July 24, 2007

"பிரார்த்தனை செய்கின்ற உதடுகளைவிட உதவி செய்கின்ற கரங்கள் உயர்வானவை"

- சாயிபாபா

தமிழோசை

இன்றைய (ஜுலை 24 செவ்வாய்க்கிழமை) "BBC" செய்திகள் கேட்க 'க்ளிக்' செய்க BBCTamil.com Radio Player

July 23, 2007

"வாழ்க்கையில் என் சிறகுகள் கவிந்து கொண்டு இருக்கும். எந்த நேரமும் இவை விரியும். சலனம் இல்லாமல், சபலம் இல்லாமல் அவை பறந்து போகும். முடிவின் எல்லை நோக்கி அவை பயணம் போகும் போது, நான் இன்னொரு முறை பிறக்க வேண்டும் என்று ஆசைப்படுவேன். நான் மீண்டும் பிறப்பேன் பிறந்து முதலில் இருந்தே துவங்குவேன். மீண்டும் ஆரம்பத்தில் இருந்தே வாழ்வேன்"
- கவியரசு கண்ணதாசன்

இன்றைய குறள்

மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை எனைமாட்சித் தாயினும் இல்

நற்பண்புள்ள மனைவி அமையாத இல்வாழ்க்கை எவ்வளவு சிறப்புடையதாக இருந்தாலும் அதற்குத் தனிச்சிறப்புக் கிடையாது

அறத்துப்பால் : வாழ்க்கைத் துணைநலம்

ஜனாதிபதி மாளிகையில் தங்கி சாப்பிட்டதற்கு பணம் கட்டிய பண்பாளர் அப்துல்கலாம்


ஜனாதிபதி மாளிகையில் தனது சகோதரர் உள்ளிட்ட உறவினர்கள் தங்கி சாப்பிட்டதற்கு கூட பணம் செலுத்திய பண்பினை பெற்றவர் அப்துல் கலாம் என்று முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் சிறப்பு அலுவல் அதிகாரியாக இருந்த சுதீந்திர குல்கர்னி கருத்து தெரிவித்துள்ளார். தற்போது பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் அத்வானியின் செயலாளராக இருக்கும் சுதீந்திரி குல்கர்ன், அப்துல் கலாமின் குணநலன்கள் குறித்து வியந்து எழுதியுள்ள ஒரு கட்டுரையின் ஒரு பகுதி வருமாறு:
அரசியலின் தரம் குறைந்து கொண்டு வந்த இந்திய வானில், இக்கால இளமையான இந்தியர்களுக்கு அரசியலின் மீது ஒரு புது நம்பிக்கையை அவர் ஏற்படுத்தி வந்தார். அப்துல்கலாம் நாட்டின் கடைகோடியில் இருக்கும் குடிமகனுக்கும் நாட்டின் வளர்ச்சியின் பயனை எட்டச் செய்யும், "வளர்ச்சியடைந்த நாடாக இந்தியா மாறவேண்டும்" என்ற அவரது கொள்கையானது, சரியான கோணத்தில் சிந்திக்கும் எல்லா இந்தியர்களின் உணர்வையும் தட்டி எழுப்பக் கூடியதாக இருந்தது. அவரது நன்நடத்தையும், அவரின் எளிமையுமே ஆகும்.
அவரது ஈடில்லா பண்புகளுக்கு எடுத்துக்காட்டாக, "ஒரு பானை சோற்றுக்கு ஒரு பதம் என்பது போல்'' ஒரே ஒரு சிறந்த உதாரணத்தை இங்கு குறிப்பிடலாம். கடந்த ஆண்டில் ஜனாதிபதி மாளிகைக்கு அப்துல் கலாமின் சொந்த கிராமத்தில் இருந்து 60 உறவினர்களும், நண்பர்களும் வந்தார்கள். அவர்கள் சுமார் ஒரு வாரம் தங்கியிருந்தார்கள். அவர்கள் டெல்லியை சுற்றி பார்க்க விரும்பினார்கள். ஜனாதிபதி மாளிகையில் ஏராளமான கார்கள் இருந்தாலும், டெல்லி மாநகரை அவரது உறவினர்கள் சுற்றி பார்க்க சென்றபோது ஒரு காரைக் கூட அவர்களுக்காக அப்துல் கலாம் அனுப்ப உத்தரவிடவில்லை. அவர்களுக்காக ஒரு பஸ்ஸை ஏற்பாடு செய்தார். அதற்கு தனது சொந்த கணக்கில் இருந்தே பணம் செலுத்தினார். அவர்கள் தங்கியதற்கான அறை வாடகை, உணவுக்கான செலவினையும் அவரே செலுத்திவிட்டார். அப்துல் கலாமின் தனி பங்களாவில் அவரது 90 வயது சகோதரர் ஏ.பி.கே. முத்து மரைக்காயர் அப்போது தங்கினார். அவர் தங்கியதற்காக பணம் செலுத்த அப்துல் கலாம் முன்வந்தார். அப்போது, மிகுந்த உணர்ச்சி பெருக்கால் கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்தபடி, "ஐயா, தயவு செய்து எங்களை மன்னித்து விடுங்கள். இதற்கு மட்டும் எங்களால் கட்டணம் வாங்கவே முடியாது'' என்று ஜனாதிபதி மாளிகை ஊழியர்கள் நெகிழ்ச்சியுடன் கேட்டுக் கொண்டார்கள். இவ்வாறு அந்த கட்டுரையில் குறிப்பிடப் பட்டுள்ளது.

