September 03, 2007

ஒரு நண்பர் குழுமத்தில் கேட்ட கேள்விக்கு நான் அளித்த பதில்கள்!

1. ஒன்றுக்கும் உதவாதவர்களை என்ன செய்யலாம்?

இந்த உலகத்தில் ஒன்றுக்கும் உதவாதவர்கள் என்று யாரும் இல்லை

2. விமர்சகர்கள் என்றால் யார்?

எந்த ஒரு பச்சாதாபமும் இல்லாமல் தன்னைத்தானே எவனொருவன் முதலில் விமர்சித்துக்கொள்கிறானோ அவனே ஒரு உண்மையான விமர்சகன். உதாரணம் : கவியரசு கண்ணதாசன். அவரே சொன்னது : ஒரு மனிதன் எப்படியெல்லாம் வாழக்கூடாதோ அப்படியெல்லாம் நான் வாழந்திருக்கிறேன். அதனால் மற்றவர்களுக்கு அறிவுரை சொல்ல எனக்கு அறுகதை இருக்கிறது.
3. உங்களை சினிமாத் தணிக்கைக்குழு உறுப்பினராக்கினால்?


நான் முதலில் சொன்னதுபோல் ஒரு நல்ல விமர்சனாகவே இருப்பேன். ஆனாலும் திரைத்துறையில் உள்ள கடைநிலை ஊழியர்களின் வயிற்றில் அடிக்க நான் விரும்பவில்லை. காரணம் நிறையை பேர் வேலை இழந்துவிடுவர்.
4. தர்மம் தலை காக்குமா?


கட்டாயம் காக்கும். தருமத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் தருமம் மறுபடி வெல்லும். நண்பரே! நாமெல்லாம் தமிழர்கள், குறிப்பாக இந்தியர்கள். இந்தக் கேள்வியைத் தயவு செய்து இன்னொரு முறை கேட்காதீர்கள். காரணம் நமது இதிகாசங்கள், புராணங்கள் எல்லாம் வலியுறுத்துவதே அதைத்தான்.

5. அடுத்தவர் குறைகளையே அலசிக் கொண்டிருப்பவர்களைப் பற்றி?
அதில் நீங்கள், நான், யாருமே கவனம் செலுத்தாமல் நமது வேலையைப்பார்ப்போம். அவரும் அவர் வேலையைச் செய்கிறார். செய்துவிட்டுப்போகட்டும். மேற்சொன்ன தருமம் மறுபடி வெல்லும்.

பாலைவனப் பரிதாபங்கள்

இரு தினங்களுக்கு முன் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த இளைஞரை சந்திக்க நேர்ந்தது. அவர் துபாயிலிருந்து திரும்பி இருந்தார், (அரசின் கருணை மூலம்)-amnesty அம்னெஸ்டி மூலம். தம்பியின் கதை கேட்டு மனதே கனத்தது. என்ன செய்வது ஒரு பக்கம் சாப்ட்வேர் (software) மூலம் நம் இளைஞர்கள் பணத்தில் மிதப்பதும் ஞாபகம் வந்தது.தம்பி பத்தாவது வரை படித்துள்ளார்... வெளிநாட்டு மோகத்தினால் மட்டும் இல்லாமல் தன் குடும்ப நிலையை மாற்றவும் நினைத்து ஒரு பெரும் தொகையை ஏஜென்டுக்கு கொடுத்துவிட்டு விமானம் ஏறியுள்ளார். இறங்கியபின்பு தான் தெரிந்தது, அது ஒட்டக கூடாரம் என்று. துபாய் நகரிலிருந்து வெகு தொலைவில் ஆள் அரவம் இன்றி இருந்ததாம். வேலை புல் தோட்டத்தில் புல் அறுத்து ஒட்டகத்துக்கு இடுவது. தன் ஊரில் வீட்டில் உள்ள மாட்டுக்குக் கூட ஒரு வேளை புல் போடாதவன். புது வாழ்க்கை புல்லே ஆனது கொடுமையாய் இருந்தது. ஏஜென்ட் ஏமாற்றி இருக்கிறான். பொறுத்துக் கொண்டு காசுக்காக பணி செய்தபோது அரபி உரிமையாளர் சம்பளமே கொடுக்காத போது தான் புரிந்ததாம், அரபி நேர்மையான ஆள் அல்ல என்று. மூன்று அல்லது நான்கு சம்பளமே இல்லையாம். பின்பு ஒரு மாதம் சம்பளம் கிடைத்ததாம். இப்படி ஒரு வருடம் தண்டனையைக் கழித்து, ஒரு நாள் சொல்லிக் கொள்ளாமல் வெளியேறி துபாய் நகருக்கு சென்றிருக்கிறார்.அங்கே வேறு ஒரு தமிழ் நண்பரின் உதவியுடன் ஒரு கார் ஒர்க்ஷாப்-பில் சேர்ந்திருக்கிறார். இது முறை தவறிய (illegal) பணி தான். என்ன செய்வது... குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும், முக்கியமாக வாங்கிய கடனுக்கு வட்டி கட்டியாக வேண்டும். வெளியே தலையே காட்டாமல் இரு வருடங்கள் வேலை செய்திருக்கிறார், கிடைக்கும் பணத்தை தெரிந்தவர்கள் மூலமாக வீட்டுக்கும் அனுப்பி இருக்கிறார். இதனிடையே அரசு, விசிட் விசாவில் வந்து திரும்பாதவர்களுக்கும், வேறு வேலைக்குத் தப்பி ஓடியவர்களுக்கும் கருணை அடிப்படையில் தங்கள் நாடு திரும்பலாம் என அறிவித்தது. அந்தந்த நாட்டு தூதரகங்கள் மூலமாக திருப்பி அனுப்ப ஏற்பாடு செய்தது. விமான டிக்கெட் எடுக்க வழியில்லாதவர்களுக்கு இந்திய சேவை அமைப்புகள் உதவி செய்தன. தம்பி இதை அறிந்து இந்திய தூதரகத்தில் அடைக்கலம் ஆகியிருக்கிறார். அங்கு இருந்த அதிகாரிகள் இவர் கதையை கேட்டு உதவி செய்வதாய் ஆறுதல் வார்த்தை கூறியிருக்கின்றனர். புல் தோட்டத்து முதலாளி அரபியிடம் பாஸ்போர்ட் மாட்டிக்கொண்டதால், சிரமப்பட்டு அரசின் ஆதரவினால் தமிழ்நாடு வந்து சேர்ந்துள்ளார். கடைசியாக, இனி என்ன செய்யப்போகிறீர்கள் எனக் கேட்டேன். பதிலைக் கேட்டு திடுக்கிடத் தான் முடிந்தது.''தடைக்காலம் (Ban period) முடிந்தவுடன் ஒரு வருடம் கழித்து மீண்டும் துபாய் செல்வேன்''.

