May 22, 2007

Today's Quote

God is not found in the soul by adding anything,
but by a process of subtraction.
Meister Eckhart
உன் ஆத்மாவோடு எதையும்
சேர்த்துக்கொள்வதால் இல்லை
உன் ஆத்மைவை சுத்தமாகப்
பிரித்தெடுப்பதால்தான் - நீ
கடவுளை அடைவாய்

தமிழாக்கம் - நவின்

"பதவி பறிப்பு" ஓர் அலசல்

மதுரையில் மேயர் தலைமையில் ஆர்ப்பாட்டம்
பத்திரிகை தாக்குதலும் பதவி பறிப்பும்
தமிழகத்தில் மதுரையிலுள்ள தினகரன் அலுவலகம் மீது தமிழக முதல்வர் கருணாநிதி அவர்களின் மகன் அழகிரியின் ஆதரவாளர்கள் எனக் கருதப்படுபவர்கள் நடத்திய தாக்குதலில் மூன்று பேர் பலியாயினர். இவையனைத்தும் நீங்கள் அறிந்ததே! இதுபற்றி பல்வேறு செய்திகளும், பேட்டிகளும், மேலும் இலங்கைத் தமிழர்களுக்கும் சிங்கள இராணுவத்தினருக்கும் இடையே நடக்கும் சண்டை, தமிழக மீனவர்களைக் கடத்தியவர்கள் விடுதலைப்புலிகளே' என்ற திடுக்கிடும் தகவல்கள் மற்றும் ஏராளமான செய்திகளைப் படிக்க கீழேயுள்ள இணைப்பை அழுத்தவும்.
BBCTamil.com

"BBC" தமிழோசை இன்றைய செய்தி

கீழேயுள்ள இணைப்பை அழுத்தவும்.
BBCTamil.com Radio Player
உங்களுடைய மேலான கருத்துக்களையும், யோசனைகளையும் எமக்கு மறக்காமல் அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்

குழு - மனுநீதி

"விக்கிப்பீடியா"

விக்கிப்பீடியா'வின்
இணை நிறுவனர் 'ஜிம்மி வேலஸ்' பேட்டி
விக்கிப்பீடியா பற்றி நான் சொல்லத்தேவையில்லை. உங்களுக்குத் தெரிந்திருக்கும் இது ஒரு உபயோகமான வீடியோப் பதிவு. முடிந்தால் தமிழ் விக்கிப்பீடியாவையும் பயணிக்கவும்.

புதிய அமைச்சர் 'ராதிகா செல்வி'

'இளம் இசையமைப்பாளர்'

ஜி.வி.ப்ராகாஷ்

May 21, 2007

Today's Quote


It is true that God is infinite, but not in
the sense in which the word "infinite" is
generally understood. The idea of God's
infinity is not to be confounded with the
materialistic idea of vastness. When you say
that God cannot take a human form, you
understand that a very large substance or
form (as if material in nature) cannot be
compressed into a very small compass. God's
infinitude refers to the unlimitedness of a
purely spiritual entity, and as such, does
not suffer in the least by expressing itself
in a human form.


Selections from the Belur Math Diary. Complete Works, 5: 318

வயது 7, எடை 141 கிலோ



இரும்புத்திரை

என்று பெயர் எடுத்த, உலகத்தில் தன்னிகரற்று விளங்கிய ரஷ்யாவின் இன்றைய குழந்தை!


Russian Child Smoking - More free videos are here

புது விஷயம்!



