June 22, 2007

'காதலும் நட்பும் ஒன்றுதான்'

ஒரேயொரு இடத்தில் மட்டுமே வித்யாசப்படும்

நட்பு வளர வளர அது ஆணாக இருக்கும் பட்சத்தில் அது தலைமுறையும் தாண்டிய ஒரு உறவாக மாறுகிறது. அதுவே ஒரு பெண்ணாக இருக்கும் பட்சத்தில் அது காதலாக மாறி கல்யாணத்தில் போய் நிற்கிறது. அதுவும் தலைமுறைக்குத் தொடர்கிறது.

இப்போது உங்கள் கேள்விக்கு வருகிறேன், நட்புக்கும் காதலுக்கும் உள்ள ஒரேயொரு வித்யாசம்
  • நட்பால் ஆத்மார்த்தமான அன்பைமட்டுமே பகிர்ந்துகொள்ள முடியும்.

    அதனைத்தேடி யாரும் செல்வதில்லை, தானாக வரக்கூடியது, அல்லது ஏற்படுத்திக்கொள்ளக்கூடியது.
  • ஆனால் காதலால் உடலையும் பகிர்ந்துகொள்ள முடியும்.

அதானால்தான் உடலால் கிடைக்கக்கூடிய இன்னொன்றையும் தேடி காதல் என்ற ஒன்றுக்காக தலைமுறை தலைமுறையாக நாம் அலைகிறோம். இது தவறோ குற்றமோ இல்லை. இது மனித நியதி, ஏன் உயிருள்ள ஜீவராசி ஒவ்வொன்றுக்கும் உரியது. ஆத்மா நம்மால் கட்டுப்படுத்த முடியாத ஒன்று.

அப்படி நம்மால் கட்டுப்படுத்தமுடியுமெனில் அங்கே காதலுக்கு இடமில்லை, அது இறைவனுடைய திருவடி நோக்கிப் பிரயாணிக்கும் ஆன்மீகவழி

- இது ஒரு நண்பரின் கேள்விக்கான என்னுடைய பதில்

தமிழோசை

இன்றைய "BBC" (ஜுன் 22 வெள்ளிக்கிழமை) செய்திகள் கேட்க கீழுள்ள இணைப்பை அழுத்தவும் BBCTamil.com Radio Player

  • Our lives are not what we deserve; they are, let us agree, in many ways deficient.
  • Most of what matters in your life takes place in your absence.
  • In this world without quiet corners, there can be no easy escapes from history, from hullabaloo, from terrible, unquiet fuss.
  • A book is a version of the world. If you do not like it, ignore it; or offer your own version in return.
  • A poet's work is to name the unnameable, to point at frauds, to take sides, start arguments, shape the world, and stop it going to sleep.
  • Be sure that you go to the author to get at his meaning, not to find yours. Books choose their authors; the act of creation is not entirely a rational and conscious one.
  • I do not need the idea of God to explain the world I live in.
  • I hate admitting that my enemies have a point.

- Salman Rushdie

பிரபல எழுத்தாளர் சல்மன் ருஸ்டி-யின் தலையைத் துண்டிப்பவர்க்கு ஒரு கோடி ரூபாய் பரிசு என்று அறிவித்திருக்கிறது பாகிஸ்தான் வர்த்தக சங்கம். இவர் இந்தியாவில் பிறந்த பிரபல எழுத்தாளர். எழுத்துத் துறையில் இவர் ஆற்றிய சேவையைப் பாராட்டிப் பிரிட்டன் அரசு "வீரப்பட்டம்" ஒன்றைச் சமீபத்தில் வழங்கியது. இது பாகிஸ்தானில் வாழும் முஸ்லீம்கள் இடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம். எது எப்படியோ? அவரின் "பொன்மொழிகள்" நமக்குத் தேவை.

விதி என்பது – மிதிக்கப்பட்டவர்களுக்கும், ஒடுக்கப்பட்டவர்களுக்கும், கொதித்து எழாதிருக்கச் செய்யப்பட்ட சதியாகும்

- பெரியார்

64 - வது நாயன்மார்

திருமுருகக் கிருபானந்த வாரியார் அவர்களின் அற்புதச் சொற்பொழிவு : 64 - வது நாயன்மார் என்று போற்றக்கூடிய அளவுக்குப் புகழ்வாய்ந்த அந்த மகானின் குரலை எத்தனைபேர் உண்மையாகவே கேட்டிருப்பர் என்று எனக்குத் தெரியாது. ஆனாலும் எனக்குக் கிடைத்த இந்த சொறிபொழிவின் ஒலிப்பதிவை உங்களோடு பகிர்ந்துகொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். கேட்டுவிட்டுத் தங்களின் மேலான கருத்துக்களை இங்கே பதிவு செய்க.






