May 19, 2007

அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்-ஐ ஒருத்தர் எப்படி கிண்டல் பண்றாரு பாருங்க!

வினாடிக்கு 4.17 குழந்தைகள்

உலகத்தில் ஒவ்வொரு வினாடிக்கும் 4.17 குழந்தைகள் பிறக்கின்றனர். இறப்பு வினாடிக்கு 1.80 என்றும் அவற்றுள் சராசரியாக பிழைத்து வளரக்கூடிய குழந்தைகள் வினாடிக்கு 2.37...... இது பற்றி மேலும் அறிய கீழேயுள்ள இணைப்பை அழுத்தவும்
World Population Counter

"சுவாமி விவேகானந்தர்"

  • Women will work out their destinies—much better, too, than men can ever do for them. All the mischief to women has come because men undertook to shape the destiny of women.
  • “The earth is enjoyed by heroes”—this is the unfailing truth. Be a hero. Always say, “I have no fear.”
  • A few heart-whole, sincere, and energetic men and women can do more in a year than a mob in a century.
  • As soon as I think that I am a little body, I want to preserve it, to protect it, to keep it nice, at the expense of other bodies; then you and I become separate.
- சுவாமி விவேகானந்தர்







"Are you a God?" they asked the Buddha.
"No," he replied.
"Are you an angel, then?"
"No."
"A saint?"
"No"
"Then what are you?"
Replied the Buddha,
"I am awake."

May 18, 2007

"Do Not Believe"

Do not believe because you read it in a book,
Do not believe because you saw it on television,
Do not believe because science says so,
Do not believe because a famous person says so,
Do not believe because a wise person says so,
Do not believe because a wise person believes it,
Do not believe because your best friend believes it,
Do not believe because everyone else believes it,
Do not believe because others have believed it for a thousand years,
Do not believe because you've heard it many times before,
Do not believe because you are told you must,
Do not believe because others expect you to,
Do not believe because it gets you accepted
Do not believe because it will make your parents happy,
Do not believe because it will get you noticed,
Do not believe because you want to believe,
Do not believe because you can't afford not to,
Do not believe because it helps you cope,
Do not believe because you'd go mad if you didn't,
Do not believe because you must believe something
Do not believe because there's nothing else to believe,
Do not believe because it feels good to believe,
Do not believe because it makes sense,
Do not believe because your eyes tell you it is so,
Do not believe because it is your own experience,
Do not believe because it feels true,
Do not believe because you know it is true,
Do not believe any of this, Believe only that you are,
And do not even believe that,
For that is beyond belief.
- Peter Russel

May 15, 2007

"நான் மனிதனே!"

நான் சாதாரணமானவன், என் மனத்தில் பட்டதை எடுத்துச் சொல்லி யிருக்கிறேன். இதுதான் உறுதி. இதை நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும் என்று சொல்லவில்லை. ஏற்கக்கூடிய கருத்துக்களை உங்கள் அறிவைக் கொண்டு நன்கு ஆய்ந்து ஏற்றுக்கொள்ளுங்கள், மற்றதைத் தள்ளிவிடுங்கள்.

எந்தக் காரணத்தைக் கொண்டும் மனிதத் தன்மைக்கு மீறிய எந்தக் குணத்தையும் என்மீது சுமத்தி விடாதீர்கள். நான் தெய்வத்தன்மை பொருந்தியவனாகக் கருதப்பட்டுவிட்டால் மக்கள் என் வார்த்தைகளை ஆராய்ந்து பார்க்கமாட்டார்கள்.
"நான் சொல்லுவதை நீங்கள் நம்புங்கள், நான் சொல்லுவது வேதவாக்கு, நம்பாவிட்டால் நரகம் வரும் நாத்திகர்கள் ஆகிவிடுவீர்கள்"
என்று வேதம், சாத்திரம், புராணம் கூறுவதுபோலக் கூறி, நான் உங்களை அடக்குமுறைக்கு ஆளாக்கவில்லை, நான் சொல்லுவது உங்களுடைய அறிவு, ஆராய்ச்சி, உத்தி அனுபவம் இவைகளுக்கு ஒத்துவராவிட்டால் தள்ளிவிடுங்கள். ஒருவனுடைய எந்த கருத்தையும் மறுப்பதற்கு யாருக்கும் உரிமை உண்டு. ஆனால், அதனை வெளியிடக்கூடாது என்பதற்கு எவருக்கும் உரிமை கிடையாது.

சுயமரியாதை மனித தர்மத்தை அடிப்படையாக வைத்து, மனித சமுதாயத்திற்கு யாராவது தொண்டாற்ற வேண்டுமானால் முதலில் செய்யவேண்டியது, பகுத்தறிவுப்படி மக்களை நடக்கச் செய்வதும் சிந்திக்கச் செய்வதுமே யாகும். மனிதன் தனக்குள்ளாகவே, தான் மற்றவனைவிடத் பிறவியில் தாழ்ந்தவன் என்கிற உயர்வு தாழ்வு உணர்ச்சியைப் போக்கித் தன்னம்பிக்கையும், சுயமரியாதையும் பெற வேண்டும். சீர்திருத்தமும், சுயமரியாதையும், சட்டம் கொண்டு வந்து, வாக்கு வாங்கி நிறைவேற்றப் பெற்றுவிடலாம் என்று நினைப்பது ஒரு நாளும் முடியாத காரியம் மனிதன் உலகில் தன் சுயமரியாதையை - தன்மானத்தை உயிருக்குச் சமமாகக் கொள்ளவேண்டும். மானமுள்ள ஆயிரம் பேருடன் போராடலாம். மானமற்ற ஒருவனுடன் போராடுவது சிரமமான காரியம்.
நான் யார்?

நான் எனக்கு தோன்றிய, எனக்குச் சரியென்று படுகிற கருத்துக்களை மறைக்காமல் அப்படியே சொல்லுகின்றேன். இது சிலருக்குச் சங்கடமாகக்கூட இருக்கலாம். சிலருக்கு அருவருப்பாக இருக்கலாம். சிலருக்குக் கோபத்தையும் உண்டாக்கலாம் என்றாலும் நான் சொல்வது அத்தனையும் ஆதாரத்îதாடு கூடி உண்மைக் கருத்துக்களே தவிர பொய்யல்ல. எந்தக் காரியம் எப்படி இருந்தாலும் அரசியலில், பொது வாழ்க்கையில் கண்டிப்பாக மனித தர்மம் தவிர வேறு எந்தக் கால தர்மமோ, சமய தர்மமோ புகுத்தப்படக்கூடாது என்பதுதான் எனது ஆசையே ஒழிய, உலகத்தில் உள்ள மக்கள் எல்லாம் என் விருப்பம்போல்தான் நடக்க வேண்டும் என்பதல்ல. எனது பொதுவாழ்வில் நான் அறிவு பெற்ற பிறகு, பார்ப்பனரல்ல èதார் ஆட்சி என்றால் வலியப்போய் ஆதரித்தே வந்திருக்கிறேன். இதில் நான் மானம் அவமானம் பார்ப்பதில்லை. நான் என் ஆயுள் வரை யாரிடமும் ஓட்டுக் கேட்க மாட்டேன். எனக்காக இரண்டு நல்ல (புகழ்) வார்த்தைகள் சொல்லும்படி யாரிடமும் எதிர்பார்க்கமாட்டேன்.
"நீ ஒரு கன்னடியன் எப்படித் தமிழனுக்குத் தலைவனாக இருக்கலாம்?"
என்று என்னைக் கூடக் கேட்டார்கள். "தமிழனுக்கு எவனுக்கும் யோக்கியதை இல்லையப்பா" என்றேன். இதற்குக் காரணம், ஒரு தமிழன், இன்னொரு தமிழன் உயர்ந்தவனாக இருப்பதைப் பார்த்துச் சகித்துக் கொண்டிருக்கவே மாட்டான்.

பெரியார்

1879 - 1973


"கலாநிதி மாறனின் பதவியிறக்கம்"

"தருமத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்,
தருமம் மறுபடி வெல்லும்"

பாரம்பரியம் மிக்கத் தமிழகம், தமிழக அரசியல் களம் இன்னும் என்னென்ன கேலிக்கூத்துக்களைச் சந்திக்கப் போகிறதோ!பொறுத்திருந்து பார்ப்போம்!

