Showing posts with label Courtesy : Nilacharal. Show all posts
Showing posts with label Courtesy : Nilacharal. Show all posts

October 08, 2007

தங்களின் படைப்புக்களில் ஆண்வர்க்கத்தைக் கடுமையாகச் சாடுவதாக ஒரு கருத்து நிலவுவது உண்மையா?

அப்படியெல்லாம் இல்லை. ஆனால் இதுவரை இருந்து வந்து கொண்டிருக்கின்ற ஆணாதிக்கப் பார்வைகளுக்கு மாற்று சிந்தனைகளை முன் வைப்பது ஆணாதிக்க சிந்தனைகளுக்குள் இருப்பவர்களுக்கு கலவரத்தை உண்டு பண்ணுகின்றது
கால் சென்டர், இணையம், தொலைக்காட்சி மற்றும் சினிமாவால் நமது கலாசாரம் சீரழிந்து வருகிறது என்பதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா?
அறிவியல் முன்னேற்றங்களை நிராகரிக்க முடியாது, சீரழிக்கின்றதாய் சொல்லுகின்ற இணையம்தான் என்னை இலக்கிய உலகிற்குத் தந்திருக்கின்றது. அறிவியல் முன்னேற்றங்கள் ஆக்கபூர்வமாக சிந்தனைகளின் வழி நடைமுறைப் படுத்த வேண்டுமென்ற பொறுப்புணர்வு இருந்தால், கலாசாரம் மாறுபடும் போதும் கெட்டு விட்டதாய் தோன்றாத தளத்தில் இருந்து கொண்டிருக்கும்.

September 16, 2007

யார் குற்றம்? - நவநீ

"ஸ்வேதா! நான் கௌம்புறேன், டைம் ஆச்சு, டிபன் எல்லாம் வேண்டாம், கேன்டீன்ல சாப்டுக்கிறேன்டா, ப்ளீஸ்..சொன்னாக்கேளு! நைட் எல்லாம் ஒடம்பு சரியில்லாம இருமிக்கிட்டுக் கெடந்தேல்ல, இங்க வா! முதல்ல பெட் மேல இருக்கற ஒன்னோட மருந்து, மாத்திரை எல்லாத்தயும் எடுத்துவை. ஸ்வரேஷ் எடுத்துச் சாப்ட்டாலும் சாப்டுருவாம்பா" என்றபடியே தன் ஒன்றரை வயது மகனைத் தூக்கி ஹாலில் விட்டு விட்டுச் சமையலறையில் இருந்தவளிடம் விடைபெற்று அவசர அவசரமாகச் சென்றுவிட்டான்.செல்போனை 'வைப்ரேஷன்' மோடில் வைத்திருந்தாலும் தொடர்ந்து யாரோ அழைப்பதை உணர்ந்து எரிச்சலாகிப் போனான் நிதிஷ். சமீபத்தில் இம்போர்டரிடமிருந்து வந்த க்ளைம் பற்றி மேனேஜிங் டைரக்டர் மிகக் காரசாரமாக கான்ஃபரன்ஸ் ரூமில் விவாதித்துக் கொண்டிருந்தார். நிதீஷ், அந்த நிறுவனத்தின் மேலாளர், பொறுப்புள்ள பதவி. அவர் கேள்விகளைச் மாளித்து ஒரு வழியாக வெளியே வந்தவன் செல்போனை எடுத்துப்பார்த்தான். ஏழு மிஸ்டு கால்ஸ், இரண்டு மெஸேஜ் வேறு. எல்லாம் மனைவி ஸ்வேதாவிடமிருந்து. கோபம் தலைக்கேறியது, 'காலையில கௌம்பும்போதே மீட்டிங் இருக்குனு சொல்லிட்டுத்தானே அவசர அவசரமா வந்தேன், அப்படியென்ன தலைபோற விசயம்' என்று மனதுக்குள் கடிந்துகொண்டே, மெஸேஜைப் படித்தான். குழந்தையின் உடல் நிலை கவலைக்கிடம் என்ற செய்தியைப் படித்து இடிந்தே போய்விட்டான் நிதிஷ். யார் குற்றம்? எனது கதையைத் தொடர்ந்து படிக்க இணைப்பில் செல்க.

