November 25, 2007

கவிக்கோ அப்துல் ரகுமான்

கவிக்கோ அப்துல் ரகுமான் தமிழ்க் கவிதையுலகில் தனி முத்திரை பதித்தவர். புரட்சிக்கவிஞரைப் போல புதிய கவிஞர்களை வளர்த்தெடுப்பதில் ஆர்வமுடையவர். பல கவிதை நூல்களையும், கவிதை பற்றிய நூல்களையும் எழுதியவர்.
1. நீங்கள் எந்த இயக்கத்தையும் சாராமல் இருக்கக் காரணம் என்ன?
சுதந்திரமாகச் சிறகை விரிப்பவன் கவிஞன். அவனுக்கு இயக்கச் சார்பு என்பது கூண்டுதான்.
2. உங்கள் கவிதைகளின் உள்ளடக்கங்களில் சமுதாயக் கவிதைகளுக்கு அடுத்த நிலையில் தத்துவக் கவிதைகள் அதிகமாக உள்ளன. ஆயினும் உங்களைத் தத்துவ கவிஞராக யாரும் கூறவில்லையே?
விமர்சகர்களின் பக்குவமின்மை
3. நிறைவேறாத காதல் கவிதைகள் பலவற்றை நீங்கள் எழுதியமைக்கு காரணம்?
கவிஞர் காதல் கவிதைகளை பாடினால் தன் வாழ்க்கை அனுபவத்தை பாடுவதாக எடுத்துக் கொள்ளமுடியாது. நான் காதலின் பல விதமான மனோபாவங்களைப் பாடியுள்ளேன். குறிப்பாக நிறைவேறாத கவிதைகளின் பாதிப்பு எனலாம்.
4. நடிகர்கள் அரசியலுக்கு வருவதை உங்கள் கவிதைகள் எதிர்ப்பது ஏன்?
தமிழ்நாட்டின் அவலத்தைச் சுட்டிக்காட்டுவது ஒரு நோக்கம். அரசியல் தெரிந்த நடிகர்கள் அரசியலுக்கு வருவதில் ஒன்றும் தடையில்லை. திரைப்படங்களில் மக்களுக்கு நன்மை செய்வது போல் வருபவர்களைப் பிரவேசித்ததால் ஏற்பட்ட சீரழிவுகளை எல்லோரும் அறிவர்.
5. ஆயிரம் திருநாமம் பாடி உருவமற்ற ஒரே கடவுள் என்று குறிப்பதன் நோக்கம் என்ன?
இறைவனுக்கு உருவமில்லையே தவிர, பெயர்கள் எத்தனை வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். மதங்களெல்லாம் இணையக்கூடிய ஒரு கொள்கையில் இணைப்பதுதான் என் நோக்கம்.
6. சமூகச் சீர்கேடுகள் குறித்து நீங்கள் கருதுவது என்ன?
பொருள் வேட்கையின் காரணமாக, நவ நாகரிக வாழ்க்கை முறை காரணமாக, நேர்மை, உண்மை, சுய மரியாதை போன்ற விழுமியங்களுக்கு மதிப்பில்லாமல் போய் விட்டது. இதனால் உலகளவில் ஒரு பண்பாட்டுச் சீரழிவு காணப்படுகிறது. கவிஞன் ஒரு பரிபூரணமான அழகிய உலகத்தைக் காணவிரும்புகிறான். அவன் கண் முன்னால் அநீதிகளும் அக்கிரமங்களும் நடக்கிறபோது அவன் அவைகளைப் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியாது.
7. முரண் கவிதைகள் பெரிதும் எழுதிய கவிஞராகக் கருதப்பெறும் நீங்கள் அங்கதக் கவிதைகளே அதிக எண்ணிக்கையில் எழுதியுள்ளீர்களே? குறிப்பாக, நளினமாக அங்கதம் செய்கிறீர்களே?
இயல்பாகவே அங்கத உணர்வு எனக்கு பிடிக்கும். கவிதையின் இயல்புகளில் அங்கதமும் ஒன்று. நளினமாகத் தாக்குவதுதான் நாகராகம். தாக்கபடுபவனும் சிந்திக்க வேண்டும் என்பது கருத்து. அவனை எதிரியாக்கிக் கொள்ளக்கூடாது. சமூக குறைபாடுகளைக் சுட்டும்போது அங்கதத்தின் வழியாகச் சுட்டுவது ஒரு வழி.

இன்றைய குறள்

அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கப் படும்

பொறாமைக் குணம் கொண்டவனின் வாழ்க்கை வளமாக இருப்பதும், பொறாமைக் குணம் இல்லாதவனின் வாழ்க்கை வேதனையாக இருப்பதும் வியப்புக்குரிய செய்தியாகும்


அறத்துப்பால் : அழுக்காறாமை

நான் கடந்து வந்த பாதையில், நான் சந்தித்த சாவல்கள் ஏராளம். அது ஒரு கரடுமுரடான பாதை - அஞ்சு ஜார்ஜ்

நான் கடந்து வந்த பாதையில், நான் சந்தித்த சாவல்கள் ஏராளம். அது ஒரு கரடுமுரடான பாதை. கிரிக்கெட்டிற்கு கோடி கோடியாக கொட்டி ஸ்பான்சர் செய்ய நிறைய நிறுவனங்கள் முன் வருகின்றன. 'முதல் மரியாதை', 'தனி மரியாதை' தரப்படுகிறது. ஆனால், மற்ற விளையாட்டுக்களை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. அதிலும் தடகள வீரர்களை கண்டு கொள்வதேயில்லை. பொருளாதார ரீதியில்தான் இப்படி என்றால், ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் அந்த சந்தோஷத்தையோ அல்லது தோல்வியடைந்தால் அந்த வருத்தத்தையோ பகிர்ந்து கொள்ளக்கூட ஆள் கிடையாது என்பது வருத்தமளிக்கும் உண்மை" - அஞ்சு ஜார்ஜ், தடகள வீராங்கனை

பாகிஸ்தான் திரும்பினார் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிஃப்

  • கொல்கத்தாவில் வன்முறையை தூண்டியதாக குற்றம் சாட்டப்பட்டவர் கைது : இந்தியாவின் கொல்கத்தா நகரத்தில் கடந்த புதனன்று வன்முறை ஏற்பட காரணமாக இருந்ததாக குற்றம் சாட்டப்பட்ட முஸ்லிம் தலைவர் ஒருவரை ஐந்து நாள் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அனைத்திந்திய சிறுபான்மை கூட்டமைப்பு என்ற அமைப்பின் ஒருங்கிணைப்பாளரான இத்ரிஸ் அலி என்ற அவர், வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரினுக்கு கொல்கத்தாவில் அடைக்கலம் தரக்கூடாது என்று கூறி நடைபெற்ற வன்முறையை தூண்டியதாக குற்றம் சாட்டப்பட்டு ஞாயிறன்று கைது செய்யப்பட்டார். அன்று நடைபெற்ற வன்முறையை தொடர்ந்து தஸ்லிமா நஸ்ரினை கொல்கத்தாவை விட்டு வெளியேறுமாறு மேற்குவங்க அரசு வற்புறுத்தியது. இதற்கு மனித உரிமை அமைப்புகள் போன்றவை கடும் எதிர்ப்புதெரிவித்தன. தற்போது, தஸ்லிமா நஸ்ரின் கொல்கத்தாவிற்கு திரும்பி வந்தால் அவருக்கு பாதுகாப்பு கொடுக்க தயாராக இருப்பதாக இப்போது மேற்கு வங்க முதலமைச்சர் கூறுகின்றார்
  • கிளிநொச்சி தாக்குதலில் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் : இலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை காலை விமானப்படையினர் நடத்திய வான்வழி குண்டுத் தாக்குதலிலும் வேறு இரண்டு கிளேமோர் கண்ணிவெடி தாக்குதல்களிலும் 6 பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கின்றர்கள் என்றும் மேலும் 6 பேர் காயமடைந்துள்ளார்கள் என்றும் வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன
  • பாகிஸ்தான் திரும்பினார் நவாஸ் ஷெரிஃப் : பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிஃப் சவுதி அரேபியாவில் இருந்து லாகூருக்கு சென்றுள்ளார். சவுதி அரேபியாவில் அரசியல் தஞ்சம் அடைந்து இருக்கும் நவாஸ் ஷெரிஃப் அதை முடித்து நாடு திரும்புவதற்கு கடந்த மூன்று மாதத்தில் நடத்தும் இரண்டாவது முயற்சி இது. விமானத்தில் பிபிசியிடம் பேசிய நவாஸ் ஷெரிஃப் தன்னுடைய லட்சியம் பாகிஸ்தானில் இராணுவ ஆட்சியை முறியடிப்பதுதான் என்பதால், பாகிஸ்தான் அதிபர் பர்வேஷ் முஷாரப்புடன் ஒத்துப் போவது என்ற பேச்சுக்கே இடமில்லை என்றார். அவரது வருகையையொட்டி லாகூரில் பெருமளவிலான பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர். ஆனால் செப்டம்பரில் இடம்பெற்றது போல உடனடியாக நவாஸ் ஷெரிப்பை நாட்டை விட்டு வெளியேற்றும் திட்டம் எதுவும் அரசாங்கத்திடம் இருப்பது போல தெரியவில்லை என பார்வையாளர்கள் கூறுகின்றனர்
  • தாக்குதலில் ஏராளமான தலிபான்கள் கொல்லப்பட்டுள்ளனர் - ஆப்கான் அதிகாரிகள் : ஆப்கானிஸ்தானின் கிழக்கு மாகாணமான பாக்தியாவில் ஆப்கான் மற்றும் நேட்டோ படைகளுடன் நடைபெற்ற மோதலில் ஏராளமான தலிபான் கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஆப்கான் அதிகாரிகள் கூறியுள்ளனர்
  • அமெரிக்காவின் வெளியுறவுக்கொள்கையை கடுமையாக சாடியுள்லார் ஆங்கிலிக்கன் திருச்சபை தலைவர் : உலகம் முழுவதும் சுமார் எழுபது மில்லியன் ஆங்கிலிக்கன் திருச்சபையை பின்பற்றுவோரின் தலைவரான டாக்டர் ரோவன் வில்லியம்ஸ் அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையை கடுமையாக சாடியுள்ளார்.
    இங்கிலாந்து திருச்சபையின் தலைவரும், கேண்டர்பரியின் ஆர்ச்பிஷப்புமான ரோவன் வில்லியம்ஸ் அவர்கள், பிரதானமாக முஸ்லிம் வாசகர்களையே கொண்ட பிரிட்டிஷ் பத்திரிக்கை ஒன்றுக்கு இக்கருத்துக்களை தெரிவித்தார். பலத்தை தவறாக பயன்படுத்தும் அமெரிக்காவின் போக்கை முற்காலத்தில் பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் நடந்து கொண்ட முறையோடு அவர் ஒப்பிட்டுள்ளார். அத்தோடு உலகம் முழுவதும் செல்வாக்கை பெற முயற்சிக்கும் அமெரிக்காவுக்கு அந்த முயற்சி பலிக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். இதற்கு இராக்கை ஒரு உதாரணமாக எடுக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்
  • மலேசியாவில் இந்திய வம்சாவழியினர் ஆர்ப்பாட்டம் : மலேசியாவில் அரசின் தடையை மீறி தலைநகர் கோலாலம்பூரில் பேரணி நடத்திய இந்திய சிறுபான்மை மக்களுடன் மலேசிய பொலிஸார் மோதியுள்ளனர். நகரத்தின் மைய பகுதியில் விடியற்காலை குழுமிய ஆயிரக்கணக்கானவர்கள் மீது கண்ணீர்புகை குண்டுகளை வீசியதோடு, தண்ணீரையும் பீய்ச்சியடித்த பொலிஸார் குறைந்தப்பட்சம் ஐம்பது பேரை கைது செய்தனர். மலேசியாவில் சிறுபான்மையாக இருக்கும் இந்தியர்கள் பெரும்பான்மை மலாய் அரசாங்கத்தால் தாங்கள் பாரப்பட்சமாக நடத்தப்படுவதாக இந்தியர்கள் கோபமாக இருக்கின்றனர். இந்த பேரணி இன பதட்டத்தை அதிகரிக்கும் எனக் கூறி இந்த பேரணிக்கு மலேசிய அதிகாரிகள் தடை விதித்து இருந்தனர்

November 23, 2007

தமிழகத்தின் சமீபத்திய வன்முறைகள் : ஓர் ஆய்வு - 1

தமிழகத்தின் சமீபத்திய வன்முறைகள் : ஓர் ஆய்வு - 2

தமிழகத்தின் சமீபத்திய வன்முறைகள் : ஓர் ஆய்வு - 3

ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவாளர் - 1

ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவாளர்- 2

இன்றைய குறள்

அழுக்கா றெனவொரு பாவி திருச்செற்றுத்
தீயுழி உய்த்து விடும்

பொறாமை எனும் தீமை ஒருவனுடைய செல்வத்தையும் சிதைத்துத் தீய வழியிலும் அவனை விட்டுவிடும்


அறத்துப்பால் : அழுக்காறாமை

சிலபேரு மண்வாசனைக்காகப் பண்றோம்னு பண்றாங்க

"சிலபேரு மண்வாசனைக்காகப் பண்றோம்னு பண்றாங்க. அது என்ன ஆயிடுறதுன்னா பேச்சுத்தன்மை அதிகமாகப் போய், புரியாம போயிடுறது. கொஞ்சமா இருந்தா பரவாயில்லை. வரிக்கு வரி புரியாம போயிடுச்சுன்னா ஒரு தொடர்பே ஏற்படுத்திக்க முடியாம போயிடும். ஒரு மொழிபெயர்ப்பாளனால எப்படி அந்தப் பேச்சு மொழிய மொழிபெயர்க்க முடியும்?" - அசோகமித்திரன், எழுத்தாளர்

உத்திரப் பிரதேசத்தில் வழக்கறிஞர்களை இலக்குவைத்து தொடர் குண்டுவெடிப்புகள்

  • இந்தியாவின் வட மாநிலமான உத்தரப் பிரதேசத்தில், வாரணாசி, ஃபைசாபாத் மற்றும் தலைநகர் லக்னவ் ஆகிய மூன்று நகரங்களில் ஏறத்தாழ ஒரே நேரத்தில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவங்களில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். ஐம்பதுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். வெள்ளிக்கிழமை பிற்பகல் 1.25 மணிக்கும் 1.30 மணிக்கும் இடைப்பட்ட நேரத்துக்குள், மூன்று இடங்களிலும் குண்டுவெடிப்புக்கள் நடந்திருக்கின்றன. நீதிமன்ற வளாகங்களிலோ அல்லது அதற்கு வெளியிலோ, நிறுத்தப்பட்டிருந்த சைக்கிள்களில் வைத்து இந்த குண்டுகள் வெடிக்க வைக்கப்பட்டிருக்கின்றன.
    வாரணாசி மற்றும் ஃபைசாபாத்தில் தலா இரண்டு வெடிகுண்டுகளும், லக்னவ்வில் ஒரு இடத்திலும் குண்டுவெடித்திருப்பதாக உத்தரப்பிரதேச முதலமைச்சர் மாயாவதி செய்தியாளர்களிடம் தெரிவித்தார். வாரணாசியில் 9 பேரும், ஃபைசாபாத்தில் 4 பேரும் உயிரிழந்திருக்கிறார்கள். உயிரிழந்த 13 பேரில் நான்கு பேர் வழக்கறிஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
    இது தொடர்பில், செய்தியாளர்களிடம் பேசிய உத்தரப்பிரதேச மாநில உள்துறைச் செயலர் செம்பர், இந்தக் குண்டுவெடிப்புக்கள் அனைத்தும், திட்டமிட்டு நடத்தப்பட்டிருக்கின்றன. அனைத்தும், குறித்த நேரத்தில் வெடிக்கக்கூடிய டைமர் கருவிகள் பொருத்தப்பட்டவைஎன்றார். குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய உத்தரப்பிரதேச முதல்வர் மாயாவதி, மத்திய புலனாய்வுத்துறை மீது குற்றம் சாட்டினார். இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர் இந்தச் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள். உத்தரப்பிரதேசத்தில் நடந்த குண்டுவெடிப்பு்ச் சம்பவங்களை அடுத்து, பாதுகாப்பைப் பலப்படுத்துமாறு மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது
  • காமன்வெல்த் அமைப்பிலிருந்து பாகிஸ்தான் இடைநீக்கம் : முஷாரஃபுக்கு இது பெரும் பின்னடைவுபாகிஸ்தானை காமன்வெல்த் அமைப்பிலிருந்து இடைநீக்கியதாக நேற்று வியாழக்கிழமை இரவு காமன்வெல்த் அமைப்பு வெளியுறவுத்துறை அமைச்சர்கள் அறிவித்தது ஒரு நியாயமற்ற, முறையற்ற முடிவு என பாகிஸ்தான் கூறியுள்ளது.
    காமன்வெல்த் அமைப்பின் அடிப்படை அரசியல் விழுமியங்களை கடுமையாக மீறுவதாக பாகிஸ்தானில் தற்போதைய சூழல் அமைந்துள்ளது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். உகாண்டா தலைநகர் கம்பாலாவில் காமன்வெல்த் அமைச்சர்கள் செயற்குழு பாகிஸ்தானை அமைப்பிலிருந்து இடைநீக்குவதாக அறிவித்தது. அவசரநிலை சட்டத்தை விலக்கவும், இராணுவத் தலைவர் பதவியை துறக்கவும் ஜெனரல் முஷாரஃப் தவறிவிட்டார் என்பன இவ்வறிவிப்புக்கான காரணங்கள். காமன்வெல்த் தன்னிடம் நியாயமற்ற முறையில் நடந்துகொண்டுள்ளது என்று முஷாரஃப் கருதுகிறார் என்றாலும் அவசரநிலை இறுதியாக அகற்றப்படாதவரை பாகிஸ்தானை மீண்டும் சேர்த்துக்கொள்ளமுடியாது என்பதில் காமன்வெல்த் தீர்மானமாய் இருக்கிறது
  • பாகிஸ்தானை இடைநீக்கும் முடிவை இலங்கை ஆதரிக்கவில்லை
    பாகிஸ்தானை காமல்வெல்த நாடுகள் அமைப்பிலிருந்து இடை நீக்கம் செய்யும் முடிவுக்கு இலங்கை அரசு தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளது.
    நேற்று இரவு பாகிஸ்தானை காமல்வெல்த் நாடுகள் அமைப்பிலிருந்து இடைநீக்கம் செய்யும் முடிவை எடுத்த குழுவில் இலங்கை அரசின் வெளியுறவு அமைச்சர் ரோஹித போகல்லாகமவும் இடம்பெற்றிருந்தார்.
    அப்போது இந்த முடிவுக்கு ஆதரவாக அவர் வாக்களிக்கவில்லை என்று தெரிகிறது.
  • பேசாலையில் இராணுவத்தினர் புலிகள் இடையில் மோதல் : இலங்கையின் வடமேற்கே மன்னார் பேசாலையில் படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இன்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்ற மோதலில் 17 விடுதலைப் புலிகளும், வவுனியா வாரிக்குட்டியூர் பகுதியில் விடுதலைப் புலிகள் நடத்திய கிளேமோர் கண்ணிவெடி தாக்குதலில் இராணுவச் சிப்பாய் ஒருவரும் கொல்லப்பட்டுள்ளதாகத் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்திருக்கின்றது
  • மத்தியகிழக்கு பற்றிய அமெரிக்க மாநாட்டில் பங்கேற்க சௌதியரேபியா சம்மதம் : அமெரிக்காவின் அன்னாபொலிஸ் நகரில் அடுத்த வாரம் நடத்தப்படவுள்ள மத்தியகிழக்கு பற்றிய மாபெரும் மாநாட்டில் சௌதியரேபியா கலந்துகொள்ளும் என்று அந்நாடு அறிவித்துள்ளது
  • புதிய அதிபரை தெரிவுசெய்ய லெபனான் நாடாளுமன்றம் மீண்டும் தவறியுள்ளது : லெபனானில் புதிய அதிபரை தெரிவுசெய்ய நாடாளுமன்றம் மீண்டும் தவறியிருப்பதால் தலைநகர் பெய்ரூட்டில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கிறது
  • பாக்தாத்தில் குண்டுவெடிப்பு, 13 பேர் பலி: இராக்கிய தலைநகர் பாக்தாத்தில் கடந்த சில மாதங்களாக காணப்படாத கொடிய குண்டுத் தாக்குதல் ஒன்று ஜனநெருக்கடிமிக்க சந்தை ஒன்றில் நடத்தப்பட்டபோது 13 பேர் கொல்லப்பட்டார்கள். பலருக்கு காயம்பட்டது
  • இராக்கிலுள்ள தமது துருப்பினரை திருப்பியழைக்க புதிய போலந்து பிரதமர் திட்டம் : இராக்கில் இப்போது எஞ்சியுள்ள போலந்து படையினரை இவ்வாண்டின் இறுதிக்குள் திருப்பியழைக்க தாம் திட்டமிட்டிருப்பதாக போலந்தின் புதிய பிரதமர் டோனல்ட் டஸ்க் உறுதிப்படுத்தியிருக்கின்றார்
  • இன்றைய (நவம்பர் 23 வெள்ளிக்கிழமை 2007) "பிபிசி" தமிழோசைச் செய்திகள் கேட்க கீழுள்ள இணைப்பை அழுத்தவும் http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml?tamil_worldnews

