June 02, 2007

"வெள்ளையம்மா"

‘ராமு….ராமு… என்ன இன்னும் தூக்கமா? கோழி கூப்டுருச்சி, எப்ப நீ அடுப்பப் பத்தவச்சு டீ போடறது? எந்திரிப்பா…ஆளுக வந்துருவாக” என்று சுப்ரமணி தான் கொண்டுவந்த பால் கேனோடு எழுப்புகிறான். ம்…. நல்..லா ம்… அசந்து தூங்கிட்டம்பா… என்ற முனகலோடு கொட்டாவி விட்டுக்கொண்டே ராமு எழுந்து வந்து மூஞ்சியைக் கழுவிவிட்டு, “கொண்டா, என்ன இன்னிக்கி பாலு கம்மியாருக்கு” என்று வாங்கிக்கொண்டான். “எருமைக்குத் தவுடு கிவுடு நல்லா வச்சாத்தானே! பாலு நெறயக் குடுக்கும்” என்று அடுப்பைப் பற்ற வைக்கிறான். ராமுவின் டீயைக் குடித்தால்தான் அந்தப் பகுதி விவசாயிகளுக்கு வயலில் வேலை செய்யமுடியும். அந்தப் பகுதிக்கே ஒரே ஒரு டீக்கடைதான். அதற்கு பால் சப்ளை செய்வது, சுப்ரமணிதான்.

சுப்ரமணி ஒண்டிக்கட்டை, கட்டைப் பிரம்மச்சாரி. அவனுக்குச் சொந்தம் என்று சொல்லிக்கொள்ள நான்கே நான்கு எருமை மாடுகளும், இரண்டு கன்றுகளும்தான். அதில் கறக்கும் பாலை இந்த டீக்கடையில் ஊற்றுவதும், காலையிலும் மாலையிலும் ஓசியாகக் கிடைக்கும் டீயைக்குடிப்பதும், எருமைகளை மேய்த்து, குளிப்பாட்டி அழகு பார்ப்பதும், அவ்வப்போது சந்தைக்குச் சென்று, ஊரில் உள்ளவர்களுக்கு வேண்டிய சாமான்களை வாங்கிவந்து கொடுப்பதும்தான் அவன் வேலை. ஊரில் உள்ளவர்களுக்கு சுப்ரமணி ஒரு பெரிய உதவியாக இருப்பதோடு, தன் தகப்பன் விட்டுச்சென்ற மூன்று ஏக்கர் நிலத்தைப் பராமரித்துக் கொள்வதும்தான் வாழ்க்கை. தவறாமல் வருடா வருடம் பழநி ஆண்டவருக்கு மாலை போட்டு, விரதம் இருந்து, கால்நடையாய் நடந்து மலைக்குப் போய் வந்தவுடன் வீடு தவறாமல் பஞ்சாமிர்தம் கொடுப்பதுதான் அவனது பெரிய கடமை. ‘எலேய்! சுப்ரமணி!’ என்று அவனைவிட வயதில் சின்னவர்கள் கூட கூப்பிடும் அளவுக்கு சுப்ரமணி செல்லப்பிள்ளை. ஆனால் மாலை போட்டிருக்கும்போது மட்டும், அனைவரும் “சாமி” என்று மரியாதையாக அழைப்பார்கள். அந்த வாழ்க்கை சுப்ரமணிக்கு ரொம்பப் பிடித்திருந்தது. ஒரு நாள் கொட்டும் மழையில் தலையில் சாக்கை மடித்து கொங்கானி போட்டுக்கொண்டு, ஊர்த்தலைவர் மகன் பக்கத்துக் கிராமத்துக்குப் பள்ளிக்குச் சென்றதைப் பார்த்து, மனது கேட்காமல், ஓடிவந்து தான் வைத்திருந்த குடையைக் கையில் கொடுத்துவிட்டு, அவன் போட்டிருந்த சாக்கை இவன் வாங்கிக்கொண்டு, “எரவமாடு மேய்க்கறவனுக்கு எதுக்கிய்யா பட்டன் கொடை, நீ படிக்கிற புள்ள இந்தா கொண்டு போய்யா” என்று கொடுத்துவிட்டு, அந்த பிஞ்சு முகத்தில் வந்த சந்தோசக் களிப்பில் சந்தோசப்பட்ட ஒரு சராசரி மனிதன்தான் சுப்ரமணி.

‘சாமி எப்ப மலைக்குப்போகுது? ராமு கேட்க, வார வெள்ளிக்கெழம வெள்ளெனக் கௌம்பிறேஞ் சாமி, ‘சரி, மறக்காம மாட்டுக்கு தீணி வச்சுரு, பாலு ஒட்டக் கறந்துறாத, கண்ணுக்குட்டி தொத்தலாப் போய்ரும்’. சுப்ரமணி தன் சொந்தங்களைப் பிரிந்து செல்வதே இந்த பாதயாத்திரை சமயத்தில்தான். ஒவ்வொரு வருடமும் கோயிலுக்குச் செல்லும் அந்த நாட்களில் ராமுதான் மாடுகளைப் பார்த்துக்கொள்வதுண்டு.

40 நாட்களுக்கு மேல் வளர்த்த தலைமுடியையும், தாடியையும் பழநி முருகனுக்கு காணிக்கையாகச் செலுத்திவிட்டு அந்தி சாயும் நேரத்தில் திரும்பிய சுப்ரமணி தன் வீட்டை நெருங்கும்போது ஏதோ ஒரு வித்யாசம் தென்பட்டது. தன் வீடுதானா? என்ற ஆச்சர்யத்தோடு, நெருங்கி வந்தான். வாசல்புறம், மாடு கட்டும் கொல்லைப்புறம், தவிட்டுத்தொட்டி எல்லாம் மிகச் சுத்தமாக தன் தலையைப் போலவே ‘பளிச்’சென்று இருந்தது. வழக்கமாகக் கோயிலுக்குப் போய்த் திரும்பியவுடன், அந்த மொத்த சாணத்தையும், கொல்லைப்புறத்தையும், வீட்டையும் சுத்தம் செய்ய குறைந்தது மூன்று நான்கு நாட்கள் எடுக்கும் சுப்ரமணிக்கு. யார் சுத்தம் செய்திருப்பார் என ஒன்றும் புரியாதவனாய் நெருங்கி வந்தான். திடுக்கிட்டு நின்றான். தன் வீட்டுக்கு பூட்டுப் போட்டு பூட்டிவைக்கும் அளவுக்கு பொக்கிஷங்கள் இல்லாவிட்டாலும், மற்ற பிராணிகள் உள்ளே செல்லாமல் இருக்க கம்பி போட்டு முறுக்கி, இறுக்கிக் கட்டிவிட்டுத்தான் போயிருந்தான். ஆனால் அது அறுக்கப்பட்டு வெறுமனே சாத்தி வைக்கப்பட்டிருந்தது. ஒன்றும் புரியாதவனாய் திறந்து பார்த்தான். அவன் கண்களால் நம்பவே முடியவில்லை. உள்ளே அழகாக விளக்கு ஏற்றிவைக்கப்பட்டு ‘பளிச்’சென்று எரிந்து கொண்டிருந்தது. கத்தரிக்காயும், தட்டைப்பயறும் கலந்து செய்து புளிக்குழம்பு வாசனை பசியைக் கிள்ளிவிட்டது. கண்களில் லேசாகக் கண்ணீர் சுரக்க, இந்த ராமுக்கு நான் என்னதான் கைம்மாறு செய்யப்போகிறேனோ என மனதுக்குள் எண்ணி, கொண்டுவந்த பையை ஆணியில் தொங்கவிட்டுவிட்டு வெளியே வந்தான். அவன் வெளியே வருவதற்கும், தண்ணீர்க் குடத்தை தலையில் இருந்து இறக்கி உள்ளே கொண்டுபோக வந்த அந்தப் பெண்ணுக்கும் ஒரு அடி தூரம்தான். அவன் ஒன்றும் புரியாதவனாய் திகைத்துப்போய் நின்றான்.

‘யார் நீ…நீங்…நீங்கெ? இங்க எப்படி வந்திய’ சுப்ரமணி கேட்டான். ‘எனக்குனு யாருமில்ல, என்னெக் குத்தஞ்சொல்லாதிய, எனக்கு வேறவழி தெரியல, என்னெ வெளியகிளிய வெரட்டிராதிய, யாம்பட்டுக்கு இங்கன ஒரு மூலையில குத்தவச்சுக்கறேன், என்னால ஒங்களுக்கு எந்தத் தொந்தரவும் இருக்காது’ என்று சொல்லி முடித்தவள், பதில் வருவதற்குள், நா..வந்து ரெண்டு நாளாச்சு இந்த வீட்டுக்குள்ள, இனிமே நா எங்கெ போறது? ‘நீங்க எதுவுஞ்சொல்லாம இப்படி இருந்தியன்ன, ஒரு கெணத்துலயோ. கயத்துலயோ என்னோட சீவென முடிச்சுக்கிருவேன்’ என்றாள். சுப்ரமணிக்கு ஒன்றும் பேச வாய் வரவில்லை, ‘இந்தா வாரேன்’ என்று ஒரே ஒரு வார்த்தை மட்டும் சொல்லிவிட்டு வெளியே சென்றுவிட்டான்.

தனக்குச் சொந்தம் என்று சொல்லிக்கொள்ள இன்று யாரும் இல்லை. தான் இரண்டு வயதாக இருக்கும்போது தனது தந்தை, தன்னையும், தனது ஆத்தாவையும் விட்டு ரங்கூன் போனதாகவும், அதன் பிறகு அவர் வேறொரு திருமணம் செய்துகொண்டு திரும்பி வரவே இல்லையெனவும் இரண்டு மூன்று தபால்களுக்குப் பிறகு தொடர்பே தொடர்பே கிடையாது எனவும் தனது ஆத்தா சொன்னதாக ஞாபகம். ஆனால் இந்தப் பெண் யார்? எங்கிருந்து வந்தாள்? நான் இதுவரை என்னொடு ஒரு பெண்ணைச் சேர்த்து நினைத்துக்கூடப் பார்த்ததில்லை. இது எப்படி நடந்தது… ஒன்றும் புரியாதவனாய் ஒரே குழப்பத்தில் தன்னால் எந்த முடிவுக்கும் வரமுடியாதவனாய், வேறு வழியின்றி…நேராக ஊர்த்தலைவர் வீட்டுக்குச் சென்று, அவரிடம் நடந்ததைப் பக்குவமாக எடுத்துச் சொன்னான்.

இந்தப்பெண் வந்து இரண்டு நாட்களாகியும் ஊரில் யாருக்குமே தெரியாமல் போனதற்கு ஆச்சர்யப்பட்டு எல்லாவற்றையும் தெளிவாக விசாரித்தபின் ஊர்த்தலைவர் ஒரு முடிவுக்கு வந்தார். ‘சரி நீ வீட்டுக்குப்போ, ஒன்னும் மனசப் போட்டு கொழப்பிக்காதெ, வெள்ளெனப் பேசி ஒரு முடிவுக்கு வருவோம் சுப்ரமணி’ என்றார்.

