September 06, 2007

இன்றைய லஞ்சம், ஊழல் : ஒரு ஆய்வு

இன்றைய லஞ்சம், ஊழல் - 2: ஒரு ஆய்வு

நடிகர் அருண்குமார் சொல்கிறார்...

இன்றைய குறள்

அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின்

தீய செயல்களை அகற்றி அறநெறி தழைக்கச் செய்ய வேண்டுமானால், இனிய சொற்களைப் பயன்படுத்தி நல்வழி எதுவெனக் காட்டவேண்டும்

அறத்துப்பால் : இனியவை கூறல்

இன்றோ, நாளையோ என்றோ பறந்து விடப்போகுதெம் உயிர். அதற்குள் நமது வாழ்வின் கோலங்களைப் பற்றி நாம் போடும் கணக்குகள்தான் எத்தனை? எத்தனை??
- கவியரசு

  • டார்பூர் மோதலை முடிவுக்குக் கொண்டுவரும் பேச்சுக்கள் : சூடானின் டார்பூர் பிராந்தியத்தில் நிலவும் மோதலை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கிலான புதிய அமைதிப் பேச்சுவார்த்தைகள், அடுத்த மாதம் நடைபெற இருக்கின்றன. இந்த மோதல்களில் இதுவரை குறைந்தது இரண்டு லட்சம் பேர் கொல்லப்பட்டுள்ளனர்
  • எத்தியோப்பிய- எரித்திரிய விவகாரம் குறித்து எச்சரிக்கை :
    இரு நாடுகளின் எல்லையில் படையினர்எத்தியோப்பியாவுக்கும் எரித்ரியாவுக்கும் இடையிலான எல்லைத் தகறாறு தொடர்பிலான தீர்வை, இரு நாடுகளும் ஏற்காவிட்டால், இந்த நாடுகளுக்கு இடையே புதிய போர் மூளும் ஆபத்திருப்பதாக, ஆப்ரிக்காவின் கொம்புப் பிராந்தியத்திற்கான ஐ நா மன்றத்தின் முன்னாள் தூதர் கேல் போஞ்விக் அவர்கள் எச்சரித்துள்ளார்
  • பர்மியப் படையினரைப் பிடித்து வைத்த பிக்குமார் : பர்மாவின் மத்திய நகரான பக்கோக்குவில், பர்மிய பாதுகாப்புப் படையினர் 20 பேரைப் பிடித்து வைத்திருந்த பௌத்த பிக்குகள், அவர்களைப் பல மணி நேரத்தின் பின்னர் விடுதலை செய்துள்ளனர்
  • இந்தோனீசியாவிற்கு ரஷிய அதிபர் முக்கிய விஜயம் : இந்தோனீசியாவிற்கு மிக முக்கித்துவம் வாய்ந்த விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ள ரஷிய அதிபர் விளாடிமிர் புடின் அந்நாட்டுடன் பெரிய அளவிலான ஆயுத விற்பனை தொடர்பான ஒரு ஒப்பந்தத்திலும் கையொப்பமிட்டுள்ளார்
  • தொடர்ந்து இன்றைய (செப்டம்பர் 06 வியாழக்கிழமை 2007) "BBC" தமிழோசைச் செய்திகள் கேட்க இணைப்பில் செல்க http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml?tamil_worldnews

