September 12, 2007

உங்களின் அறிவை வளர்க்க வேண்டுமா?

அறிவு என்பது பொதுவாக சில நிர்ணயிக்கப்பட்ட சோதனைகளால் அளக்கப்படுகிறது. இந்த சோதனை தரும் அளவே Intelligence quotient அல்லது IQ என்று கூறப்படுகிறது. ஒரு குழந்தையின் IQ என்பது எவ்வாறு கூறப்படுகிறது? அந்த குழந்தையின் மன வயதை நிஜ வயதால் வகுத்து வருவதை நூறால் பெருக்க வேண்டும். உதாரணமாக ஒரு பையனின் மன வயது எட்டு என்றும் அவனது நிஜ வயதும் எட்டு என்றால் எட்டை எட்டால் வகுத்து வரும் எண்ணிக்கையான ஒன்றை நூறால் பெருக்கி வருவது நூறாகும். அதாவது அந்த குழந்தையின் IQ நூறாகும்.

இன்னொரு உதாரணம்: ஒரு குழந்தையின் மன வயது 12 என்றும் அவன் நிஜ வயது எட்டு என்றும் வைத்துக் கொண்டால் 12ஐ 8ல் வகுத்து வரும் தொகையான 1.5ஐ நூறால் பெருக்க வருவது 150 ஆகும். அப்போது அந்தக் குழந்தையின் IQ 150 ஆகும். மன வயது என்பது சில சோதனைகளால் நிர்ணயிக்கப்படுகிறது.

அறிவு 17 வயது வரை அதிகரிக்கிறது. பிறகு பொதுவாக குறிப்பிடத்தகுந்த வகையில் அதிகரிப்பதில்லை. ஆகவே பெரும்பாலான நாடுகளில் ஒரு பையன் 18 வயதில் வயதுக்கு வந்துவிட்டால் அவன் முதிர்ச்சி அடைந்தவனாகக் கருதப்படுகிறான். ஆகவே தான் 18 வயதில் போர்க்களங்களுகு கூட போக அனுமதிக்கப்படுகிறான். சாதாரணமாக வளர்ந்து விட்ட ஒருவனின் வயது அவனது வயது எதுவாக இருந்தாலும் கூட 16 என எடுத்துக் கொள்ளப்படுகிறது. ஆகவே வளர்ந்து விட்ட ஒரு பையனின் IQ என்பது அவனது மன வயது x 100 / 16 என்றாலும் கூட இந்த மனவயது என்ற கருத்து சர்ச்சைக்குரியதாக ஆகி விட்டது. ஆகவே இப்போது IQ என்பதை புள்ளிவிவரங்களின் பிரதிநிதித்துவ அடிப்படையில் இந்த வயதில் இந்த அளவு இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.
அறிவை நிர்ணயிக்கும் சோதனைகளின் அளவு அது பகுத்தளிக்கப்படும் வளைவில் நடுவில் வரும் வரை சராசரி என்ற அளவிலும் நடுப்பகுதியைத் தாண்டிவிட்டால் வெகுவேகமாக கீழேயும் இறங்குகிறது. மூன்றுக்கு இரண்டு அளவுகள் 85க்கும் 115க்கும் இடையில் உள்ளன. இந்த நிலையில் உள்ளவர்கள் தான் பெரும்பாலானோர். இருபதுக்கு பத்தொன்பது அளவுகள் 70க்கும் 130க்கும் இடையில் உள்ளன. IQ 130 உள்ளவர்கள் மேதைகள் என்றும் IQ 70க்கும் குறைவாக ஆக ஆக மக்கு என்பதில் ஆரம்பித்து IQ 29 என்பதில் முடியும் போது மூளை வளர்ச்சி குன்றிய நிலையில் இரண்டு வயதுக்கும் கீழாக உள்ள குழந்தையின் மனநிலையில் உள்ளவர்கள் என்றும் கூறப்படுகின்றனர்.

அறிவை ஒரு வரையறுப்பிற்குள் அடக்க முடியாது. புத்திசாலித்தனம், ஞானம், அறிவால் புதிர்களையும் பிரச்சினைகளையும் விடுவிக்கும் தன்மை, பகுத்தாளும் தன்மை மற்றும் கற்பனை வளம் என்றெல்லாம் அறிவைப் பற்றித் தங்கள் பார்வைக்குத் தக்கபடி மக்கள் கூறுகின்றனர். ஆனால் உளவியலாளர்களோ இது போன்ற தியரிகளுக்கெல்லாம் மசிவதில்லை. அவர்கள் அறிவுச் சோதனை எனப்படும் ஈன்டெல்லிகென்கெ டெஸ்ட் நடத்தி ஒருவரின் IQ வைத் தீர்மானிக்கின்றனர்.