November 22, 2007

பாகிஸ்தானில் அடுத்து என்ன? - ஒரு ஆய்வு

பாகிஸ்தானில் எல்லாமே அதிபர் முஷாராஃப் அவர்களின் திட்டப்படிதான் சென்று கொண்டிருப்பது போலத் தெரிகிறது. அங்கு சுதந்திரமாகச் செயற்பட்ட நீதிபதிகள் மாற்றப்பட்டு அவருக்கு இசைவாக செயல்படும் நீதிபதிகள் நியமிக்கப்பட்டுளார்கள். நானே தொடர்வேன் என்கிறார் முஷாரஃப்இதன் காரணமாக அவர் மீண்டும் அதிபராகத் தேர்தெடுக்கப்பட்டது தொடர்பாக எழுந்த சவால்கள் முறியடிக்கப்பட்டுள்ள நிலையில், தமக்கு ஏற்பட்டிருந்த உடனடியான அச்சுறுத்தல்களை அவர் புறந்தள்ளியுள்ளார். இதன் மூலம் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு மீண்டும் பதவியில் தொடரும் தனது அபிலாஷையில் அவர் வென்றுள்ளார் என்றுதான் கூறவேண்டும். தான் பதவியில் தொடருவது உறுதியாகியுள்ள நிலையில், பலர் அவரிடம் எதிர்பார்த்த தேவைகளை, சலுகைகளை இறுதியாக அவர் அளிக்கக் கூடிய நிலையில் இருக்கிறார். அதாவது இராணுவத் தலைவர் பதவியை அவர் துறப்பது. இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரக் கூடும். உச்சநீதிமன்ற தீர்ப்பு அதிபர் பக்கம்சரி இவைவெல்லாம் அவரை எங்கே அழைத்துச் செல்கின்றன? அவர் நெருக்கடி நிலையை அமல்படுத்திய போது சர்வதேச கண்டனங்கள் எழுந்தன. அமெரிக்கா உட்பட தமக்கு ஆதரவளிக்கும் நெருங்கிய சக்திவாய்ந்த நாடுகளின் கோபத்துகு ஆளானார். இதனிடையே காமன்வெல்த் நாடுகளின் அமைச்சர்கள் இன்று கூடி காமன்வெல்த் அமைப்பிலிருந்து பாகிஸ்தானை இடை நீக்கம் செய்வது குறித்து ஒரு முடிவினை எடுக்கவுள்ளார்கள். இந்த நிலையில், தம்மிடம் வைக்கப்பட்ட கோரிக்கைகளில் பாதியளவை தாம் நிறைவேற்றியுள்ளதாக அவர் வாதிடக் கூடும். பாகிஸ்தானில் திட்டமிட்டபடி தேர்தல்கள் நடைபெற வேண்டும், அதிபர் முஷாரஃப் இராணுவத் தலைவர் பதவியிலிருந்து விலக வேண்டும் என அமெரிக்கா முன்னர் கோரியிருந்தது. இந்த இரண்டும் தற்போது நடைபெறுகின்றன. நெருக்கடியின் கெடுபிடிகள்அங்கு அண்மையில் நடைபெற்ற நிகழ்வுகளின் போது கைது செய்யப்பட்ட பல்லாயிரக்கணக்கானவர்கள் தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள். இருந்தபோதிலும் இன்னமும் சில முக்கியமான விடயங்கள் தொடர்பில் கவலைகள் உள்ளன. அங்கு நடைபெறவுள்ள தேர்தல்களின் பிரச்சார காலம் முழுவதும், அடிப்படை அரசியல் மற்றும் சிவில் உரிமைகள் இடைநிறுத்தப்பட்டுள்ள நிலையில், தேர்தல்கள் எவ்வளது சுதந்திரமாகவும் நேர்மையாகவும் நடைபெறும்? தேர்தல்களை புறக்கணிக்கப் போவதாகக் கூறுகிறார் புட்டோதமது எதிர்ப்புகளை வெளிப்படுத்தும் வகையில், எதிர்கட்சிகள் நடைபெறவுள்ள தேர்தல்களில் பங்கேற்க மறுத்தால், புதிதாக தேர்தெடுக்கப்படவுள்ள நாடாளுமன்றம் எந்த அளவுக்கு சட்டபூர்வ தன்மை கொண்டதாக இருக்கும். உச்சநீதிமன்றத்தில் தன்னால் நியமிக்கப்பட்ட நீதிபதிகளே இருக்கும் நிலையில், அவர்களால் அதிபர் மீது எந்த வகையான கட்டுப்பாடுகளையும் கண்காணிப்பையும் விதிக்க முடியும்... இருந்தாலும் கூட தற்போது உள்ள நிலையில் முஷாராஃபே ஆளச் சிறந்தவர் என அமெரிக்கா போன்ற நாடுகள் நினைக்கின்றன. அவர்களுக்கு தேவையான நெகிழ்வுத்தன்மைய அவர் அளிப்பார் என்பது அவர்களது கருத்தாக இருக்கிறது. இருந்த போதிலும் அவர்களது அழுத்தங்கள் தொடரவே செய்யும்.
எனினும் அரசியல் சூட்டைத் தணிக்கும் நடவடிக்கையில் அதிபர் முஷாரஃப் வெற்றியடைவார் என்றே தோன்றுகிறது.

இன்றைய குறள்

அவ்வித் தழுக்கா றுடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும்

செல்வத்தை இலக்குமி என்றும், வறுமையை அவளது அக்காள் மூதேவி என்றும் வர்ணிப்பதுண்டு. பொறாமைக் குணம் கொண்டவனை அக்காளுக்கு அடையாளம் காட்டிவிட்டுத் தங்கை இலக்குமி அவனைவிட்டு அகன்று விடுவாள்
அறத்துப்பால் : அழுக்காறாமை

காவல்துறை = மனிதாபிமானம்

"போலீஸாரின் சேவை மனிதாபிமானத்தை அடிப்படையாகக் கொண்டதாகவும், நேசம் மிக்கதாகவும், ஊழலற்றதாகவும் இருக்க வேண்டும். மக்கள் நலனைக் காப்பதில் மிகவும் பொறுமையோடு சிறப்பாக செயலாற்றி மக்களின் நம்பிக்கையைப் பெற வேண்டும். நேரத்துடன் செயலாற்றுவதோடு மனதளவிலும், உடலளவிலும் உறுதியானவர்களாக போலீஸார் செயல்பட்டு மற்றவர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ வேண்டும். மனிதாபிமானம் என்பது உயர் அதிகாரிகளிடமிருந்து உருவாகி அது கீழ்நிலை காவலர்கள் வரை தொடர வேண்டும்" - அப்துல்கலாம், முன்னால் இந்திய குடியரசு தலைவர், காவல்துறையின் 150வது ஆண்டு நிறைவுவிழாவில்

முஷாரஃப் காட்டில் மழை

  • முஷாரஃப் அதிபராக மீண்டும் தேர்வுசெய்யப்பட்டதை எதிர்க்கும் இறுதி வழக்கையும் பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தின் புதிய நீதிபதிகள் தள்ளுபடி செய்துள்ளனர் : பாகிஸ்தானில் அதிபர் முஷாரஃபுக்கு எதிரான கருத்துக்களை கொண்டிருந்த நீதிபதிகளை அவர் விலக்கிய பிறகு அமைக்கப்பட்ட புதிய உச்சநீதி மன்றத்தின் நீதிபதிகள் குழு அவர் மீண்டும் அதிபராகத் தேர்தெடுக்கப்பட்டது தொடர்பாக தாக்கல்செய்யப்பட்ட இறுதி வழக்கையும் தள்ளுபடி செய்துள்ளது. இது அவர் இராணுவத் தலைவர் பதவியிலிருந்து விலக அளித்திருக்கும் உறுதிமொழியை நிறைவெற்ற வழிவகுக்கிறது. அவர் இராணுவத் தலைவர் பொறுப்பிலிருந்து விலகவேண்டும் என்பது அவரது எதிரிகள் மற்றும் பாகிஸ்தானின் மேற்குலக கூட்டணி நாடுகளின் முக்கிய வலியுறுத்தலாக இருந்தது. தமக்கெதிராக உச்சநீதிமன்றம் தீர்ப்பினை வெளியிடக்கூடும் என்கிற ஊகத்தில் அவர் இந்த மாதத்தின் முற்பகுதியில் அமல்படுத்திய நெருக்கடி நிலை இன்னமும் தொடருகிறது. அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னர் நெருக்கடி நிலையை விலக்க தன்னால் ஆன அனைத்தையும் செய்ய விருப்பததாக அதிபர் பர்வேஸ் முஷாரஃப் கூறுகிறார்
  • இராக் மோதல்கள்: முப்பதுக்கும் அதிகமானோர் பலி : இராக்கில் பாதுகாப்புப் படையினருக்கும் அல்கைதா போராளிகள் என்று சந்தேகிக்கப்படுபவர்களுக்கும் இடையில் நடந்த சண்டையில் முப்பது பேருக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர்
  • ஐரோப்பாவில் கொகெய்ன் போதைப்பொருள் பயன்பாடு அதிகரிக்கிறது - கண்காணிப்பு அமைப்பு எச்சரிக்கை : கொகெய்ன் போதைமருந்து பயன்பாடு ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 உறுப்பினர் நாடுகளிலும் வேகமாக அதிகரித்துவருவதாக புதிய ஆய்வறிக்கை ஒன்று கூறுகிறது
  • ஜிம்பாப்வே விவகாரம்: தென்னாப்பிரிக்கா சமரச முயற்சி : தென்னாப்பிரிக்க அதிபர் தாபோ ம்பெகி ஜிம்பாப்வே சென்றுள்ளார்.
    காமன்வெல்த் உச்சிமாநாட்டில் கலந்துகொள்வதற்காக உகாண்டா செல்லும் முன்னர் ஜிம்பாப்வே அரசாங்கத்துடனும் எதிர்கட்சிகளுடனும் கலந்துரையாடுவதற்காக அவர் அங்கு சென்றார்
  • சோமாலியாவில் புதிய இடைக்கால பிரதமர் : நூர் ஹசன் ஹுசைன் சோமாலியாவின் செம்பிறைச் சங்கத்தின் தலைவரான அந்நாட்டின் புதிய இடைக்கால பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்
  • தொடரும் மோதல்களில் மேலும் பலர் பலி : இலங்கையின் வடக்கே வவுனியா மன்னார் மாவட்டங்களின் எல்லைப்புறமாகிய முள்ளிக்குளம் இராணுவ முன்னரங்க பகுதிகளில் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் மோதல்கள் தொடர்வதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து பெய்யும் மழைக்கு மத்தியிலும் இந்த இரு தரப்பினரும் சண்டையில் ஈடுபட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது

November 21, 2007

இன்றைய குறள்

கொடுப்ப தழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
உண்பதூஉ மின்றிக் கெடும்

உதவியாக ஒருவருக்குக் கொடுக்கப்படுவதைப் பார்த்துப் பொறாமை கொண்டால் அந்தத் தீய குணம், அவனை மட்டுமின்றி அவனைச் சார்ந்திருப்போரையும் உணவுக்கும், உடைக்கும் கூட வழியில்லாமல் ஆக்கிவிடும்


அறத்துப்பால் : அழுக்காறாமை

பத்மஸ்ரீ கமலின் கவிதை வரிகளில் புல்லரித்துப்போனேன்! நானும் ஒரு தமிழன் என்ற கர்வத்துடன்!!

தராசு சொல்லுகிறது

"நெசவிலே நாட்டு நெசவு மேல். விலைக்கு நெய்வதைக் காட்டிலும் புகழுக்கு நெய்வதே மேல். பணம் நல்லது; ஆனால் பணத்தைக் காட்டிலும் தொழிலருமை மேல். காசிப்பட்டுப் போல் பாட்டு நெய்ய வேண்டும். அல்லது உறுதியான, உழவனுக்கு வேண்டிய கச்சை வேஷ்டி போலே நெய்ய வேண்டும். 'மல்' நெசவு கூடாது. 'மஸ்லின்' நீடித்து நிற்காது. பாட்டிலே வலிமை, தெளிவு, மேன்மை, ஆழம், நேர்மை இத்தனையும் இருக்க வேண்டும்" - மகாகவி பாரதியின் 'தராசு' சிறுகதையிலிருந்து

இலங்கையின் சண்டே லீடர் பத்திரிகை நிறுவனத்தின் அச்சு இயந்திரங்கள் இனந்தெரியாத ஆயுததாரிகளால் தீக்கிரை

  • இலங்கையின் தலைநகர் கொழும்பின் புறநகர்ப்பகுதியான இரத்மலானை பகுதியில் அமைந்திருக்கும் சண்டே லீடர் பத்திரிகை நிறுவனத்துக்குள் இன்று அதிகாலை அத்துமீறி நுழைந்த ஆயுதக் குழுவொன்று, அந்த நிறுவனத்துக்குச் சொந்தமான அச்சு இயந்திரங்களுக்கு தீவைத்ததாக அந்த நிறுவனம் தெரிவித்திருக்கிறது
  • ஈச்சலம்பற்றை வாசிகள் சிலர் மீண்டும் இடம்பெயர்வு : இலங்கையின் கிழக்கே திருகோணமலை மாவட்ட மோதல்களை அடுத்து மட்டக்களப்புக்கு இடம்பெயர்ந்து, பின்னர் மீளக்குடியமர்த்தப்பட்ட ஈச்சலப்பற்றை வாசிகளில் சிலர் மீண்டும் தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறி மட்டக்களப்புக்குச் சென்றுள்ளார்கள்
  • இராக்குக்குள் மீண்டும் திரும்பும் மக்கள் : இராக்கிற்குள் ஒரு நாளைக்கு சுமார் ஆயிரம் மக்கள் மீண்டும் திரும்ப வந்துகொண்டிருப்பதாக தாங்கள் கணிப்பதாக, இராக்கிய அதிகாரிகள் கூறுகிறார்கள்
  • இராணுவத்தினரின் துப்பாக்கிகளை தடயவியல் ஆய்வுக்கு உட்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவு : வவுனியா தவசிகுளத்தில் அண்மையில் அடையாளம் தெரியாத ஆயுதபாணிகளினால் சுட்டுக்கொல்லப்பட்ட 5 இளைஞர்களின் மரணங்கள் தொடர்பான வழக்கு விசாரணையில், வவுனியா வேப்பங்குளம் இராணுவ முகாமைச் சேர்ந்த 34 இராணுவத்தினரின் துப்பாக்கிகளை தடயவியல் பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு வவுனியா மாவட்ட நீதிபதி எம்.இளஞ்செழியன் இன்று பொலிசாருக்கு உத்தரவிட்டிருக்கின்றார்
  • ஷிராக் மீது நிதி முறைகேட்டு விசாரணை : பிரான்ஸ் நாட்டின் முன்னாள் அதிபரான ஜாக் ஷிராக் அவர்கள், 1977 முதல் 1995 வரையிலான காலப்பகுதியில், பாரிஸ் நகர மேயராக இருந்த வேளை நகர நிதியை மோசடி செய்தது பற்றிய குற்றச்சாட்டுக் குறித்து முறையான புலன் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அவரது சட்டத்தரணி ஒருவர் தெரிவித்துள்ளனர்
  • தனது போட்டியாளர்களை வெளிநாட்டு அரசுகள் ஆதரிப்பதாக புட்டின் குற்றச்சாட்டு : ரஷ்ய அதிபர் புட்டின் அடுத்த மாதம் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில், தனது அரசியல் எதிரிகளை வெளிநாட்டு அரசுகள் ஆதரிப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்
  • பெட்ரோலிய விலை அதிகரிப்பு : சர்வதேச அளவிலான பெட்ரோலின் விலை இதுவரை இல்லாத அளவுக்கு மிக அதிகபட்சமாக ஒரு பீப்பாய் சுமார் நூறு அமெரிக்க டாலர்களைத் தொட இருக்கிறது. நியூயார்க்கில் ஒரு பீப்பாய் பெட்ரோலின் விலை தொண்ணூற்றி ஒன்பது டாலர்கள் மற்றும் ஐம்பத்தி ஒன்பது செண்ட்களைத் தொட்டிருக்கிறது
  • காசாவில் ஆயுதகுழுக்களின் உறுப்பினர்களுக்கு மனித நேயச்சட்டங்கள் பற்றிய பயிற்சி : ஆயுத மோதல்கள் நடைபெறும் இடங்களில் சர்வதேச மனிதநேயச் சட்டங்களை கற்பிக்கும் தனது உலகளாவிய முயற்சியின் ஒரு பகுதியாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் காசாவில் உள்ள பாலத்தீன ஆயுதக்குழுக்களுக்கான பயிற்சியை ஆரம்பித்துள்ளது