May 14, 2007

காளையார்கோயில்

இங்குள்ள திருக்கோயில் வரலாற்றுச் சிறப்புமிக்கது. நான் பிறந்த மண்ணும் இதுதான். இது சிவகங்கை மாவட்டத்திலுள்ளது. ஆங்கிலேயர்களை எதிர்த்து வீரமரணம் எய்திய மருது சகோதரர்கள் ஆண்ட பூமி இது. 13 மற்றும் 14-ம் நூற்றாண்டில் திருஞான சம்பந்தர், சேக்கிழார், அப்பர், சுந்தரர் மற்றும் அருணகிரிநாதர் போன்றோர் இத்திருத்தலத்திற்கு வந்து ஆண்டவனைப் பாடி அருள் பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் பிறந்த ஒவ்வொருவரும் தெரிந்துகொள்ள வேண்டிய, பார்க்கவேண்டிய, படிக்கவேண்டிய ஒரு திருத்தலமாகும். இதுபற்றி மேலும் அறிய தயவுசெய்து கீழுள்ள இணைப்பை அழுத்தவும்.
Dinamalar.com






May 13, 2007

கலைஞர் அவர்களின் முதல் சட்டமன்றப் பேச்சு!

1957 – ல் குளித்தலைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு சட்டப்பேரவைக்குக் கலைஞர் 8 – ஆம் மாதம், நான்காம் நாள் கவர்னர் உரை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு தனது ‘கன்னி உரையை’ ஆற்றினார்.


“அவைத்தலைவர் அவர்களே! இன்று மேன்மை தங்கிய கவர்னர் அவர்களுடைய உரையைப் பற்றி நான் போற்றவும் வரவில்லை, தூற்றவும் வரவில்லை. என்னுடைய கருத்துரையை ஆற்றவே வந்திருக்கிறேன்”


என்பதுதான் அவர் சட்டமன்ற உறுப்பினராகப் பேசிய முதல் வாக்கியம்.

அன்னையே! வாழ்த்துகிறோம்

இந்த உலகத்தில் மனித ஜீவராசிகள் மட்டுமின்றி
எவை எவைகளுக்கெல்லாம்,
யார் யாருக்கெல்லாம்
"தாய்மை"
என்பதை என்னவென்று உணர முடிகிறதோ!
அவர்களுக்கெல்லாம், அவைகளுக்கெல்லாம்
"அன்னையர் தின வாழ்த்துக்களை"ச்சொல்லி
நாம் அனைவரும் அன்போடு கொண்டாடி மகிழ்வோம்.

எனது வேண்டுகோள்!

தயவு செய்து
உங்களனைவருக்கும்
அம்மாவின் பக்கத்தில் இருக்கும்
பாக்கியம் கிடைத்திருந்தால்...


தயவு செய்து இன்று மட்டுமாவது,
அந்த தாயைக் கட்டியணைத்துக்கொண்டு
அவள் காதுகளுக்குள்
அம்மா!
என்று அடிவயிற்றிலிருந்து சொல்லிப்பாருங்கள்....
அந்த உணர்வு சொல்லும்.....
இந்தப்
பிரபஞ்சத்துக்கும், தாய்க்கும், நமக்கும்
என்ன பந்தம் என்று....
முயற்சித்துப்பாருங்கள்!!

அம்மா நான்
உன்னை நினைத்துப்பார்க்கிறேன்.
ஏங்கித்தவிக்கிறேன்...
இன்று, இப்போது
நீ
என் அருகில்
இல்லையே என்று.......
- நவநீ

May 12, 2007




M - O - T - H - E - R
"M" is for the million things she gave me,
"O" means only that she's growing old,
"T" is for the tears she shed to save me,
"H" is for her heart of purest gold;
"E" is for her eyes, with love-light shining,
"R" means right, and right she'll always be,

Put them all together, they spell
"MOTHER,"
A word that means the world to me.




Howard Johnson (c. 1915)

May 11, 2007

கவனிக்கவேண்டியவை

வாகனம் ஓட்டும்பொழுது கவனிக்கவேண்டியவை ஏராளம் இருக்கிறது. ஆனால் நாம் அவற்றைக் கடைப்பிடிக்கிறோமா? குறைந்தபட்சம் தெரிந்துகொள்ளவாவது முயற்சிப்போம். இன்று "REAR VIEW MIRROR, SIDE MIRRORS" மற்றும் "BLIND SPOT" பற்றித் தெரிந்துகொள்வோம்.



Driving: Mirrors, Signal And Manoeuvre - video powered by Metacafe

"BLIND SPOT"



Learning To Drive: Blind Spots - video powered by Metacafe

"YIELD" or

"விட்டுக்கொடுத்தல்" அதாவது ஒருவர் அல்லது அளவான நபர்கள் செல்லும் இடங்களில் இன்னொருவருக்கு விட்டுக்கொடுத்தல் என்பது பொதுவான ஒன்று. அது வாகன ஓட்டுதலிலும் உண்டு. இங்கு அமெரிக்காவில் அதனை ஆங்கிலத்தில் 'YIELD' என்று சொல்வார்கள். அநேகமாக உங்களுக்குத் தெரிந்திருக்கும். இது தொடக்கத்தில் வாகனம் ஓட்டும்போது சற்று குழப்பமாகவும், கோபமாகவும் இருக்கும். போகப்போக பழகிவிடும். ஆனால் நம் இந்தியாவில் இதற்கென்று தனி விதிமுறையோ, அறிவிப்புப் பலகையோ, சிக்னலோ இல்லை. ஆனால் இங்கு வந்த பிறகு மிகத் தெளிவாக ஒன்று புரிகிறது. இவர்களால் அமெரிக்காவைத் தவிர வேறெங்கும் வாகனம் ஓட்ட முடியாது. குறிப்பாக இவர்கள் இங்கு 'கியர்' இல்லாத 'ஆட்டோ கியர்' வாகனங்கள் ஓட்டுபவர்கள்.
இதையெல்லாம் சொன்னால் "இந்தியன் தாத்தா" "COUNTRY FRUIT" "தேசத்தந்தை" என்று நம் இந்தியர்களே என்னைக் கேலி பேசுகிறார்கள். என்ன செய்ய? சரி அது போகட்டும்... இதனைத் தெளிவாக நீங்கள் புரிந்துகொள்ள கீழுள்ள வீடியோவைப் பாருங்கள். அவர்களாகவே 'YIELD' கொடுத்துச் செல்வார்கள், இதனைக் கண்ட அமெரிக்கர்கள் சிலர் கிண்டலாகவும், கேலிக்கூத்தாகவும் படமெடுத்துக் கொண்டுவந்து இங்கு அரங்கேற்றுவதுண்டு. அவற்றில் ஒன்றுதான் இந்த வீடியோ. அமெரிக்காவில் அனைத்துமே சீர்படுத்தப்பட்டுள்ளது என்பது உண்மைதான்..ஆனாலும் அத்துமீறல்கள், அகோர விபத்துக்கள் அதிகமாவே நடந்து கொண்டிருக்கிறது நாம் கண்கூடாக பார்க்கும் விசயம். ஆனால் இந்த வீடியோவில் யாருமே இல்லாமல் தாங்களாகவே விதிமுறைகளை வகுத்துக்கொண்டு, விட்டுக்கொடுத்து விபத்தில்லாமல் செல்வதைப் பார்க்கும் போது சற்று உதறலாக இருந்தாலும் பிரமிப்பை ஏற்படுத்துகிறது. மறக்காமல் அடுத்த பதிவையும் பார்க்கவும். ஒன்றுக்கொன்று தொடர்பு உண்டு, மேலும் அது உங்களுக்குத் தெளிவு படுத்தும் என்று நம்புகிறேன்.



கார் மற்றும் வாகனம் ஓட்டுவதென்பது ஒரு கலை. அதுவும் அமெரிக்க நெடுஞ்சாலைகளில் மிகக் கவனமாக ஓட்ட வேண்டும். விபத்துக்கள் அதிகம் நடக்கும், எல்லாமே மிக மோசமான விபத்துக்களாகத்தான் இருக்கும். முக்கியக் காரணம், அதிவேகம், வாகன நெருக்கங்கள் போன்ற பல காரணங்கள். எவ்வளவு கட்டுப்படுத்த முயற்சிகள் மேற்கொண்டும் தினந்தோறும் நடப்பவை நடந்துகொண்டுதான் இருக்கிறது.