September 02, 2007

கற்பு என்பதற்குப் "பதிவிரதம்" என்று எழுதிவிட்டதன் பலனாலும், பெண்களைவிட ஆண்கள் செல்வம், வருவாய், உடல் வலிவு கொண்டவர்களாக ஆக்கப்பட்டுவிட்டதனாலும், பெண்கள் அடிமையாவதற்கு, புருஷர் மூர்க்கர்களாகி கற்பு என்பது தங்களுக்கு இல்லை என்ற நினைப்பதற்கும் அனுகூலம் ஏற்பட்டதே தவிர வேறில்லை. தவிர, புருஷர்கள் கற்புடையவர்கள் என்று குறிக்க நமது பாஷைகளில் தனி வார்த்தைகளே காணாமல் மறைபட்டுக் கிடப்பதற்குக் காரணம் ஆண்களின் ஆதிக்கமே தவிர வேறில்லை


- பெரியார்

எச்சரிக்கை : பக்கவாதம்!

(ஆங்கிலத்திற்கு மன்னிக்க) STROKE: Remember The 1st Three Letters... S.T.R. My friend sent this to me and encouraged me to post it and spread the word. I agree. If everyone can remember something this simple, we could save some folks. Seriously.. Please read: STROKE IDENTIFICATION: During a BBQ, a friend stumbled and took a little fall - she assured everyone that she was fine (they offered to call paramedics) and just tripped over a brick because of her new shoes. They got her cleaned up and got her a new plate of food - while she appeared a bit shaken up, Ingrid went about enjoying herself the rest of the evening. Ingrid's husband called later telling everyone that his wife had been taken to the hospital - (at 6:00pm , Ingrid passed away.) She had suffered a stroke at the BBQ. Had they known how to identify the signs of a stroke, perhaps Ingrid would be with us today. Some don't die. They end up in a helpless, hopeless condition instead. It only takes a minute to read this... A neurologist says that if he can get to a stroke victim within 3 hours he can totally reverse the effects of a stroke...totally. He said the trick was getting a stroke recognized, diagnosed, and then getting the patient medically cared for within 3 hours, which is tough.
RECOGNIZING A STROKE Thank God for the sense to remember the "3" steps, STR . Read and Learn! Sometimes symptoms of a stroke are difficult to identify. Unfortunately, the lack of awareness spells disaster. The stroke victim may suffer severe brain damage when people nearby fail to recognize the symptoms of a stroke. Now doctors say a bystander can recognize a stroke by asking three simple questions:
  • S * Ask the individual to SMILE.
  • T * Ask the person to TALK..... TO SPEAK A SIMPLE SENTENCE (Coherently) (i.e. . .. It is sunny out today).
  • R * Ask him or her to RAISE..... B OTH ARMS.
NOTE : Another 'sign' of a stroke is this: Ask the person to 'stick' out their tongue. If the tongue is 'crooked', if it goes to one side or the other that is also an indication of a stroke. If he or she has trouble with ANY ONE of these tasks, take the person immediately!! to the nearest hospital. A cardiologist says if everyone who gets this e-mail sends it to 10 people; you can bet that at least one life will be saved.

நண்பர் யாழ் சுதாகர் தொகுத்துவழங்கும் ஜெயச்சந்திரன் வாணி ஜெயராம் பாடல்கள்!

Powered by eSnips.com

இன்றைய குறள்

அகன் அமர்ந் தீதலின் நன்றே முகனமர்ந்து
இன்சொலன் ஆகப் பெறின்

முகம் மலர்ந்து இனிமையாகப் பேசுவது, அகம் குளிர்ந்து ஒன்றைக் கொடுப்பதைவிட மேலான பண்பாகும்

அறத்துப்பால் : இனியவை கூறல்

  • கருத்து வேற்றுமை காரணமாகவே முஷாரப்புடன் நடத்திய பேச்சு தோல்வியடைந்தது : பெனாசீர் - பாகிஸ்தான் அதிபர் ஜெனரல் முஷாரப்புடன் தாம் நடத்திய, அதிகாரப்பகிர்வு பற்றிய பேச்சுவர்த்தகள், அதிபரின் அதிகாரங்கள் மற்றும் நாடாளுமன்றத்தின் அதிகாரங்கள் ஆகிய விடயங்களின் ஏற்பட்ட வேற்றுமைகள் காரணமாக தடைபட்டு நிற்பதாக நாடு கடந்து வாழும் முன்னாள் பிரதமர் பெனாசீர் பூட்டோ கூறியிறுக்கிறார்
  • பாதுகாப்பு செலவு பற்றிய விவரங்களை தெரிவிக்க சீனா முன்வந்துள்ளது : தனது ராணுவத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகை எவ்வாறு செலவிடப்படுகிறது என்பது குறித்த விபரங்களை ஆண்டுதோரும் ஐக்கிய நாடுகள் சபைக்கு வழங்கப் போவதாக சீனா அறிவித்துள்ளது. சீனாவின் இராணுவப் படைப் பெருக்கம் குறித்து சர்வதேச அளவில் வெளியிடப்படும் கவலைகளுக்கு பதில் அளிக்கும் விதமாக இந்த நடவடிக்கை வந்துள்ளது
  • இரான் அணுதிட்டம் பெரும் முன்னேற்றமடைந்துள்ளதாக அகமதுநிஜாத் அறிவிப்பு : இரான் தனது அணு ஆற்றல் திட்டத்தின் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளதாக அந்நாட்டு அதிபர் முகமது அகமதுநிஜாத் தெரிவித்துள்ளார். யூரேனியத்தை செரிவூட்டக்கூடிய மூவாயிரம் சென்டிரிபூயூஜ்ஜுகள் இரானிடம் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய நாடுகளின் அணு ஆற்றல் அமைப்பு இது குறித்து கடந்த வாரம் வெளியிட்ட மதிப்பீட்டை விட இது அதிகம்