தன் வாழ்நாளில் இப்படியொரு சூழ்நிலை வருமென்று அவன் நினைத்ததே இல்லை. இந்த இரவு மட்டும் அவனால் மறக்க முடியாத ஒன்று. எங்கு போவதென்று ஒன்றும் புரியாதவனாய், சரி என்ன ஆனாலும் சரி, அந்தப் பழநி முருகன் மேல் பாரத்தைப் போட்டுவிட்டு நடப்பது எதுவானாலும், அது அவன் சித்தம் என்று, தானே புலம்பி, புலம்பி, சோர்வடைந்து தன் கிராமத்தில் உள்ள டி.வி. ரூமில் படுத்துக்கொண்டான். ஆனால் தன் நினைவுகள் அனைத்தும் தன் வீட்டைச் சுற்றியும், அந்தப் பெண் பற்றியுமே சுற்றிச் சுற்றி வந்தன. மனதுக்குள் ஒரு பயம் வேறு, அவள் ஏதாவது அவசரப்பட்டுச் செய்துகொண்டால்? மனது கேட்கவில்லை, நல்ல பௌர்ணமி நிலவு, தன் வீட்டை நோக்கி நடந்தான், அவன் கிராமத்தில் இத்தனை நாய்கள் இருப்பதை இன்றுதான் உணர்ந்தான், அவனைக் கண்டதும் படுத்திருந்த மாடுகளும், கன்றுகளும் தீணி போட வருவதாக எண்ணி விருட்டென எழுந்து நின்றன பாவம்!

தனது மாடுகள் தன்மீது உரசுவதிலிருந்தே, அவற்றின் பார்வைகளிலிருந்தே அவைகளுக்கு என்ன வேண்டும் என்று உணரமுடியும் அளவுக்கு, அவைகளோடு ஒன்று கலந்திருந்த சுப்ரமணி இன்று அவைகளைக் கண்டுகொள்ளவே இல்லை. கதவைத் திறந்தான், அங்கு அவள் நிம்மதியாகக் கொறட்டைவிட்டுத் தூங்கிக்கொண்டிருந்தாள், அவளையே உற்றுப்பார்த்துக்கொண்டு நின்ற சுப்ரமணி, நிம்மதியாகப் பெருமூச்சு விட்டு, பிறகு ஒரு தெளிவான முடிவோடு டி.வி. ரூமுக்கே திரும்ப வந்து படுத்துக்கொண்டான்.

பொழுது பளீரென விடிந்தது. ஊர்க்கூட்டம் கூடியது. ஆளாளுக்குப் பேசினர். ‘சரிப்பா, அவனும் ஒண்டிக்கட்டை, அவனுக்குனு யாரு இருக்கா, காலம்பூறா எருமையக் கட்டிகிட்டு அழுகுறாம்பா, இந்தப் புள்ளயிம் பாத்தா, நல்ல மாதிரித்தான் தெரியிது, அந்தப் புள்ள பேரு என்னப்பா…ம்ம்….ம்..வெள்ளையம்மா. அதுக்கிட்டயும் விசாரிச்சேன், அது இங்க சபைக்கி வரக் கூச்சப்படுது. அதுக்கும் கூடப்பொறந்தவக, சொந்தஞ்சொரவுனு சொல்லிக்கிறதுக்கு யாருமில்ல, ஊரு கெழக்கயாம், பேசிப்பாத்தேன். இவனும் ஒத்தையாத்தானே கெடக்கிறான், நாம எல்லாருமே இவன அடிமாடாட்டமா வேலயத்தான் வாங்கிக்கிட்டமே வாசி, அவனுக்குனு என்னத்த செஞ்சிப்புட்டோம்? நளைக்கி அவெம்பாட்டுக்கு படுத்துக்கிட்டான்னா ஒரு தண்ணிவெண்ணி வச்சுக் குடுக்கக்கூட ஆளு இல்ல. நம்ம பொஞ்சாதியலயா அனுப்ப முடியிம்? அதனால நாமதெ…ஆளும்பேருமா நின்டு...அங்கென கோயில்ல வச்சு கட்றா தாலியன்றவேண்டிதான்...…என்ன நாஞ்சொல்றது?’ ஒரே மூச்சாகச் சொல்லிமுடித்தார் ஊர்த்தலைவர்.

கல்யாணம், மனைவி, குடும்பம் குழந்தை இதுபற்றியெல்லாம் சுப்ரமணி கனவில் கூட நினைத்துப்பார்த்ததில்லை. அதற்கான வயதையும் தாண்டிவிட்ட நிலையில், நடப்பதையெல்லாம் தடுக்கமுடியாமலும், ஊர் மக்கள் தனக்கு ஏதாவது நல்லது செய்யவேண்டுமென்று நினைத்து இப்படிச் செய்துவிட்டதாகவும், தான் நினைக்காத ஒன்று நடந்துவிட்டதாகவும் ஒருபுறம் நினைத்தாலும், மனதின் ஏதோ ஒரு மூலையில் தனக்கும் ஏதோ ஒரு சொந்தம் இருப்பதாகவும், கொட்டும் மழையில், தாங்கமுடியாத குளிரில் கைகளைத் தன் கால்களுக்கு நடுவில் வைத்துத் தூங்கமுடியாமல் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருக்கும்போது, யாரோ தன் மீது ஒரு கம்பளிப் போர்வையால் முழுவதுமாகப் போத்திவிட்டுச் சென்ற ஒரு சுகமான ஒரு உணர்வு தோன்றியது. அது அவனுக்குத் தேவைப்பட்டது.

‘என்ன சுப்ரமணி! இப்பல்லாம் பால் நெறயக் கொண்டுவர்ற, மாட்டுக்கு நல்லாத் தீணி வக்கிறியா?’ ராமு கேட்டான். ‘ஆமா ராமு, இன்னும் ரெண்டு மாடு கன்னு போட்டுருக்கு அதான் பாலு கொஞ்சம்கூட, நீயென்ன குடுத்த காசத்தானே குடுக்கப்போற, அதுக்குனு கூடவா குடுத்துறப்போறெ’ சுப்ரமணி பதில் சொன்னான்.

‘வெள்ளையம்மா! சுப்ரமணி எங்க புள்ள” போஸ்ட் மாஸ்டர் கேட்டார். ‘இங்கனதான் நின்டது, எரவமாடப் பத்திகிட்டு, கம்மாப்பக்கம் போய்ட்டதோ என்னமோ! இந்தா நான் கூட்டியாறேன்” வெள்ளயம்மா சொன்னாள். பின்புறமுள்ள கண்மாய்ப் பக்கம் போய்ப் பார்த்து, மாடுகளைக் குளிப்பாட்டிக்கொண்டிருந்த சுப்ரமணியை, ‘இஞ்சொறுங்க, ஒங்களத்தானெ, இந்தா தவால்காரு கூப்புடறாரு’ அடித்தொண்டயில் அழைத்தாள் வெள்ளயம்மா. “ஏன்டி! நீயென்ன கிறுக்கா, எந்தக் கொழுந்தியா எனக்குக் காயிதம் போடப்போறா, இல்ல ஒனக்குத்தான் கலைட்ரு வேலைக்கி கடிதாசி வரப்போகுதா’ வேலையப் பாப்பியா’ என்றான் சுப்ரமணி நக்கலாக. ‘சுப்ரமணி! ஒனக்கு லட்டர் வந்திருக்குப்பா’ போஸ்ட்மேன் நேரடியாக அங்கேயே வந்துவிட்டார். ‘என்னய்யா சொல்றிய? எனக்கா? யாரு கடுதாசி போடப்போறா?’ கரையேறி வந்தான் சுப்ரமணி.

லட்டரை அவரே படித்து, முடித்து சுப்ரமணியிடம் கொடுத்துவிட்டு, ‘உங்க சின்னத்தா, தம்பிங்க, புள்ளையளோட எல்லாரும் ராமேஸ்வரத்துல அகதிகள் முகாம்ல இருக்காகலாம், ஒன்னெ வரச்சொல்லி விலாசம் கொடுத்திருக்காகப்பா’ சொல்லிமுடித்தார் போஸ்ட்மேன். சுப்ரமணிக்குத் தலைசுற்றியது, ஒன்றும் புரியவில்லை. வெள்ளையம்மா முகத்தைப் பார்த்தான், அத்தனை மகிழ்ச்சி. ஏய்! வெள்ளையம்மா! பாத்தியாடி, நீ வந்த நேரமுடி, எங்க சின்னத்தா, புள்ளயல்லாம் கொண்டுவந்து சேத்துட்டடி! இனி எனக்கென்ன கொறை? தாங்கமுடியாத சந்தோசத்தில் குளிப்பாட்டிய எருமைமாடுகள் மைலைப்பசுக்கள் போல் காட்சியளித்தன. சுப்ரமணியின் சந்தோசத்தில் வெள்ளையம்மாவுக்கு ரெட்டிப்பு மகிழ்ச்சி, தன்னைத் தாலிகட்டிய அன்று இருந்ததைப்போன்ற ஒரு முகமலர்ச்சி, சந்தோசம். அவனுடைய ஏக்கங்களையும், உணர்வுகளையும், தேவைகளையும் அவளால் மட்டுமே உணரமுடியும். அதன் விளைவு! கொக்கரித்துக்கொண்டு திரிந்த இரண்டு வெடைக்கோழிகள் குழம்பில் கொதித்தன.

இராமேஸ்வரம், முகமே தெரியாது. எப்படிக் கண்டுபிடிப்பது? யாரைப்போய்ப் பார்ப்பது? ஒன்றும் புரியாதவனாய் ஒரு வழியாய்ச் சேகரித்துக்கொண்டு சென்ற தகவல்களையும், தான் கொண்டுபோன குடும்ப அட்டை மற்றும் சில ஆவணங்களையும் காட்டி அங்குள்ள முகாமில் விசாரித்து முடிக்கும் வேளையில் ‘தம்பி! சுப்ரமணி’ ஒரு குரல். திடுக்கிட்டுத் திரும்பிப் பார்ப்பதற்குள், தன்னைக் கட்டிப்பிடித்து கதறியழும் அந்தத் தாயின் முகத்தைக் கூட ஒழுங்காகப் பார்க்கமுடியவில்லை, தானும் கதறியழுதான். ஆனாலும் அவன் கண்கள் யாரையோ தேடியதை உணர்ந்த தாய், எங்களையெல்லாம் அனாதியா விட்டுட்டு அந்த மனுஷன் போய்ட்டாருய்யா, எங்களுக்கு யாருமில்லன்னு நெனச்சோம், கடவுளாப் பாத்து ஒன்ன அனுப்பிருக்காருய்யா, ஒங்கப்பாவே திரும்பி வந்தமாதிரி இருக்குய்யா’ என்று கதறியழும்போது, அங்கு தம்பிகள், தம்பியின் மனைவிகள், பிள்ளைகள் எல்லோரும் தன்னைக் கட்டியணைத்து அழுதுகொண்டிருந்தனர். என்ன ஒரு உணர்ச்சி ததும்பிய நிமிடங்கள்! தாம் வாழ்ந்து களித்த தேசத்தை விட்டு, பழகிய மண்ணையும் மக்களையும் விட்டு, அகதிகளாக வந்து, சற்றும் எதிர்பாராது, திடீரெனச் சொந்தம் ஒன்றைக் கண்டு கொண்டுவிட்டால்! அந்தக் கணம், அனுபவித்துப் பார்க்க வேண்டிய ஒன்று.

