June 17, 2007

உலகப் புகழ்பெற்ற அறிவியல் கண்டுபிடிப்புகள்

மூளையின் குறிப்பிட்ட பகுதி சரியான முறையில் இயங்காமலிருப்பதே காக்கை வலிப்பு நோய்க்குக் காரணம்; அப்பகுதியை அறுவை சிகிச்சையின் வாயிலாக அகற்றிவிட்டால் நோய் குணமாகும் Please 'click' Tamil magazine Tamil news,poem,story,movie & song reviews

இன்றைய குறள்

விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண் பரிது

விண்ணிலிருந்து மழைத்துளி விழுந்தாலன்றி மண்ணில் பசும்புல் தலை காண்பது அரிதான ஒன்றாகும்

அறத்துப்பால் : வான்சிறப்பு

தமிழோசை

இன்றைய (ஜுன் 17 ஞாயிற்றுக்கிழமை) "BBC" செய்தி கேட்க கீழுள்ள இணைப்பை அழுத்தவும் BBCTamil.com Radio Player

June 16, 2007

"கையை வெட்டினாலொழிய பிழைக்கமாட்டாய்"
என்று டாக்டர் சொன்னால் வெட்டிவிடச் சம்மதிக்கிறோம்.
"காலை வெட்டினால் ஒழிய பிழைக்கமாட்டாய்"
என்றால், காலை வெட்டிவிடச் சம்மதிக்கிறோம்.
"மலஜலம் கழிக்க வேறு ஓட்டைப் போட வேண்டும்"
என்றால், போட்டுக் கொண்டு அதில் மலஜலம் கழிக்கிறோம். எடுத்து விட வேண்டும் என்றால்
"கருப்பையை" எடுத்து விடச் சம்மதிக்கிறோம். இன்னும் முக்கிய உறுப்புகளை, முக்கிய பண்டங்களை இழந்தாவது உயிர் வாழ சம்மதிக்கிறோம். அப்படியிருக்க ஒரு "அயோக்கியக் கூட்டம்" நம்மை ஜெயித்து, அடிமையாக்கி, தங்களுக்கு அடிமை என்கின்ற தத்துவம் கொண்ட ஒரு கொள்கையை நம் மீது பலாத்காரத்தாலும், தந்திரத்தாலும், புகுத்தி இழிவு படுத்தி வைத்திருப்பதை ஒழிக் வேண்டும் என்றால் இதற்கு இவ்வளவு யோசனை, எதிர்ப்பு, தயக்கம், வெட்கம், என்றால் இந்த இழிவு (சூத்திரத் தன்மை) எப்பொழுது தான், எந்த வகையில் தான் மறைவது? என்று கேட்கின்றேன். என் மீது கோபிப்பவர்கள் இதற்குப் பரிகாரம் சொல்லாமல் கோபித்தால் அவர்களை வெறும் "வெறியர்கள்"!!! என்று தானே அறிவாளிகள் சொல்லுவார்கள்.

இன்றைய குறள்

கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை


பெய்யாமல் விடுத்து உயிர்களின் வாழ்வைக் கெடுக்கக் கூடியதும், பெய்வதன் காரணமாக உயிர்களின் நலிந்த வாழ்வுக்கு வளம் சேர்ப்பதும் மழையே ஆகும்

அறத்துப்பால் : வான்சிறப்பு

தமிழோசை

இன்றைய (ஜுன் 16 சனிக்கிழமை) "BBC" செய்தி, ஐ.நா.சபை முன்பு தமிழர்களின் "உரிமை ஊர்வலம்" மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'சிவாஜி' திரைப்பட வெளியீடு போன்ற சுவாரஸ்யமான செய்திகள் கேட்க கீழுள்ள இணைப்பை அழுத்தவும்.
BBCTamil.com Radio Player

"கொடைநாடு எஸ்டேட்"

இது எனது கல்லூரிக்காலத்துக் கவிதை!