நாம் முக்கியமாகக் கவனிக்க வேண்டிய விஷயங்கள் : 1.இங்கு அனைவருமே போக்குவரத்து விதிகளைக் கடுமையாக மதிப்பவர்கள். 2.குறிப்பாக இந்தியர்கள் மிக ஒழுக்கமானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 3.விதிகளை அதிகம் மீறுபவர்கள் அமெரிக்கர் மற்றும் மெக்சிகோவைச் சேர்ந்தவர்கள். 4.அதற்கும் முக்கியக் காரணங்கள் மது மற்றும் போதைப்பொருள் உட்கொள்வதுதான், கடுமையான தண்டனைகள், அபராதங்கள், சட்ட விதிமுறைகள் இருந்தும் குறைந்தபாடில்லை.

இதையெல்லாம் நினைக்கும்போது நம் இந்தியா ஆயிரம் மடங்கு சிறந்ததாகத் தோன்றுகிறது என்பது உண்மையே! இவையெல்லாம் ஒரு புறமிருக்க நாம் இந்தியாவில் எப்படி வாகனங்கள் ஓட்டுகிறோம் என்று நினைத்துப்பார்த்தால் தலை சுற்றுகிறது. அங்கு நம் சாலைகளில் ஓட்டும்போழுது எதுவுமே தெரியவில்லை. ஆனால் இங்கிருந்து அதை உன்னிப்பாகக் கவனிக்கும்போதுதான் மிக பிரமிப்பாகவும் அதே வேளையில் பயமாகவும் இருக்கிறது.

இங்கு நம் இந்திய நண்பர் டாக்டர் திரு.ஆதிராஜ் என்பவர் இதற்காக ஒரு தனி வளைப்பதிவையே வைத்திருக்கிறார். அவரின் வீடியோப் பதிவின் சிலவற்றை நான் இங்கு உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். இது அமெரிக்க வாழ் மக்களுக்கு மட்டுமல்ல, அகில உலக நண்பர்களுக்கும். சரி... இன்று 'ஹெட்லைட்' உபயோகிப்பது தொடர்பான ஒன்று.

May 10, 2007

அம்மா!

அடிவயிற்றில் இருந்து
சொல்லிப்பார்...
அழுகை வரும்..
அவள்தான் அம்மா...

அதென்ன விந்தை
நானுண்ண
அவள் பசியடங்குகிறது......


May 09, 2007

“அன்னையர் தினம்”

அதிகாலையில்
அழைத்து வாழ்த்துச் சொன்னால்
அன்னையின்
அயர்ந்த தூக்கம்
கெட்டுவிடும் என்று
அலுவலகம் சென்றவன்
அனுமதி பெற்று
அவசர அவசரமாகக் காரில்
பறந்து வந்தான்....

பார்வையாளர் நேரம் முடிவதற்குள்…
ஆதரவற்றோர் இல்லம் நோக்கி!



நவநீ

நான் ரசித்தது!
You can close the windows and darken your room
AND
You can open the windows and let light in
It is a matter of choice
Your mind is your room
Do you darken it
OR
Do you fill it with light?
- (Unknown) எங்கோ படித்தது!

அமெரிக்கா, கலிபோர்னியா மாகாணத்தில் வளைகுடாப் பகுதியில் (It's different - News, Views & Music(KZSU) Stanford 90.1 FM radio show) உள்ள வானொலி பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். அங்கு ஒலிபரப்பான பல நிகழ்ச்சிகளில் பதிவு செய்யப்பட்டவைகளை இங்குள்ள இணைப்பின் மூலம் கேட்கலாம். அதாவது பலருக்கு இதைக்கேட்கும் வாய்ப்பு கிடைப்பதில்லை. காரணம் அமெரிக்க வாழ்க்கை அப்படி. மேலும் நீங்கள் கேட்க இருப்பது ஒன்றல்ல, இரண்டல்ல...ஒரே நேரத்தில், கவிஞர் மு.மேத்தா அவர்களின் பேட்டி, இசைஞானி இளையராஜாவின் இசைத்துவம், திரைப்பட இயக்குனர் கௌதம் மேனன் பேட்டி, டாக்டர் ஞானசம்பந்தம் அவர்கள் நடுவராக பட்டிமன்றம், பாடகர் உன்னி கிருஷ்ணன், திருக்குறள், ஒய்.ஜி.மகேந்திரன் பேட்டி... இன்னும் எவ்வளவோ எல்லாம் ஒரே நேரத்தில் ஒவ்வொன்றாகக் கேட்டு மகிழ இங்கே 'க்ளிக்' செய்யவும்.Tamil

May 08, 2007

ப்ரகாஷ்ராஜ் பேட்டி

வேற்றுமொழிக்காரராக இருந்தாலும் மொழியின் முக்கியத்துவத்தை மிகத்தெளிவாகச் சொல்லியிருக்கிறார். அதானால்தான் இன்றும் அவரால் தனக்கென ஒரு இடத்தைப் பற்றிக்கொள்ள முடிகிறது. என்னைப் பொருத்தவரையில் அவர் ஒரு நல்ல நடிகன், கலைஞன் என்பதையும் தாண்டி நல்ல ஒரு ரசிகன். நான் நேரில் பார்த்த ஒரு காட்சி, நான் கடந்த ஆண்டு சென்னையிலிருந்த போது எனது நண்பனின் படத்திற்கு 'கால்ஷீட்' சம்பந்தமாக பார்க்கப் போயிருந்தோம். அன்று பலத்த மழை, காரை நிறுத்திவிட்டுப் பார்த்தால் 'மனிதர் மழையில் நனைந்துகொண்டு' எதையோ நினைத்துக்கொண்டு நின்று கொண்டிருந்தார். இது வெளித்தோற்றத்துக்கு வேண்டுமானால் அதிகப்பிரசிங்கித்தனமாக இருக்கலாம். ஒரு நல்ல கலை ரசனையுடைய, இந்த உலகத்தை ரசிக்கக் கூடிய ரசிகன் என்பதற்கு இதைவிட வேறென்ன சொல்ல முடியும்? சரி அவர் 'மொழி' பற்றி என்ன சொல்கிறார்....Please click'Heading'

புதிய கட்சி

எதிர்பார்த்தபடியே நடிகர் சரத்குமார் வெகுவிரைவில் (இரண்டு மாதத்திற்குள்) புதிய அரசியல் கட்சி துவங்குகிறார்.

"வீதிக்கொரு கட்சி உண்டு
ஜாதிக்கொரு சங்கம் உண்டு
நீதி கேட்க மட்டுமிங்கு நாதி இல்ல
இது நாடா இல்ல வெறுங்காடா?
இதைக்கேட்க யாருமில்லை தோழா"

வேறென்ன பாடுவது?...சரி பொருத்திருந்து பார்ப்போம்.

சுதந்திரம் எப்போது?? - திபெத்

திபெத்

சுதந்திரம் எப்போது?? - திபெத்

May 07, 2007

"சென்னை சங்கமம்" - 1

"சென்னை சங்கமம்"
கல் தோன்றி மண் தோன்றா காலத்து முன் தோன்றிய நம் தமிழ்மொழி, நமது கலாச்சாரம், கலை, இலக்கியம், இசை, பண்பாடு, வேதம், நமது கிராமியக்கலை இவற்றையெல்லாம் பார்க்கும்போது, நம்மையறியாமலேயே ஒரு வித ஈர்ப்பு, உணர்வு உண்டாகும். இவைகளையெல்லாம் நினைத்துப் பெருமைப்படக்கூடிய ஒரு நிகழ்ச்சி இது. இவற்றைப் பார்த்துப் பிரமித்துப் போனதோடு, தயவுசெய்து இதே பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள இன்னொரு வீடியோவையும் பார்க்கத் தவறாதீர்கள்! அது "கலாச்சாரச் சீர்கேடு" என்ற தலைப்பில் இருக்கும்.

"சென்னை சங்கமம்" - 2

"சென்னை சங்கமம்" - 3

"சென்னை சங்கமம்" - 4

"சென்னை சங்கமம்" - 5

"சென்னை சங்கமம்" - 6

"கலாச்சாரச் சீர்கேடு"

நாம் எங்கே போய்க்கொண்டிருக்கிறோம்?
எதிர்வரும் 20 - 25 ஆண்டுகளில் "இந்தியா உலக நாடுகளில் முதன்மையான நாடாக இருக்கும்" என்ற நமது கனவுகள் எங்கே? இந்தத் தலைமுறைகள் போய்க்கொண்டிருக்கும் பாதைகள் எங்கே? எதிர்கால இந்தியா இளைஞர்கள் கையில் என்பது உண்மைதான். அதே கையில் இருக்கக் கூடிய சிகரெட்'டைப் போல ஊதித் தள்ளிவிடுவார்களோ என ஒரு புறம் அச்சமாகவும் உள்ளது. எது எப்படியோ? நமது இந்தியா முன்னேறி உலக நாடுகள் வியக்கும் வண்ணம் உயர்ந்து நிற்கும் என்பதில் கடுகளவும் ஐயமில்லை. அதே நேரத்தில் அமெரிக்க மங்கையர்கள் போல அனைவரின் கையிலும் சிகரெட்-களும் உயர்ந்து நிற்கும். பிறகு அனைவரும் சொல்வார்கள் "தாயைப்போல பிள்ளை நூலைப்போல ஜீன்ஸ்" என்று. சிகரெட் பிடிப்பதென்று முடிவெடுத்தபின் யார் பார்த்தாலென்ன? சவூதி அரேபிய மோக்கா என நினைத்துக்கொண்டு கலாச்சாரத்தை சந்திசிரிக்க வைக்கும் இந்தத் தலைமுறையை .......ம்ம்...ஒன்றும் சொல்வதற்கில்லை. வாழ்க பாரதம்!!