ராமுவின் டீக்கடைக்குப் பால் கொடுப்பதை சுப்ரமணி நிறுத்திவிட்டான். குடும்பம் பெரியதாகி விட்டது. பக்கத்தில் இரண்டு தம்பிகளுக்கும் சிறிய வீடுகள் கட்டிக்கொடுத்துவிட்டான். ஆளுக்கொரு ஏக்கர் நிலம் கொடுத்துவிடலாம் என்று யோசிக்கையில் ‘அதொன்டும் வேண்டாமண்ணா! நாம ஒன்டாக இருப்பம், அதொன்டு போதும், எங்கட அண்ணன் வேறு, நாங்கள் வேறல்ல அண்ணா! எதச்செய்தாலும், சேந்து செய்வொம்’ என்று தம்பிகள் சொன்னபோது இதுவரை கலங்காத சுப்ரமணியின் கண்களும் அழத்தொடங்கின. என்ன ஒரு ஆரோக்யமான உணர்வுகள்! கொடுக்கல் வாங்கலுக்கே கொலை செய்யத்துணியும் பங்காளிச் சண்டை நிறைந்த மண்ணில் இந்த வார்த்தைகள் அவனுக்குப் பெரிய ஆச்சர்யமாய் இருந்தது. இந்த ரத்த சம்பந்த உறவுகளை அனுபவிக்காமல் இருந்ததன் வேதனையை இப்போதுதான் உணர்கிறான். தம்பியின் பிள்ளைகள் பள்ளிக்குச் சென்று படிப்பதை சுப்ரமணியும் வெள்ளையம்மாவும் பார்த்துப் பூரித்துப் போனார்கள். தன்னையும், வெள்ளையம்மாவையும், தன் ஆத்தாவையும் தவிர அனைவருமே படித்தவர்கள். இப்போது சுப்ரமணி சந்தைக்குச் செல்வதுண்டு, வழக்கமாகக் கிடைக்கும் பரோட்டாக் குருமா மற்றும் மரிக்கொழுந்து வெள்ளையம்மாவுக்கு முன்புபோல முழுவதுமாகக் கிடைப்பதில்லை. ஆனாலும் வெள்ளையம்மா பளீரென்று வெள்ளையாகத்தான் தெரிந்தாள். தனக்குப் பிடித்த ஒருவருக்குப் பிடிக்கும் எல்லாமே தனக்கும் பிடித்துப்போய்விடும், அவர் ரசிக்கும் அனைத்தையும் தானும் ரசிக்கத் தோன்றும். இதுதான் இல்லறத்தின் இலக்கணம். குதூகலம் பூத்துக்குலுங்கியது. வறண்டுபோய்க்கிடந்த வெள்ளையம்மா சுப்ரமணியின் வாழ்க்கையில் முழுச் சந்தோசம் கிடைத்ததாகப் பூரித்துப்போனார்கள்.

ஒருநாள் இரவு சுப்ரமணியிடம் தன்னுடைய அப்பா பற்றிப் பேசிக்கொண்டே இருந்த ஆத்தா, திருமணமாகி சில நாட்களிலேயே ரங்கூனிலிருந்து இலங்கை வந்துவிட்டதாகவும், அடிக்கடி சுப்ரமணி, மற்றும் அக்கா, அதாவது சுப்ரமணியின் ஆத்தா பற்றியெல்லாம் மூச்சுக்கு மூச்சுப் பேசுவாரென்றும், சுப்ரமணியும் உருவத்தில் அவரைப்போலவே இருந்ததாகவும், அதனால்தான் கேம்ப்-பில் சுலபமாக அடையாளம் கண்டுகொண்டதாகவும் சொல்லி நெடுநேரம் சந்தோசமாய் பேசிவிட்டு உறங்கச் சென்றவள் அடுத்த நாள் எழுவே இல்லை. அந்தச் சந்தோசத்தோடே ஜீவன் பிரிந்துவிட்டது. அனைவருமே தாங்கமுடியாத சோகத்தில் இருந்தார்கள். பார்க்கமுடியாத பந்தங்களையெல்லாம் பார்த்து, சேர்க்கவேண்டிய சொந்தங்களையெல்லாம் ஒன்று சேர்த்துவிட்ட சந்தோசத்தில் ஆத்தா நிம்மதியாகப் போய்விட்டாள். அனைத்துமே வேகவேகமாக நடந்து முடிந்துவிட்டது.

அந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள் சுப்ரமணியனுக்கு மேலும் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. தம்பிகள் எல்லோரும் படித்தவர்களாதலால், தங்களுக்கு நீலகிரி மாவட்டம் கூடலூரில் முகாம் மூலமாக வேலை கிடைத்திருப்பதாகவும், இந்தக் கிராமத்தில் அனைவரும் இருந்து அண்ணனுக்கு சிரமம் கொடுப்பதைவிட குடும்பத்தோடு அங்கு செல்ல இருப்பதாகவும், அடிக்கடி வந்து போவதாகவும் சொன்ன நியாயமான விளக்கத்தை சுப்ரமணியாலும், வெள்ளையம்மாவாலும் தட்டமுடியவில்லை. ஒருவரையொருவர் முட்டிமோதி அழுகத்தான் முடிந்தது.

‘ராமு.. ராமு... கோழி கூப்டுருச்சு, எந்திரிப்பா, பால் கொண்டுவந்திருக்கேன்’ வெள்ளையம்மா. ‘இதோ வந்துட்டேன் வெள்ளையம்மா’ ராமு. இப்போதெல்லாம் வெள்ளையம்மா சந்தைக்குச் செல்கிறாள். வேண்டியவற்றையெல்லாம் வாங்கி வந்து அவரவர்கள் கையில் சேர்த்துவிட்டு, வெறுங்கையோடு வீடு திரும்பும் வெள்ளையம்மா வரும் வழியைக் கன்றுக்குட்டிகளும் மாடுகளும் ஏக்கத்தோடு பார்த்துக்கொண்டிருக்கின்றன.

உடலோடு ஒட்டிப்பிறந்த உறுப்புக்களில் ஒன்றை இழக்கும்போதுதான் அதன் அவசியம் புரியும். உயிர்வலி தெரியும். தேடினாலும் காணமுடியாத தன் தாய், தம்பிகள், பிள்ளைகள் எல்லோரும் ஒன்று சேர்ந்து குதூகளித்த அந்த வீடு தற்போது வெறிச்சோடிக் கிடப்தையும், வந்த வேகத்தில் அனைவருமே பிரிந்து போய்விட்டதையும் நினைத்து நினைத்து சுப்ரமணி கிட்டத்தட்ட ஒரு நோயாளியாகி விட்டான். இப்பொழுது தன் கூடவே இருப்பது தன் வெள்ளையம்மா மட்டும்தான். யாருமே உணரமுடியாத ரண உணர்வுகளை ஆறவைத்த இந்த உத்தமிக்கு நான் என்ன செய்தேன்? என்னைத்தேடி இவளை அனுப்பியது யார்? நான் வணங்கும் பழநி ஆண்டவனா? அனுப்பியவன் நான் இளவயதிலிருக்கும் போது அனுப்பியிருக்கக்கூடாதா? காலம் கடந்துவிட்ட நிலையில் எனக்கு இப்படி ஒரு உறவு! எனக்குப்பிறகு என் வெள்ளையம்மாவை யார் பார்த்துக்கொள்வார்கள்? என்னை நம்பி வந்த இவள் எனக்குச் சாமியா, என் தாயா? இல்லை. அதையும் மீறிய ஒரு உறவாகத்தான் நினைத்தான். நான் இவளை விட்டு எப்படிச் செல்லமுடியும்? பழநியாண்டவா! இவ்வளவையும் நான் கேட்காமலே கொடுத்த நீ ஒரு வாரிசை எனக்குக் கொடுத்திருக்கக் கூடாதா? என முதன்முறையாகக் கடவுளைக் கேட்டான். கொடுத்திருந்தால் நான் நிம்மதியாகக் கண்ணை மூடுவேனே! எனக்குப் பிறகு என் வெள்ளையம்மாவுக்குத் துணை யார்? எப்படி என்னைப் பிரிந்து இருப்பாள்? சுப்ரமணி நடந்தவைகளையெல்லாம் எண்ணி எண்ணி படுத்த படுக்கையாகி விட்டான். தனது சொந்தங்களாகிய பத்துப் பதினைந்து எருமை மாடுகளையும், கன்றுகளையும் இப்போது வெள்ளையம்மா கவனித்து வருகிறாள். முறையாக எழுதித்தராவிட்டாலும் மூன்று ஏக்கர் நிலத்தையும் வெள்ளையம்மா நன்றாக விவசாயம் செய்து வருகிறாள் என்ற மன நிம்மதியோடு சுப்ரமணி கண்ணை மூடிவிட்டான்.

இவற்றையெல்லாம் அசைபோட்டு அசைபோட்டு அவர்கள் பேசிக்கொண்ட வார்த்தைகளையும், நடந்து சென்ற பாதைகளையும், அவன் விட்டுச்சென்ற நீங்கா நினைவுகளையும், தன்னைவிட்டுப் பிரிக்க முடியாமல், ஒவ்வொரு கணமும் தவித்துக்கொண்டு, அவன் நினைவுகளாலேயே வாழ்ந்துகொண்டிருக்கும் அந்த உத்தமியின் உணர்வுகளை, ஏக்கங்களை, சுப்ரமணி இடத்திலிருந்து எப்போதும் அவள் கைகளைத் தழுவிக்கொண்டிருக்கும் அந்த மூன்றாம் காலான கைத்தடி மட்டுமே உணரும். கவலைதோய்ந்த ரேகைகளை அவள் முகத்திலும், அவள் கூன்விழுந்த முதுகிலும், நரைவிழுந்த தலையிலும், காலம் உணர்த்தியது.

அந்த ஆத்மாவின் சப்தங்களை அந்த ஒருவனால் மட்டுமே உணரமுடியும். இந்த உறவு எப்படி வந்தது? எங்கிருந்து வந்தது? உங்களுக்கு மட்டுமில்லை, எனக்கும் கூட புதிராகத்தான் இருக்கிறது. இது காதலா? ரத்த சம்பந்தங்களையும் தாண்டிய ஒரு உறவா? முன் ஜென்ம பந்தமா?