November 20, 2007

சாகித்ய அகாடமி விருதுபெற்ற கவிஞர் புவியரசுக்கு பத்மஸ்ரீ கமலின் விழா - 1

இன்றைய குறள்

அழுக்கா றுடையார்க் கதுசாலும் ஒன்னார்
வழுக்கியுங் கேடீன் பது

பொறாமைக் குணம் கொண்டவர்களுக்கு அவர்களை வீழ்த்த வேறு பகையே வேண்டா. அந்தக் குணமே அவர்களை வீழ்த்தி விடும்

அறத்துப்பால் : அழுக்காறாமை

சிறந்த மேடைப் பேச்சு என்பதே ஒரு ஏமாற்று வேலை

"சிறந்த மேடைப் பேச்சு என்பதே ஒரு ஏமாற்று வேலை. பேச்சுக்கலை என்பது மகுடி ஊதி மக்களைத் தலையாட்ட வைக்கும் சூழ்ச்சி" - தங்கர் பச்சான்

தமிழக மருத்துவக் கல்லூரி மாணவர்களின் போராட்டம்

  • தமிழக மருத்துவக் கல்லூரி மாணவர்களின் போராட்டம் மீண்டும் தொடங்கியது : மருத்துவ பட்டப்படிப்பு மாணவர்கள் கட்டாயம் ஓராண்டு கிராமப்புற மருத்துவமனைகளில் பணிபுரிய வேண்டுமென்று இந்திய மத்திய அரசு அறிமுகப்படுத்தவிருக்கும் விதிக்கு எதிராக தமிழக மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தங்களின் போராட்டத்தினை மீண்டும் தொடங்கியுள்ளார்கள். இது தொடர்பில் மருத்துவ மாணவர்கள் திங்கட்கிழமை முதல் வெவ்வேறு வகைகளில் தங்களது எதிர்ப்பை தெரிவித்துவருகிறார்கள். அரசின் இந்தத் திட்டமானது உண்மையான கிராப்புற சேவையல்ல என்பது மாணவர்களின் வாதமாகவுள்ளது.
    இந்த ஆண்டு மருத்துவக் கல்லூரிகளில் பல இடங்கள் காலியாகவுள்ள நிலையில் மருத்துவப் படிப்பை ஆறு ஆண்டுகளாக அதிகரித்தால் மருத்துவ படிப்புக்கு மாணவர்கள் வருவது குறைந்துவிடும் எனவும் மாணவர்கள் கூறுகிறார்கள். ஆனால் இந்தியாவில்தான் உலக அளவில் குழந்தைகள் இறப்பு அதிமாக இருக்கிறது என்றும் 73 சதவீத மக்கள் கிராமங்களில் வாழ்கின்ற காரணத்தினாலும், கிராமப்புறங்களில் சுகாதார வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்று இந்திய அரசு எண்ணுகிறதாலும்தான் இவ்வாறான ஒரு திட்டத்தை அரசு முன்னெடுத்துவருகிறது என்று இந்திய அரசின் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் அன்புமணி இராமதஸ் தமிழோசையிடம் தெரிவித்தார். முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் மருத்துவப் படிப்பை முடித்த மாணவர்கள் இரண்டு ஆண்டுகள் கிராமப்புறங்களில் பணிசெய்யவேண்டும் என்பது இருந்தது என்றும், காலகட்டத்தில் அது இல்லாமல் போனது என்றும், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்தத் திட்டம் கூட இன்னமும் ஐந்து அல்லது பத்தாண்டுகள்தான் இருக்கும் எனவும் அமைச்சர் அன்புமணி கூறுகிறார். இந்த சர்ச்சை குறித்து சுகாதார அமைச்சர், மருத்துவ மாணவர்கள் மற்றும் பலரது கருத்துக்களை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம். http://www.bbc.co.uk/tamil/2115.ram
  • உலக எயிட்ஸ் நோயாளர்களின் மதிப்பீட்டு எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது : உலகில் எயிட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் மதிப்பீட்டு எண்ணிக்கையில் ஐக்கிய நாடுகள் சபை பெரும் குறைப்பைச் செய்துள்ளது. எயிட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை 4 கோடி என்று கடந்த வருடத்தில் கூறியதற்குப் பதிலாக, உலகெங்கிலும் 3.3 கோடிப் பேரே எயிட்ஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக யு என் எயிட்ஸ் நிறுவனம் தற்போது கூறியுள்ளது
  • பாகிஸ்தானில் மூவாயிரம் பேர் விடுதலை : பாகிஸ்தான் அதிபர் முஷாரஃப்பினால் கொண்டுவரப்பட்ட அவசர நிலையின் கீழ் தடுத்து வைக்கப்பட்ட மூவாயிரத்துக்கும் அதிகமானோரை பாகிஸ்தான் அரசு விடுதலை செய்துள்ளது. மேலும் பலர் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள் என்று அரசாங்கத்தின் சார்பில் பேசவல்ல ஒருவர் கூறியுள்ளார். ஆனால், தென்பகுதி நகரான கராச்சியில், நெருக்கடி நிலையை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்ய முயன்ற சுமார் 150 செய்தியாளர்கள் கைது செய்யப்பட்டனர்.
    இந்த ஆர்ப்பாட்டத்தைக் கலைக்க பொலிஸார் பலவந்தத்தைப் பிரயோகித்தனர். முன்னதாக, நாடாளுமன்றத் தேர்தல் ஜனவரி மாதம் 8 ஆம் திகதி நடக்கும் என்று தலைமை தேர்தல் ஆணையர் உறுதி செய்தார். இந்த தேர்தலை புறக்கணிப்பதா, இல்லையா என்பது குறித்து பேனசீர் பூட்டோ தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் கராச்சியில், கூடி கலந்தாலோசித்தனர்
  • ஆப்கானின் செப்புச் சுரங்க ஏலத்தை சீன பெற்றது : ஆப்கானிஸ்தானில் உலகின் மிகப்பெரிய செப்புச் சுரங்கம் ஒன்றை அமைப்பதற்கான ஏலத்தை சீன சுரங்க நிறுவனம் ஒன்று வென்றுள்ளது. காபூலுக்கு தெற்கே அய்நக் என்ற இடத்தில் அமைந்திருக்கும் இந்த சுரங்கத்தில், சுமார் 300 கோடி டொலர்கள் முதலீடு செய்யப்போவதாக சீன அரசுக்கு சொந்தமான சீனா மெட்டலர்ஜிக்கல் குழுமம் கூறுகிறது
  • பிரான்ஸில் பெரும் வேலை நிறுத்தம் : பிரான்ஸில் ஆயிரக்கணக்கான அரசாங்க ஊழியர்கள், வேதனம் தொடர்பாக ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். தமது ஓய்வூதிய நலன்களின் வெட்டுச் செய்யும் அரசாங்கத் திட்டத்தை எதிர்த்து ஏழு நாட்களாக போக்குவரத்துத் துறையினர் நடத்தும் போராட்டமும், இந்த வேலை நிறுத்துடன் இணைந்துள்ளது
  • இலங்கையின் வடக்கே மோதல்கள் தொடருகின்றன 25 பேர் பலி : இலங்கையின் வடக்கே நேற்று திங்கட்கிழமையும் இன்று செவ்வாய்க்கிழமையும் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் வெவ்வேறு இடங்களில் இடம்பெற்ற சண்டைகளில் 25 பேர் கொல்லப்பட்டுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது
  • இலங்கையில் மனித உரிமை மீறல் சம்பவங்களை விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீட்டிப்பு : மனித உரிமை மீறல் சம்வங்கள் குறித்து பல்வேறுபட்ட சர்வதேச அழுத்தங்களுக்கு மத்தியில் இலங்கையில் மிகமோசமான 15 மனித உரிமை சம்பவங்களை விசாரித்தறியும் பொருட்டு, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் கடந்த நவம்பர் மாதம் அமைக்கப்பட்ட விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பதவிக்காலத்தை மேலும் ஒரு வருட காலத்திற்கு நீடித்திருப்பதாக இலங்கை ஜனாதிபதி இன்று செவ்வாய்க்கிழமை அறிவித்திருக்கிறார்
  • சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து மார்வன் அத்தப்பத்து இளைப்பாறினார் : ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் மிகவும் சிறப்பான, நேர்த்தியான துடுப்பாட்ட வீரராகக் கருதப்படும் முன்னாள் அணித்தலைவர் மார்வன் அத்தப்பத்து இன்று தான் இலங்கை சார்பில் சர்வதேச கிரிக்கட் போட்டிகளிலிருந்து இளைப்பாறுவதாக அறிவித்திருக்கிறார்

`கடவுள் சொன்னதால்' மகளை மணந்த கிராதக தந்தை

பதினைந்து வயதே ஆன மகளை மணந்து, அவளை கர்ப்பிணியாக்கி விட்டார் கிராதக தந்தை!இப்படியும் இந்த கலி காலத்தில் நடக்கும் என்பதற்கு சான்று தான் இந்த சம்பவம். `கடவுள் சொன்னதால் என் மகளை என் மனைவியாக ஏற்றுக்கொண்டேன்' என்று `கூலாக' சொல்கிறார் தந்தையும் புதுக்கணவனுமான இந்த கொடூரன்!அசாம் மாநிலம், ஜல்பைகுரியை சேர்ந்தவர் அபசுதீன் அலி; வயது 35. ஆறு மாதம் முன், `இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் இவர்' என்று, கிராமத்தில் மக்கள் பரபரப்பாக பேசிக் கொண்டனர். அப்போது, அவர் உண்மையை மறைத்துவிட்டார்.ஆனால், சமீபத்தில் உண்மை வெளிவந்துவிட்டது. அவரது மகளுக்கு திருமணம் ஆகவில்லை. ஆனால், கருவுற்றிருந்தார். அதை கவனித்த கிராமத்தினர் விசாரித்தபோது தான், தந்தையே, மகளை திருமணம் செய்து கொண்டுள்ளார் என்ற பகீர் தகவல் தெரியவந்தது. திருமணம் ஆகாமல் கர்ப்பிணியாக ஒரு பெண் இருப்பதை கிராமத்தினர் அனுமதிக்கவில்லை. அது பற்றி விசாரிக்க பஞ்சாயத்து கூட்டினர். பஞ்சாயத்து கூட்டியபோது தான், மகளுக்கு புது கணவன் அவளின் தந்தை அபசுதீன் என்பது உறுதியானது.பஞ்சாயத்தில் கேட்டதற்கு, `கடவுள் சொன்னதால் என் மகளை நான் திருமணம் செய்துகொண்டேன். இது கடவுளின் ஆணை' என்று கூறினார் அபசுதீன். இதை கேட்டு கிராமத்தினர் கோபம் கொண்டனர். அபசுதீன் குடும்பத்தை கிராமத்தை விட்டு தள்ளிவைக்க முடிவு செய்தனர். அபசுதீனை தாக்கவும் சிலர் முயற்சித்தனர். இந்த விஷயம் போலீசுக்கு தெரியவந்து, அபசுதீன், அவர் மனைவி சைகினா, மகள் ஆகியோரை கைது செய்தனர். மூவரும், மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தப் பட்டனர்.ஆனால், போலீஸ் போட்ட வழக்கில், அபசுதீன் மீது கற்பழிப்பு குற்றச் சாட்டை எழுப்பவில்லை. அதனால், கிரிமினல் குற்றம் எதுவும் இல்லாததால், அவர்களை விடுவித்தார் நீதிபதி.நீதிபதி கூறுகையில், இந்த விஷயத்தில், போலீஸ் திடமான குற்றச்சாட்டுக்களை சொல்லவில்லை. போதிய ஆதாரமும் காட்டவில்லை. மேலும், இது குறித்து பாதிக்கப் பட்ட பெண்ணிடம் இருந்து புகாரும் வரவில்லை. அதனால், வேறு வழியின்றி விடுவிக்க வேண்டியதாகிவிட்டது' என்று கூறினார்.

November 19, 2007

உயிர்வலி - சிறுகதை

மரத்தடி.காம் -ல் பிரசுரமானது http://maraththadi.com/article.asp?id=2923

யம்மா! தாங்கமுடியலம்மா, கடவுளே! எதுக்காக இன்னும் இந்த உசுர வச்சு, இப்படிச் சித்ரவதைப் படுத்தறப்பா? “ஏம்மா! ஒரேயடியாப் போய்ச்சேர்ற மாதிரி எதாச்சும் மாத்திரை மருந்து இருந்தா குடும்மா, ஒனக்குப் புண்ணியமாப் போகும்” என்று முதுகுத்தண்டில் உள்ள பிரச்சினையால், மாதக்கணக்கில் படுத்த படுக்கையாக இருந்த தணிகாசலம் நர்ஸ் வந்தபோது புலம்பியதைக் கேட்டுத் திடுக்கிட்ட பக்கத்துப் படுக்கைக்காரர் ராமசாமி, “அப்படியெல்லாம் சொல்லாதிங்க, வயசாயிட்டாலே ஒடம்புக்கு நோவு வர்றதுதான். எப்படிப் பிறப்புன்னு ஒண்ணு இருந்தா இறப்புன்னு ஒண்ணைத் தடுக்கமுடியாதோ! அது மாதிரித்தான் வயசாயிட்டா நம்ம ஒடம்புக்கு வர்ற நோவுகளையும் தடுக்க முடியாது” என்று சொன்னார். அதைக்கேட்ட தணிகாசலம், “நீங்க ரொம்ப நாளா இங்க இருக்கீங்களோ?” என்றார்.



“ஆமா! எனக்கு நுரையீரல்ல பிரச்சினை, அதுல ஒரு திரவம் தேங்கி இருக்கு, சரியா உறுப்புக்கள் வேலை செய்யாததால அத தினமும் குழாய் வழியாத்தான் எடுக்கணும். நாளடைவில சரியாயிடும்-னு டாக்டர் சொல்லியிருக்கார், என்ன... ஒண்ணு… அந்தத் திரவம் எடுக்கறப்ப, தினமும் ஒரு மணிநேரம் ஒக்காந்திருக்கலாம், பாவம்! ஒங்களால அது முடியாம படுத்த படுக்கையா இருக்கறதால கொஞ்சம் செரமமா இருக்கும். ஆனாலும் நான் ஒக்காந்திருக்குற ஒரு மணி நேரமும், அந்த திரவம் வெளில வர்றதுக்குள்ள போதும் போதும்-னு ஆயிடுது. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விதமான வேதனை. எல்லாம் நல்லதுக்குத்தான், கூடிய சீக்கிரமே நாம ரெண்டுபேருமே குணமாகி வீட்டுக்குப் போயிரலாம், ஒண்ணும் கவலப்படாதீங்க தணிகாசலம்” என்று ஆறுதல் வார்த்தை கூறியது தணிகாசலத்துக்குச் சற்றுக் காயத்தில் மருந்து போட்டது போன்று இருந்தது.



இருவருமே நெடுநாட்களாக அந்த மருத்துவமனையில் படுத்த படுக்கையாகவே இருக்கக்கூடிய நோயாளிகள். தங்களது இளமைக்காலங்கள் பற்றியும், சந்தோசமான சம்பவங்கள் பற்றியும் பேசிக்கொள்வதுண்டு. தணிகாசலம், தான் மிலிடரியில் இருந்தபோது ஏற்பட்ட சில சுவாரஸ்யமான அனுபவங்களை ராமசாமியிடம் பகிர்ந்து கொள்ளும்போது ஒரு புத்துணர்ச்சி கிடைப்பதுபோல் உணர்வார்.



ராமசாமி அந்த அறையில் இருந்த ஒரே ஒரு ஜன்னலோரத்தில் படுத்திருப்பதால், அவர் அமர்ந்திருக்கும் அந்த ஒரு மணிநேர அந்திசாயும் மாலைப்பொழுதுகளில், வெளியில் நடக்கக்கூடிய நிகழ்வுகளை மிகத்தெளிவாகத் தணிகாசலத்துக்கு விளக்குவார். சொல்லப்போனால் ஒவ்வொரு நாளும் தணிகாசலம் வாழ்வதே அந்த ஒரு மணிநேரம்தான்.



“அதோ பக்கத்துல பச்சைப்பசேல்-னு உயரமான மலை உச்சியிலேருந்து பால்போல வெண்மை நிறத்துல ரம்மியமான ஒரு நீர் வீழ்ச்சி கொட்டுது. அதுக்குக்கீழ பாத்தா, அழகான தடாகம் ஒண்ணு இருக்கு, அதுல தாமரையும் அல்லியும் பூத்துக்குலுங்குது. அன்னங்களும், வாத்துகளும், இன்னும் ஏதேதோ வண்ண வண்ணப்பறவைகளெல்லாம் நீந்தி விளையாடுது. பக்கத்துல உள்ள பூங்காவுல அழகழகான மலர்களும் அதுலதேனெடுக்குற வண்ணத்துப்பூச்சிகளும், தேன்சிட்டுகளும்கூட இங்கேருந்து கண்ணுக்குத் தெளிவாத் தெரியுது. அங்கே குழந்தைங்கெல்லாம் ஓடி ஆடி விளையாடுறாங்க. அங்கங்கே இருக்குற நாற்காலிகள்ல இளம் காதல் ஜோடிங்க ஊடலும் கூடலுமா ஒக்காந்து பட்டும் படாமக் கொஞ்சிக் கொலாவிக்கிட்டுருக்காங்க. நம்மமாதிரிக் கொஞ்சம் வயசானவங்க காலார நடக்கிறாங்க. இதோ ஓய்வெடுக்கச் சூரியன்கௌம்பிட்டதால மலைக்குக் கீழ இருக்கற எல்லா வீடுகள்லயும் மின்விளக்குப் போட ஆரம்பிச்சுட்டாங்க. அந்த அருவியோட அழகும், அதுக்குக்கீழ இருக்கற வீடுகளும், அழகழகான மின்விளக்குகளும்..அப்பப்பா! பார்க்கவே மனசுக்கு எவ்வளவு இதமாக இருக்கு தெரியுமா? இதோ வலதுபுறம் ஏதோ ஒரு ஊர்வலம் வருது, நல்ல செவிக்கினிய மங்களகரமான வாத்தியங்கள் முழங்க சீருடை அணிஞ்சபடியே நெறய பேருவரிசையாக மிலிடரி பெரேடு போல உணர்ச்சிப்பூர்வமாக முகத்துல சந்தோசம் பொங்க நடந்து வர்றாங்க. ஒரு வேளை திருமண ஊர்வலமாக இருக்குமோ” என்று வெளியில் உள்ள பல நிகழ்வுகளை வர்ணித்துச் சொல்லிக்கொண்டிருந்தார் ராமசாமி.



