Showing posts with label nawin seetharaman. Show all posts
Showing posts with label nawin seetharaman. Show all posts

November 02, 2015

"பூங்காத்து திரும்புமா ? ஏம்பாட்ட விரும்புமா ?"

"பூங்காத்து திரும்புமா ? ஏம்பாட்ட விரும்புமா ?" 
 
இந்த பாட்ட எப்ப கேட்டாலும், எனக்கு மனசுக்குள்ள ரொம்ப வலிக்கும். ஆமா ! எல்லாருக்குமேதான். ஆனா, எனக்கு கொஞ்சம் அதிகமாவே.....

கனத்த மனசையும், கண்ணீரையும் என்னால கட்டுப்படுத்த முடியறதில்ல. 1990-ன்னு நெனைக்கிறேன். இந்தப் படம் ரிலீஸ் ஆனது 1985-ன்னாலும், எங்க ஊருக்கெல்லாம் லேட்டாதான் படம் வரும், நல்ல படம்'னா அடிக்கடி திரையிடுவாங்க. சிவகங்கை ஸ்ரீராம் தியேட்டர் இப்போதைய ரவிபாலா. பொதுவா நடிகர் திலகத்தின் நடிப்பை அதிகம் சிலாகிச்சு பேசுற எங்க அப்பா, அவரு சின்ன வயசுல பாத்த படங்கள், ரசிச்ச பாடல்கள் எல்லாம் எனக்கு இப்பவும் அத்துபடி. கம்யூனிஸ்ட் இயக்கத்துல ரொம்ப தீவிரமா, பரபரப்பா இருந்த காலகட்டங்கறதால அதிகமா படங்கள் பாக்க மாட்டார். எனக்கு பள்ளி விடுமுறைன்னா எங்கப்பா கலந்துக்கற எந்த பொதுக்கூட்டம், போராட்டம், சாலை மறியலா இருந்தாலும் என்னையும் கூட்டிட்டு போறது வழக்கம். இரவு சிவகங்கைல ஒரு பொதுக்கூட்டத்துல பேசி முடிச்சுட்டு, நள்ளிரவாயிட்டதாலயும், அப்பதான் மழை பேஞ்சு விட்டிருந்ததாலயும், எங்க கிராமத்துக்கு பேருந்து போக்குவரத்து இல்லாததாலயும், இப்ப என்ன செய்யலாம்'னு கேட்டார். நான் படத்துக்கு போகலாம்'னு சொன்னேன். அப்போ சிவகங்கைல மூணு தியேட்டர்னு ஞாபகம். அதுல ஒரு தியேட்டர்ல "முதல் மரியாதை"னு சொன்னேன். படம் பாக்க அவருக்கு உடன்பாடு இல்லன்னாலும், எனக்காகவும், சிவாஜி கணேசன் படங்கறதாலயும் எங்கப்பா ஒத்துக்கிட்டாரு. போறதுக்கு முன்னாடி ரோட்டுக் கடைல ஆட்டுக்கறி தோசையும், ஆம்லேட்டும் சாப்பிட்ட ஞாபகம். மழை விட்டிருந்த நள்ளிரவும், அந்த மணமும் அப்பப்பா... இன்னிக்கும் என்னால உணர முடியுது. அப்பறம் சைக்கிள்ல தியேட்டருக்கு போனோம். தியேட்டருக்கு ஒரு நூறு அடிக்கு முன்னால சைக்கிள நிறுத்தினாரு. எங்கப்பா தோள்ல எப்பவும் கம்பீரமா காட்சியளிக்கும் சிவப்புத்துண்டு மடிக்கப்பட்டு அவருடைய சிவப்பு பேக்'குக்குள்ள ஐக்கியமானது. என்னப்பா'ன்னு கேட்டேன். "யாராவது தெரிஞ்சவங்க இருப்பாங்க, நான் பொதுவா இந்த மாதிரி எடத்துக்கெல்லாம் வர்றதில்ல இல்லயா?"ன்னாரு. ஒரு வழியா திரையரங்குக்குள்ள போயி, கடைசி சீட், எங்க தலைக்கு மேல ஆபரேட்டர் ரூம்ல இருந்து படம் வர்ற ரெண்டு துளைகள். எத்தனையோ படங்கள் ஊர்ல திரையிடும்போது சேந்து பாத்திருக்கோம். ஆனா தியேட்டர்ல அப்பாவோட சேந்து பாத்ததா எனக்கு ஞாபகம் இல்ல. அதுனால, இந்தப் படம் எனக்கு ரொம்ப ஸ்பெஷல். படம் பாத்திட்டுருக்கோம்.

"பூங்காத்து திரும்புமா ? ஏம்பாட்ட விரும்புமா ?" இந்த பாட்டு திரையில ஓடிட்டு இருக்கு. ஏதோ சரசர'ன்னு சத்தம். எங்கப்பா திடீர்னு எந்திரிச்சு ஆபரேட்டர் துளைக்கு பக்கத்துல செவுத்துல தட தடன்னு தட்டினாரு. லைட்டெல்லாம் போட்டுட்டாங்க. லைட் போட்டதால அணைக்கச் சொல்லி ஒரே விசிலும், சத்தமும் காத கிழிச்சது. எனக்கு ஒன்னும் புரியல. ஓரத்து சீட்டுல ஒக்காந்திருந்த எங்கப்ப எந்திரிச்சாரு. பக்கத்துல ஒருத்தர் கீழ கெடந்து துடிக்கிறார். கை கால் எல்லாம் வெட்டி வெட்டி இழுக்குது, சிமெண்ட் தரைல தேச்சு தேச்சு கை கால் எல்லாம் ரத்தம் ஒழுக ஆரம்பிக்கிது. திடீர்னு எங்கப்பா அவர அப்படியே அலேக்கா தூக்கிட்டு வெளியே போறாரு. லைட் எல்லாம் அணைச்சிட்டாங்க.... பாட்டு ஓடிட்டு இருக்கு. எனக்கு ஒன்னும் புரியல. நானும் எந்திரிச்சு அப்பா பின்னாடியே போறேன். அவர தூக்கிட்டுப் போன எங்கப்பா நேரா ஆபரேட்டர் ரூமுக்குள்ள போயி, ஏதோ ஒரு இரும்புக் கம்பிய கொடுத்து, அவர ஆசுவாசப்படுத்தி ஒக்காற வைக்கிறாரு. கொஞ்ச நேரத்துல கோலி சோடா, டீ எல்லாம் வருது.

ஆபரேட்டர் எங்கப்பாகிட்ட, "காக்கா வலிப்பு தோழர், நீங்க எப்படி இங்கே...?", "இப்பதான் பொதுக்கூட்டம் முடிஞ்சது. பஸ் இல்ல, தம்பி படம் பாக்கணும்னான். வந்தேன்.
சரி, தோழர் ! நீங்க போயி பாருங்க. அவர நம்ம பக்கத்து ஊருதான். நான் பாத்துக்கறேன்" என்று அந்த நண்பரை ஆபரேட்டர் ரூமிலிருந்தே படம் பாக்க வச்சாரு. வலிப்பால் அவதிப்பட்டவரு என் அப்பாவைப் பார்த்து கையெடுத்துக் கும்பிட்டு, "ரொம்ப நன்றிய்யா, நீங்க மட்டும் இல்லன்னா, நான் பொழச்சிருக்க மாட்டேன்" என்று நெகிழ வைக்க, "அதெல்லாம் ஒன்னுமில்லப்பா, இது ஒரு சின்ன விசயம், பயப்படாத, காலைல போயி வைத்தியரப் பாத்துட்டு வீட்டுக்குப் போகணும் என்ன?" என்றவாறு அங்கிருந்து கிளம்ப, என் அப்பாவின் வெள்ளை வேட்டி சட்டை எல்லாம் இரத்தக்கறை. சரி, போகலமா'ன்னு எங்கிட்ட கேட்க, ஆபரேட்டர் கொடுத்த தண்ணீரில் அப்பா வேட்டி, சட்டைய கொஞ்சம் சுத்தம் பண்ணிட்டு, ஆபரேட்டர் எனக்காக சிபாரிசு செய்ய மறுபடியும் படம் பாக்க தியேட்டருக்குள்ள போனோம். எனக்கு படம் முழுசா பாக்க முடியலயேங்கிற வருத்தம் ஒருபக்கம். உள்ள நுழையும்போது மறுபடியும் லைட் போட்டாங்க. தியேட்டர்ல ஒரே சத்தம். படம் நிறுத்தப்பட்டது. மீண்டும் மீண்டும் சத்தம், விசில். அருகில் சிந்தியிருந்த ரத்தம் என்னோட கண்ணுல பட்டது. ஒருவழியா உள்ளே போய் ஒக்காந்தோம்.

"என்ன ஆச்சரியம் ! "பூங்காத்து திரும்புமா ? ஏம்பாட்ட விரும்புமா ?" மறுபடியும் ஓட ஆரம்பிச்சது. எனக்கு ஒரே சந்தோசம், தியேட்டருக்குள்ளயும் ஒரே சந்தோச விசில் மட்டும் குரல். அந்த லேசான முகம் தெரியிற வெளிச்சத்துல அப்பா முகத்த பாத்தேன். என்னைப்பாத்து அவர் சிரிச்ச அந்த அழகு முகம் இப்பவும் என் மனசுக்குள்ள நிக்கிது. ஒரு வழியா படம் பாத்துட்டு அங்கருந்து ஜெயவிலாஸ் பஸ்ல காளையார்கோயில் வந்து இறங்கி, நானும் என் அப்பாவும் ரத்தக்கறையோடும், மன நிறைவோடும் கிட்டத்தட்ட 15 கி.மீ சைக்கிள்ல வீடு வந்து சேந்தோம்.