நாலடியார்

1. அறத்துப்பால்

1.9 பொறையுடைமை

வேற்றுமை யின்றிக் கலந்திருவர் நட்டக்கால்
தேற்றா ஒழுக்கம் ஒருவன்கண் உண்டாயின்
ஆற்றும் துணையும் பொறுக்க பொறானாயின்
தூற்றாதே தூர விடல்


- சமண முனிவர்கள்

தமிழ் விளக்கவுரை
மனவேறுபாடில்லாமல் கலந்து வாழும் நண்பருக்குள்ளே அந்த நண்பர் ஒருவராலே களங்கம் உண்டாகுமெனின் சிறிது அமைதி காக்க! அப்படி முடியாத போது அவதூறு பேசாமல் விலகிபோவது நல்லது

- ஆதியக்குடியான்

ஆங்கில விளக்கவுரை
Patience
When two persons are friends, mixing without variance, should there be misconduct on the part of one, let the other be patient, as far as he can bear it. If he cannot take it patiently, let him not speak evil, but withdraw to a distance.

Translation of Selected Verses
by Rev.F.J.Leeper, Tranquebar

தமிழோசை

இன்றைய (ஜுலை 23 திங்கட்கிழமை) "BBC" செய்திகள் கேட்க கீழுள்ள இணைப்பை அழுத்தவும். BBCTamil.com Radio Player

கணிணியுடம் இணைக்கக்கூடியதா உங்கள் மொபைல்?இணைய வசதியுடன் இருக்கிறதா.. உங்கள் மொபைல்?
இதோ ஈ-புக் மாதிரி வந்து விட்டது மொபைல் புக்! அதுவும் நம் தாய் மொழி தமிழில்! தமிழகத்தை சேர்ந்த கணேஷ்ராம் என்ற இளைஞரின் மொபைல்வேதா என்ற நிறுவனம் இச்சேவையை வழங்கி வருகிறது. சக பதிவரான தம்பி என்னாரெசு மூலம் இவர்கள் முதலில் பெரியார் வாழ்க்கைச் சுருக்கத்தினை தமிழ், ஆங்கிலத்தில் பென்நூலக்கி இருக்கிறார்கள். அதற்கு கிடைத்த வரவேற்பு இவர்களை தொடர்ந்து தமிழ் மென்நூல்களின் பக்கம் கவனம் செலுத்தத்தொடங்கி இருக்கிறார்கள்.
இப்போது இவர்களின் இணையதளத்தில் 150 தமிழ் நூல்களை மொபைல்-புக் ஆக்கி இருக்கிறார்கள். பெரியாரின் வாழ்க்கை சுருக்கத்திற்குப் பின் பழந்தமிழ் இலக்கியங்களில் தங்களின் சேவையை தொடங்கி இருக்கிறார்கள். பாரதியார், பாரதிதாசனின் கவிதைகளை இம்மாத இறுதிக்குள் கொண்டு வந்து விடுவதாகவும் சொல்கிறார் கணேஷ்ராம். ஒரு எம்.பி3 பாடல் உங்கள் மொபைலில் பிடிக்கும் இடத்தில் குறைந்தது 100 மொபைல் நூல்களை நீங்கள் சேமிக்க முடியும் என்பது கூடுதல் சிறப்பு. காப்புரிமை பிரச்சனை இல்லாத எழுத்துக்களை இலவசமாக தொடர்ந்து கொடுக்கப்போவதாகவும் சொல்கிறார். கூடவே பிரபலமான எழுத்தாளர்களின் படைப்புக்களை காப்புரிமை பெற்று.. அதை விற்பனைக்கு கொண்டு வருவதற்கான வேலைகளிலும் ஈடுபட்டிருப்பதாக சொல்கிறார்.