‘வெள்ளையம்மா! வெள்ளையம்மா!’ …

‘ஆரு… தவால்காரத் தம்பியா? இ..ந்..தா.. வா..ரே..ன்’ எனத் தள்ளாடி எழுவதற்கு முன், ‘இதுல ஒரு கைரேகை வைய்யிங்க’ என்று போஸ்ட்மேன் அந்தக் குடிசைக்குள் நுழைந்து, பணத்தை வெள்ளையம்மாவிடம் கொடுத்துவிட்டு, கைரேகையையும் பெற்றுக்கொண்டு, அன்பளிப்புப் பணம் வாங்காமல் சென்றார். தனக்குச் சொந்தமாக நிலமிருந்தாலும், வெள்ளையம்மாவுக்கு ஏதாவது செய்யவேண்டுமென்ற நல்லெண்ணத்தில், சுப்ரமணியின் சொத்துக்கள் தனது பெயரில் இல்லையென்பதாலும், ஆண் வாரிசு இல்லையென்பதாலும் அவளுக்கு ‘முதியோர் உதவித்தொகை’க்குப் பரிந்துரை செய்திருந்தார் ஊர்த்தலைவர்.

வாங்கிய பணத்தை சுப்ரமணி உபயோகித்த, ஆணியில் மாட்டப்பட்டிருந்த பழநியாண்டவர் பைக்குள் வைத்துவிட்டு துக்கம் தொண்டையடைக்கத் தன் முந்தானையால், தனது நடுங்கிய கைகளால் கண்களைத் துடைத்துக்கொள்கிறாள். அடைமழை பெய்துகொண்டிருக்கிறது.


- நவநீ

Today's Quote

Does yoga serve to keep the body in itsfull health and vitality?
Vivekananda: It does. It staves off disease. As objectification of one's own body is difficult, it is very effective in regard to others. Fruit and milk are the best food for Yogis.


Selections from the Belur Math Diary. Complete Works, 5: 319

"தமிழோசை"

இன்றைய 'BBC' (ஜுன் 02 சனிக்கிழமை) செய்தி கேட்க கீழுள்ள இணைப்பை அழுத்தவும்
BBCTamil.com Radio Player

"இன்றைய குறள்"

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு

அகரம் எழுத்துக்களுக்கெல்லாம் முதன்மை, ஆதி பகவன் உலக உயிர்களுக்கெல்லாம் முதன்மை

"அன்னைத் தெரெசா"

1984 - ம் ஆண்டில் புனித போப்பாண்டவர் இந்தியா வந்திருந்தபொழுது, தனது அன்பளிப்பாக தன்னுடைய 35 லட்ச ரூபாய் மதிப்புள்ள காரைத் தெரெசாவுக்குக் கொடுத்தாராம். ஆனால் அன்னைத் தெரெசா ஒருமுறை கூட அந்தக்காரில் பயணம் செய்ததில்லையாம். சாவியை வாங்கிய சில மணித்துளிகளில் அதை ஏலம் விட்டு அதில் கிடைத்த பணத்தில் ஒரு புதிய 'தொழுநோயாளிகள் இல்லம்' கட்டினாராம். அதனால்தான் அவர் அன்னைத் தெரெசா.

June 01, 2007

"காரணம்"

சிறுகதை படிக்க தலைப்பை அழுத்தவும்

ரசித்த சில சிலேடைகள்!

Tamil magazine Tamil news,poem,story,movie & song reviews

குடும்ப அரசியல் குறையும் நாள் எந்நாளோ?

"தமிழோசை"

இன்றைய 'BBC' (ஜுன் 01 வெள்ளிக்கிழமை) செய்தி கேட்க கீழுள்ள இணைப்பை அழுத்தவும்
BBCTamil.com Radio Player

May 31, 2007

'வெயில்' திரைப்பட இயக்குனர் திரு.வசந்தபாலன் அவர்களின் பேட்டி. Part II

வணக்கம்!
தயவுசெய்து ஆங்கிலம் சரியாக, சரளமாக வராதவர்களை தேவையில்லாமல் தர்மசங்கடத்தில் தள்ளாதீர்கள். ஒரு நல்ல இயக்குனர் தன் உணர்வைத் தெளிவாகச் சொல்ல முடியாததை நினைத்து நான் வேதனைப்படுகிறேன். அவருக்கு ஆங்கிலம் வரவில்லையென்பது ஒரு பெரிய விசயமே இல்லை. ஒரு நல்ல தமிழ்ப்பட இயக்குனரைத் தமிழில் பேட்டி எடுங்கள். நீங்கள் எங்கே பிறந்தீர்கள்? தமிழ்நாட்டில்தானே! ஆங்கிலத்தில் பேசினால்தான் அனைவரும் பார்ப்பார்களா என்ன? நீங்கள் பேட்டி எடுக்கும் மனிதருக்கு எந்த மொழி சரளாமாக வருகிறதோ, எந்த மொழியில் தனது உணர்வுகளை, சொல்ல வருவதைத் தெளிவாகச் சொல்லமுடிகிறதோ அந்த மொழியில் சொல்ல விடுங்கள். வேண்டுமானால் “சப் டைட்டில்” போட்டுக்கொள்ளுங்கள். இல்லாவிட்டால் அப்படிப்பட்ட பேட்டியே வேண்டாம். இது தேவயில்லாத மனச்சலனத்தை அவருக்கும் ஏற்படுத்தும், பார்க்கும் எங்களுக்கும் ஏற்படுத்தும். முதலில் நீங்கள் திருத்திக்கொள்ள வேண்டியது அதிகம் இருக்கிறது. இது என்னுடைய கருத்து மட்டும் இல்லை, என்னைப்போன்று கோடிக்கணக்கானவர்களின் வேண்டுகோள்.

சென்னை-நவின், கலிபோர்னியா (அமெரிக்கா)
இது நான் பேட்டியெடுத்தவர்களுக்கும் அந்த இணையதளத்தாருக்கும் எழுதிய கடிதம். இனிமேலாவது திருத்திக்கொள்வார்களா? பார்ப்போம். இந்த வீடியோ மற்றும் ஏற்கனவே பதிவு செய்த Part I வீடியோவைப் பற்றியும் தங்களின் மேலான கருத்துக்களை இங்கே பதிவு செய்யவும்.

ஒளிரும் இந்தியாவும் ஒழியும் கூந்தல்களும்

Tamil magazine Tamil news,poem,story,movie & song reviews

Today's Quote

Caste or no caste, creed or no creed, any person, or class, or caste, or nation, or institution which bars the power of free thought and action of an individual - even as long as that power does not injure others - is devilish and must go down.

From Chicago.
Letter to his disciples in Chennai. January 24, 1894. CW, 5: 29

"தமிழோசை"

கடந்த 20 ஆண்டுகளில் இந்தியா அதீத பொருளாதார வளர்ச்சியடைந்திருக்கிறதென ஒரு ஆய்வு கூறுகிறது. இன்றைய 'BBC' (மே 31 வியாழக்கிழமை) செய்தி கேட்க கீழுள்ள இணைப்பை அழுத்தவும்
BBCTamil.com Radio Player

வாழ்த்துக்கள்!

தொலைக்காட்சி என்றால் முதலில் நினைவுக்கு வருவது சினிமாவும், சினிமாவைச் சுற்றியுள்ள செய்திகளும்தான். சினிமா சம்பந்தப்பட்ட எந்த வாடையும் இல்லாமல், "யாதும் செய்தியே! யாவரும் அறிகென, மக்கள் பயனுற நன்றும் நகையும், பூக்கவென்றே பணி செய்து கிடப்போம்" என ஒரு புரட்சியே செய்து மண் பயனுற 'மக்கள் தொலைக்காட்சி' என்ற ஒன்று இருப்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். மொழிபற்றி ஒளிபரப்பிய ஒரு நிகழ்ச்சி பற்றிக் கேள்விப்பட்டேன். நாமனைவரும் வரவேற்கத்தக்க ஒரு சிறப்பான நிகழ்ச்சி.Makkal TV

திருமதி.வாசந்தி Part II

எழுத்தாளரும், பத்திரிகையாளருமான திருமதி.வாசந்தி அவர்களின் வானொலிப் பேட்டியைக் கேட்க கீழுள்ள இணைப்பை அழுத்தவும்
The Kamla Bhatt Show 2006

May 30, 2007

தாழம்பூவே! வாசம் வீசு!!

Thazam Poove.mp3

திருமதி.வாசந்தி

எழுத்தாளரும், பத்திரிகையாளருமான திருமதி.வாசந்தி அவர்களின் வானொலிப் பேட்டியைக் கேட்க கீழுள்ள இணைப்பை அழுத்தவும்

The Kamla Bhatt Show 2006






இன்னும் 30 ஆண்டுகளில் மொத்த இமயமலையே உருகிப்போய்விடுமாம்....
முதலில் இதைப் படியுங்கள்!!
Tamil magazine Tamil news,poem,story,movie & song reviews

சொந்த மண்ணில் வடிவேலு

தமிழ் எண்கள்

தமிழில் நம் முன்னோர்கள் எண்களை எப்படி எழுதினார்கள் என்பது பலருக்குத் தெரிந்திருக்கும். ஆனால் இப்போது நடைமுறையில் இல்லாவிட்டாலும் நாம் அதனைத் தெரிந்துகொள்வது ஒன்றும் தவறில்லை. தமிழ் எண்களைத் தெரிந்துகொள்ள கீழுள்ள இணைப்பை அழுத்தவும். http://navneethsmart.googlepages.com/TamilNumbers1.pdf

எங்கு சென்றாலும் தமிழனின் நிலை இதுதான்

May 29, 2007

Today's Quote

I do not propose any leveling of castes.
Caste is a very good thing.
Caste is the plan we want to follow.
What caste really is,
not one in a million really understands.
There is no country in the world without caste.
In India, from caste we reach to the point
where there is no caste.
Caste is based through out on that principle.
The plan in India is to make everybody a Brahmin,
the Brahmin being the ideal of humanity.
If you read the history of India you will find that attempt shave always been made to raise the lower classes.
Many are the classes that have been raised.
Many more will follow till the whole will become Brahmin.
That is the plan.
We have to raise them without bringing down anybody.
And this has mostly to be done by the Brahmins themselves,
because it is the duty of every aristocracy to dig its owngrave;
and the sooner it does so, the better for all.
No time should be lost.Interview in The Hindu.
- Swami Vivekananda
Chennai, 1896. Complete Works, 5: 214

BBC "தமிழோசை"

(செவ்வாய்க்கிழமை மே 29) செய்தி கேட்க கீழுள்ள இணைப்பை அழுத்தவும்
BBCTamil.com Radio Player

May 28, 2007

செல்போன் மரணவிளையாட்டு!