May 06, 2007

இந்த வாரம் ஹரிஹரனின் குரலில்..



தவிப்பு

கையிலொரு குழந்தை
இடுப்பிலொரு குழந்தை - அந்தத் தாய்
சாலையின்

பாதியைக் கடக்கும்போது
'க்ரீன்' சிக்னல்...........

- நவநீ

உன்னி கிருஷ்ணன்

கர்நாடக இசையும் திரைப்பட இசையும் அவ்வப்போது சங்கமித்துக்கொண்டாலும், முழுக்க முழுக்க கர்நாடக இசையாகவே திரைப்படம் இருந்தால், 'பார்க்கும் கூட்டம் புரியாமலே தலையாட்டும் கூட்டமாக மட்டுமே இருக்கும்' என்று சொன்ன ஒரு கவிஞனின் வார்த்தை நிரூபனமாகிவிடும். எனவே இரண்டுக்கும் உள்ள வேறுபாடு, எந்தவகையில் கலந்திருந்தால் கேட்பதற்கு இனிமையாக இருக்கும் என்று கர்நாடக இசை மற்றும் திரைப்படப் பின்னனிப் பாடல் என்ற இரண்டிலுமே தேர்ந்த திரு.உன்னி கிருஷ்ணன் சொல்வதைப் பார்ப்போம்.




May 05, 2007

புதிய கட்சி

சரத்குமார் தொடங்கப்போகும் புதிய கட்சி பற்றி, அவரே சொல்கிறார்!

பகவான் ரமண மகரிஷி

அந்நிய நாட்டுக்காரர்களுக்கு தெரிந்த நமது மண்ணின் பெருமை, அருமை, அற்புதம், நடந்து கொண்டிருக்கும் மகிமைகள் பற்றி நமக்கும் தெரியவேண்டாமா? கலாச்சாரத் தொடர்பே இல்லாத அவர்களே வியந்து போகும் அரிய பெரிய விஷயங்களைப் பற்றி நாமும் தெரிந்து கொள்வோம்.

பகவான் ரமண மகரிஷி

அவருடைய வாழ்க்கை எப்படித் தொடங்கியது?

How to root out sexual impulse?

திருவாசகம் - 1

நமச்சிவாய வாழ்க! நாதம் தாழ் வாழ்க!!திருவாசகத்துக்குருகாதார் ஒரு வாசகத்துக்குமுருகார்!

திருவாசகம் - 2

திருவாசகம் - 3

திருவாசகம் - 4

திருவாசகம் - 5

திருவாசகம் - 6

திருவாசகம் - 7

திருவாசகத்துக்குருகாதார் ஒரு வாசகத்துக்குமுருகார்!

"காஞ்சிப் பெரியவர்"

'If U have more than U require, U R a Thief"

May 04, 2007

"இசைஞானி இளையராஜா"

தொடர்ந்து "இசைஞானி இளையராஜா"வின் பேட்டி வரும்....

நானுனை நீங்கமாட்டேன்! நீங்கினால் தூங்கமாட்டேன்!

"கவிஞர் வாலி" "இசைஞானி இளையராஜா"

நம்மூரு நையாண்டி மேளக்கச்சேரி பாப்போமா? 'க்ளிக்' பண்ணுங்க!

May 03, 2007

பூங்காத்து திரும்புமா?

என்னைப் பொருத்தவரையில் எத்தனை முறை இந்தப் பாடல்களைக் கேட்டாலும், மனதுக்குள் எங்கோ ஒரு மூலையில் ஒரு சுகமான 'வலி' இருப்பதை உணரமுடிகிறது. உங்களுக்கு??

நிலாவே வா

பனி விழும் இரவு

கண்ணே கலைமானே!

மன்றம் வந்த தென்றலுக்கு..

என்ன சத்தம் இந்த நேரம்??

May 02, 2007

கவிப்பேரரசு வைரமுத்துவின் திரையுலக முதல் பாடல்

துள்ளியெழுந்தது பாட்டு

பாலம் இடிப்பதற்குமுன் பெயர் மாற்றத்திற்கு நாம் என்ன செய்யப் போகிறோம்?

விஸ்வஹிந்து பரிஷத் இராமர் பாலத்தை இடித்தால் நாடு தழுவிய போராட்டம் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கதுதான். ஆனால் 'நாசா' கண்டுபிடித்த பழம்பெரும் பாலத்திற்கு 'ஆதாம் ப்ரிட்ஜ்' என்று பெயர் வைத்ததுபற்றி ஏன் வாய் திறக்கவில்லை. ஆக பிரச்சினை அதல்ல, எல்லாமே தேர்தலையும், இந்திய அரசியலையும் உள்நோக்கத்தில் வைத்துக்கொண்டுதான் செயல்படுகிறது. இந்தியர்களாகிய நாம் என்ன செய்ய வேண்டும்? முதலில் அதற்குக் குரல் கொடுப்போம். ஒவ்வொரு இந்தியனும் சிந்தித்து செயல்பட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். To view Dinamalar please click here.
Welcome To Dinamalar.com - Leading National Tamil Daily

பேராசிரியர் இராமநாதன் அவர்களின் பேட்டி :

புவிக்கோளம் சூடாகிக் கொண்டிருக்கிறது; அதன் விளைவுகளை 2000வது ஆண்டில் உணரலாம்’ என்று 20 ஆண்டுகள் முன்னரே கூறினார் பேரா. வீரபத்ரன் ராமநாதன். தி நியூ யார்க் டைம்ஸ் இதை முதல் பக்கத்தில் வெளியிட்டது. ஹார்வார்ட், பிரின்ஸ்டன் விஞ்ஞானிகள் இந்தக் கூற்றை ‘நான்சென்ஸ்’ என்று இகழ்ந்தார்கள். ஆனால், ராமநாதன் சொன்னதை அறிவியல் உலகம் ஏற்றுக்கொள்ளும் கட்டாயம் ஏற்பட்டது.

இராமநாதன் அவர்கள் :கும்பகோணத்திலிருந்து 5 கி.மீ. தொலைவிலுள்ள ஒரு கிராமத்தில் என் தாத்தா விவசாயியாக இருந்தார். பிறந்தது சென்னையில். பிறகு திருச்சி, மதுரை, பங்களூரு ஆகிய இடங்களில் படித்தேன். அப்பா ராணுவத்தில் இருந்த பின் விற்பனையாளராக மாறினார். அது எங்களைப் பல ஊர்களுக்கும் கொண்டு சென்றது. பங்களூரில் பள்ளிப் படிப்பை முடித்தபின் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் எஞ்சினியரிங் படிக்கச் சென்றேன். செகந்திராபாதில் குளிர்சாதனத் துறையில் சிறிதுகாலம் பணியாற்றினேன். அப்போது தான் எனக்குப் பொறியியல் பிடிக்கவில்லை என்பதைக் கண்டுபிடித்தேன்.

பேராசிரியர் இராமநாதன் அவர்கள் 'தென்றல்' (அமெரிக்கா) மாத இதழுக்கு அளித்த மிக மிக உபயோகமான பேட்டியைத் தொடர்ந்து படிக்க, தயவு செய்து 'தலைப்பை'க் 'க்ளிக்' செய்யவும். நீங்கள் 'தென்றல்' மாத இதழின் வாசகர் இல்லையெனில் இலவசப் பதிவு செய்துகொள்ளவும்.
பேரா.வி.ராமநாதன்

ஹரிஹரன் குரலில்.....