July 31, 2007

"பிடித்தவைகளைப் பிடித்துக்கொண்டு, பிடிப்போடு, பிடித்தவைகளுக்கே பெருமை சேர்க்கும் கீதாவை பல கிரீடங்கள் தேடிவரும் என்பதில் சந்தேகமில்லை"


இசையுலகில் மட்டுமல்ல எழுத்துலகிலும் கொடிகட்டிப் பறக்கும் கீதா பென்னட், சங்கீத கலாநிதி டாக்டர் ராமநாதனின் வழித் தோன்றல். வீணையிலும் வாய்ப்பாட்டிலும் வல்லவரான உலகின் பல பாகங்களிலும் இசைநிகழ்ச்சியும் பயிற்சியும் அளித்துவருகிறார். வீணை இசைக்காக அகில இந்திய வானொலி/தொலைக்காட்சியின் உச்சகட்ட விருதைப் பெற்றிருக்கிறார். நாரத கான சபாவிடமிருந்து சிறந்த வீணை வாசிப்பாளர் விருது பெற்ற கீதாவின் மகுடத்தில் இது போல் பல சிறகுகள். ஃப்யூஷன் இசையில் மிகுந்த ஆர்வம் கொண்ட கீதா, பல மேற்கத்திய இசைக் குழுக்களில் வீணை வாசிப்பாளராக இருக்கிறார். இவரது வீணை இசை இந்திய அமெரிக்க கூட்டுத் தயாரிப்பான சந்தோஷ் சிவன் இயக்கும் Road to Happiness எனும் ஆங்கிலத் திரைப்படத்தில் இடம்பெறுகிறது. இவர் நிலாச்சாரலுக்காகத் தந்திருக்கும் ப்ரத்யேக நேர்முகம் : Nilacharal

July 19, 2007

பாடல் இயற்றுபவரைப் பாடலாசிரியர் என்போம். பாடுபவரைப் பாடகர் என்போம். படத்தை இயக்குபவரை இயக்குனர் என்போம். படத்தில் நடிப்பவரை நடிகர் என்போம். படத்தில் நடனமாடுபவரை, நடனக் கலைஞர் என அழைப்போம். சாதாரணமாக ஒவ்வொரு துறையில் ஒவ்வொருவர் சிறந்த புலமை பெற்றிருப்பது வழக்கம். அபூர்வமாகச் சிலர் தம்முள் பன்முகத் திறனை வளர்த்துக் கொண்டு அஷ்டவதானியாகவும், சதாவதானியாகவும் திகழ்வதுண்டு. மனோரஞ்சித மலர் யார் எந்தப் பழத்தை நினைத்துக் கொண்டு முகர்ந்தாலும் அந்த மணத்தை அளிப்பதாகச் சொல்வார்கள். தொடர்ந்து படிக்க இணைப்பில் செல்க
Tamil movie links presenting cinema news,movie reviews,song reviews,actors,actresses&pictures

July 16, 2007

"நிலாச்சாரல்" இணைய சஞ்சிகைக்காக திருமதி.ரஜினி அவர்களுடன் நான் கண்ட நேர்முகம்

இந்தியப் பண்பாட்டைக் கடைப்பிடிப்பதில் அதிக ஆர்வத்துடன் இருக்கிறார்கள். ஆப்பிரிக்கர்களுக்கு இந்தியர்களை மிகவும் பிடித்திருக்கிறது, காந்திஜி, நெல்சன் மண்டேலா போன்ற சுதந்திர உணர்வளித்தவர்களின் நினைவுகளோடு இந்தியர்களை அணுகுகிறார்கள்.

இந்தியாவில் காணப்படும் விருந்தோம்பல் எங்கும் காணக் கிடைக்கவில்லை. கலாசாரம், பண்பாடு, ஆன்மீக வளம் காரணத்தால் பிரமிக்க வைப்பது இந்தியா, இந்தியா..... இந்தியாதான்....

தொடர்ந்து படிக்க கீழுள்ள இணைப்பில் செல்க.Tamil magazine Tamil news,poem,story,movie & song reviews

July 08, 2007

"நல்ல கவிதைகளைப் படித்தவுடன்,நான் எழுதியது ஒன்று கூடக் கவிதை இல்லையென்று புரிந்தது. அத்தனையையும் கிழித்துப் போட்டுவிட்டேன்."

• மின் ஊடகங்கள் மீது எனக்கு அவ்வளவாக மரியாதை இல்லை. மிக உயர்ந்த அளவில் வளர்ந்துள்ள விஞ்ஞானத்தை, வெறும் சினிமாவை வரவேற்பறைக்குக் கொண்டு வருவதற்குப் பயன்படுத்திக் கொச்சைப் படுத்திவிட்டார்களே என்பதுதான் வருத்தமாக இருக்கிறது.. பிரபஞ்சனுடன் ஒரு பேட்டி Please continue with link Tamil magazine Tamil news,poem,story,movie & song reviews

July 01, 2007

அபஸ்வரம் ராம்ஜி அவர்களுடன் ஒரு நேர்முகம்.

