November 26, 2007

இன்றைய குறள்

அழுக்கற் றகன்றாரும் இல்லையஃ தில்லார்
பெருக்கத்தில் தீர்ந்தாரு மில்

பொறாமை கொண்டதால் புகழ் பெற்று உயர்ந்தோறும் இல்லை, பொறாமை இல்லாத காரணத்தால் புகழ் மங்கி வீழ்ந்தோரும் இல்லை


அறத்துப்பால் : அழுக்காறாமை

நீதித்துறை மற்றவர்களது வட்டத்தில் மூக்கை நுழைத்து அறிவுறுத்த வேண்டிய காட்டாயம் நிலவுகிறது

"நீதித்துறையின் பணி ஒன்று நடந்த பிறகு அது சட்டப்படி சரியா, தவறா என்று விமர்சிப்பதுதான். ஆனால் இன்று நீதித்துறை, 'அரசாங்கம் இப்படி செய்ய வேண்டும், சட்டசபை, பார்லிமென்ட ஆகியவை இப்படி செய்ய
வேண்டும்' என்று மற்றவர்களது வட்டத்தில் மூக்கை நுழைத்து அறிவுறுத்த வேண்டிய காட்டாயம் நிலவுகிறது. ஒரு கிரிக்கெட் மேட்சில் ஓர் ஆட்டகாரர் மிக மோசமாக விளையாடுகிறார் என்பதற்காக அம்பயர், தானே ஆட்டக்காரரிடமிருந்து கிரிக்கெட் மட்டையை வாங்கி ஆட ஆரம்பித்து விடலாமா? நீதிமன்றத்தின் தீர்ப்புகளை நடைமுறைப்படுத்தாத அரசாங் கங்களை நீதிமன்றத்தால் என்ன செய்ய முடியும்...?" - ஸ்ரீகிருஷ்ணா, அண்மையில் ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி

இராணுவத் தலைவர் பதவியை சில நாட்களில் துறக்கிறார் அதிபர் முஷாரஃப்

  • பாகிஸ்தானில் அதிபர் முஷாரஃப் தமது பதவியில் இரண்டாவது தலைமைக் காலத்திற்கு எதிர்வரும் வியாழக்கிழமை விசுவாசப் பிரமாணம் செய்து பதவியேற்கும் முன்னர், இராணுவத் தளபதி பதவியிலிருந்து அவர் வெளியேறுவார் என்று அதிபரின் சார்பில் பேசவல்ல அதிகாரி ஒருவர் கூறியிருக்கின்றார். இதற்கிடையில் நாடு கடந்த நிலையிலிருந்து நேற்று பாகிஸ்தான் திரும்பிய முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிஃப், எதிர்வரும் ஜனவரி மாத நாடாளுமன்றத் தேர்தலுக்கான தமது வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார்.ஆனாலும், அதிபர் ஜெனரல் பெர்வேஸ் முஷாராஃபின் கீழ் எந்த ஒரு அரசுக்கும் தாம் தலைமை ஏற்கமாட்டார் என அவர் கூறியுள்ளார்.நவாஸின் மிக நீண்டநாள் அரசியல் எதிரியான பேநசிர் பூட்டோவும் தனது வேட்புமனுவை ஏற்கனவே தாக்கல்செய்திருந்தார்.தேர்தல்கள் நியாயமான முறையில் நடப்பதை உறுதிசெய்யும் நடவடிக்கைகளை அதிபர் முஷாரஃப் எடுக்கத் தவறினால் இப்பொதுத் தேர்தலை தாம் புறக்கணிக்கப்போவதாக இரு தலைவர்களுமே கூறியுள்ளனர்
  • வடமத்திய மாகாணத்தில் புலிகள் 4 கிராமவாசிகளை சுட்டுக்கொன்றதாக தேசிய பாதுகாப்பு ஊடக மையம் தகவல் : சம்பவ இடம்இலங்கையின் வடமத்திய மாகாணத்தின் வில்பத்து சரணாலயத்தை அண்மித்த மாவிலாச்சிய என்ற கிராமப்பகுதியில் இன்று காலை 4 கிராமவாசிகளை விடுதலைப் புலிகள் சுட்டுக் கொன்றிருப்பதாகத் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் கூறியுள்ளது
  • அமெரிக்காவில் மத்தியகிழக்கு அமைதி முயற்சி மாநாட்டுக்கு முன்னதாக இஸ்ரேல் பாலஸ்தீன தலைவர்களை அதிபர் புஷ் சந்திக்கிறார் : அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனுக்கு அருகே அன்னாபொலிஸ் என்ற இடத்தில் மத்தியகிழக்கு பற்றிய மேனிலை மாநாடு நாளை செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகவிருக்கும் வேளையில் இஸ்ரேல் பிரதமர் எஹுத் ஒல்மர்ட்டையும் பாலஸ்தீன தலைவர் மஹ்மூத் அப்பாஸையும் அமெரிக்க அதிபர் புஷ் சந்தித்துப் பேசவிருக்கிறார்
  • பிரான்ஸ் சீனா இடையில் பெரும் வர்த்தக உடன்பாடுகள் கையெழுத்தாகியுள்ளன : பிரான்ஸுக்கும் சீனாவுக்கும் இடையில் 3000 கோடி டொலர்கள் பெறுமதியான வர்த்தக உடன்படிக்கைகள் இருநாடுகளின் அரசுத் தலைவர்கள் முன்னிலையில் பீஜிங்கில் கைசாத்திடப்பட்டன
  • பத்திரிகையாளர் ஒருவரின் குடும்பத்தினர் 11 பேர் பாக்தாத்தில் சுட்டுக்கொலை : இராக்கியத் தலைநகர் பாக்தாத்தில் தமது குடும்பத்தாரின் 11 உறுப்பினர்களை ஷியா துப்பாக்கிதாரிகள் கொன்றிருப்பதாக வெளிநாடு ஒன்றில் வாழும் இராக்கிய பத்திரிகையாளர் ஒருவர் கூறியிருக்கின்றார்
  • ஆஸ்திரேலிய பூர்வகுடிகளுக்கு இழைக்கப்பட்ட தவறுகளுக்காக மன்னிப்பு கேட்கவிருக்கிறார் புதிய பிரதமர் : ஆஸ்திரேலியாவின் பூர்வகுடி இனத்தவர் கடந்தகாலத்தில் அனுபவித்து வந்த துஷ்பிரயோகங்கள், தவறுகளுக்காக அதிகாரபூர்வ மன்னிப்பு தாம் கேட்கவிருப்பதாக புதிதாக நாட்டின் பிரதமராக பதவியேற்கவிருக்கும் கெவின் ருட் கூறியுள்ளார்
  • மன்னார் பாடசாலையில் விடுதலைப் புலிகள் நடத்தியதாக இராணுவத்தினர் குற்றம்சாட்டும் மோர்டார் தாக்குதலில் 7 பேர் காயம் : இலங்கையின் வடமேற்கே மன்னார் மாவட்டத்தின் இராணுவ கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் உள்ள மல்லவராயன் கட்டையடம்பன் பாடசாலை மீது இன்று திங்கட்கிழமை பிற்பகல் விடுதலைப் புலிகள் மோர்டார் தாக்குதல் நடத்தியதாகத் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்துள்ளது
  • மத்தியகிழக்கு அமைதி முயற்சிகளில் அதிபர் புஷ் திடீர் மும்முரம் ஏன்? - ஆய்வுக் கண்ணோட்டம் : அமெரிக்காவின் மேரிலேண்ட் பகுதியிலுள்ள அன்னாபொலிஸ் நகரில் நாளை செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள மத்தியகிழக்கு அமைதி மாநாடுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்துவருகின்றன