September 05, 2007

உங்களிடம் நோக்கியா மொபைல் இருந்தால் உடனே பேட்டரியை பார்க்கவும்

மும்பை : புகழ்பெற்ற மொபைல் கம்பெனியான நோக்கியா, உலகம் முழுவதிலும் உள்ள அதன் உபயோகிப் பாளர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நோக்கியா மொபைலில் பிஎல் 5 சி என்ற பேட்டரி பொருத்தப்பட்டிருந்தால் உடனே அதை மாற்ற சொல்கிறது. அந்த குறிப்பிட்ட நம்பர் பேட்டரியை சார்ஜ் செய்யும்போது சார்ட் சக்க்யூட் ஆகி, பேட்டரி சூடாகி விடுகிறதாம். உலகம் முழுவதிலும் இருந்து நூற்றுக்கும் அதிகமான புகார்கள் நோக்கியா நிறுவனத்திற்கு வந்ததால் அந்த குறிப்பிட்ட வகை பேட்டரியை இலவசமாக மாற்றித்தர நோக்கியா நிறுவனம் முன்வந்துள்ளது. இவ்வாறு பேட்டரி சூடானதால் இதுவரை யாருக்கும் உடல் ரீதியான பாதிப்பு ஏற்பட்டதாக புகார் இல்லை. எனினும் முன்னெச்சரிக்கையாக இந்த வகை பேட்டரிகளை மாற்றித்தர அந் நிறுவனம் முன்வந்துள்ளது. இந்த பிஎல் 5 சி வகை பேட்டரிகள் ஜப்பானின் மேட்சுசிடா நிறுவனம் தயாரித்து நோக்கியாவுக்கு சப்ளை செய்யதாம். நோக்கியா, அதன் மொபைல் போன்களுக்கு தேவையான பேட்டரிகளை பல கம்பெனிகளிடமிருந்து பெற்றிருக்கிறது. அவர்கள் எல்லோருமாக சேர்ந்து 30 கோடிக்கும் அதிகமான பிஎல் 5 சி பேட்டரிகளை சப்ளை செய்திருக்கிறார்கள். அதில் ஜப்பானின் மேட்சுசிடா நிறுவனம், டிசம்பர் 2005 இலிருந்து நவம்பர் 2006 வரை தயாரித்து வழங்கிய 4 கோடியே 60 லட்சம் பிஎல் 5 சி பேட்டரிகளில் தான் இந்த புகார்கள் வந்துள்ளன. இந்த குறிப்பிட்ட காலகட்டத்தில் தயாரிக்கப்பட்ட பேட்டரிகளை மட்டும் மாற்றினால் போதும். இதை தவிற வேறு வகை பேட்டரிகளை மாற்ற தேவை இல்லை. நம்மிடம் நோக்கியா மொபைல் இருந்து, அதிலிருக்கும் பேட்டரியும் பிஎல் 5 சி தான் என்றால், அதை மாற்ற வேண்டுமா வேண்டாமா என்று, நோக்கியா.காம் வெப்சைட்டில் சென்று பார்த்துக்கொள்ளலாம். www.nokia.com

இன்றைய குறள்

பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணியல்ல மற்றுப் பிற

அடக்கமான பண்பும், இனிமையாகப் பேசும் இயல்பும் தவிர, ஒருவருக்குச் சிறந்த அணிகலன்கள் வேறு இருக்க முடியாது
அறத்துப்பால் : இனியவை கூறல்

நாவே இன்னும் கொஞ்சம் மௌனம் கா...
வாயில்லாச் சில்லறைகள் சத்தமிட்டாலும்
வாய்திறந்தும் பேசாத சுருக்குப்பை போல

- கவிப்பேரரசு வைரமுத்து

தொடர்ந்து தரமான நிகழ்ச்சிகள் : இதில் சமரசம் இல்லை : மருத்துவர் இராமதாசு

இப்படித்தான் வாழவேண்டும் என்று தொன்றுதொட்டு ஆண்டாண்டுகாலமாய் இந்தச் சமுதாயத்தை அரித்துக்கொண்டிருக்கும் தொலைக்காட்சிக் குழுமங்களுக்குள் "இப்படியும் சிறப்பாக வாழலாம்" "இந்தச் சமுதாயத்தைச் சீர்தூக்கிப் பார்க்கலாம்" என்ற ஒரு "மாபெரும் புரட்சி" செய்து.. ... இந்தப் பிரபஞ்சத்தின் மூலை முடுக்குகளிலெல்லாம் உள்ள கோடானுகோடித் தமிழ்நெஞ்சங்களை, ஏன்? இந்திய நெஞ்சங்களை நன்றியுணர்வோடும், பிரமிப்போடும் "தங்கள் பக்கம்" திருப்பி, சேவைகளிலெல்லாம் பெருஞ்சேவை செய்து வரும் "மகத்தான மக்கள் தொலைக்காட்சி"யை ஒவ்வொரு சமுதாய நல்லெண்ணம் கொண்டவரும் பாராட்டாமல் இருக்க முடியாது. அந்த வரிசையில் இந்தச் சிறியேனும் "நீங்கள் பல்லாண்டு வாழ்க! தங்களின் சேவை இந்த மண்ணுள்ளவரை தொடர்க!! என்று உண்மையான உணர்வுகளோடு வாழ்த்துகிறேன்! "புரட்சியாளன் புதைக்கப்படுவதில்லை, விதைக்கப்படுகிறான்" என்பது மக்கள் தொலைக்காட்சிக்காகவே செதுக்கப்பட்டதாக உணர்கிறேன்.