Powered by eSnips.com

இன்றைய குறள்

ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு

ஒழுக்கத்தில் உறுதியான துறவிகளின் பெருமை, சான்றோர் நூலில் விருப்பமுடனும், உயர்வாகவும் இடம் பெறும்

அறத்துப்பால் : நீத்தார் பெருமை

1. தாய் மொழி தவிர வேறொரு பிடித்த மொழி ?
இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து மொழியுமே பிடிக்கும். குறிப்பாகச் சொல்லவேண்டுமெனில் குழலினிது யாழினிது என்பதம் மக்கள் மழலைச்சொல் கேளாதவர்.

2. நீங்கள் அடிக்கடி ரசிக்கும் ஒரு கலை ?
நமது பாரம்பரியக்கலையான பரதக்கலை

3. ஒரு நட்பு காதாலாக மாறுகிறது. இதை பற்றி உங்கள் கருத்து ?
காதலும் நட்பும் ஒரேயொரு இடத்தில் மட்டுமே வித்யாசப்படும். மற்றபடி இரண்டுமே ஒன்றுதான்


4. நீங்கள் அடிக்கடி திட்டும் நபர், திட்டு வாங்க கூடிய நபர் ?
என்னைத்தான். திட்டு வாங்குவது நான்தான்.


5. திமுரு பற்றி உங்களுடைய கருத்து ?
அது ஒவ்வொரு தமிழனுக்கும் இருக்கவேண்டிய ஒன்று

June 21, 2007


"மனசே ரிலேக்ஸ் ப்ளீஸ்" என்றாலே சுவாமி சுகபோதானந்தா அவர்களின் நினைவுதான் அனைவருக்கும் வருமென்பதில் ஐயமில்லை. அவர் நம்மோடு பகிர்ந்துகொள்கிறார். ஒவ்வொருவரும் கேட்கவேண்டிய ஒலிப்பதிவு இது.
Powered by eSnips.com

தமிழோசை

தமிழ்நெட் முடக்கத்திற்கும் தமக்கும் எவ்வித தொடர்புமில்லை என கூறுகிறது இலங்கை அரசு : விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு ஆதரவான இணையத் தளமாகக் கருதப்படும் தமிழ்நெட் இணைய தளத்தை கடந்த சில தினங்களாக இலங்கை அரசு முடக்கியுள்ளதாக கூறப்படும் பரவலான குற்றச்சாட்டினை இலங்கை அரசு மறுத்துள்ளது. இன்றைய (ஜுன் மாதம் 21 - ம் தேதி வியாழக்கிழமை) "BBC" செய்தி கேட்க கீழுள்ள இணைப்பை அழுத்தவும் BBCTamil.com Radio Player

"பட்டியல்" திரைப்படத்தில் மேஸ்ட்ரோ, இசைஞானி இளையராஜா'வுடன் பாடிய தமிழ்ப்பாடகி, இளம்பாடகி ரோஷினியின் நேர்முகம் பகுதி I

நாலடியார்

1. அறத்துப்பால்

1.1. செல்வம் நிலையாமை

அறுசுவை யுண்டி அமர்ந்தில்லாள் ஊட்ட
மறுசிகை நீக்கியுண் டாரும் - வறிஞராய்ச்
சென்றிரப்பர் ஓரிடத்துக் கூழ்எனின், செல்வம்ஒன்று

உண்டாக வைக்கற்பாற் றன்று


- சமண முனிவர்கள்


தமிழ் விளக்கவுரை :

ஆறு விதமான சுவை படைத்த உணவை, அருகே அமர்ந்து, தன் இன்ப மனைவி, தன் கையால் கொடுக்க, அந்த உணவின் மறுபகுதியைத் தொடுவதற்கு முன்னர், வறுமை வந்து, எல்லாம் இழந்து, இன்னொரு இடத்துக்குப் பிச்சை எடுக்கப் போய்விடுவார். அளப்பரிய செல்வம் சேர்ந்து இருப்பினும் ஒன்றுமில்லாத நிலையே!

- ஆதியக்குடியான்


ஆங்கில விளக்கவுரை :


CHAPTER 1.--Unstable Wealth.

Even those who have eaten of every variety of food of six flavours laid before them by their wives with anxious attention, not taking a second portion from any dish, may yet become poor and go and beg somewhere for pottage. Verily riches are but seeming, not to be considered as actually existing.

Translation of Selected Verses by
Rev.F.J.Leeper, Tranquebar

இன்றைய குறள்

நீரின் றமையா துலகெனின் யார்யார்க்கும்
வானின் றமையா தொழுக்கு

உலகில் மழையே இல்லையென்றால் ஒழுக்கமே கெடக்கூடும் என்ற நிலை இருப்பதால், நீரின் இன்றியமையாமையை உணர்ந்து செயல்படவேண்டும்.