'தண்ணீர் தேசம்' - கவிப்பேரரசு வைரமுத்து

அனுபவம் வேண்டுமா –
இளமையை இழ…
ஆயுள் வேண்டுமா –
போகம் இழ...
கவிதை வேண்டுமா –

உன்னை இழ…
காதல் வேண்டுமா –
இதயத்தை இழ….
வளர்ச்சி வேண்டுமா –

தூக்கத்தை இழ…
வரவு வேண்டுமா –
வியர்வையை இழ…

என் தந்தை எழுதிய "உண்மையான உழவனுக்குத் திருநாளேது" என்ற கவிதைக்கு கிடைத்த பரிசு இந்தத் 'தண்ணீர் தேசம்'. (அந்தக் கவிதையை வெகுவிரைவில் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.) அப்போதுதான் நான் இதனைப் படிக்க நேர்ந்தது. இது ஒவ்வொரு தமிழனும் படிக்க வேண்டிய ஒன்று. எங்கு போகிறோம் என்று தெரியாமலேயே வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த உலகத்தில் நாமும் சேர்ந்து ஓடிக்கொண்டிருக்கும் இந்தக் கம்ப்யூட்டர் யுகத்தில் கம்ப்யூட்டர் மூலமாகவே நீங்களும் படிக்கவேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன்.
(பின் குறிப்பு : நான் கம்ப்யூட்டர் கற்றுக்கொள்வதற்கு முன்பே படித்துவிட்டேன்)
தொடர்ந்து படிக்க தயவு செய்து கீழுள்ள இணைப்பைக் 'க்ளிக்' செய்யவும்.
http://navneethsmart.googlepages.com/ThanneerDesam.pdf



April 30, 2007

மே தின வாழ்த்துக்கள்!!

உலகத்திலேயே மிகப் புனிதமான நீர்
உழைப்பாளனின் வியர்வை...
இந்த மேதின நாளில் அனைத்துலக உழைக்கும் தோழர்களுக்கும் வாழ்த்துக் கூறுவோம்.
மே தினம்!
உழைப்பவர் சீதனம்!!
என்று கையை மேலே உயர்த்தி, அர்த்தம் தெரியாத அந்த ஐந்து ஆறு வயதுகளிலேயே என் தந்தையோடு சேர்ந்து ஊர்வலங்களில் கோசம் போட்டதை நினைவுகூர்கிறேன்.
இந்த நாளில் நாம் "மாவீரன் பகத்சிங்"கை நினைவு கூர்வதும் மிகப்பொருத்தமாக இருக்கும். பகத்சிங் பற்றி தமிழில் ஒரு முழுமையான திரைப்படம் இதுவரை வரவில்லையே என்ற வருத்தம் இருந்தாலும் நாம் இந்த வீடியோத் தொகுப்பின் மூலம சிறிது ஆறுதல் அடைவோம்.

"மாவீரன் பகத்சிங்"

"மாவீரன் பகத்சிங்"

"மாவீரன் பகத்சிங்"

"மாவீரன் பகத்சிங்"

"மாவீரன் பகத்சிங்"

ஏ இந்தியனே!

இந்திய மண்ணில் பிறந்த ஒவ்வொருவரும், ஏன்? இந்தியா மீது அக்கறை கொண்ட, இந்தியாவைப் பற்றி படித்த, ஆராய்ச்சி மேற்கொண்டிருக்கும் வெளிநாட்டவர்களுக்கும் கூடத் தெரிந்த, அறிந்த ஒரு விசயம் என்னவெனில்,
“இந்தியாவுக்கும் அதாவது இராமேஸ்வரத்திற்கும், இலங்கைக்கும் (சீறிலங்கா) இடையே இராமாயண காலத்தில், கிட்டத்தட்ட 17,50,000 ஆண்டுகளுக்கு முன், த்ரேதா யுகத்தில் ‘வானர சேனை’களால் சாட்சாத் இராமபிரான் மேற்பார்வையில், முன்னிலையில் பாலம் (வரதி) ஒன்று கட்டப்பட்டது”.
இது படித்ததோடு சரி. உண்மையா? பொய்யா? யாருக்காவது தெரியுமா? ஆனால் ‘நாசா’ (NASA) ஆராய்ச்சியாளர்கள் அந்தப் பாலம் இன்றும் இருப்பதாகக் கண்டுபிடித்திருக்கிறார்கள். சந்தோசமான விசயம்.

“ஒவ்வொரு இந்தியனும் வேதனைப்படக்கூடிய விசயமும் கூட”

காரணம் அதற்குச் சூட்டியிருக்கக்கூடிய பெயர் “ஆதாம் பாலம்” (ADAM BRIDGE).

ஏ இந்தியனே!
இதுவரை நீ
இளிச்சவாயனாக இருந்தது போதும்!
இனிமேலாவது விழித்துக்கொள்!!


'லண்டன் பாலம்' (LONDON BRIDGE) மற்றும் அமெரிக்காவில் உள்ள 'கோல்டன் கேட் ஆப் அமெரிக்கா' (GOLDEN GATE) போன்றவற்றை "இராமர் பாலம்" என்றோ அல்லது "லட்சுமணர் பாலம்" என்றோ நாம் பெயர் சூட்டினால் அவர்கள் ஒத்துக்கொள்வார்களா? இன்னொரு உலக யுத்தம் வெடிக்கும்.

இந்தியனே!
தமிழனே!! சிந்தித்துப்பார்!!!
இதற்காக நீ செய்யப்போவது என்ன?
குறைந்தபட்சம் இந்த விசயத்தை
உனக்குத் தெரிந்த வட்டத்துக்குச் சொல்
காலம் பதில் சொல்லும்!

நீ உன் கடமையைச் செய்தால்…..

பாலம் யார் கட்டியது? யார் மேஸ்திரி வேலை பார்த்தார்? எத்தனை சித்தாள் வேலை செய்தார்கள்? அதில் எந்தெந்த சாதிக்காரன் என்ன பங்கு வகித்தான் என்பதெல்லாம் அடுத்த விசயம்.

பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் நடந்த இராமாயணம், மஹாபாரதம் போன்ற மானுடம் போற்றும் இதிகாசங்களைக் கற்பனை என்று கேலி பேசிக்கொண்டிருக்கும் அரைவேக்காடுகளைக் கண்ணத்தில் அறைந்தாற்போல் விஞ்ஞானம் இன்று பல உண்மைகளைக் கண்டுபிடித்திருக்கிறது, "கல் தோன்றி மண் தோன்றா காலத்து முன் தோன்றிய மூத்தகுடி" என்று பேசுவது எத்தனை தூரம் உண்மை? நம் பாரம்பரியம் என்ன? நம் வரலாறு என்ன? அதில் எத்தனை புதிர்கள் அடங்கியிருக்கின்றன? எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் இந்திய மண்ணில் தோன்றிய மனிதனின் வாழ்க்கை முறை எப்படி இருந்தது? மனிதன் எப்படி வாழ்ந்தான்? நமது கலாச்சாரம் என்ன? நமக்கும் இலங்கைக்கும் உள்ள உறவுகள் எப்படி? இப்படி எத்தனையோ கேள்விகளுக்கு விடை சொல்லப்போகும் இந்த விண்வெளிப் புகைப்படங்களைப் பாருங்கள்.

நமது பாரம்பரியம், வரலாறு, கலாச்சாரம் இவைகளெல்லாம் ஆராய்ச்சியாளர்களுக்கும், விஞ்ஞானிகளுக்கும் வேண்டுமானால் வேண்டாத ஒன்றாக இருக்கலாம். ஆனால் இந்த ப்ரபஞ்சத்தில் பிறந்த ஒவ்வொரு மனிதனுக்கும், ஆன்மீகப்பாதையில் ஆர்வம் கொண்ட ஒவ்வொரு ஜீவராசிக்கும் இந்தியக் கலாச்சாரம் எப்படிப்பட்டது, நமது தொடக்கம் என்ன? நமது மூலம் யார்? இந்த உலகத்தின் ஒவ்வொரு அசைவிலும் நம் இந்தியப் பங்கீடு என்ன? நாம் எப்படிப்பட்ட பாரம்பரியம் மிக்கவர்கள் என்றெல்லாம் புரியும். ஆக,
எனதருமை தோழர்களே!

உங்களின் குரல் ஓங்கி ஒலிக்கட்டும்!

நமது சக சகோதரர்களுக்கும் இதனைச்சொல்லுங்கள்!!

விதைத்து வைப்போம், முளைக்கும்போது முளைக்கட்டும்
ஆனால் நாம் விதைக்கக்கூடிய ஒவ்வொரு விதையும் ஆலவிருட்சங்களாக அணி வகுக்கட்டும்.