அந்த சிவப்புக்கறையும், என் மனசுல பதிஞ்சிருந்த நிறைவும், இன்னிக்கு ஏற்பட்டிருக்கிற வலியும் எப்படி மறையும் ? 

நானும் என் அப்பாவும் சேர்ந்து தியேட்டர்ல பாத்த முதலும் கடைசியுமான அந்தப் படம்தான் "முதல் மரியாதை". "பூங்காத்து திரும்புமா ?" எப்பல்லாம் இந்தப் பாட்ட கேக்குறேனோ அப்பல்லாம் இந்த காட்சி என் கண்ணை நனைச்சுட்டு போயிடும். அதுமாதிரிதான் இன்னிக்கும் அதிகாலைல எந்திரிக்கும்போது என்னையறியாமலே இந்தப் பாட்டு என்னோட மனசுக்குள்ள ஒலிச்சுகிட்டே இருந்துச்சு... இதயம் கனக்க ஆரம்பிச்சது..... இதோ... என் தொண்டை அடைக்கிது...  

ஏன்னா... இதே நாள்... 2005 நவம்பர் 2, என்னோட அப்பா எங்ககிட்டேருந்தும், அவர் நேசிச்ச இந்த மண்ணுகிட்டேருந்தும் விடுப்பு எடுத்த நாள்....

"பூங்காத்து திரும்புமா ? ஏம்பாட்ட விரும்புமா ?"

இசைஞானிக்கு என் நன்றி
 

January 13, 2015

Celebrities Talk about "Thottal Thodarum" Releases on 23, Jan 2015. Friends :) FYI : "I did a Negative Role" in this movie ;) Thanks for your Support

September 20, 2014

"கன்னியும் காளையும் செம காதல்" முன்னோட்டம்

வணக்கம் உறவுகளே ! "கன்னியும் காளையும் செம காதல்" முன்னோட்டம். நான் இதில் ஒரு நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். தயவு செய்து இந்த முன்னோட்டத்தினை பார்த்து, தங்களின் முக நூல் பக்கத்திலும் மற்றும் சமூக வலைத்தளங்களிலும் நண்பர்களுடன் பகிர்ந்து, தங்களின் மேலான ஆதரவையும் ஒத்துழைப்பையும் நல்குமாறு வேண்டுகிறேன். நன்றி :)



Vanakkam Friends,

I did a Comedy Role in this Movie. Please watch and share "Kanniyum Kaalaiyum Sema Kadhal" Trailer in your FB Timeline, Social websites/Forums and with your friends. Thanks in Advance for your continuous Support and Encourage' :)

July 09, 2014

"தொட்டால் தொடரும்" முன்னோட்டம்

வணக்கம் உறவுகளே! "தொட்டால் தொடரும்" இந்த படத்தில் நான் ஒரு வில்லனாக நடித்திருக்கிறேன். படத்தின் "முன்னோட்டம்" அதாவது 'ட்ரெய்லரை' பார்த்துவிட்டு நண்பர்களிடம் பகிருமாறும், விரைவில் வெளிவர இருக்கும் இப்படத்திற்கு வழக்கம்போல் தங்களின் மேலான ஒத்துழைப்பினையும், வாழ்த்துகளையும் வழங்கவேண்டும் என்றும் வேண்டி நிற்கிறேன். நன்றி, வணக்கம்.


February 23, 2012

"பனித்துளி" திரைப்படத்தில் நான் எழுதிய 'சல்சா' இசைப் பாடல் !!

நண்பர்களே! விரைவில் வெளிவர இருக்கும் பனித்துளி திரைப்படத்தின் பாடல்களை கீழுள்ள இணைப்பில் சென்று தரவிறக்கிக் கொள்ளலாம். இதில் ஐந்தாவதாக உள்ள "பசியா தூக்கமா" என்ற சல்சா இசையில் அமைந்த பாடல் நான் எழுதியது. நண்பர்கள் கேட்டு, ரசித்து தங்களின் மேலான கருத்துக்களைத் தெரிவியுங்கள். இடையிடையே வரும் ஆங்கில வார்த்தைகளுக்கு தமிழ் நண்பர்கள் மன்னிக்க :) கதையின் சூழல் கருதி தவிர்க்க இயலாமல் எழுத வேண்டிய கட்டாயம். நண்பர்களின் புரிதலுக்கு நன்றி!! தொடர்ந்து சிறந்த பாடல்களை தருவேன் என்று கூறி பாடலை ரசித்தமைக்கு நன்றியையும் முன்கூட்டியே தெரிவிக்கிறேன். நன்றி!!

இணைப்பில் சென்று தரவிறக்கிக் கொள்ளவும். http://mp3.tamilwire.com/panithuli-2012.html

December 18, 2011

"ஆங்கில அடிமைகளுக்குச் சுதந்திரம் பற்றிப்பேச அருகதையில்லை" : கலெக்டர் சகாயம்

"ஆங்கில அடிமைகளுக்குச் சுதந்திரம் பற்றிப்பேச அருகதையில்லை" என தான் பதிலெழுதிய சுவாரசியமான தகவல்களை ஆட்சி மொழி பயிலரங்கம் மற்றும் கருத்தரங்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சி தலைவர் சகாயம் தெரிவித்தார். மதுரை மாவட்ட தமிழ் வளர்ச்சி துறையின் சார்பில் அனைத்து துறை அலுவலர்களுக்கான ஆட்சி மொழி பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் மாவட்ட ஆட்சியர் அலுவலக பல்நோக்கு கூட்டரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்குத் தலைமையேற்று மாவட்ட ஆட்சித் தலைவர் பேசும் பொழுது தெரிவித்ததாவது :

"அனைத்து துறைகளிலும் தாய் மொழியாம் தமிழை எவ்வளவு சிறப்பாக பயன்படுத்த வேண்டும் என்பதற்காக இந்த ஆட்சி மொழி பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் நடத்தப்பட்டு வருகிறது. இங்கு வழங்கப்பட்ட கருத்துக்களை நீங்கள் அனைவரும் உங்கள் அலுவலகத்தில் களத்தில் நடைமுறைக்குக் கொண்டு வரவேண்டும். தமிழ் மொழியை ஆட்சி மொழியாக கருதுவதில் நம்மிடையே உள்ள தாழ்வு மனப்பான்மைதான் இடர்பாடாக இருக்கிறது. தமிழ் மொழி பேசுவதால் நமக்குள் நாமே தாழ்வானவர்கள் என்ற தாழ்வு மனப்பான்மையை முதலில் அகற்ற வேண்டும்.

எந்தவொரு பொருளும் தொலைவில் இருக்கின்ற வரைதான் அதன் மேல் நமக்கு ஒரு ஈர்ப்பு இருக்கும். எப்பொழுது அந்தப் பொருள் நமது கைக்குள் வருகிறதோ அப்பொழுது அதன் மேல் உள்ள ஈர்ப்பு போய்விடும். அதற்காகதான் நான் எப்பொழுதும் சொல்வதுண்டு. ஆங்கில அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள். மாறாக ஆங்கில அடிமைத்தனத்தை வளர்த்துக் கொள்ளாதீர்கள் என்று!

ஒரு முறை ஒரு கிராமத்தில் சமபந்தி நிகழ்வில் எனக்கு ஒரு அலுவலர் மனு கொடுக்கும் பொழுது மனுவின் இறுதியில் கருப்பையா என்ற தனது பெயரை ஆங்கிலத்தில் எழுதி கையெழுத்திட்டிருந்தார். நான் தமிழ் நாட்டில் தமிழ் மக்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவராக இருக்கிறேன். யாரோ ஒரு ஆங்கிலேயர் எனக்கு ஒரு மனு கொடுத்திருக்கிறார். அவருடைய மனுவைப் பரிசீலிக்க நான் தயாராக இல்லை எனக் கூறிய பொழுது அந்தக் கருப்பையா என்னிடத்தில் வந்து அய்யா நான் தமிழன் தான் என்று சொன்னார்.

நீங்கள் இருப்பது தமிழ்நாட்டில்; பழகுவது தமிழ் மக்களோடு; பிறகு ஏன் உங்கள் கையெழுத்தை மட்டும் ஆங்கிலத்தில் போடுகிறீர்கள். அதை தமிழில் போட்டு கொண்டு வாருங்கள். ஒரு முறை போட்டால் உங்களுக்குப் பழகாது. அதனால் குறைந்தது 50 முறை ஒரு தாளில் போட்டு கொண்டு வாருங்கள் என்று கூறினேன். அவரும் அவ்வாறே செய்தார். இந்த நிகழ்வு அடுத்த நாள் அனைத்து செய்தி தாள்களிலும் வெளிவந்தது. இதை படித்த யாரோ ஒருவர் எனக்கு ஒரு தந்தியை அனுப்பியிருந்தார்.