ஆல்ஃப்ரட் பைனட் :
47 வயதான ஆல்ஃப்ரட் பைனட் என்ற பிரெஞ்சு உளவியலாளர் சாதாரண குழந்தைகளிடமிருந்து மன நலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளைப் பிரித்து இனம் காண்பதற்காக ஒரு சோதனையை அறிமுகப்படுத்தினார். 1905ல் அறிமுகப்படுத்தப்பட்ட இதுவே முதலாவது இன்டெலிஜன்ஸ் டெஸ்ட்.
மனோசக்தி, புதியன கண்டுபிடித்தல், வழிகாட்டல், விமரிசனம் (இன்வென்சன், அன்ட் க்ரிடிசிஸ்ம் ) ஆகிய நான்கோடு அறிவை பைனட் தொடர்பு படுத்திக் கூறி ஒரே வார்த்தையில் அதை ஜட்ஜ்மென்ட் என்று முடித்து விட்டார்.
டாக்டர் காதரீன் மோரிஸ் நன்கு விவரங்கள் குறிக்கப்பட்ட மேதைகளின் வாழ்க்கையை அலசி ஆராய்ந்து அவர்களது IQ வை மதிப்பீடு செய்துள்ளார்.
மொஜார்ட் ஆறு வயதிலேயே இசைக் கருவிகளை அற்புதமாக வாசித்தார். அதே எட்டு வயதிலேயே கவிதையை எழுதினார். ஆக இப்படி நன்கு விவரங்களை ஆராய்ந்த பின்னர், அவர் அளிக்கும் பிரபலங்களின் IQ வைக் கீழே காணலாம்:

ட்ரேக் 130
க்ராண்ட் 130
வாஷிங்டன் 140
லிங்கன் 150
நெப்போலியன் 145
ரெம்ப்ராண்ட் 155
ஃப்ராங்க்ளின் 160
கலிலியோ 185
லியனார்டோ டா வின்சி 180
மொஜார்ட் 165
வால்டேர் 190
டெஸ்கார்டஸ் 180
ஜான்ஸன் 165
லூதர் 170
நியூட்டன் 190
கதே 210
காண்ட் 175

உலக ஜனத்தொகையில் ஒரு சதவிகிதம் பேரே 140க்கு மேற்பட்ட IQ வைக் கொண்டுள்ளனர். பிரபலங்களின் சராசரி IQ 166! சரி, IQ வை அதிகப்படுத்துவது என்பது சாத்தியமான ஒன்றா? சாத்தியமானது தான். அறிவு மூன்றாகப் பிரிக்கப்படுகிறது.

1) ஜீன்ஸ் அடிப்படையில் நிர்ணயிக்கப்படும் மூளை அறிவு
2) சோதனைக்குட்பட்ட அறிவு. இது கற்பதால் வருவது.
3) ரெப்ளக்டிவ் அறிவு இதுவும் கற்பதால் வருவது.

ஆக முதல் இனத்தைத் தவிர மற்ற இரண்டையும் வளர்ப்பது சாத்தியமானதே. புதிர், புதிர்கணக்கு ஆகியவற்றை விடுவிப்பது கற்பனை வளத்தைப் பெருக்குவது பற்றிய பயிற்சிகள், காபி போன்ற ஊக்கிகளை அருந்துவது தற்காலிகமாக IQ வை அதிகரிக்கும். ஆழ்ந்து உள்ளிழுத்து மூச்சு விடுதலும் நல்ல பயனைத் தரும். நிரந்தர பயனை எதிர்பார்ப்போர் மனப் பயிற்சிகளையும் உடல் பயிற்சிகளையும் செய்வதன் மூலம் மூளை ஆற்றலைக் கூட்டி IQ வை அதிகரிக்க முடியும். இவை மிக அதிக வயதாகும் போது இயல்பாக மூளையின் ஆற்றல் குறைவதைக் கூடத் தடுக்க வல்லவை! எந்த மனப்பயிற்சிகளைச் செய்வது? உங்கள் மனம் எதில் நேரம் போவது தெரியாமல் லயிக்கிறதோ அதுவே சிறந்தது. அதற்காக டி.வி, பார்க்கிறேன் என்றால் அது மனப்பயிற்சியே இல்லை. ஆனால் கிராஸ் வோர்ட் பஜில்-குறுக்கெழுத்துப் போட்டி ஒரு நல்ல பயிற்சி. வார்த்தை விளையாட்டு, தத்துவ விசாரணை அல்லது விவாதம், மனதால் செய்யப்படும் கணக்குகள் இவற்றோடு அன்றாடம் எதையேனும் புதிதாக வடிவமைப்பது அல்லது வடிவமைக்கப்பட்டதை அபிவிருத்தி செய்வது ஆகிய இவையெல்லாம் சிறந்த மனப்பயிற்சிகள்.