மருத்துவர் இராமதாசு : மக்கள் தொலைக்காட்சியில் தொடர்ந்து தரமான நிகழ்ச்சிகள் மட்டுமே ஒளிபரப்பப்படும். வர்த்தக காரணங்களுக்காக தரத்தில் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ள மாட்டோம் என்று மக்கள் தொலைக்காட்சி நிறுவனர் ராமதாஸ் கூறினார். மக்கள் தொலைக்காட்சி இரண்டாவது ஆண்டில் அடிஎடுத்து வைப்பதையொட்டி சென்னை காமராஜர் அரங்கில் வரும் 6-ம் தேதி விழா நடைபெறுகிறது. இதையொட்டி மருத்துவர் இராமதாசு கூறியதாவது : தரமான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி ஒரு வித்தியாசமான தொலைக்காட்சி என்று மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது மக்கள் தொலைக்காட்சி. தமிழ் மொழியையும் தமிழ் சமுதாய வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படுகின்றன. திரைப்படம் அல்லாத அறிவார்ந்த நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி 2-ம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறோம். இரண்டாம் ஆண்டு தொடக்க விழா நிகழ்ச்சிகள் மிகப் பிரமாண்டமாக கொண்டாடப்படுகின்றன. மக்கள் தொலைக்காட்சி வெற்றிக்கு பாடுபட்டவர்கள் சிறப்பிக்கப்படுவார்கள். மத்திய அமைச்சர்கள் பிரிய ரஞ்சன் தாஸ் முன்சி, அன்புமணி ராமதாஸ், தமிழக அமைச்சர்கள் மு.க.ஸ்டாலின், ஆற்காடு வீராசாமி மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கலந்துகொள்கின்றனர்.


வீரப்பன் தொடர் : இரண்டாம் ஆண்டு தொடக்கத்தை ஒட்டி பல்வேறு புதிய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட உள்ளன. வீரப்பன் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு சந்தனக்காடு என்ற தொடர் ஒளிபரப்பாகும். மூட நம்பிக்கைகளை தோலுரிக்கும் "வெங்காயம்" வித்தியாசமான இசை நிகழ்ச்சியாக "ஏலேலங்கடி ... ஏலேலோ. 'வணிகர்களுக்கான முகவரி, தமிழ் சமூகத்தின் சமையலை அறிமுகப்படுத்தும் "கைமணம்" இப்படி 18 புதிய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படும். திரைப்படங்கள்: தரமான திரைப்படங்களை ஒளிபரப்புவது குறித்து பரிசீலித்து வருகிறோம். விளம்பரங்களை ஒளிபரப்புவதில் எங்களுக்கு என்று சில நெறிகளை ஏற்படுத்தி உள்ளோம். அதன்படி "கோக்" "பெப்சி" போன்ற வெளிநாட்டு குளிர்பான விளம்பரங்களை கூட ஒளிபரப்ப மாட்டோம். தற்போது ஐரோப்பா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் ஒளிபரப்ப ஒப்பந்தம் செய்துள்ளோம். இதுபோல் சிங்கப்பூர், மலேசியாவிலும் ஒளிபரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் ராமதாஸ்.

