October 22, 2007

தமிழ் நாட்டைச் சேர்ந்த ரோஸ் என்கிற அரவாணி, தனியார் தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக செயல்பட இருக்கிறார்

  • வழக்கமாக ஆண் அல்லது பெண் நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் மாத்திரமே தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை வழி நடத்தி வருகிறார்கள். போட்டி நிறைந்த இந்த துறையில், ஆணாக பிறந்து பால் மாற்று அறுவை சிகிச்சை மூலம் பெண்ணாக மாறிய அரவாணியான ரோஸ் நுழைந்திருப்பது, ஒதுக்கப்பட்ட பாலினத்தவரின் முன்னேற்றத்தில் முக்கிய மைல் கல்லாக பார்க்கப்படுகிறது. தமிழ் சமூகத்தில் மூன்றாம் பாலினமான அரவாணிகள் குறித்து மிகவும் மலிவான கருத்துருவாக்கம் நிலவுவதாக கூறும் ரோஸ் அவர்கள், இந்த தவறான புரிதலைப் போக்குவதற்காகவே, தாம் ஊடகத்துறையை தேர்ந்தெடுத்ததாக தமிழோசையிடம் தெரிவித்தார். தாம் வழி நடத்த இருக்கும் வாராந்த தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி, சமூகத்தின் அனைத்து விதமான பிரச்சினைகளைப் பற்றியும் விவாதிக்கும் என்றாலும், அரவாணிகள் மற்றும் பாலினமாறிகள் தொடர்பான பிரச்சினைகள் முக்கியமாக இடம்பெறும் என்கிறார் ரோஸ். தமிழோசைக்கு ரோஸ் அவர்கள் அளித்த பிரத்யேக செவ்வியை நேயர்கள் இன்றைய செய்தி அரங்கத்தில் கேட்கலாம். http://www.bbc.co.uk/mediaselector/check/tamil/meta/dps/2007/10/071018_transrose?size=au&bgc=003399&lang=ta&nbram=1&nbwm=1
  • தமிழகத்தில் உயர்நிலைப்பள்ளிகளில் ஒரே மாதிரியான பாட நெறிக்கான பரிந்துரைகள் : மாணவிகள்தமிழகத்திலுள்ள உயர்நிலைப்பள்ளிகள் அனைத்திலும் ஒரே மாதிரியான பாடத்திட்டம் கொண்டுவருவதற்கான சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்ய அமைக்கப்பட்டிருந்த கல்வியாளர் முத்துகுமரன் தலைமையிலான குழுவின் அறிக்கை இன்று சட்டமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது
  • அநுராதபுரம் விமானப் படைத்தளத்தின் மீது விடுதலைப்புலிகள் பெரும் தாக்குதல் : இலங்கையின் வடமத்திய மாகாணத்தின் புராதன நகராகிய அனுராதபுரத்தில் அமைந்துள்ள வடபகுதிக்கான கேந்திர முக்கியத்துவம் மிக்க விமானப்படைத்தளத்தின் மீது தரையிலும், வான்பரப்பிலும் ஊடுருவிய விடுதலைப் புலிகள் பெரும் தாக்குதல் ஒன்றை நடத்தியுள்ளனர்
  • குர்து போராளிகள் பிரச்னைக்கு ராஜீய தீர்வுக்கு துருக்கி முயற்சி : துருக்கி நிலப்பரப்பில் குர்த் இன போராளிகளின் தாக்குதல்களைத் தடுத்து நிறுத்தவதற்காக இராக்கிற்குள் துருப்பினரை அனுப்புவதற்கு முன்பாக ராஜீய முறையில் பிரச்சினைக்கு தீர்வுகாண அனைத்து வழிகளையும் துருக்கி முயன்று பார்க்கும் என்று அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் அலி பாபகன் கூறியுள்ளார்
  • கென்ய நாடாளுமன்றம் கலைப்பு, 90 நாட்களில் தேர்தல் : கென்யாவின் அடுத்த நாடாளுமன்றத்தேர்தல்கள் நடப்பதற்கு வழிசெய்யும் முகமாக அந்நாட்டின் நாடாளுமன்றத்தை கென்ய அதிபர் ம்வாய் கிபேகி அவர்கள் இன்று கலைத்திருக்கிறார்
  • நியூயார்க் பங்குச்சந்தையில் பங்குகளின் விலை மீண்டும் சரிவு : அமெரிக்க பொருளாதாரத்தின் ஆரோக்கியம் குறித்து கவலைகள் எழுந்துள்ளதைத் தொடர்ந்து நியூ யார்க் பங்கு சந்தையில் பங்குகளின் விலை மீண்டும் சரிந்துள்ளது. இன்று திங்கட்கிழமை காலை டவ் ஜோன்ஸ் பங்கு சந்தை திறந்தபோது தொழிற்சாலை பங்குகள் சராசரி கிட்டத்தட்ட ஒரு சதவீதம் வீழ்ச்சி கண்டது. கடந்த வெள்ளிக்கிழமை இது 2.6 ஆறு சதவீதம் சரிந்திருந்தது