“ராமசாமி! நீங்க சொல்றத நான் முழுசாப் இந்தப் படுக்கையிலிருந்து பாக்கமுடியாட்டியும், என்னால அத உணரமுடியுது, அந்த பெரேடுச் சத்தம் என்னோட காதுல விழாட்டியும், நான் மிலிடரில இருக்கறப்ப நடந்த அந்த பெரேடையெல்லாம் நெனச்சுப் பாத்துப் பூரிச்சுப்போறேன்” என்று ஆசுவாசப்படுத்திக்கொண்டார்.



வழக்கம்போல இரவு நெடுநேரம் பேசிக்கொண்டிருந்த இருவரும் அப்படியே உறங்கிப்போனார்கள். மறுநாள் காலை மருந்து மாத்திரைகள் கொடுக்க வந்த நர்ஸ் ராமசாமியை எழுப்பினாள். எந்த அசைவும் இன்றி தூக்கத்திலேயே நிம்மதியாக அவர் உயிர் பிரிந்திருந்தது. நர்ஸ் மேற்கொண்டு ஆகவேண்டியதைச் செய்து, உடலை அந்தப் படுக்கையிலிருந்து அப்புறப்படுத்த ஏற்பாடு செய்தபோது, செய்தி அறிந்த தணிகாசலம் உடைந்து போனார். அவருக்கென்று ஆறுதலாகப் பேசிக்கொண்டிருந்த ராமசாமியின் பிரிவு அவரை வெகுவாகப் பாதித்தது.



அடுத்தநாள் நர்ஸிடம், “என்னை அந்த ராமசாமி இருந்த ஜன்னலோரத்துல உள்ள படுக்கைக்கு மாத்துங்களேன்” என்று கேட்டதற்கிணங்க அவரை அங்கு மாற்றினர். ராமசாமி நினைவாகவே இருந்த தணிகாசலம் அவர் வெளியே பார்த்து ரசித்துத் தனக்குத் தினம் தினம் விளக்கும் அந்த அழகுமிகு காட்சியைப் பார்க்க எண்ணி, மிகவும் சிரமப்பட்டு ஒரு புறம் திரும்பித் தலையை லேசாகத் தூக்கி ஜன்னல் வழியாகப் பார்த்தார். ஒரு உயர்ந்த கட்டிடத்தின் வெள்ளைச் சுவரைத்தவிர, ராமசாமி விளக்கியதுபோல் அங்கு வேறு எதுவுமே இல்லை. குழம்பிப் போனவர் நர்ஸிடம் இதுவரை நடந்தவற்றையெல்லாம் கூறி, விளக்கம் கேட்டபோது அந்த நர்ஸ் சொன்னதைக்கேட்டு அவரால் கண்ணீர் சிந்தாமல் இருக்கமுடியவில்லை.



“ராமசாமிக்கு ரெண்டு கண்ணும் தெரியாதுங்க, அவரால அந்தச் சுவரைக்கூடப் பாக்கமுடியாது, நீங்க படுத்த படுக்கையா இருந்து வேதனைப்படுறத உணர்ந்த அவரு, ஒங்கள உற்சாகப் படுத்தறதுக்காகவும், வேதனை தெரியாம இருக்கறதுக்காகவும் தினம் தினம் அப்படிச் சொல்லியிருக்காரு. எங்க எல்லாருக்குமே அவரால எந்தத் தொந்தரவும் இல்ல, அருமையான பேஷன்ட், மரணம் கூட அவருக்கு வலி தெரியாம தூக்கத்துலயே வந்துருச்சு பாத்தீங்களா” நர்ஸும் சேர்ந்து துக்கம் தொண்டையடைக்கக் கண்ணீர் விட்டாள்.

நவநீ

நடிகர் வினீத்

இன்றைய குறள்

அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின்
ஏதம் படுபாக் கறிந்து

தீய வழியில் சென்றால் துன்பம் ஏற்படுமென்பதை அறிந்தவர்கள் பொறாமையினால் தீச்செயல்களில் ஈடுபடமாட்டார்கள்


அறத்துப்பால் : அழுக்காறாமை

ஆசிய அளவிலான போட்டியில் புதுச்சேரி மாணவி மகேஸ்வரி சாதனை

அன்மையில் ஜோர்டான் நாட்டில் நடைபெற்ற ஆசிய அளவிலனா இளைஞர்கள் மற்றும் ஜூனியர்களுக்கான எடை தூக்கும் போட்டியில் 15 வயதான புதுச்சேரியைச் சேர்ந்த பள்ளி மாணவி மகேஸ்வரி மூன்று தங்கப் பதக்கங்கள் மற்றும் மூன்று வெண்கலப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார். ஆசிய இளைஞர்களுக்கான போட்டியில் 58 கிலோ எடைப் பிரிவில் மூன்று தங்கப் பதக்கங்களும், ஆசிய ஜூனியகர்களுக்கான போட்டியில் மூன்று வெண்கலப் பதக்கங்களும் மகேஸ்வரி வென்றுள்ளார். புதுச்சேரி மாநிலம் நெட்டப்பாக்கத்திலுள்ள கம்பன் அரசு மேல்நிலைப் பள்ளியில் பதினோராம் ஆண்டு படித்து வரும் மகேஸ்வரிதான் தமிழகம் மற்றும் புதுச்சேரியிலிருந்து உலக அளவில் பெண்களுக்கான எடை தூக்கும் போட்டியில் பதக்கங்களை வென்றிருக்கும் முதல் வீராங்கனை என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு விவசாயின் மகளான மகேஸ்வரி கல்வியிலும் சிறந்து விளங்குகிறார். தமது பத்தாம் ஆண்டுத் தேர்வில் 91 சதவீத மதிப்பெண்கள் பெற்றுள்ளார். பள்ளிப் படிப்பிலும் சிறந்து விளங்கும் மகேஸ்வரி ஒரு நாளைக்கு ஐந்து மணி நேரம் பயிற்சியில் ஈடுபடுகிறார். ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வெல்வதே தனது இலட்சியம் என்றும் அது குறித்த முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கிறார்

நானாக விருப்பப்பட்டு அரசியலுக்கு வரவில்லை - பிரதமர் மன்மோகன்சிங்

"நானாக விருப்பப்பட்டு அரசியலுக்கு வரவில்லை. அரசியலை எனது தொழிலாகவும் தேர்வு செய்யவில்லை. அரசியலில் நீண்டகால குறிக்கோள்களை அடைய குறுகியகால மோதல்களைச் சமாளித்து நிற்க வேண்டிய சங்கடம் இருப்பதாக நான் அறிவேன். தினசரி சவால்களை சமாளித்துக் கொண்டே நீண்டகால குறிக்கோள்களையும் அடைந்தாக வேண்டும்" - பிரதமர் மன்மோகன்சிங்

முல்லைப் பெரியார் புதிய அணை: தமிழக விவசாயிகள் எதிர்ப்பு

  • வங்கதேசத்துக்கு சர்வதேச நிதி உதவிகள் வரத் தொடங்குகின்றன : சூறாவளியால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட, வங்கதேசத்துக்கு 140 மில்லியன் டொலர்கள் பெறுமதியான சர்வதேச உதவி கிடைக்கும் என்று உறுதி வழங்கப்பட்டுள்ளதாக வங்கதேச அனர்த்த முகாமைத்துவ அமைச்சரான தாபன் சௌத்திரி தெரிவித்துள்ளார்
  • முல்லைப் பெரியார் புதிய அணை: தமிழக விவசாயிகள் எதிர்ப்பு : முல்லைப்பெரியார் அணைப் பகுதியில் புதிய அணை ஒன்றை கட்டுவதற்காக கேரள அரசினால் உருவாக்கப்பட்டுள்ள அலுவலகம் குறித்து தமிழக விவசாயிகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
    தமிழகத்துக்கு வரும் தண்ணீரைத் தடுக்கும் நோக்கிலேயே கேரள அரசு செயற்படுவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஆனால், தமிழகத்துகு வரும் நீர் விநியோகம் அதனால் பாதிக்கப்படாது என்றும், தற்போதைய புதிய அணைக்கான திட்டம், ஏற்கனவே உள்ள உச்ச நீதிமன்றத்தீர்ப்பை புறக்கணிப்பதாக அமையாது என்றும் கூறுகிறார், கேரள நீர்வளத்துறை அமைச்சரான பிரேமச்சந்திரன். முல்லைப் பெரியார் அணை விவகாரத்தில் தமிழக அரசுடன் தொடர்ந்து இருதரப்புப் பேச்சு நடத்த தாம் தயாராக இருப்பதாகவும் அவர் கூறுகிறார்
  • எலிசபெத் அரசியின் திருமண வைர விழா கொண்டாடப்பட்டது : பிரிட்டனின் அரசி எலிசபெத்தும் அவரது கணவர் இளவரசர் பிலிப்பும் தமது திருமணத்தின் அறுபதாம் ஆண்டு நிறைவு விழாவினை கொண்டாடுகிறார்கள். இது தொடர்பில் வெஸ்ட் மினிஸ்டர் தேவாலயத்தில் இறைவனுக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக நடைபெற்ற விழாவில் அவர்களுடன் சுமார் இரண்டாயிரம் விருந்தாளிகளும் கலந்து கொண்டனர். எலிசபெத் அரசியார்தான் பிரிட்டிஷ் இராஜவம்சத்திலேயே முதலாவதாக தமது திருமணத்தின் வைரவிழாவை கொண்டாடுபவர் என்பது குறிப்பிடத்தக்கது
  • 450 பாலத்தீன கைதிகளை விடுவிக்க இஸ்ரேல் முடிவு : பாலத்தீனக் கைதிகள்பாலத்தீனத்தின் அதிபர் மஹ்மூத் அப்பாஸுக்கும் இஸ்ரேலியப் பிரதமர் எகுட் ஓல்மர்ட்டுக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதற்கு சற்று முன்னர், 450 கைதிகளை விடுவிக்கும் நடவடிக்கைக்கு இஸ்ரேல் அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது
  • முஷாரஃப் தேர்தெடுக்கப்பட்டது தொடர்பான மனுக்களை அந்நாட்டு உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்ததுள்ளது : பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தின் புதிய நீதிபதிகள் குழு, அந்நாட்டு அதிபர் பர்வேஸ் முஷாரஃப் மீண்டும் அதிபராகத் தேர்தெடுக்கப்பட்டது தொடர்பாக எழுந்த அனைத்து பெரிய சவால்களையும் தள்ளுபடி செய்துவிட்டது. அந்த நீதிபதிகள் குழு இது தொடர்பில் ஒரே ஒரு வழக்கை மட்டுமே நிலுவையில் வைத்துள்ளது
  • கெமர்ரூஜ்ஜின் முன்னாள் அதிபர் ஐ நா வின் நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட்டார் : கம்போடியாவில் கெமர்ரூஜ் அமைப்பின் பயங்கர ஆட்சி நடந்த எழுபதுகளில் அங்கு அதிகாரத்தில் இருந்த அதன் முன்னாள் அதிபரான கெய்யு சம்பன் அவர்கள், அமைப்பின் முன்னாள் தலைவர்களை விசாரணைக்கு உள்ளாக்கிவருகின்ற, ஐக்கிய நாடுகள் சபை ஆதரவிலான சிறப்பு நீதிமன்றத்தின் முன்பாக நிறுத்தப்பட்டார்
  • இலங்கை வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு ஏற்கப்பட்டது : இலங்கை அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பில், 16 வாக்குகள் வித்தியாசத்தில் அது அங்கீகரிக்கப்பட்டது

November 18, 2007

கைகள் இல்லை, கால்கள் இல்லை, கவலையும் இல்லை : ஒரு உண்மைக் கதை - நவின் (Nawin)

எனது பெயர் நிக் வியூஜிசிக். இந்த உலகத்தின் மூலை முடுக்குகளிலெல்லாம் இருக்கக்கூடிய கோடானுகோடி மக்களின் இதயத்தில் என்னை நீங்கா இடம்பிடிக்கச் செய்த எனது தாய், தந்தையரையும், அந்தக் கடவுளையும் நான் நன்றியுணர்வோடு இந்த நிமிடங்களில் நினைத்துப் பார்க்கிறேன். என்னைப் பற்றித் தெரியாத உள்ளங்களுக்குத் தெரியப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் நான் இருக்கிறேன். இன்று உங்கள் முன் ஊக்கத்தோடும், உற்சாகத்தோடும் பேசிக்கொண்டிருக்கிறேன். இந்த சந்தோசமான தருணத்தில் எனக்குள் இருக்கும் வலிகளை மறந்து போகிறேன். ஆனாலும் உங்களுக்காக, நான் கடந்து வந்த பாதைகளைச் சற்றே திரும்பிப் பார்க்கிறேன். அப்பப்பா! அவை உயிர் வலிக்கும் அனுபவங்கள்! உயிரோடு இதயம் கருகும் வேதனைகள்! அவை முழுக்க முழுக்க முட்களால் ஆனவை. அவமானங்கள் நிறைந்தவை, கனம் மிக்கவை. அந்த வலியை என்னைத் தவிர இந்த உலகத்தில் வேறு எவரும் அனுபவித்திருக்க முடியாது. அனுபவிக்கக் கூடாது. ஆண்டவனிடம் நான் வேண்டி நிற்பதும் அதைத்தான். போதும்! அந்த வலி என்னோடு ஒழிந்து போகட்டும்! எல்லாத் தம்பதியரையும் போலவே அந்த இளம் கிறிஸ்தவத் தம்பதியர் ஆஸ்திரேலியா நாட்டில் மெல்பர்ன் நகரத்தில் தனது முதல் குழந்தையின் பிரசவத்திற்காக ஆயிரமாயிரம் கனவுகளோடும், கற்பனைகளோடும் காத்துக் கிடந்தனர். கடவுள் ஒரு அழகான ஆண் குழந்தையைக் கொடுத்தார். 1982-ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 04-ஆம் நாள் அதிகாலைப் பொழுதில், இந்தப் பூவுலகில் புதுப் பிறவியெடுத்தத் தன் மகனை, கிறிஸ்தவப் பாதிரியாராக இருக்கும் அந்தத் தந்தை அள்ளி முத்தமிட எத்தனிக்கையில்தான் தெரிந்தது தனது பிஞ்சு மகன் கால்களும், கைகளும், விரல்களும் முழு வளர்ச்சி இல்லாமல் பிறந்திருப்பது. எந்த மருத்துவக் காரணங்களுமே சொல்லமுடியாத ஒரு வினோதமான பிறவியெடுத்த அந்தப் பாக்கியசாலி வேறு யாருமில்லை, நான்தான். என்னைப் பார்க்க ஆவலாக இருப்பீர்கள்! இதோ அது நான்தான். இந்த நிக். தொடர்ந்து படிக்க இணைப்பில் செல்க..http://www.nilacharal.com/ocms/log/11190714.asp

இன்றைய குறள்

அறனாக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம்
பேணா தழுக்கறுப் பான்

அறநெறியையும், ஆக்கத்தையும் விரும்பிப் போற்றாதவன்தான், பிறர் பெருமையைப் போற்றாமல் பொறாமைக் களஞ்சியமாக விளங்குவான்

அறத்துப்பால் : அழுக்காறாமை

நீங்கள் கிரெடிட் கார்டு உபயோகிப்பவரா?

கிரெடிட் கார்டு உபயோகிப்பவரா? அப்படியானால் உங்களது கிரெடிட் கார்டின் எண்ணைக்கூட யாருக்கும் தெரியப்படுத்தவோ, தரவோ வேண்டாம். ஏனெனில், உங்கள் கிரெடிட் கார்டு எண் வேறு யாருக்காவது தெரிந்திருந்தால் அதைப் பயன்படுத்தி உங்கள் பணத்தைச் சுருட்டிவிட முடியும். இத்தகைய நூதன மோசடிக்கு ஒரு புதுவித சாஃப்ட்வேர் உதவுகிறது என்பது அதிர்ச்சிகரமான தகவல். எனவே, அவ்வப்போது உங்களின் கிரெடிட் கார்டு கணக்கு விவரங்களை சரிபார்த்துக் கொள்ளுங்கள். அதுபோல தனி நபர் கடன் பெறுவதற்கோ அல்லது வேறு உபயோகத்துக்கோ கிரெடிட் கார்டின் "இருபக்க ஜெராக்ஸ் நகல்களை' யாருக்கும் கொடுக்கக்கூடாது.
கிரெடிட் கார்டு மோசடி அதிகரிப்பு: சென்னையில் உள்ள மத்தியக் குற்றப்பிரிவு போலீஸில் கிரெடிட் கார்டு மற்றும் வங்கி தொடர்பான மோசடிகள் விசாரிக்கப்பட்டு வருகின்றன. 2006-ம் ஆண்டு புள்ளி விவரப்படி கிரெடிட் கார்டு மோசடி தொடர்பாக 13 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. தற்போதைய நிலவரப்படி 2007-ல் இதுவரை சுமார் 19 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 32 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர். கிரெடிட் கார்டு மோசடி தொடர்பாக தினந்தோறும் ஏராளமான புகார்கள் வந்த வண்ணம் உள்ளன என்று போலீஸார் தெரிவிக்கின்றனர். நூதன மோசடி நடப்பது எப்படி? கிரெடிட் கார்டில் நூதன முறையில் தற்போது மோசடி நடந்து வருகிறது. பொதுவாக கிரெடிட் கார்டுகளுக்கு பாஸ்வேர்ட் எதுவும் தேவையில்லை. நீங்கள் "எலக்ட்ரானிக்ஸ் டேட்டா கேப்சர்' என்ற இயந்திரத்தில் "ஸ்வைப்' செய்தால் உங்களுக்கு பணப் பரிமாற்றம் நடக்கும்.
தற்போதோ கிரெடிட் கார்டு இல்லாமலேயே, அதாவது கிரெடிட் கார்டு எண்ணை மட்டும் வைத்துக் கொண்டு உங்களது பெயரில் பணத்தைச் சுருட்டிவிட முடியும். சில வங்கிகள் இதற்கான சேவைகளை வழங்கி வருகிறது. நட்சத்திர ஹோட்டல்கள், கிளப்களில் இம்மாதிரியான சேவையைப் பெற முடியும். இதற்கு "கீ என்ட்ரி ஆப்ரேஷன்ஸ்' என்ற புதிய சாஃப்ட்வேர் முறை பின்பற்றப்படுகிறது.