அதில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களே, கையெழுத்தைத் தமிழில்தான் போட வேண்டும் என்று சொல்லுவது எங்கள் உரிமையை, சுதந்திரத்தைப் பறிப்பது போன்ற செயலாகும். இதற்கு நீங்கள் பதில் கூற வேண்டும் என்று கூறியிருந்தார்.

இவ்வளவு மெனக்கட்டு எனக்கு தந்தி அனுப்பியிருந்த அவருக்கு 'ஆங்கில அடிமைகளுக்குச் சுதந்திரத்தைப் பற்றி பேச அருகதை இல்லை' என்று பதில் அனுப்பியிருந்தேன். எதற்கு இதை சொல்லுகிறேன் என்றால், அந்த அளவிற்கு ஆங்கில மோகம் நம் தமிழ் மக்களிடையே பரவி கிடைக்கிறது.

பல்வேறு மொழிகளை அறிந்திருந்த பாரதி, 'யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்' என்று பாடினான். ஆனால் ஒரு மொழியைக்கூட உருப்படியாக தெரிந்து கொள்ளாத நாம், நம் தாய் மொழியை விட்டு ஆங்கிலத்தின் மீது மோகம் கொண்டவர்களாக ஆங்கில அடிமைகளாக உள்ளோம்.

எனவே, தமிழர்களாகிய நாம் நம்முடைய பழம் பெருமைகளைப் பேசி பேசியே காலங்களைக் கடத்துவதில் பயனில்லை. என்றைக்கு ஆங்கில அடிமைத்தனத்திலிருந்து விடுபடுகிறோமோ அன்று தான் தமிழன் என்ற பெருமை நிலைக்கும். இதற்கு இந்த ஆட்சி மொழி கருத்தரங்கம் நல்ல பாதை வகுக்கும். இந்த நிகழ்ச்சி வெறும் ஆட்சி மொழி கருத்தரங்காக மட்டுமல்லாமல் உங்களுக்குச் சுதந்திர காற்றைச் சுவாசிக்கும் களமாக அமைந்திருக்கும். உங்களிடையே ஒரு பெரிய தாக்கத்தை உருவாக்கியிருக்கும். இங்கு வந்திருக்கும் அனைவரும் தங்கள் அலுவலகங்களில் எழுதப்படும் கோப்புகளும், தங்களின் கையெழுத்துகளும் இனி தமிழிலேயே அமையும் என்று உறுதியேற்க வேண்டும். மதுரை மாவட்டத்தைப் பொறுத்தவரை நூற்றுக்கு நூறு சதவீதம் அரசு அலுவலகங்களில் ஆட்சி மொழி நடைமுறைப்படுத்தப்படும்" என்று கலெக்டர் சகாயம்பேசினார்.

இறுதியில் ஆட்சி மொழியை அலுவலகங்களில் சிறந்த முறையில் பயன்படுத்திய அலுவலர்களுக்குப் பரிசு கேடயமும், பாராட்டுச் சான்றிதழ்களையும், ஆட்சி மொழி கருத்தரங்கில் கலந்து கொண்ட அனைத்து அலுவலர்களுக்குச் சான்றிதழ்களையும் மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி இயக்குநர் முனைவர் கா.மு.சேகர், திண்டுக்கல் மாவட்ட தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் முனைவர். பெ.சந்திரா, திருநெல்வேலி மாவட்ட தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் திருமதி.லெ.கல்யாணசுந்தர், தமிழ் வளர்ச்சி துணை இயக்குநர் (பொறுப்பு) முனைவர்.கோ.விசயராகவன் மற்றும் அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

முன்னதாக மதுரை மாவட்ட தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் முனைவர்.கா.பசும்பொன் வரவேற்புரையாற்றினார். முடிவில் மாவட்ட ஆட்சியாளரின்ன் நேர்முக உதவியாளர் (பொது) திரு.அலிஅக்பர் நன்றியுரையாற்றினார்.

October 28, 2011

மீண்டும் நெருக்கடியில் "தம்பி வெட்டோத்தி சுந்தரம்" : படம் வெளியிடத் தடை!


மீண்டும் நெருக்கடியில் "தம்பி வெட்டோத்தி சுந்தரம்" : படம் வெளியிடத் தடை! இயக்குனர் வடிவுடையான் இயக்கி, கரண், அஞ்சலி நடிப்பில், கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் தமிழக கேரள எல்லையைச் சுற்றி நடைபெற்ற உண்மைச்சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம்தான் 'தம்பி வெட்டோத்தி சுந்தரம்'. படம் ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து இன்றுவரை பல்வேறு சர்ச்சைகளுக்கும், படப்பிடிப்பில் அடிதடி, தகராறு போன்றவற்றிற்கும் குறைவில்லை என்றே கூறலாம். கிட்டத்தட்ட தீபாவளிக்குப் பிறகு ஓரிரு வாரங்களில் படம் வெளியிடப்படும் என்ற ரசிகர்களின் எதிர்பார்ப்பில் விழுந்திருக்கிறது இன்னொரு அதிர்ச்சி செய்தி. இப்படத்தினை திரையிட விடாமல் தடை வாங்குவோம் என்ற செய்தி கோடம்பாக்கத்தில் மட்டுமின்றி, கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் காட்டுத்தீயாய் பரவிக்கொண்டுள்ளது. இது சம்பந்தமாக வரும் திங்களன்று கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முன்பு பெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாகவும் அறிவித்துள்ளனர் ஒரு தரப்பினர். மேலும், படம் வெளியிடுவதற்கு முன்னர் இந்தப்படத்தினை எங்களிடம் திரையிட்டுக் காண்பிக்கவேண்டும், அதன் பின்னரே படம் வெளியிடப்படவேண்டும் என்று 'தம்பி வெட்டோத்தி சுந்தரம்' பட இயக்குனர் வி.சி.வடிவுடையான் மற்றும் தயாரிப்பாளர்கள் தரப்பிற்கு "லைன் பால் அசோஸியேட்ஸ்" (Line Ball Associates) என்ற தரப்பிலிருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அந்த நோட்டிஸில் கூறப்பட்டிருப்பதாவது : 'தம்பி வெட்டோத்தி சுந்தரம்' படம் முழுக்க முழுக்க கன்னியாகுமரி, நாகர்கோவில் மற்றும் தமிழக கேரள எல்லைப் பகுதியில் நடைபெற்ற உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படம் என்று கூறினாலும்,







அந்தப்படத்தில் வரும் சம்பவங்களும், காட்சிகளும் அந்தப் பகுதியைக் கொச்சைப் படுத்தும் விதமாகவும், வரலாற்றுச் சம்பவங்களுக்கு முன்னுக்குப் பின் முரணாக சித்தரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது. இந்தப் படம் கண்டிப்பாக எங்கள் பகுதி மக்களின் மனநிலையையும், கெளரவத்தையும் பெருமளவில் பாதித்து மன உளைச்சலுக்கு உட்படுத்தும். மேலும் எதிர்கால சந்ததியினரின் வாழ்வில் ஒரு கரும்புள்ளியாக மாறக்கூடும் என்றும் அஞ்சுகிறோம். எனவே, இந்தப்படத்தினை வெளியிடாமல் உடனடியாக நிறுத்தி, படத்தினை திரையிடுவதற்கு முன் எங்கள் மனுதாரர்களிடம் திரையிட்டுக் காண்பித்து, மேற்கண்டவாறு படத்தில் எதுவும் தவறுதலாகச் சித்தரிக்கப்படவில்லை என்று எமது மனுதாரர்கள் உறுதியளிக்கும் பட்சத்தில் படத்தினை வெளியிடலாம். மீறி படத்தினை வெளியிட்டால் நாங்கள் படத்தினை வெளியிடத் தடை விதிக்கக் கோரி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்வோம்'. இது சம்பந்தமாக நோட்டிஸ் கிடைத்த மூன்று தினங்களுக்குள்ளாக எங்களுக்கு பதிலளிக்கவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, வரும் திங்களன்று நடைபெறப்போகும் ஆர்ப்பாட்டத்திற்கு இன்று அனுமதி கிடைத்துள்ளதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.


என்ன வடிவு சார்..... பாடர்னாலே.... பிரச்சினைதான்.


படத்திற்கு தடையா? அல்லது ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு விடையா? நீங்கதான் சொல்லணும்.

July 05, 2011

"தம்பி வெட்டோத்தி சுந்தரம்" "பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா

வணக்கம் அன்புத் தோழமைகளே! எனது பாசத்திற்குரிய நண்பரும், இயக்குனருமான V.C.வடிவுடையான் இயக்கி, கரண், அஞ்சலி, பாலாசிங், கஞ்சா கருப்பு கூடவே :) நானும் நடித்துள்ள "தம்பி வெட்டோத்தி சுந்தரம்" திரைப்படத்தின் "பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா" வரும் 16.07.2011 அன்று மாலை 7.00 மணியளவில் சென்னை ஆல்பர்ட் திரையரங்கில் நடைபெற இருப்பதால் எனது அன்பிற்கினிய நண்பர்களனைவரையும், தங்களின் குடும்பத்தாருடனும், நண்ப - நண்பிகளுடனும் வந்திருந்து இப்படக்குழுவிருக்கும், இப்படத்தின் இமாலய வெற்றிக்கும் தங்களின் வாழ்த்துக்களைத் தெரிவிக்குமாறு உரிமையோடு கேட்டுக்கொள்கிறேன். அனுமதி இலவசம்.... நன்றி!!