  • பிரிட்டனில் மனித - மிருக சேர்க்கைக் கருக்களை உருவாக்க கொள்கையளவில் அனுமதி : ஆராய்ச்சிக்காக மனிதன் மற்றும் மிருகங்களை இணைத்து, கருக்களை உருவாக்குவதற்கு பிரிட்டனின் ஒழுங்குமுறை ஆணையம் கொள்கையளவில் ஒப்புதல் அளித்துள்ளது.
    இதுபோன்ற ஆராய்ச்சிகளை சட்டபூர்வமாக்கும் ஒரு சில நாடுகளின் பட்டியலில் பிரிட்டனும் இணைந்துள்ளது.
    கலப்பின கருக்கள் 99 சதவீதம் மனிதத் தன்மை கொண்டவையாகவும் ஒரு சதவீதம் விலங்குத் தன்மை கொண்டவையாகவும் இருக்கும்.
    மூளை அழுகல் உள்ளிட்ட சில நோய்களை தீர்ப்பதற்குத் தேவையான குறுத்தணுக்களை பெறுவதற்காக இத்தகைய கலப்பின கருக்களை உருவாக்க விஞ்ஞானிகள் முயன்று வருகின்றனர்.
    இந்த ஆராய்ச்சிகள் கட்டுப்படுத்தப்பட்டவையாக இருக்கும். ஒவ்வொரு சோதனையும் மேலாய்வு செய்யப்படும்
  • டார்பூரில் பான் கீ மூண் : சுடானின் பலவருட மோதல்களால் இடம்பெயர்ந்த சில அகதிகள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தை அடுத்து, அங்கு மேற்கு சுடானின் டார்பூர் பகுதிக்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமைச் செயலர் பான் கீ மூண் அவர்கள், தனது பயணத் திட்டத்தின் ஒரு பகுதியை மாற்றி அமைத்துள்ளார்.
  • குண்டுத் தாக்குதல்களை நடத்தத் திட்டமிட்டவர்களே கைது: ஜெர்மனியில் நேற்று செவ்வாய்க்கிழமை தங்களால் கைது செய்யப்பட்ட மூன்று ஆண்கள், ஜெர்மனியில் இருக்கும் அமெரிக்கர்களை குறிவைத்து குண்டு தாக்குதல்களை நடத்த திட்டமிட்டிருந்ததாக, ஜெர்மனிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவர்களில், இருவர் ஜெர்மனியைச் சேர்ந்தவர்கள் என்றும், இஸ்லாம் மதத்திற்கு மாறியவர்கள் என்றும், ஒருவர் துருக்கி நாட்டைச் சேர்ந்தவர் என்றும் தெரிவித்திருக்கும் ஜெர்மனியின் மத்திய அரச வழக்கறிஞர், இவர்கள் மூன்றுபேரும் அல்கொய்தாவுடன் தொடர்புடைய குழுக்களால் பாகிஸ்தானில் நடத்தப்பட்டு வரும் முகாம்களில் பயிற்சிபெற்றவர்கள் என்றும் தெரிவித்திருக்கிறார்
  • ஜிம்பாவேயில் பாரிய கோதுமைத் தட்டுப்பாடு : ஜிம்பாவேயில் தேசிய அளவில் கோதுமைக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக, அங்கு ரொட்டித்( பாண்) தயாரிப்பை இரு நாட்களில் முற்றாக நிறுத்த வேண்டிய நிலைக்கு தாம் தள்ளப்பட்டுள்ளதாக அந்த நாட்டின் பெரிய ரொட்டித் தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்
  • தொடர்ந்து இன்றைய (செப்டம்பர் 05 புதன்கிழமை 2007) "BBC" தமிழோசைச் செய்திகளுக்கு இணைப்பில் செல்க http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml?tamil_worldnews

எலும்பில்லா மனிதன்

September 04, 2007

இன்றைய குறள்

துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மட்டும்
இன்புறூஉம் இன்சொ லவர்க்கு

இன்சொல் பேசி எல்லோரிடத்திலும் கனிவுடன் பழகுவோர்க்கு "நட்பில் வறுமை" எனும் துன்பமில்லை
அறத்துப்பால் : இனியவை கூறல்