அறத்துப்பால் : வான்சிறப்பு

இடுப்புக்குக் கீழே உள்ள உறுப்புகளை இழந்த பிறகும் நாட்டின் விடுதலையின் பொறுப்புகளை இழக்காத இந்த மயூரித் தங்கைகளின் உணர்வை மதித்து நான் பெண்களின் உறுப்புகளை வர்ணித்து திரைப்படத்துக்குப் பாடல் எழுதுவதை நிறுத்திவிட்டேன்" என்று தனக்கென ஒரு பாதையை வகுத்துக்கொண்ட கவிஞன். வானொலி நேர்முகத்தின் ஒலிப்பதிவைக் கேட்க கீழுள்ள செயலியை இயக்கவும்

Get this widget Share Track details

June 20, 2007

உலக அகதிகள் நாள்

உலகில், இன்றைய நிலையில் வன்முறைகளால் குறைந்தது 44 மில்லியன் பேர் அகதிகளாக இருக்கின்றனர் என்று
ஐ நா மதிப்பிடுகிறது.



தமிழ் நெட் இணையதளம் இலங்கையில் முடக்கப்பட்டுள்ளது விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான இணைய தளமாகக் கருதப்படும் தமிழ்நெட் இணைய தளத்தை இலங்கை அரசு முடக்கியுள்ளது. மேலும் மிக முக்கியமான செய்திகளை "BBC" தமிழோசை வழங்கியிருக்கிறது. முழு செய்திகளையும் கேட்க கீழுள்ள இணைப்பை அழுத்தவும்.BBCTamil.com Radio Player



கங்கை அமரன் @ ஜாலிஅமரன்

'மண்ணில் இந்தக் காதல் இன்றி யாரும் வாழ்தல் கூடுமோ'
'தம்தன தம்தன தாளம் வரும் - புது ராகம் வரும் - அதில் சந்தன மல்லிகை வாசம் வரும்'
'ஓரம் போ... ஓரம் போ... ருக்குமணி வண்டி வருது..'
'அண்ணே அண்ணே சிப்பாய் அண்ணே'

மனசில் இனிய நினைவுகளை எழுப்பும் பல பாடல்களை எழுதியிருக்கும் கவிஞர் கங்கை அமரனிடம் பேசியதிலிருந்து... Please 'click' the link

இந்திய ஏவுகணையில் பொறிக்கப்பட வேண்டிய மகாகவியின் உருவம் கழிப்பறையிலா?

கவிஞர் வைரமுத்து விடுத்துள்ள அறிக்கையில், இது சமூகப் பிழையோடு சரித்திரப் பிழையுமாகும். வேறெங்கு நிகழ்ந்திருந்தாலும், அறியாதார் தவறென்று கொள்ளலாம். கர்நாடக மாநிலத்தில் இது நிகழ்ந்திருப்பது உள்நோக்கம் உள்ளதோ என்று கவலை கொள்ளச் செய்கிறது. இந்திய ஏவுகணையில் பொறிக்கப்பட வேண்டிய மகாகவியின் உருவம் கழிப்பறையிலா அந்த மீசை சூரியனை தமிழின் தேசிய அடையாளத்தை இவ்வளவு இழிவு செய்வதா இது உடனே அழிக்கப்பட வேண்டும். கர்நாடக அரசு தலையிட வேண்டும். இல்லாவிட்டால், கவிஞர்கள் திரண்டு தலையிட வேண்டியிருக்கும். இதை இதயக் குமுறலாக எடுத்துக் கொண்டாலும் சரி, எச்சரிக்கையாக எடுத்துக் கொண்டாலும் சரி என்று கூறியுள்ளார் வைரமுத்து. Please click here..http://sadnyvadai.blogspot.com/2007/06/blog-post.html

இன்றைய குறள்

தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம்
வானம் வழங்கா தெனின்

இப்பேருலகில் மழை பொய்த்து விடுமானால் அது, பிறர் பொருட்டுச் செய்யும் தானத்திற்கும், தன்பொருட்டு மேற்கொள்ளும் நோன்புக்கும் தடங்கலாகும்

அறத்துப்பால் : வான்சிறப்பு

இலக்கியம் என்பது

நாகரிகத்தைப் புகட்ட வேண்டும். மக்களிடம் உயரிய குணங்களைப் புகுத்துவதாக இருக்க வேண்டும். எப்படிப்பட்ட கலையும் ஒழுக்கக் குறைவுக்கும், மூட நம்பிக்கைக்கும், சிறிதும் பயன்படக் கூடாததாய் இருக்க வேண்டும்.

