June 23, 2007

எழுத்தாளர் சுஜாதா நேர்முகம்

Essence of your life so far ரத்னச்சுருக்கமாக சொல்ல முடியுமா?

'ரத்னச்சுருககமாக' ஓரிரு வரிகளில்' எல்லாம் ஒரு வாழ்க்கையைச் சொல்ல முடியாது. இபபடிக் கேட்பது தமிழனின் சோம்பேறித்தனங்களில் ஒன்று, என் வாழ்க்கை என் எழுத்தில் முழுவதும் விரவிக் கிடக்கிறது. Please 'click' the link
Tamil magazine Tamil news,poem,story,movie & song reviews

மன அழுத்தம் (Depression)

சுவாமி அனுபவானந்தா அவர்கள் அமெரிக்கப் பண்பலை வரிசைக்கு அளித்த நேர்முகம். மன அழுத்தம் (Depression) ஒரு மனிதனை எந்த அளவுக்குப் பாதிக்கிறது, எப்படி அதிலிருந்து தற்காத்துக்கொள்வது என்பதைப் பற்றி தெளிவுபடுத்துகிறார்.
Get this widget | Share | Track details

தலைக்கு ஒரு கோடி

சர்ச்சைக்குரிய "சல்மான் ருஸ்டி" யின் பிரபலமான நாவல் "The Satanic Verses"-ல் இருந்து அவருடைய சொற்பொழிவு. பாகிஸ்தானில் ஒரு வர்த்தக சங்கம் இவரின் தலைக்கு ஒரு கோடி நிர்ணயித்திருக்கிறது.

"சல்மான் ருஸ்டி" யின் நேர்முகம்

எந்தக்காரியம் எப்படி இருந்த போதிலும், அரசியலில், பொதுவாழ்க்கையில் கண்டிப்பாக மனித தருமம் தவிர வேறு எந்தக் கால தர்மமோ, சமய தருமமோ, புகுத்தப்படக் கூடாது என்பது தான் எனது ஆசையேயொழிய உலகத்தில் உள்ள மக்கள் எல்லாம் என் விருப்பப்படி தான் நடக்க வேண்டும் என்பதல்ல.
- பெரியார்

நாலடியார்

1. அறத்துப்பால்

1.2 இளமை நிலையாமை

எனக்குத்தாய் ஆகியாள் என்னைஈங் கிட்டுத்
தனக்குத்தாய் நாடியே சென்றாள் - தனக்குத்தாய்
ஆகி யவளும் அதுவானால் தாய்த்தாய்க்கொண்டு
ஏகும் அளித்திவ் வுலகு.


- சமண முனிவர்கள்

தமிழ் விளக்கவுரை :

என்னை ஈன்றெடுத்த என் தாய், என்னைத்தவிக்க விட்டுவிட்டு அவளைத்தவிக்கவிட்டுச் சென்ற தன் தாயைத் தேடிக்கொண்டு போய்விட்டாள். என் தாயின் தாயாரின் நிலையும் அதுவேதான். இப்படி ஒவ்வொரு தாயும் தன் தாயைத் தேடிக்கொண்டு போவதுதான் உலகநியதி


- ஆதியக்குடியான்

ஆங்கில விளக்கவுரை :

She who was my mother, having borne me in this world, had departed seeking a mother for herself, if this be the case also with her mother, one mother seeking after another mother, then is this world wretched indeed.


- By Rev.F.J.Leeper, Tranquebar

இன்றைய குறள்

துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று

உலகில் இறந்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்று கூறமுடியுமா? அதுபோலத்தான் உண்மையாகவே பற்றுகளைத் துறந்த உத்தமர்களின் பெருமையையும் அளவிடவே முடியாது

அறத்துப்பால் : நீத்தார் பெருமை

June 22, 2007

"பட்டியல்" திரைப்படத்தில் மேஸ்ட்ரோ, "இசைஞானி இளையராஜா" வுடன் பாடிய "தமிழ்ப்பாடகி", இளம்பாடகி ரோஷினியின் நேர்முகம் பகுதி II

'காதலும் நட்பும் ஒன்றுதான்'

ஒரேயொரு இடத்தில் மட்டுமே வித்யாசப்படும்

நட்பு வளர வளர அது ஆணாக இருக்கும் பட்சத்தில் அது தலைமுறையும் தாண்டிய ஒரு உறவாக மாறுகிறது. அதுவே ஒரு பெண்ணாக இருக்கும் பட்சத்தில் அது காதலாக மாறி கல்யாணத்தில் போய் நிற்கிறது. அதுவும் தலைமுறைக்குத் தொடர்கிறது.