இப்பாதைக்கு இந்த இலவச மொபைல் நூல்களை பெறுவதற்கு இந்த தளத்தில் உங்களுக்கான ஒரு பயணர்கணக்கை உருவாக்கிக் கொள்ளுங்கள். அதன் பின் நீங்கள் விரும்பும் நூல்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். சோதித்துப் பாருங்கள்.

ஆகஸ்ட் 5ம் தேதி சென்னையில் நடக்கவிருக்கும் பதிவர் முகாமில் கணேஷ்ராம் வந்து.. இது பற்றிய டெமோ கொடுக்கவும் நேரம் ஒதுக்கித்தரும் படி கேட்டிருக்கிறார். பட்டறையில் நாம் கொடுக்கப்போகும் இறுவட்டிலும்.. தங்களின் மொபைல் நூல்களைத் தர சம்மதம் தெரிவித்திருக்கிறார்.

July 22, 2007

"யாழ் சுதாகர்"

"யாழ் சுதாகர்" பெயரில் மட்டுமல்ல இனிமை, கோபுரக் கலசங்களாக இருப்பினும் கீழுள்ள குடிசைகளைத் தன்னோடு கை சேர்த்து மேலிழுக்க முயற்சிக்கும் மனித நேயம், தமிழனுக்கேயுரிய தனித்துவம், எளிமை, கருணை இவையனைத்துக்கும் சொந்தக்காரர்தான் அந்த "யாழ் குரலோன்". இந்த மூக்கொழுகும் மூன்று வயதொத்த மழலையின் மண்கோபுர விளையாட்டான, எனது வலைத்தளைத்தைப் பற்றி, அவர் வாயால் வாழ்த்திய வார்த்தைக்காவியம் இது.

"மனித நேயம் சுடர் விடும் தங்கள் இணையத் தளம்... என்னை நெகிழ வைக்கிறது. ஒரு சிற்பத்தைப் போல ....அதை செதுக்கி வைத்திருக்கும் அழகும் நேர்த்தியும் என்னை மலைக்க வைக்கிறது. மயங்க வைக்கிறது. தங்கள் தமிழ் இசைத் தொண்டு மேலும் தொடர எல்லாம் வல்ல இறைவன் துனையிருப்பானாக"


என்னே யான் பேறு! பிறவிப்பலனை அடைந்துவிட்டேன்! நன்றி! அந்த மாமனிதனுக்கும்! பிறகு கடவுளுக்கும்!! அவரின் வலைத்தளத்தை நீங்களும் பிரயாணித்துப் பிரமிப்படையுங்கள். இது என் பாக்கியம்!!
http://www.blogger.com/profile/14507708154159068336

இன்றைய குறள்

மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை


இல்லறத்திற்குரிய பண்புகளுடன், பொருள் வளத்துக்குத் தக்கவாறு குடும்பம் நடத்துபவள், கணவனின் வாழ்வுக்குப் பெருந்துணையாவாள்

அறத்துப்பால் : வாழ்க்கைத் துணைநலம்

தமிழோசை

இன்றைய "BBC" (ஜுலை 22 ஞாயிற்றுக்கிழமை) செய்திகள் கேட்க கீழுள்ள இணைப்பில் செல்க BBCTamil.com Radio Player

"மனித உன்னதம், மனித அற்பத்தனம், மனித இனிமை, மனித பொதுத்தன்மை எல்லாம் மகிழ்ச்சியையும், கோபத்தையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்துகிறபோது எழுத முடிகிறது"

- பிரபஞ்சன்

"தலைக்குமேலே வெள்ளம் போனா சான் என்ன முழம் என்ன" - பழமொழி, "மெகா சீரியல் டிவி-ல போனா சுனாமி என்ன பூகம்பம் என்ன?" - புதுமொழி

ஒன்றுபட்டுப் போராடினால் சிங்கமென்ன ஜெகத்தையே வெல்லலாம். இந்த வீடியோவைப்பாருங்கள்!

