May 10, 2007

அம்மா!

அடிவயிற்றில் இருந்து
சொல்லிப்பார்...
அழுகை வரும்..
அவள்தான் அம்மா...

அதென்ன விந்தை
நானுண்ண
அவள் பசியடங்குகிறது......


May 09, 2007

“அன்னையர் தினம்”

அதிகாலையில்
அழைத்து வாழ்த்துச் சொன்னால்
அன்னையின்
அயர்ந்த தூக்கம்
கெட்டுவிடும் என்று
அலுவலகம் சென்றவன்
அனுமதி பெற்று
அவசர அவசரமாகக் காரில்
பறந்து வந்தான்....

பார்வையாளர் நேரம் முடிவதற்குள்…
ஆதரவற்றோர் இல்லம் நோக்கி!



நவநீ

நான் ரசித்தது!
You can close the windows and darken your room
AND
You can open the windows and let light in
It is a matter of choice
Your mind is your room
Do you darken it
OR
Do you fill it with light?
- (Unknown) எங்கோ படித்தது!

அமெரிக்கா, கலிபோர்னியா மாகாணத்தில் வளைகுடாப் பகுதியில் (It's different - News, Views & Music(KZSU) Stanford 90.1 FM radio show) உள்ள வானொலி பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். அங்கு ஒலிபரப்பான பல நிகழ்ச்சிகளில் பதிவு செய்யப்பட்டவைகளை இங்குள்ள இணைப்பின் மூலம் கேட்கலாம். அதாவது பலருக்கு இதைக்கேட்கும் வாய்ப்பு கிடைப்பதில்லை. காரணம் அமெரிக்க வாழ்க்கை அப்படி. மேலும் நீங்கள் கேட்க இருப்பது ஒன்றல்ல, இரண்டல்ல...ஒரே நேரத்தில், கவிஞர் மு.மேத்தா அவர்களின் பேட்டி, இசைஞானி இளையராஜாவின் இசைத்துவம், திரைப்பட இயக்குனர் கௌதம் மேனன் பேட்டி, டாக்டர் ஞானசம்பந்தம் அவர்கள் நடுவராக பட்டிமன்றம், பாடகர் உன்னி கிருஷ்ணன், திருக்குறள், ஒய்.ஜி.மகேந்திரன் பேட்டி... இன்னும் எவ்வளவோ எல்லாம் ஒரே நேரத்தில் ஒவ்வொன்றாகக் கேட்டு மகிழ இங்கே 'க்ளிக்' செய்யவும்.Tamil

May 08, 2007

ப்ரகாஷ்ராஜ் பேட்டி

வேற்றுமொழிக்காரராக இருந்தாலும் மொழியின் முக்கியத்துவத்தை மிகத்தெளிவாகச் சொல்லியிருக்கிறார். அதானால்தான் இன்றும் அவரால் தனக்கென ஒரு இடத்தைப் பற்றிக்கொள்ள முடிகிறது. என்னைப் பொருத்தவரையில் அவர் ஒரு நல்ல நடிகன், கலைஞன் என்பதையும் தாண்டி நல்ல ஒரு ரசிகன். நான் நேரில் பார்த்த ஒரு காட்சி, நான் கடந்த ஆண்டு சென்னையிலிருந்த போது எனது நண்பனின் படத்திற்கு 'கால்ஷீட்' சம்பந்தமாக பார்க்கப் போயிருந்தோம். அன்று பலத்த மழை, காரை நிறுத்திவிட்டுப் பார்த்தால் 'மனிதர் மழையில் நனைந்துகொண்டு' எதையோ நினைத்துக்கொண்டு நின்று கொண்டிருந்தார். இது வெளித்தோற்றத்துக்கு வேண்டுமானால் அதிகப்பிரசிங்கித்தனமாக இருக்கலாம். ஒரு நல்ல கலை ரசனையுடைய, இந்த உலகத்தை ரசிக்கக் கூடிய ரசிகன் என்பதற்கு இதைவிட வேறென்ன சொல்ல முடியும்? சரி அவர் 'மொழி' பற்றி என்ன சொல்கிறார்....Please click'Heading'

புதிய கட்சி

எதிர்பார்த்தபடியே நடிகர் சரத்குமார் வெகுவிரைவில் (இரண்டு மாதத்திற்குள்) புதிய அரசியல் கட்சி துவங்குகிறார்.

"வீதிக்கொரு கட்சி உண்டு
ஜாதிக்கொரு சங்கம் உண்டு
நீதி கேட்க மட்டுமிங்கு நாதி இல்ல
இது நாடா இல்ல வெறுங்காடா?
இதைக்கேட்க யாருமில்லை தோழா"

வேறென்ன பாடுவது?...சரி பொருத்திருந்து பார்ப்போம்.