நான்கு மனைவிகள், 11 குழந்தைகளுடன் `சவுக்கிய'மாக வாழ்கிறார் ஒசாமா

அமெரிக்க படையினரிடம் சிக்காமல் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தாலும், தனது குடும்பம் குழந்தைகளுடன் பாதுகாப்பாகவே இருக்கிறார் அல்-குவைதாவின் ஒசாமா பின் லாடன். ஆறு ஆண்டுகளுக்கு முன் அமெரிக்க வர்த்தக மையத்தின் மீது அல்-குவைதா பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலிலிருந்து, அதன் தலைவர் ஒசாமா பின் லாடனை எப்படியும் பிடித்து விட வேண்டும் என்ற வெறியில் இருக்கிறது அமெரிக்கா. அமெரிக்காவின் சி.ஐ.ஏ., புலனாய்வு அமைப்பின், பயங்கரவாத ஒழிப்புப் பிரிவு தலைவர், தனது பிரிவினரிடம், `ஒசாமாவின் தலையை அறுத்து, பெட்டியில் வைத்து கொண்டு வாருங்கள். எப்போதும், ஐஸ்கட்டிகள் நிறைந்த பெட்டி உங்களுடன் இருக்கட்டும்' என்று உத்தரவிடும் அளவுக்கு கோபத்தின் உச்சத்தில் இருந்தார். அமெரிக்க படையினரும், உளவுப் பிரிவினரும் ஒசாமாவை தீவிரமாக தேடினர். அமெரிக்காவால் தீவிரமாக தேடப்பட்டாலும், ஒசாமா தனது குடும்பத்துடன் தான் தலைமறைவாக இருக்கிறார். அவரை சுற்றி குறைந்த பட்சம் 40 காவலர்கள் நிற்பர். அதைத்தாண்டி, அடுத்தடுத்த அடுக்கு பாதுகாப்பும் அவருக்கு உள்ளது. ஒரு கட்டத்தில் அமெரிக்க படையினர் ஒசாமா தலைமறைவாக இருக்கும் இடத்தை நோக்கி நகர்ந்து வந்ததை, மெய்காவலர் பார்த்து விட்டார். உடனடியாக ஒயர்லெஸ் ரேடியோ மூலம் தகவல் அனுப்பினார். தனது மெய்க்காவலர்களுக்கு வேத மந்திரமாக ஒரு விஷயத்தை போதித்து வைத்திருக்கிறார் ஒசாமா. அமெரிக்கப் படை சுற்றி வளைத்துவிட்டால், `ஒசாமவை கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொள்ளவேண்டும்' என்பது தான் அது. அமெரிக்கப் படையினர் நெருங்கியதை அறிந்த மெய்க்காவலர்கள், அவரை படுக்க வைத்து வேறிடத்துக்கு துாக்கிச் சென்று விட்டனர். மலைப்பகுதி போர் தந்திரத்தில் அமெரிக்கப் படையினருக்கு திறமை இல்லாததால், ஒசாமாவை பிடிக்க முடியாமல் போய்விட்டது. மலைக்குகைகளை வெறுமனே சோதனையிடுவது தான் அவர்களது வழக்கமாக இருந்தது. அமெரிக்காவில் தாக்குதல் நடத்துவதற்கு முன் ஒசாமாவின் மெய்க்காவலராக இருந்தவர் நசிர் அல் பாரி. ஒசாமாவின் வாழ்க்கை முறை பற்றி, `நியூஸ் வீக்' இதழுக்கு பிரத்யேகமாக அவர் பேட்டி அளித்தார்.

பேட்டியில் அவர் கூறியதாவது: எனக்கு முதல் ஆண் குழந்தை பிறந்தபோது, பேரீச்சம்பழத்தை தனது வாயில் கூழ்போல அரைத்து, அதை அக்குழந்தைக்கு ஊட்டினார். அப்போது, குழந்தையின் இருகரங்களையும் பிடித்துக் கொண்டு, குழந்தையின் காதருகே, `அல்லா ஓ அக்பர்' என்று கூறினார்.மெய்க்காவலர்களிடம் பெரிதும் அன்பு செலுத்துபவர் ஒசாமா. தலைமறைவு வாழ்க்கை வசித்தாலும், குடும்பத்தை விட்டு அவர் பிரிவது இல்லை. நான் அவரிடம் மெய்க்காவலராக இருந்த போது, அவருக்கு ஆறு மனைவிகள். எட்டு ஆண் குழந்தைகள்; ஆறு பெண் குழந்தைகள். இவர்களில் மூத்த ஆண் குழந்தைகள் மூன்று பேர் சவுதி சென்றிருந்தனர்.தற்போது, ஒசாமா தனது நான்கு மனைவிகள் மற்றும் 11 குழந்தைகளுடன், குடும்ப வாழ்க்கையில் தான் உள்ளார். திருப்தியான குடும்ப வாழ்க்கையை அவர் மேற்கொண்டு வருகிறார். அவர் உண்மையான குடும்பத் தலைவராக செயல்படுகிறார். மனைவி மற்றும் குழந்தைகள் தேவையிலும் கவனம் செலுத்துகிறார். அவரை மரியாதையுடன், `ஷேக்' என்று தான் நாங்கள் அழைப்போம். உலகிலேயே வல்லரசு நாடான அமெரிக்காவால் கூட அவரை பிடிக்க முடியாததால், முஸ்லிம்கள் மத்தியில் அவர் மீது மரியதை அதிகரித்து உள்ளது. ஒசாமாவின் கவுரவமும், தைரியமும் முஸ்லிம்கள் மத்தியில் அவரது புகழை மேலும் உயர்த்தி உள்ளது. அல்லாவால் அனுப்பப்பட்டவர் என்று கருதுவதால், ஒசாமா செய்யும் எந்த காரியமும் சரியானதாகவே இருக்கும் என்று உறுதியாக நம்புகின்றனர் முஸ்லிம்கள். பயங்கரவாதிகள் ஆவேசமாக பேசுவர் என்று தான் மற்றவர்கள் நினைப்பர். ஆனால், ஒசாமா மென்மையாக பேசக்கூடியவர். தனது பேச்சின் இடையே, குரானில் இருந்தும் சில கவிதைகளில் இருந்தும் மேற்கோள் காட்டுவார். எல்லாமே இஸ்லாமிய வழி அறப்போரை வலியுறுத்துவதாகத்தான் இருக்கும். அவர் பேசும் போது, அமெரிக்கா பற்றி மட்டும் கோபமாக குறிப்பிடுவார். குழந்தைப் பருவத்திலிருந்தே அவருக்கு அமெரிக்கா மீது வெறுப்பு வளர்ந்திருக்க வேண்டும். அமெரிக்காவில் தயாரான எதையும் அவர் பயன்படுத்துவது இல்லை. பெப்சி கூட குடித்தது இல்லை. ஒசாமாவின் மெய்காவலர் குழுவில் இருந்து நான் விலகி ஏமன் வந்து விட்டாலும், இப்போதும் கூட அல்-குவைதாவின் அனுதாபி தான். இவ்வாறு அல் பாரி கூறினார். அல் பாரி கூறியிருப்பதை சுட்டிக்காட்டிய, `நியூஸ் வீக்' பத்திரிகை, `இன்னும் மலை சூழ்ந்த பகுதியில் தான் ஒசாமா தலைமறைவு வாழ்க்கையில் இருக்க வேண்டும்; அப்பகுதியில் கவனம் செலுத்தினால், ஒசாமாவை பிடித்து விடலாம்' என குறிப்பிட்டுள்ளது.