இதன்படி கிரெடிட் கார்டு எண்ணை மட்டும் வைத்துக் கொண்டு அமெரிக்காவிலோ அல்லது ஃபிரான்ஸிலோ உள்ள ஹோட்டல்களில் தங்குவதற்கு அறைகளை புக் செய்து கொள்ள முடியும். தடுப்பது எப்படி? இம்மாதிரியான சேவைகளில் மோசடிகள் நடப்பதற்கும் வாய்ப்பு உள்ளன. எனவே, கிரெடிட் கார்டுகளின் எண்களை யாருக்கும் தெரிவிக்கக்கூடாது. அதேபோல கிரெடிட் கார்டுகளின் இரு பக்க ஜெராக்ஸ் நகல்கள், சிவிவி எண் (கார்டு வேல்யூ வெர்ஃபிகேஷன்), கிரெடிட் கார்டின் பயன்பாட்டுக் காலம் குறித்து தகவல் தெரிவிக்கக்கூடாது. ஆன்-லைன் மூலமாக இந்தச் சேவை நடைபெறுகிறது. ஆன்-லைன் மூலமாக நடைபெறும் இந்த மோசடியைத் தடுக்க வேண்டுமெனில், கிரெடிட் கார்டில் உள்ள சி.வி.வி. எண்களை கறுப்பு பேனாவால் எழுதி மறைத்துவிட வேண்டும். அதன்பின்னர் ஜெராக்ஸ் நகல் கொடுத்தால், மோசடி நடப்பது தவிர்க்கப்படும் என்று போலீஸார் தெரிவிக்கின்றனர்.

மறக்காதீர் பாஸ்வேர்ட் எண்ணை!
கிரெடிட் கார்டு மட்டுமில்லாது டெபிட் கார்டு மோசடிகளும், சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதில் பெண் டாக்டர் ஒருவரின் டெபிட் கார்டு திருடப்பட்டு, பணம் எடுக்கப்பட்டது. விசாரணையில், அந்த பெண் டாக்டரின் செல்போனில் இருந்த டெபிட் கார்டு எண்ணை அந்த நபர் தெரிந்து கொண்டார். பின்னர் டெபிட் கார்டை திருடிச் சென்று, பணத்தை எடுத்துவிட்டு தலைமறைவாகிவிட்டார்.

பாஸ்வேர்ட் முக்கியம்...:
டெபிட் கார்டுகளின் பாஸ்வேர்ட் (ரகசிய இலக்க எண்கள்) நினைவில் வைத்திருப்பது அவசியம் என்கிறது போலீஸ். சிலர் தங்களது செல்போனில், ரகசிய எண்களை பதிவு செய்து வைக்கின்றனர். இன்னும் சிலர் டெபிட் கார்டுகளுக்கான உறைகளிலேயே தங்களது ரகசிய இலக்க எண்களை எழுதி வைக்கின்றனர். அதுபோல எழுதி வைக்கக்கூடாது. சில நேரங்களில் டெபிட் கார்டு தொலைந்து போகும் பட்சத்தில், யாராவது எடுத்து பணத்தை எடுத்துவிட வாய்ப்புள்ளது என்று போலீஸார் அறிவுறுத்துகின்றனர்.

கையில்லா ரவிக்கை அணிந்து நடித்தால் அந்தப் படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ்

தமிழ்த் திரையுலகில் வயது வந்தோர்க்கு மட்டும் என்ற சான்றிதழுடன் வெளிவந்த முதல் படம் வெண்ணிற ஆடை - இயக்கிவர் ஸ்ரீதர். "இந்தப் படத்தில் கதாநாயகி ஜெயலலிதா கையில்லா ரவிக்கை அணிந்திருந்த காரணத்தினால் மட்டுமே இதற்கு ‘ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டது எனக்கு வியப்பளித்தது" - ஸ்ரீதர் (சத்தியமாக இது கற்பனையோ காமெடியோ இல்லை... உண்மை : ம்ம்....என்ன செய்ய? "கையில்லா ரவிக்கை எங்கே? ரவிக்கையில்லா கதாநாயகிகள் எங்கே?")

வங்கதேசத்தில் நிவாரணப் பணிகள் தீவிரம்

  • மட்டக்களப்பு தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரின் பொலிஸ் பாதுகாப்பு விலக்கப்பட்டுள்ளது : மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவரது மட்டக்களப்பு இல்லங்களுக்கு வழங்கப்பட்டிருந்த பொலிஸ் பாதுகாப்பு இன்று ஞாயிற்றுக்கிழமை மாலையுடன் எவ்வித முன்னறிவிப்புமின்றி நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாராளுமன்ற உறுப்பினர்களான பீ.அரியநேத்திரன் மற்றும் தங்கேஸ்வரி கதிர்காமன் ஆகியோரின் இல்லங்களுக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் அச்சுறுத்தல்கள் காரணமாக நீண்ட காலமாக கொழும்பிலேயே தங்கியிருக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பாராளுமன்றத்தில் நாளை திங்கட்கிழமை நடைபெறவிருக்கும் வரவு-செலவு திட்டம் மீதான வாக்கெடுப்பின்போது, ஆதரவு வழங்க வேண்டும், இல்லையேல் வாக்கெடுப்பை புறக்கணிக்க வேண்டும் என கடந்த ஓரிரு நாட்களாக மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரக்ளுக்கு தொலைபேசி ஊடாக எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு வந்ததாகவும், இந்தச் சூழலிலேயே இவர்களின் இல்லங்களுக்கு வழங்கப்பட்டிருந்த பொலிஸ் பாதுகாப்பு இன்று மாலையுடன் நீக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இலங்கை அரசதரப்பு இதனை திட்டவட்டமாக மறுத்துள்ளது
  • வட இலங்கை வன்முறை - புலிகள் 9 பேர் கொல்லப்பட்டுள்ளதாக இராணுவம் தகவல் : இலங்கையின் வடக்கே வன்னிப் போர்முனைகளிலும், யாழ்ப்பாணம் கிளாலி இராணுவ முன்னரங்கப் பகுதிகளிலும் இராணுவத்தனருக்கும்,விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற மோதல்களில் 9 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்துள்ளது
  • திருகோணமலையில் பொலிசார் தேடுதல் வேட்டை: 23 பேர் கைது : இலங்கையின் கிழக்கே திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் தெற்கு பிரதேசத்தின் ஈச்சிலம்பற்றுப் பகுதியில் அரசாங்கப்படையினரும் பொலிஸாரும் இணைந்து கூட்டாக நடத்திய தேடுதல்நடவடிக்கையின்போது சந்தேகத்தின் பெயரில் 23 பேர் கைதுசெய்யப்பட்டு விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டுவருவதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்துள்ளனர்
  • பாகிஸ்தான் மோதலில் பலியானவர்களின் எண்ணிக்கை எழுபத்தைந்தை தாண்டியது : பாகிஸ்தானின் வடமேற்கு நகரமான பராச்சினாரில் சுனி மற்றும் ஷியா முஸ்லிம் குழுக்கள் இடையே தொடர்ந்து வரும் மோதலில் எழுபத்தைந்து பேருக்கும் மேல் பலியாகியுள்ளதாக பாகிஸ்தான் அரச ஊடகம் தெரிவித்துள்ளது.
    இருத்தரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் மோர்டர் மற்றும் கனரக ஆயுதங்கள் கொண்டு தாக்குதல் நடத்தி வருகின்றனர்
  • வங்கதேசத்தில் நிவாரணப் பணிகள் தீவிரம் : கடந்த வியாழனன்று கடும் சூறாவளி தாக்கிய வங்கதேசத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கும் பணிகள் சுறுசுறுப்படைந்து வருகின்றன. நிவாரணப் பணிகள் தொடர்பாக அரசுக்கு ஆலோசனை வழங்கும் தபன் சௌத்ரி இந்தப் புயலை ஒரு தேசியப் பேரனர்த்தம் என்று வர்ணித்துள்ளார்
  • பர்மாவை இடைநீக்கம் செய்யும் கோரிக்கையை நிராகரித்தது 'ஆசியான்' : ‘ஆசியான்’ எனப்படும் தென்கிழக்காசிய நாடுகள் கூட்டமைப்பில் இருந்து பர்மாவை இடைநீக்கம் செய்யுமாறு அமெரிக்க செனட் விடுத்த கோரிக்கையை அவ்வமைப்பின் தலைவர் நிராகரித்துள்ளார்
  • திமிங்கல வேட்டையை ஆரம்பித்துள்ளது ஜப்பான் : ஜப்பானை சேர்ந்த கப்பல்கள் திமிங்கல வேட்டைக்காக தென் கடற்பகுதியை நோக்கி பயணித்து வருகின்றன. இந்த வேட்டையின் போது பல ஆண்டுகளில் முதன்முறையாக ஹம்பேக் எனப்படும் திமிங்கலமும் வேட்டையாடப்படும். கடந்த 1960 ஆம் ஆண்டு முதல் சர்வதேச ஒப்புதல் மூலம் இந்த வகை திமிங்கலம் வேட்டையாடப்படுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இப்போது ஹம்பேக் திமிங்கிலத்தின் எண்ணிக்கை வேட்டையாட கூடிய அளவுக்கு அதிகரித்து விட்டதாக கூறியுள்ள ஜப்பான், இந்த பயணத்தின் போது ஐம்பது ஹம்ப்பேக் திமிங்கலங்களையாவது கொல்வது என முடிவு செய்துள்ளது. சர்வதேச சமூகத்தில் தனக்கு இருக்கும் மரியாதை ஜப்பான் கெடுத்துக் கொள்ளப் போகிறது என ஆஸ்திரேலியா எச்சரிக்கை விடுத்துள்ளது

November 17, 2007

இன்றைய குறள்

விழுப்பேற்றின் அஃதொப்ப தில்லையார் மாட்டும்
அழுக்காற்றின் அன்மை பெறின்

யாரிடமும் பொறாமை கொள்ளாத பண்பு ஒருவர்க்கு வாய்க்கப் பெறுமேயானால் அதற்கு மேலான பேறு அவருக்கு வேறு எதுவுமில்லை

அறத்துப்பால் : அழுக்காறாமை

மனிதசக்தி எரிபொருள் போன்றது

"ஒரு மனிதனின் சக்தி என்பது அவருடைய உற்சாகத்துக்கான எரிபொருள் போன்றது. அந்தச் சக்தியானது அளவுக்கு மீறி செலவழிக்கப்படும் போதுதான் மனிதனை இறுக்கம், துக்கம், சோர்வு, கோபம் போன்ற எல்லாமே ஆக்கிரமிக்க ஆரம்பிக்கின்றன" - சுவாமி பரமஹம்ஸ நித்யானந்தர்

விடுதலைப்புலிகள் மீது அழுத்தம் கொடுக்கவே தமிழர் புனர்வாழ்வுக்கழக சொத்துக்களை அமெரிக்கா முடக்கியுள்ளது

  • வங்கதேச சூறாவளியில் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு : கடந்த வியாழக்கிழமை பங்களாதேஷைத் தாக்கிய சூறாவளி ஏற்படுத்திய அனாத்தங்களின் அளவு இப்போது தான் தெளிவாகத் தெரிய ஆரம்பிக்கிறது. இறந்தவர் தொகை குறைந்தது 1600 என்று வங்கதேச அரசு இப்போது கூறுகிறது
  • விடுதலைப்புலிகள் மீது அழுத்தம் கொடுக்கவே தமிழர் புனர்வாழ்வுக்கழக சொத்துக்களை அமெரிக்கா முடக்கியுள்ளது - ஆய்வாளர் கருத்து : விடுதலைப்புலிகள் அமைப்பின் மீது அரசியல், ராணுவம் மற்றும் பொருளாதார ரீதியிலான அழுத்தங்களை அதிகரிக்கும் நோக்கிலேயே, தமிழர் புனர்வாழ்வுக்கழக சொத்துக்களை அமெரிக்க அரசு முடக்கியிருப்பதாக கூறுகிறார், இந்திய தலைநகர் புதுதில்லியிலிருக்கும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் தெற்காசியவியல் துறை பேராசிரியர் சஹாதேவன் அவர்கள்
  • மட்டக்களப்பு சிறைச்சாலையில் கைதிகள் உண்ணாவிரதம் : இலங்கை மட்டக்களப்பு சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் எனக் கூறப்படும் 29 பேர் தம் மீதான விசாரணையை துரிதப்படுத்த வேண்டும் அல்லது விடுதலை செய்யப்பட வேண்டும் எனக் கோரி சனிக்கிழமை காலை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்
  • புதுடெல்லியில் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய மாநாடு : இந்தியாவில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்குத் தலைமை வகிக்கும் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய மாநாடு சனிக்கிழமை புதுடெல்லியில் நடைபெற்றது. அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படும் இந்த மாநாடு, இந்தியா – அமெரிக்கா இடையிலான ராணுவம் சாரா அணுசக்தி உடன்பாடு, கூட்டணி அரசியல் உள்பட, பல்வேறு விஷயங்களில் காங்கிரஸ் கட்சி தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்துவதற்கான ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்ளப்பட்டது
  • பாகிஸ்தான் அதிபருடன் அமெரிக்க வெளியுறவுத்துறைத் துணை செயலர் சந்திப்பு : பாகிஸ்தான் சென்று அதிபர் முஷாரஃப் அவர்களுடன் பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறைத் துணைச் செயலர் ஜான் நெக்ரபோண்டே அவர்கள் தனது பயணக் காலத்தை அங்கே நீடித்துள்ளார்
  • பர்மிய இராணுவ அதிகாரிகள் மீது சீனா அழுத்தம் : பர்மிய இராணுவ அரசு அதிகாரிகள் மீது சீனா அழுத்தங்களை அதிகரித்துள்ளது. அவர்கள் அண்மையில் நடந்த பொது ஆர்ப்பாட்டங்களைக் கையாண்ட விதத்தை விமர்சித்ததோடு, ஜனநாயக மறுசீரமைப்பு வேலைகளை விரைவு படுத்தும் படியும் வலியுறுத்தியுள்ளது
  • காலநிலை மாற்றம் தொடர்பான புதிய அறிக்கை முக்கியத்துவம் வாய்ந்தது - ஐ.நா செயலாளர் நாயகம் : காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச குழு விடுத்திருக்கின்ற புதிய அறிக்கை, காலநிலை மாற்றம் தொடர்பாக நடைபெற்று வரும் விவாதத்தில் ஒரு முக்கிய முடிவை எட்டுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தியிருப்பதாக ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்

November 16, 2007

நடிகர் வினீத்

தமிழ்ச்செல்வன் மறைவிற்கு கலைஞரின் கவிதை தேவையா?

நுணலும் தன் வாயால் கெடும்

விடுதலைப்புலிகள் விசயத்தில் தமிழக மற்றும் இந்திய அரசின் நிலை மற்றும் சர்ச்சைகள் 3

இந்திய-அமெரிக்க அணுசக்தி உடன்பாடு : ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இடதுசாரிகள் இடையில் புதிய திருப்பம்

இந்தியா – அமெரிக்கா இடையிலான இராணுவம் சாரா அணுசக்தி உடன்பாடு தொடர்பாக இந்தியாவின் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கும், அதற்கு வெளியில் இருந்து ஆதரவளிக்கும் இடதுசாரிக் கட்சிகளுக்கும் ஏற்பட்டுள்ள பிரச்சினையில் ஒரு முக்கியத் திருப்பம் ஏற்பட்டிருக்கிறது. இந்தியா தொடர்பான பாதுகாப்பு உடன்பாடு தொடர்பாக சர்வதேச அணு ஆற்றல் அமைப்புடன் பேச்சு நடத்துவதற்கு இதுவரை எதிர்ப்புத் தெரிவித்துவந்த இடதுசாரிக் கட்சிகள் தங்கள் நிலைப்பாட்டை குறிப்பிட்ட அளவுக்கு தளர்த்திக் கொண்டிருக்கின்றன. சர்வதேச அணு ஆற்றல் அமைப்புடன் இந்திய அரசு பூர்வாங்கப் பேச்சுக்கள் நடத்துவதற்கு இடதுசாரிகள் சம்மதம் தெரிவித்துள்ளனர். இந்தப் பிரச்சினை தொடர்பாகப் பேசுவதற்காக, வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில் அமைக்கப்பட்ட ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மற்றும் இடதுசாரிக் கட்சிகளின் பிரதிநிதிகளைக் கொண்ட உயர்நிலைக் கமிட்டியின் கூட்டம் வெள்ளிக்கிழமை மாலை புதுடெல்லியில் நடைபெற்றது. அதில், இடதுசாரிகள் தங்களது முடிவைத் தெரிவித்தார்கள். இதுபற்றி செய்தியாளர்களிடம் அறிவித்தார் பிரணாப் முகர்ஜி. "இந்தியா – அமெரிக்கா இடையிலான ராணுவம் சாரா அணுசக்தி உடன்பாட்டுக்கு வழிவக்கும் 1, 2, 3 உடன்படிக்கையின் மீது அமெரிக்காவின் ஹைட் சட்டம் எந்த அளவுக்கு பாதிப்புக்களை ஏற்படுத்தும் என்பது குறித்தும், சர்வதேச அணு ஆற்றல் அமைப்பின் பாதுகாப்பு உடன்பாடு குறித்தும் ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டிருக்கிறது. அதற்கு, இந்தியா தொடர்பான பாதுகாப்புக்கான வரைவு உடன்பாடு குறித்து சர்வதேச அணு ஆற்றல் அமைப்பின் தலைமைச் செயலகத்துடன் பேச்சு நடத்த வேண்டும்.
அரசு அந்தப் பேச்சுவார்த்தையை மேற்கொள்ளும். உடன்பாடு குறித்து இறுதி செய்வதற்கு முன்னதாக, அதுகுறித்து இந்தக் கமிட்டி ஆய்வு செய்யும். இந்தியா – அமெரிக்கா இடையிலான இராணுவம் சாரா அணுசக்தி உடன்பாட்டை அமல்படுத்துவதற்கு முன்னதாக, இந்தக் கமிட்டியின் பரிந்துரைகள் கருத்தில் கொள்ளப்படும்" என்றார் பிரணாப் முகர்ஜி. சர்வதேச அணு ஆற்றல் அமைப்புடன் எப்போது பேச்சு நடத்தப்படும் என்பது குறித்து எந்த விவரங்களையும் அவர் வெளியிடவில்லை. இடதுசாரிக் கட்சிகள் தங்கள் நிலையிலிருந்து இறங்கிவரக் காரணம் என்ன என்பது குறித்து, அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலர் டி. ராஜா தமிழோசைக்கு வழங்கிய செவ்வியை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம் http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml?tamil_worldnews

