May 03, 2007

பூங்காத்து திரும்புமா?

என்னைப் பொருத்தவரையில் எத்தனை முறை இந்தப் பாடல்களைக் கேட்டாலும், மனதுக்குள் எங்கோ ஒரு மூலையில் ஒரு சுகமான 'வலி' இருப்பதை உணரமுடிகிறது. உங்களுக்கு??

நிலாவே வா

பனி விழும் இரவு

கண்ணே கலைமானே!

மன்றம் வந்த தென்றலுக்கு..

என்ன சத்தம் இந்த நேரம்??

May 02, 2007

கவிப்பேரரசு வைரமுத்துவின் திரையுலக முதல் பாடல்

துள்ளியெழுந்தது பாட்டு

பாலம் இடிப்பதற்குமுன் பெயர் மாற்றத்திற்கு நாம் என்ன செய்யப் போகிறோம்?

விஸ்வஹிந்து பரிஷத் இராமர் பாலத்தை இடித்தால் நாடு தழுவிய போராட்டம் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கதுதான். ஆனால் 'நாசா' கண்டுபிடித்த பழம்பெரும் பாலத்திற்கு 'ஆதாம் ப்ரிட்ஜ்' என்று பெயர் வைத்ததுபற்றி ஏன் வாய் திறக்கவில்லை. ஆக பிரச்சினை அதல்ல, எல்லாமே தேர்தலையும், இந்திய அரசியலையும் உள்நோக்கத்தில் வைத்துக்கொண்டுதான் செயல்படுகிறது. இந்தியர்களாகிய நாம் என்ன செய்ய வேண்டும்? முதலில் அதற்குக் குரல் கொடுப்போம். ஒவ்வொரு இந்தியனும் சிந்தித்து செயல்பட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். To view Dinamalar please click here.
Welcome To Dinamalar.com - Leading National Tamil Daily

பேராசிரியர் இராமநாதன் அவர்களின் பேட்டி :

புவிக்கோளம் சூடாகிக் கொண்டிருக்கிறது; அதன் விளைவுகளை 2000வது ஆண்டில் உணரலாம்’ என்று 20 ஆண்டுகள் முன்னரே கூறினார் பேரா. வீரபத்ரன் ராமநாதன். தி நியூ யார்க் டைம்ஸ் இதை முதல் பக்கத்தில் வெளியிட்டது. ஹார்வார்ட், பிரின்ஸ்டன் விஞ்ஞானிகள் இந்தக் கூற்றை ‘நான்சென்ஸ்’ என்று இகழ்ந்தார்கள். ஆனால், ராமநாதன் சொன்னதை அறிவியல் உலகம் ஏற்றுக்கொள்ளும் கட்டாயம் ஏற்பட்டது.

இராமநாதன் அவர்கள் :கும்பகோணத்திலிருந்து 5 கி.மீ. தொலைவிலுள்ள ஒரு கிராமத்தில் என் தாத்தா விவசாயியாக இருந்தார். பிறந்தது சென்னையில். பிறகு திருச்சி, மதுரை, பங்களூரு ஆகிய இடங்களில் படித்தேன். அப்பா ராணுவத்தில் இருந்த பின் விற்பனையாளராக மாறினார். அது எங்களைப் பல ஊர்களுக்கும் கொண்டு சென்றது. பங்களூரில் பள்ளிப் படிப்பை முடித்தபின் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் எஞ்சினியரிங் படிக்கச் சென்றேன். செகந்திராபாதில் குளிர்சாதனத் துறையில் சிறிதுகாலம் பணியாற்றினேன். அப்போது தான் எனக்குப் பொறியியல் பிடிக்கவில்லை என்பதைக் கண்டுபிடித்தேன்.

பேராசிரியர் இராமநாதன் அவர்கள் 'தென்றல்' (அமெரிக்கா) மாத இதழுக்கு அளித்த மிக மிக உபயோகமான பேட்டியைத் தொடர்ந்து படிக்க, தயவு செய்து 'தலைப்பை'க் 'க்ளிக்' செய்யவும். நீங்கள் 'தென்றல்' மாத இதழின் வாசகர் இல்லையெனில் இலவசப் பதிவு செய்துகொள்ளவும்.
பேரா.வி.ராமநாதன்

ஹரிஹரன் குரலில்.....