September 01, 2007

"குறிக்கோள் இல்லாத கடமை, மனிதம் இல்லாத மனிதன் போன்றது"

  • இராக்கில் தாக்குதல்களை தாம் நிறுத்தப் போவதாக வல்லமை மிக்க ஷியாப் படைப் பிரிவின் வாக்குறிதியின்படி அவர்கள் நடந்து கொண்டால், இராக்கிய கட்டளைப் படைகளின் படைகளும், இராணுவ வளங்களும் அல் கையீதாவுக்கு எதிரான போரில் மேலும் கூடுதலாக ஈடுபடுத்தப்படலாம் என்று இராக்கிலுள்ள அமெரிக்கத் தளபதிகள் அறிவித்துள்ளார்கள்.
  • தற்போது நாடு கடந்த நிலையில் வாழ்ந்து வரும் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பேனசிர் புட்டோ விரைவில் தாம் நாடு திரும்பப் போவதாக கூறியுள்ளார்.
  • இந்தியாவின் தென்மாநிலமான ஆந்திராவின் தலைநகர் ஹைதராபாதில் கடந்த வாரம் 40 பேரின் உயிரை பலிகொண்ட குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக நால்வர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாக அம்மாநில போலீசார் தெரிவித்துள்ளனர்
  • மண்ணிலிருந்து அகழ்ந்து எடுக்கப்பட்ட வைரங்களில் மிகப் பெரிய வைரம் என்று கருதப்படக் கூடிய கண்டுபிடிப்பு தொடர்பான விபரங்களை தென்னாபிரிக்க பத்திரிகை ஒன்று வெளியிட்டுள்ளது.

August 31, 2007

அமெரிக்கப் பண்பலை வரிசையில் தமிழ் பாடல்கள்!

அமெரிக்க மண்ணில் வாழும் இந்தியர்கள் அதிவேக வாழ்க்கையில் இருந்தாலும் தமிழ் பாடல்களை அதிலும் குறிப்பாக பழைய பாடல்களைக் கேட்க வாய்ப்புக்கள் உள்ளதென்று நினைக்கும்போது மனதுக்கு மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவது நண்பர் திரு.ஸ்ரீ மற்றும் திரு.இராஜன் அவர்கள். இந்த நிகழ்ச்சி மாபெரும் இசைமேதை திரு.கே.வி.மகாதேவன் அவர்கள் பற்றியது.
Powered by eSnips.com

ஞானி என்பவர் யார்?

ஒருவர் ஞானியாக என்ன செய்ய வேண்டும்? என்ற கேள்விக்கு விளக்கம் அளிக்கிறது ஒரு சாஸ்திர நூல். "மந்திரத்தாலோ, செப்படி வித்தையாலோ திடீரென வருவதல்ல ஞானம், அது மனதுக்குள் தானாக வரவேண்டும். முதலில் படிப்பு வேண்டும். பகுத்து ஆராயும் பகுத்தறிவு வேண்டும். எதையும் ஆராய்ந்து தெளிவு பெறும் திறன் வேண்டும். அதோடு, தத்துவத் தேடலும், அதை முழுதாக புரிந்துகொள்வது பற்றியும் தெரியவேண்டும். இதன்பிறகுதான் ஒருவர் ஞானியாவது குறித்து யோசிக்க வேண்டும்" என்கின்றன ஆன்மீக நூல்கள்.

பஹ்ரைன் நாட்டில் பணிபுரியும் இந்திய நண்பர்களே எச்சரிக்கை!

கறுப்பு பட்டியலில் 45 பஹ்ரைன் கம்பெனிகள் : ஊழியர்களை மோசமாக நடத்துவது, ஊதியம் வழங்காமை போன்ற மோசடியில் ஈடுபடும் 45 பஹ்ரைன் நிறுவனங்களை இந்திய தூதரகம் கறுப்பு பட்டியலில் சேர்த்துள்ளது. பஹ்ரைனில் உள்ள பல கட்டுமான கம்பெனிகளில் ஆயிரக்கணக்கான இந்திய ஊழியர்கள் பணிபுரிகின்றனர். இதில் பல நிறுவனங்கள் உள்ளூர் சட்டத்தை மதிக்காமல் தொழிலாளர்களுக்கு சரிவர சம்பளம் வழங்காமலும், அவர்களுக்கு மோசமான நிலையில் உள்ள தங்குமிடங்களை அளித்தும் அவர்களை மோசமாக நடத்துவதாக கடந்த ஒரு ஆண்டு காலமாக இந்திய தூதரகத்திற்கு பல்வேறு புகார்கள் வந்தன. இந்நிலையில் அவ்வாறு விதிமுறைகளை மீறி செயல்படும் 45 பஹ்ரைன் கம்பெனிகளை இந்திய தூதரகம் அடையாளம் கண்டு அவற்றை கறுப்பு பட்டியலில் சேர்த்துள்ளது. இந்த நிறுவனங்கள் தங்களது தவறுகளை சரி செய்யாதவரை, அந்நிறுவனங்கள் இந்தியப் பணியாளர்களை வேலையில் அமர்த்துவதற்கான அனுமதியை இந்தியத் தூதரகம் அளிக்காது என துபாயில் உள்ள இந்திய தூதரக அதிகாரி பாலகிருஷ்ண ஷெட்டி தெரிவித்தார். மேலும் கறுப்பு பட்டியலில் இடம்பெற்றுள்ள 45 பஹ்ரைன் நிறுவனங்களின் உரிமையாளர்களோ அல்லது அவற்றின் பிரதிநிதிகளோ இந்தியாவுக்கு வர விசா வழங்கப்பட மாட்டாது என்றும் அவர் கூறினார்.
துபாய்(ஏஜென்சி), வியாழக்கிழமை, 30 ஆகஸ்டு 2007 ( 15:07 IST )
(மூலம் - வெப்துனியா)

