September 05, 2007

உங்களிடம் நோக்கியா மொபைல் இருந்தால் உடனே பேட்டரியை பார்க்கவும்

மும்பை : புகழ்பெற்ற மொபைல் கம்பெனியான நோக்கியா, உலகம் முழுவதிலும் உள்ள அதன் உபயோகிப் பாளர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நோக்கியா மொபைலில் பிஎல் 5 சி என்ற பேட்டரி பொருத்தப்பட்டிருந்தால் உடனே அதை மாற்ற சொல்கிறது. அந்த குறிப்பிட்ட நம்பர் பேட்டரியை சார்ஜ் செய்யும்போது சார்ட் சக்க்யூட் ஆகி, பேட்டரி சூடாகி விடுகிறதாம். உலகம் முழுவதிலும் இருந்து நூற்றுக்கும் அதிகமான புகார்கள் நோக்கியா நிறுவனத்திற்கு வந்ததால் அந்த குறிப்பிட்ட வகை பேட்டரியை இலவசமாக மாற்றித்தர நோக்கியா நிறுவனம் முன்வந்துள்ளது. இவ்வாறு பேட்டரி சூடானதால் இதுவரை யாருக்கும் உடல் ரீதியான பாதிப்பு ஏற்பட்டதாக புகார் இல்லை. எனினும் முன்னெச்சரிக்கையாக இந்த வகை பேட்டரிகளை மாற்றித்தர அந் நிறுவனம் முன்வந்துள்ளது. இந்த பிஎல் 5 சி வகை பேட்டரிகள் ஜப்பானின் மேட்சுசிடா நிறுவனம் தயாரித்து நோக்கியாவுக்கு சப்ளை செய்யதாம். நோக்கியா, அதன் மொபைல் போன்களுக்கு தேவையான பேட்டரிகளை பல கம்பெனிகளிடமிருந்து பெற்றிருக்கிறது. அவர்கள் எல்லோருமாக சேர்ந்து 30 கோடிக்கும் அதிகமான பிஎல் 5 சி பேட்டரிகளை சப்ளை செய்திருக்கிறார்கள். அதில் ஜப்பானின் மேட்சுசிடா நிறுவனம், டிசம்பர் 2005 இலிருந்து நவம்பர் 2006 வரை தயாரித்து வழங்கிய 4 கோடியே 60 லட்சம் பிஎல் 5 சி பேட்டரிகளில் தான் இந்த புகார்கள் வந்துள்ளன. இந்த குறிப்பிட்ட காலகட்டத்தில் தயாரிக்கப்பட்ட பேட்டரிகளை மட்டும் மாற்றினால் போதும். இதை தவிற வேறு வகை பேட்டரிகளை மாற்ற தேவை இல்லை. நம்மிடம் நோக்கியா மொபைல் இருந்து, அதிலிருக்கும் பேட்டரியும் பிஎல் 5 சி தான் என்றால், அதை மாற்ற வேண்டுமா வேண்டாமா என்று, நோக்கியா.காம் வெப்சைட்டில் சென்று பார்த்துக்கொள்ளலாம். www.nokia.com

இன்றைய குறள்

பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணியல்ல மற்றுப் பிற

அடக்கமான பண்பும், இனிமையாகப் பேசும் இயல்பும் தவிர, ஒருவருக்குச் சிறந்த அணிகலன்கள் வேறு இருக்க முடியாது
அறத்துப்பால் : இனியவை கூறல்

நாவே இன்னும் கொஞ்சம் மௌனம் கா...
வாயில்லாச் சில்லறைகள் சத்தமிட்டாலும்
வாய்திறந்தும் பேசாத சுருக்குப்பை போல

