November 14, 2007

இன்றைய குறள்

துறந்தாரின் தூய்மை யுடையர் இறந்தார்வாய்
இன்னாச்சொல் நோற்கிற் பவர்

எல்லை கடந்து நடந்து கொள்பவர்களின் கொடிய சொற்களைப் பொறுத்துக் கொள்பவர்கள் தூய்மையான துறவிகளைப் போன்றவர்கள்

அறத்துப்பால் : பொறையுடைமை

"மன்மத ராசா" மாலதி

தாக்குப் பிடிக்கும் தன்மையை - டோனி

"பக்கத்து ஊரில் ஆடப் போவதாக இருந்தாலும் நடந்து போய்த்தான் ஆடுவோம். அப்போது அப்படி நடந்து சென்றதுதான் இன்று எனக்கு இவ்வளவு தாக்குப் பிடிக்கும் தன்மையை (ஸ்டாமினாவை) கொடுத்துள்ளது. 5 நாட்கள் மைதானத்தில் ஓடினாலும் தளராத சக்தியைக் கொடுத்துள்ளது" - மஹேந்திர சிங் டோனி

சாக்குப் பையில் சுற்றப்பட்டு மரத்தடியில் அனாதையாக விடப்பட்ட இரண்டு வயது குழந்தை

  • தமிழ் நாட்டில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தை கைவிடப்பட்டது. தமிழ்நாட்டின் தர்மபுரி மாவட்டத்தில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட இரண்டு வயது குழந்தை ஒன்று, சாக்குப் பையில் சுற்றப்பட்டு மரத்தடியில் அனாதையாக விடப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த குழந்தையை தற்போது பராமரித்து வரும் தர்மாஸ் என்கிற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் இயக்குநர் பி.எஸ் வேல்முருகன் அவர்கள் தமிழோசையிடம் பிரத்தியேகமாக வெளியிட்ட கருத்துக்களை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.
  • குரங்குகளின் கருக்கள் உயிர்ப்பிரதியாக்கம் செய்யப்பட்டு சாதனை : மனிதர்கள் மற்றும் அவர்களுடைய மிக நெருங்கிய உயிரினங்கள் உள்ளடங்கிய பாலூட்டிகள் வகையைச் சேர்ந்த குரங்கு இனங்களின் கருக்களை குளோனிங் எனப்படும் உயிர்ப்பிரதியாக்கத்தின் மூலம் உருவாக்கியுள்ளதை விஞ்ஞானிககள் உறுதிப்படுத்தியுள்ளனர்
  • பாகிஸ்தானில் இம்ரான் கான் கைது : லாகூரில் மாணவர்களின் ஆர்ப்பாட்டம் ஒன்றில் உரையாற்ற முயன்றபோது, பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கட் ஆட்டக்காரரான இம்ரன்கானை, பாகிஸ்தான் பொலிஸார் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்
  • பிரான்ஸில் பணியாளர்கள் வேலை நிறுத்தம் : வேலை நிறுத்தம் காரணமாக ஆளில்லாமல் பாரிஸ் நகரின் சுரங்கப் பாதை ஒன்று பிரான்ஸ் நாட்டின் ரயில் மற்றும் எரிசக்தித்துறை பணியாளர்களின் வேலை நிறுத்தம் காரணமாக, பரவலான பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது
  • பிரான்ஸுக்கு எதிராக சாட் நாட்டில் ஆர்ப்பாட்டம் : பிரான்ஸ் நாட்டுக்கு, நூற்றுக்கும் அதிகமான ஆபிரிக்க குழந்தைகளை பிரான்ஸ் தொண்டர் அமைப்பு ஒன்று அழைத்துச் செல்ல முயன்ற விவகாரம் தொடர்பில், பிரான்ஸுக்கு எதிராக சாட் நாட்டின் தலைநகர் இன்ஞமீனாவில் பல்லாயிரக்கணகான மாணவர்கள் வன்செயல் ஆர்ப்பாட்டத்தில் இறங்கியுள்ளனர்
  • பர்மாவை இன்னுமொரு இராக்காக அனுமதிக்க முடியாது என்று சீனா கூறுகிறது : பர்மாவில் இயற்கை வளமான இரத்தினக் கற்கள்பர்மாவில் ஜனநாயக ஆதரவு போராட்டங்களை ஒடுக்கியதற்காக அதன் மீது பொருளாதரத் தடைகளை விதிக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து சீனா கடுமையாக எச்சரித்துள்ளது
  • இலங்கையிலிருந்து வளைகுடா நாடுகளுக்கு வேலைக்கு செல்பவர்கள் பெருத்த துன்பங்களை எதிர்கொள்கிறார்கள் என மனித உரிமை அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது : இலங்கையிலிருந்து மத்திய கிழக்கு மற்றும் வளைகுடா நாடுகளில் வீட்டு வேலைக்காக செல்பவர்கள் மிகுந்த துனபங்களுக்கு உள்ளாவதாக மனித உரிமை அமைப்பான ஹுயூமன் ரைட்ஸ் வாட்ச் அமைப்பு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. இலங்கையிலிருந்து குவைத், லெபனான், ஐக்கிய அரபு இராஜ்ஜியம் போன்ற நாடுகளுக்கு பணிக்கு செல்லும் பெண்கள் நாளொன்றுக்கு 18 முதல் 20 மணி நேரம் வரை வேலை செய்யும்படி வற்புறுத்தப்படுகிறார்கள் என்றும் அவர்களது கடவுச்சீட்டு உட்பட பல ஆவணங்களை பணிக்கு அமர்த்துபவர்கள் பறித்து வைத்துக் கொள்வதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த நாடுகளில் குறிப்பிட்ட வேலை வாங்கித் தருவதாகக் கூறி, அங்கு சென்ற பிறகு வேறொரு வேலையில் இவர்கள் அமர்த்தப்படுகிறார்கள் என்றும், இதற்கு இலங்கையிலிருந்து செயல்படும் வேலை வாய்ப்பு தரகர்களே காரணம் என்றும் அந்த அமைப்பு தனது அறிக்கையில் கூறியுள்ளது. இது தொடர்பாக, ஹ்யூமன் ரைட்ஸ் வாட்ச் அமைப்பின் அதிகாரி, இலங்கையின் பிரதி வெளிநாட்டு அமைச்சர், பாதிக்கப்பட்ட ஒருவர் என பலதரப்பட்டவர்களின் கருத்துக்களை உள்ளடக்கி எமது கொழும்புச் செய்தியாளர் கருணாகரன் தயாரித்து வழங்கும் பெட்டகத்தை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம் http://www.bbc.co.uk/tamil/2115.ram
  • மன்னார் பகுதியில் மக்களை வெளியேறக் கூறி துண்டுப் பிரசுரங்கள் : இலங்கையின் வடமேற்கே மன்னார் நகரம் மற்றும் வங்காலை பிரதேசத்தில் இராணுவ முகாம்களுக்கு அருகில் வசிப்பவர்கள் எதிர்வரும் 27 ஆம் திகதியை முன்னிட்டு, உடனடியாக வெளியேறி 5 கிலோ மீற்றர் தொலைவுக்கு அப்பால் செல்லுமாறு விடுதலைப் புலிகளின் தற்கொலைப்படைப் பிரிவினர் என்று கூறப்படுபவர்களால், துண்டுப் பிரசுரங்கள் மூலமாகக் கோரப்பட்டிருப்பதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்துள்ளது
  • ஆப்பிரிக்காவில் பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டுள்ளது-உலக வங்கி : ஆப்பிரிக்காவில் பெரும்பாலான நாடுகளில் பொருளாதார வளர்ச்சிகள் ஏற்பட்டுள்ளன என்று உலக வங்கி கூறியுள்ளது. இந்த வளர்ச்சியானது அங்கு வறுமையை ஒழித்து சர்வதேச அளவில் முதலீடுகளைப் பெற உதவும் என்றும் அது கூறியுள்ளது. சராசரியாக அங்கு பொருளாதாரம் ஐந்து சதவீத அளவில் வளர்ச்சியடைந்து வருகிறது என்று அதன் அறிக்கையில் கூறியுள்ளது
  • இன்றைய (நவம்பர் 14 புதன்கிழமை 2007) "பிபிசி" தமிழோசை செய்திகள் கேட்க இணைப்பில் செல்க http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml?tamil_worldnews