October 21, 2007

ஜீசஸ் கிறிஸ்ட் பல்லி

இன்றைய குறள்

ஒழுக்கத்தி னொல்கார் உரவோர் இழுக்கத்தின்
ஏதம் படுபாக் கறிந்து

மன உறுதி கொண்டவர்கள் ஒழுக்கம் தவறுவதால் ஏற்படும் இழிவை உணர்ந்திருப்பதால், நல்லொழுக்கம் குன்றிடுமளவிற்கு நடக்க மாட்டார்கள்
அறத்துப்பால் : ஒழுக்கம் உடைமை

எனது ஆட்சியை விரும்பாவிட்டால் நான் ஒதுங்கிக் கொள்ளத் தயார் - தமிழக முதல்வர்

"அரசின் நல்ல திட்டங்களுக்கு முட்டுக் கட்டைகள் போடும் கூட்டணி நண்பர்கள், அரசியல் கட்சிகள் எனது ஆட்சியை விரும்பாவிட்டால் நான் ஒதுங்கிக் கொள்ளத் தயார். எங்களால் முடிந்ததைச் செய்கிறோம். எங்களால் முடியாவிட்டால், இவ்வளவுதான் முடிந்தது என்று உங்களிடம் விடை பெற்றுக் கொள்ளவும் தயாராக இருக்கிறோம். இதற்கு மேல் வேறு ஏதாவது செய்ய வேண்டுமென்றால் வேறு யாராவது வந்து செய்யட்டும். நான் தாராளமாக அவர்களை வாழ்த்த, பாராட்ட, அவர்களுக்குப் புகழ்மாலை சூட்டக் கடமைப்பட்டுள்ளேன்" - மு. கருணாநிதி, தமிழக முதல்வர்

மேற்குலக நாடுகளின் ஆபத்தான கழிவுகளுக்கு இந்தியா குப்பைக்கூடையா?

  • அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் நச்சுத்தன்மை படைத்த கழிவுப்பொருட்களை கொட்டும் இடமாக இந்தியாவைக் கருதுகின்றனவா என்ற கேள்வி இப்போது மீண்டும் எழுந்திருக்கின்றது. காகிதம் தயாரிக்க பயன்படுத்தப்படும் கழிவுப்பொருட்கள் என்று கூறி கேரள மாநிலம் கொச்சியில் ஒரு தனியார் நிறுவனம் இறக்குமதிசெய்த சரக்குப்பெட்டகங்களை சோதித்துப்பார்த்தபோது, 60 டன் பொருட்களில் ஏறத்தாழ 40 டன்கள், மருத்துவமனை மற்றும் இயந்திரங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை கழிவுகளாக இருந்ததாக நேற்று முன்தினம் அம்மாநில நல்வாழ்வுத்துறை அமைச்சர் ஸ்ரீமதி செய்தியாளர்களிடம் கூறியிருந்தார். வந்த சரக்குப்பெட்டகங்கள் திருப்பி அனுப்பப்படுவது மட்டுமல்ல, சம்பந்தப்பட்டவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்திருந்தார். இதனிடையே மத்திய நல்வாழ்வுத்துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ் இவ்வாறு ஆபத்தான கழிவுப்பொருட்கள் இந்தியாவுககு அனுப்பப்படுவதற்கு கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும் சம்பவம் பற்றி ஆய்வுசெய்து விவரங்களை திரட்டி பின்னர் அரசாங்க மட்டத்தில் நடவடிக்கை எடுககப்படும் எனவும் அவர் தெரிவித்திருக்கிறார். குஜராத் மாநிலத்தில், மேலை நாடுகளில் ஏற்றுக்கொள்ளப்படாத பழைய கப்பல் உடைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு, பல்வேறு நச்சுப்பொருட்களை உள்வாங்கி, தொழிலாளர்கள் பல்வேறு நோய்களால் பீடிககப்படுவது குறித்து அடிக்கடி இந்திய ஊடகங்களில் செய்திகள் வெளியாவது உண்டு.
    ஓரிரு சந்தர்ப்பங்களில் அத்தகைய கப்பல்கள் திருப்பி அனுப்பட்பட்டாலும் அத்தொழில் தொடரவே செய்கிறது. ஆனால் காகிதக் கழிவென கூறி ஆபத்தான மருத்துமனை கழிவுப்பொருட்களை அனுப்பிவைப்பது இப்போதுதான் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. சுற்றுச்சூழல் தூய்மை பற்றிய விழிப்புணர்வு அதிகரித்திருக்கும் நிலையில், மேலை நாட்டு நிறுவனங்கள் நச்சுத்தன்மைபடைத்த இயந்திர தொழிற்சாலை அல்லது மருத்துவமனை கழிவுகளை இந்தியா உள்ளிட்ட பல்வேறு வளரும் நாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக கூறுகிறார் சென்னையைச் சேர்ந்த சுற்றுப்புறச்சுழல் ஆர்வலர் நித்தியானந்தன் ஜெயராமன். இது தொடர்பான அவரது செவ்வியை நேயர்கள் கேட்கலாம்.
  • இலங்கையின் வடக்கில் தொடரும் மோதல்கள் : இலங்கையின் வடக்கே, மன்னார் தம்பனை, பெரியதம்பனை மற்றும் யாழ்ப்பாணம் நாகர்கோவில் ஆகிய இராணுவ முன்னரங்க பகுதிகளில் நடந்த மோதல்களில் ஒன்பது விடுதலைப்புலிகளும், இரண்டு ராணுவத்தினரும் கொல்லப் பட்டுள்ளதாகத் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்துள்ளது
  • நெஞ்சம் மறப்பதில்லை - பாகம் ஐந்து : தமிழ் திரையுலகில் புராண பக்தி கதைகள் ராஜா ராணிக் கதைகள் மட்டுமே வந்துகொண்டிருந்த நிலை மாறி சமுதாய விழிப்புணர்வு, பகுத்தற்றிவுக் கொள்கைகள் ஆகியவற்றைக் கதைக்களமாக கொண்ட திரைப்படங்கள் வரத்தொடங்கியது தமிழ்நாட்டில் திராவிட இயக்கம் வேரூன்றிய காலகட்டமான ஐம்பதுகளின் துவக்கத்தில்தான்
  • இராக் தாக்குதலில் 49 சந்தேக நபர்களை கொன்றுள்ளதாக அமெரிக்க ராணுவம் கூறுகிறது : இராக் தலைநகர் பாக்தாதில் நடந்த ஆக்ரோஷமான சண்டையில் தீவிரவாத சந்தேகநபர்கள் 49 பேரை கொன்றிருப்பதாக இராக்கிலுள்ள அமெரிக்க ராணுவம் கூறுகிறது.
    ஷியா போராளிகள் வலுவாக உள்ள இடமென்று அறியப்படும் சதர் நகர் பகுதியில் நடந்த மூன்று வெவ்வேறு சம்பவங்களில் இவர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள் என அது தெரிவிக்கிறது

