December 11, 2007

இன்றைய குறள்

அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும்
புன்மையாற் காணப் படும்

ஒருவன் பிறரைப்பற்றிப் புறம் பேசுகிற சிறுமைத்தன்மையைக்கொண்டே அவன் அறவழி நிற்பவன் அல்லன் என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம்

அறத்துப்பால் : புறங்கூறாமை

ஆண் குழந்தை வேண்டுமா அல்லது பெண் குழந்தை வேண்டுமா?

"சாக்லேட்டுகள், இனிப்பு வகைகளை விரும்பிச் சாப்பிடும் கர்ப்பிணிப் பெண்களுக்குப் பெண் குழந்தை பிறக்குமாம். அதேபோல, சிப்ஸ், பர்கர் போன்ற ஸ்னாக்ஸுகளை விழுங்கினால் ஆண் குழந்தை பிறக்குமாம். தென் ஆப்பிரிக்க ஆய்வு ஒன்று இந்த சுவாரஸ்ய தகவலை வெளியிட்டுள்ளது"

பிரதமர் பதவிக்கான வேட்பாளராக அத்வானியை பா.ஜ.க அறிவித்தது

இந்திய நாடாளுமன்றத்துக்கு அடுத்து வரக்கூடிய தேர்தலில், பாரதீய ஜனதாக் கட்சியின் பிரதமர் பதவிக்கான வேட்பாளராக எல். கே. அத்வானி அவர்களை அந்தக் கட்சி அறிவித்துள்ளது. இந்திய நாடாளுமன்றத்துக்கான அடுத்த தேர்தல் 2009 ஆம் ஆண்டிலேயே நடக்கவுள்ள இன்றைய சூழ்நிலையில், இந்த அவசர அறிவிப்பு ஏன் என்ற கேள்வி இந்தியாவில் பலதரப்பாலும் எழுப்பப்பட்டுள்ளது. அதேவேளை குஜராத் தேர்தலில் நரேந்திர மோடி அவர்கள் பெரும் வெற்றியைப் பெறும் தருணத்தில், பிரதமர் பதவிக்கான வேட்பாளராக தனது பெயரை அறிவிக்குமாறு அவர் கோரலாம் என்ற சந்தேகத்திலேயே, அதற்கு முன்னதாக இப்படியான அறிவிப்பு வந்துள்ளதாகவும் சில தரப்பினர் கூறுகிறார்கள். ஆனால், அத்வானி அவர்கள் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளதை, மூத்த பத்திரிகையளரான சோ. இராமசாமி வரவேற்றுள்ளார். அதேவேளை அரசாங்கம் எதிர்க்கொள்ளும் நிலைமைகள் காரணமாக, ஆளும் காங்கிரஸ் கட்சியே முன்கூட்டியே தேர்தலை அறிவிக்கும் நிலையும் உருவாகலாம், என்று கூறிய சோ அவர்கள், அதனாலேயே இந்த அறிவிப்பை பா.ஜ.க முன்கூட்டியே வெளியிட்டிருக்கலாம் என்றும் தெரிவித்தார். இந்த விடயம் குறித்த சோ அவர்களின் செவ்வியை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம் http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml?tamil_worldnews

மின்சார பற்றாக்குறை விவகாரம்: பாமக - திமுக முறுகல்

திமுக-பாமக தலைவர்கள்தமிழ்நாட்டில் மின்சாரப் பற்றாக்குறைப் பிரச்சினை, பொதுமக்கள் மற்றும் தொழில்துறையினரை மட்டுமன்றி, அரசியல் கூட்டணியிலும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. திமுக ஆட்சிக்கு ஆதரவளித்து வரும் பாட்டாளி மக்கள் கட்சி, மின்சாரப் பற்றாக்குறை பிரச்சினையில் தமிழக அரசை கடுமையாக சாடியுள்ளது. தமிழக மின்துறை முற்றிலுமாக செயலிழந்துவிட்டதாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், கடலூர் மாவட்டம் தியாகவள்ளி பகுதியில் தனியார் மின் நிறுவனத்தின் சார்பில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள அனல் மின் நிலையம் தொடர்பாக திமுக – பாமக இடையே சர்ச்சை ஏற்பட்டிருக்கிறது. இந்தப் பிரச்சினை தொடர்பாக, ஆர்க்காடு வீராசாமி மற்றும் டாக்டர் ராமதாஸ் ஆகியோர் பிபிசி தமிழோசைக்கு வழங்கிய செவ்விகளை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம் http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml?tamil_worldnews

மலேசியத் தமிழர்களின் போராட்டம் தேவையா?