November 13, 2007

புற்றுநோய் வருவதற்கான காரணங்கள்

உணவுப் பழக்க வழக்கங்கள் குறித்து 25,000 பேர் பங்குபெறும் சுற்றாய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இன்றைய அனைவர்க்கும் அறிவியல் நிகழ்ச்சியில், புற்றுநோய் குறித்த சமீபத்திய ஆய்வு முடிவுகள் பற்றிய செய்திகள் இடம்பெறுகின்றன. மனிதர்கள் சாப்பிடும் உணவுக்கும், செய்கிற உடற்பயிற்சிக்கும் அவர்களுக்கு ஏற்படக் கூடிய புற்றுநோய்களுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு இருப்பதாக உலக புற்றுநோய் ஆராய்ச்சி நிதியம் என்கிற அமைப்பு சமீபத்தில் வெளியிட்ட ஆய்வு முடிவுகளில் தெரிவித்திருக்கிறது. அதாவது, கொழுப்புச்சத்து அதிகமுள்ள உணவை சாப்பிடுவதாலும், போதுமான உடற்பயிற்சி செய்யாமலிருப்பதாலும், அதிகமான உடல் பருமனாக இருப்பதாலும் புற்றுநோய்கள் வரும் வாய்ப்புகள் அதிகரிப்பதாக இந்த ஆய்வு கூறுகிறது. இந்த ஆய்வு முடிவுகள் குறித்து, சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவ மனையின் இரைப்பை மற்றும் குடல் சார்ந்த நோய்கள் துறையின் தலைவர் மருத்துவர் பிரசாத் ராவ் அவர்களின் செவ்வி : "பிபிசி" இன்றைய அனைவர்க்கும் அறிவியல் பகுதியில் கேட்கலாம் http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml?tamil_worldnews

சட்டமாக்குங்கள்

  • பெண்களின்
    திருமண வயதை
    இன்னும் கொஞ்சம்
    அதிகப்படுத்துங்கள்!
  • குடிசையில் வாழும்
    கோல மயில்களுக்கு
    இங்கே மாதவிடாய் நின்றும்
    மணமகன்கள் வரவில்லை!!
  • இவர்கள் இராமன்
    கால்படக் காத்திருந்த
    அகலிகைகள் இல்லை!
    இராவணன்களுக்காகக்
    காத்திருக்கிறார்கள்
    கடத்தியாவது செல்வார்களென்று!!!
  • தயவு செய்து
    பெண்களின்
    திருமண வயதை
    அதிகப்படுத்துங்கள்!
சூரகுடி பாலா - சென்னை

இன்றைய குறள்

மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தந்
தகுதியான் வென்று விடல்

ஆணவங் கொண்டு அநீதி விளைவிப்பவர்களை, நாம் நம் பொறுமைக் குணத்தால் வென்றுவிடலாம்

அறத்துப்பால் : பொறையுடைமை

மனதைக் கட்டுப்படுத்த கடவுள் சிந்தனையை வளர்க்க வேண்டும்" - சத்யசாய்

"உணவு தேடி வயலுக்கு செல்லும் பசுவை வீட்டுக்கு திரும்ப கொண்டு வர, அது எந்த வகையான உணவை நாடிச் செல்கிறது என்பதை அறிந்து கொண்டு, அதைவிடச் சுவையான சிறந்த உணவை வீட்டிலேயே அளிக்க முற்படுகிறோம். இதனால் அப்பசு நாளடைவில் வெளியே செல்லும் வழக்கத்தையே விட்டுவிடுகிறது. அதுபோல நாமும், வெளியே திரிய ஆசைப்படும் மனதை கட்டுப்படுத்த கடவுள் சிந்தனையை வளர்க்க வேண்டும்" - சத்யசாய்