நவநீ
இதுபற்றி முழுவதும் அறிய மேலே தலைப்பை 'க்ளிக்' செய்யவும்.
பின் குறிப்பு : இதுபற்றி மெய்லில் பெற தயவுசெய்து தங்களின் மெய்ல் முகவரியை எனக்கு அனுப்பவும். எனது குறிக்கோள்!! இந்த விசயம் உலகத்தின் எந்த மூலையில் இந்தியன் இருந்தாலும் அவன் இதுபற்றித் தெரிந்து "குரல்" கொடுக்கவேண்டும்.


நல்லவர்கள் நினைப்பது ஒன்றுதான் நடப்பதில்லை..

நம் தமிழ்நாட்டில்....- ஆம் அது இன்றும் பொருந்தும். எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன் சிம்மக்குரல் கொடுத்த ஒரு மாவீரனை நாம் எல்லாம் மறந்திருக்கமாட்டோம்.

வீரபாண்டியக் கட்டபொம்மன் - ஜாக்சன் துரை வீரவசனம்

வீரவசனம் - போருக்குப் போகுமுன்

பாஞ்சாலங்குறிச்சிப் போர்!

போருக்குத் தயாராகுங்கள்!!

பாஞ்சாலங்குறிச்சிப் போர்ப்படை - வீரபாண்டியக் கட்டபொம்மன்

வீரபாண்டியக் கட்டபொம்மன்

சுதந்திரத்தைச் சும்மா வாங்கிவிடவில்லை

"தமிழகமே ஒரு பெரிய கள்ளுக்கடையாக மாறுகிறபோது"

திருக்குறளுடன் நாம் எந்தவிதமான உறவு வைத்துக்கொள்ள வேண்டும்?
நாம் விரும்பும் வகையில் உறவுகொள்ள நமக்கு முழுச் சுதந்திரம் இருக்கிறது. இந்த உறவின் தன்மையை வகுத்துக்கொள்ள வேண்டியது நாம்தாம்.திருவள்ளுவரை மேடைப் பேச்சில் வியந்து பாராட்டலாம். அவருடைய பேரறிவைக் குறட்பாக்களை அள்ளி வீசி நிரூபிக்கலாம். ஒரு குறளுக்கு ஒன்பது விளக்கங்களைச் சொல்லிச் சபையோரை வியப்பில் ஆழ்த்தலாம். குறளின் ஆங்கில மொழிபெயர்ப்பை "எடுத்துவிட்டுப்" பேச்சாளர் தன் ஆங்கில ஞானத்தையும் வெளிச்சம் போட்டுக் காட்டலாம்.வள்ளுவருக்கு இணையான மேதை இன்று இல்லை என்றும் முன்னர் இருந்ததில்லை என்றும் நாளை தோன்றப் போவதில்லை என்றும் சூளுரைக்கலாம். திருவள்ளுவருக்குப் பெருமை சேர்கிறதோ இல்லையோ பேச்சாளரின் வாய் வீச்சு தொடரும்போது அவர் மெத்தப் படித்த மேதாவி என்பதைச் சபை ஏற்றுக்கொள்ளும்படி ஆகிவிடும்.

மேடைப் பேச்சாளர் தன் புலமைக் கொடியை நிலைநாட்டத் திருக்குறளைச் சற்று விரிவாகக் கற்றிருக்க வேண்டும் என்ற அவசியம்கூட இல்லை. ஆங்காங்கே வாகாகச் சில குறள்களைப் பொறுக்கி நெட்டுரு செய்திருந்தாலே போதுமானது.பல்வேறு சந்தர்ப்பங்களுக்கும் பொருந்தி வருவதுபோல் அக்குறள்களின் தேர்வு அமைந்திருந்தால் சொற்பொழிவாளர் கெட்டிக்காரர்தான். அரசியல் மேடைகளில் எந்தெந்த குறள்கள் ஜொலிக்கும் என்பது அவருக்குத் தெரியாமலா இருக்கும். கைவசம் இருக்கும் குறளுக்குத் தோதாகப் பேச்சின் தலைப்பு அமையவில்லை என்றால் அதை இழுத்து மடக்கிக் கைவசப்படுத்திக் கொள்வதும் மேடைப் பேச்சுக்குரிய சாமர்த்தியங்களில் ஒன்றுதான். சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்ல ஆரம்பத்தில் சிறிது கூச்சமாகவே இருக்கும். கூச்சம் மனித ஜன்மங்களுடன் இணைந்து வந்துகொண்டிருக்கும் ஒரு பழைய வியாதி. ஆனால் கைதட்டல் தரும் பரவசம் அக்கூச்சத்தை இருந்த இடம் தெரியாமல் அடித்துவிடும்.திருக்குறள் சார்ந்த புலமையை மெய்யாகவே தேடிச் செல்வது மற்றொரு வகையினரின் இயல்பு. இவர்களின் நோக்கம் சமுதாய நலன் சார்ந்தது. வள்ளுவரின் கருத்துகளைச் சமுதாயத்தில் பரப்பினால் மக்கள் மேல்நிலையை அடைந்துவிடுவார்கள் என்பது இவர்கள் நம்பிக்கை. தமிழ் வாசகர்கள், படைப்பாளிகள், படிப்பாளிகள் ஆகியோரின்ஏகோபித்த பாராட்டைப் பெற்று வருகிறவர்கள் இவர்கள். திருக்குறளைத் தமிழ்ச் சமூகத்தில் பரப்பும் தொண்டைத் தலைப் பொறுப்பாக வைத்துக் கொண்டிருக்கும் இவர்களுடைய செயலபாடுகள் பொதுவாக இரண்டு தளங்களில் நிகழ்கின்றன. எழுத்து வடிவத்திலும், பேச்சு வடிவத்திலும். மேடைப் பேச்சாளர்கள் நூலாசிரியராகவும், நூலாசிரியர்கள் மேடைப் பேச்சாளராகவும் இயங்குவது இயற்கை.இரண்டு ஆற்றல்களையும் சரிசமமாகக் கொண்ட இரட்டைத் துப்பாக்கிகளும் நம்மிடையே உண்டு.திருக்குறளைச் சமுதாயத்தில் பரப்ப விரும்புகிறவர்களின் ஆவேசங்கள் கட்டுக் கடங்காதவை. இவர்களை நாம் அவ்வப்போது சந்திக்கிறேன். தமிழ்ச் சமுதாயத்தில் ஒவ்வொருவரும் - ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்ற வேறுபாடு இன்றி - குறளை முழுமையாக மனப்பாடம் செய்ய வேண்டும், திருக்குறளைக் கட்டாயப் பாடமாக்கினால்கூடத் தவறில்லை என்றார் ஒரு நண்பர். திருக்குறளை முழுமையாகக் கற்றவர்களையே தமிழ் அறிஞர்கள் என ஒப்புக்கொள்வேன் என்றார் மற்றொருவர். திருக்குறளை முழுமையாகக் கற்றறியாதவர்களின் டாக்டர் பட்டங்களைத் தான் மதிப்பதில்லை என்றும் சேர்த்துக்கொண்டார்.

தமிழர்களுக்கு வேதம், குரான், பைபிள், பகவத் கீதை, தம்மபதம் எல்லாம் குறள்தான் என்றார். இவர்களுடைய ஆவேசங்கள் மீது எனக்கு மதிப்பு உண்டு. 1330 குறள்களையும் ஒவ்வொரு தமிழனுக்கும் ஒப்பிக்கத் தெரிந்து விட்டால் தமிழ்ச் சமூகம் மேல்நிலையை அடைந்துவிடுமா என்று நான் என் ஆவேச நண்பரிடம் கேட்டேன். உறுதி, உறுதி, உறுதி என்று மூன்று முறை சொன்னார்.நமக்குத் தேவை மனப்பாடத் தகுதியா அல்லது முற்றாக நம்பி ஏற்கும் குறள்களின் கருத்துகளையேனும் வாழ்வில் புகுத்தி அவற்றின் வலிமையை நடைமுறையில் உணர்ந்துகொள்வதா என்று கேட்டேன். இந்த உணர்வு வலுவடையும்போதுதானே திருவள்ளுவர் மீது அதிக நம்பிக்கை கொள்வோம் என்றும் சொன்னேன். குறள் வாழ்வுக்கு வழிகாட்டும் ஒரு நூல். இன்றும் நம்மைச் செம்மைப் படுத்திக்கொள்ளவும் செழுமைப்படுத்திக்கொள்ளவும் அந்நூல் உதவும் என்று நம்பத் தொடங்கும்போதுதான் குறளுக்கும் நமக்குமான உறவு துளிர்க்கத் தொடங்குகிறது. வாழ்வுக்கு வழிகாட்டும் நு‘லை நாம் எப்படிப் பயன்படுத்த வேண்டும்? மேடைப் பேச்சுக்கு உபயோகப்படும் கருவியாகவா? நினைவாற்றலை வளர்க்க ஒரு பயிற்சியாகவா? புலமைப் பிரகடனத்திற்கான முகாந்தரமாகவா?நாம் வாழ்வின் தளத்தில் ஏழ்மைப்பட்டு நிற்கிறோம். பொருள் சார்ந்த ஏழ்மையும் கலாச்சாரம் சார்ந்த ஏழ்மையும் இக்காலத்தில் நம்மை வாட்டுகின்றன. பொது வாழ்க்கையில் ஒழுக்கம் என்பது காலாவதியாகி விட்டது. பண உறவுகள் வாழ்க்கைக்கு அடிப்படையான சகல உறவு களையும் கபளீகரம் செய்துகொண்டிருக்கின்றன. மனித நேயம் என்ற சொல்தான் எழுத்திலும் பேச்சிலும் அதிகம் அடிபடும் சொல். வாழ்க் கையில் அருகிப் போயிருப்பதும் இந்த மனிதநேயம்தான்.