AMAZING FACTS - video powered by Metacafe

Dr.P.B.Srinivas

அவர்களின் நேர்முகப் பிரத்யேகப் பேட்டி கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள பிரசித்தி பெற்ற தமிழ் பண்பலை வானொலியில் ஒலிபரப்பானது. {It's different - News, Views & Music (KZSU Stanford 90.1 FM radio show)} (பயணிக்க : http://www.itsdiff.com/) அதனை இங்கு கேட்போம்.
1.காலங்களில் அவள் வசந்தம்
2.ரோஜா மலரே ராஜகுமாரி
3.மயக்கமா கலக்கமா
4.ஏதோ மனிதன் பிறந்துவிட்டான்
5.பார்த்தேன் சிரித்தேன்
6.எந்த ஊர் என்றவனே
7.பொன்னென்பேன்
8.ஆண்டொன்று போனால் வயதொன்று போகும்
9.நிலவே என்னிடம் நெருங்காதே
10.நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்

இன்னும் எத்தனை யுகம் ஆனாலும் இந்தப்பாடல்களுக்கென்று ஒரு தனி மகத்துவம் உண்டு. இவற்றையெல்லாம் பாடிய மாபெரும் திரைப்படப் பின்னனிப் பாடகர் குரலைக் கேட்போம்.
.வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த வானொலி நண்பர்களுக்கு முதலில் நன்றியைத் தெரிவித்துக்கொள்வோம்...Please 'click'..
Tamil

May 20, 2007

Today's Quote

Do you know who is the real

Shakti-worshipper?

It is he who knows that

God is the omnipresent force in the universe

and sees in women the manifestation of that force

From Chicago.

Bengali letter to Haripada Mitra.

December 28, 1893. CW, 5: 26

"இடி"

இடி, மின்னல் நேரங்களில் மரத்தடியில் அல்லது அருகில் நிற்கக் கூடாது என்று பெரியவர்கள் சொன்னால் நீங்கள் ஒத்துக்கொள்வீர்களா?



Lightening Strikes A Tree - The most popular videos are a click away

என் கவிதைக் கிராமம்!