மணமகன்: செல்வகுமார், மணமகள்: நாய்

  • காங்கிரஸ் இடதுசாரிகள் இடையிலான கருத்துவேறுபாடுகளில் திருப்புமுனை சமரசமா? சர்ச்சைக்குரிய இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் குறித்து இந்தியாவின் ஆளும் கூட்டணிக்கு தலைமை தாங்கும் காங்கிரஸ் கட்சிக்கும் கூட்டணி அரசை வெளியிலிருந்து ஆதரிக்கும் இடது சாரிகளுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் குறித்து நேயர்கள் அறிவார்கள். இன்று இந்த விஷயத்தில் ஒரு திருப்பம் ஏற்பட்டுவிட்டதாகவும், இந்திய அரசு இந்த ஒப்பந்தம் குறித்து மேலதிக பேச்சுவார்த்தைகளை சர்வதேச அணு சக்தி நிறுவனத்துடன் நடத்தலாம்; ஆனால் இறுதி முடிவை தங்களிடம் கலந்தாலோசித்த பிறகே எடுக்கவேண்டும் என்றும் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளதாகவும் இன்று இந்திய செய்தி நிறுவனங்கள் பல கூறின
  • பாகிஸ்தானில் அவசரநிலைக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை தடுக்க நடவடிக்கை : பாகிஸ்தானிய எதிர்க்கட்சித் தலைவியாகிய பேநசிர் பூட்டோ அவர்களால் திட்டமிடப்பட்ட, அவசர நிலைக்கு எதிரான பாரிய போராட்டங்களை தடுக்கும் நோக்கில், அந்நாட்டு அரசு முக்கிய பாதுகாப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது
  • மன்னார் மடு தேவாலயப் பகுதியில் எறிகணை வீச்சு : இலங்கையின் வடமேற்கே மன்னார் மாவட்டத்தில் மடு தேவாலயப் பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை மாலை எறிகணைகள் விழுந்து வெடித்ததாகவும், அதில் ஒரு சிறுவனும் வயோதிபப் பெண்ணும் காயமடைந்ததாகவும் தேவாலயத்தில் இருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன
  • திருகோணமலை மோதல்களில் புலிகள் மூவர் கொல்லப்பட்டதாக இலங்கை தேசிய பாதுகாப்பு ஊடக மையம் தகவல் : இலங்கையின் கிழக்கே திருகோணமலை மாவட்டத்தில் இலுப்பைக்குளம் பகுதியில் நேற்று திங்கட்கிழமை பின்னிரவு வேளை, அரசாங்கப் படையினர் மேற்கொண்ட தாக்குதல் நடவடிக்கையின்போது விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்த மூவர் கொல்லப்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்பிற்கான ஊடக மையம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருகின்றது
  • இராக், ஆப்கானிஸ்தான் யுத்த செலவுகள் நினைத்ததற்கு இருமடங்காய் அதிகரித்துள்ளதாக கூறுகிறது ஜனநாயகக் கட்சி : யுத்தங்களினால் அமெரிக்காவுக்கு செலவு அதிகம் என்கிறது ஜனநாயகக் கட்சிஇராக்கிலும், ஆப்கானிஸ்தானத்திலும் அமெரிக்கா நடத்திவரும் போர்களுக்கான செலவு முன்பு நினைத்திருந்ததை விட இரண்டு மடங்காக உயர்ந்திருப்பதாக அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நடத்திய ஆய்வு தெரிவிக்கிறது
  • மணமகன்: செல்வகுமார், மணமகள்: நாய் - தமிழ்நாட்டில் பெண் நாய் ஒன்றை இந்துமத சடங்கு முறைகளின்படி திருமணம் செய்துள்ளார் செல்வகுமார் என்பவர். இரண்டு நாய்களை தான் கல்லால் அடித்துக் கொன்றமைக்கு நாயை மணப்பதால் பிராயச்சித்தம் கிடைக்கும் என்று அவர் நம்புகிறார். நாய்களை கொன்றதன் பிறகு தான் சபிக்கப்பட்டதாகவும், பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டதாகவும், காது கேட்காமல் போனதாகவும் செல்வகுமார் கூறுகின்றார். கோயில் ஒன்றில் நடந்த இத்திருமணத்தில் மணப்பெண்ணான நாய் செம்மஞ்சள் புடவை உடுத்தி, மலர் மாலை அணிந்திருந்தது. திருமண விருந்தாக அதற்கு ரொட்டித் துண்டும் கொடுக்கப்பட்டது

வயித்துக்காக சிறுவன் இங்கே மூங்கில் கம்பத்தில் நடக்கிறான்

அடேங்கப்பா...! மூக்கில் விரல் வைக்க வைத்த "மூங்கில் கால்' சிறுவன்! - கோவை : நேற்று மாலை 4.00 மணி. பகல் முழுதும் சுட்டெரித்து, மலைமுகட்டில் சூரியன் பதுங்க போகும் வேளை. பள்ளி, கல்லூரி முடிந்து வீடு திரும்பும் மாணவ, மாணவியரும், பணி முடிந்து செல்வோரும் பெரியகடைவீதி பஸ் ஸ்டாப்பில் பஸ் பிடிக்க முண்டியடித்துக் கொண்டிருந்தனர். மாலை நேரம் என்பதால் ரோட்டில் வாகனப் போக்குவரத்து அதிகமாயிருந்தது. போலீசார் தங்கள் பங்குக்கு, போக்குவரத்தை ஒழுங்கு படுத்திக்கொண்டிருக்க... பலரது பார்வையையும் ஈர்த்தது அந்த காட்சி. சுமார் 11 அடி உயரமுடைய இரு மூங்கில்களை "கால்'களாக்கி, "ஹாயாக' ரோட்டில் நடந்து வந்தான் சிறுவன். சட்டை பாக்கெட்டின் வெளிப்புறம் 50, 100 ரூபாய் நோட்டுகளை "குண்டூசி'யால் தைத்து பலரது பார்வையிலும் படும் வகையில் தொங்க விட்டிருந்தான். "என்ன வேண்டுதலோ? எவர் பெற்ற பிள்ளையோ?' என மூக்கில் விரல் வைத்து பெரிசுகள் முணு, முணுக்கப் பார்த்தோர் வியந்தனர்.