உலகியல் சார்ந்து கால்களை மண்ணில் ஊன்றி நிற்க வேண்டும் என்று ஆசைப் படுகிறோம். இந்த உலகத்துக்குரிய இன்பங்களைத் துறக்காமல், பொறிகளை ஒடுக்காமல், மற்றொரு உலகத்தை எண்ணி ஏங்காமல், மனைவி, குழந்தைகளுடன் வாழ விரும்புகிறோம்.இந்த நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்ள சில அடிப்படை நியதிகளை இளமையிலேயே நாம் தெரிந்துகொண்டுவிட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும். ஒரு சந்தர்ப்பத்தில் ஒரு செயலுக்குத் துணையாக நிற்பது மற்றொரு சந்தர்ப்பத்தில் பொய்த்துப் போய்விடுகிறது. நிரந்தரமான நியதிகள் என்று எதுவுமே கிடையாதா? இருந்தால் அவற்றைத் தொகுத்துக்கொள்வது வாழ்க்கைக்கே ஊன்றுகோல் போல அமையுமே.

இவ்வாறான தேடல் உருவாகும் மனங்களுக்குத்தான் பொது நெறிகளை வற்புறுத்தும் பேரிலக்கியம் தேவையாக இருக்கிறது. நாம் உலகியலில் பற்றுகொண்டிருப்பதால் திருவள்ளுவரின் உறவு மிக இணக்கமாக அமைந்துவிடுகிறது. ஒரு ஊரின் வரைபடம் ஒன்று நம் கைவசம் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அது சரியான வரைபடம்தானா? அந்த வரைபடம் சார்ந்து பயணத்தை மேற் கொள்ளும்போது அது சுட்டும் இடங்களுக்கு நாம் போய்ச் சேர்ந்தால் அந்த வரைபடம் சரியானதுதான்.

சில நோய்களுக்குச் சுயமாகச் சிகிச்சை செய்துகொள்ள வழிவகைகள் கூறும் நு‘ல்கள் இருக்கின்றன. அவற்றின் உதவியால் நோய்களைக் குணப்படுத்திக்கொள்ளும்போது அந்த நு‘ல் களின் மீது நம்பிக்கை கொள்கிறோம்.வாழ்க்கையின் அடிப்படையையே கற்றுத் தர முற்பட்ட நு‘ல் வள்ளுவம். அது தமிழ் வாழ்வுக்குரிய நெறியை வகுத்திருக்கிறது. மதிப்பீடுகளை மொழிக்குள் துல்லியப்படுத்தித் தருகிறது. திருவள்ளுவர் 2000 வயதான இளைஞர்.இன்றும் அவர் உயிர்ப்புடனே இருக்கிறார்.அந்த உயிர்ப்பை நமக்கு உணர வைப்பது அவருடைய மொழி ஆற்றலும் சிந்தனையின் கூர்மையும். அதில் பழமையின் பாசி இன்னும் படியவில்லை.வாழ்க்கையைச் செம்மைப்படுத்திக்கொள்ளத் திருக்குறளைப் பயன்படுத்தும் போதுதான் அந்தப் பெருநு‘லுக்குரிய மதிப்பை உண்மையாகவே அதற்கு அளிக்கிறோம். 1330 குறள்களையும் நாம் மனப்பாடமாகக் கற்றுவிடலாம். குறுகிய நேரத்தை ஒதுக்கி ஓராண்டில் முடித்துவிடலாம். ஆனால் அந்த மனப்பாடத் தகுதி நம் வாழ்க்கையில் கடுகளவு மாற்றத்தைக்கூட உருவாக்காது. குறளைக் கற்று அதன் பொருளை நாம் நுட்பமாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

புரிந்துகொள்ளப் பல உரைகள் இருக்கின்ன. அந்த உரைகள் நமக்கு உபயோகமானவை தான். ஆனால் குறளுக்கு நாம் அளிக்கும் பொருள் உரைகள் சார்ந்து நிற்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. உரையாசிரியர்களுக்குள் கருத்து வேற்றுமைகள் இருக்கின்றன. உரைகளை ஏற்க வேண்டும் என்ற நிலை இருந்தாலும்கூட எந்த உரையைத் தேர்ந்தெடுப்பது என்ற முடிவை நாம்தாம் எடுக்க வேண்டியிருக்கிறது.

நாம் நமக்குச் சொந்தமான உரைகளை விவேகத்துடன் உருவாக்கிக்கொள்ள முடியும். உரைகளின் உதவியுடன் நாம் உருவாக்கும் அர்த்தங்கள் மூலப் பாடத்துக்கு முரண்பட்டு நிற்கக்கூடாது. இதன் பொருள் திருவள்ளுவர் ஒன்று சொல்ல நாம் அதை மற்றொன்றாகப் புரிந்துகொள்ளக்கூடாது என்பதுதான். திருவள்ளுவரை நாம் நண்பராகத்தான் பாவிக்க வேண்டும். இதற்குமுன் எந்த நூற்றாண்டிலும் இல்லாத இளமையை அவர் சென்ற நூற்றாண்டில் - இப்போது நாம் தாண்டி வந்திருக்கும் நூற்றாண்டில் - பெற்றிருக்கிறார்.

அவர் மிகப் பெரிய பெருமையை அடைந்தததும் சென்ற நூற்றாண்டில்தான். எந்த அறிவையும் புனிதப்படுத்தினால் அது அந்நியப்பட்டுப் போய்விடும். நடைமுறையிலிருந்து பின்னகர்ந்து சடங்குக்குள் சென்று விழும். சடங்கும் சம்பிரதாயமும் தோன்றிவிட்டால் பூசாரிகள் தோன்றிவிடுவார்கள்.திருக்குறள் மக்களுக்கான நூல். அது நிரந்தரமான உண்மைகளைக் கூறுகிறது என்றாலும்கூடக் காலத்துக்கு காலம் அவற்றில் சில குறள்கள் அழுத்தம் கொள்கின்றன. கால மாற்றத்தில் முன்னகர்ந்திருப்பவை பின்னகர்ந்தும் பின்னகர்ந்தவை முன்னகர்ந்தும் வரக்கூடும். காலத்தை வென்று நிற்கும் செவ்விலக்கியங்களின் குணம் இது.

இன்றைய காலத்துக்கு ஏற்ப பகுத்தறிவுப் பார்வையும் சமத்துவம், சம நீதி சார்ந்த பார்வையும் திருக்குறள் மீது ஏறுகின்றன. அந்நிலை இயற்கையானது தான். பொது ஒழுக்கம் சீரழிந்து இவ்வொழுக்கத்தை மீண்டும் வென்றெடுக்க வேண்டும் என்ற உணர்வு தலைதூக்குகிறபோது திருவள்ளுவரின் ஒழுக்கம் சார்ந்த கருத்துகள் மேலோங்கும்.சுதந்திரப் போராட்ட காலத்தில் அரசியல்வாதிகள் "கள்ளுண்ணாமை" என்ற அதிகாரத்தை மேடையில் பல குறள்களைச் சுய நம்பிக்கையுடன் சொல்லியிருக்கிறார்கள். இன்றைய அரசியல்வாதிகளால் அப்படிக் கூற முடியும் என்றுதோன்றவில்லை. தமிழகமே ஒரு பெரிய கள்ளுக்கடையாக மாறுகிறபோது - அந்த நாட்கள் வெகு தொலைவில் இல்லை - "கள்ளுண்ணாமை" மீண்டும் ஓங்கி ஒலிக்கத் தொடங்கலாம்.