'தண்ணீர் தேசம்' - கவிப்பேரரசு வைரமுத்து

அனுபவம் வேண்டுமா –
இளமையை இழ…
ஆயுள் வேண்டுமா –
போகம் இழ...
கவிதை வேண்டுமா –

உன்னை இழ…
காதல் வேண்டுமா –
இதயத்தை இழ….
வளர்ச்சி வேண்டுமா –

தூக்கத்தை இழ…
வரவு வேண்டுமா –
வியர்வையை இழ…

என் தந்தை எழுதிய "உண்மையான உழவனுக்குத் திருநாளேது" என்ற கவிதைக்கு கிடைத்த பரிசு இந்தத் 'தண்ணீர் தேசம்'. (அந்தக் கவிதையை வெகுவிரைவில் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.) அப்போதுதான் நான் இதனைப் படிக்க நேர்ந்தது. இது ஒவ்வொரு தமிழனும் படிக்க வேண்டிய ஒன்று. எங்கு போகிறோம் என்று தெரியாமலேயே வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த உலகத்தில் நாமும் சேர்ந்து ஓடிக்கொண்டிருக்கும் இந்தக் கம்ப்யூட்டர் யுகத்தில் கம்ப்யூட்டர் மூலமாகவே நீங்களும் படிக்கவேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன்.
(பின் குறிப்பு : நான் கம்ப்யூட்டர் கற்றுக்கொள்வதற்கு முன்பே படித்துவிட்டேன்)
தொடர்ந்து படிக்க தயவு செய்து கீழுள்ள இணைப்பைக் 'க்ளிக்' செய்யவும்.
http://navneethsmart.googlepages.com/ThanneerDesam.pdf



April 30, 2007

மே தின வாழ்த்துக்கள்!!

உலகத்திலேயே மிகப் புனிதமான நீர்
உழைப்பாளனின் வியர்வை...
இந்த மேதின நாளில் அனைத்துலக உழைக்கும் தோழர்களுக்கும் வாழ்த்துக் கூறுவோம்.
மே தினம்!
உழைப்பவர் சீதனம்!!
என்று கையை மேலே உயர்த்தி, அர்த்தம் தெரியாத அந்த ஐந்து ஆறு வயதுகளிலேயே என் தந்தையோடு சேர்ந்து ஊர்வலங்களில் கோசம் போட்டதை நினைவுகூர்கிறேன்.
இந்த நாளில் நாம் "மாவீரன் பகத்சிங்"கை நினைவு கூர்வதும் மிகப்பொருத்தமாக இருக்கும். பகத்சிங் பற்றி தமிழில் ஒரு முழுமையான திரைப்படம் இதுவரை வரவில்லையே என்ற வருத்தம் இருந்தாலும் நாம் இந்த வீடியோத் தொகுப்பின் மூலம சிறிது ஆறுதல் அடைவோம்.

"மாவீரன் பகத்சிங்"

"மாவீரன் பகத்சிங்"

"மாவீரன் பகத்சிங்"

"மாவீரன் பகத்சிங்"

"மாவீரன் பகத்சிங்"

ஏ இந்தியனே!

இந்திய மண்ணில் பிறந்த ஒவ்வொருவரும், ஏன்? இந்தியா மீது அக்கறை கொண்ட, இந்தியாவைப் பற்றி படித்த, ஆராய்ச்சி மேற்கொண்டிருக்கும் வெளிநாட்டவர்களுக்கும் கூடத் தெரிந்த, அறிந்த ஒரு விசயம் என்னவெனில்,
“இந்தியாவுக்கும் அதாவது இராமேஸ்வரத்திற்கும், இலங்கைக்கும் (சீறிலங்கா) இடையே இராமாயண காலத்தில், கிட்டத்தட்ட 17,50,000 ஆண்டுகளுக்கு முன், த்ரேதா யுகத்தில் ‘வானர சேனை’களால் சாட்சாத் இராமபிரான் மேற்பார்வையில், முன்னிலையில் பாலம் (வரதி) ஒன்று கட்டப்பட்டது”.
இது படித்ததோடு சரி. உண்மையா? பொய்யா? யாருக்காவது தெரியுமா? ஆனால் ‘நாசா’ (NASA) ஆராய்ச்சியாளர்கள் அந்தப் பாலம் இன்றும் இருப்பதாகக் கண்டுபிடித்திருக்கிறார்கள். சந்தோசமான விசயம்.

“ஒவ்வொரு இந்தியனும் வேதனைப்படக்கூடிய விசயமும் கூட”

காரணம் அதற்குச் சூட்டியிருக்கக்கூடிய பெயர் “ஆதாம் பாலம்” (ADAM BRIDGE).

ஏ இந்தியனே!
இதுவரை நீ
இளிச்சவாயனாக இருந்தது போதும்!
இனிமேலாவது விழித்துக்கொள்!!