உலகின் சக்தி வாய்ந்த பெண்கள் சோனியா, இந்திரா நூயி

உலகின் சக்தி வாய்ந்த 10 பெண்களில் சோனியா, இந்திரா நூயி
வாஷிங்டன் (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 31 ஆகஸ்டு 2007 ( 15:42 IST )
உலகின் சக்தி வாய்ந்த 10 பெண்களின் பட்டியலில் சோனியா காந்திக்கு 6 வது இடம் கிடைத்துள்ளது. பிரபல அமெரிக்க பத்திரிகையான ஃபோர்ப்ஸ் ஒன்று உலகின் சக்தி வாய்ந்த 10 பெண்களை பட்டியலிட்டுள்ளது. இதில் ஜெர்மனியின் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் (தொடர்ந்து இரண்டாவதாண்டாக) முதலிடத்திலும், சீனாவின் துணை பிரதமர் வூ யி இரண்டாவது இடத்திலும், சிங்கப்பூரின் மிகப்பெரிய தொழில் நிறுவனமான காங்லோமெரேட் 3 வது இடத்திலும் உள்ளதாக அப்பத்திரிகை தெரிவித்துள்ளது. நான்காவது இடத்தில் அமெரிக்க அமைச்சர் கண்டலிசா ரைஸ் இடம்பெற்றுள்ளார். காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு ஆறாவது இடமும், பிரபல பெப்சி குளிர்பான தயாரிப்பு நிறுவனத்தின் தலைமை நிர்வாகியும், அமெரிக்க இந்தியருமான இந்திரா நூயிக்கு 7 வது இடமும் கொடுத்துள்ளது அப்பத்திரிகை.

'அகில இந்திய சமத்துவமக்கள் கட்சி'

நடிகர் சரத்குமாரின் புதிய கட்சி இன்று மாலை உதயமானது. புதிய கட்சிக்கு 'அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
நடிகர் விஜயகாந்த்தைத் தொடர்ந்து சரத்குமாரும் அரசியல் களம் கண்டுள்ளார். தனது கட்சி இன்று தொடங்கப்படும் என்று அறிவித்திருந்தார் சரத்குமார். அதன்படி இன்று மாலை சென்னை வடபழனி பத்மாராம் கல்யாண மண்டபத்தில் சரத்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். சரியாக இன்று (31-08-2007) மாலை 6.30 மணிக்கு தனது கட்சியின் பெயரை அவர் அறிவித்தார். தனது புதிய கட்சிக்கு 'அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி' என்று பெயர் சூட்டியுள்ளார் சரத்குமார். கட்சியின் தலைவராக சரத்குமார் அறிவிக்கப்பட்டுள்ளார். பிற நிர்வாகிகள் விவரம்: அவைத் தலைவர் - முருகன் (முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி) பொதுச் செயலாளர் - கரு. நாகராஜன் துணைத் தலைவர் - எர்ணாவூர் நாராயணன். பொருளாளர் - செல்வராஜ். துணை பொதுச் செயலாளர் - சுந்தரேசன் கொள்கை பரப்புச் செயலாளர் - மருது அழகுராஜா. கட்சிப் பெயரை அறிவித்து செய்தியாளர்களிடம் சரத்குமார் பேசுகையில், இரண்டு கழகங்களுக்கும் மாற்றாக, ஒரு புதிய அரசியல் நாகரீகத்தை உருவாக்கவே இந்த கட்சி தொடங்கப்பட்டுள்ளது. படித்த இளைஞர்களை அரசியல் ஈடுபடுத்தத் திட்டமிட்டுள்ளோம். அவர்கள் மூலம் தமிழக அரசியல் வரலாற்றில் புதிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தப் போகிறோம். அதை ஏற்படுத்தக் கூடிய தகுதி படைத்தது எங்களது கட்சி மட்டும்தான். மற்ற கட்சிகளுக்கு அந்த அருகதை கிடையாது. பிற கட்சிகள் எல்லாம் தங்களது சுய லாபத்திற்காக தொடங்கப்பட்டவை. நாங்கள் அப்படி இல்லாமல், இன்றைய இளைஞர்களை ஆக்கப்பூர்வமான வழியில் அரசியலில் ஈடுபடுத்தி புதிய மறுமலர்ச்சியை ஏற்படுத்துவோம். முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் காட்டிய வழியில்தான் நாங்கள் போகப் போகிறோம். அவர் கண்ட கனவையே நாங்களும் காணுகிறோம். எங்களது முக்கிய நோக்கம் காமராஜர் ஆட்சி அமைப்பதுதான். அதே நோக்கத்தில்தான் காங்கிரஸ் கட்சியும் உள்ளது. இரு கட்சிகளுக்கும் ஒரே நோக்கம்தான். எனவே எதிர் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இரு கட்சிகளும் இணக்கமான நட்பை ஏற்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்புகள் உள்ளன என்றார் சரத்குமார்.