பிரபல இசைக்கலைஞர்கள் என்றால் அவர்களுள் போட்டி, பொறாமை இருக்கும். ஆனால் இந்த மழலைகள் இசையை ஒரு விளையாட்டாகக் கருதி அவர்களுக்குள் பாடல்களை எப்படிப் பாடவேண்டும், எப்படி மேலும் புதுமையாகப் பாடலாம் என்றெல்லாம் விவாதிக்கிறார்கள். ஒரு நிகழ்ச்சியில் ஒருவர் பாடியதை மற்றவர் ஆக்கப்பூர்வமாக விமர்சிக்கிறார். இதனால் எதிர்காலத்தில் போட்டி பொறாமையற்ற ஒரு இசைச் சமுதாயம் உருவாகும். Please 'click' the link
Tamil magazine Tamil news, poem, story, movie & song reviews

June 30, 2007

யூஸ்ஃபுல் டிப்ஸ்

  • செல்லில் பேட்டரி குறைவாக இருப்பதாக வைத்துக் கொள்ளுவோம். *3370# என்று அழுத்தினால் செல்லில் 50% பேட்டரி அதிகரிக்கும். அடுத்து எப்போது சார்ஜ் செய்கிறீர்களோ அப்போது இந்த 50% வீதமும் சார்ஜ் ஆகிவிடும்.
  • உலகளவில் அவசர கால அழைப்புக்கு 112 என்ற எண் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் தொடர்பு எல்லைக்கு வெளியே இருப்பதாக வைத்துக் கொள்ளுவோம். ஆபத்தான நேரங்களில் 112 எண்ணை அழைத்தால், அருகிலுள்ள தொடர்பு எல்லையின் அவசரகால எண்ணை அறியலாம். உங்களின் செல்போன் பூட்டப்பட்டிருந்தாலும் 112 என்ற எண்ணை அழைக்கலாம். தொடர்ந்து படியுங்கள்...
Tamil magazine Tamil news,poem,story,movie & song reviews

June 26, 2007



  • சினிமா தமிழை விட்டு விலகி பல காலமாகிவிட்டது.
  • இன்றைய புலம்பெயர்ந்த எழுத்தாளர்கள் மற்ற எழுத்தாளர்களால் எழுத முடியாதவைகளை எழுதும் வாய்ப்புகள் உண்டு. அதை அவர்கள் எழுதவேண்டும். தமிழ்ச் சமூகத்தைப்பற்றி மட்டுமே எழுதவேண்டுமென்ற அவசியமில்லை. மற்றைய சமூகத்தவர் எதிர்நோக்கும் பிரச்சனைகள் பற்றிக்கூட எழுதலாம். அந்தவகையில் அவர்கள் நல்ல படைப்புகளை உருவாக்கவேண்டும். மேலும் தொடர்ந்து படிக்க இணைப்பைக் 'க்ளிக்' செய்யவும் http://www.nilacharal.com/tamil/specials/tamil_malan_192.html

June 25, 2007

"சிங்கை இக்பால்"

புத்தகத்திற்கு

'நூல்' என்று பெயர்
வைத்தவர்கள்
புத்திசாலிகள்
ஒன்று
கிழிந்த துணிகளைத்
தைக்கிறது
மற்றொன்று கிழிந்த
மனிதர்களைத் தைக்கிறது
தமிழ்க் கவிஞர் "சிங்கை இக்பால்" அவர்களின் நேர்முகம் படிக்கத் தயவுசெய்து இணைப்பை அழுத்துகTamil magazine Tamil news,poem,story,movie & song reviews

June 24, 2007

எனது சிறுகதை

"திண்ணை" என்ற இணைய சஞ்சிகையில் எனது சிறுகதையான "கிராமம்" பிரசுரமாயிருக்கிறது என்பதை மகிழ்வுடன் தெரியப்படுத்திக் கொள்கிறேன். அதனைப் படிக்கவும், தங்களின் மேலான கருத்துக்களைப் பதிவு செய்யவும் கீழுள்ள இணைப்பில் செல்லவும். Thinnai

