April 29, 2007
மனதை ஒரு நிலைப்படுத்த முடியுமா?
பரவாயில்லை, செய்த பிறகு உங்களுடைய அனுபவத்தை எனக்குச் சொல்லுங்கள்!
- நீங்கள் 'பெஞ்ச்' அல்லது 'நாற்காலி'யின் மீது அமர்ந்திருந்தால் உங்களுடைய வலது காலை சற்று மேலே தூக்கி கடிகாரச் சுற்றில் (Clock-wise) ஒரு வட்டம் போடுங்கள்
- இப்போது காலை நிறுத்தாமல் உங்களின் வலது கையால் காற்றில், அதாவது உங்களின் முகத்திற்கு நேராக எண் ஆறு (6) போடவும்...........
......................................................
- என்ன? தலை சுற்றுமே!!
முயற்சித்துப்பாருங்கள்!! முடியவில்லையா??
சிரித்ததுதான் மிச்சம்… ஆம்…..
உங்கள் காலின் டைரக்ஷன் மாறிவிடும், காலை ஒரு நிலைப்படுத்தினால் கையின் டைரக்ஷன் மாறிவிடும்….
மனதைக் கட்டுப்படுத்த முடிகிறதா? மூளையைக் கட்டுப்படுத்தினாலும் உடலையும் மனதையும் ஒருநிலைப் படுத்த உங்களால் முடிந்தால், கண்டிப்பாக நீங்கள் எதையும் சாதிக்கமுடியும்.
இது அறிவியல் சம்பந்தப்பட்ட உடலியல் கூற்று என்றாலும் ஒரு பெரிய ஆன்மீகத் தத்துவம் அடங்கியிருக்கிறது.
"உங்கள் ஆத்மா உங்களை எங்கு இழுத்துச்செல்கிறதோ அங்கு உங்களால் செல்ல முடியும் என்றால் நீங்கள் பேறு பெற்றவர். ஆத்மா எப்போதுமே நல்ல திசையை நோக்கியே இழுத்துச்செல்லும்"
"உங்களால் அதை நோக்கிச் செல்ல முடியாமல் உடலை நோக்கி ஆத்மாவை இழுக்க முடியும் என்றால் நீங்கள் சாதாரண மனிதர். அதைத்தான் எல்லோருமே செய்கிறோம்"
ஆக அதை ஒரு நிலைப் படுத்தி விட்டோம் எனில் நாம் எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்து விடலாம்.
- கால் செய்வது சாதாரண மனிதன் செய்வது
- கை காற்றில் செய்வது ஆத்மா செய்வது
ஆத்மாவும் உடலும் ஒன்று சேர்ந்தால் மனிதன் உயர்நிலையை அடைவான் - ஒரு மனிதன் ஒரு நேரத்தில் ஒரு பாதையில்தான் செல்லமுடியும். இரண்டு வேறுபட்ட வழிகளில், பாதைகளில் செல்ல முடியும் என்றால், நீங்கள் சாதாரணப் பிறவி இல்லை.
இப்படி இன்றைக்கு இந்தப் ப்ரபஞ்சத்தில் ஒரு சிலரே உள்ளனர். நாமும் முயற்சிப்போம்!! முடியும்!!!
- நவநீ (ஆக்கம்: யாரோ - நன்றி) எங்கோ படித்தது
Posted by
Manuneedhi - தமிழன்
at
12:18 AM
1 comments (நெற்றிக்கண்)
Labels: from Collections of Nawin
April 28, 2007
Who is God and What?
A speech from Mahatma Gandhi where he reasons the existence of a benevolent god put to a montage of images. speech Mahatma Gandhi god love truth malevolent benevolent good light peace indefinable mysterious unseen power felt defies perceive transcends senses reason who why what know rule god persist pure death life untruth darkness supreme ( more )
Posted by
Manuneedhi - தமிழன்
at
2:14 AM
0
comments (நெற்றிக்கண்)
கண்டுகொண்டேன்!