தலைக்கு மேல் செல்லும் உயர் அழுத்த மின் கம்பிகளுக்கு ஈடாக, சாலையில் மெதுவாக மூங்கிலின் மேல் "தவழ்ந்து' சென்றான் அச்சிறுவன். பஸ்சில் சென்றவர்கள் கூட தலையை வெளியே நீட்டி, சூரியனை தரிசிப்பதை போல, உயரே பார்த்தனர்...பக்கவாட்டில் வரும் வாகனத்தில் தலை சிக்கினால் உயிருக்கு உலை வந்துவிடுமே, என்ற கவலை சிறிதும் இன்றி. டூ வீலரில் சென்றவர்கள் வாகனத்தை நிறுத்திவிட்டு, வேடிக்கை பார்க்க பெரியகடைவீதியில் கூடியது கூட்டம். பள்ளி சிறுவர்கள், 11 அடி உயர மூங்கில் சிறுவனை அன்னார்ந்து பார்த்து, ஆச்சரியப்பட்டனர். சுற்றி நின்று கைவலிக்க கரவோசை எழுப்பினர். அப்போது, மூங்கில் சிறுவனுடன் "கீழே நடந்து சென்ற' இன்னொரு சிறுவன், வேடிக்கை பார்ப்போரிடம் பரபரப்புடன் "சில்லறை'களை சேகரித்தான். "காசு பார்க்க' இப்படியும் ஒரு வழியா, என அப்போதுதான் புரிந்தது பலருக்கும். இவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என பலருக்குள்ளும் எழுந்தது கேள்வி. கேட்டு, விளக்கம் பெறத்தான் யாருக்கும், நேரமில்லை. அந்த குறையை போக்குகிறது, மூங்கில் சிறுவனின் இந்த பேட்டி:

எனது பெயர் பீரு (11). தந்தை தாராஜன், தாயார் இஷா. சொந்த ஊர் ராஜஸ்தான். என்னுடன் பிறந்தவர்கள் ஆறு சகோதரிகள், நான்கு சகோதரர்கள். நாங்கள் அனைவருமே, உயரமான மூங்கிலில் கால்களை கட்டிக்கொண்டு "உயரே' நடக்கும், பயிற்சி பெற்றுள்ளோம். ஊர், ஊராக "இப்படி' நடந்து சென்று, பொதுமக்களிடம் பைசா வசூலித்து பிழைப்பு நடத்தி வருகிறோம். சென்னையில் இருந்து 20 நாட்களுக்கு முன் கோவைக்கு வந்தோம். தற்போது, ஈச்சனாரியில் தங்கியிருந்து, பல பகுதிகளுக்கும் "இப்படி' சென்று வருகிறோம். சாதாரணமாக காசு கேட்டால் யாரும் தரமாட்டார்கள். இதுபோன்று வித்தியாசமான முறையில் ஏதாவது செய்தால்தான் ஆச்சர்யப்பட்டு, மக்கள் பணம் கொடுப்பார்கள். தினமும் ஏதோ 200-லிருந்து 300-ரூபாய் வரை கிடைக்கும். தம்பி ராம்கிஷன் என்னுடன் வந்து பணம் வசூலிப்பான். மூங்கில் மீது நடப்பதால் கால் வலிக்காதா, என பலரும் என்னிடம் கேட்கின்றனர், வயிற்று பிழைப்புக்காக எல்லாம் பழகிவிட்டது. இவ்வாறு, பீரு தெரிவித்தான்.