நீதானே
பௌர்ணமி

நான் ஏன்
தேய்ந்து போகிறேன்?

நீதானே
தலை வாறுகிறாய்
நான் ஏன்
கலைந்து போகிறேன்...

நீயல்லவோ பூ
நான் ஏன்
வாடிப்போகிறேன்?

Today's Quote

All the actions that we see in the world,
all the movement in human society,
all the works that we have around us,
are simply the display of thought,
the manifestation of the human will...
And this will is caused by character,
and character is manufactured by karma.
As is karma, so is the manifestation of the will.


Karma Yoga. New York, 1895. Complete Works, 1: 30.

June 15, 2007

எழுத்தாளர் அனுராதா ரமணன் அவர்களின் நேர்முகம். Please 'click' the link

தமிழ் தேசியம் : ஐ.நா. சபை முன்பு


சுவிஸ் ஜெனீவாவில் நடைபெற்ற 'வெல்க தமிழ் - 2007" நிகழ்வில் வாசிக்கப்பட்ட பிரகடன அறிக்கையின் ஒரு பகுதி. ஒலிப்பதிவை தவறாமல் கேளுங்கள்!Tamil Nation & Beyond - தமிழ் தேசியம்: ஓரு வளர்கின்ற

இன்றைய குறள்

ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்
வாரி வளங்குன்றிக் கால்

மழை என்னும் வருவாய் வளம் குன்றிவிட்டால், உழவுத் தொழில் குன்றி விடும்.

அறத்துப்பால் : வான்சிறப்பு

தமிழோசை

இன்றைய "BBC" (ஜுன் 15 வெள்ளிக்கிழமை) செய்திகள் கேட்க கீழுள்ள இணைப்பை அழுத்தவும் BBCTamil.com Radio Player

Today's Quote

Have faith in yourselves,
great convictions are the mothers of great deeds.
Onward for ever! Sympathy for the poor,
the downtrodden, even unto death--this is our motto.
Onward, brave lads!

From Chicago. Letter to his disciples in Chennai. January 24, 1894. CW, 5: 30.

June 14, 2007

குடிகாரருக்குக் கட்சியில் இடமில்லை!


பரபரப்புக்குப் பெயர் போனவர் பா.ம.க. தலைவர் ராமதாஸ். புகைப்பழக்கம், போதை மருந்துகள், கிரிக்கெட் விளையாட்டு இவற்றைத் தடை செய்ய வேண்டும் என்ற போராட்டங்களைத் தொடர்ந்து, தற்பொழுது அவர் கையில் எடுத்து இருப்பது குடியை ஒழிக்க வேண்டும் என்பதுதான். குடிகாரர் இல்லாத சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்கிறார் அவர். கள்ளச் சாராயத்தை ஒழிக்கவே முடியாது என்று முதல்வர் கருணாநிதி சட்டசபையில் அறிவிக்க, அதைத் தொடர்ந்து ராமதாஸ் இந்தப் பிரச்னையைக் கையில் எடுத்துக் கொண்டிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. 'பா.ம.க. நிர்வாகிகள் யாராக இருந்தாலும், குடிப்பழக்கம் இருப்பது தெரியவந்தால் உடனடியாகக் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்படுவார்கள்' என்றும் தீர்மானம் போட்டிருக்கிறார். துணிச்சலான முயற்சிதான்.