அதிசயம் : இரண்டு கன்றுகள் பிரசவித்த பசு

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகிலுள்ள கொன்னையூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல், சாந்தாமணி தம்பதியர். விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். பால் கறப்பதற்காகக் கடந்த வருடம் வாங்கி வந்த சிந்து இனப்பசு ஒன்று கடந்த புதன் இரவு பத்துமணியளவில் அனைவரும் வீட்டிற்குள் தொலைக்காட்சிப் பெட்டிக்குள் புதைந்து மெகாசீரியல்களில் அழுதுகொண்டிருக்கும்போது, திடீரெனச் சத்தம் கேட்டு அனைவரும் ஓடிவந்து பார்த்தனர். வெளியில் உள்ள தெருவிளக்குக் கம்பத்தில், கட்டாந்தரையில் லேசான தடுமாற்றத்தோடு துள்ளிக்குதித்து விளையாடிக்கொண்டிருந்த கன்றுகளைப் பார்த்ததும் தன்னை மறந்து அனைவரும் சந்தோசக்களிப்பில் துள்ளிக்குதித்தனர். அந்தச்சுற்றுவட்டார மக்கள் அனைவரும் ஆச்சர்யத்தோடு வந்து பார்த்துச் செல்கின்றனர். கன்றுகளில் ஆண் ஒன்று பெண் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. சாதாரணமாக ஒரு பசு ஒரு கன்று ஈனுவதே வழக்கம். செய்தி : நண்பர் விஜய் - திருச்செங்கோடு

October 20, 2007

தமிழகத்தின் கோவையில் வீடு இடிந்து வீழ்ந்து 13 பேர் பலி

  • தமிழகத்தில் கோயம்புத்தூர் நகரில் வெள்ளிக்கிழமை இரவு, 24 வீடுகளைக் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பு இடிந்து விழுந்ததில் மூன்று பெண்கள் உள்பட 13 பேர் உயிரிழந்தார்கள்
  • காஷ்மீரில் பள்ளி ஆசிரியர் சுட்டுக் கொல்லப்பட்டதை தொடர்ந்து ஆர்ப்பாட்டம் : இந்திய நிர்வாகத்துக்கு உட்பட்ட காஷ்மீர் மாநிலத்தில் குப்வாரா பகுதியில் பள்ளி ஆசிரியர் ராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்
  • இரான் அணுசக்தி விவகார தலைமை பேச்சாளர் அலி லாரிஜானி பதவி விலகல் : இரானின் அணு விவகாரங்களுக்கான தலைமை பேச்சாளரான அலி லாரிஜானி எதிர்பாராதவிதமாக இராஜினாமா செய்துள்ளார்
  • குர்த் கிளர்ச்சிக்காரர்களை துருக்கி தாக்க எத்தனிப்பதற்கு சிரியா ஆதரவு தெரிவித்திருப்பதை இராக் அதிபர் விமர்சித்துள்ளார் : வடக்கு இராக்கிலுள்ள குர்த் இன கிளர்ச்சிக்காரர்களுக்கெதிராக நடக்ககூடிய துருக்கியின் ராணுவ நடவடிக்கைக்கு சிரியா ஆதரவு தெரிவித்திருப்பதை இராக் அதிபர் ஜலால் தாலிபானி விமர்சித்துள்ளார்
  • இராக்கில் அல்கொய்தா சந்தேகநபர்கள் 11 பேரைக் கொன்றதாக கூறுகிறது அமெரிக்க இராணுவம் : இராக்கின் சமர்ரா நகரத்தில் கடந்த சில நாட்களாக நடத்திய வான்தாக்குதலில் பதினோரு அல்கொய்தா சந்தேகநபர்களை கொன்றிருப்பதாக இராக்கில் இருக்கின்ற அமெரிக்க இராணுவம் கூறியுள்ளது
  • ரஷ்யாவில் புதிய அரசியல் இயக்கம் தொடங்கியுள்ளார் முன்னாள் சோவியத் ஒன்றியத் தலைவர் கோர்பசேவ் : புதிய இயக்கம் தேர்தலில் போட்டியிடப்போவதில்லைமுன்னாள் சோவியத் ஒன்றியத் தலைவர் மிக்காயல் கோர்பசேவ் ரஷ்யாவில் ஜனநாயகத்துக்கெதிரான துஷ்பிரயோகத்தை எதிர்த்துப் போராடுவதற்காக ஒரு புதிய அரசியல் இயக்கத்தை உருவாக்கியுள்ளார்

பின்னனிப் பாடகர் ரஞ்சித் - 1

பின்னனிப் பாடகர் ரஞ்சித் - 2

October 19, 2007

பின்னனிப் பாடகர் ரஞ்சித் - 3

பின்னனிப் பாடகர் ரஞ்சித் - 4

கற்றது தமிழ் / தமிழ் எம்.ஏ : இயக்குனர் ராம் - 1

நம்ம சென்னை

இன்றைய குறள்

அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன் றில்லை
ஒழுக்க மிலான்கண் உயர்வு