இன்றைய குறள்

ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்
தழுக்கா றிலாத இயல்பு
மனத்தில் பொறாமையில்லாமல் வாழும் இயல்பை ஒழுக்கத்திற்குரிய நெறியாகப் பெற்று விளங்கிட வேண்டும்
அறத்துப்பால் : அழுக்காறாமை

இந்தியா அடிமை நாடாக மாறிவிடும்

"எல்லோரும் ஐ.டி. துறைக்குச் சென்று விட்டால்...அறிவியல் படிக்க குறைவான மாணவர்களே ஆர்வம் காட்டுகின்றனர். இது ஆபத்தான சூழல். எல்லோரும் ஐ.டி. துறைக்குச் சென்று விட்டால் இந்தியா அடிமை நாடாக மாறிவிடும்" - டாக்டர் அனந்தகிருஷ்ணன், முன்னாள் துணை வேந்தர், அண்ணா பல்கலைக் கழகம்

முஷாரஃப் பதவி விலக வேண்டும் என்கிறார் பேநசிர்

  • தமிழர் புனர்வாழ்வுக் கழக சொத்துக்கள் அமெரிக்காவில் முடக்கப்பட்டது குறித்து கொழும்பு அமெரிக்கத் தூதர் விளக்கம்
    தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னணி அமைப்பாக செயல்பட்டு அதற்கு ஆதரவாக நிதி சேகரித்ததாக் கூறி அமெரிக்க அரசின் கருவூலத் துறை நேற்று வியாழனன்று தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் சொத்துக்களை அமெரிக்காவில் முடக்கி வைப்பதாக அறிவித்தது. இது தொடர்பில் வெள்ளிக்கிழமையன்று கொழுபிலுள்ள அமெரிக்கத் தூதர் ரொபர்ட் ஓ பிளேக் விரிவான விளக்கத்தினை அளித்துள்ளார். தமிழர் புனர்வாழ்வுக் கழகம், அறக்கட்டளை என்கிற பெயரில் அமெரிக்காவில் தடைசெய்யப்பட்ட இயக்கமான புலிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு, அவர்களுக்கு நிதி மற்றும் ஆயுதங்கள் உட்பட இதர கொள்வனவுகளை மேற்கொண்டு வந்தது விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது என்று கூறினார்.
    மேலும் இந்த நடவடிக்கை விடுதலைப் புலிகளுக்கு எதிரானதுதான் என்றும் தமிழ் மக்களுக்கு எதிரானது அல்ல என்றும் அவர் விளக்கமளித்துள்ளார். அமெரிக்கா, இலங்கையில் தமிழ் மக்கள் உட்பட அனைத்து சமூக மக்களாலும் ஏற்றுக் கொள்ளப்படக் கூடிய வகையில் முன்னெடுக்கப்படும் நியாயமான சமாதானப் பேச்சுவார்த்தைகள் மூலமான தீர்வுக்கு அனைத்து ஆதரவையும் வழங்கும் எனவும் அவர் தெரிவித்தார். இராணுவ வழிமுறைகள் மூலம் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது எனவும் அமெரிக்க திடமாக நம்புகிறது என்றும் கொழுபிலுள்ள அமெரிக்கத் தூதர் ரொபர்ட் ஓ பிளேக் தெரிவித்தார். இதனிடையே இது குறித்து தமிழோசையிடம் கருத்து வெளியிட்ட தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் திட்ட இயக்குநர் ஜான் கிறிஸ்டி, அமெரிக்காவின் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். தமது அமைப்பின் நடவடிக்கைகள் மிகவும் வெளிப்படையாகவும், அனைவருக்கும் திருப்தியளிக்கக் கூடிய வகையிலும் உள்ளன என்றும் அவர் கூறினார். அமெரிக்கத் தூதர் மற்றும் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் திட்ட இயக்குநர் ஆகியோரது பேட்டிகளை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம் http://www.bbc.co.uk/tamil/2115.ram
  • வான்வழித் தாக்குதலில் புலிகளின் படகு கட்டுமான நிலையம் அழிக்கப்பட்டுள்ளது: இலங்கையின் வடக்கே விடுதலைப்புலிகளின் பிரதேசத்தின் மீது இன்று வெள்ளிக்கழமை நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் விடுதலைப் புலிகளின் படகு கட்டுமான நிலையம் அழிக்கப்பட்டதாகப் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.
    கிளிநொச்சி மாவட்டம் இரணைமடுவுக்கு மேற்கே முறிகண்டி பகுதியில் நேர்த்தியான மறைவிடம் ஒன்றில் அமைந்திருந்த விடுதலைப் புலிகளின் படகுக் கட்டுமான தளத்தின் மீதே இந்த விமான குண்டுத் தாக்குதல் காலை 6.30 மணியளவில் நடத்தப்பட்டதாகவும், இங்கு விடுதலைப் புலிகளின் மகளிர் அணியினர் படகு கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டிருந்தனர் என்றும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது
  • முஷாரஃப் பதவி விலக வேண்டும் என்கிறார் பேநசிர் : பேனசிர் பூட்டோபாகிஸ்தானில் புதிதாக பதவிப் பிரமாணம் செய்துள்ள காபந்து நிர்வாகத்தை புறக்கணிப்பதாகக் கூறியுள்ள முன்னாள் பிரதமர் பேனசிர் பூட்டோ, அதிபர் பெர்வேஸ் முஷாரஃப் பதவி விலகவேண்டும் என்று கோருகிறார். வீட்டுக் காவலிலிருந்து விடுவிக்கப்பட்டு சில மணி நேரங்களே கடந்த நிலையில் பேசிய அவர், இந்த புதிய நிர்வாகம் ஆளும் கட்சியின் ஒரு உறுப்புதான் என்றும், அதிபர் முஷாரஃப் தனது அதிகாரத்தைத் தக்க வைத்துக்கொள்ளும் ஒரு தந்திரம்தான் இது என்றும் கூறினார். ஜனவரி மாதம் நடக்கத் திட்டமிடப்பட்டுள்ள தேர்தல்களை புறக்கணிப்பதா, வேண்டாமா என்று தானும் இன்னொரு முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃபும் பரிசீலித்துவருவதாக அவர் தெர்வித்தார்.
    அரசியல் நெருக்கடி குறித்து விவாதிப்பதற்காக அமெரிக்கத் தூதர் ஜொன் நெக்ரொபொண்டே பாகிஸ்தான் வந்திறங்கிய வேளை பேனசிர் விடுவிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
  • வங்கதேச சூறாவளியினால் பெரும் சேதம் : நூற்றுக்கணக்கானோர் பலி
    வங்கதேசத்தின் தென்மேற்குக் கடற்கரைப் பகுதிகளைத் தாக்கிய சக்திமிக்க சூறாவளியினால், பல நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது
  • ரஷ்யாவுக்கு தேர்தல் கண்காணிப்பாளர்களை அனுப்பும் திட்டம் கைவிடப்பட்டது : ரஷ்ய நாடாளுமன்றம்ரஷ்யாவில் எதிர்வரும் டிசம்பர் 2 ஆம் திகதி நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தல்களுக்கு கண்காணிப்பாளர்களை அனுப்புவது என்ற திட்டத்தை ஐரோப்பிய தேர்தல் கண்காணிப்பு அமைப்பு கைவிட்டுள்ளது
  • குர்து ஆதரவுக் கட்சியைத் தடை செய்ய துருக்கி அரசு நடவடிக்கை : குர்து கிளர்ச்சிக்காரர்களுக்கு ஆதரவு வழங்குவதாக குற்றஞ்சாட்டப்படும், முக்கிய குர்து ஆதரவு அரசியல் கட்சியான DTP கட்சியை தடை செய்வதற்கான சட்ட நடவடிக்கைகளை துருக்கி நாட்டு அரச சட்டவாதிகள் ஆரம்பித்துள்ளனர்
  • தடைமீறி பர்மா உள்ளிருந்து வெளிநாட்டு செய்தியாளர் அனுப்பியுள்ள சிறப்புப் பெட்டகம் : பர்மா வந்துள்ள ஐ.நா.மன்ற மனித உரிமைகள் தூதர் பொலொ செர்ஜியோ பின்ஹெய்ரோ, உண்மை கண்டறியும் அவரது இந்த சுற்றுப்பயணத்தின் இறுதிக் கட்டத்தில், நேற்று வியாழக்கிழமை, இரண்டு அரசியல் கைதிகளை அவர் சந்திக்க பர்மீய அதிகாரிகள் அனுமதித்திருந்தார்கள்

November 15, 2007

நிறைய கனவுகள் இருக்கு! - கபடி கவிதா

டெஹ்ரானில் நடைபெற்ற ஆசியன் சாம்பியன்ஷிப் கபடி போட்டியில் தங்கம் வென்றவரும், இந்திய அணியின் துணை கேப்டனுமான கவிதா: இந்திய பெண்கள் கபடி அணியில் இருக்கும் ஒரே தமிழ் பெண் நான். என் அப்பாவுக்குத்தான் எல்லா நன்றியும். என்னைச் சேர்த்து வீட்டில் அஞ்சு பொண்ணுங்க. அம்மா, ஹார்ட் பேஷன்ட். மூணு வருஷமா போராடி, முடியாமல் இறந்துட்டாங்க. அப்புறம் எங்களுக்கு எல்லாமே அப்பாதான். பல்லவன் டிரான்ஸ் போர்ட்ல பியூனா இருக்கார். ரொம்பக் கஷ்டப்பட்டு எங்களை வளர்த்தார். கிரிக்கெட், ஹாக்கி மாதிரியான விளையாட்டுகளைத் தான் நான் முதலில் விளையாடிட்டு இருந்தேன். எந்த உபகரணமோ, பொருளோ இல்லாமல், உடம்பின் சக்தியை மட்டுமே வெச்சு விளையாடுற ஆட்டம் என்பதால், கபடியில் அதிகமா வீரம் இருக்குன்னு ஈர்ப்பு வந்தது. கபடியில் யூனிவர்சிட்டி லெவலில் ஜெயிச்சு, தமிழ்நாடு அணியில் தேர்வானேன். நல்லா விளையாடி, அஞ்சே வருஷத்தில் தமிழ்நாடு அணிக்கு கேப்டன் ஆனேன். என் ஆசைப்படி ரெண்டு வருஷத்துக்கு முன்னால், ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் தமிழ்நாடு சிறப்புக் காவல் படையில் வேலை கிடைச்சது. தமிழ்நாடு போலீஸ் கபடி டீமுக்கு என்னை செலக்ட் பண்ணினாங்க. மதுரையில் நடந்த மாநில அளவிலான போட்டிகளில் ஆடியதைப் பார்த்து, நேஷனல் டீம் கேம்ப்புக்கு அழைப்பு வந்தது. சிம்லா, குஜராத், டில்லின்னு மூணு இடங்களில் கேம்ப். கடைசியா 12 பேர்களில் ஒருத்தியா என்னைத் தேர்ந்தெடுத்து, துணை கேப்டனாக்கினாங்க.என்னதான் கபடி, இந்திய விளையாட்டுன்னாலும், மத்த டீம் பெண்கள் அசாதாரண வேகத்தில் ஆடி மிரட்டிட் டாங்க. ஐடியா, டெக்னிக் இரண்டையும் பயன்படுத்திதான் அவங்களைத் தோற்கடிச்சோம். என்னைப் பாராட்டி முதல்வர், அஞ்சு லட்ச ரூபாய் பணப் பரிசு கொடுத்தார். இந்த வெற்றியை என் அப்பாவுக்கு அர்ப்பணிக்கிறேன். அடுத்ததா, இந்திய அணியின் கேப்டன் ஆகணும். அதுக்கடுத்து அர்ஜுனா விருது வாங்கணும். நிறைய கனவுகள் இருக்கு" - இவரின் கனவுகள் நனவாகட்டும் என்று வாழ்த்துவோம்!

இன்றைய குறள்

உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்
இன்னாச்சொ னோற்பாரிற் பின்

பசி பொறுத்து உண்ணாநோன்பு இருக்கும் உறுதி படைத்தவர்கள்கூடப் பிறர்கூறும் கொடுஞ்சொற்களைப் பொறுத்துக் கொள்பவர்களுக்கு, அடுத்த நிலையில்தான் வைத்துப் போற்றப்படுவார்கள்
அறத்துப்பால் : பொறையுடைமை

மதங்களைக் கடந்து அடையாளம் காணப்பட வேண்டியவர்கள் பெண்கள்

"எந்த மதமும் பெண்களுக்கு எதிரானது அல்ல. ஆனால் இடையில் வந்தவர்கள் தங்களது கருத்துகளை மதத்தின் மீது திணித்து பெண்களை அடக்கி வந்தார்கள். மதங்களைக் கடந்து அடையாளம் காணப்பட வேண்டியவர்கள் பெண்கள். தங்களுக்கு எதிரான சமூகத் திணிப்புகளை எதிர்த்து அவர்கள் போராட வேண்டும்" - கனிமொழி

தமிழர் புனர்வாழ்வுக் கழக சொத்துக்களை அமெரிக்கா முடக்க முடிவு

  • பாகிஸ்தானுக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் இந்தியா வெற்றி : சதத்தை நழுவ விட்ட டெண்ட்டூல்கர்இந்திய பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே இந்தியாவில் நடைபெற்று வரும் ஐந்து ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா வென்றுள்ளது.
    இன்று குவாலியர் நகரில் நடைபெற்ற நான்காவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வென்றதன் மூலம் 3-1 என்கிற கணக்கில் இந்தத் தொடரை வென்றுள்ளது.
    தமிழர்புனர்வாழ்வுக் கழகத்தின் உடமைகளை முடக்க முடிவெடுத்துள்ளதாக அமெரிக்கா இன்று அறிவித்துள்ளது. அந்த அமைப்பு, அமெரிக்காவில் 1997 முதல் தடை செய்யப்பட்ட இயக்கமான விடுதலைப்புலிகள் அமைப்புக்கு நிதி ஆதரவு மற்றும் இதர கொள்வனவு செய்வதில் ஈடுபட்டதாக அமெரிக்க குற்றஞ்சாட்டியுள்ளது. தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் அமெரிக்காவில் உள்ள சொத்துக்களை முடக்குவதாக அமெரிக்க திறைசேரி அறிவித்ததாக கொழும்பில் அமெரிக்கத் தூதரகம் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது
  • காபந்து அரசை அமைக்கும் நடவடிக்கையில் அதிபர் முஷாரஃப் :
    பாகிஸ்தானின் தற்போதை நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் இன்று நள்ளிரவுடன் முடிவுக்கு வருவதால், நாட்டை நிர்வகிக்கப் போகும் இடைக்கால அரசு பற்றிய அறிவித்தல் ஒன்று நாட்டின் தேசிய தொலைக்காட்சியில் இன்று இரவு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
  • சியாராலியோனில் புதிய அதிபர் பதவியேற்றார் : சியாரா லியோன் நாட்டின் தலைநகரில் நடந்த வைபவம் ஒன்றில் ஏர்னஸ்ட் கொரோமா அவர்கள் அந்த நாட்டின் புதிய அதிபராக பதவியேற்றுள்ளார். ஆயிரக்கணக்கான சியாரா லியோன் மக்கள் கலந்துகொண்ட இந்த வைபவத்தில், ஆப்பிரிக்க நாடுகள் பலவற்றின் தலைவர்களும் கலந்துகொண்டனர்
  • வங்காளதேசத்தில் சூறாவளி : வங்காளதேசத்தின் கரையோரப்பகுதிகளை கடுமையான சூறாவளி ஒன்று தாக்கியுள்ளது.
    இந்த சூறாவளியை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டனர்
  • விளையாட்டுத்துறையில் போதைப்பொருட்பாவனை குறித்து ஒலிம்பிக் குழுத் தலைவர் கவலை : விளையாட்டுத்துறையில் போதைப்பொருள் தடுப்பு பற்றிய அனைத்துலக சீலம் ஒன்றை கடைப்பிடிக்க சில அரசுகளும், விளையாட்டுத்துறைச் சம்மேளனங்களும் தயக்கம் காட்டுவதால், விளையாட்டுத்துறையில் போதைப்பொருளை ஒழிக்கும் திட்டம் பாதிப்படைந்துள்ளதாக அனைத்துலக ஒலிம்பிக் குழுவின் தலைவரான ஷோக் றோக் அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்
  • இலங்கையில் வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்புக்கு முன்பாக கட்சித் தாவல்கள் தீவிரமடைகின்றன : இலங்கைப் நாடாளுமன்றத்தில் கடந்தவாரம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்ட 2008 ஆம் நிதியாண்டிற்கான வரவு செலவுத்திட்டத்தின் மீது தற்போது நடைபெற்றுவரும் விவாதத்தினைத் தொடர்ந்து எதிர்வரும் 19ஆம் திகதி இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்புக்காக அது விடப்படவிருக்கிறது
  • பஸ்ராவில் கொலை செய்யப்படும் பெண்கள் : இராக்கின் தென்பகுதி நகரான பஸ்ராவில், மதத்தீவிரவாதிகளால், பெண்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் மிரட்டல்கள், தாக்குதல்கள் மற்றும் கொலைகள் போன்ற வன்செயல் நடவடிக்கைகள் அதிகரித்து வருவதாக, அந்த நகரின் தலைமைப் பொலிஸ் அதிகாரி எச்சரித்துள்ளார்
  • வட இலங்கை மோதல்களில் 20 பேர் பலி : இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணம் மற்றும் வன்னிப்பிரதேசத்தில் உள்ள இராணுவ முன்னரங்க பகுதிகளில், இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நேற்றும் இன்றும் இடம்பெற்ற வெவ்வேறு மோதல் சம்பவங்களில் இரு தரப்பிலும் 20 பேர் கொல்லப்பட்டுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது

November 14, 2007

இன்றைய குறள்

துறந்தாரின் தூய்மை யுடையர் இறந்தார்வாய்
இன்னாச்சொல் நோற்கிற் பவர்

எல்லை கடந்து நடந்து கொள்பவர்களின் கொடிய சொற்களைப் பொறுத்துக் கொள்பவர்கள் தூய்மையான துறவிகளைப் போன்றவர்கள்