உயிரை பறிக்கும் "செல்போன்"


20 நிமிடத்திற்கு மேல் பேசாதீர்கள் உயிரை பறிக்கும் "செல்போன் பயங்கரம்"

விஞ்ஞானிகள் எச்சரிக்கை தகவல்-சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு 10 அக்கம், பக்கத்து கிராமங்களுக்கு மத்தியில் ஒரே ஒரு ஊர் பண்ணையார் வீட்டில் மட்டும் இருந்தது அந்த டெலிபோன். அழகான பெண்ணின் இடைபோல, கன்னங்கரேல் உருவத்தில், சுமார் 2 கிலோ எடை அளவு கொண்ட அந்த போனில் வளையம், வளையமாக 10 ஓட்டைகள் இருக்கும். குறிப்பிட்ட எண்ணை விரலால் இடமிருந்து வலமாக சுற்றிவிட்டால் 'ஸ்பிரிங்' போல ரிவர்ஸ்சில் வந்து டிரிங்... டிரிங்... என்று மணியடிக்கும். அப்போதெல்லாம் உலகம் முழுவதும் ஒரே ஒரு 'ரிங்டோன்' தான்! இப்போது ஒரே சட்டைப் பையில் விதம் விதமாக 4 செல்போன்களை தாராளமாக வைத்திருக்கிறார்கள். ஒருபுறம் வேடிக்கையாகவும் இருக்கிறது. காதில் 'ஹெட்போனை' வைத்துக் கொண்டு நடுரோட்டில் தனக்குத்தானே பேசிக் கொண்டு போவதை செத்துப் போன நமது தாத்தா - பாட்டி பார்க்க நேர்ந்தால் 'பாவம், யாரு பெத்த புள்ளையோ இப்படி பைத்தியம் புடிச்சு அலையுது" என்பார்கள்.கற்பனைக்கும் எட்டாத இந்த செல்போனை யார் கண்டுபிடித்தது?சிகாகோவைச் சேர்ந்த 'மார்ட்டின் கூப்பர்' என்பவர்தான் இந்த நவீன செல்போனை கண்டுபிடித்தது.1973-ம் ஆண்டு ஏப்ரல் 3-ந் தேதி உலகின் முதல் செல்போனை கண்டு பிடித்து முதன் முதலாக பேசியதும் இவர்தான். பிரபல 'மோட்டோரல்லா' கம்பெனிதான் முதல் செல்போனை உலகிற்கு காட்டியது.இந்த நிறுவனத்தை சேர்ந்த மார்ட்டின் கூப்பர் முன்னதாக வயர்லெஸ், ஆன்டனா சம்பந்தமான கடை வைத்திருந்தவர் என்பது விசேஷம்.எனினும் இந்த செல்போனுக்கு அடிப்படை ஆதாரத்தை அமைத்துக் கொடுத்தது அமெரிக்காவின் நியூஜெர்சியை அடுத்து 'முர்ரேஹில்' பகுதியில் உள்ள 'பெல்' லேபாரட்டரிதான்.இவர்கள்தாம் வயர்கள் இல்லாத வாக்கி - டாக்கி ரேடியோவை 1947-ல் கண்டுபிடித்து ராணுவ உபயோகத்திற்காக தந்தார்கள். இது அதிக எடைகொண்டதாக இருந்தது. இதனை 1960 வாக்கில் ஓரளவுக்கு நவீனமாக்கினார்கள். இதைத்தொடர்ந்துதான் 1973-ல் மார்ட்டின் கூப்பர் நவீன உயர்ரக செல்போனை கண்டுபிடித்தது. 1990-ல் உலகம் முழுவதும் செல்போன்கள் முற்றிலும் நவீன யுகத்திற்கு போய்விட்டன. செல்போனை கண்டு பிடித்ததற்காக கடந்த 2003-ல் வார்தான் இன்போசிஸ் பிசினஸ் டிரான்ஸ்பர்மேசன் விருது கிடைத்திருக்கிறது மார்ட்டின் கூப்பருக்கு!முதல் செல்போனை 'மோட்டோரல்லா' கண்டு பிடித்தாலும் இன்று உலகம் முழுவதும் செல்போன் வியாபாரத்தில் சக்கைப் போடு போடுவது 'நோக்கியா' நிறுவனம் தான்! உலகில் 36 சதவீதம் பேர் இதைத்தான் வைத்திருக்கிறார்கள். இது தவிர எல்.ஜி. மிட், சுபிசி, பேனாசோனிக், சோனி எரிக்சன், சன்யோ, சாம்சங், சைமன்ஸ், தோஷிபா, பிலிப்ஸ் நிறுவனங்களும் போட்டியில் உள்ளன.இன்றைக்கு உலகம் முழுக்க சுமார் 350 கோடி பேர் செல்போன் வைத்திருக்கிறார்கள். இவர்களில் அதிகம் பேர் செல்போன்கள் வைத்து நம்பர் 1 இடத்தில் இருப்பவர்கள் சீனாக்காரர்கள். இங்கு 50 கோடி பேரிடம் செல் இருக்கிறது.இந்தியாவை பொறுத்த வரையில் கடந்த 2007 ஜுன் மாத கணக்குப்படி பதினெட்டே முக்கால் கோடி பேரிடம் செல்போன் இருக்கிறது. இந்தியாவில் மாதத்திற்கு 73 லட்சம் செல்போன்கள் விற்கின்றன. வருகிற 2010-ம் ஆண்டுக்குள் 50 கோடி செல்போன்கள் விற்பனையாகும் என்று கணக்கிடப்பட்டு இருக்கிறது.உலகின் பல நாடுகளில் ஜனத்தொகையை விடவும் செல்போன்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.இதில் லக்சம்பர்க்காரர்கள் 164 சதவீதம் செல்போன் வைத்து உலகின் முதல் இடத்திலும், ஹாங்ஹாங்கினர் 117 சதவீதம் செல்போன் வாங்கி 2-ம் இடத்திலும் இருக்கின்றனர்.


