கு மாகாண அனைத்து பள்ளிவாசல்களின் சம்மேளனம் தமது கவலையை வெளிப்படுத்தும் வகையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு அவசர கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளது
  • இ.தொ.கா பிரதிநிதிகள் மீண்டும் அமைச்சர்களாகினர் : ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மூத்த ஆலோசகரும், சகோதரருமாகிய பசில் ராஜபக்ஷவுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக கடந்த ஆகஸ்ட் மாத முற்பகுதியில், தமது அமைச்சுப் பதவிகளை இராஜினாமாச் செய்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உறுப்பினர்கள் இன்று மீண்டும் அந்த அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்றிருக்கிறனர்
  • அமெரிக்க- துருக்கிய உறவில் ஒரு சிக்கல் : முதலாவது உலகப் போரின் போது துருக்கியில், ஆர்மீனியர்கள் பெருமளவில் கொல்லப்பட்டதை, இனப்படுகொலை என்று அமெரிக்கக் காங்கிரஸ் நாடாளுமன்றத்தின், வெளியுறவுக் குழு வாக்களித்துள்ளமையானது, அமெரிக்காவுக்கும், துருக்கிக்கும் இடையிலான உறவுகளில், புதிய சிரமங்களை ஏற்படுத்தியுள்ளது
  • இன்றைய (அக்டோபர் 11 வியாழக்கிழமை 2007) "BBC" தமிழோசை கேட்க இணைப்பில் செல்க http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml?tamil_worldnews