உடல்பயிற்சி வகையில் டென்னிஸ், கால்பந்து, கூடைப்பந்து ஆகியவை சிறந்தவை. ஏனெனில் எதில் ஒருங்கிணைப்பு மற்றும் நேரத்திற்குச் செய்வது (Cஊர்டினடிஒன் அன்ட் டிமின்க்) ஆகிய இரண்டும் இணைகின்றனவோ அவையெல்லாமே சிறந்த உடல் பயிற்சிகள் தான். ஒரு நல்ல கார்டியோவாஸ்குலர் அமைப்பானது (கர்டிஒவஸ்குலர் சிஸ்டெம்) நல்ல ரத்த ஓட்டத்தாலேயே ஏற்படும். நல்ல ரத்த ஓட்டமே மூளைக்குத் தேவையான அதிக ஆக்ஸிஜனை ரத்தத்தில் எடுத்துச் செல்லும். ஆகவே தான் அறிவியல் இவற்றைச் சிறந்ததாக சிபாரிசு செய்கிறது. இவை நிலையான மாற்றத்தை மூளையில் ஏற்படுத்தும் என்பது ஒரு சுவையான செய்தி! ஒருங்கிணைப்பு மற்றும் டைமிங் ஆகிய இரண்டும் வாசிப்பிற்குத் தேவையான இசைக்கருவிகளை வாசித்தல், (பியானோ, ஆர்மோனியம் போன்றவை) ஒரு நல்ல பயிற்சி. இத்தோடு கண்களையும் கைகளையும் ஒரு சேரப் பயன்படுத்த வேண்டிய ஓவியம் வரைதலையும் மரவேலை செய்தல் போன்றவற்றையும் செய்யலாம்.

தியானம் செய்வது மூளை ஆற்றலை நிரந்தரமாகக் கூட்ட வல்லது. ப்ரீப்ரண்டல் கார்டெக்ஸ் மற்றும் வலது ஆன்டீரியர் இன்சுலா ஆகிய உணர்வுகளை அறியச் செய்யும் கார்டெக்ஸ் பகுதியின் கனத்தை இது அதிகரிக்கிறது. ஆக, IQ குறைவு என்று யாருமே பயப்படத் தேவை இல்லை. பயிற்சியால் கூட்டக் கூடிய அதிக பட்ச அளவை அடைய மனமிருந்து, பயிற்சிகளை விடாது மேற்கொள்ளும் விடாமுயற்சியும் இருந்தால் IQ கூடுவது நிச்சயம்!

இசைப்பவன் கருத்தும் கேட்பவன் எண்ணமும்
ஒன்றாய்க் கலப்பது ஓசையால் அன்று.
சொல்லே அதற்குத் துணையாய் நிற்பது.
அந்தச் சொல்லும் சொந்தச் சொல்லாம்;
தாய்மொழி ஒன்றே தனிச்சுவை ஊட்டும்.
அவரவர் மொழியில் அவரவர் கேட்பதே
'இசை' எனப் படுவதன் இன்பம் தருவது.
புரியாத மொழியில் இசையைப் புகட்டல்
கண்ணைக் கட்டிக் காட்சி காட்டுதல்.
தமிழன் சொந்தத் தாய்மொழிச் சொல்லில்
இசையைக் கேட்க இச்சை கொள்வதே
'தமிழிசை' என்பதன் தத்துவ மாகும்.

- நாமக்கல் கவிஞர்

இன்றைய குறள்

காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது

தேவைப்படும் காலத்தில் செய்யப்படும் உதவி சிறிதளவாக இருந்தாலும், அது உலகத்தைவிடப் பெரிதாக மதிக்கப்படும்
அறத்துப்பால் : செய்ந்நன்றியறிதல்

அது என்னால் முடியாது!