புலிகளுக்கு இனி போதாத காலம்தான்

சர்வதேச அளவில் புலிகளின் ஆயுத கடத்தல் `நெட்வொர்க்' - அமெரிக்காவில் இருந்து எல்லா நாடுகளிலும் ஆட்கள் நடமாட்டம் : அவர் முழுப்பெயர் என்ன என்று யாருக்கும் தெரியாது. கே.பி., என்று கூப்பிடுகின்றனர். பார்த்தால் சாப்ட்வேர் நிபுணர் போல இருக்கிறார்; குறுந்தாடி, சிறிய அளவில் திருத்திய மீசை, அதிகம் பேசுவதில்லை.அமெரிக்காவில் இருந்து பல நாடுகளில் அவருக்கு தொடர்புகள் உண்டு; மொத்தத்தில் ஜேம்ஸ் பாண்ட் பட வில்லன் போல இவர் இருப்பார்!விடுதலைப்புலிகளுக்கு ஆயுதங்களை, பல நாடுகளில் இருந்து வாங்கி, அனுப்பி வந்தவர் அவர் தான். அவர் இத்தனை ஆண்டுகள் நடத்தி வந்த, `புலிகளின் சர்வதேச ஆயுத கடத்தல் நெட் வொர்க்'கை, அமெரிக்கா துணையுடன் முதன் முறையாக இலங்கை அரசு தகர்த்து உள்ளது. ஆனால், முழுமையாக தகர்த்து விட்டதா என்பதே கேள்விக்குறி.புலிகளுக்கு ஆயுதங்கள் வந்த வண்ணம் தான் இருக் கின்றன. எங்கிருந்து வருகிறது... யார் அனுப்புகின்றனர்... எப்படி புலிகள் கைக்கு சேருகிறது என்பது இதுவரை தெரியாமல் இருந்தது. சில மாதங்களாக, அமெரிக்கா, பிரிட்டன், கனடாவில் சிலர் கைது செய்யப்பட் டாலும், புலிகளின் முக்கிய ஆட்களோ, இடைத்தரகர் களோ சிக்கவில்லை. விழுந்தது முதல் அடி:
அமெரிக்காவில், சில மாதங்களாக, ஏ.டி.எம்., மிஷின்கள் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டு வந்தது. அவர் களை கண்டுபிடித்து போலீஸ் கைது செய்தது. அதுபோல, சில அமெரிக்க அதிகாரிகளுக்கு லஞ்சம் தர முயன்றதாக சிலரை கைது செய்தனர். இவர்கள் எல்லாம், இலங்கையை சேர்ந்தவர்கள், புலிகளுக்கு உதவுபவர்கள் என்று போலீசார் கண்டுபிடித்தனர். விடுதலைப்புலிகள் இயக் கத்தை, பயங்கரவாத அமைப் புகளின் பட்டியலில் அமெரிக்கா சேர்த்து உள்ளது. பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்றுதான், அமெரிக்க அதிகாரிகளுக்கு லஞ்சம் தர முயன்றுள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து, விரிவான விசாரணைக்கு அமெ ரிக்க அரசு உத்தரவிட்டது. அதன் பேரில், சர்வதேச அளவில் விடுதலைப்புலிகளின் `நெட்வொர்க்' பற்றி விசாரணை நடத்தப்பட்டது. அதில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன.
விசாரணையில் தெரியவந்துள்ள தகவல்கள்: இலங்கையில் இருந்து தமிழ்ப்பகுதிகளை பிரித்து, தனி ஈழம் என்ற பெயரில் தனி நாடு உருவாக்க வேண்டும் என்று, விடுதலைப்புலிகள் 24 ஆண்டுகளாக போராடி வருகின்றனர். அவர்களுக்கு பல நாடுகளில் இருந்து சட்டவிரோதமாக ஆயுதங்கள் வருகின்றன. ஆனால், அவற்றை தடுக்க இலங்கை அரசால் முடியவில்லை. வெளிநாடுகளில் உதவி: புலிகளுக்கு ஆதரவாக, இலங்கைத் தமிழ் அகதிகள், புலிகளின் அபிமானிகள் ஆகியோர் உதவியுடன், சர்வதேச அளவில் `ஆயுத கடத்தல் நெட்வொர்க்' ஏற்படுத் தப்பட்டுள்ளது. இதில், புலிகளுக்கு சில இடைத்தரகர்கள் உதவுகின்றனர். பிரிட்டன், கனடா போன்ற நாடுகளில், சிலர் பைனான்ஸ் செய்தும் வருகின்றனர். லண்டன் வால் ஸ்ட்ரீட் பகுதியை சேர்ந்த ஒரு பிரபல பைனான்சியர் மீது அமெரிக்க அதிகாரிகள் கண் வைத்தனர். அவரை கைது செய்ய தயாரான போது, அவர் தலைமறைவாகி விட்டார். புலிகளுக்கு, அவர் ஆயுதம் வாங்க பைனான்ஸ் செய்துள்ளார். இவரை போன்று பல நாடுகளிலும், புலிகளுக்கு ஆட்கள் உள்ளனர். யார் அந்த `பி?' அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ் திரேலியாவில், புலிகளுக்கு ஆதரவாக பல துறைகளின் நிறுவனங்கள், பல கலை, கலாசார அமைப்புகள், விளையாட்டு அமைப்புகள் உள்ளன. வெளியில் பார்த் தால், புலிகளின் ஆதரவில் தான் இயங்குகின்றன என் பது தெரியாது. ஆனால், புலிகளுக்கு ஆயுத, போதை கடத்தல், பணம் பறிப்பு, கொள்ளையடிப்பு போன்ற விஷயங்களில் துல்லியமாக செயல்படும் அளவுக்கு, இந்த அமைப்புகளில் ரகசியமாக சிலர் இருக்கின்றனர். இப்படித்தான், நியூயார்க்கில் ஒருவரை போலீசார் கைது செய்தனர். அவர் பெயர், `பி' என்று மட்டும் தரப்பட்டுள்ளது. அவர் பெயரை முழுமையாக சொல்ல போலீஸ் தயாரில் லை. இன்னும் சிலர் கைது செய்யப்பட வேண்டும் என்பதால், அவர் பெயர் மறைக் கப்படுகிறது. இன்னொருவர், இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டார். விமான நிலையத் தில், `லேப்-டாப்' கம்ப்யூட்டர் சகிதம் அவர் கைது செய்யப்பட்டபோது, சாப்ட் வேர் இன்ஜினியர் என்று தான் அறிமுகப்படுத்திக்கொண்டார். ஆனால், அவர் புலிகளின் நேரடி ஏஜென்ட் என்று விசாரணையில் தெரிந்தபோது, அதிகாரிகளே அதிர்ந்துவிட்டனர். ஆயுத நிறுவனத்திடம் ஆர்டர் தர தயார் செய்யப்பட்ட பல கோடி பணத்தை போலீசார் கைப்பற்றினர். சீனா, கென்யா, கொழும் புக்கு கடந்த ஐந்தாண்டில், 100 முறை போய் வந்ததற்கான ஆதாரங்கள் சிக்கின.