தீவிரவாதிகளின் திகில் டெக்னிக், சமீபத்தில் நடந்த செல்போன் குண்டுவெடிப்புப் பற்றியும், மேலும் பல பிரமிக்கத்தக்க வகையில் செல்போன் வெடிகுண்டு பற்றி விளக்கியிருக்கிறார் ஓய்வுபெற்ற திரு.இராமன், கூடுதல் செயலாளர், கேபினெட் செக்ரட்ரியெட். தவறாமல் நாம் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம். கீழுள்ள இணைப்பை அழுத்துக.
Welcome to TamilanExpress.com

அரசியல் சார்ந்த பல சுவாரஸ்யமான கேள்வி பதிலுக்கு கீழுள்ள இணைப்பை அழுத்தவும்
Welcome to TamilanExpress.com

கலைஞர் டி.வி.

ஆடிய ஆட்டம் என்ன? (ஐயோ....கொல்றாங்கைய்யோவ்....)
பேசிய வார்த்தை என்ன?
(டெல்லி என் கையில்)
தேடிய செல்வமென்ன?
(ஏழு டி.வி.சேனல்)

திரண்டதோர் சுற்றமென்ன? (ராதிகா, சரத்குமார்)
கூடுவிட்டு ஆவிபோனால் (தயாநிதி )
கூடவே வருவதென்ன? (கனிமொழி)
............................................

வீடுவரை உறவு
வீதிவரை டி.வி.
டில்லிவரை பேரன்
காடுவரை யாரோ

மண்ணிக்கவும்........
நா" தவறி பாடிவிட்டேன்....

வீடுவரை உறவு
வீதிவரை மனைவி
காடுவரை பிள்ளை
கடைசிவரை யாரோ?
...Please 'click'..link
Tamil magazine Tamil news,poem,story,movie & song reviews

BBC "தமிழோசை"

(திங்கள் கிழமை மே 28) செய்தி கேட்க கீழுள்ள இணைப்பை அழுத்தவும்
BBCTamil.com Radio Player

Today's Quote

WHAT A LITTLE LAMP CAN DO
THE GREAT SUN CAN NOT DO
IT CAN SHINE THE NIGHTS

YOU AND I ARE LITTLE LAMPS
DON’T INVALIDATE
WE ARE LITTLE LAMPS
WE CAN DO, THE SUN CAN NOT DO
WE CAN SHINE THE NIGHTS

Swami Sukhabhodhananda


May 27, 2007

"ANGER is nothing but ACTIVE SADNESS"

"மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்" அனைவரும் படித்திருப்பீர்கள். சுவாமி சுகபோதானந்தா அவர்களைப் பற்றி நான் சொல்லித்தான் உங்களுக்குத் தெரியவேண்டுமென்ற அவசியமில்லை. அவரின் நேர்முகப் பேட்டியை அமெரிக்கப் பண்பலை வரிசை "its.diff" (KZSU Stanford 90.1 FM radio show) இங்கு ஒலிபரப்பியதன் ஒலிப்பதிவை கேளுங்கள். மிகவும் தெளிவான, பிரமிப்பான, ஒவ்வொருவரும் அவசியம் கேட்கவேண்டிய நிகழ்ச்சி இது. பேட்டி எடுத்தவர் எனது மதிப்பிற்குரிய நண்பர் திரு.ஸ்ரீ அவர்கள். முதலில் அவருக்குப் பாராட்டுக்களையும், நன்றியையும் தெரிவித்துக்கொண்டு, வாய்ப்பினை வழங்கிய வானொலிக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்வோம். மேலும் சுவாமி போதானந்த சரஸ்வதி, சுவாமி அனுபவானந்தா மற்றும் யோகா பற்றிய மிகச்சிறப்பான பேட்டிகள் இடம் பெற்றிருக்கின்றன. இந்த நிகழ்ச்சியை நேரடியாகக் கேட்கக் கூடிய வாய்ப்பு பலருக்கு கிடைத்திருக்காது. பரவாயில்லை, வாய்ப்பு இப்போது உங்களுக்குக் கிடைத்திருக்கிறது. கேட்பதற்கு இந்த இணைப்பை அழுத்தவும். Life: "(KZSU Stanford 90.1 FM radio show)" Life: "(KZSU Stanford 90.1 FM radio show)"

"கிங் சார்லஸ்"

விருதால் இவருக்குப் பெருமை என்பதைவிட இவரால் விருதுக்குப் பெருமையென்பது'தான் பொருத்தமாக இருக்கும். எந்த ஜீவராசியுமே ரசிக்கும் இந்த சிரிப்பழகனை! இவர் ஒரு மாபெரும் சகாப்தம்! இந்நூற்றாண்டின் ப்ராப்தம்!


குடியரசுத்தலைவர் அப்துல் கலாமுக்கு இங்கிலாந்து அரசின் "கிங் சார்லஸ்" விருது அளிக்கப்படுகிறது. லண்டனின் ராயல் சொசைட்டீ ஆஃப் லண்டன் பிற நாட்டின் அறிவியல் தொழில்நுட்ப சாதனையாளர்களுக்கு அளிக்கின்ற விருது இது. கற்றோருக்குச் சென்றவிடமெல்லாம் சிறப்பு!

தூக்கமும் கண்களைத் தழுவட்டுமே!

அக்காலத்து 'மன்மத லீலையை வென்றார் உண்டோ' முதல் இன்று உங்களை தாளமிடவைக்கும் 'மன்மத ராசா!' வரை தமிழ்த் திரையிசை நடந்துவந்த பாதையைப் படம்பிடிக்கும் வரலாற்றுத் தொடர், சம்பத்குமார் தயாரிப்பில்...
கிட்டத்தட்ட எழுபத்தைந்து பாகங்கள் இருக்கின்றன... இந்த மனிதர் ஏறக்குறைய அனைவரைப்பற்றியும் ஆராய்ந்திருக்கிறார். மிக மிக அருமையான நிகழ்ச்சி இது. தியாகராஜ பாகவதர் தொடங்கி, கிட்டப்பா, டி.ஆர்.மகாலிங்கம், ஜிக்கி, ஜானகி, சுசீலா, பாலசுப்ரமணியன், யேசுதாஸ் மற்றும் இன்றுள்ள பாடகர்கள் வரையில் தொகுத்திருக்கிறார்...
உங்களுக்கு எது வேண்டுமோ அதனை தேர்ந்தெடுத்துக் கேட்டு ரசிக்கலாம். ஒரு அருமையான ஆய்வு இது....இதனைப் பாராட்டும் அளவுக்கு எனக்கு அனுபவமோ, வயதோ இல்லை... இவையனைத்தும் நான் ரசித்துப் பிரமித்தவை.. உங்களுக்கும் அதனைப் பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகிறேன்... ம்ம்... இப்ப 'கிளிக்' பண்ணுங்க.BBCTamil.com

Today's Quote


Women will work out their destinies—much better, too, than men can ever do for them. All the mischief to women has come because men undertook to shape the destiny of women.

BBC "தமிழோசை"
(ஞாயிறு மே 27) செய்தி கேட்க கீழுள்ள இணைப்பை அழுத்தவும்

BBCTamil.com Radio Player

"ஷக்தி"

அமெரிக்காவின் முதல் இந்திய
"ஹிப்-ஹாப் திவா" நடனமாடுபவர். இவர் ஒரு தமிழ், இந்துப்பெண் என்றால் உங்களால் நம்பமுடிகிறதா??


"ஷக்தி"

"ஷக்தி"

கவனஈர்ப்புப் போராட்டம்

இதுதான் தமிழனின் நிலை
என்று மாறும் இந்த அவலம்?

"நிலாச்சாரல்"

இணைய தளத்தில் 'நிலாச்சாரல்' என்ற சஞ்சிகையை நடத்தி வரும் திருமதி.நிர்மலா அவர்களின் 'ஜெயா' தொலைக்காட்சிப் பேட்டியை பார்க்க இங்கே உள்ள இணைப்பை அழுத்தவும்.

கவிஞர் "யுகபாரதி"

கவிதைகள் தோன்ற வேண்டும், தோன்றி வருவதே கவிதை, கவிதை செய்ய முடியாது என்பது பற்றி உங்கள் கருத்து.
உண்மைதான். பாடல்கள் வேண்டுமானால் செய்யலாம், ஆனால் கவிதைகளைச் செய்ய முடியாது. கவிதை எழுதுவதற்கு, ஊடுருவிப் பார்க்கும் படியான ஒரு மூன்றாவது பார்வை அவசியம்.Please 'click' here

Tamil magazine Tamil news,poem,story,movie & song reviews

May 26, 2007
















TRUTH cannot be transferred,

truth cannot be handed over to you by somebody else,

because it is not a commodity.

It is not a thing,

it is an Experience.

- OSHO

BBC "தமிழோசை"
(வெள்ளிக்கிழமை 25.05.2007) செய்தி கேட்க கீழுள்ள இணைப்பை அழுத்தவும் BBCTamil.com Radio Player

Today's Quote

Be the change you want to see in the world
Mahatma Gandhi

May 25, 2007

கங்கையும் தெற்கே பாயாதா?
காவிரியோடு சேராதா?
பாடுபடும் தோழர்களின்
தோள்களில் மாலை சூடாதா?


தமிழனுக்கு நினைவு தெரிந்த நாள் முதல் தொடர்ந்து கொண்டே இருக்கும் இந்தப் பிரச்சினை ஓயும் நாள் எந்நாளோ? பற்றாக்குறைக்கு
அருணாச்சலப் பிரதேசம் "எங்கள் நாட்டைச் சேர்ந்தது" என்று 'சீனா' புதிய பிரச்சினையைக் கிழப்பியிருக்கிறது.
இந்தியனுக்கு நான்கு திசைகளிலும் பிரச்சினைகள்தான்....

இன்னும் என்னவெல்லாம் நடக்கப் போகிறதெனப் பொறுத்திருந்து பார்ப்போம். இந்த வீடியோப் பதிவு காவிரிப்பிரச்சினை பற்றிய கலந்துரையாடல்..

காவிரிப் பிரச்சினை : பகுதி 1



காவிரிப் பிரச்சினை - பகுதி 2

காவிரிப் பிரச்சினை - பகுதி 3

Possessive Husband!

நாட்டில் உள்ள ஒவ்வொரு கணவனும் இப்படி மாறிவிட்டால் பிரச்சினைகள் அனைத்தும் ஒழிந்து விடும்.

Today's Quote

True humanity lies not in
returning violence for
violence, but in
forgiveness


- Ramana Maharishi

அன்னை தேசத்தை விட்டு
எண்ணை தேசத்தில்
எரியும் எண்ணற்ற
இந்தியச் சகோதரர்களுக்கு…..

பால் குடிக்கும் குழந்தையையும் மறந்து
பாதி ராத்திரி வரை தன் கணவனின்
தொலைபேசி மணிக்காகக் காத்துக்கிடந்து
மொபைல் போன்களுடனேயே
முழு வாழ்க்கையையும் வாழ்ந்து விடும்
என் தேசத்தின் கற்புக்கரசிகளுக்கு….