- கவிப்பேரரசு வைரமுத்து

தொடர்ந்து தரமான நிகழ்ச்சிகள் : இதில் சமரசம் இல்லை : மருத்துவர் இராமதாசு

இப்படித்தான் வாழவேண்டும் என்று தொன்றுதொட்டு ஆண்டாண்டுகாலமாய் இந்தச் சமுதாயத்தை அரித்துக்கொண்டிருக்கும் தொலைக்காட்சிக் குழுமங்களுக்குள் "இப்படியும் சிறப்பாக வாழலாம்" "இந்தச் சமுதாயத்தைச் சீர்தூக்கிப் பார்க்கலாம்" என்ற ஒரு "மாபெரும் புரட்சி" செய்து.. ... இந்தப் பிரபஞ்சத்தின் மூலை முடுக்குகளிலெல்லாம் உள்ள கோடானுகோடித் தமிழ்நெஞ்சங்களை, ஏன்? இந்திய நெஞ்சங்களை நன்றியுணர்வோடும், பிரமிப்போடும் "தங்கள் பக்கம்" திருப்பி, சேவைகளிலெல்லாம் பெருஞ்சேவை செய்து வரும் "மகத்தான மக்கள் தொலைக்காட்சி"யை ஒவ்வொரு சமுதாய நல்லெண்ணம் கொண்டவரும் பாராட்டாமல் இருக்க முடியாது. அந்த வரிசையில் இந்தச் சிறியேனும் "நீங்கள் பல்லாண்டு வாழ்க! தங்களின் சேவை இந்த மண்ணுள்ளவரை தொடர்க!! என்று உண்மையான உணர்வுகளோடு வாழ்த்துகிறேன்! "புரட்சியாளன் புதைக்கப்படுவதில்லை, விதைக்கப்படுகிறான்" என்பது மக்கள் தொலைக்காட்சிக்காகவே செதுக்கப்பட்டதாக உணர்கிறேன்.

மருத்துவர் இராமதாசு : மக்கள் தொலைக்காட்சியில் தொடர்ந்து தரமான நிகழ்ச்சிகள் மட்டுமே ஒளிபரப்பப்படும். வர்த்தக காரணங்களுக்காக தரத்தில் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ள மாட்டோம் என்று மக்கள் தொலைக்காட்சி நிறுவனர் ராமதாஸ் கூறினார். மக்கள் தொலைக்காட்சி இரண்டாவது ஆண்டில் அடிஎடுத்து வைப்பதையொட்டி சென்னை காமராஜர் அரங்கில் வரும் 6-ம் தேதி விழா நடைபெறுகிறது. இதையொட்டி மருத்துவர் இராமதாசு கூறியதாவது : தரமான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி ஒரு வித்தியாசமான தொலைக்காட்சி என்று மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது மக்கள் தொலைக்காட்சி. தமிழ் மொழியையும் தமிழ் சமுதாய வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படுகின்றன. திரைப்படம் அல்லாத அறிவார்ந்த நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி 2-ம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறோம். இரண்டாம் ஆண்டு தொடக்க விழா நிகழ்ச்சிகள் மிகப் பிரமாண்டமாக கொண்டாடப்படுகின்றன. மக்கள் தொலைக்காட்சி வெற்றிக்கு பாடுபட்டவர்கள் சிறப்பிக்கப்படுவார்கள். மத்திய அமைச்சர்கள் பிரிய ரஞ்சன் தாஸ் முன்சி, அன்புமணி ராமதாஸ், தமிழக அமைச்சர்கள் மு.க.ஸ்டாலின், ஆற்காடு வீராசாமி மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கலந்துகொள்கின்றனர்.


வீரப்பன் தொடர் : இரண்டாம் ஆண்டு தொடக்கத்தை ஒட்டி பல்வேறு புதிய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட உள்ளன. வீரப்பன் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு சந்தனக்காடு என்ற தொடர் ஒளிபரப்பாகும். மூட நம்பிக்கைகளை தோலுரிக்கும் "வெங்காயம்" வித்தியாசமான இசை நிகழ்ச்சியாக "ஏலேலங்கடி ... ஏலேலோ. 'வணிகர்களுக்கான முகவரி, தமிழ் சமூகத்தின் சமையலை அறிமுகப்படுத்தும் "கைமணம்" இப்படி 18 புதிய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படும். திரைப்படங்கள்: தரமான திரைப்படங்களை ஒளிபரப்புவது குறித்து பரிசீலித்து வருகிறோம். விளம்பரங்களை ஒளிபரப்புவதில் எங்களுக்கு என்று சில நெறிகளை ஏற்படுத்தி உள்ளோம். அதன்படி "கோக்" "பெப்சி" போன்ற வெளிநாட்டு குளிர்பான விளம்பரங்களை கூட ஒளிபரப்ப மாட்டோம். தற்போது ஐரோப்பா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் ஒளிபரப்ப ஒப்பந்தம் செய்துள்ளோம். இதுபோல் சிங்கப்பூர், மலேசியாவிலும் ஒளிபரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் ராமதாஸ்.