மூன்று ஆர்டர்கள்: இப்படி பல நாடுகளில், பல ஏஜென்ட் கள், இடைத்தரகர்கள் மூலம் ஆயுதங்களை வாங்கி, புலிகளுக்கு அனுப்பியிருந்தவர் தான் கே.பி.,! அவர் கைது செய்யப்பட்டதாக சொன்னாலும், உண்மையில் அவர் சிக்கவே இல்லை என்றும் அமெரிக்க தரப்பில் கூறப்படுகிறது. கொள்ளை, பணம் பறிப்பு, ஆள் கடத்தல் மூலம் கோடிகளை குவிக்கும் விடுதலைப்புலிகள், சட்டப்படி ஆயுதங்கள் வாங்குவதற்காக சம்பந்தமே இல்லாத யார் பெயரிலோ பணத்தை, சர்வதேச ஆயுத நிறுவனத்துக்கு செலுத்தும். அதற்கான ஆவணங்களையும் தயார் செய்யும். இப்படித்தான், சமீபத்தில், ஆயுதங்கள் வாங்குவதற்காக, மூன்று ஆர்டர்களை புலிகள் அமைப்பு அளித்திருந்தது. அதற்கான, ஆவணங்களை சட்டப்படி தயார் செய்தனர் ஏஜென்ட்கள். இடைத்தரகர்கள், ஆயுத நிறுவனத்தில் பேசி, அந்த ஆர்டர்களில் இரண்டை முதலில் செயல்படுத்த வைத்தனர்.
சீன துறைமுகத்தில்: ஆயுத நிறுவனத்தில் இருந்து இரண்டு கப்பல் முழுக்க ஆயுதங்கள், சீனாவில் உள்ள டியான்ஜின் என்ற துறைமுகத்தில் ஏற்றப்பட்டன. அந்த கப்பல்கள், அங்கிருந்து, நேரடியாக, இந்தோனேசியாவுக்கு போயின. அங்கு, ஏற்கனவே புலிகளின் இடைத்தரகர்கள் இருப்பதால், அவர்கள் தலையிட்டு, போலி ஆவணங்களை காட்டி, அதிகாரிகளை சம்மதிக்க வைத்தனர். வழக்கமாக, தாய்லாந்து, இந்தோனேசியா கொண்டு வரப்படும் ஆயுத கப்பல்கள் அங்கு நிறுத்தப்பட்டு, அங்கிருந்து புலிகளின் சிறிய படகுகளில் ஆயுதங்கள் ஏற்றப்படும். சர்வதேச கடல் எல்லையில் இலங்கை கடற்படையினர் கண்காணிப்பு இருக்காது. அதனால், அங்கிருந்து தப்பி, கடற்படை கண்காணிக்காத நேரம் பார்த்து, இலங்கை கடலில் படகுகள் நுழையும்.
படகுகள் மூலம்: இப்படி சிறிய படகுகளில் ஆயுதங்கள் வருவதை கண்டுபிடித்தபோது, அவற்றை குண்டு வீசி இலங்கை கடற்படை அழித் துவிடும். அப்போது மட்டும், மற்ற படகுகளை அனுப்பாமல், இடைத்தரகர்கள் நிறுத்திவிடுவர். சில நாள் கழித்து, மீண்டும் சிறிய படகுகளில் ஆயுதங்கள் கடத்தப்பட்டு, புலிகள் கைக்கு போய்ச்சேரும். இரண்டு ஆர்டர்கள் மூலம் புலிகளுக்கு கிடைத்த ஆயுதங்களை இலங்கை கடற்படையினர் தடுக்க முடியவில்லை. மூன்றாவது ஆர்டரை கண்டுபிடித்து, இலங்கை அதிபர் வேண்டுகோள் விடுக்க, ஆயுத ஆர்டரை ஆயுத நிறுவனம் ரத்து செய்துவிட்டது.
ஒடுங்கும் நாள்: இருந்தாலும், புலிகளுக்கு சர்வதேச அளவில் இன்னமும் அமெரிக்கா உட்பட எந்த நாடும் கடும் எதிர்ப்பு தெரிவித்து, அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தீவிரம் காட்டவில்லை. அமெரிக்கா போன்ற பணக்கார நாடுகளின் கவனம், அல் - குவைதா பயங்கரவாதிகள் மீதுதான் உள்ளது. மேலும், இலங்கைக்கு சர்வதேச அளவில் ஆதரவும் இல்லை. இலங்கை விஷயத்தில் இந்தியாவை மீறி தலையிடவும் யாரும் தயாரில்லை. அல் - குவைதா விவகாரத்துக்கு பின்தான், புலிகள் விஷயத்தில் அமெரிக்கா முழுமையாக இறங்கும் என்று தெரிகிறது. மேலும், புலிகள், தனி நாடு கேட்டு போர் செய்து வருவதால், ஐரோப்பிய நாடுகளின் ஆதரவு உள்ளது. இப்படி சில குழப்பங்கள் உள்ளதால், அதை பயன்படுத்தி, சர்வதேச அளவில் புலிகள், இன்னமும் ஆயுத கடத்தலில் ஈடுபட்டுத்தான் வருகின்றனர். சர்வதேச ஆயுத கடத்தல் முற்றிலும் ஒடுக்கப்படும் போது, புலிகள் சுருதி அறவே ஒடுங்கி விடும் என்பது நிச்சயம்.
ஆண்டுக்கு 1,500 கோடி குவியுது விடுதலைப்புலிகளுக்கு எப்படி பணம் வருகிறது? இந்த கேள்விக்கு பதில், அவர்கள் பணம் பறிப்பு, கடத்தல் போன்றவற்றின் மூலம் திரட்டுகின்றனர் என்று சொல்லி விடலாம். ஆனால், அதையும் தாண்டி, பல நாடுகளில் லட்சக்கணக்கில் உள்ள இலங்கைத் தமிழர்களிடம் இருந்தும் பணம் கிடைக்கிறது. சிலரிடம் மிரட்டி, சிலரிடம் அன்பாகவும் பணம், புலிகளுக்கு வருகிறது. இந்த பணத்தை சேகரிப்பதும், அவர்களின் ஏஜென்ட்கள்தான். ஆயுதங்கள் வாங்க மட்டும், இடைத்தரகர்கள் பயன்படுத்தப்படுகின்றனர்.
புலிகள் மற்றும் இலங்கைப் பிரச்னை பற்றிய முக்கிய தகவல்கள்: இலங்கையில், தமிழ் ஈழம் கோரி, 24 ஆண்டுகளாக போர் நடந்து வருகிறது. இதுவரை, 70 ஆயிரம் பேர் இறந்துள்ளனர். ஆசியா, ஐரோப்பிய நாடுகளில் சில நிறுவனங்களை புலிகள் நடத்துகின்றனர். அங்கிருந்து தான், சட்டப்படி ஆயுதங்கள் வாங்க ஏற்பாடுகள் நடக்கின்றன. புலிகள் படையில் 10 ஆயிரம் பேர் உள்ளனர். அவர்களுக்கு ஆயுதங்கள் இன்று வரை கிடைக்க காரணம், சர்வதேச அளவில் உள்ள `ஆயுத நெட்வொர்க்' தான். பிரிட்டனில் ஒன்றரை லட்சம், கனடாவில் இரண்டு லட்சம் இலங்கை தமிழர்கள், புலிகளின் ஆதரவாளர்கள்தான். ஆண்டுக்கு 1500 கோடி ரூபாய் வரை பணம் , புலிகளுக்கு வருகிறது. கடத்தல், மோசடி, கொள்ளை போன்றவற்றில்தான் அதிக பணம் வருகிறது. தாமாக முன்வந்து நன்கொடை வருவது குறைவுதான். அமெரிக்காவில், இரட்டை கோபுரம் உட்பட சில இடங்களில் அல் - குவைதா பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதை அடுத்து, புலிகள் மீதும் கண்காணிப்பு அதிகமானது. அப்போதில் இருந்துதான், ஆயுதக் கடத்தலில் புலிகள் மீது கண் விழுந்தது. ஆயுதக் கடத்தலையும் தடுக்க இலங்கை அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. சர்வதேச அளவில், புலிகளுக்கு எதிரான பிரசாரத்தை இலங்கை அரசு தீவிரப்படுத்தியதும், பல நாடுகளில் புலிகள் மீதான நல்லெண்ணம் குறைந்து வருகிறது. சமீபத்தில், அமெரிக்காவில் கைதான புலிகள் ஏஜென்ட்கள் மூலம், பல திடுக்கிடும் விஷயங்கள் வெளியாகி உள்ளதால், புலிகளுக்கு இனி போதாத காலம் தான்.