"அன்பு, ஆசை, நட்பு என்பனவற்றின் பொருளைத்தவிர, வேறு பொருளைக் கொண்டதென்று சொல்லும்படியான காதல் என்னும் ஒரு தனித்தன்மை ஆண்-பெண் சம்பந்தத்தில் இல்லையென்பதை விவரிக்கவே இவ்வியாசம் எழுதப்படுவதாகும். ஏனெனில், உலகத்தில் காதலென்பதாக ஒரு வார்த்தையைச் சொல்லி, அதனுள் ஏதோ பிரமாதமான தன்மையொன்று தனிமையாக இருப்பதாகக் கற்பித்து மக்களுக்குள் புகுத்தி அனாவசியமாய் ஆண்-பெண் கூட்டு வாழ்க்கையின் பயனை மங்கச்செய்து காதலுக்காகவென்று இன்பமில்லாமல், திருப்தியில்லாமல், தொல்லைப் படுத்தப்பட்டு வரப்படுகிறதை ஒழிக்கவேண்டுமென்பதற்காகவேயாகும்"
- பெரியார்

  • வங்கக் கடலில் 5 நாடுகளின் போர்க் கப்பல்கள் பயிற்சி : இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் ஆகிய ஐந்து நாடுகளின் போர்க் கப்பல்கள் பங்கேற்கும் முக்கியமான பயிற்சி நடவடிக்கை ஒன்று இன்று வங்கக் கடலில் ஆரம்பமாகியுள்ளது
  • அமெரிக்க கணினி வலையமைப்பில் ஊடுருவல்: சீனா மறுப்பு அமெரிக்காவின் பாதுகாப்பு அமைச்சின் தலைமையகமான பென்டகனில், உள்ள கணினி வலையமைப்புகளில் சீன இராணுவம் வெற்றிகரமாக ஊடுருவியுள்ளதாக வெளிவந்த ஊடகத் தகவல்களை சீனா மறுத்துள்ளது
  • நிகராகுவா நாட்டை சூறாவளி தாக்கியது : மத்திய அமெரிக்கப் பகுதியில் பெலிக்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ள பெரிய அளவிலான சூறாவளி நிகராகுவா நாட்டின் கிழக்கு கடற்கரைப் பகுதியை தாக்கியுள்ளது
  • டென்மார்க்கில் தீவிரவாதிகள் என்று நம்பப்படுபவர்கள் பலர் கைது : டென்மார்க் நாட்டில் பல தீவிரவாதச் செயல்களை நடத்தவிருந்தார்கள் என்று சந்தேகிக்கப்படுபவர்கள் பலரை அந்நாட்டின் போலீஸ் மற்றும் புலனாய்வு அதிகாரிகள் கைது செய்துள்ளார்கள்
  • தொடர்ந்து இன்றைய (செப்டம்பர் 04 செவ்வாய்க்கிழமை 2007) "BBC" தமிழோசைச் செய்திகளுக்கு இணைப்பில் செல்க http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml?tamil_worldnews

September 03, 2007

இன்றைய குறள்

கூறல் முகத்தான் அமர்ந்தின்து நோக்கி
அகத்தானாம் இன்சொ லினதே

அறம் முகம் மலர நோக்கி, அகம் மலர இனிய சொற்களைக் கூறுவதே அறவழியில் அமைந்த பண்பாகும்

அறத்துப்பால் : இனியவை

மனமே! இழிந்தவர்க்கும் கூட இன்னும் பணிவுகாட்டு சாக்கடையிலும் தாழ்ந்து பணிந்தோடிவரும் தண்ணீர்போல...