வருகிற 2015-ம் ஆண்டு உலகின் 90 சதவீதம் பேரிடம் செல்போன் இருக்குமாம்.'அதிர்ச்சி' இங்கிருந்துதான் ஆரம்பமாகிறது. ஒருவேளை இந்த செல்போனே உலகை அழிக்க காத்திருக்கும் சுனாமி எமனாக இருக்கலாம்.எந்த ஒரு அபாயகரமான சூழ்நிலையையும் அது வரும் முன்பே கண்டுபிடித்து உலகுக்கு எச்சரிக்க வேண்டியது விஞ்ஞானிகளின் கடமையாகும்.அந்த வகையில் செல்போன் பற்றிய அதிர்ச்சி தகவல்கள் வேகமாக வெளியே வர ஆரம்பித்திருக்கின்றன. அமெரிக்க அரசின் உணவு மற்றும் மருந்து நிர்வாக மையம் நடத்திய ஆராய்ச்சியில் செல்போனின் அதீத பயன்பாட்டால் மூளையில் புற்றுநோய் வர வாய்ப்பு இருப்பதாக கண்டுபிடித்தது, எனினும் அறிக்கைக்கு போதுமான ஆதாரங்கள் இல்லாமல் இது ஒரு தற்காலிக முடிவு என்று விட்டுவிட்டார்கள். செல்போன் என்பது சமீபத்தில் தான் கண்டு பிடிக்கப்பட்டது என்பதால் இதுபற்றிய உண்மைகளை அறிய கால அவகாசம் தேவைப்படும் என்று உலக விஞ்ஞானிகள் அறிவித்த பட்சத்தில் உலக சுகாதார மையமும் முன்னர் அமெரிக்கா கண்டுபிடித்த விஷயத்தில் மூக்கை நுழைத்து 'ஆம்' என்று கூறியிருக்கிறது.கடந்த 10 வருடங்களாக தொடர்ந்து செல்போனை உபயோகித்து வந்த 3 ஆயிரம் பேரை பரிசோதித்து பார்த்தபோது அவர்களில் 40 சதவீதம் பேருக்கு மூளையில் கேன்சர்கட்டிகள் உருவாகி உள்ளது. இவை 2 விதமான புதிய கேன்சர் நோயாக உள்ளன.பொதுவாக செல்போனில் இருந்து வெளிவரும் 'ரேடியேசன்' என்ற கதிர்வீச்சு மிகக் குறைந்த அளவுதான் என்றாலும் அது மனித உடலின் திசுக்களை ஓரளவு பாதிக்கத்தான் செய்கிறது.செல்போனில் அதிக நேரம் பேசிக் கொண்டிருப்பவர்களுக்குத்தான் இத்தகைய ஆபத்து. காதையும் உட்காதையும் மூளையுடன் இணைக்கின்ற 'ஆக்யூஸ்டிக் நியூரோம்ஸ்' என்கிற நரம்பு பாதிப்பும் இவர்களுக்கு ஏற்படுகிறதாம். அதிக அளவு செல்போன் உபயோகிப்பவர்களுக்கு மூளைச் செயல்பாடுகள், தூக்கம், விழிப்புணர்வு ஆகியவற்றில் மாற்றம் ஏற்படுவதாகவும் கண்டுபிடித்து இருக்கிறார்கள். இதில் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் விஷயம் உடல் திசுக்கள் முழு வளர்ச்சி அடையாத நிலையில் குழந்தைகளும் செல்போனை பயன்படுத்தி வருகின்றனர். செல்போன் கதிர்வீச்சுகள் இவர்களின் திசுக்களை மிக எளிதாகவே பாதித்துவிடும் என்ற நிலையில் இவர்கள் வளர்ந்து பெரியவர்கள் ஆகும்போது நீண்டகாலம் செல்போனை பயன்படுத்தியவர்கள் ஆகிறார்கள். எனவே அதிக ஆபத்து இவர்களைச் சூழ்ந்திருக்கிறது என்கிறார்கள்.இதுபற்றி அயிஸ் செல்சின், லாவரிசாலிஸ் என இரு விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆராய்ச்சி செய்த வண்ணம் இருக்கிறார்கள்.இதுதவிர உளவியல் ரீதியான ஆராய்ச்சி முடிவு களும் தற்போது வெளிவர ஆரம்பித்திருக்கின்றன. செல்போனை அதிகம் பயன்படுத்துபவர்களில் 60 சதவீதம் பேருக்கு கோப குணமும், தலைவலியும், பெருகுவதாக அவர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஒருவேளை செல்போனால் கேன்சர் நோய் உறுதி செய்யப்பட்டால் 2015-ல் உலகில் 90 சதவீதமான மக்களின் கதி என்னவாகும். - 'இப்பவே கண்ணைக்கட்டுதே"


எச்சரிக்கை டிப்ஸ்: செல்போன் என்பது அடிப்படை தகவல் பரிமாற்றத்திற்காகத்தான் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், அதனை நம்மவர்கள் நீண்ட நேர அரட்டைக் கச்சேரிக்காக பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறார்கள். பேசுவது காதலியாக இருந்தாலும் கூட ஒருவரிடம் 20 நிமிடங்களுக்கு அதிகமாக பேசாதீர்கள். நட்புகளை வளர்த்துக் கொண்டு அதிகம் பேரிடம் இடைவெளியின்றி பேசாதீர்கள். போதிய ஓய்விற்கு பிறகே அடுத்தவரிடம் பேச வேண்டும். ஒரே சமயத்தில் பல போன்களில் பேசாதீர்கள். வள, வள பேச்சுக்களை தவிருங்கள். இரவில் செல்போனுக்கும் ஓய்வு கொடுத்துவிடுங்கள்.

வெறிநாய்கள் ஜாக்கிரதை!

ஜோஸப் மெய்ஸ்டர் என்பவர் 1885 ஜூலை 4-ம் தேதி ஒரு வெறிநாய் கடியால் கடிப்பட்டார். இங்ஙனம் கடிப்பட்டால் 3 தினங்களில் சாவு நிச்சயம் எனக் கொள்ளலாம். மெய்ஸ்டான் தாய், விஞ்ஞானி லுயிஸ் பாஸ்டரை அணுகினார். அவர் அச்சமயம் வெறிநோய் பற்றி நாய்கள், முயல்கள் மீது பரிசோதனை செய்து கொண்டிருந்தார். ஜூலை 6-ம் தேதி, அது வரை சோதனைச் செய்யப்படாத ஒரு புது தடுப்பூசி மருந்தை அளித்தார். மெய்ஸ்டர் உயிர் பிழைத்தார். அச்சம் ஊட்டும் வெறிநோய் வெற்றிக் கொள்ளப்பட்டது.
நாய்க்கடி என்பது மூளையைத் தக்கும் ஒருவகை நுண்ணுயிரால் (வைரஸ்) ஏற்படும் நோயாகும். அது அதிகமாக நாய்கடியால் ஏற்பட்டாலும் எப்போதாவது அரிதாக பூனைகள், குரங்குகள், ஓநாய்களாலும் ஏற்படலாம்.
உலகம் முழுவதும் சுமார் 1 கோடி மக்கள் ஒவ்வோர் ஆண்டும் நாய்கடி தடுப்பூசி போட்டுக் கொள்கிறார்கள். ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவில் சுமார் 50,000 மக்கள் நாய்க்கடி நோயால் ஒவ்வோர் ஆண்டும் இறக்கிறார்கள். இதில் 20,000 முதல் 25,000 வரை 15 வயதுக்குட்பட்ட சிறார்கள் என்பது குறிப்பிடதக்கது.