November 12, 2007

"மொழி என்பது தொடர்புக்குதான் - கனிமொழி

"மொழி என்பது தொடர்புக்குதான். மொழி ஒரு இனத்தின் அடையாளமாக மாறுவதை சிலரால் ஏற்று கொள்ள முடியாததாகவுள்ளது. தமிழ் தொன்மையான மொழி. உலகிலுள்ள மற்ற மொழிகளைவிட 2 ஆயிரம் ஆண்டுக்கு முன்தோன்றியது. பல செம்மொழிகள் இருந்தாலும் வாழும் மொழியாக தமிழ் இன்று விளங்குகிறது. நமது கலாச்சாரத்தை சுமந்து வருவதாக தமிழ்மொழி அமைந்துள்ளது. நாம் யார் என்ற புரிதலுடன் இல்லாமல் வானம் வசப்படும் என செயல்படும் போது அடியோடு விழுந்து விடுவோம்" - கனிமொழி

இன்றைய குறள்

திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்
தறனல்ல செய்யாமை நன்று

பிறர் செய்திடும் இழிவான காரியங்களுக்காகத் துன்பமுற்று வருந்தி, பதிலுக்கு அதே காரியங்களைச் செய்து பழி வாங்காமலிருப்பதுதான் சிறந்த பண்பாகும்

அறத்துப்பால் : பொறையுடைமை

உயிர்காக்க உதவும் பத்து வழிமுறைகள்

நமது வீட்டிலுள்ள முதியவர்களுக்கோ, பெரியவர்களுக்கோ திடீரென அவசர மருத்துவ உதவி தேவைப்படும் போது பதட்டத்துடன் மருத்துவமனைக்கு ஓடுகிறோம். அங்கே மருத்துவர் கேட்கும் கேள்விகளுக்குச் சரியான பதில் அளிப்பதன் மூலம் மருத்துவ உதவிகள் தாமதமின்றி நோயாளிக்குக் கிடைக்க வழி பிறக்கிறது. பல வேளைகளில் மருத்துவரின் கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாமல் நோயாளியோடு பல காலம் இருக்கும் உறவினர்களே தடுமாறும் நிலை ஏற்பட்டு விடுகிறது. நோயாளிகள் குறித்த சில அடிப்படைத் தகவல்களை எழுதி வைத்திருப்பது சிக்கலான நேரங்களில் பயனளிக்கும் என்கிறார் மருத்துவர் பால் தக்காஷி.
உயிர்காக்க உதவும் பத்து வழிமுறைகள் :

1. நோயாளிகள் வழக்கமாகச் செல்லும் மருத்துவமனை குறித்தும், மருத்துவர் குறித்தும் தெரிந்து வைத்திருங்கள். சிலருக்கு சில மருத்துவர்கள் மீது அதீத நம்பிக்கை இருக்கும். நம்பிக்கை நோய் தீர்க்கும் முதல் நிவாரணி. எனவே அப்படிப்பட்ட தகவல்களை முன்கூட்டியே அறிந்து வைத்திருக்க வேண்டும். அது மட்டுமன்றி பழக்கமான மருத்துவரெனின் நோயாளியைக் குறித்த பல விஷயங்கள் தெரிந்திருப்பதனால் மருத்துவ உதவிகள் வழங்குவதில் ஏற்படும் தாமதங்களையும் தவிர்க்க முடியும்.

2. நோயாளியின் பிறந்த நாள் அல்லது வயது தெரிந்திருப்பது நல்லது. மருத்துவ படிவங்களை நிரப்பவும், மருத்துவருக்கு நோயாளியின் உடல் நிலை குறித்த அனுமானங்களுக்கும் அது மிகவும் பயன்படும்.

3. நோயாளிக்கு ஏதேனும் ஒவ்வாமை இருந்தால் அதுகுறித்து தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

4. நோயாளிக்கு தனக்குத் தரப்பட வேண்டிய மருத்துவம் குறித்து ஏதேனும் கருத்து இருந்தாலோ, மத ரீதியான ஏதேனும் கொள்கைகள் இருந்தாலோ அதையும் அறிந்து வைத்திருக்க வேண்டும்.

5. மிகவும் முக்கியமாக நோயாளியின் பழைய ஆரோக்கிய நிலை குறித்த அறிவு இருக்க வேண்டியது அவசியம். குறிப்பாக சர்க்கரை நோய், வலிப்பு, இதயம் தொடர்பான நோய் போன்றவை நோயாளிக்கு இருந்திருக்கின்றனவா என்பதைக் குறித்த அறிவு இருப்பது மிகவும் பயனளிக்கும்.

6. நோயாளி என்னென்ன மருந்துகள் உட்கொண்டிருந்தார் என்பது குறித்த தகவல்கள் இருக்க வேண்டியது மிகவும் அவசியம். உட்கொள்ளும் மருந்துகளுக்கான சீட்டுகளை ஒரு கோப்பில் போட்டு வைத்திருப்பது இத்தகைய சூழலுக்கு பெருமளவில் கை கொடுக்கும்.

7. நோயாளிக்கு மிகவும் நெருக்கமானவர்களின் தொடர்பு எண்கள் கைவசம் இருப்பதும், பல தகவல்களைப் பெற உதவும்.

8 நோயாளிக்கு மருத்துவக் காப்பீடு இருக்கிறதா என்பதைக் குறித்த தகவல்களை தெரிந்து வைத்திருப்பது நலம் பயக்கும்.

9. இதற்கு முன் நோயாளி ஏதேனும் அறுவை சிகிச்சை செய்து கொண்டிருக்கிறாரா என்பது குறித்த தகவல்கள் அறிந்திருப்பது நல்லது. குறிப்பாக தங்கள் இளம் வயதில் ஏதேனும் அறுவை சிகிச்சை செய்து கொண்டிருந்தால் அது பலருக்கும் தெரியாமல் இருக்க வாய்ப்பு உண்டு. அதை அறிந்து வைத்திருப்பது நல்லது.

10. நோயாளியின் பழக்க வழக்கங்கள் தெரிந்திருக்க வேண்டும். குறிப்பாக அவருடைய உணவுப் பழக்கம், மது, புகை போன்ற பழக்கங்கள் போன்ற தகவல்கள் தெரிந்திருக்க வேண்டும்.