July 21, 2007

* உலகில் அனைத்துமே நல்லதாகத்தான் இருக்கிறது. ஆனால், அதைப் பார்ப்பவர்களின் கோணத்தில்தான் அதில் வேறுபாடு தெரிகிறது. வெள்ளை நிறப்பொருளை எந்த நிறத்தில் கண்ணாடி அணிந்து கொண்டு பார்த்தாலும், அதன் நிறத்தில்தான் அது தெரியும். இதைப்போலவே கடவுளை, மனம் எனும் கண்ணாடி வழியாக பார்ப்பவர்களின் தன்மைக்கு ஏற்றவாறு அவர் காட்சி கொடுக்கிறார். மனதுக்குள் மாயக் கண்ணாடி அணியாமல், பரிசுத்தமானதான, உள்ளதை உள்ளபடி பிரதிபலிக்கக் கூடியதாக அணிந்து கொள்ள வேண்டும்.
* மனதை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளுங்கள். மகிழ்ச்சியான மனமே புத்துணர்வுடனும், செயலாக்கம் மிக்கதாகவும் இருக்கும். சோர்வடைந்த உள்ளத்தால் எவ்வித பயனும் இல்லை. அவர்களால் அடுத்தவருக்கும் நன்மைகள் செய்ய முடிவதில்லை. அத்துடன் உடன் இருப்பவர்களுக்கும் துன்பம்தான் விளைகிறது. சோர்வுடன் இருக்கும் ஒருவரைக் காணும் மற்றொருவர், தனக்கும் துன்பம் வந்துவிட்டது போலவே கவலை கொள்கிறார். எனவே, துன்பத்துடன் இருப்பவர்கள், யாரையும் சந்திக்காமல் தனிமையில் இருப்பதே நல்லது. அந்த வேளையில் தனக்கு துன்பம் நேர்ந்ததற்கான காரணத்தை அவர் ஆராய்ந்து பார்க்க வேண்டும். சிறிது நேரம் தனிமையில் அதற்கான காரணத்தை சிந்தித்து விட்டாலே, அதனால் பயன் ஒன்றுமில்லை என்பது புலப்பட்டுவிடும். ஆகவே, ஒன்றுமில்லாத சோர்வை விரட்டி, மகிழ்ச்சியுடன் இருங்கள்.
-தாயுமானவர்

"புத்தி தெளிவாகவும், மனம் சமநிலைப்பட்டும் ஒரு பேனாவைப் பிடிக்கும் அளவு உடலில் தெம்பு இருக்கும் வரை எழுதிக்கொண்டே இருப்பேன்"

- பிரபஞ்சன்

இன்றைய குறள்

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்


தெய்வத்துக்கென எத்தனையோ அருங்குணங்கள் கூறப்படுகின்றன. உலகில் வாழ வேண்டிய அறநெறியில் நின்று வாழ்கிறவன் வானில் வாழ்வதாகச் சொல்லப்படும் தெய்வத்திற்கு இணையாக வைத்து மதிக்கப்படுவான்


அறத்துப்பால் : இல்லறவியல்

தமிழோசை

இந்தியாவின் முதல் பெண் ஜனாதிபதியாக பிரதீபா பாட்டீல் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். தேர்தல் முடிவுகளை இந்திய தேர்தல் ஆணையம் இன்று அறிவித்தது. 72 வயதான பிரதீபா பாட்டீல் ஆளும் காங்கிரஸ் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்பட்டார். மேலும் இன்றைய (ஜுலை 21 சனிக்கிழமை) 'BBC' செய்திகள் கேட்க கீழுள்ள இணைப்பை அழுத்தவும் BBCTamil.com Radio Player

பாடல்களைக் கேட்கும்போது நம்மையறியாமலே மனதுக்கு ஒரு இனம் புரியாத உணர்வு கிடைக்கும் என்றால் அவை நல்ல இசையென்று பொருள். "நல்ல இசையைக் கேளுங்கள், உங்களின் ஆத்மாவை அது எங்கோ ஓர் இடத்துக்கு எடுத்துச்செல்லும்" என்று "இசைஞானி" சொல்வார். அவற்றில் இவைகளும் அடங்கும். கேட்டுப்பாருங்கள்.
Powered by eSnips.com

நாலடியார்

1. அறத்துப்பால்

1.8. சினம் இன்மை

கூர்த்துநாய் கெளவிக் கொளக்கண்டும் தம்வாயால்
பேர்த்துநாய் கெளவினார் ஈங்கில்லை - ஈர்த்தன்றிக்
கீழ்மக்கள் கீழாய சொல்லியக்கால் சொல்பவோ
மேன்மக்கள் தம்வாயால் மீட்டு

- சமண முனிவர்கள்


தமிழ் விளக்கவுரை

வெறி பிடித்த நாய் தன்னைக் கடித்துவிட்டால், அதைத் திருப்பிக் கடிப்பார் யாருமில்லை. அது போல சீரிய குணம் இல்லாதவர்கள், தீய வார்தைகளைத் தன்மீது உபயோகித்தால், கற்று உணர்ந்த பெரியவர்கள் அதே வார்தைகளைத் தம் வயால் அவர் மீது சொல்லமாட்டார்கள்


- ஆதியக்குடியான்

ஆங்கில விளக்கவுரை

Placidity
There is none here who, though they see a dog snap angrily at them, will in return snap at the dog again with their mouth. When base born persons mischievously utter base things, will the noble repeat such words with their mouths in return?

Translation of Selected Verses
by Rev.F.J.Leeper, Tranquebar