தள்ளாத வயதிலும்
தன் தனையன் வரவை நோக்கி
நாழிகைக் கணக்காக
நாட்களைத் தள்ளிக்கொண்டிருக்கும்
என் தாயகத்துத் தாய்மார்களுக்கு…

நிலவைக் காட்டிச் சோறு ஊட்டும்போதெல்லாம்
‘அப்பா எப்பம்மா வருவாரென'க் கேட்கும்
பச்சிளங்குழந்தையின் கண்ணில் படாமல்
கண்ணைக் கசக்கி உயிரைப் பிசைந்துத்
தொண்டை வழியாக தானும் விழுங்கும்
அந்தத் தாயுள்ளத்துக்கு….

வாழ்க்கையில் வளம் சேர்த்து
வாழ்ந்து பார்த்துவிடவேண்டுமென்ற
வைராக்யத்தோடு வையகம் விட்டு
வான்வழியே பறந்துபோய்
பொருள் தேடும் போதையில்
வாழ்க்கையை தொலைத்து விட்ட
என்னைப்போன்ற
எண்ணற்ற சகோதரனுக்கு….

இருக்கும் நாடு
வேறாக இருந்தாலும்
இதயங்கள் என்
இந்தியாவை நோக்கியே….
என்று தாய்நாட்டை எப்போதும்
தாயைப்போல் நேசிக்கும்
என் இந்தியச் செல்வங்களுக்கு…

எத்தனை யுகங்கள்
எந்தெந்த நாட்டில் இருந்தாலும்
என் கடைசி மூச்சு
என் தாய் மடியில்….
என் தாய் மண்ணில்தான்
என்ற வைராக்யத்தோடு
உயிரற்று வாழ்ந்துகொண்டிருக்கும்
உன்னதத் தோழனுக்கு….


அமெரிக்க ‘ஹைவே’யில்
அதிவேகக் கார்களில்
ஆங்கில இசைகளில்
ஆர்ப்பரிக்கச் சென்றாலும்…
ஒற்றையடிப் பாதைகளில்
சைக்கிளில் ‘விசில்’ அடித்துச் சென்று
லயித்துப்போன
என் இந்திய மண்ணை
இன்றுவரை நினைத்து நெகிழ்ந்துபோகும்
நிஜமான மனங்களுக்குத்…....

தெரியும்……………

இந்த உயரின் வலி

ஏ! இந்தியனே!
உன்னைப்பெற்ற
உன் தாய்நாடு கேட்கிறேன்!

மகனே!
நீ எப்போது வருவாய்?
குறைந்தபட்சம்
என் கடைசி நிமிடங்களிலாவது!!

நீ
உன் தாய்த்திரு நாட்டில்
விளக்கேற்ற வரவேண்டாம்…
வீதி வழி போகிற பொழுதுகளிலாவது!!

என் புதல்வனே!
நீ
இழந்தது
வாழ்க்கையை மட்டுமல்ல
உன் தாய்த்திருநாட்டையும்தான்…..

கண்ணீருடன்
இந்தியத்தாய்.


நவநீ
இதனைப்படித்துவிட்டு இந்த வீடியோவைத் தவறாமல் பார்க்கவும்...


871

இன்றைய தலைமுறையினர் கேட்கவேண்டிய ஒரு பதிவு. கேட்டுட்டு ஒங்க கருத்துக்களை மறக்காம பதிவு செய்யுங்க....ம்ம்...இப்ப 'க்ளிக்' பண்ணுங்க....871

May 24, 2007

Swamy Vivekananda

"Today's Quote"
About the women of America,
I cannot express my gratitude for their kindness.
Lord bless them.
In this country,
women are the life of every movement,
and represent all the culture of the nation,
for men are too busy to educate themselves.
From Chicago. Letter to his disciples in Chennai.
January 24, 1894. CW, 5: 28

தீவைத் தாண்டியும் தீராத துயரம்

(இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகளின் நிலையை விளக்கும் பெட்டகத் தொடர்.)
இலங்கையில் நிலவும் யுத்த சூழல் காரணமாக உயிர் பிழைப்பதற்காக ஏராளமான மக்கள் தஞ்சம் தேடி இந்தியாவுக்கு வருகின்றனர்.

இந்தியாவுக்கு வந்த பிறகு தங்களுடைய அல்லல்கள் தீரும், புதிய வாழக்கையைத் துவக்கலாம் என்ற நம்பிக்கையுடன், தமிழகத்துக்கு வரும் பல அதிகள் தங்கள் வாழ்க்கையில் மேலும் பல இன்னல்களை இந்தியாவில் சந்திப்பதாகக் கூறுகின்றனர்.

இவை குறித்து தமிழோசையில் ஒலிபரப்பான பெட்டகத் தொடரின் பாகங்களை நேயர்கள் இங்கு கேட்கலாம்.
BBCTamil.com
BBCTamil.com
BBCTamil.com
BBCTamil.com
BBCTamil.com

"BBC" தமிழோசை

இன்றைய வியாழக்கிழமை 24.05.2007 செய்தி கேட்க கீழுள்ள இணைப்பை அழுத்தவும்

BBCTamil.com Radio Player

May 23, 2007

காதல்ச்சின்னத்தின்
காலடியில்
காதலனுக்காகக்
காத்துக்கிடந்து
களைத்துப்போன
கன்னியவளின்
காதல் தாகம் தீர்க்க…..
‘குபுக்’கெனக் கொப்பளித்தது
குமுறிய குழாய்
காதலன் மேல் கோபமாக….

நவநீ

"BBC" தமிழோசை

இன்றைய புதன்கிழமை 23.05.2007 செய்தி கேட்க கீழுள்ள இணைப்பை அழுத்தவும்

கணக்கு, மணக்கு, பிணக்கு மற்றும் ஆமணக்கு

உலகம் மிகப்பெரியது - ஆனால்
பூமி மிகச்சிறியது

'இளம் இசையமைப்பாளர்'

ஜி.வி.ப்ராகாஷ் Part II

May 22, 2007

Today's Quote

God is not found in the soul by adding anything,
but by a process of subtraction.
Meister Eckhart
உன் ஆத்மாவோடு எதையும்
சேர்த்துக்கொள்வதால் இல்லை
உன் ஆத்மைவை சுத்தமாகப்
பிரித்தெடுப்பதால்தான் - நீ
கடவுளை அடைவாய்

தமிழாக்கம் - நவின்

"பதவி பறிப்பு" ஓர் அலசல்

மதுரையில் மேயர் தலைமையில் ஆர்ப்பாட்டம்
பத்திரிகை தாக்குதலும் பதவி பறிப்பும்
தமிழகத்தில் மதுரையிலுள்ள தினகரன் அலுவலகம் மீது தமிழக முதல்வர் கருணாநிதி அவர்களின் மகன் அழகிரியின் ஆதரவாளர்கள் எனக் கருதப்படுபவர்கள் நடத்திய தாக்குதலில் மூன்று பேர் பலியாயினர். இவையனைத்தும் நீங்கள் அறிந்ததே! இதுபற்றி பல்வேறு செய்திகளும், பேட்டிகளும், மேலும் இலங்கைத் தமிழர்களுக்கும் சிங்கள இராணுவத்தினருக்கும் இடையே நடக்கும் சண்டை, தமிழக மீனவர்களைக் கடத்தியவர்கள் விடுதலைப்புலிகளே' என்ற திடுக்கிடும் தகவல்கள் மற்றும் ஏராளமான செய்திகளைப் படிக்க கீழேயுள்ள இணைப்பை அழுத்தவும்.
BBCTamil.com

"BBC" தமிழோசை இன்றைய செய்தி

கீழேயுள்ள இணைப்பை அழுத்தவும்.
BBCTamil.com Radio Player
உங்களுடைய மேலான கருத்துக்களையும், யோசனைகளையும் எமக்கு மறக்காமல் அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்

குழு - மனுநீதி

"விக்கிப்பீடியா"

விக்கிப்பீடியா'வின்
இணை நிறுவனர் 'ஜிம்மி வேலஸ்' பேட்டி
விக்கிப்பீடியா பற்றி நான் சொல்லத்தேவையில்லை. உங்களுக்குத் தெரிந்திருக்கும் இது ஒரு உபயோகமான வீடியோப் பதிவு. முடிந்தால் தமிழ் விக்கிப்பீடியாவையும் பயணிக்கவும்.

புதிய அமைச்சர் 'ராதிகா செல்வி'

'இளம் இசையமைப்பாளர்'

ஜி.வி.ப்ராகாஷ்

May 21, 2007

Today's Quote


It is true that God is infinite, but not in
the sense in which the word "infinite" is
generally understood. The idea of God's
infinity is not to be confounded with the
materialistic idea of vastness. When you say
that God cannot take a human form, you
understand that a very large substance or
form (as if material in nature) cannot be
compressed into a very small compass. God's
infinitude refers to the unlimitedness of a
purely spiritual entity, and as such, does
not suffer in the least by expressing itself
in a human form.


Selections from the Belur Math Diary. Complete Works, 5: 318

வயது 7, எடை 141 கிலோ



இரும்புத்திரை

என்று பெயர் எடுத்த, உலகத்தில் தன்னிகரற்று விளங்கிய ரஷ்யாவின் இன்றைய குழந்தை!


Russian Child Smoking - More free videos are here

புது விஷயம்!



AMAZING FACTS - video powered by Metacafe

Dr.P.B.Srinivas

அவர்களின் நேர்முகப் பிரத்யேகப் பேட்டி கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள பிரசித்தி பெற்ற தமிழ் பண்பலை வானொலியில் ஒலிபரப்பானது. {It's different - News, Views & Music (KZSU Stanford 90.1 FM radio show)} (பயணிக்க : http://www.itsdiff.com/) அதனை இங்கு கேட்போம்.
1.காலங்களில் அவள் வசந்தம்
2.ரோஜா மலரே ராஜகுமாரி
3.மயக்கமா கலக்கமா
4.ஏதோ மனிதன் பிறந்துவிட்டான்
5.பார்த்தேன் சிரித்தேன்
6.எந்த ஊர் என்றவனே
7.பொன்னென்பேன்
8.ஆண்டொன்று போனால் வயதொன்று போகும்
9.நிலவே என்னிடம் நெருங்காதே
10.நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்

இன்னும் எத்தனை யுகம் ஆனாலும் இந்தப்பாடல்களுக்கென்று ஒரு தனி மகத்துவம் உண்டு. இவற்றையெல்லாம் பாடிய மாபெரும் திரைப்படப் பின்னனிப் பாடகர் குரலைக் கேட்போம்.
.வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த வானொலி நண்பர்களுக்கு முதலில் நன்றியைத் தெரிவித்துக்கொள்வோம்...Please 'click'..
Tamil

May 20, 2007

Today's Quote

Do you know who is the real

Shakti-worshipper?

It is he who knows that

God is the omnipresent force in the universe

and sees in women the manifestation of that force

From Chicago.

Bengali letter to Haripada Mitra.

December 28, 1893. CW, 5: 26

"இடி"

இடி, மின்னல் நேரங்களில் மரத்தடியில் அல்லது அருகில் நிற்கக் கூடாது என்று பெரியவர்கள் சொன்னால் நீங்கள் ஒத்துக்கொள்வீர்களா?