- கவிப்பேரரசு வைரமுத்து

  • வங்கதேசத்தில் மற்றுமொரு முன்னாள் பிரதமர் கைது : ஊழல் மற்றும் மிரட்டிப் பணம் பறித்தல் ஆகியவை தொடர்பில் வங்காளதேசத்தின் முன்னாள் பிரதமர் காலிதா ஜியா அவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதுடன், விசாரணைகளுக்காக அவர் சிறையிலும் வைக்கப்பட்டுள்ளார்
  • அமெரிக்க அதிபர் புஷ் இராக்கிற்கு திடீர் விஜயம்
    அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் இராக் சென்றுள்ளார். கடந்த ஒரு வருடத்திற்கும் மேலான காலப்பகுதியில் அவர் அங்கு செல்வது இதுவே முதல் முறை
  • பாஸ்ரா நகரின் கட்டுப்பாட்டை இராக்கியர்கள் வசம் அளித்தது பிரிட்டன் : இராக்கின் தெற்குப் பகுதியிலுள்ள பாஸ்ரா நகரின் ஒரு முக்கிய பிரிட்டிஷ் தளத்தின் கட்டுப்பாட்டை இராக்கியத் துருப்புக்கள் ஏற்றுள்ளன
  • பிரான்ஸில் இரண்டு பெரிய எரிசக்தி நிறுவனங்கள் இணைந்தன
  • மேலும் இன்றைய (செப்டம்பர் 03 திங்கட்கிழமை 2007) "BBC" செய்திகளுக்கு இணைப்பில் செல்க http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml?tamil_worldnews

ஒரு நண்பர் குழுமத்தில் கேட்ட கேள்விக்கு நான் அளித்த பதில்கள்!

1. ஒன்றுக்கும் உதவாதவர்களை என்ன செய்யலாம்?

இந்த உலகத்தில் ஒன்றுக்கும் உதவாதவர்கள் என்று யாரும் இல்லை

2. விமர்சகர்கள் என்றால் யார்?

எந்த ஒரு பச்சாதாபமும் இல்லாமல் தன்னைத்தானே எவனொருவன் முதலில் விமர்சித்துக்கொள்கிறானோ அவனே ஒரு உண்மையான விமர்சகன். உதாரணம் : கவியரசு கண்ணதாசன். அவரே சொன்னது : ஒரு மனிதன் எப்படியெல்லாம் வாழக்கூடாதோ அப்படியெல்லாம் நான் வாழந்திருக்கிறேன். அதனால் மற்றவர்களுக்கு அறிவுரை சொல்ல எனக்கு அறுகதை இருக்கிறது.
3. உங்களை சினிமாத் தணிக்கைக்குழு உறுப்பினராக்கினால்?


நான் முதலில் சொன்னதுபோல் ஒரு நல்ல விமர்சனாகவே இருப்பேன். ஆனாலும் திரைத்துறையில் உள்ள கடைநிலை ஊழியர்களின் வயிற்றில் அடிக்க நான் விரும்பவில்லை. காரணம் நிறையை பேர் வேலை இழந்துவிடுவர்.
4. தர்மம் தலை காக்குமா?


கட்டாயம் காக்கும். தருமத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் தருமம் மறுபடி வெல்லும். நண்பரே! நாமெல்லாம் தமிழர்கள், குறிப்பாக இந்தியர்கள். இந்தக் கேள்வியைத் தயவு செய்து இன்னொரு முறை கேட்காதீர்கள். காரணம் நமது இதிகாசங்கள், புராணங்கள் எல்லாம் வலியுறுத்துவதே அதைத்தான்.

5. அடுத்தவர் குறைகளையே அலசிக் கொண்டிருப்பவர்களைப் பற்றி?
அதில் நீங்கள், நான், யாருமே கவனம் செலுத்தாமல் நமது வேலையைப்பார்ப்போம். அவரும் அவர் வேலையைச் செய்கிறார். செய்துவிட்டுப்போகட்டும். மேற்சொன்ன தருமம் மறுபடி வெல்லும்.