  • பிரிட்டனில் மனித - மிருக சேர்க்கைக் கருக்களை உருவாக்க கொள்கையளவில் அனுமதி : ஆராய்ச்சிக்காக மனிதன் மற்றும் மிருகங்களை இணைத்து, கருக்களை உருவாக்குவதற்கு பிரிட்டனின் ஒழுங்குமுறை ஆணையம் கொள்கையளவில் ஒப்புதல் அளித்துள்ளது.
    இதுபோன்ற ஆராய்ச்சிகளை சட்டபூர்வமாக்கும் ஒரு சில நாடுகளின் பட்டியலில் பிரிட்டனும் இணைந்துள்ளது.
    கலப்பின கருக்கள் 99 சதவீதம் மனிதத் தன்மை கொண்டவையாகவும் ஒரு சதவீதம் விலங்குத் தன்மை கொண்டவையாகவும் இருக்கும்.
    மூளை அழுகல் உள்ளிட்ட சில நோய்களை தீர்ப்பதற்குத் தேவையான குறுத்தணுக்களை பெறுவதற்காக இத்தகைய கலப்பின கருக்களை உருவாக்க விஞ்ஞானிகள் முயன்று வருகின்றனர்.
    இந்த ஆராய்ச்சிகள் கட்டுப்படுத்தப்பட்டவையாக இருக்கும். ஒவ்வொரு சோதனையும் மேலாய்வு செய்யப்படும்
  • டார்பூரில் பான் கீ மூண் : சுடானின் பலவருட மோதல்களால் இடம்பெயர்ந்த சில அகதிகள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தை அடுத்து, அங்கு மேற்கு சுடானின் டார்பூர் பகுதிக்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமைச் செயலர் பான் கீ மூண் அவர்கள், தனது பயணத் திட்டத்தின் ஒரு பகுதியை மாற்றி அமைத்துள்ளார்.
  • குண்டுத் தாக்குதல்களை நடத்தத் திட்டமிட்டவர்களே கைது: ஜெர்மனியில் நேற்று செவ்வாய்க்கிழமை தங்களால் கைது செய்யப்பட்ட மூன்று ஆண்கள், ஜெர்மனியில் இருக்கும் அமெரிக்கர்களை குறிவைத்து குண்டு தாக்குதல்களை நடத்த திட்டமிட்டிருந்ததாக, ஜெர்மனிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவர்களில், இருவர் ஜெர்மனியைச் சேர்ந்தவர்கள் என்றும், இஸ்லாம் மதத்திற்கு மாறியவர்கள் என்றும், ஒருவர் துருக்கி நாட்டைச் சேர்ந்தவர் என்றும் தெரிவித்திருக்கும் ஜெர்மனியின் மத்திய அரச வழக்கறிஞர், இவர்கள் மூன்றுபேரும் அல்கொய்தாவுடன் தொடர்புடைய குழுக்களால் பாகிஸ்தானில் நடத்தப்பட்டு வரும் முகாம்களில் பயிற்சிபெற்றவர்கள் என்றும் தெரிவித்திருக்கிறார்
  • ஜிம்பாவேயில் பாரிய கோதுமைத் தட்டுப்பாடு : ஜிம்பாவேயில் தேசிய அளவில் கோதுமைக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக, அங்கு ரொட்டித்( பாண்) தயாரிப்பை இரு நாட்களில் முற்றாக நிறுத்த வேண்டிய நிலைக்கு தாம் தள்ளப்பட்டுள்ளதாக அந்த நாட்டின் பெரிய ரொட்டித் தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்
  • தொடர்ந்து இன்றைய (செப்டம்பர் 05 புதன்கிழமை 2007) "BBC" தமிழோசைச் செய்திகளுக்கு இணைப்பில் செல்க http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml?tamil_worldnews

எலும்பில்லா மனிதன்