Lightening Strikes A Tree - The most popular videos are a click away

என் கவிதைக் கிராமம்!

ஒரு நீண்ட இடைவெளிக்குப் பின் அன்று என் கிராமத்துக்குச் சென்றேன், காளையார்கோவிலிலிருந்து 15 கி.மீ. தொலைவில், தென்கிழக்கில் இருக்கும் என் கிராமத்தின் பெயர் சூரகுடி. என் கிராமமே நிராயுதபாணியாக நின்றது. இன்றுபோய் நாளை வா! என்று என்னால் சொல்லமுடியாது! ஏனெனில் அது என் தாய்க்கு இணையான என் கிராமம். எனை வளர்த்த மண்! நான் தவழ்ந்த மடி! நான் அமிலக்கண்ணீர் வடித்தேன்! தன் கருவுக்குள் சுமந்து பிரசவித்த ஒவ்வொரு குழந்தையும் பக்கத்திலில்லாது துடித்துக்கொண்டிருந்தது என் கிராமம்.
நான் உள்பட அனைவருமே வெளியூர் சென்றுவிட்ட வருத்தத்தில் என் கிராமம் கண்ணீர் விட்டுக் கதறிக்கொண்டிருந்தது. நான் துள்ளித்திரிந்த அந்த ஈரவயல்கள் வெடிப்போடிக்கிடக்கிறது. நான் நீச்சலடித்த என் குளங்கள் கொக்குகள் நிறைந்து கிடக்கின்றன. அந்தி சாயும் நேரத்தில் கேட்ட பறவைகளில் குரல்கள் நிறைந்த அந்த ஆலமரம் எங்கே போயிற்று? கலகலப்பான என் கிராமத்துக்குள் ஏன் இந்த மயான அமைதி? கண்மாய் நிறைந்து காணப்பட்ட என் கிராமம் எப்போதாவது வரும் குழாய்த் தண்ணீருக்குக் காத்துக்கிடக்கிறது.
போர்க்களத்தில் கணவனை இழந்த கற்புக்கரசி தன் கைக்குழந்தையோடு போர்க்களம் நோக்கி புழுதி கிளம்பக் கதறி ஓடும்போது எதிரியின் அம்பால் மாண்டுபோய்க் கைதவறிய குழந்தை செய்வதறியாது அலறித்துடிக்கும் அந்த கொடூரச்சூழல் என் கிராமத்துக்கு ஏன் வந்தது? இதற்கு நானும் ஒரு காரணமா? நிழலும் நிஜமும் மட்டுமே நிறைந்து கிடந்த என் கிராமத்திற்கு, மரங்களே இல்லாமல் உயிரற்று, வறண்டுபோகுமளவிற்கு வந்த துயர்தான் என்ன? என் கிராமத்தின் மொத்த வேதனையும் ஒரு மாமனிதனின் மரணத்தினால்தானா?
என் தாய்க்கும் என் கிராமத்துக்கும் எந்த வித்யாசமும் எனக்குத் தெரியவில்லை. என் கிராமத்தை பார்க்கும்போதெல்லாம் நான் கண்ணீர் வடிக்கிறேன். நாற்பது ஆண்டுகள் பின்னோக்கிப்போன ஒரு கிராமம் போல எனக்குத் தோன்றுகிறது. நான் வளர்ந்த அந்த மண், அந்த என் தாய் மடி எதற்காகவோ ஏங்குகிறது! என் மண் என் கண் முன்னே காணாமல் போய்விடுமோ? என்ற பயம் வந்துவிட்டது. நாம் நேசிப்பதற்கு வேண்டாம் அங்கு சுவாசிப்பதற்குக் கூட மனிதர்கள் இல்லை. எப்போதுமே கூட்டம் நிறைந்து கலகலப்பாக கலைகட்டும் என் கிராமம் ஆள் அரவமின்றி அடங்கிப்போனதே! மழை பெய்து ஓய்ந்ததும் தலை காட்டும் காளான்கள் போல் அவ்வப்போது தலை காட்டும் ஒரு சில மனிதர்கள். என் மக்கள்! என்ன ஆயிற்று என் கிராமத்திற்கு? “ஐயோ! புன்னகை புரியும் தமிழ் மண்ணே! உன்னை விட்டுப் பிரிவது ஒன்றுதான் எனக்கு வருத்தம்!” என்று கதறிய அந்த மாவீரன் கட்டப்பொம்மனின் வேதனை இன்றல்லவா எனக்குப் புரிகிறது. மண்ணை நேசிக்கும் எவனும் தன் மண்ணின் அருமையை உணர்கிறானோ இல்லையோ! வெறுமையை உணரவேண்டும்! துள்ளிக்குதித்த என் கிராமம், மாதம் ஒரு குழந்தையைப் பிரசவித்த என் கிராமம் மாபெரும் மனிதர்களை உருவாக்கிய என் கிராமம் இன்று நிற்கதியாய் நிற்கிறது. என் கிராமத்துக்கு எல்லாம் இருக்கிறது ஆனால் உயிர் மட்டும் இல்லை. என் கிராமம் நாளுக்கு நாள் ஒவ்வொரு உறுப்பாய் இழந்து கொண்டிருக்கிறது. என் கிராமத்தின் கிழக்கு எல்லையில் கம்பீரமாய் நிற்கும் ‘மருதநாயகி’ அம்மன் கோயில்கூட செயலிழந்து, வழிபட யாருமின்றி வருத்தப்பட்டுக்கொண்டிருக்கிறது.
மக்களன்றி ஒரு ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. வசதிகள் எல்லாம் பெருகி இருக்கிறது. வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்த வள்ளல் மட்டும் இன்று உயிரோடு இல்லை. அதனால்தான் என் கிராமத்துக்கும் உயிர் இல்லை. வாழ்க்கை நடத்த வாரிசுகள் இல்லை. மேற்கு எல்லையில் ‘வீரபத்திரர்’ கோயில் வெட்ட வெளியில் வெறுங்கையோடு நிரந்தர அமைதியாய் நிற்கிறது. கோயில் இருக்கிறது, கும்பிட மக்கள் இல்லை. உடல் இருக்கிறது என் அழகான கிராமத்திற்கு! ஆனால் உயிர்? எப்போது என்ன திட்டம் வகுத்தாலும் வீண் வம்பு பேசும் மனிதர்கள் போய் இப்போது திட்டமிட மட்டுமில்லை வம்புக்குக்கூட வாய்கள் இல்லை. எத்தனையோ பிள்ளைகளைப் பெற்றெடுத்து இன்று உயிரற்ற ஒரு அஃறிணையாய் காட்சியளிக்கும் என் கிராமத்தை உயர்ப்பிக்க எனக்கு ஆயிரம் கைகள் வேண்டாம். ஒரே ஒரு மாமனிதன் போதும்! அவன் மட்டும் என்னை ஆசீர்வதிக்கட்டும். சமீபத்தில்கூட இரண்டு மூன்று மரணம். ஆனால் அவை தற்கொலைக்குத் தள்ளப்பட்டவை. மரணத்தின் விளிம்பில்கூட கடைசியாகக் கதறிப் புலம்பியது அந்தக் கல்லறையில்தானாம்... ஆம் வேறு யாரிடம் சொல்வது? கேட்பதற்கு எந்தச் செவிகளும் தயாராயில்லை. அந்த ஒரு மனிதனின் மறைவு மட்டும் நிறுத்தப்பட்டிருந்தால் இத்தனை உயிர்களின் மரணத்ததை என் கிராமம் பார்த்திருக்காது. என் கிராமமே இன்று வெறுங்கையோடு வெறிச்சோடிக் கிடக்கிறது. இவையனைத்தையும் பொறுமையோடு பார்த்துக்கொண்டு, சிவப்புக்கொடி பறக்க, அந்த மாமனிதன் அமைதியாகத் உறங்குகிறான். தொண்டால் துயிலிழந்த அந்த தூயவனை இழந்து துடிக்கும் என் கிராமத்தின் துயர் துடைப்பார் யாரோ?
ஆம்!
நான் இழந்தது
என் தந்தையை மட்டுமல்ல!
மகனை இழந்து தவிப்பது
என் கிராமமும்தான்!
விதவையானது
என் தாய் மட்டுமல்ல!
என் கிராமமே! நீயும்தான்!!
சூரகுடி பாலா

May 19, 2007

இன்ப அதிர்ச்சி!

திடீரென்று சுய நினைவு வந்து கண்ணை மட்டும் விழிக்கமுடியாமல் காதால் மட்டும் கேட்டுணரும்போது, தன்னை "இறந்துவிட்டதாகக் கருதி, அனைவரும் பக்கத்தில் உட்கார்ந்து அழுகும் குரல் கேட்டால், இன்னும் சற்று நேரத்தில் தனது உடல் தீயில் வெந்து போகப் போகிறது" என உணரும் தருவாயில் திடீரென விழித்துக்கொண்டால்......அந்த உணர்வு இங்கே.......அழுத்தவும்Dinamalar.com

சுவாமி விவேகானந்தர்

No knowledge comes from outside; it is all inside.
What we say we "know" should-in strict psychological
language-be what we "discover" or "unveil"
What we "learn" is really what we "discover" by taking the
cover off our own soul, which is the mirror of
infinite knowledge.

Karma Yoga. New York, 1895. Complete Works, 1: 28

"சும்மா" ஒரு change'க்கு இதையுந்தான் கொஞ்சம் கேட்டுப்பாப்போமே!!





இயக்குனர் திரு.ஞானராஜசேகரன் அவர்களின் சமீபத்தில் வெளிவந்த "பெரியார்" திரைப்படம் பற்றிய ஒரு கலந்துரையாடல். இது 'BBC' வானொலியில் ஒலிபரப்பப் பட்டது.Please 'click' here.

அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்-ஐ ஒருத்தர் எப்படி கிண்டல் பண்றாரு பாருங்க!

வினாடிக்கு 4.17 குழந்தைகள்

உலகத்தில் ஒவ்வொரு வினாடிக்கும் 4.17 குழந்தைகள் பிறக்கின்றனர். இறப்பு வினாடிக்கு 1.80 என்றும் அவற்றுள் சராசரியாக பிழைத்து வளரக்கூடிய குழந்தைகள் வினாடிக்கு 2.37...... இது பற்றி மேலும் அறிய கீழேயுள்ள இணைப்பை அழுத்தவும்
World Population Counter

"சுவாமி விவேகானந்தர்"

  • Women will work out their destinies—much better, too, than men can ever do for them. All the mischief to women has come because men undertook to shape the destiny of women.
  • “The earth is enjoyed by heroes”—this is the unfailing truth. Be a hero. Always say, “I have no fear.”
  • A few heart-whole, sincere, and energetic men and women can do more in a year than a mob in a century.
  • As soon as I think that I am a little body, I want to preserve it, to protect it, to keep it nice, at the expense of other bodies; then you and I become separate.
- சுவாமி விவேகானந்தர்







"Are you a God?" they asked the Buddha.
"No," he replied.
"Are you an angel, then?"
"No."
"A saint?"
"No"
"Then what are you?"
Replied the Buddha,
"I am awake."