பாலைவனப் பரிதாபங்கள்

இரு தினங்களுக்கு முன் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த இளைஞரை சந்திக்க நேர்ந்தது. அவர் துபாயிலிருந்து திரும்பி இருந்தார், (அரசின் கருணை மூலம்)-amnesty அம்னெஸ்டி மூலம். தம்பியின் கதை கேட்டு மனதே கனத்தது. என்ன செய்வது ஒரு பக்கம் சாப்ட்வேர் (software) மூலம் நம் இளைஞர்கள் பணத்தில் மிதப்பதும் ஞாபகம் வந்தது.தம்பி பத்தாவது வரை படித்துள்ளார்... வெளிநாட்டு மோகத்தினால் மட்டும் இல்லாமல் தன் குடும்ப நிலையை மாற்றவும் நினைத்து ஒரு பெரும் தொகையை ஏஜென்டுக்கு கொடுத்துவிட்டு விமானம் ஏறியுள்ளார். இறங்கியபின்பு தான் தெரிந்தது, அது ஒட்டக கூடாரம் என்று. துபாய் நகரிலிருந்து வெகு தொலைவில் ஆள் அரவம் இன்றி இருந்ததாம். வேலை புல் தோட்டத்தில் புல் அறுத்து ஒட்டகத்துக்கு இடுவது. தன் ஊரில் வீட்டில் உள்ள மாட்டுக்குக் கூட ஒரு வேளை புல் போடாதவன். புது வாழ்க்கை புல்லே ஆனது கொடுமையாய் இருந்தது. ஏஜென்ட் ஏமாற்றி இருக்கிறான். பொறுத்துக் கொண்டு காசுக்காக பணி செய்தபோது அரபி உரிமையாளர் சம்பளமே கொடுக்காத போது தான் புரிந்ததாம், அரபி நேர்மையான ஆள் அல்ல என்று. மூன்று அல்லது நான்கு சம்பளமே இல்லையாம். பின்பு ஒரு மாதம் சம்பளம் கிடைத்ததாம். இப்படி ஒரு வருடம் தண்டனையைக் கழித்து, ஒரு நாள் சொல்லிக் கொள்ளாமல் வெளியேறி துபாய் நகருக்கு சென்றிருக்கிறார்.அங்கே வேறு ஒரு தமிழ் நண்பரின் உதவியுடன் ஒரு கார் ஒர்க்ஷாப்-பில் சேர்ந்திருக்கிறார். இது முறை தவறிய (illegal) பணி தான். என்ன செய்வது... குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும், முக்கியமாக வாங்கிய கடனுக்கு வட்டி கட்டியாக வேண்டும். வெளியே தலையே காட்டாமல் இரு வருடங்கள் வேலை செய்திருக்கிறார், கிடைக்கும் பணத்தை தெரிந்தவர்கள் மூலமாக வீட்டுக்கும் அனுப்பி இருக்கிறார். இதனிடையே அரசு, விசிட் விசாவில் வந்து திரும்பாதவர்களுக்கும், வேறு வேலைக்குத் தப்பி ஓடியவர்களுக்கும் கருணை அடிப்படையில் தங்கள் நாடு திரும்பலாம் என அறிவித்தது. அந்தந்த நாட்டு தூதரகங்கள் மூலமாக திருப்பி அனுப்ப ஏற்பாடு செய்தது. விமான டிக்கெட் எடுக்க வழியில்லாதவர்களுக்கு இந்திய சேவை அமைப்புகள் உதவி செய்தன. தம்பி இதை அறிந்து இந்திய தூதரகத்தில் அடைக்கலம் ஆகியிருக்கிறார். அங்கு இருந்த அதிகாரிகள் இவர் கதையை கேட்டு உதவி செய்வதாய் ஆறுதல் வார்த்தை கூறியிருக்கின்றனர். புல் தோட்டத்து முதலாளி அரபியிடம் பாஸ்போர்ட் மாட்டிக்கொண்டதால், சிரமப்பட்டு அரசின் ஆதரவினால் தமிழ்நாடு வந்து சேர்ந்துள்ளார். கடைசியாக, இனி என்ன செய்யப்போகிறீர்கள் எனக் கேட்டேன். பதிலைக் கேட்டு திடுக்கிடத் தான் முடிந்தது.''தடைக்காலம் (Ban period) முடிந்தவுடன் ஒரு வருடம் கழித்து மீண்டும் துபாய் செல்வேன்''.