பிரபல எழுத்தாளர் ஆஸ்கார் ஒயில்டிடம் ஒரு பத்திரிகை ஆசிரியர், "நீங்கள் விரும்பும் சிறந்த நூறு புத்தகங்களின் பட்டியல் ஒன்றை அனுப்பி வையுங்கள்" என்று கேட்டுக்கொண்டார். ஆனால் ஆஸ்கார் ஓயில்டு, தம்மால் அது முடியாது என்று மறுத்து விட்டார். காரணம், "நான் இதுவரையில் ஐந்து புத்தகங்கள் மட்டுமே எழுதி இருக்கிறேன்" என்றார்.

  • நெடுமாறனின் உணவு அனுப்புவதற்கான முயற்சி தோல்வியில் முடிந்தது : தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ நெடுமாறன் மற்ற சில அமைப்புக்களுடன் இணைந்து, யாழ்ப்பாண குடா நாட்டிற்கு மருந்துகள் மற்றும் உணவுப்பொருட்களை தமிழகத்திலிருந்து திரட்டி, படகுகள் மூலம் அனுப்ப எடுத்த முயற்சி, இன்று தமிழகத்தில் தோல்வியில் முடிந்தது. நாகப்பட்டினத்திலிருந்து படகுகள் மூலம் புறப்பட நெடுமாறன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் எடுத்த முயற்சி, படகுகள் ஏதும் கிடைக்காததால் தோல்வியடைந்ததாகத் தகவல்கள் கூறுகின்றன.
    படகுகள் தமிழக காவல்துறையினரின் அச்சுறுத்தலால்தான் கிடைக்காமல் போய்விட்டன என்று இந்த முயற்சி எடுத்த அமைப்புகள் குற்றம் சாட்டின. இதற்கிடையே, இந்த தோல்வியடைந்த முயற்சிக்குப் பின்னர் காலவரையற்ற உண்ணாவிரதம் ஒன்றை தொடங்கிய நெடுமாறனை, போலிசார் கைது செய்தனர். நாகப்பட்டினத்தில் நடந்த பரபரப்பான சம்பவங்களைத் தொகுத்து எமது செய்தியாளர் டி.என்.கோபாலன் வழங்கும் மேலதிக தகவல்களை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம் http://www.bbc.co.uk/tamil/2115.ram
  • ரஷ்யாவின் புதிய பிரதமர் : மாஸ்கோவில் நடந்த எதிர்பாராத ஒரு அரசியல் திருப்பத்தில், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புட்டின், இதுவரை அதிகம் அறியப்படாத ஒரு அதிகாரியை தனது புதிய பிரதமராக பிரேரித்துள்ளார்.
    மிக்கெயில் ப்ரெட்கொவ் அரசின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்ட சற்று நேரத்துக்குப் பின்னர், புட்டின், நிதித்துறைக் குற்றங்கள் கண்காணிப்பு நிறுவனத்தின் தலைவராக இருக்கும், விக்டொர் ஸுப்கோவை இந்தப்பதவிக்கு தனது தேர்வாக அறிவித்தார்
  • சுமத்திரா தீவில் பூகம்பம் : இந்தோனேஷியாவின் சுமத்திரா தீவின் கடற்கரைக்கு அப்பால் இன்று இடம்பெற்ற வலுவான நிலநடுக்கம் காரணமாக பல நகரங்களிலும் பட்டினங்களிலும் இருக்கும் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இதனால் பீதியுற்ற மக்கள் பலர் கட்டிடங்களை விட்டு வீதிக்கு ஓடிவந்தனர்
  • ஜப்பானிய பிரதமரின் பதவி விலகல் குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ளன : ஜப்பானிய பிரதமர் ஷின்ஸோ அபே அவர்கள் திடீரென பதவி விலகியது குறித்து பரவலான விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.
    நாடாளுமன்றத்தின் மூலம் நிறைவேற்றவுள்ள பணிகளை அறிவித்த ஒரு சில நாட்களுக்குப் பின்னர் அவர், இந்தக் காலகட்டத்தில் பதவி விலகியது பொறுப்பற்றது என்று எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் கூறினர்
  • தலிபான்களால் சிறை பிடிக்கப்பட்ட 12 பாகிஸ்தான் சிப்பாய்கள் :
    பாகிஸ்தானின் வடமேற்குப்பிரதேசத்தில், ஆப்கானிஸ்தானுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான எல்லைப்புற சோதனைச்சாவடி ஒன்றின் மீது தாலிபன் ஆதரவு தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி பன்னிரண்டு பாகிஸ்தான் இராணுவ சிப்பாய்களை சிறை பிடித்துச் சென்றுள்ளனர்