சுதந்திரம் எப்போது?? - திபெத்

திபெத்

சுதந்திரம் எப்போது?? - திபெத்

May 07, 2007

"சென்னை சங்கமம்" - 1

"சென்னை சங்கமம்"
கல் தோன்றி மண் தோன்றா காலத்து முன் தோன்றிய நம் தமிழ்மொழி, நமது கலாச்சாரம், கலை, இலக்கியம், இசை, பண்பாடு, வேதம், நமது கிராமியக்கலை இவற்றையெல்லாம் பார்க்கும்போது, நம்மையறியாமலேயே ஒரு வித ஈர்ப்பு, உணர்வு உண்டாகும். இவைகளையெல்லாம் நினைத்துப் பெருமைப்படக்கூடிய ஒரு நிகழ்ச்சி இது. இவற்றைப் பார்த்துப் பிரமித்துப் போனதோடு, தயவுசெய்து இதே பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள இன்னொரு வீடியோவையும் பார்க்கத் தவறாதீர்கள்! அது "கலாச்சாரச் சீர்கேடு" என்ற தலைப்பில் இருக்கும்.

"சென்னை சங்கமம்" - 2

"சென்னை சங்கமம்" - 3

"சென்னை சங்கமம்" - 4

"சென்னை சங்கமம்" - 5

"சென்னை சங்கமம்" - 6

"கலாச்சாரச் சீர்கேடு"

நாம் எங்கே போய்க்கொண்டிருக்கிறோம்?
எதிர்வரும் 20 - 25 ஆண்டுகளில் "இந்தியா உலக நாடுகளில் முதன்மையான நாடாக இருக்கும்" என்ற நமது கனவுகள் எங்கே? இந்தத் தலைமுறைகள் போய்க்கொண்டிருக்கும் பாதைகள் எங்கே? எதிர்கால இந்தியா இளைஞர்கள் கையில் என்பது உண்மைதான். அதே கையில் இருக்கக் கூடிய சிகரெட்'டைப் போல ஊதித் தள்ளிவிடுவார்களோ என ஒரு புறம் அச்சமாகவும் உள்ளது. எது எப்படியோ? நமது இந்தியா முன்னேறி உலக நாடுகள் வியக்கும் வண்ணம் உயர்ந்து நிற்கும் என்பதில் கடுகளவும் ஐயமில்லை. அதே நேரத்தில் அமெரிக்க மங்கையர்கள் போல அனைவரின் கையிலும் சிகரெட்-களும் உயர்ந்து நிற்கும். பிறகு அனைவரும் சொல்வார்கள் "தாயைப்போல பிள்ளை நூலைப்போல ஜீன்ஸ்" என்று. சிகரெட் பிடிப்பதென்று முடிவெடுத்தபின் யார் பார்த்தாலென்ன? சவூதி அரேபிய மோக்கா என நினைத்துக்கொண்டு கலாச்சாரத்தை சந்திசிரிக்க வைக்கும் இந்தத் தலைமுறையை .......ம்ம்...ஒன்றும் சொல்வதற்கில்லை. வாழ்க பாரதம்!!

May 06, 2007

இந்த வாரம் ஹரிஹரனின் குரலில்..



தவிப்பு

கையிலொரு குழந்தை
இடுப்பிலொரு குழந்தை - அந்தத் தாய்
சாலையின்

பாதியைக் கடக்கும்போது
'க்ரீன்' சிக்னல்...........

- நவநீ

உன்னி கிருஷ்ணன்

கர்நாடக இசையும் திரைப்பட இசையும் அவ்வப்போது சங்கமித்துக்கொண்டாலும், முழுக்க முழுக்க கர்நாடக இசையாகவே திரைப்படம் இருந்தால், 'பார்க்கும் கூட்டம் புரியாமலே தலையாட்டும் கூட்டமாக மட்டுமே இருக்கும்' என்று சொன்ன ஒரு கவிஞனின் வார்த்தை நிரூபனமாகிவிடும். எனவே இரண்டுக்கும் உள்ள வேறுபாடு, எந்தவகையில் கலந்திருந்தால் கேட்பதற்கு இனிமையாக இருக்கும் என்று கர்நாடக இசை மற்றும் திரைப்படப் பின்னனிப் பாடல் என்ற இரண்டிலுமே தேர்ந்த திரு.உன்னி கிருஷ்ணன் சொல்வதைப் பார்ப்போம்.




May 05, 2007

புதிய கட்சி

சரத்குமார் தொடங்கப்போகும் புதிய கட்சி பற்றி, அவரே சொல்கிறார்!