May 05, 2011

"அதிர்வு" இணையத்தை நடத்தும் கண்ணன் என்பவர் தமிழர்களின் எதிரிதான்!

இப்போது கண்ணனின் அதிர்வு இணையதளம், அன்மையில் மிக குறைந்த வயதில் கனடா பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழரான ராதிகா சீறிசபைஈசனைப் பற்றி தன்னுடைய அரிப்பை கொட்டி தீர்த்திருக்கிறது. கண்ணன் ஒரு பேட்டி கேட்டாராம், கொடுக்கவில்லையாம், உடனே, ஒரு கட்டுரை. அரிப்புக் கட்டுரை. கடல் அரிப்பைப்போல, தமிழ் இனத்தின் பிரிப்பதற்கான அரிப்பு இது.

யாழ்பாணம் குரும்பசிட்டியை சொந்த ஊராகக் கொண்டவரும், தற்போது லண்டனில் கணினித் துறையை சேர்ந்தவருமான சிவகணேசன் தில்லையம்பலம் (எ) கண்ணன் என்பவர் நடத்தி வரும் அதிர்வு இணையம், ஏதோ பல்லாண்டு காலமாய் தமிழர்களுக்கு அறிமுக இருப்பது போலவும், தமிழர்களின் குரல் போலவும் கற்பனையாக நினைத்துக் கொண்டு தறிகெட்டு, தான்தோன்றித்தனமாய் அவ்வவ்போது செய்திகளை வெளியிட்டு வருகிறது. 2009-ம் ஆண்டல்தான் இப்படி ஒரு இணையம் இருக்கிறது என்று தமிழ் மக்களுக்கு தெரியும்.

கடைசி கட்ட போரின் போது உலக கவனத்தை ஈர்த்து லண்டனில் உண்ணாவிரதம் இருந்த பரமேஸ்வரன் என்ற தமிழ் இளைஞனை, உண்ணாவிரதத்தின் போது 'பர்கர்' சாப்பிட்டார் என்று பணத்தை வாக்கிக் கொண்டு பெயர் தெரியாத சில ஆங்கில ஏடுகள் எழுதியவுடனேயே, கண்ணன் தன்னுடைய அதிர்வு இணையத்தில், தானே ஏதோ கண்டுபிடித்தது போல், இத்தனை டாலருக்கு பரமேஸ்வரன் பர்கரை மறைந்திருந்து சாப்பிட்டார் என்று செய்தி வெளியிட்டு உலகத் தமிழினத்துக்காக ஒரு சிறு தியாகம் புரிந்தவரை பற்றி தவறான செய்தியை பரப்பியது. இதனால் மனமுடைந்த பரமேஸ்வரன், லண்டனில் உள்ள நீதித்துறையை நாடி, செய்தி வெளியிட்ட ஆங்கில ஊடகத்தின் மீது பொய் குற்றச்சாட்டை எதிர் கொண்டு, கடைசியில் பரமேஸ்வரன் நேர்மையானவர் என்பதை நிருபித்தார். ஏதோ பாவம் தமிழராய் பிறந்துவிட்ட கண்ணன் மீது பரமேஸ்வரன் வழக்கு தொடுக்கப்படவில்லை. அன்று வழக்கு போட்டிருந்தால், தான் மறைமுகமாய் சிங்களத்திடம் பெற்ற அனைத்து பணத்தையும் இழந்திருப்பார். ஆனால், பரமேஸ்வரன் தற்போது தனக்கேன் வம்பு என தமிழர் பிரச்சனைகளிலிருந்து ஒதுக்கி வைத்ததில், கண்ணனின் பங்கு வெற்றி பெற்றது. புத்தியிருந்தால் அப்போதே கண்ணன் திருந்தி இருப்பார். ஆனால்....


தமிழகத்திலிருந்து வரும் நக்கீரனில் எழுதிய ஜெகத் கஸ்பர் என்ற திருட்டு சாமியார், உலகத் தமிழினத்திற்க துரோகம் இழைத்து வந்தபோது, உலக மக்களும் பல ஊடகங்கள் வழியேவும், பல அனுபவம் வாய்ந்தவர்கள் மூலம் திருட்டு சாமியாரின் செயல்பாடுகள் தெரிந்த போதும், இவரைப் பற்றிய ஒரு கட்டுரையை எழுதியதினால், இவரை தாக்கி அந்த திருட்டு சாமியார் நக்கீரனில் 4 வரிகளை எழுதினார். இதை பயன்படுத்தி, விளம்பரப்படுத்திக் கொண்டவர்தான் இந்த திருட்டு அதிர்வு கண்ணன். புத்தியிருந்தால் அப்போதே கண்ணன் திருந்தி இருப்பார். ஆனால்....


கனடா நாட்டில் இப்போது வாழ்ந்து வரும் நக்கீரன் என்ற புனைப்பெயருடைய பெரியவர், வேலுபிள்ளை தங்க வேலு என்பவர், ஆரம்ப காலம் தொட்டு விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாய் இருந்து வருபவர். இன்று வயதாகி விட்டாலும், தான்னால் ஏதாவது ஈழ மண்ணிற்கு செய்ய இயலுமா என தேடித் தேடி எழுதியும், செயல்பட்டு வருபவர். அவருடைய அனுபவம் கூட இல்லாதா, கண்ணன், தன்னுடைய அதிர்வு இணையத்தில் தவறாய் எழுதினார். இந்த எழுத்தைப்பற்றி, முதிர்ந்த அந்த பெரியவர், ஒரு வார்த்தையை கூட பதிலாய் தரவில்லை. சரியாக குட்டை வைத்தார். புத்தியிருந்தால் அப்போதே கண்ணன் திருந்தி இருப்பார். ஆனால்....

தமிழர் புனர்வாழ்வு கழகத்தை நிர்வகித்து வரும் ரெஜியின் முக்கியத்துவம், ஈழத்தை கடல் சீற்றம் கொண்டு, சுனாமி வந்தபோது, பலலாயிரம் ஈழ மக்களுக்கு அத்தனை உதவிகளையும் செய்து காப்பாற்றியதும், 2008, 2009 கடைசிகட்ட போர் முடியும் வரை ஈழ மண்ணில் உதவி புரிந்து வந்த மிகப் பெரிய அமைப்பை நிர்வகித்து வந்தும், வணங்காமண் என்கிற நிவாரணக் கப்பலை மறைமுகமாய் இருந்து இயக்கி, மக்களை சென்றடைய வேண்டும் என எண்ணி கடைசி வரை போராடியவருமான, புலிகளுக்கு உதவி செய்தவர் என்பதற்காக இன்டாபோல் தேடி வரும் நிலையில், ரெஜியால் நேரிடையாக பதில் சொல்ல முடியாததை தெரிந்து கொண்டு, ரெஜியை பற்றிய தவறான கட்டுரையை பரப்பியதோடு விடாமல், அவர் பெரும் பணத்தை கொள்ளையாடித்து விட்டார் என்ற பெய்யான பரப்புரையை மேற்கொண்டவர்தான் இந்த அதிர்வு கண்ணன். புத்தியிருந்தால் அப்போதே கண்ணன் திருந்தி இருப்பார். ஆனால்....


லண்டனுக்கு தமிழர்களின் விரோதியான மகேந்த ராஜபக்சே வந்தபோது, தன்னுடைய அதிர்வு இணையம் செயல்பட வில்லை என்ற பொய்யை சொல்லி, எதிர்ப்பாய் எவ்வித கட்டுரைகளையும் எழுதாமல், ராஜபக்சே லண்டனிலிருந்து திரும்பும் வரை காணாமல் போனவர்தான் இந்த அதிர்வு கண்ணன். இதை தமிழ் மக்கள் உணர்ந்த போதும், புத்தியிருந்தால் அப்போதே கண்ணன் திருந்தி இருப்பார். ஆனால்....


ஈழத்தின் கிழக்கு பகுதி இந்த வருடம் ஜனவரியில் மழையால் பல்லாயிரம் மக்கள் பாதிக்கப்பட்ட போது, அதற்காக லண்டன் தமிழர்கள் ஒன்று கூடி, அப்பகுதியில் நிவாரணம் மேற்கொள்ள என்ன செய்யலாம் என்று ஒன்று கூடிய போது, தான் ஊடக அமைப்பை ஒழுங்கு செய்வதாய் கடைசி வரை வாக்களித்து விட்டு, கடைசியல் ஒன்று கூடிய அந்த நிகழ்வையே உடைத்துவிட்டு, பின்னர் ஓடி ஒளிந்து கொண்டதோடு மட்டுமல்லாது, ஒன்று கூடிய தமிழர்கள் மேல் பழி சொல்லி அதிர்வில் கட்டுரை ஒன்றை தீட்டினர். இதனால், மழையால் பாதிக்கப்ட்ட மக்களுக்கு துரோகமிழைத்தவர்தான் கண்ணன் என்கிற தமிழ் துரோகி. புத்தியிருந்தால் அப்போதே கண்ணன் திருந்தி இருப்பார். ஆனால்....