"மங்கையர் இதழ்களில்
மிளகாயில் அல்வா
செய்யும் விதம் பற்றிய
குறிப்புகள் அல்ல
வாலண்டைனா வரலாறுகள்
வரவேண்டாமா?
பருவப்பெண்களை உறிஞ்சும்
பத்திரிகை அட்டைகளில் ஈன்ஸ்டீன் படம்
என்றைக்கு வருமோ
அன்றுதான் கொச்சைப்பட்ட
அச்சு யந்திரங்களும்
நிச்சயம் மகிழும்"

- கவிஞர் ஈரோடு தமிழன்பன்



"இமயப் பறவை நாம்,
எரிமலையின் உள்மனம் நாம்,
திக்குகளின் சுவர்கள்,
தேச வரம்பற்றவர்கள்"

இவரின் இணையதள செவ்வி படிக்க கீழுள்ள இணைப்பை அழுத்தவும் Tamil magazine Tamil news,poem,story,movie & song reviews

June 18, 2007

திரு.B.H.அப்துல் ஹமீது

'இலங்கை ஒலிபரப்புக் கூட்டு ஸ்தாபனம், தமிழ்ச்சேவை' என்று கூறும்போதே அது பிரபல அப்துல் ஹமீது அவர்களின் குரல் என்று சொல்லக்கூடிய அளவுக்கு "உலகெங்கிலும் உள்ள தமிழ் நெஞ்சங்களை"க் கவர்ந்தவருடனான ஒரு நேர்முகம். Please 'click' the link FreeTamil magazine presenting news,poem,story,movie & music reviews

June 07, 2007

கிழக்குப் பதிப்பகம்

"உலக அறிவு அனைத்தும் தமிழில் வரவேண்டும்"
கிழக்கு பதிப்பகத்தின் நிறுவனர் பத்ரியுடன் மின்னுரையாடல்

ஒரு புதிய எழுத்தாளர் தமது படைப்பை நூலாக வெளியிட வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்?

1. தனது படைப்பை விரும்பும் பதிப்பாளரைக் கண்டுபிடிப்பது. அதன் பிறகு பதிப்பாளர் மீதியைக் கவனித்துக் கொள்வார்.

2. பதிப்பாளர் கிடைக்காத பட்சத்தில் தன் புத்தகத்தைத் தானே பதிப்பிப்பது. முன்னைப் போல் இல்லாமல் மிகக்குறைந்த செலவில் on-demand publishing மூலம் பதிப்பிப்பது இப்பொழுது சாத்தியமாகியுள்ளது. Please 'click' the link down
Tamil magazine Tamil news,poem,story,movie & song reviews

June 04, 2007

மனசே சுகமா?

திருமதி.நிலா எழுதும் ஒரு ஊக்கத் தொடர். படித்துவிட்டுத் தங்களின் கருத்துக்களைப் பதிவு செய்க: Please 'click' the Link down Tamil magazine Tamil news,poem,story,movie & song reviews

June 03, 2007

விமலா ரமணி

இளைஞர்கள்
வெண்சாமரம் போன்றவர்கள்
அவர்களை ஒட்டடை அடிக்கப்
பயன் படுத்தாதீர்கள்
அவர்கள் நெம்புகோல்கள்
பல் குத்தப் பயன்படுத்தாதீர்கள்
அவர்கள் வெடிகுண்டுகள்
பொக்ரானில் வெடிக்க வேண்டியவர்கள்
கோவையில் பயன்படுத்தாதீர்கள்..........
இன்றைய எழுத்தாளர் ஒவ்வொருவரும் படிக்கவேண்டிய ஒரு நேர்முகம். வியாபாரமாகிப்போன இன்றைய எழுத்துலகில், எழுதுபவர்களையெல்லாம் 'கட் அன் பேஸ்ட்' கவிஞர்கள் எனக் 'கமென்ட்' அடிக்கும் கர்வமிக்க எழுத்தாளர்களுக்கு நடுவில், "நான் எழுத்தாளர்களைப் பார்ப்பதை விட எழுத்துக்களைத்தான் பார்க்கிறேன்" என்கிறார். இப்படியும் ஒரு எழுத்தாளர்... தொடாந்து பேட்டியைப் படியுங்கள். அழுத்தவும்.
Tamil magazine Tamil news,poem,story,movie & song reviews:

May 30, 2007

இன்னும் 30 ஆண்டுகளில் மொத்த இமயமலையே உருகிப்போய்விடுமாம்....
முதலில் இதைப் படியுங்கள்!!
Tamil magazine Tamil news,poem,story,movie & song reviews