இப்போது உங்கள் கேள்விக்கு வருகிறேன், நட்புக்கும் காதலுக்கும் உள்ள ஒரேயொரு வித்யாசம்
  • நட்பால் ஆத்மார்த்தமான அன்பைமட்டுமே பகிர்ந்துகொள்ள முடியும்.

    அதனைத்தேடி யாரும் செல்வதில்லை, தானாக வரக்கூடியது, அல்லது ஏற்படுத்திக்கொள்ளக்கூடியது.
  • ஆனால் காதலால் உடலையும் பகிர்ந்துகொள்ள முடியும்.

அதானால்தான் உடலால் கிடைக்கக்கூடிய இன்னொன்றையும் தேடி காதல் என்ற ஒன்றுக்காக தலைமுறை தலைமுறையாக நாம் அலைகிறோம். இது தவறோ குற்றமோ இல்லை. இது மனித நியதி, ஏன் உயிருள்ள ஜீவராசி ஒவ்வொன்றுக்கும் உரியது. ஆத்மா நம்மால் கட்டுப்படுத்த முடியாத ஒன்று.

அப்படி நம்மால் கட்டுப்படுத்தமுடியுமெனில் அங்கே காதலுக்கு இடமில்லை, அது இறைவனுடைய திருவடி நோக்கிப் பிரயாணிக்கும் ஆன்மீகவழி

- இது ஒரு நண்பரின் கேள்விக்கான என்னுடைய பதில்

தமிழோசை

இன்றைய "BBC" (ஜுன் 22 வெள்ளிக்கிழமை) செய்திகள் கேட்க கீழுள்ள இணைப்பை அழுத்தவும் BBCTamil.com Radio Player

  • Our lives are not what we deserve; they are, let us agree, in many ways deficient.
  • Most of what matters in your life takes place in your absence.
  • In this world without quiet corners, there can be no easy escapes from history, from hullabaloo, from terrible, unquiet fuss.
  • A book is a version of the world. If you do not like it, ignore it; or offer your own version in return.
  • A poet's work is to name the unnameable, to point at frauds, to take sides, start arguments, shape the world, and stop it going to sleep.
  • Be sure that you go to the author to get at his meaning, not to find yours. Books choose their authors; the act of creation is not entirely a rational and conscious one.
  • I do not need the idea of God to explain the world I live in.
  • I hate admitting that my enemies have a point.

- Salman Rushdie

பிரபல எழுத்தாளர் சல்மன் ருஸ்டி-யின் தலையைத் துண்டிப்பவர்க்கு ஒரு கோடி ரூபாய் பரிசு என்று அறிவித்திருக்கிறது பாகிஸ்தான் வர்த்தக சங்கம். இவர் இந்தியாவில் பிறந்த பிரபல எழுத்தாளர். எழுத்துத் துறையில் இவர் ஆற்றிய சேவையைப் பாராட்டிப் பிரிட்டன் அரசு "வீரப்பட்டம்" ஒன்றைச் சமீபத்தில் வழங்கியது. இது பாகிஸ்தானில் வாழும் முஸ்லீம்கள் இடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம். எது எப்படியோ? அவரின் "பொன்மொழிகள்" நமக்குத் தேவை.

விதி என்பது – மிதிக்கப்பட்டவர்களுக்கும், ஒடுக்கப்பட்டவர்களுக்கும், கொதித்து எழாதிருக்கச் செய்யப்பட்ட சதியாகும்

- பெரியார்

64 - வது நாயன்மார்

திருமுருகக் கிருபானந்த வாரியார் அவர்களின் அற்புதச் சொற்பொழிவு : 64 - வது நாயன்மார் என்று போற்றக்கூடிய அளவுக்குப் புகழ்வாய்ந்த அந்த மகானின் குரலை எத்தனைபேர் உண்மையாகவே கேட்டிருப்பர் என்று எனக்குத் தெரியாது. ஆனாலும் எனக்குக் கிடைத்த இந்த சொறிபொழிவின் ஒலிப்பதிவை உங்களோடு பகிர்ந்துகொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். கேட்டுவிட்டுத் தங்களின் மேலான கருத்துக்களை இங்கே பதிவு செய்க.






Powered by eSnips.com

இன்றைய குறள்

ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு

ஒழுக்கத்தில் உறுதியான துறவிகளின் பெருமை, சான்றோர் நூலில் விருப்பமுடனும், உயர்வாகவும் இடம் பெறும்

அறத்துப்பால் : நீத்தார் பெருமை

1. தாய் மொழி தவிர வேறொரு பிடித்த மொழி ?
இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து மொழியுமே பிடிக்கும். குறிப்பாகச் சொல்லவேண்டுமெனில் குழலினிது யாழினிது என்பதம் மக்கள் மழலைச்சொல் கேளாதவர்.