கை, கால் என
எல்லாவற்றையுமே
இரண்டாகப் படைத்த
இறைவன்
இதயத்தை மட்டும்
ஏன்
ஒன்றாகப்படைத்தான்?
இன்றுதான் தீர்ந்தது
எனது பல நாள் குழப்பம்
ஆம்…
அந்த இன்னொன்று இருப்பது
உன்னிடத்தில்….
நவின் - சென்னை
Posted by
Manuneedhi - தமிழன்
at
1:07 AM
0
comments (நெற்றிக்கண்)
April 27, 2007
அழகழகழகழகழகழகே.....
தமிழீழம் பாடல் : அழகே! அழகே!! தமிழழகே!!!
இதுதாங்க நம்ம மொழியோட அழகு
Posted by
Manuneedhi - தமிழன்
at
4:27 PM
1 comments (நெற்றிக்கண்)
பேரிழப்பு
நேற்று உன் கண்களையே
பார்த்துப் பேசிக்கொண்டிருந்த நான்…..
கையிலிருந்த என்
கவிதைத் தொகுப்பையும்! தவற விட்டேன்
தயவுசெய்து
என் கவிதைத்தொகுப்பை
மாத்திரமாவது திருப்பிக்கொடு….
நவநீ
Posted by
Manuneedhi - தமிழன்
at
3:24 PM
1 comments (நெற்றிக்கண்)
அசைவச் சாப்பாடு
ரொம்பப் புடிக்கும் - அவள்
அப்பாவுக்கும் எங்களுக்கும்
பறிமாறிவிட்டுச் சட்டியில்
மீதமிருப்பதைச் சின்னவனுக்கு
நாக்கு நீளமென்று - எனக்கு எடுத்துப்
பெரியவனுக்குத் தெரியாமல் பதுக்கிவைப்பாள்
அவள் குடிப்பதென்னவோ
வழக்கம்போல "பழைய கஞ்சி"தான்...
தாய்மை
Posted by
Manuneedhi - தமிழன்
at
12:16 PM
0
comments (நெற்றிக்கண்)
தமிழனுக்கென்று "ஒரு கொடி" இருக்கக் கூடாதா??
வினா எழுப்புகிறார் - தமிழ்க்கம்பீரம் "வைகோ"
Posted by
Manuneedhi - தமிழன்
at
12:13 AM
0
comments (நெற்றிக்கண்)
April 26, 2007
இராமகாதை கூறலாம்
மாறும் இந்தப் பூமியில்
மதங்கள் ஒன்று சேரலாம்
என்ன? புரியவில்லையா?
Please click மு. மேத்தா - Mu Mehta - Tamil Language & Literature
Posted by
Manuneedhi - தமிழன்
at
5:52 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: முடிந்தால் கவிஞர் மு.மேத்தாவின் "கண்ணீர்ப் பூக்கள்" படியுங்கள்
"உன் பிரிவு"
முதன்முதலாய் வந்த
காதலைச் சொல்லத்துடிக்கும்
ஓர் ஊமையின்
உயிர் வலிக்கும் இந்த வலிக்கும்
வித்தியாசம் இருப்பதாக
எனக்குத் தெரியவில்லை...
புரியாமல் தவிக்கிறேன்.
Posted by
Manuneedhi - தமிழன்
at
4:04 PM
0
comments (நெற்றிக்கண்)
விபத்துக்கள் நேர்வதற்கு முக்கிய காரணங்கள் Please 'Click' 'ME'
Posted by
Manuneedhi - தமிழன்
at
1:40 AM
0
comments (நெற்றிக்கண்)
Labels: from Collections of Nawin
ஒரு எளிய கவிஞர்
Posted by
Manuneedhi - தமிழன்
at
1:01 AM
0
comments (நெற்றிக்கண்)