ஒரு நீண்ட இடைவெளிக்குப் பின் அன்று என் கிராமத்துக்குச் சென்றேன், காளையார்கோவிலிலிருந்து 15 கி.மீ. தொலைவில், தென்கிழக்கில் இருக்கும் என் கிராமத்தின் பெயர் சூரகுடி. என் கிராமமே நிராயுதபாணியாக நின்றது. இன்றுபோய் நாளை வா! என்று என்னால் சொல்லமுடியாது! ஏனெனில் அது என் தாய்க்கு இணையான என் கிராமம். எனை வளர்த்த மண்! நான் தவழ்ந்த மடி! நான் அமிலக்கண்ணீர் வடித்தேன்! தன் கருவுக்குள் சுமந்து பிரசவித்த ஒவ்வொரு குழந்தையும் பக்கத்திலில்லாது துடித்துக்கொண்டிருந்தது என் கிராமம்.
நான் உள்பட அனைவருமே வெளியூர் சென்றுவிட்ட வருத்தத்தில் என் கிராமம் கண்ணீர் விட்டுக் கதறிக்கொண்டிருந்தது. நான் துள்ளித்திரிந்த அந்த ஈரவயல்கள் வெடிப்போடிக்கிடக்கிறது. நான் நீச்சலடித்த என் குளங்கள் கொக்குகள் நிறைந்து கிடக்கின்றன. அந்தி சாயும் நேரத்தில் கேட்ட பறவைகளில் குரல்கள் நிறைந்த அந்த ஆலமரம் எங்கே போயிற்று? கலகலப்பான என் கிராமத்துக்குள் ஏன் இந்த மயான அமைதி? கண்மாய் நிறைந்து காணப்பட்ட என் கிராமம் எப்போதாவது வரும் குழாய்த் தண்ணீருக்குக் காத்துக்கிடக்கிறது.
போர்க்களத்தில் கணவனை இழந்த கற்புக்கரசி தன் கைக்குழந்தையோடு போர்க்களம் நோக்கி புழுதி கிளம்பக் கதறி ஓடும்போது எதிரியின் அம்பால் மாண்டுபோய்க் கைதவறிய குழந்தை செய்வதறியாது அலறித்துடிக்கும் அந்த கொடூரச்சூழல் என் கிராமத்துக்கு ஏன் வந்தது? இதற்கு நானும் ஒரு காரணமா? நிழலும் நிஜமும் மட்டுமே நிறைந்து கிடந்த என் கிராமத்திற்கு, மரங்களே இல்லாமல் உயிரற்று, வறண்டுபோகுமளவிற்கு வந்த துயர்தான் என்ன? என் கிராமத்தின் மொத்த வேதனையும் ஒரு மாமனிதனின் மரணத்தினால்தானா?
என் தாய்க்கும் என் கிராமத்துக்கும் எந்த வித்யாசமும் எனக்குத் தெரியவில்லை. என் கிராமத்தை பார்க்கும்போதெல்லாம் நான் கண்ணீர் வடிக்கிறேன். நாற்பது ஆண்டுகள் பின்னோக்கிப்போன ஒரு கிராமம் போல எனக்குத் தோன்றுகிறது. நான் வளர்ந்த அந்த மண், அந்த என் தாய் மடி எதற்காகவோ ஏங்குகிறது! என் மண் என் கண் முன்னே காணாமல் போய்விடுமோ? என்ற பயம் வந்துவிட்டது. நாம் நேசிப்பதற்கு வேண்டாம் அங்கு சுவாசிப்பதற்குக் கூட மனிதர்கள் இல்லை. எப்போதுமே கூட்டம் நிறைந்து கலகலப்பாக கலைகட்டும் என் கிராமம் ஆள் அரவமின்றி அடங்கிப்போனதே! மழை பெய்து ஓய்ந்ததும் தலை காட்டும் காளான்கள் போல் அவ்வப்போது தலை காட்டும் ஒரு சில மனிதர்கள். என் மக்கள்! என்ன ஆயிற்று என் கிராமத்திற்கு? “ஐயோ! புன்னகை புரியும் தமிழ் மண்ணே! உன்னை விட்டுப் பிரிவது ஒன்றுதான் எனக்கு வருத்தம்!” என்று கதறிய அந்த மாவீரன் கட்டப்பொம்மனின் வேதனை இன்றல்லவா எனக்குப் புரிகிறது. மண்ணை நேசிக்கும் எவனும் தன் மண்ணின் அருமையை உணர்கிறானோ இல்லையோ! வெறுமையை உணரவேண்டும்! துள்ளிக்குதித்த என் கிராமம், மாதம் ஒரு குழந்தையைப் பிரசவித்த என் கிராமம் மாபெரும் மனிதர்களை உருவாக்கிய என் கிராமம் இன்று நிற்கதியாய் நிற்கிறது. என் கிராமத்துக்கு எல்லாம் இருக்கிறது ஆனால் உயிர் மட்டும் இல்லை. என் கிராமம் நாளுக்கு நாள் ஒவ்வொரு உறுப்பாய் இழந்து கொண்டிருக்கிறது. என் கிராமத்தின் கிழக்கு எல்லையில் கம்பீரமாய் நிற்கும் ‘மருதநாயகி’ அம்மன் கோயில்கூட செயலிழந்து, வழிபட யாருமின்றி வருத்தப்பட்டுக்கொண்டிருக்கிறது.
மக்களன்றி ஒரு ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. வசதிகள் எல்லாம் பெருகி இருக்கிறது. வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்த வள்ளல் மட்டும் இன்று உயிரோடு இல்லை. அதனால்தான் என் கிராமத்துக்கும் உயிர் இல்லை. வாழ்க்கை நடத்த வாரிசுகள் இல்லை. மேற்கு எல்லையில் ‘வீரபத்திரர்’ கோயில் வெட்ட வெளியில் வெறுங்கையோடு நிரந்தர அமைதியாய் நிற்கிறது. கோயில் இருக்கிறது, கும்பிட மக்கள் இல்லை. உடல் இருக்கிறது என் அழகான கிராமத்திற்கு! ஆனால் உயிர்? எப்போது என்ன திட்டம் வகுத்தாலும் வீண் வம்பு பேசும் மனிதர்கள் போய் இப்போது திட்டமிட மட்டுமில்லை வம்புக்குக்கூட வாய்கள் இல்லை. எத்தனையோ பிள்ளைகளைப் பெற்றெடுத்து இன்று உயிரற்ற ஒரு அஃறிணையாய் காட்சியளிக்கும் என் கிராமத்தை உயர்ப்பிக்க எனக்கு ஆயிரம் கைகள் வேண்டாம். ஒரே ஒரு மாமனிதன் போதும்! அவன் மட்டும் என்னை ஆசீர்வதிக்கட்டும். சமீபத்தில்கூட இரண்டு மூன்று மரணம். ஆனால் அவை தற்கொலைக்குத் தள்ளப்பட்டவை. மரணத்தின் விளிம்பில்கூட கடைசியாகக் கதறிப் புலம்பியது அந்தக் கல்லறையில்தானாம்... ஆம் வேறு யாரிடம் சொல்வது? கேட்பதற்கு எந்தச் செவிகளும் தயாராயில்லை. அந்த ஒரு மனிதனின் மறைவு மட்டும் நிறுத்தப்பட்டிருந்தால் இத்தனை உயிர்களின் மரணத்ததை என் கிராமம் பார்த்திருக்காது. என் கிராமமே இன்று வெறுங்கையோடு வெறிச்சோடிக் கிடக்கிறது. இவையனைத்தையும் பொறுமையோடு பார்த்துக்கொண்டு, சிவப்புக்கொடி பறக்க, அந்த மாமனிதன் அமைதியாகத் உறங்குகிறான். தொண்டால் துயிலிழந்த அந்த தூயவனை இழந்து துடிக்கும் என் கிராமத்தின் துயர் துடைப்பார் யாரோ?
ஆம்!
நான் இழந்தது
என் தந்தையை மட்டுமல்ல!
மகனை இழந்து தவிப்பது
என் கிராமமும்தான்!
விதவையானது
என் தாய் மட்டுமல்ல!
என் கிராமமே! நீயும்தான்!!
சூரகுடி பாலா