'லண்டன் பாலம்' (LONDON BRIDGE) மற்றும் அமெரிக்காவில் உள்ள 'கோல்டன் கேட் ஆப் அமெரிக்கா' (GOLDEN GATE) போன்றவற்றை "இராமர் பாலம்" என்றோ அல்லது "லட்சுமணர் பாலம்" என்றோ நாம் பெயர் சூட்டினால் அவர்கள் ஒத்துக்கொள்வார்களா? இன்னொரு உலக யுத்தம் வெடிக்கும்.

இந்தியனே!
தமிழனே!! சிந்தித்துப்பார்!!!
இதற்காக நீ செய்யப்போவது என்ன?
குறைந்தபட்சம் இந்த விசயத்தை
உனக்குத் தெரிந்த வட்டத்துக்குச் சொல்
காலம் பதில் சொல்லும்!

நீ உன் கடமையைச் செய்தால்…..

பாலம் யார் கட்டியது? யார் மேஸ்திரி வேலை பார்த்தார்? எத்தனை சித்தாள் வேலை செய்தார்கள்? அதில் எந்தெந்த சாதிக்காரன் என்ன பங்கு வகித்தான் என்பதெல்லாம் அடுத்த விசயம்.

பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் நடந்த இராமாயணம், மஹாபாரதம் போன்ற மானுடம் போற்றும் இதிகாசங்களைக் கற்பனை என்று கேலி பேசிக்கொண்டிருக்கும் அரைவேக்காடுகளைக் கண்ணத்தில் அறைந்தாற்போல் விஞ்ஞானம் இன்று பல உண்மைகளைக் கண்டுபிடித்திருக்கிறது, "கல் தோன்றி மண் தோன்றா காலத்து முன் தோன்றிய மூத்தகுடி" என்று பேசுவது எத்தனை தூரம் உண்மை? நம் பாரம்பரியம் என்ன? நம் வரலாறு என்ன? அதில் எத்தனை புதிர்கள் அடங்கியிருக்கின்றன? எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் இந்திய மண்ணில் தோன்றிய மனிதனின் வாழ்க்கை முறை எப்படி இருந்தது? மனிதன் எப்படி வாழ்ந்தான்? நமது கலாச்சாரம் என்ன? நமக்கும் இலங்கைக்கும் உள்ள உறவுகள் எப்படி? இப்படி எத்தனையோ கேள்விகளுக்கு விடை சொல்லப்போகும் இந்த விண்வெளிப் புகைப்படங்களைப் பாருங்கள்.

நமது பாரம்பரியம், வரலாறு, கலாச்சாரம் இவைகளெல்லாம் ஆராய்ச்சியாளர்களுக்கும், விஞ்ஞானிகளுக்கும் வேண்டுமானால் வேண்டாத ஒன்றாக இருக்கலாம். ஆனால் இந்த ப்ரபஞ்சத்தில் பிறந்த ஒவ்வொரு மனிதனுக்கும், ஆன்மீகப்பாதையில் ஆர்வம் கொண்ட ஒவ்வொரு ஜீவராசிக்கும் இந்தியக் கலாச்சாரம் எப்படிப்பட்டது, நமது தொடக்கம் என்ன? நமது மூலம் யார்? இந்த உலகத்தின் ஒவ்வொரு அசைவிலும் நம் இந்தியப் பங்கீடு என்ன? நாம் எப்படிப்பட்ட பாரம்பரியம் மிக்கவர்கள் என்றெல்லாம் புரியும். ஆக,
எனதருமை தோழர்களே!

உங்களின் குரல் ஓங்கி ஒலிக்கட்டும்!

நமது சக சகோதரர்களுக்கும் இதனைச்சொல்லுங்கள்!!

விதைத்து வைப்போம், முளைக்கும்போது முளைக்கட்டும்
ஆனால் நாம் விதைக்கக்கூடிய ஒவ்வொரு விதையும் ஆலவிருட்சங்களாக அணி வகுக்கட்டும்.

நவநீ
இதுபற்றி முழுவதும் அறிய மேலே தலைப்பை 'க்ளிக்' செய்யவும்.
பின் குறிப்பு : இதுபற்றி மெய்லில் பெற தயவுசெய்து தங்களின் மெய்ல் முகவரியை எனக்கு அனுப்பவும். எனது குறிக்கோள்!! இந்த விசயம் உலகத்தின் எந்த மூலையில் இந்தியன் இருந்தாலும் அவன் இதுபற்றித் தெரிந்து "குரல்" கொடுக்கவேண்டும்.


நல்லவர்கள் நினைப்பது ஒன்றுதான் நடப்பதில்லை..

நம் தமிழ்நாட்டில்....- ஆம் அது இன்றும் பொருந்தும். எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன் சிம்மக்குரல் கொடுத்த ஒரு மாவீரனை நாம் எல்லாம் மறந்திருக்கமாட்டோம்.