தமிழினத்தின் மீது பற்று கொண்டு செயல்பட்டு வரும் பலரையும், உண்மையாக இருந்து வருபவர்களையும், சிங்களத்திடம் காசை வாங்கிக் கொண்டு, தன்னுடைய அதிர்வு என்ற இணையத்தில் தவறாய் தொடர்ந்து எழுதி வருகிறார். இவருடைய இணையத்திற்கு, பல்லாயிரம் பேர் வருகை தருவதாகவும் பொய்யான கணக்கையும் காட்டி வருகிறார். இதெல்லாம் விட கேவலமாய், ஆபாசங்களுக்கு முன்னுரிமையை கொடுத்து காணொளி காட்சி முதல் பதிவிட்டு வருகிறார்.

தற்போது, கனடாவில் முதன் முறையாக இளைய சமூகத்திலிருந்து தேர்வு செய்யப்பட்ட ஒரு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர், தன்னுடைய அதிர்வு இணையத்திற்கு செவ்வி வழங்கவில்லை என்றவுடன், தமிழர் என்றும் பாராமல், கேவலமாய் ராதிகா சீறிசபைஈசனைப் பற்றி எழுதியுள்ளார்.

இப்போது கே.பி என்ற சிங்கள அடிமையிடம் வேளை செய்து வரும் புலம் பெயர் துரோககளுடன் கண்ணன் கைகோர்த்துக் கொண்டு, அவர்களுக்கு சாதமான சூழலைப் பற்றி மெதுவாய் எழுத்தின் மூலம் ஊடூருவி எழுதி வருகிறார். தமிழகத்திலும் சில தமிழ் துரோகிகளோடு சேர்ந்து கொண்டு, தமிழகத்தில் உள்ளவர்களைப் பற்றியும் பொய்யை பரப்பியும் எழுதியும் வருகிறார்.

தமிழினம் பிளவுபட்டிருக்கும் சமயத்தில், நாம் அதிர்வைப்பற்றிய கட்டுரையை எழுத வேண்டாம், கண்ணன் திருந்தி விடுவார் என்று தப்பான கணக்கில் இருந்து விட்டோம். ஆனால், இவரின் சிங்கள முளையை உலகத் தமிழர்களிடம் காட்டியாக வேண்டிய சூழலை திரும்பவும் ஏற்படுத்தியானாலேயே இப்படியான ஒரு கட்டுரையை நாம் எழுதினோம். இப்படிப்பட்டவரை தமிழர்கள் முற்று முழுதாய் நிராகரிக்க வேண்டும். இவரின் முகத்திரை விரைவில் கிழியும் சமயம் வெகு தூரத்தில் இல்லை.


- வீரத்தமிழ்மகன்

February 21, 2011

பூங்காத்து திரும்புமா? ஏம்பாட்ட விரும்புமா?

"மலேசியா வாசுதேவன் நலமாக உள்ளார்" என்ற செய்தியைக் கேட்டு ஆனந்தத்தில் கண்கள் கலங்கியதும், உடனே அந்த மாமனிதன் பாடிய, நானும் என் தந்தையும் சேர்ந்து கடைசியாகப் பார்த்த, என் தந்தைக்கும், கிட்டத்தட்ட அனைவருக்கும் பிடித்த "முதல் மரியாதை" படத்தின் "பூங்காத்து திரும்புமா" என்ற பாடலையும், "ஆகாய கங்கை" என்ற பாடலையும் உடனே திரும்பத் திரும்பக் கேட்டேன். அதனை என் தளத்தில் பிரசுரித்து என் சந்தோசத்தையும் பகிர்ந்து கொண்டேன். ஆனால், அந்தச் சந்தோசம் நிலைக்காமல், சில தினங்களிலேயே.... "பூங்காற்று திரும்புமா?" என்றாகிவிட்டது. அவர் குரலில் உள்ள கம்பீரமும், கொஞ்சலும் அப்பப்பா.... மனிதர் வில்லனாக நடிக்கும்போது அவர் குரலில் உள்ள நக்கலும், திமிறும்.... நேரில் பார்க்கும்போது ஆச்சர்யத்தை ஏற்படுத்தும். சில ஆண்டுகளுக்கு முன் நேரில் பார்த்தபோது எந்தவித பந்தாவும் இல்லாமல் ஒரு குழந்தையாய் சிரித்துப் பேசியவர்... இன்று நம்மிடம் இல்லை. மனிதர் வாழ்க்கையில் நொந்து மன உளைச்சலுடன் இருந்தபோது இந்தத் திரையுலக பிரம்மாக்கள் எவரும் திரும்பிக்கூட பார்க்கவில்லை. இன்று வரிந்துகட்டிக்கொண்டு வாய் கிழியப் பேசுகிறார்கள்.... என்ன உலகம்.... சாயம் பூசுபவர்கள் என்பதை நிச வாழ்விலும் நிரூபிக்கின்ற இந்தக் கூட்டத்தில் இல்லாமல் "ஆகாய கங்கை"யில் அந்த மாமனிதனின் புனிதமான ஆத்மா கலந்து போகட்டும்.

- அதிகாலை நவின்






February 03, 2011

அதிகாலையின் இன்றைய சூடான செய்திகள்

அனுஷ்கா கவர்ச்சி புகைப்படத்தொகுப்பு
http://adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=21728&Itemid=177

தனுஷ் - அனன்யா நடிக்கும் "சீடன்" ட்ரெய்லர் வெளியீடு
http://adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=21721&Itemid=68

கவர்ச்சி நடிகை "சோனா" புகைப்படத்தொகுப்பு
http://adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=21729&Itemid=177

கவர்ச்சி நடிகை "கல்பனா பண்டிட்" புகைப்படத்தொகுப்பு
http://adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=21730&Itemid=177

2-G ஸ்பெக்ட்ரம் ஊழல் : முன்னாள் தொலைத்தொடர்பு அமைச்சர் ஆ.ராசா கைது
http://adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=21701&Itemid=54

காணொளி : கெய்ரோவில் வரலாறு காணாத மக்கள் வெள்ளம் : முபாரக் பதவி விலக போராட்டம்
http://adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=21704&Itemid=56

சமீரா ரெட்டி "நடுநிசி நாய்கள்" புகைப்படத்தொகுப்பு
http://adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=21720&lang=ta&Itemid=177

பிப்ரவரி-தூங்கா நகரம், யுத்தம் செய், நடுநிசி நாய்கள் : மூன்று படங்கள் ரிலீஸ்
http://adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=21719&lang=ta&Itemid=67

இசைஞானி இளையராஜாவின் இசையில் "அழகர்சாமியின் குதிரை"
http://adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=21707&Itemid=68

'அஞ்சலி' கிளாமர் புகைப்படத்தொகுப்பு
http://adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=21711&Itemid=177

மிக்ஸட் மிட்நைட் க்ஷிக்ஸ் கேலரி
http://adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=21706&Itemid=177

சீமானுக்கு தாமரை எழுதிய கடிதத்திற்கான பதில் : நிலவரசு கண்ணன்
http://adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=21695&Itemid=148

கவிஞர் மதுமிதாவின் "இரவு" புத்தக வெளியீடு : 'கலெக்டர் சாகாயம்' வெளியிட்டார்
http://adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=21698&Itemid=185

இந்த வார இராசி பலன்கள் : 02-02-2011 முதல் 08-02-2011 வரை
http://adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=21697&Itemid=75

நாம் ஃபவுண்டேஷன் - ரோட்டரி கிளப் இணைந்து ஆட்டோ வழங்கும் திட்டம்
http://adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=21710&Itemid=55

"அழகர்சாமியின் குதிரை" படத்தின் புகைப்படத்தொகுப்பு
http://adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=21708&Itemid=177

November 02, 2010

அதிகாலையின் இன்றைய சூடான செய்திகள்

கருணாநிதி மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்கவேண்டும் : பழ.நெடுமாறன்
http://adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=21060&Itemid=91

நல்ல சினிமா எடுப்பது 'தாய்மைப் போராட்டம்' மாதிரி : இயக்குனர் மிஷ்கின்
http://adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=21075&Itemid=68

பாக்யாஞ்சலி நடிகர் வேலு மீது போலீசில் புகார் : வெளிவரும் திரை மர்மங்கள்!
http://adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=21073&Itemid=68

'சிங்கம் புலி' நாயகியின் வாந்திக்கு ஆர்யா பிரதர்தான் காரணமா?
http://adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=21072&Itemid=68

நடிகை ரீமா சென் : தொடரும் மர்ம நபர் யார்? காதலரா?
http://adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=21071&Itemid=68

நடிகை சினேகாவின் ஆண் நண்பர்கள் லிஸ்ட்!
http://adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=21067&Itemid=70

'வேலாயுதம்' கிராமத்து கேரக்டரில் கலக்கும் மும்பை நடிகை ஹன்சிகா
http://adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=21066&Itemid=68

டைரக்டர் கொடுத்த டார்ச்சரில் 28 சிகரெட்டுகளை ஊதித்தள்ளிய உதட்டழகி நடிகை
http://adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=21063&Itemid=68

ஐ.டி. ஜோக் : "அப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க?" : நியாயமான ஒரு கேள்வி!
http://adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=21062&Itemid=9

தமிழக அரசே! கலெக்டர் சகாயத்தை களங்கப்படுத்தாதே! : கிறிஸ்தவ மக்கள் கொந்தளிப்பு
http://adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=21027&lang=ta&Itemid=163