May 18, 2007

"Do Not Believe"

Do not believe because you read it in a book,
Do not believe because you saw it on television,
Do not believe because science says so,
Do not believe because a famous person says so,
Do not believe because a wise person says so,
Do not believe because a wise person believes it,
Do not believe because your best friend believes it,
Do not believe because everyone else believes it,
Do not believe because others have believed it for a thousand years,
Do not believe because you've heard it many times before,
Do not believe because you are told you must,
Do not believe because others expect you to,
Do not believe because it gets you accepted
Do not believe because it will make your parents happy,
Do not believe because it will get you noticed,
Do not believe because you want to believe,
Do not believe because you can't afford not to,
Do not believe because it helps you cope,
Do not believe because you'd go mad if you didn't,
Do not believe because you must believe something
Do not believe because there's nothing else to believe,
Do not believe because it feels good to believe,
Do not believe because it makes sense,
Do not believe because your eyes tell you it is so,
Do not believe because it is your own experience,
Do not believe because it feels true,
Do not believe because you know it is true,
Do not believe any of this, Believe only that you are,
And do not even believe that,
For that is beyond belief.
- Peter Russel

May 15, 2007

"நான் மனிதனே!"

நான் சாதாரணமானவன், என் மனத்தில் பட்டதை எடுத்துச் சொல்லி யிருக்கிறேன். இதுதான் உறுதி. இதை நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும் என்று சொல்லவில்லை. ஏற்கக்கூடிய கருத்துக்களை உங்கள் அறிவைக் கொண்டு நன்கு ஆய்ந்து ஏற்றுக்கொள்ளுங்கள், மற்றதைத் தள்ளிவிடுங்கள்.

எந்தக் காரணத்தைக் கொண்டும் மனிதத் தன்மைக்கு மீறிய எந்தக் குணத்தையும் என்மீது சுமத்தி விடாதீர்கள். நான் தெய்வத்தன்மை பொருந்தியவனாகக் கருதப்பட்டுவிட்டால் மக்கள் என் வார்த்தைகளை ஆராய்ந்து பார்க்கமாட்டார்கள்.
"நான் சொல்லுவதை நீங்கள் நம்புங்கள், நான் சொல்லுவது வேதவாக்கு, நம்பாவிட்டால் நரகம் வரும் நாத்திகர்கள் ஆகிவிடுவீர்கள்"
என்று வேதம், சாத்திரம், புராணம் கூறுவதுபோலக் கூறி, நான் உங்களை அடக்குமுறைக்கு ஆளாக்கவில்லை, நான் சொல்லுவது உங்களுடைய அறிவு, ஆராய்ச்சி, உத்தி அனுபவம் இவைகளுக்கு ஒத்துவராவிட்டால் தள்ளிவிடுங்கள். ஒருவனுடைய எந்த கருத்தையும் மறுப்பதற்கு யாருக்கும் உரிமை உண்டு. ஆனால், அதனை வெளியிடக்கூடாது என்பதற்கு எவருக்கும் உரிமை கிடையாது.

சுயமரியாதை மனித தர்மத்தை அடிப்படையாக வைத்து, மனித சமுதாயத்திற்கு யாராவது தொண்டாற்ற வேண்டுமானால் முதலில் செய்யவேண்டியது, பகுத்தறிவுப்படி மக்களை நடக்கச் செய்வதும் சிந்திக்கச் செய்வதுமே யாகும். மனிதன் தனக்குள்ளாகவே, தான் மற்றவனைவிடத் பிறவியில் தாழ்ந்தவன் என்கிற உயர்வு தாழ்வு உணர்ச்சியைப் போக்கித் தன்னம்பிக்கையும், சுயமரியாதையும் பெற வேண்டும். சீர்திருத்தமும், சுயமரியாதையும், சட்டம் கொண்டு வந்து, வாக்கு வாங்கி நிறைவேற்றப் பெற்றுவிடலாம் என்று நினைப்பது ஒரு நாளும் முடியாத காரியம் மனிதன் உலகில் தன் சுயமரியாதையை - தன்மானத்தை உயிருக்குச் சமமாகக் கொள்ளவேண்டும். மானமுள்ள ஆயிரம் பேருடன் போராடலாம். மானமற்ற ஒருவனுடன் போராடுவது சிரமமான காரியம்.
நான் யார்?

நான் எனக்கு தோன்றிய, எனக்குச் சரியென்று படுகிற கருத்துக்களை மறைக்காமல் அப்படியே சொல்லுகின்றேன். இது சிலருக்குச் சங்கடமாகக்கூட இருக்கலாம். சிலருக்கு அருவருப்பாக இருக்கலாம். சிலருக்குக் கோபத்தையும் உண்டாக்கலாம் என்றாலும் நான் சொல்வது அத்தனையும் ஆதாரத்îதாடு கூடி உண்மைக் கருத்துக்களே தவிர பொய்யல்ல. எந்தக் காரியம் எப்படி இருந்தாலும் அரசியலில், பொது வாழ்க்கையில் கண்டிப்பாக மனித தர்மம் தவிர வேறு எந்தக் கால தர்மமோ, சமய தர்மமோ புகுத்தப்படக்கூடாது என்பதுதான் எனது ஆசையே ஒழிய, உலகத்தில் உள்ள மக்கள் எல்லாம் என் விருப்பம்போல்தான் நடக்க வேண்டும் என்பதல்ல. எனது பொதுவாழ்வில் நான் அறிவு பெற்ற பிறகு, பார்ப்பனரல்ல èதார் ஆட்சி என்றால் வலியப்போய் ஆதரித்தே வந்திருக்கிறேன். இதில் நான் மானம் அவமானம் பார்ப்பதில்லை. நான் என் ஆயுள் வரை யாரிடமும் ஓட்டுக் கேட்க மாட்டேன். எனக்காக இரண்டு நல்ல (புகழ்) வார்த்தைகள் சொல்லும்படி யாரிடமும் எதிர்பார்க்கமாட்டேன்.
"நீ ஒரு கன்னடியன் எப்படித் தமிழனுக்குத் தலைவனாக இருக்கலாம்?"
என்று என்னைக் கூடக் கேட்டார்கள். "தமிழனுக்கு எவனுக்கும் யோக்கியதை இல்லையப்பா" என்றேன். இதற்குக் காரணம், ஒரு தமிழன், இன்னொரு தமிழன் உயர்ந்தவனாக இருப்பதைப் பார்த்துச் சகித்துக் கொண்டிருக்கவே மாட்டான்.

பெரியார்

1879 - 1973


"கலாநிதி மாறனின் பதவியிறக்கம்"

"தருமத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்,
தருமம் மறுபடி வெல்லும்"

பாரம்பரியம் மிக்கத் தமிழகம், தமிழக அரசியல் களம் இன்னும் என்னென்ன கேலிக்கூத்துக்களைச் சந்திக்கப் போகிறதோ!பொறுத்திருந்து பார்ப்போம்!

May 14, 2007

காளையார்கோயில்

இங்குள்ள திருக்கோயில் வரலாற்றுச் சிறப்புமிக்கது. நான் பிறந்த மண்ணும் இதுதான். இது சிவகங்கை மாவட்டத்திலுள்ளது. ஆங்கிலேயர்களை எதிர்த்து வீரமரணம் எய்திய மருது சகோதரர்கள் ஆண்ட பூமி இது. 13 மற்றும் 14-ம் நூற்றாண்டில் திருஞான சம்பந்தர், சேக்கிழார், அப்பர், சுந்தரர் மற்றும் அருணகிரிநாதர் போன்றோர் இத்திருத்தலத்திற்கு வந்து ஆண்டவனைப் பாடி அருள் பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் பிறந்த ஒவ்வொருவரும் தெரிந்துகொள்ள வேண்டிய, பார்க்கவேண்டிய, படிக்கவேண்டிய ஒரு திருத்தலமாகும். இதுபற்றி மேலும் அறிய தயவுசெய்து கீழுள்ள இணைப்பை அழுத்தவும்.
Dinamalar.com






May 13, 2007

கலைஞர் அவர்களின் முதல் சட்டமன்றப் பேச்சு!

1957 – ல் குளித்தலைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு சட்டப்பேரவைக்குக் கலைஞர் 8 – ஆம் மாதம், நான்காம் நாள் கவர்னர் உரை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு தனது ‘கன்னி உரையை’ ஆற்றினார்.


“அவைத்தலைவர் அவர்களே! இன்று மேன்மை தங்கிய கவர்னர் அவர்களுடைய உரையைப் பற்றி நான் போற்றவும் வரவில்லை, தூற்றவும் வரவில்லை. என்னுடைய கருத்துரையை ஆற்றவே வந்திருக்கிறேன்”


என்பதுதான் அவர் சட்டமன்ற உறுப்பினராகப் பேசிய முதல் வாக்கியம்.

அன்னையே! வாழ்த்துகிறோம்

இந்த உலகத்தில் மனித ஜீவராசிகள் மட்டுமின்றி
எவை எவைகளுக்கெல்லாம்,
யார் யாருக்கெல்லாம்
"தாய்மை"
என்பதை என்னவென்று உணர முடிகிறதோ!
அவர்களுக்கெல்லாம், அவைகளுக்கெல்லாம்
"அன்னையர் தின வாழ்த்துக்களை"ச்சொல்லி
நாம் அனைவரும் அன்போடு கொண்டாடி மகிழ்வோம்.

எனது வேண்டுகோள்!

தயவு செய்து
உங்களனைவருக்கும்
அம்மாவின் பக்கத்தில் இருக்கும்
பாக்கியம் கிடைத்திருந்தால்...


தயவு செய்து இன்று மட்டுமாவது,
அந்த தாயைக் கட்டியணைத்துக்கொண்டு
அவள் காதுகளுக்குள்
அம்மா!
என்று அடிவயிற்றிலிருந்து சொல்லிப்பாருங்கள்....
அந்த உணர்வு சொல்லும்.....
இந்தப்
பிரபஞ்சத்துக்கும், தாய்க்கும், நமக்கும்
என்ன பந்தம் என்று....
முயற்சித்துப்பாருங்கள்!!

அம்மா நான்
உன்னை நினைத்துப்பார்க்கிறேன்.
ஏங்கித்தவிக்கிறேன்...
இன்று, இப்போது
நீ
என் அருகில்
இல்லையே என்று.......
- நவநீ

May 12, 2007




M - O - T - H - E - R
"M" is for the million things she gave me,
"O" means only that she's growing old,
"T" is for the tears she shed to save me,
"H" is for her heart of purest gold;
"E" is for her eyes, with love-light shining,
"R" means right, and right she'll always be,

Put them all together, they spell
"MOTHER,"
A word that means the world to me.




Howard Johnson (c. 1915)