அறத்துப்பால் : பொறையுடைமை

"மன்மத ராசா" மாலதி

தாக்குப் பிடிக்கும் தன்மையை - டோனி

"பக்கத்து ஊரில் ஆடப் போவதாக இருந்தாலும் நடந்து போய்த்தான் ஆடுவோம். அப்போது அப்படி நடந்து சென்றதுதான் இன்று எனக்கு இவ்வளவு தாக்குப் பிடிக்கும் தன்மையை (ஸ்டாமினாவை) கொடுத்துள்ளது. 5 நாட்கள் மைதானத்தில் ஓடினாலும் தளராத சக்தியைக் கொடுத்துள்ளது" - மஹேந்திர சிங் டோனி

சாக்குப் பையில் சுற்றப்பட்டு மரத்தடியில் அனாதையாக விடப்பட்ட இரண்டு வயது குழந்தை

  • தமிழ் நாட்டில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தை கைவிடப்பட்டது. தமிழ்நாட்டின் தர்மபுரி மாவட்டத்தில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட இரண்டு வயது குழந்தை ஒன்று, சாக்குப் பையில் சுற்றப்பட்டு மரத்தடியில் அனாதையாக விடப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த குழந்தையை தற்போது பராமரித்து வரும் தர்மாஸ் என்கிற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் இயக்குநர் பி.எஸ் வேல்முருகன் அவர்கள் தமிழோசையிடம் பிரத்தியேகமாக வெளியிட்ட கருத்துக்களை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.
  • குரங்குகளின் கருக்கள் உயிர்ப்பிரதியாக்கம் செய்யப்பட்டு சாதனை : மனிதர்கள் மற்றும் அவர்களுடைய மிக நெருங்கிய உயிரினங்கள் உள்ளடங்கிய பாலூட்டிகள் வகையைச் சேர்ந்த குரங்கு இனங்களின் கருக்களை குளோனிங் எனப்படும் உயிர்ப்பிரதியாக்கத்தின் மூலம் உருவாக்கியுள்ளதை விஞ்ஞானிககள் உறுதிப்படுத்தியுள்ளனர்
  • பாகிஸ்தானில் இம்ரான் கான் கைது : லாகூரில் மாணவர்களின் ஆர்ப்பாட்டம் ஒன்றில் உரையாற்ற முயன்றபோது, பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கட் ஆட்டக்காரரான இம்ரன்கானை, பாகிஸ்தான் பொலிஸார் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்
  • பிரான்ஸில் பணியாளர்கள் வேலை நிறுத்தம் : வேலை நிறுத்தம் காரணமாக ஆளில்லாமல் பாரிஸ் நகரின் சுரங்கப் பாதை ஒன்று பிரான்ஸ் நாட்டின் ரயில் மற்றும் எரிசக்தித்துறை பணியாளர்களின் வேலை நிறுத்தம் காரணமாக, பரவலான பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது
  • பிரான்ஸுக்கு எதிராக சாட் நாட்டில் ஆர்ப்பாட்டம் : பிரான்ஸ் நாட்டுக்கு, நூற்றுக்கும் அதிகமான ஆபிரிக்க குழந்தைகளை பிரான்ஸ் தொண்டர் அமைப்பு ஒன்று அழைத்துச் செல்ல முயன்ற விவகாரம் தொடர்பில், பிரான்ஸுக்கு எதிராக சாட் நாட்டின் தலைநகர் இன்ஞமீனாவில் பல்லாயிரக்கணகான மாணவர்கள் வன்செயல் ஆர்ப்பாட்டத்தில் இறங்கியுள்ளனர்
  • பர்மாவை இன்னுமொரு இராக்காக அனுமதிக்க முடியாது என்று சீனா கூறுகிறது : பர்மாவில் இயற்கை வளமான இரத்தினக் கற்கள்பர்மாவில் ஜனநாயக ஆதரவு போராட்டங்களை ஒடுக்கியதற்காக அதன் மீது பொருளாதரத் தடைகளை விதிக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து சீனா கடுமையாக எச்சரித்துள்ளது
  • இலங்கையிலிருந்து வளைகுடா நாடுகளுக்கு வேலைக்கு செல்பவர்கள் பெருத்த துன்பங்களை எதிர்கொள்கிறார்கள் என மனித உரிமை அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது : இலங்கையிலிருந்து மத்திய கிழக்கு மற்றும் வளைகுடா நாடுகளில் வீட்டு வேலைக்காக செல்பவர்கள் மிகுந்த துனபங்களுக்கு உள்ளாவதாக மனித உரிமை அமைப்பான ஹுயூமன் ரைட்ஸ் வாட்ச் அமைப்பு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. இலங்கையிலிருந்து குவைத், லெபனான், ஐக்கிய அரபு இராஜ்ஜியம் போன்ற நாடுகளுக்கு பணிக்கு செல்லும் பெண்கள் நாளொன்றுக்கு 18 முதல் 20 மணி நேரம் வரை வேலை செய்யும்படி வற்புறுத்தப்படுகிறார்கள் என்றும் அவர்களது கடவுச்சீட்டு உட்பட பல ஆவணங்களை பணிக்கு அமர்த்துபவர்கள் பறித்து வைத்துக் கொள்வதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த நாடுகளில் குறிப்பிட்ட வேலை வாங்கித் தருவதாகக் கூறி, அங்கு சென்ற பிறகு வேறொரு வேலையில் இவர்கள் அமர்த்தப்படுகிறார்கள் என்றும், இதற்கு இலங்கையிலிருந்து செயல்படும் வேலை வாய்ப்பு தரகர்களே காரணம் என்றும் அந்த அமைப்பு தனது அறிக்கையில் கூறியுள்ளது. இது தொடர்பாக, ஹ்யூமன் ரைட்ஸ் வாட்ச் அமைப்பின் அதிகாரி, இலங்கையின் பிரதி வெளிநாட்டு அமைச்சர், பாதிக்கப்பட்ட ஒருவர் என பலதரப்பட்டவர்களின் கருத்துக்களை உள்ளடக்கி எமது கொழும்புச் செய்தியாளர் கருணாகரன் தயாரித்து வழங்கும் பெட்டகத்தை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம் http://www.bbc.co.uk/tamil/2115.ram
  • மன்னார் பகுதியில் மக்களை வெளியேறக் கூறி துண்டுப் பிரசுரங்கள் : இலங்கையின் வடமேற்கே மன்னார் நகரம் மற்றும் வங்காலை பிரதேசத்தில் இராணுவ முகாம்களுக்கு அருகில் வசிப்பவர்கள் எதிர்வரும் 27 ஆம் திகதியை முன்னிட்டு, உடனடியாக வெளியேறி 5 கிலோ மீற்றர் தொலைவுக்கு அப்பால் செல்லுமாறு விடுதலைப் புலிகளின் தற்கொலைப்படைப் பிரிவினர் என்று கூறப்படுபவர்களால், துண்டுப் பிரசுரங்கள் மூலமாகக் கோரப்பட்டிருப்பதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்துள்ளது
  • ஆப்பிரிக்காவில் பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டுள்ளது-உலக வங்கி : ஆப்பிரிக்காவில் பெரும்பாலான நாடுகளில் பொருளாதார வளர்ச்சிகள் ஏற்பட்டுள்ளன என்று உலக வங்கி கூறியுள்ளது. இந்த வளர்ச்சியானது அங்கு வறுமையை ஒழித்து சர்வதேச அளவில் முதலீடுகளைப் பெற உதவும் என்றும் அது கூறியுள்ளது. சராசரியாக அங்கு பொருளாதாரம் ஐந்து சதவீத அளவில் வளர்ச்சியடைந்து வருகிறது என்று அதன் அறிக்கையில் கூறியுள்ளது
  • இன்றைய (நவம்பர் 14 புதன்கிழமை 2007) "பிபிசி" தமிழோசை செய்திகள் கேட்க இணைப்பில் செல்க http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml?tamil_worldnews

November 13, 2007

புற்றுநோய் வருவதற்கான காரணங்கள்

உணவுப் பழக்க வழக்கங்கள் குறித்து 25,000 பேர் பங்குபெறும் சுற்றாய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இன்றைய அனைவர்க்கும் அறிவியல் நிகழ்ச்சியில், புற்றுநோய் குறித்த சமீபத்திய ஆய்வு முடிவுகள் பற்றிய செய்திகள் இடம்பெறுகின்றன. மனிதர்கள் சாப்பிடும் உணவுக்கும், செய்கிற உடற்பயிற்சிக்கும் அவர்களுக்கு ஏற்படக் கூடிய புற்றுநோய்களுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு இருப்பதாக உலக புற்றுநோய் ஆராய்ச்சி நிதியம் என்கிற அமைப்பு சமீபத்தில் வெளியிட்ட ஆய்வு முடிவுகளில் தெரிவித்திருக்கிறது. அதாவது, கொழுப்புச்சத்து அதிகமுள்ள உணவை சாப்பிடுவதாலும், போதுமான உடற்பயிற்சி செய்யாமலிருப்பதாலும், அதிகமான உடல் பருமனாக இருப்பதாலும் புற்றுநோய்கள் வரும் வாய்ப்புகள் அதிகரிப்பதாக இந்த ஆய்வு கூறுகிறது. இந்த ஆய்வு முடிவுகள் குறித்து, சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவ மனையின் இரைப்பை மற்றும் குடல் சார்ந்த நோய்கள் துறையின் தலைவர் மருத்துவர் பிரசாத் ராவ் அவர்களின் செவ்வி : "பிபிசி" இன்றைய அனைவர்க்கும் அறிவியல் பகுதியில் கேட்கலாம் http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml?tamil_worldnews

சட்டமாக்குங்கள்

  • பெண்களின்
    திருமண வயதை
    இன்னும் கொஞ்சம்
    அதிகப்படுத்துங்கள்!
  • குடிசையில் வாழும்
    கோல மயில்களுக்கு
    இங்கே மாதவிடாய் நின்றும்
    மணமகன்கள் வரவில்லை!!
  • இவர்கள் இராமன்
    கால்படக் காத்திருந்த
    அகலிகைகள் இல்லை!
    இராவணன்களுக்காகக்
    காத்திருக்கிறார்கள்
    கடத்தியாவது செல்வார்களென்று!!!
  • தயவு செய்து
    பெண்களின்
    திருமண வயதை
    அதிகப்படுத்துங்கள்!
சூரகுடி பாலா - சென்னை

இன்றைய குறள்

மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தந்
தகுதியான் வென்று விடல்

ஆணவங் கொண்டு அநீதி விளைவிப்பவர்களை, நாம் நம் பொறுமைக் குணத்தால் வென்றுவிடலாம்

அறத்துப்பால் : பொறையுடைமை

மனதைக் கட்டுப்படுத்த கடவுள் சிந்தனையை வளர்க்க வேண்டும்" - சத்யசாய்

"உணவு தேடி வயலுக்கு செல்லும் பசுவை வீட்டுக்கு திரும்ப கொண்டு வர, அது எந்த வகையான உணவை நாடிச் செல்கிறது என்பதை அறிந்து கொண்டு, அதைவிடச் சுவையான சிறந்த உணவை வீட்டிலேயே அளிக்க முற்படுகிறோம். இதனால் அப்பசு நாளடைவில் வெளியே செல்லும் வழக்கத்தையே விட்டுவிடுகிறது. அதுபோல நாமும், வெளியே திரிய ஆசைப்படும் மனதை கட்டுப்படுத்த கடவுள் சிந்தனையை வளர்க்க வேண்டும்" - சத்யசாய்

மணமகன்: செல்வகுமார், மணமகள்: நாய்

  • காங்கிரஸ் இடதுசாரிகள் இடையிலான கருத்துவேறுபாடுகளில் திருப்புமுனை சமரசமா? சர்ச்சைக்குரிய இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் குறித்து இந்தியாவின் ஆளும் கூட்டணிக்கு தலைமை தாங்கும் காங்கிரஸ் கட்சிக்கும் கூட்டணி அரசை வெளியிலிருந்து ஆதரிக்கும் இடது சாரிகளுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் குறித்து நேயர்கள் அறிவார்கள். இன்று இந்த விஷயத்தில் ஒரு திருப்பம் ஏற்பட்டுவிட்டதாகவும், இந்திய அரசு இந்த ஒப்பந்தம் குறித்து மேலதிக பேச்சுவார்த்தைகளை சர்வதேச அணு சக்தி நிறுவனத்துடன் நடத்தலாம்; ஆனால் இறுதி முடிவை தங்களிடம் கலந்தாலோசித்த பிறகே எடுக்கவேண்டும் என்றும் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளதாகவும் இன்று இந்திய செய்தி நிறுவனங்கள் பல கூறின
  • பாகிஸ்தானில் அவசரநிலைக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை தடுக்க நடவடிக்கை : பாகிஸ்தானிய எதிர்க்கட்சித் தலைவியாகிய பேநசிர் பூட்டோ அவர்களால் திட்டமிடப்பட்ட, அவசர நிலைக்கு எதிரான பாரிய போராட்டங்களை தடுக்கும் நோக்கில், அந்நாட்டு அரசு முக்கிய பாதுகாப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது
  • மன்னார் மடு தேவாலயப் பகுதியில் எறிகணை வீச்சு : இலங்கையின் வடமேற்கே மன்னார் மாவட்டத்தில் மடு தேவாலயப் பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை மாலை எறிகணைகள் விழுந்து வெடித்ததாகவும், அதில் ஒரு சிறுவனும் வயோதிபப் பெண்ணும் காயமடைந்ததாகவும் தேவாலயத்தில் இருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன
  • திருகோணமலை மோதல்களில் புலிகள் மூவர் கொல்லப்பட்டதாக இலங்கை தேசிய பாதுகாப்பு ஊடக மையம் தகவல் : இலங்கையின் கிழக்கே திருகோணமலை மாவட்டத்தில் இலுப்பைக்குளம் பகுதியில் நேற்று திங்கட்கிழமை பின்னிரவு வேளை, அரசாங்கப் படையினர் மேற்கொண்ட தாக்குதல் நடவடிக்கையின்போது விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்த மூவர் கொல்லப்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்பிற்கான ஊடக மையம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருகின்றது
  • இராக், ஆப்கானிஸ்தான் யுத்த செலவுகள் நினைத்ததற்கு இருமடங்காய் அதிகரித்துள்ளதாக கூறுகிறது ஜனநாயகக் கட்சி : யுத்தங்களினால் அமெரிக்காவுக்கு செலவு அதிகம் என்கிறது ஜனநாயகக் கட்சிஇராக்கிலும், ஆப்கானிஸ்தானத்திலும் அமெரிக்கா நடத்திவரும் போர்களுக்கான செலவு முன்பு நினைத்திருந்ததை விட இரண்டு மடங்காக உயர்ந்திருப்பதாக அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நடத்திய ஆய்வு தெரிவிக்கிறது
  • மணமகன்: செல்வகுமார், மணமகள்: நாய் - தமிழ்நாட்டில் பெண் நாய் ஒன்றை இந்துமத சடங்கு முறைகளின்படி திருமணம் செய்துள்ளார் செல்வகுமார் என்பவர். இரண்டு நாய்களை தான் கல்லால் அடித்துக் கொன்றமைக்கு நாயை மணப்பதால் பிராயச்சித்தம் கிடைக்கும் என்று அவர் நம்புகிறார். நாய்களை கொன்றதன் பிறகு தான் சபிக்கப்பட்டதாகவும், பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டதாகவும், காது கேட்காமல் போனதாகவும் செல்வகுமார் கூறுகின்றார். கோயில் ஒன்றில் நடந்த இத்திருமணத்தில் மணப்பெண்ணான நாய் செம்மஞ்சள் புடவை உடுத்தி, மலர் மாலை அணிந்திருந்தது. திருமண விருந்தாக அதற்கு ரொட்டித் துண்டும் கொடுக்கப்பட்டது

வயித்துக்காக சிறுவன் இங்கே மூங்கில் கம்பத்தில் நடக்கிறான்

அடேங்கப்பா...! மூக்கில் விரல் வைக்க வைத்த "மூங்கில் கால்' சிறுவன்! - கோவை : நேற்று மாலை 4.00 மணி. பகல் முழுதும் சுட்டெரித்து, மலைமுகட்டில் சூரியன் பதுங்க போகும் வேளை. பள்ளி, கல்லூரி முடிந்து வீடு திரும்பும் மாணவ, மாணவியரும், பணி முடிந்து செல்வோரும் பெரியகடைவீதி பஸ் ஸ்டாப்பில் பஸ் பிடிக்க முண்டியடித்துக் கொண்டிருந்தனர். மாலை நேரம் என்பதால் ரோட்டில் வாகனப் போக்குவரத்து அதிகமாயிருந்தது. போலீசார் தங்கள் பங்குக்கு, போக்குவரத்தை ஒழுங்கு படுத்திக்கொண்டிருக்க... பலரது பார்வையையும் ஈர்த்தது அந்த காட்சி. சுமார் 11 அடி உயரமுடைய இரு மூங்கில்களை "கால்'களாக்கி, "ஹாயாக' ரோட்டில் நடந்து வந்தான் சிறுவன். சட்டை பாக்கெட்டின் வெளிப்புறம் 50, 100 ரூபாய் நோட்டுகளை "குண்டூசி'யால் தைத்து பலரது பார்வையிலும் படும் வகையில் தொங்க விட்டிருந்தான். "என்ன வேண்டுதலோ? எவர் பெற்ற பிள்ளையோ?' என மூக்கில் விரல் வைத்து பெரிசுகள் முணு, முணுக்கப் பார்த்தோர் வியந்தனர்.