உலக நாயகன் கமல்ஹாசனின் 'மன்மத அம்பு' பாடல்கள் 'லைவ் ரிலீஸ்'
http://adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=21041&Itemid=68

ரஜினியின் 'ஹரா' தீபாவளிக்குப் பிறகு ரிலீஸ்
http://adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=21039&Itemid=68

போராடும் புயல் நடிகை ஜெனிலியா
http://adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=21038&Itemid=68

கோட்டி படத்தின் ஆடியோ ரிலீஸ்!
http://adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=21037&Itemid=68

நேற்று உமாசங்கர், இன்று சகாயம்; தமிழக அரசின் பழி வாங்கும் படலம் தொடர்கிறது
http://adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=20947&lang=ta&Itemid=163

தபால் தலை வெளியீடுகளும் தமிழ்த் தலைவர்களும் : புதியமாதவி
http://adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=21035&Itemid=185

விடுதலைப்புலிகள் மீதான தடை இன்னும் தேவையா? இது என்ன ராஜநீதியோ...?
http://adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=20949&Itemid=148

அதிகாலையின் இன்றைய சூடான செய்திகள்

கருணாநிதி மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்கவேண்டும் : பழ.நெடுமாறன்
http://adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=21060&Itemid=91

நல்ல சினிமா எடுப்பது 'தாய்மைப் போராட்டம்' மாதிரி : இயக்குனர் மிஷ்கின்
http://adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=21075&Itemid=68

பாக்யாஞ்சலி நடிகர் வேலு மீது போலீசில் புகார் : வெளிவரும் திரை மர்மங்கள்!
http://adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=21073&Itemid=68

'சிங்கம் புலி' நாயகியின் வாந்திக்கு ஆர்யா பிரதர்தான் காரணமா?
http://adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=21072&Itemid=68

நடிகை ரீமா சென் : தொடரும் மர்ம நபர் யார்? காதலரா?
http://adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=21071&Itemid=68

நடிகை சினேகாவின் ஆண் நண்பர்கள் லிஸ்ட்!
http://adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=21067&Itemid=70

'வேலாயுதம்' கிராமத்து கேரக்டரில் கலக்கும் மும்பை நடிகை ஹன்சிகா
http://adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=21066&Itemid=68

டைரக்டர் கொடுத்த டார்ச்சரில் 28 சிகரெட்டுகளை ஊதித்தள்ளிய உதட்டழகி நடிகை
http://adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=21063&Itemid=68

ஐ.டி. ஜோக் : "அப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க?" : நியாயமான ஒரு கேள்வி!
http://adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=21062&Itemid=9

தமிழக அரசே! கலெக்டர் சகாயத்தை களங்கப்படுத்தாதே! : கிறிஸ்தவ மக்கள் கொந்தளிப்பு
http://adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=21027&lang=ta&Itemid=163

உலக நாயகன் கமல்ஹாசனின் 'மன்மத அம்பு' பாடல்கள் 'லைவ் ரிலீஸ்'
http://adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=21041&Itemid=68

ரஜினியின் 'ஹரா' தீபாவளிக்குப் பிறகு ரிலீஸ்
http://adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=21039&Itemid=68

போராடும் புயல் நடிகை ஜெனிலியா
http://adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=21038&Itemid=68

கோட்டி படத்தின் ஆடியோ ரிலீஸ்!
http://adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=21037&Itemid=68

நேற்று உமாசங்கர், இன்று சகாயம்; தமிழக அரசின் பழி வாங்கும் படலம் தொடர்கிறது
http://adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=20947&lang=ta&Itemid=163

தபால் தலை வெளியீடுகளும் தமிழ்த் தலைவர்களும் : புதியமாதவி
http://adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=21035&Itemid=185

விடுதலைப்புலிகள் மீதான தடை இன்னும் தேவையா? இது என்ன ராஜநீதியோ...?
http://adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=20949&Itemid=148

November 01, 2010

தமிழக அரசே! கலெக்டர் சகாயத்தை களங்கப்படுத்தாதே!:கிறிஸ்தவ மக்கள் கொந்தளிப்பு

தமிழக அரசே! கலெக்டர் சகாயத்தை களங்கப்படுத்தாதே!:கிறிஸ்தவ மக்கள் கொந்தளிப்பு
மதம் தாண்டி, மனிதத்தை நேசிக்கும் மாமனிதர் கலெக்டர் சகாயம்


03.10.2010 தேதியிட்ட ‘நம் வாழ்வு’ வார இதழில் “காந்தியின் மனசாட்சி” என்று தலைப்பிடப்பட்டு வெளிவந்த பேட்டி ஒன்றை வாசித்தேன். அது 5 பக்கங்களில் விரிந்திருந்தது. நாமக்கல் மாவட்ட ஆட்சியர் திரு.உ.சகாயம்,I.A.S., அவர்களின் மனந்திறந்த அந்தப் பேட்டி என் மனதைத் தொட்டது. முக்கியமான அரசுப் பணியில் இருக்கும் ஒருவர் இந்தக் காலத்திலும் இவ்வளவு நேர்மையாகவும், இத்துணைத் துணிச்சலோடும், தெளிவோடும், தீர்க்கமாகவும், அடித்தட்டு மக்களிடம் ஆத்மார்த்தமான பாசத்தோடும். கரிசனையோடும் இருக்க முடியுமா என்று ஆனந்த ஆச்சரியப்பட்டேன். எப்படியாவது இவருக்கு நான்கு வரி எழுதிப்போட்டுப் பாராட்ட வேண்டுமென எண்ணிக்கொண்டிருந்தேன்.

இரண்டு நாட்கள் கழித்து, அமெரிக்காவிலிருந்து, அநேக ஆண்டுகளுக்குப் பிறகு, எனது நண்பர் திரு.ஆல்பர்ட் தொலைபேசியில் என்னைத் தொடர்புகொண்டார்கள். எனக்கு இன்ப அதிர்ச்சி! ஏனைய பிற விசயங்களைப் பேசிவிட்டு இந்த விசயத்துக்கு வந்தார்கள். திருவாளர் உ.சகாயம், I.A.S. அவர்களைப் பற்றி மகிழ்ச்சியோடு நான் பகிர்ந்துகொண்டேன். ஆனால், ‘திருவாளர் உ.சகாயம் அவர்கள் மாவட்ட ஆட்சிப் பொறுப்பிலிருந்து மாற்றப்பட்டுவிட்டார்” என்று அவர்கள் கூறிய செய்தி என்னைத் துணுக்குறச் செய்தது. உண்மையிலேயே உள்ளம் நொந்துபோன நான் உண்மைத் தகவல்களைச் சேகரித்தேன். திரு ஆல்பர்ட், நாமக்கல் வேதியர் திரு.மரிய சூசை ஆகியோர் அனுப்பியுள்ள தகவல்களுள் சிலவற்றைக் கீழே தருகிறேன்.

கடந்த இரு ஆண்டுகளாக அரசுத் திட்டங்களையும், சிறப்புத் திட்டங்களையும் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் கொண்டுவந்துசேர்த்து எங்கள் மாவட்ட நலனுக்காக நேர்மையாகப் பாடுபட்ட எங்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் உயர்திரு உ.சகாயம் அவர்களை, இன்னும் ஒரு ஆண்டு பணிக்காலம் இருக்கும் நிலையில் திடீரெனப் பணி மாற்றம் செய்து, காத்திருப்போர் பட்டியலில் வைத்திருப்பது சிறுபான்மை இனத்தவர் மனதைப் புண்படுத்துவதாகவும், நாமக்கல் மாவட்ட நலனுக்கு முரண்பட்டதாகவும், சமத்துவ சமுதாயத்தை உருவாக்கப் பாடபடும் அனைத்து சமூக நல ஆர்வலர்கள் உள்ளத்தையும் நோகடிப்பதாகவும் உள்ளது.

எனவே, சிறுபான்மை இன நலனில் அக்கறையும், தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக உருவாக்க அனைத்து முயற்சிகளையும் எடுத்துவரும் தமிழக அரசு மேற்கண்ட மாறுதல் உத்தரவை இரத்துசெய்து ஆணை வழங்க வேண்டுமாய்ப் பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.

தங்கள் உண்மையுள்ள,
அன்பு குடிமக்கள், ஊர்ப் பொதுமக்கள், நாமக்கல் டவுன்பகுதி.

இது ஒரு சாம்பில்.

அடுத்து வருவது ஒரு நீண்ட, பணிகளை உள்ளடக்கிய கோரிக்கை மனு.
இவர் பொறுப்பேற்ற பின் நாமக்கல் மாவட்டத்தில் விவசாயிகள், கிராமப்புற மக்கள் மிகவும் முன்னேறி உள்ளனர். மாவட்ட ஆட்சியரை நாம் எளிதில் அணுக முடியும், ஏன், மாவட்ட ஆட்சித் தலைவரைத் தங்கள் கிராமத்திலேயே, தாங்கள் இருக்கும் இடத்திலேயே மக்கள் சந்திக்க முடியும். மக்கள் தங்கள் குறைகளை உடனே தீர்த்துக்கொள்ள ஏற்பாடு செய்திருந்தார்.


சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காகப் பல்வேறு பணிகளை மக்களோடு இணைந்து செயல்படுத்தினார். இப்படி மக்கள் நலனுக்காக அரும்பாடுபட்ட மக்கள் நல அதிகாரி திரு. உ. சகாயம் அவர்களை தமிழக அரசு எந்த வித முகாந்திரமுமின்றி, மக்கள் எண்ணத்திற்கு எதிராக, உடனடி மாறுதல் செய்திருப்பதை, அதுவும் அவர் பயிற்சிக்குச் சென்ற நேரம் பார்த்து மாறுதல் செய்துள்ளதை நாமக்கல் மக்களும் ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள ஒவ்வொரு குடிமகனும் வன்மையாகக் கண்டிக்க வேண்டும்.

நாமக்கல் மாவட்டத்தில் திரு.உ.சகாயம் அவர்களின் காலத்தில் நிறைவேற்றப்பட்ட, நிறைவேற்றப்பட்டுவரும் திட்டங்கள்

1. கிராம நிர்வாக அலுவலர்கள் அரசு விதிப்படி அந்தந்தக் கிராமத்திலேயே தங்குவதை உறுதி செய்தல்.
2. நாமக்கல் மாவட்டத்தில் மரம் நடுவதை ஒரு மக்கள் இயக்கமாக மாற்றி, ஒரு கோடி மரம் நடும் திட்டத்தின் மூலம் இதுவரை 15 இலட்சம் மரங்களை நட்டுச் சுற்றுச்சூழலைப் பாதுகாத்தார். “கட்டிடங்களுக்கு நடுவே கானகம்” என்ற திட்டம் இவரின் சீரிய சிந்தனைக்கு எடுத்துக்காட்டு.
3. மக்கள் குறைதீர்க்க ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்குச் சென்று நாள் முழுக்கக் காத்திருக்கும் நிலையை மாற்றி, ஆங்காங்கு அமைக்கப்பட்டிருக்கும் கணினி மூலம் ஆட்சித் தலைவருக்கு மின் அஞ்சலில் புகார் அனுப்பி, தீர்வு காணும் திட்டத்தை இந்தியாவிலேயே முதன் முறையாக அமல்படுத்தினார். “தொடுவானம்” என்ற பெயரில் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டு, உலக மக்களின் கவனத்தையே ஈர்த்தது.
4. மாவட்ட ஆட்சித்தலைவர் கிராம புறத்திற்குச் சென்று மக்களை நேரடியாகச் சந்தித்து, அவர்களோடு, அதிகாரிகளோடு தங்கி மக்களின் குறைகளைத் தீர்த்தார். கிராமப் புறங்கள் இந்நாட்டின் முதுகெலும்பு. கிராம மக்கள் இந்நாட்டின் கண்கள் என்பதை அங்கீகரித்தார். விவசாயிகளுக்காக விவசாயிகள் குறைதீர்க்கும் தினத்தைக் கிராமத்திலேயே நடத்திச் சாதனை புரிந்தார்.
5. அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளின் முன்னேற்றத்தில் அக்கறை கொண்டு செயல்பட்டார். சிறப்புப் பயிற்சி வகுப்புகள் மூலமும் இடைத் தேர்வுகள் மூலமும், சிறந்த மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்குவதன் மூலமும் அரசுப் பள்ளி மாணவர்கள், தனியார் பள்ளி மாணவர்களுக்கு இணையாக மதிப்பெண்கள் பெறச் செய்தார். எழை மாணவர்களின் கல்விக்கு முக்கியத்துவம் அளித்தார்.
6. மாவட்ட நிர்வாகத்தின் ஊழலை முற்றிலுமாக ஒழிக்க அரும்பாடுபட்டார். இலஞ்சத்திற்கு அப்பாற்பட்டவராக, தலைநிமிர்ந்து நின்றார். ஊழல் புரிந்த அரசு அதிகாரிகள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுத்தார். மக்கள் வரிப் பணத்தை யாரும் சுரண்டக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார்.
7. நுகர்வோர் பாதுகாப்பு கருதி, உணவுக் கலப்படம், போலி மருந்துகள், அதிக கல்விக் கட்டண வசூல் ஆகியவற்றைத் தடுக்கத் தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டார்.
8. கிராமத்தில் தங்கிப் பணிபுரியாத, மக்களுக்கு விரோதமாகச் செயல்பட்ட கிராம நிர்வாக அலுவலர்களைப் பணி நீக்கம் செய்து, மக்கள் நலனை உயர்த்திப்பிடித்தார். மாவட்ட ஆட்சித் தலைவருக்கு எதிராக மாநில அளவில் கிராம நிர்வாக அலுவலர் சங்கங்கள் போராட்டத்தில் குதிப்பதாக அறிவித்த சவாலைத் தயக்கமின்றிச் சந்தித்தார்.
9. விவசாய உற்பத்திப் பொருள்களை விவசாயிகள் உரிய விலைக்கு விற்க முடியாமல் வறுமையில் வாடுவதை உணர்ந்து “உழவர் உணவகம்” என்ற திட்டத்தின் மூலம் விவசாயிகள் தங்கள் விளைச்சலை உணவுப் பொருள்களாக மாற்றி விற்க ஏற்பாடுசெய்து, ஒவ்வொரு விவசாயியும் ஒரு நாளுக்கு ரூ.450/- முதல் ரூ.750/- வரை இலாபம் ஈட்டும் அளவிற்கு அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தினார்.
10. அரசு ஊழியர்கள், குறிப்பாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நீதிபதிகள் தங்களுடைய சொத்துக்களை வெளியிடுவது குறித்து அதிகாரிகள் தயக்கம் காட்டிய நிலையில், தானாக முன்வந்து, தன் சொத்துக்களை வெளியிட்ட முதல் ஐ.ஏ.எஸ். அதிகாரி திரு. உ. சகாயம் அவர்கள்.
11. நாமக்கல் மாவட்ட வெப்சைட்டில் நிர்வாகம் குறித்த அனைத்துத் தகவல்களையும் வெளியிட்டு, ஜனநாயக நாட்டில் வெளிப்படைத் தன்மை மிகவும் முக்கியமானது என்பதை அனைவருக்கும் உணர்த்தியவர்.
12. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தன்னுடைய பெயர், பட்டியலில் எந்த வரிசை எண்ணில் இருக்கிறது என்பதை வெளிப்படையாகத் தெரிந்து கொள்ள உறுதி செய்தவர்.
13. தான் பணிசெய்த ஒவ்வொரு இடத்திலும் மக்கள் நலனை மட்டுமே முன்னிறுத்தி, சவால்களைச் சந்தித்துவருபவர். பல ஆண்டுகளுக்கு முன்னரே பெப்சி நிறுவனத்தைக் காஞ்சிபுரத்தில், நுகர்வோர் விரோதமாகச் செயல்பட்டதற்காக, இழுத்து மூடி சீல் வைத்தவர்.
14. அரசு நலத் திட்டங்கள் அனைத்தும் இடைத்தரகர் இன்றி, முழுமையாக மக்களைச் சென்றடையச் செய்தார். ஊரக வேலை உத்திரவாதத் திட்டம், பொது விநியோகத் திட்டம், பேரிடர் நிர்வாகம், தகவல்பெறும் உரிமை ஆகிய திட்டங்களை நிறைவேற்றுவதில் இவருக்கு நிகர் இவரே.
15. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மலைப் பிரதேசங்களையும் அங்கு வாழும் ஆதிவாசி மக்களையும் மாவட்ட நிர்வாகத்தின் தனிக்கவனத்திற்குக் கொண்டு வந்தவர். புறக்கணிக்கப்பட்ட ஆதிவாசி மக்களின் முன்னேற்றத்திற்காக அரசு நலத் திட்டங்களை முறையாக அமல்படுத்தினார்; கடையேழு வள்ளல்களுள் ஒருவரான வல்வில் ஓரிக்குக் கொல்லிமலையில் விழா எடுக்கச் செய்தவர்.
16. மாற்றுத் திறனாளிகளின் நலனுக்குத் தனிக் கவனம் செலுத்தி, அரசின் கொள்கைப்படி மாற்றுத் திறனாளிகளின் பாதுகாப்பு, சட்டப்படி மாற்றுத் திறனாளிகளுக்குப் பல்வேறு சலுகைகள் எளிமையாகச் சென்றடையச் செய்தார். மாற்றுத் திறனாளிகளுக்கு “ஊன்றுகோல் திட்டம்” என்ற ஒன்றைக் கொண்டுவந்து முன்மாதிரியாகத் தானே ஒரு மாற்றுத் திறனாளியைத் தத்து எடுத்து எல்லோருக்கும் வழிகாட்டியாக இருந்ததைத் தொலைக்காட்சிகூட வியந்து பாராட்டியது.
17. முதியவர் பாதுகாப்பிற்காகச் சட்டம் இயற்றப்பட்டு இருந்தாலும் கிராமப் புறங்களில் பல முதியோர்கள் வயோதிக நிலையில் தம் குடும்பத்தினரால் புறக்கணிக்கப்பட்டு, உணவின்றி, உறைவிடமின்றி இருந்தவர்களை அடையாளம் கண்டு அவர்களில் பலருக்கு மறுவாழ்வளித்தவர். இந்தியாவிலேயே இந்தச் சட்டத்தின் மூலம் நடவடிக்கை எடுத்த முதல் மாவட்ட ஆட்சியரும் இவரே!
18. மாவட்டத்தின் ‘கிராம குறைதீர் மன்றம்’ அமைத்து, பல்லாண்டுகளாகத் தீர்க்கப்படாத பிரச்சினைகளைத் தீர்த்துவைத்து, சத்தமில்லாமல் சாதனை புரிந்தவர்!
19. தமிழ் மீது அதிகப் பற்றுக்கொண்ட நம் ஆட்சியர் இவர் மனுக்களைக்கூடத் தமிழில் தரவும், கையொப்பத்தை அழகுத் தமிழில் எழுத வேண்டுமென்றும் பொதுமக்களை ஊக்கப்படுத்தியவர்.
20. வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் மாவட்டத்தில் மக்களோடு உரையாடி, குறைகளைத் தீர்த்த எளிமையான ஆட்சித் தலைவர்.