May 19, 2007

இன்ப அதிர்ச்சி!

திடீரென்று சுய நினைவு வந்து கண்ணை மட்டும் விழிக்கமுடியாமல் காதால் மட்டும் கேட்டுணரும்போது, தன்னை "இறந்துவிட்டதாகக் கருதி, அனைவரும் பக்கத்தில் உட்கார்ந்து அழுகும் குரல் கேட்டால், இன்னும் சற்று நேரத்தில் தனது உடல் தீயில் வெந்து போகப் போகிறது" என உணரும் தருவாயில் திடீரென விழித்துக்கொண்டால்......அந்த உணர்வு இங்கே.......அழுத்தவும்Dinamalar.com

சுவாமி விவேகானந்தர்

No knowledge comes from outside; it is all inside.
What we say we "know" should-in strict psychological
language-be what we "discover" or "unveil"
What we "learn" is really what we "discover" by taking the
cover off our own soul, which is the mirror of
infinite knowledge.

Karma Yoga. New York, 1895. Complete Works, 1: 28

"சும்மா" ஒரு change'க்கு இதையுந்தான் கொஞ்சம் கேட்டுப்பாப்போமே!!





இயக்குனர் திரு.ஞானராஜசேகரன் அவர்களின் சமீபத்தில் வெளிவந்த "பெரியார்" திரைப்படம் பற்றிய ஒரு கலந்துரையாடல். இது 'BBC' வானொலியில் ஒலிபரப்பப் பட்டது.Please 'click' here.

அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்-ஐ ஒருத்தர் எப்படி கிண்டல் பண்றாரு பாருங்க!

வினாடிக்கு 4.17 குழந்தைகள்

உலகத்தில் ஒவ்வொரு வினாடிக்கும் 4.17 குழந்தைகள் பிறக்கின்றனர். இறப்பு வினாடிக்கு 1.80 என்றும் அவற்றுள் சராசரியாக பிழைத்து வளரக்கூடிய குழந்தைகள் வினாடிக்கு 2.37...... இது பற்றி மேலும் அறிய கீழேயுள்ள இணைப்பை அழுத்தவும்
World Population Counter