இந்த நாய்க்கடியில் சுமார் 67% இந்தியாவில் ஏற்படுகிறது. இந்தியாவில் மட்டும் சுமார் 30,000 பேர் நாய்க்கடியால் ஒவ்வோர் ஆண்டும் இறக்கிறார்கள். அதே சமயம் 50 லட்சம் பேர் நாய்க்கடித்த பிறகு தடுப்பூசி போட்டுக்கொள்கிறார்கள். இந்தியாவில் உள்ள நாய்களின் எண்ணிக்கை மட்டும் சுமார் 2 கோடி! கடிப்பட்டதில் இருந்து நோய் தொடங்கும் வரையான காலம் 5 நாட்கள் முதல் ஒரு ஆண்டு வரை வேறுபடுகிறது. சராசரியாக இரண்டு மாதங்களில், சதரணமாக இந்த நோய் தொடங்குகிறது. முதலில், முதல் 2-10 நாட்கள் தெளிவற்ற சில அறிகுறிகள் தென்படும். நோயாளி காய்ச்சல், தலைவலி, பசியின்மை, வாந்தி போன்றவற்றால் அவதிப்படுவார். மேலும் கடிபட்ட இடத்தில் வலி, அறிப்பு, மருத்துப்போதல், நமைச்சல் முதலியன இருக்கும். கடைசிக் கட்டத்தில் நோயாளி விழுங்குவதற்குச் சிரமப்படுவார். சில நோயாளிகள் கலக்கத்துடனும், தடுமாற்றத்துடனும் செயல்படத் தொடங்குவர். நோய் வந்த பிறகு இதற்கு வைத்தியம் இல்லை. ஆனால் இந்த நோய் 100% வராமல் தடுக்க தடுப்பூசி உள்ளது. நாய்க்கடி நோய்க்கு 3 வகையான தடுப்பூசிகள் உள்ளன. மிருகத்தின் மூ¨ல்திசு அல்லது திசுவிலிருந்து எடுத்த தடுப்பூசி மருந்து (NTV) ஏ.வியன் தடுப்பூசி (AV)
திசுக்களில் இருந்து பண்ணிய தடுப்பூசி (TCV) திசுகளிலிருந்து உண்டு பண்ணிய தடுப்பூசியால் பல நன்மைகள் உள்ளன. கடிபடுவதற்கு முன்பே, எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ளும் சிகிச்சை முறைக்கும், கடிபட்ட பின் செய்யும் சிகிச்சைக்கும் இது மிகவும் பயனளிக்கிறது. மிகவும் குறைந்த வலி உடையது. மிகக் குறைந்த அளவு மருந்தே தேவைப்படும். வயிற்றில் ஊசி போட தேவை இல்லை. நாய்க்கடி நோயின் தாக்குதல் ஏற்படக்கூடிய நிலையில் எவ்வளவு சீக்கிரம் இம்மினோகுளோபிளினும் ஒரு தடுப்பூசியும் எடுத்துக் கொள்ள வேண்டும். அன்றிலிருந்து 3, 7, 14, 28, 90-வது நாட்களில் மேலும் 5 தடுப்பூசிகள் போட்டுக்கொள்ள வேண்டும். நாய்க்கடி நோயின் தாக்குதல் ஏற்படக்கூடிய நிலையில் எத்தனை விரைவாக முடியுமோ அத்தனை விரைவாக மருத்துவ உதவி நாடவேண்டும். உடனடியாக, நாய்க்கடி உள்ள இடங்களையும், நகத்தால் பிராண்டிய இடங்களையும் கவனித்துச் சுத்தப்படுத்த வேண்டியது மிக மிக முக்கியமானதாகும், இது முதலாவதாகவும் செய்ய வேண்டியது ஒன்று. காயம் பட்ட இடங்களையும், அவற்றைச் சுற்றியுள்ள இடங்களையும் உடனேயே குழாயின் கீழ் ஓடும் நீரால் நன்றாக சோப்பு போட்டு கழுவ வேண்டும். நிறைய சோப்பும் நீரும் உபயோகிக்கவும். அதன் பின்னும் இருக்கக் கூடிய கிருமிகளை செயலிழக்கச் செய்ய டிஞ்சர், ஆல்கஹால், டெட்டால், சாவலான் போட்டுக் கழுவ வேண்டும். எரிச்சல் உண்டாக்கக்கூடிய செடிகளின் சாறுகள், காப்பிப்பொடி, மிளகாய்ப் பொடி, உலோகங்கள், அமிலங்கள், சுண்ணாம்பு போன்றவற்றைத் தடவக்கூடாது. கடிப்பட்ட இடத்தைத் தையல் இட்டு உடனடியாக மூடக்கூடாது. மருத்துவரை உடனே அனுகவும். முடிந்தால் கடித்த விலங்கைப் பிடித்து, தனி அறையில் இட்டு, பத்து நாட்கள் உன்னிப்பாகக் கவனித்து, அதற்கு வெறிநோய்க்கான அறிகுறிகள் தோன்றுகின்றனவா என்று பார்க்க வேண்டும்.


நன்றி -குழந்தை மருத்துவர், சைல்ட் டிரஸ்ட் மருத்துவ மனை

கவிப்பேரரசு வைரமுத்துவிலிருந்து காமெடியரசு விவேக் வரை

விருமாண்டி நேர்முகம்

இன்றைய குறள்

இன்சொலால் ஈரம் அளைஇப் படிறிலவாம்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்

ஒருவர் வாயிலிருந்து வரும் சொல் அன்பு கலந்ததாகவும், வஞ்சனையற்றதாகவும், வாய்மையுடையதாகவும் இருப்பின் அதுவே இன்சொல் எனப்படும்
அறத்துப்பால் : இனியவை கூறல்