- பெரியார்

"நான்மணிக்கடிகை"


தமிழ்பால் தீராத காதலும், பற்றும், மரியாதையும் கொண்ட எத்தனையோ நபர்களில் இவரும் ஒருவர். திரு.ஆதியக்குடி சம்பத், தற்சமயம் சவூதி அரேபியாவில் ஒரு மிகப்பெரிய நிறுவனத்தில் பணிபுரிகிறார். நம்மைப்போல் தமிழ்மேல் பற்றிருக்கும் எவருக்கும் அவர்பால் பற்றிருப்பது ஆச்சர்யமில்லைதான். நான் நெடுநாட்களாகக் கேட்டுக் கொண்டதற்கிணங்க நமது தளத்தில் தொடர்ந்து எழுதி "தமிழ்ச்சேவை" செய்ய ஒப்புக்கொண்டுள்ளார். சுவாசிக்கக்கூட நேரமில்லா வேலைப் பளுவுக்கு இடையிலும் தன்னாலான தமிழ்த்தொண்டை அங்கிருந்து நமக்காகச் செய்யத் தயாராயிருப்பதை நினைத்துப் பெருமைப்படுகிறேன். இருகரம் கூப்பி வரவேற்கிறேன். தொடர்ந்து எழுதுவார்..ஆவலோடு காத்திருப்போம். இன்று "நான்மணிக்கடிகை"யிலிருந்து ஒரு பாடல், விளக்கத்துடன் தருகிறார். நன்றி.

கள்வம்என் பார்க்கு துயில் இல்லை, காதலிமாட்டு

உள்ளம்வைப்பார்க்கும் துயில் இல்லை, ஒண்பொருள்

செய்வம்என் பார்க்கும் துயில் இல்லை, அப்பொருள்

காப்பார்க்கும் இல்லை துயில்.

தமிழ் விளக்கம் :

நான்கு வகையான மனிதர்களுக்கு கண்ணுறக்கம் வராது:

1.பிறர் பொருளை அவருக்குத்தெரியாமல் அபகரிப்பவர்க்கு

2.மனமொத்த அன்புக் காதலியிடம் மனதைக் கொடுத்தவர்க்கு

3.எப்படியாவது பெரும்பொருள்ச் சேர்த்துத் தனவந்தனாகிவிடவேண்டுமென்று சதா எண்ணிக்கொண்டிருப்பவர்க்கு

4.அப்படிப் பாடுபட்டுச் சேர்த்த பெரும்பொருளைக் காத்துக்காத்துக் கிடப்பவர்க்கு

ஆங்கில விளக்கம் :

In the song which follows, the theme is about four different groups of people who cannot sleep well at night, namely, the thief, a person in love, the person after money and the miser looking after his money:

June 19, 2007

திரு.சிவா என்ற ஒரு நண்பர் கேட்ட கேள்விகளும் நான் அவருக்கு அளித்த பதில்களும்

1. இன்றைய விருந்தோம்பல் பற்றி உங்கள் கருத்து?

விருந்தோம்பல் என்பது அருமையான தமிழ்வார்த்தை : அதைப்போல் விருந்தோம்பல் மிகச்சிறப்பானது. நாம் எப்படி விருந்தோம்பல் செய்கிறோம் என்பதைப் பொறுத்து நமக்கு விருந்தோம்பல் கிடைக்கும். விருந்தோம்பலுக்கு வடை, பாயாசம் தேவையில்லை. பச்சைத்தண்ணீர் பருகுவதற்குப் பரிவோடு கொடுத்தாலே அது விருந்தோம்பல்தான். ஆங்கிலத்தில் அதனை ஹாஸ்பிடாலிடி என்றுகூடச் சொல்லலாம்.

2. உங்களைப் பொருத்தவரை எது ரொம்ப கஷ்டம்?


சும்மா இருப்பது

3. ஹிட்லரை பார்க்க வாய்ப்பு கொடுத்தால் எதை பற்றிப் பேசுவீர்கள்?

உங்களைப் பார்த்துப் பிரமிக்கும் அளவுக்கு நீங்கள் எப்படி மற்றவரின் கவனத்தை உங்கள் பக்கம் திருப்பினீர்கள் என்றும், உங்களுக்கு இன்ஸ்பிரேசன் (மண்ணிக்க தமிழ்வார்த்தை தெரியவில்லை) யாரென்றும் கேட்பேன்.

4. வாழ்க்கையில் நிறையப் பேர் மிருகமாக இருக்கிறார்கள். அதற்கு மூல காராணமாக இருப்பது எது?

மனிதர்கள்தான்

5. மனிதன் என்பதற்கு அடையாளம்?

பிறர் துயர் பார்த்துக் கண் கலங்குபவன். "காயத்திற்கு மருந்துவேண்டாம், கனிவான பார்வைபோதும்". மொத்தத்தில் "மனிதம்" எவனிடம் உள்ளதோ அவனே மனிதன்.