இப்படித்தான் பேரிலக்கியங்கள் தங்கள் முகங்களை மாறி மாறி ஒளிரச் செய்து காலத்தைத் தாண்டி வருகின்றன. திருக்குறளைப் பின்பற்றித் தம் வாழ்க்கையைச் செம்மைப்படுத்திக்கொண்டவர்கள் அது பற்றிப் பேசலாம்.
திரு.வி.க.வும் மு.வ.வும் அவர்களைப் போல் எண்ணற்ற தமிழர்களும் திருக்குறள் நெறிகளைக் கடைப்பிடித்துத் தம் வாழ்வைச் செம்மைப்படுத்திக் கொண்டவர்கள். அவர்களைப் போன்றவர்கள் அறிவார்கள் திருக்குறளின் வலிமையை. அவர்களைப் போன்றவர்களால்தான் திருக்குறள் மீது ஆழ்ந்த நம்பிக்கையை மக்களிடையே உருவாக்கவும் முடியும்.

திருக்குறளை முழங்கும் பிரச்சாரப் பீரங்கிகளிடம் "நீங்கள் குறள் நெறிக்கு ஏற்ப வாழ்ந்து வருகிறீர்களா?" அல்லது அவ்வாறு வாழவேனும் முயற்சிக்கிறீர்களா? என்று கேட்க மக்களுக்கு உரிமை உண்டு.அவ்வாறு கேட்பவர்கள்தான் திருவள்ளுவரின் நண்பர்கள்.

தனது மரணத்தைத் தானேகூட படம்பிடிக்க நேரும்

தமிழனுக்கு இன்னும் எத்தனை நாட்களுக்கு இந்தக்கொடுமை??
இந்தத் தாயன்னையின் மடிமீது ரத்த ஆறுகள்தான் ஓடுகின்றது.....

சுவாமி விவேகானந்தரின் 'சிகாகோ' சொற்பொழிவு

April 29, 2007

என் தேசமே!! நீ எப்படியிருக்கிறாய்?

விமான விபத்து - Mid-Air Collision DHL 757 and Tu-154

சுவாமி விவேகானந்தரின் 'சிகாகோ' சொற்பொழிவு

Hinduism- Part 1 of 5

Hinduism- Part 2 of 5

Hinduism - Part 3 of 5

Hinduism- Part 4 of 5

Hinduism- Part 5 of 5

நாகேஷ் கதை சொல்கிறார்

கவியரசு கண்ணதாசன்

பட்டாபட்டி "ட்ரௌசர்" விவேக் விளக்கம்

மனதை ஒரு நிலைப்படுத்த முடியுமா?

முடியுமென்றால் முயற்சித்துப் பாருங்கள்!!
நீங்கள் இதைக் கேலிக்கூத்தாகக் கூட நினைக்கலாம்…
பரவாயில்லை, செய்த பிறகு உங்களுடைய அனுபவத்தை எனக்குச் சொல்லுங்கள்!
  • நீங்கள் 'பெஞ்ச்' அல்லது 'நாற்காலி'யின் மீது அமர்ந்திருந்தால் உங்களுடைய வலது காலை சற்று மேலே தூக்கி கடிகாரச் சுற்றில் (Clock-wise) ஒரு வட்டம் போடுங்கள்

  • இப்போது காலை நிறுத்தாமல் உங்களின் வலது கையால் காற்றில், அதாவது உங்களின் முகத்திற்கு நேராக எண் ஆறு (6) போடவும்...........

......................................................


  • என்ன? தலை சுற்றுமே!!
    முயற்சித்துப்பாருங்கள்!! முடியவில்லையா??
    சிரித்ததுதான் மிச்சம்… ஆம்…..


    உங்கள் காலின் டைரக்ஷன் மாறிவிடும், காலை ஒரு நிலைப்படுத்தினால் கையின் டைரக்ஷன் மாறிவிடும்….

    மனதைக் கட்டுப்படுத்த முடிகிறதா? மூளையைக் கட்டுப்படுத்தினாலும் உடலையும் மனதையும் ஒருநிலைப் படுத்த உங்களால் முடிந்தால், கண்டிப்பாக நீங்கள் எதையும் சாதிக்கமுடியும்.

    இது அறிவியல் சம்பந்தப்பட்ட உடலியல் கூற்று என்றாலும் ஒரு பெரிய ஆன்மீகத் தத்துவம் அடங்கியிருக்கிறது.

    "உங்கள் ஆத்மா உங்களை எங்கு இழுத்துச்செல்கிறதோ அங்கு உங்களால் செல்ல முடியும் என்றால் நீங்கள் பேறு பெற்றவர். ஆத்மா எப்போதுமே நல்ல திசையை நோக்கியே இழுத்துச்செல்லும்"

    "உங்களால் அதை நோக்கிச் செல்ல முடியாமல் உடலை நோக்கி ஆத்மாவை இழுக்க முடியும் என்றால் நீங்கள் சாதாரண மனிதர். அதைத்தான் எல்லோருமே செய்கிறோம்"



ஆக அதை ஒரு நிலைப் படுத்தி விட்டோம் எனில் நாம் எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்து விடலாம்.

  • கால் செய்வது சாதாரண மனிதன் செய்வது
  • கை காற்றில் செய்வது ஆத்மா செய்வது
    ஆத்மாவும் உடலும் ஒன்று சேர்ந்தால் மனிதன் உயர்நிலையை அடைவான்
  • ஒரு மனிதன் ஒரு நேரத்தில் ஒரு பாதையில்தான் செல்லமுடியும். இரண்டு வேறுபட்ட வழிகளில், பாதைகளில் செல்ல முடியும் என்றால், நீங்கள் சாதாரணப் பிறவி இல்லை.


    இப்படி இன்றைக்கு இந்தப் ப்ரபஞ்சத்தில் ஒரு சிலரே உள்ளனர். நாமும் முயற்சிப்போம்!! முடியும்!!!

    - நவநீ (ஆக்கம்: யாரோ - நன்றி) எங்கோ படித்தது


April 28, 2007

Who is God and What?

A speech from Mahatma Gandhi where he reasons the existence of a benevolent god put to a montage of images. speech Mahatma Gandhi god love truth malevolent benevolent good light peace indefinable mysterious unseen power felt defies perceive transcends senses reason who why what know rule god persist pure death life untruth darkness supreme ( more )

கண்டுகொண்டேன்!

கண், காது
கை, கால் என
எல்லாவற்றையுமே
இரண்டாகப் படைத்த
இறைவன்
இதயத்தை மட்டும்
ஏன்
ஒன்றாகப்படைத்தான்?
இன்றுதான் தீர்ந்தது
எனது பல நாள் குழப்பம்

ஆம்…
அந்த இன்னொன்று இருப்பது
உன்னிடத்தில்….

நவின் - சென்னை

April 27, 2007

அழகழகழகழகழகழகே.....

தமிழீழம் பாடல் : அழகே! அழகே!! தமிழழகே!!!

இதுதாங்க நம்ம மொழியோட அழகு

பேரிழப்பு

நேற்று உன் கண்களையே
பார்த்துப் பேசிக்கொண்டிருந்த நான்…..
கையிலிருந்த என்
கவிதைத் தொகுப்பையும்! தவற விட்டேன்
தயவுசெய்து

என் கவிதைத்தொகுப்பை
மாத்திரமாவது திருப்பிக்கொடு….


நவநீ

அம்மாவுக்கு
அசைவச் சாப்பாடு
ரொம்பப் புடிக்கும் - அவள்
அப்பாவுக்கும் எங்களுக்கும்
பறிமாறிவிட்டுச் சட்டியில்
மீதமிருப்பதைச் சின்னவனுக்கு
நாக்கு நீளமென்று - எனக்கு எடுத்துப்
பெரியவனுக்குத் தெரியாமல் பதுக்கிவைப்பாள்
அவள் குடிப்பதென்னவோ
வழக்கம்போல "பழைய கஞ்சி"தான்...
தாய்மை
பாலா - சென்னை

தமிழனுக்கென்று "ஒரு கொடி" இருக்கக் கூடாதா??

வினா எழுப்புகிறார் - தமிழ்க்கம்பீரம் "வைகோ"

"வைகோ" - 2

"வைகோ" - 3