2. நீங்கள் அடிக்கடி ரசிக்கும் ஒரு கலை ?
நமது பாரம்பரியக்கலையான பரதக்கலை

3. ஒரு நட்பு காதாலாக மாறுகிறது. இதை பற்றி உங்கள் கருத்து ?
காதலும் நட்பும் ஒரேயொரு இடத்தில் மட்டுமே வித்யாசப்படும். மற்றபடி இரண்டுமே ஒன்றுதான்


4. நீங்கள் அடிக்கடி திட்டும் நபர், திட்டு வாங்க கூடிய நபர் ?
என்னைத்தான். திட்டு வாங்குவது நான்தான்.


5. திமுரு பற்றி உங்களுடைய கருத்து ?
அது ஒவ்வொரு தமிழனுக்கும் இருக்கவேண்டிய ஒன்று

June 21, 2007


"மனசே ரிலேக்ஸ் ப்ளீஸ்" என்றாலே சுவாமி சுகபோதானந்தா அவர்களின் நினைவுதான் அனைவருக்கும் வருமென்பதில் ஐயமில்லை. அவர் நம்மோடு பகிர்ந்துகொள்கிறார். ஒவ்வொருவரும் கேட்கவேண்டிய ஒலிப்பதிவு இது.
Powered by eSnips.com

தமிழோசை

தமிழ்நெட் முடக்கத்திற்கும் தமக்கும் எவ்வித தொடர்புமில்லை என கூறுகிறது இலங்கை அரசு : விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு ஆதரவான இணையத் தளமாகக் கருதப்படும் தமிழ்நெட் இணைய தளத்தை கடந்த சில தினங்களாக இலங்கை அரசு முடக்கியுள்ளதாக கூறப்படும் பரவலான குற்றச்சாட்டினை இலங்கை அரசு மறுத்துள்ளது. இன்றைய (ஜுன் மாதம் 21 - ம் தேதி வியாழக்கிழமை) "BBC" செய்தி கேட்க கீழுள்ள இணைப்பை அழுத்தவும் BBCTamil.com Radio Player

"பட்டியல்" திரைப்படத்தில் மேஸ்ட்ரோ, இசைஞானி இளையராஜா'வுடன் பாடிய தமிழ்ப்பாடகி, இளம்பாடகி ரோஷினியின் நேர்முகம் பகுதி I

நாலடியார்

1. அறத்துப்பால்

1.1. செல்வம் நிலையாமை

அறுசுவை யுண்டி அமர்ந்தில்லாள் ஊட்ட
மறுசிகை நீக்கியுண் டாரும் - வறிஞராய்ச்
சென்றிரப்பர் ஓரிடத்துக் கூழ்எனின், செல்வம்ஒன்று

உண்டாக வைக்கற்பாற் றன்று


- சமண முனிவர்கள்


தமிழ் விளக்கவுரை :

ஆறு விதமான சுவை படைத்த உணவை, அருகே அமர்ந்து, தன் இன்ப மனைவி, தன் கையால் கொடுக்க, அந்த உணவின் மறுபகுதியைத் தொடுவதற்கு முன்னர், வறுமை வந்து, எல்லாம் இழந்து, இன்னொரு இடத்துக்குப் பிச்சை எடுக்கப் போய்விடுவார். அளப்பரிய செல்வம் சேர்ந்து இருப்பினும் ஒன்றுமில்லாத நிலையே!

- ஆதியக்குடியான்


ஆங்கில விளக்கவுரை :


CHAPTER 1.--Unstable Wealth.

Even those who have eaten of every variety of food of six flavours laid before them by their wives with anxious attention, not taking a second portion from any dish, may yet become poor and go and beg somewhere for pottage. Verily riches are but seeming, not to be considered as actually existing.

Translation of Selected Verses by
Rev.F.J.Leeper, Tranquebar

இன்றைய குறள்

நீரின் றமையா துலகெனின் யார்யார்க்கும்
வானின் றமையா தொழுக்கு

உலகில் மழையே இல்லையென்றால் ஒழுக்கமே கெடக்கூடும் என்ற நிலை இருப்பதால், நீரின் இன்றியமையாமையை உணர்ந்து செயல்படவேண்டும்.

அறத்துப்பால் : வான்சிறப்பு