மேற்குறிப்பிட்ட பத்து விஷயங்களும் உங்களுக்குத் தெரிந்திருந்தால் அவசர தேவை ஏற்படும் போது தடுமாறாமல் சரியான இடத்தில் சரியான சிகிச்சையை வழங்க உதவும். இந்தத் தகவல்களைத் தெரிந்து கொள்வதற்கு மெத்தப் படித்திருக்க வேண்டியதில்லை, குடும்ப உறவுகளுடன் அன்போடும் உறவோடும் உரையாடி வாழ்ந்தாலே போதுமானது.

"மன்மதராசா" மாலதி

வைகோ மற்றும் நெடுமாறன் கைது

  • தமிழ்ச்செல்வனுக்கு வீரவணக்கப் பேரணி நடத்த முற்பட்டபோது கைதுவிடுதலைப்புலிகள் அமைப்பின் மறைந்த அரசியல்துறைப் பொறுப்பாளராகிய சுப.தமிழ்ச்செல்வனுக்கு வீரவணக்கப் பேரணி நடத்த பிறப்பிக்கப்பட்டிருந்த தடையை மீறி பேரணி சென்ற வைகோ மற்றும் நெடுமாறன் உட்பட 300-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். பேரணி நடத்த விதிக்கப்பட்டிருந்த தடையை மீறியதாகக் கூறி இவர்கள் தற்போது 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே இன்று சென்னையில் நடந்த காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில், விடுதலைப்புலிகளுக்கு ஆதரவு வழங்கும் கட்சிகள் தடை செய்யப்பட வேண்டும், அத்தகைய கட்சிகள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது
  • மேற்கு வங்க வேலை நிறுத்தத்தால் இயல்புநிலை பாதிப்பு : வேலைநிறுத்தம் சுமூக நிலைமையை வெகுவாகப் பாதித்துள்ளதுஇந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் இடம்பெற்ற அரசியல் வன்செயல்களைக் கண்டித்து அங்கு நடத்தப்படுகின்ற வேலை நிறுத்தம் அங்கு பரந்த அளவில் பெரும் கதவடைப்பாக உருவெடுத்துள்ளது
  • இலங்கையின் வடகிழக்கு வன்செயல்களில் குறைந்தது 10 பேர் பலி : இலங்கையின் வடக்கே இன்று யாழ்குடா நாட்டில் இடம்பெற்ற வெவ்வேறு வன்செயல்களில் இரண்டு பொதுமக்கள் உட்பட 7 பேர்வரை கொல்லப்பட்டதாக அங்கிருந்து கிடைக்கும்செய்திகள் கூறுகின்றன
  • 2010 ஆம் ஆண்டு உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டிகள் இந்தியாவில் நடைபெறும் : 2010 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டிகள் இந்தியத் தலைநகரான புதுடில்லியில் நடைபெறும். இந்த முடிவானது கடந்த மூன்று தினங்களாக டில்லியில் நடைபெற்ற சர்வதேச ஹாக்கி சம்மேளத்தின் கூட்டத்தில் எடுக்கப்பட்டது
  • பாலத்தீனக் குழுக்களுக்கிடையே மோதல்: ஐவர் பலி : பாலத்தீனத்தின் காசா நிலப்பரப்பில் நடைபெற்ற ஒரு பேரணியில், போட்டி பாலத்தீனக் குழுக்களான ஹமாஸ் மற்றும் ஃபத்தாவிற்கிடையே ஏற்பட்ட மோதலில் குறைந்தது ஐந்து பேர் பலியாகியுள்ளனர்
  • பொதுநலவாய அமைப்பு வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு : பாகிஸ்தான அதிபர் ஜெனரல் பெர்வேஸ் முஷாரப்பாகிஸ்தானில் அவசர நிலை அமல்படுத்தப்பட்டதை அடுத்து, அதற்கு எதிராக சாத்தியமான தடைகளை விதிப்பது குறித்து விவாதிக்க காமன்வெல்த் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் லண்டனில் கூடியுள்ளனர்
  • இன்றைய (நவம்பர் 12 திங்கட்கிழமை 2007) "பிபிசி" தமிழோசைச் செய்திகள் கேட்க இணைப்பில் செல்க http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml?tamil_worldnews

November 11, 2007

விடுதலைப் புலிகள் பயங்கரவாத அமைப்பின் தலைவர் பிரபாகரனின் நாட்கள் எண்ணப்பட்டு வருகின்றன

பிரபாகரனுக்கு இலங்கை ராணுவம் குறிவைப்பு : விடுதலைப் புலிகள் பயங்கரவாத அமைப்பின் தலைவர் பிரபாகரனின் நாட்கள் எண்ணப்பட்டு வருகின்றன என்று இலங்கை விமானப்படை கமாண்டர் ஏர் மார்ஷல் ரோஷன் குணதிலகே கூறியுள்ளார். இதுகுறித்து இலங்கை அரசின், `டிவி' சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: விரைவில் எங்கள் விமானப்படை வீரர்கள், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பதுங்கு இடத்தை கண்டுபிடித்து, அவரை தீர்த்துக் கட்டுவர். பிரபாகரனின் வாழ்நாட்கள் எண்ணப்பட்டு வருகின்றன. வவுனியாவில் மிகச்சிறிய பரப்பளவுக்குள் விடுதலைப் புலிகளின் எல்லை சுருக்கப்பட்டு விட்டது. எனவே, பிரபாகரன் எங்கு ஒளிந்திருக்கிறார் என்பதை துல்லியமாகக் கண்டுபிடித்து, தாக்குதல் நடத்துவது எளிதாகி உள்ளது. அவரை கண்டுபிடிப்பது பெரிய சிரமமான காரியமாக தோன்றவில்லை. இம்முறை அவரை பிடித்து விட முடியும் என்று நாங்கள் நம்புகிறோம். இதற்காகத்தான் இதுவரை நீண்ட பொறுமை காத்து வந்தோம். இப்போது அந்த நேரம் வந்துவிட்டது. இவ்வாறு ரோஷன் குணதிலகே கூறினார். சமீபத்தில், புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அடுத்ததாக புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு இலங்கை ராணுவம் குறிவைத்துள்ளது.

"கிரிவலம்" மகிமை : திருவாளர் சுகி.சிவம் II

தமிழக அரசின் சமீபத்திய தொழில்வளர்ச்சித்திட்டங்கள் : ஓர் ஆய்வு

பெரிய நிறுவனங்களின் வருகையால் வேலைவாய்ப்புக்கள் பெருகியுள்ளதா?