தமிழோசை

இந்தியாவில் குடியரசுத் தலைவர் தேர்தலில் ஆளும் கூட்டணி சார்பில் பிரதீபா பாட்டில் போட்டி. இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தலில், ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மற்றும் இடதுசாரிக் கட்சிகளின் வேட்பாளராக ராஜஸ்தான் மாநிலத்தின் தற்போதைய ஆளுநர் பிரதிபா தேவிசிங் பாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

பிரதமர் மன்மோகன் சிங் இல்லத்தில் நடைபெற்ற ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மற்றும் இடதுசாரிக் கட்சித் தலைவர்கள் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் இதை அறிவித்தார் கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி. பிரதிபா பாடீலை வேட்பாளராகத் தேர்ந்தெடுத்திருப்பது, இந்தியக் குடியரசின் 60-வது ஆண்டில் வரலாற்றுச் சிறப்பு மிக்க தருணம் என்று மகிழ்ச்சி தெரிவித்தார் சோனியா. சட்டத் துறையில் பட்டம் பெற்ற பிரதிபா பாட்டில் 72 வயதானவர். மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த அவர், தேர்ந்தெடுக்கப்பட்டால் முதல் பெண் குடியரசுத் தலைவர் என்ற பெருமையைப் பெறுவார்.மகாரஷ்டிர மாநிலத்தின் காபினட் அமைச்சராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும், மாநில காங்கிரஸ் தலைவராகவும், நாடாளுமன்ற மேலவை துணைத் தலைவராகவும், மக்களவை உறுப்பினராகவும் பணியாற்றிய அனுபவம் வாய்ந்தவர். உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டில் உள்பட காங்கிரஸ் பரிந்துரைத்த பெயர்களை இடதுசாரிக் கட்சிகள் நிராகரித்ததை அடுத்து, பிரதிபா பாடீலுக்கு வாய்ப்புக் கிடைத்துள்ளது. இவர் தேர்வு செய்யப்பட்டிருப்பது பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கபடுவதற்கான ஒரு துவக்கமாக தான் கருதுவதாக தமிழக முதல்வர் கருணாநிதி கருத்து வெளியிட்டுள்ளார். மேலும் இன்றைய "BBC" (ஜுன் 14 வியாழக்கிழமை) செய்திகள் கேட்க கீழுள்ள இணைப்பை அழுத்தவும் BBCTamil.com Radio Player

உயிர்த்தெழுவார்!!

இந்தக் கணினி யுகத்தில், ஒவ்வொருவரும் வாய்ப்பு மட்டும் கிடைத்தால் சந்திர மண்டலத்தில் குடியேற எண்ணிக்கொண்டிருக்கிறார்கள், குடியேறா விட்டாலும் எதிர்வரும் காலங்களில் கண்டிப்பாக நமது எதிர்கால தலைமுறையினர் அங்கு அவ்வப்போது "பிக்னிக்" சென்று பார்த்துவிட்டு வருவார்கள் என்பதில் துளியளவும் ஐயமில்லை. இப்படி நவீன காலத்தில் நாம் "இறந்து போனவன், இதோ உயிர்த்தெழுகிறான்" பார் என்று எல்லோரையும் இளிச்சவாயர்களாக்கும் கொடுமை இன்னும் நம்மூரில் நடந்துகொண்டுதான் இருக்கிறது. என்ன புரியவில்லையா? நான் அதிர்ந்துபோன செய்தியை நீங்களும் படியுங்கள். இவர்களையெல்லாம் நடமாட விடுவதே தவறு. கூர்ந்து கவனித்தால் இவர்களைப்போன்ற ஏராளமானவர்கள் பிடிபடுவார்கள். அனைவரும் மனநோயாளிகள் என்பதைத் தவிர வேறு என்ன சொல்லமுடியும்? இவர்களின் ஜெபத்தில் மாட்டிக்கொண்டு படாத பாடு படும் பாமர மக்கள் பாவம்.... இணைப்பை அழுத்தவும்..Dinamalar.com

இன்றைய குறள்

விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின் றுடற்றும் பசி



கடல்நீர் சூழ்ந்த உலகமாயினும், மழைநீர் பொய்த்து விட்டால் பசியின் கொடுமை வாட்டி வதைக்கும்

அறத்துப்பால் : வான்சிறப்பு

பத்மஸ்ரீ கமலஹாசன் பேட்டி Part I

பத்மஸ்ரீ கமலஹாசன் பேட்டி Part II