ஆர்ப்பாட்டங்கள், உண்ணாவிரதங்கள், போஸ்டர்கள், துண்டுப் பிரசுரங்கள் போன்றவை மூலமாக ஆயிரக்கணக்கானோர் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். இது ஒரு நல்ல அடையாளம், ஆறுதலான செயல்கள். சாதாரண குடும்பத்தில் பிறந்து, வசதிகள் குறைந்த கிராமத்தில் வளர்ந்து, தம்முடைய சுய முயற்சியால் முன்னேறி, உயர்ந்த ஓர் அரசுப் பணிக்கு வந்துள்ள திரு. உ.சகாயம் அவர்களின் நேர்மைக்காய் நெஞ்சுயர்த்தும் பண்பைப் பாராட்டுகிறோம். ‘லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் உயர்த்து’ என்னும் அவரது விருதுவாக்கைப் போற்றுகின்றோம். குழந்தைகள், நரிக்குறவர்கள் தொடங்கி, நீதிபதிகள், செய்தித்தாள்கள்வரை அனைத்துத் தரப்பு மக்களும் ஊடகங்களும் திரு. உ.சகாயத்தின் சார்பாகக் குரல் எழுப்பியுள்ளது கொஞ்சம் ஆறுதலாக இருக்கிறது. ஆயினும், அரசியல்வாதிகள், லஞ்சப் பேர்வழிகள், கடமையைச் செய்யத் தயாராக இல்லாத “ச(கி)ம்பளக் காரன்கள்”, பொதுமக்களை ஒரு பொருட்டாக நினைக்காத சுயநலமிகள் போன்றோருக்குத் திருவாளர் உ.சகாயம் போன்றோர் மூலம் நாம் பாடம் புகட்ட வேண்டும். இவர் மீது வி.ஏ.ஓ.க்கள் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகள் அபத்தமானவை. அப்பட்டமான புளுகு மூட்டைகள். அதனால்தான், திருவாளர் சகாயம் அவர்கள் அவற்றிற்கு எல்லாம் சவால் விட்டு உள்ளார்.

மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை. ஒரு பக்தியான, பாரம்பரியமிக்க கத்தோலிக்கர் இவர். இறையரசின் மதிப்பீடுகளுக்குச் சக்தியான சாட்சிய வாழ்வு வாழும் இவரால் கிறிஸ்தவத்துக்கு கௌரவம் கிடைக்கிறது. அதே வேளையில் அவரது இந்த நற்செயல்களுக்காய் திருச்சபை துணை நிற்கிறதா? “நாங்கள் உங்களுக்குப் பக்கபலமாக இருக்கிறோம்” என்று சொல்லி, உற்சாகப்படுத்தி, ஊக்குவித்து, சத்தியம் வெல்ல தோழமையோடு தோள் கொடுக்கின்றோமா? திருவாளர் சகாயத்தின் மீது சுமத்தப்பட்ட குற்றங்களுள் ஒன்று, ‘இவர் கிறிஸ்தவ மதத்தைப் போதிக்கின்றார், இந்து மதத்தைப் பழிக்கின்றார்” என்பதாகும். உண்மையில், அவர் செய்த நற்செயல்களால் பயன் பெற்றவர்களுள் மிகப் பெரும்பான்மையினர் கிறிஸ்தவர் அல்லாதவர்களே. அதனால்தான், அவருக்காகக் குரல் எழுப்பியவர்களும் பெரும்பாலும் கிறிஸ்தவர் அல்லாதவர்களே. மதம் தாண்டி, மனிதத்தை நேசிக்கும் இந்த மாமனிதருக்கு நாம் அனைவரும் நம்முடைய ஆதரவையும், பாராட்டையும் தோழமையையும் தெரிவிப்பதும் செயல்படுத்துவதும் கட்டாய கடமையாகும். சிறப்பாக, தமிழகத் திருச்சபை, குறிப்பாக திருச்சபைத் தலைவர்கள் இத்தகைய கத்தோலிக்க அரசு அதிகாரிகளை உற்சாகப்படுத்தி, ஊக்குவித்தால் நியாயமான, துணிச்சலான, நீதிக்காக நெஞ்சுயர்த்தும் மக்கள் பணியாளர்கள் அதிகம் அதிகம் உருவாவார்கள். தங்கள் உழைப்பாலும் நேர்மையாலும் உயர் பொறுப்புக்களுக்கு வரும் ஓரிரு கிறிஸ்தவர்களுக்கு நாம் அங்கீகாரம் தர வேண்டும், அரணாக இருக்க வேண்டும்.

அப்போதுதான் இறையரசின் மதிப்பீடுகள் உயிர்பெறும், உயிர் தரும்.
அருட்திரு மரிவளவன் S.J.

Fr. Marivalan,S.J
National Director Apostleship of Prayer
Beschi Illam, Karur Road,
Dindigul - 624 001, India

நன்றி : திரு இருதய தூதன்

October 15, 2010

அப்துல் கலாமின் பிறந்த நாளை உலக மாணவர் தினமாக ஐ.நா. அறிவிப்பு

அப்துல் கலாமின் பிறந்த நாளை உலக மாணவர் தினமாக ஐ.நா. அறிவிப்பு
http://adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=20873&Itemid=54

விண்ணைத்தாண்டி வருவாயா இந்தி ரீமேக் : கவர்ச்சிப்புயல் 'ஏமி ஜாக்சன்' உறுதி
http://adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=20863&Itemid=68

'அடி மேல் அடி' த்ரிஷாவுக்கு போதாத காலம் : பாலிவுட்டா? கோலிவுட்டா??
http://adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=20862&Itemid=70

மக்கள் போற்றும் மாபெரும் கலைஞனாக வேண்டும் : சியான் விக்ரம்
http://adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=20861&Itemid=68

இசையமைப்பாளரை திருப்திப் படுத்தினாலே அந்தப் படம் ஹிட் : விஜய் ஆண்டனி
http://adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=20860&Itemid=70

மத்திய அமைச்சர் மு.க.அழகிரிக்கு பலத்த பாதுகாப்பு வழங்க கோரி மனு
http://adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=20875&Itemid=63

காமன்வெல்த் ஊழலை விசாரிக்க உயர்நிலைக்குழு : பிரதமர் அதிரடி உத்தரவு
http://adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=20870&Itemid=54

நவம்பரில் அதிபர் ஒபாமா இந்தியா வருகை : பொற்கோவிலில் வழிபடுகிறார்
http://adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=20867&Itemid=54

இந்தியப் பாதுகாப்புக்கு சீனா, பாகிஸ்தான் அச்சுறுத்தல் : தளபதி வி.கே.சிங்
http://adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=20865&Itemid=54

சென்னை ஆபரணத் தங்கம் விலை சரிவு : பவுனுக்கு ரூ.144 குறைவு
http://adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=20872&Itemid=53

October 12, 2010

இன்றைய கோலிவுட்டின் சூடான செய்திகள்

மிஸ்ஸிங் லேடி நமீதா தற்போது தென்னிந்திய திரையுலகின் ஹாட் பிராப்பர்டி
http://adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=20845&Itemid=70

'ஆண்மை தவறேல்' ஆண்களுக்கான படம் : இயக்குனர் குழந்தை வேலப்பன்
http://adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=20844&Itemid=244

செக்ஸி லிப்ஸை காயப்படுத்தியதால் நடிகை அப்செட் : குழப்பத்தில் ஜெயம் ரவி
http://adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=20841&Itemid=70

"சமந்தா சமத்து" : பிரபல முன்னணி ஹீரோவுக்கு 'சொக்குப்பொடி'
http://adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=20840&Itemid=70

இளைய தளபதியும் இடையழகி இலியானாவும்
http://adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=20838&Itemid=70

மொட்டையடிக்கவும் தயார் : இப்படியொரு தமிழ் நடிகை
http://adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=20837&Itemid=68

காமன்வெல்த் போட்டியில் 4X400 தொடர் ஓட்டத்தில் இந்தியாவுக்குத் தங்கம்
http://adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=20835&Itemid=200

குழந்தைகளை மையமாக வைத்து டாக்டர் சீனிவாசன் நடிக்கும் 'லத்திகா'
http://adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=20831&Itemid=68

வெங்கடேஷ் இயக்கும் 'வல்லக்கோட்டை' யில் ஐந்து 'கெட்டப்'புகளி்ல் அர்ஜுன்
http://adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=20830&Itemid=68