தலைக்கு மேல் செல்லும் உயர் அழுத்த மின் கம்பிகளுக்கு ஈடாக, சாலையில் மெதுவாக மூங்கிலின் மேல் "தவழ்ந்து' சென்றான் அச்சிறுவன். பஸ்சில் சென்றவர்கள் கூட தலையை வெளியே நீட்டி, சூரியனை தரிசிப்பதை போல, உயரே பார்த்தனர்...பக்கவாட்டில் வரும் வாகனத்தில் தலை சிக்கினால் உயிருக்கு உலை வந்துவிடுமே, என்ற கவலை சிறிதும் இன்றி. டூ வீலரில் சென்றவர்கள் வாகனத்தை நிறுத்திவிட்டு, வேடிக்கை பார்க்க பெரியகடைவீதியில் கூடியது கூட்டம். பள்ளி சிறுவர்கள், 11 அடி உயர மூங்கில் சிறுவனை அன்னார்ந்து பார்த்து, ஆச்சரியப்பட்டனர். சுற்றி நின்று கைவலிக்க கரவோசை எழுப்பினர். அப்போது, மூங்கில் சிறுவனுடன் "கீழே நடந்து சென்ற' இன்னொரு சிறுவன், வேடிக்கை பார்ப்போரிடம் பரபரப்புடன் "சில்லறை'களை சேகரித்தான். "காசு பார்க்க' இப்படியும் ஒரு வழியா, என அப்போதுதான் புரிந்தது பலருக்கும். இவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என பலருக்குள்ளும் எழுந்தது கேள்வி. கேட்டு, விளக்கம் பெறத்தான் யாருக்கும், நேரமில்லை. அந்த குறையை போக்குகிறது, மூங்கில் சிறுவனின் இந்த பேட்டி:

எனது பெயர் பீரு (11). தந்தை தாராஜன், தாயார் இஷா. சொந்த ஊர் ராஜஸ்தான். என்னுடன் பிறந்தவர்கள் ஆறு சகோதரிகள், நான்கு சகோதரர்கள். நாங்கள் அனைவருமே, உயரமான மூங்கிலில் கால்களை கட்டிக்கொண்டு "உயரே' நடக்கும், பயிற்சி பெற்றுள்ளோம். ஊர், ஊராக "இப்படி' நடந்து சென்று, பொதுமக்களிடம் பைசா வசூலித்து பிழைப்பு நடத்தி வருகிறோம். சென்னையில் இருந்து 20 நாட்களுக்கு முன் கோவைக்கு வந்தோம். தற்போது, ஈச்சனாரியில் தங்கியிருந்து, பல பகுதிகளுக்கும் "இப்படி' சென்று வருகிறோம். சாதாரணமாக காசு கேட்டால் யாரும் தரமாட்டார்கள். இதுபோன்று வித்தியாசமான முறையில் ஏதாவது செய்தால்தான் ஆச்சர்யப்பட்டு, மக்கள் பணம் கொடுப்பார்கள். தினமும் ஏதோ 200-லிருந்து 300-ரூபாய் வரை கிடைக்கும். தம்பி ராம்கிஷன் என்னுடன் வந்து பணம் வசூலிப்பான். மூங்கில் மீது நடப்பதால் கால் வலிக்காதா, என பலரும் என்னிடம் கேட்கின்றனர், வயிற்று பிழைப்புக்காக எல்லாம் பழகிவிட்டது. இவ்வாறு, பீரு தெரிவித்தான்.

புலிகளுக்கு இனி போதாத காலம்தான்

சர்வதேச அளவில் புலிகளின் ஆயுத கடத்தல் `நெட்வொர்க்' - அமெரிக்காவில் இருந்து எல்லா நாடுகளிலும் ஆட்கள் நடமாட்டம் : அவர் முழுப்பெயர் என்ன என்று யாருக்கும் தெரியாது. கே.பி., என்று கூப்பிடுகின்றனர். பார்த்தால் சாப்ட்வேர் நிபுணர் போல இருக்கிறார்; குறுந்தாடி, சிறிய அளவில் திருத்திய மீசை, அதிகம் பேசுவதில்லை.அமெரிக்காவில் இருந்து பல நாடுகளில் அவருக்கு தொடர்புகள் உண்டு; மொத்தத்தில் ஜேம்ஸ் பாண்ட் பட வில்லன் போல இவர் இருப்பார்!விடுதலைப்புலிகளுக்கு ஆயுதங்களை, பல நாடுகளில் இருந்து வாங்கி, அனுப்பி வந்தவர் அவர் தான். அவர் இத்தனை ஆண்டுகள் நடத்தி வந்த, `புலிகளின் சர்வதேச ஆயுத கடத்தல் நெட் வொர்க்'கை, அமெரிக்கா துணையுடன் முதன் முறையாக இலங்கை அரசு தகர்த்து உள்ளது. ஆனால், முழுமையாக தகர்த்து விட்டதா என்பதே கேள்விக்குறி.புலிகளுக்கு ஆயுதங்கள் வந்த வண்ணம் தான் இருக் கின்றன. எங்கிருந்து வருகிறது... யார் அனுப்புகின்றனர்... எப்படி புலிகள் கைக்கு சேருகிறது என்பது இதுவரை தெரியாமல் இருந்தது. சில மாதங்களாக, அமெரிக்கா, பிரிட்டன், கனடாவில் சிலர் கைது செய்யப்பட் டாலும், புலிகளின் முக்கிய ஆட்களோ, இடைத்தரகர் களோ சிக்கவில்லை. விழுந்தது முதல் அடி:
அமெரிக்காவில், சில மாதங்களாக, ஏ.டி.எம்., மிஷின்கள் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டு வந்தது. அவர் களை கண்டுபிடித்து போலீஸ் கைது செய்தது. அதுபோல, சில அமெரிக்க அதிகாரிகளுக்கு லஞ்சம் தர முயன்றதாக சிலரை கைது செய்தனர். இவர்கள் எல்லாம், இலங்கையை சேர்ந்தவர்கள், புலிகளுக்கு உதவுபவர்கள் என்று போலீசார் கண்டுபிடித்தனர். விடுதலைப்புலிகள் இயக் கத்தை, பயங்கரவாத அமைப் புகளின் பட்டியலில் அமெரிக்கா சேர்த்து உள்ளது. பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்றுதான், அமெரிக்க அதிகாரிகளுக்கு லஞ்சம் தர முயன்றுள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து, விரிவான விசாரணைக்கு அமெ ரிக்க அரசு உத்தரவிட்டது. அதன் பேரில், சர்வதேச அளவில் விடுதலைப்புலிகளின் `நெட்வொர்க்' பற்றி விசாரணை நடத்தப்பட்டது. அதில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன.
விசாரணையில் தெரியவந்துள்ள தகவல்கள்: இலங்கையில் இருந்து தமிழ்ப்பகுதிகளை பிரித்து, தனி ஈழம் என்ற பெயரில் தனி நாடு உருவாக்க வேண்டும் என்று, விடுதலைப்புலிகள் 24 ஆண்டுகளாக போராடி வருகின்றனர். அவர்களுக்கு பல நாடுகளில் இருந்து சட்டவிரோதமாக ஆயுதங்கள் வருகின்றன. ஆனால், அவற்றை தடுக்க இலங்கை அரசால் முடியவில்லை. வெளிநாடுகளில் உதவி: புலிகளுக்கு ஆதரவாக, இலங்கைத் தமிழ் அகதிகள், புலிகளின் அபிமானிகள் ஆகியோர் உதவியுடன், சர்வதேச அளவில் `ஆயுத கடத்தல் நெட்வொர்க்' ஏற்படுத் தப்பட்டுள்ளது. இதில், புலிகளுக்கு சில இடைத்தரகர்கள் உதவுகின்றனர். பிரிட்டன், கனடா போன்ற நாடுகளில், சிலர் பைனான்ஸ் செய்தும் வருகின்றனர். லண்டன் வால் ஸ்ட்ரீட் பகுதியை சேர்ந்த ஒரு பிரபல பைனான்சியர் மீது அமெரிக்க அதிகாரிகள் கண் வைத்தனர். அவரை கைது செய்ய தயாரான போது, அவர் தலைமறைவாகி விட்டார். புலிகளுக்கு, அவர் ஆயுதம் வாங்க பைனான்ஸ் செய்துள்ளார். இவரை போன்று பல நாடுகளிலும், புலிகளுக்கு ஆட்கள் உள்ளனர். யார் அந்த `பி?' அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ் திரேலியாவில், புலிகளுக்கு ஆதரவாக பல துறைகளின் நிறுவனங்கள், பல கலை, கலாசார அமைப்புகள், விளையாட்டு அமைப்புகள் உள்ளன. வெளியில் பார்த் தால், புலிகளின் ஆதரவில் தான் இயங்குகின்றன என் பது தெரியாது. ஆனால், புலிகளுக்கு ஆயுத, போதை கடத்தல், பணம் பறிப்பு, கொள்ளையடிப்பு போன்ற விஷயங்களில் துல்லியமாக செயல்படும் அளவுக்கு, இந்த அமைப்புகளில் ரகசியமாக சிலர் இருக்கின்றனர். இப்படித்தான், நியூயார்க்கில் ஒருவரை போலீசார் கைது செய்தனர். அவர் பெயர், `பி' என்று மட்டும் தரப்பட்டுள்ளது. அவர் பெயரை முழுமையாக சொல்ல போலீஸ் தயாரில் லை. இன்னும் சிலர் கைது செய்யப்பட வேண்டும் என்பதால், அவர் பெயர் மறைக் கப்படுகிறது. இன்னொருவர், இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டார். விமான நிலையத் தில், `லேப்-டாப்' கம்ப்யூட்டர் சகிதம் அவர் கைது செய்யப்பட்டபோது, சாப்ட் வேர் இன்ஜினியர் என்று தான் அறிமுகப்படுத்திக்கொண்டார். ஆனால், அவர் புலிகளின் நேரடி ஏஜென்ட் என்று விசாரணையில் தெரிந்தபோது, அதிகாரிகளே அதிர்ந்துவிட்டனர். ஆயுத நிறுவனத்திடம் ஆர்டர் தர தயார் செய்யப்பட்ட பல கோடி பணத்தை போலீசார் கைப்பற்றினர். சீனா, கென்யா, கொழும் புக்கு கடந்த ஐந்தாண்டில், 100 முறை போய் வந்ததற்கான ஆதாரங்கள் சிக்கின.
மூன்று ஆர்டர்கள்: இப்படி பல நாடுகளில், பல ஏஜென்ட் கள், இடைத்தரகர்கள் மூலம் ஆயுதங்களை வாங்கி, புலிகளுக்கு அனுப்பியிருந்தவர் தான் கே.பி.,! அவர் கைது செய்யப்பட்டதாக சொன்னாலும், உண்மையில் அவர் சிக்கவே இல்லை என்றும் அமெரிக்க தரப்பில் கூறப்படுகிறது. கொள்ளை, பணம் பறிப்பு, ஆள் கடத்தல் மூலம் கோடிகளை குவிக்கும் விடுதலைப்புலிகள், சட்டப்படி ஆயுதங்கள் வாங்குவதற்காக சம்பந்தமே இல்லாத யார் பெயரிலோ பணத்தை, சர்வதேச ஆயுத நிறுவனத்துக்கு செலுத்தும். அதற்கான ஆவணங்களையும் தயார் செய்யும். இப்படித்தான், சமீபத்தில், ஆயுதங்கள் வாங்குவதற்காக, மூன்று ஆர்டர்களை புலிகள் அமைப்பு அளித்திருந்தது. அதற்கான, ஆவணங்களை சட்டப்படி தயார் செய்தனர் ஏஜென்ட்கள். இடைத்தரகர்கள், ஆயுத நிறுவனத்தில் பேசி, அந்த ஆர்டர்களில் இரண்டை முதலில் செயல்படுத்த வைத்தனர்.
சீன துறைமுகத்தில்: ஆயுத நிறுவனத்தில் இருந்து இரண்டு கப்பல் முழுக்க ஆயுதங்கள், சீனாவில் உள்ள டியான்ஜின் என்ற துறைமுகத்தில் ஏற்றப்பட்டன. அந்த கப்பல்கள், அங்கிருந்து, நேரடியாக, இந்தோனேசியாவுக்கு போயின. அங்கு, ஏற்கனவே புலிகளின் இடைத்தரகர்கள் இருப்பதால், அவர்கள் தலையிட்டு, போலி ஆவணங்களை காட்டி, அதிகாரிகளை சம்மதிக்க வைத்தனர். வழக்கமாக, தாய்லாந்து, இந்தோனேசியா கொண்டு வரப்படும் ஆயுத கப்பல்கள் அங்கு நிறுத்தப்பட்டு, அங்கிருந்து புலிகளின் சிறிய படகுகளில் ஆயுதங்கள் ஏற்றப்படும். சர்வதேச கடல் எல்லையில் இலங்கை கடற்படையினர் கண்காணிப்பு இருக்காது. அதனால், அங்கிருந்து தப்பி, கடற்படை கண்காணிக்காத நேரம் பார்த்து, இலங்கை கடலில் படகுகள் நுழையும்.
படகுகள் மூலம்: இப்படி சிறிய படகுகளில் ஆயுதங்கள் வருவதை கண்டுபிடித்தபோது, அவற்றை குண்டு வீசி இலங்கை கடற்படை அழித் துவிடும். அப்போது மட்டும், மற்ற படகுகளை அனுப்பாமல், இடைத்தரகர்கள் நிறுத்திவிடுவர். சில நாள் கழித்து, மீண்டும் சிறிய படகுகளில் ஆயுதங்கள் கடத்தப்பட்டு, புலிகள் கைக்கு போய்ச்சேரும். இரண்டு ஆர்டர்கள் மூலம் புலிகளுக்கு கிடைத்த ஆயுதங்களை இலங்கை கடற்படையினர் தடுக்க முடியவில்லை. மூன்றாவது ஆர்டரை கண்டுபிடித்து, இலங்கை அதிபர் வேண்டுகோள் விடுக்க, ஆயுத ஆர்டரை ஆயுத நிறுவனம் ரத்து செய்துவிட்டது.
ஒடுங்கும் நாள்: இருந்தாலும், புலிகளுக்கு சர்வதேச அளவில் இன்னமும் அமெரிக்கா உட்பட எந்த நாடும் கடும் எதிர்ப்பு தெரிவித்து, அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தீவிரம் காட்டவில்லை. அமெரிக்கா போன்ற பணக்கார நாடுகளின் கவனம், அல் - குவைதா பயங்கரவாதிகள் மீதுதான் உள்ளது. மேலும், இலங்கைக்கு சர்வதேச அளவில் ஆதரவும் இல்லை. இலங்கை விஷயத்தில் இந்தியாவை மீறி தலையிடவும் யாரும் தயாரில்லை. அல் - குவைதா விவகாரத்துக்கு பின்தான், புலிகள் விஷயத்தில் அமெரிக்கா முழுமையாக இறங்கும் என்று தெரிகிறது. மேலும், புலிகள், தனி நாடு கேட்டு போர் செய்து வருவதால், ஐரோப்பிய நாடுகளின் ஆதரவு உள்ளது. இப்படி சில குழப்பங்கள் உள்ளதால், அதை பயன்படுத்தி, சர்வதேச அளவில் புலிகள், இன்னமும் ஆயுத கடத்தலில் ஈடுபட்டுத்தான் வருகின்றனர். சர்வதேச ஆயுத கடத்தல் முற்றிலும் ஒடுக்கப்படும் போது, புலிகள் சுருதி அறவே ஒடுங்கி விடும் என்பது நிச்சயம்.
ஆண்டுக்கு 1,500 கோடி குவியுது விடுதலைப்புலிகளுக்கு எப்படி பணம் வருகிறது? இந்த கேள்விக்கு பதில், அவர்கள் பணம் பறிப்பு, கடத்தல் போன்றவற்றின் மூலம் திரட்டுகின்றனர் என்று சொல்லி விடலாம். ஆனால், அதையும் தாண்டி, பல நாடுகளில் லட்சக்கணக்கில் உள்ள இலங்கைத் தமிழர்களிடம் இருந்தும் பணம் கிடைக்கிறது. சிலரிடம் மிரட்டி, சிலரிடம் அன்பாகவும் பணம், புலிகளுக்கு வருகிறது. இந்த பணத்தை சேகரிப்பதும், அவர்களின் ஏஜென்ட்கள்தான். ஆயுதங்கள் வாங்க மட்டும், இடைத்தரகர்கள் பயன்படுத்தப்படுகின்றனர்.
புலிகள் மற்றும் இலங்கைப் பிரச்னை பற்றிய முக்கிய தகவல்கள்: இலங்கையில், தமிழ் ஈழம் கோரி, 24 ஆண்டுகளாக போர் நடந்து வருகிறது. இதுவரை, 70 ஆயிரம் பேர் இறந்துள்ளனர். ஆசியா, ஐரோப்பிய நாடுகளில் சில நிறுவனங்களை புலிகள் நடத்துகின்றனர். அங்கிருந்து தான், சட்டப்படி ஆயுதங்கள் வாங்க ஏற்பாடுகள் நடக்கின்றன. புலிகள் படையில் 10 ஆயிரம் பேர் உள்ளனர். அவர்களுக்கு ஆயுதங்கள் இன்று வரை கிடைக்க காரணம், சர்வதேச அளவில் உள்ள `ஆயுத நெட்வொர்க்' தான். பிரிட்டனில் ஒன்றரை லட்சம், கனடாவில் இரண்டு லட்சம் இலங்கை தமிழர்கள், புலிகளின் ஆதரவாளர்கள்தான். ஆண்டுக்கு 1500 கோடி ரூபாய் வரை பணம் , புலிகளுக்கு வருகிறது. கடத்தல், மோசடி, கொள்ளை போன்றவற்றில்தான் அதிக பணம் வருகிறது. தாமாக முன்வந்து நன்கொடை வருவது குறைவுதான். அமெரிக்காவில், இரட்டை கோபுரம் உட்பட சில இடங்களில் அல் - குவைதா பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதை அடுத்து, புலிகள் மீதும் கண்காணிப்பு அதிகமானது. அப்போதில் இருந்துதான், ஆயுதக் கடத்தலில் புலிகள் மீது கண் விழுந்தது. ஆயுதக் கடத்தலையும் தடுக்க இலங்கை அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. சர்வதேச அளவில், புலிகளுக்கு எதிரான பிரசாரத்தை இலங்கை அரசு தீவிரப்படுத்தியதும், பல நாடுகளில் புலிகள் மீதான நல்லெண்ணம் குறைந்து வருகிறது. சமீபத்தில், அமெரிக்காவில் கைதான புலிகள் ஏஜென்ட்கள் மூலம், பல திடுக்கிடும் விஷயங்கள் வெளியாகி உள்ளதால், புலிகளுக்கு இனி போதாத காலம் தான்.

November 12, 2007

"மொழி என்பது தொடர்புக்குதான் - கனிமொழி

"மொழி என்பது தொடர்புக்குதான். மொழி ஒரு இனத்தின் அடையாளமாக மாறுவதை சிலரால் ஏற்று கொள்ள முடியாததாகவுள்ளது. தமிழ் தொன்மையான மொழி. உலகிலுள்ள மற்ற மொழிகளைவிட 2 ஆயிரம் ஆண்டுக்கு முன்தோன்றியது. பல செம்மொழிகள் இருந்தாலும் வாழும் மொழியாக தமிழ் இன்று விளங்குகிறது. நமது கலாச்சாரத்தை சுமந்து வருவதாக தமிழ்மொழி அமைந்துள்ளது. நாம் யார் என்ற புரிதலுடன் இல்லாமல் வானம் வசப்படும் என செயல்படும் போது அடியோடு விழுந்து விடுவோம்" - கனிமொழி

இன்றைய குறள்

திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்
தறனல்ல செய்யாமை நன்று

பிறர் செய்திடும் இழிவான காரியங்களுக்காகத் துன்பமுற்று வருந்தி, பதிலுக்கு அதே காரியங்களைச் செய்து பழி வாங்காமலிருப்பதுதான் சிறந்த பண்பாகும்

அறத்துப்பால் : பொறையுடைமை