பொறாமையுடையவனுக்கும், நல்லொழுக்கமில்லாதவனுக்கும் அமையும் வாழ்வு, உயர்வான வாழ்வாகக் கருதப்பட மாட்டாது

அறத்துப்பால் : ஒழுக்கம் உடைமை

தீவிரவாதிகள் மற்றும் ராணுவத்திலுள்ள பழமைவாத சக்திகள் மீது பெனாசிர் பூட்டோ பழி

  • 130 பேர் பலியான கராச்சி குண்டுவெடிப்பு - தீவிரவாதிகள் மற்றும் ராணுவத்திலுள்ள பழமைவாத சக்திகள் மீது பெனாசிர் பூட்டோ பழி : பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ தன் மீது நடத்தப்பட்ட படுகொலை முயற்சியை ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் என்று கூறி கண்டித்துள்ளார். நாடு கடந்த நிலையில் வாழ்ந்துவந்த பெனாசிர் பூட்டோ பாகிஸ்தான் திரும்பியதை கொண்டாடும் முகமாக கராச்சியில் நடந்த வரவேற்பு ஊர்வலத்தில் ஏராளமான ஆதரவாளர்கள் மத்தியில் நடந்த தாக்குதலில் 130 பேருக்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர். தன் மீதான இஸ்லாமியவாதிகளின் கொலைத் திட்டங்கள் குறித்து பாகிஸ்தான் அதிகாரிகளிடம் தான் ஏற்கனவே தெரிவித்திருந்ததாகவும் ஆனாலும் தான் அரசாங்கத்தின் மீது குற்றம்சுமத்தவில்லை என்றும் பூட்டோ இன்று செய்தியாளர்களிடம் கூறினார். தீவிரவாத குழுக்களுடன் தொடர்புடைய ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரிகள் தாக்குதலில் சம்பந்தப்பட்டுள்ளார்கள் என்று முன்னர் அளித்த பேட்டி ஒன்றில் அவர் குறிப்பிட்டிருந்தார். தாக்குதல்கள் திட்டமிடப்பட்டுள்ளன என்று எச்சரிக்கைகள் வந்தும் நாள் முழுக்கவுமாக பூட்டோ ஏன் ஊர்வலம் சென்றார் என்று கேள்விகள் கேட்கப்படுவதாக செய்தியாளர்கள் கூறுகின்றனர்
  • விடுதலைப்புலிகளிடம் இருந்து தப்பவே இந்தியா செல்ல முற்பட்டதாகக் கூறுகிறார் வியாழக்கிழமையன்றைய மன்னார் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத் தலைவர் : இலங்கையின் வடமேற்கே மன்னார் மாவட்டம் பேசாலை கடற்பரப்பில் வியாழக்கிழமையன்று கடற்படையினரின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த மூன்று பேரின் குடும்பத் தலைவரான ஜேசுதாஸ் ஜீன் மக்சிமச அவர்கள், விடுதலைப்புலிகள் தனது பிள்ளைகளை பலவந்தமாக இயக்கத்துக்கு ஆட்சேர்த்துவிடுவார்கள் என்ற அச்சம் காரணமாக தனது பிள்ளைகளை இந்தியாவுக்குக் கொண்டு செல்ல விளைந்தபோதே தம்மீது இலங்கைக் கடற்படை சுட்டுவிட்டதாக தமிழோசையிடம் தெரிவித்துள்ளார்
  • துருக்கி தாக்குதலை எதிர்கொள்ளத் தயார்: வடக்கு இராக்கில் தளமமைத்துச் செயற்படும் குர்து இன பிரிவினைவாதப் போராளிகளை தாக்குவோமென்ற தமது எச்சரிக்கை துருக்கி நடைமுறைப்படுத்த முற்பட்டால், தமது பிராந்தியத்தைப் பாதுகாக்க தமது மக்கள் தயாராக இருப்பதாக, வடக்கு இராக்கின் குர்து இன பிராந்தியத்தின் அதிபர் தெரிவித்துள்ளார்
  • மணிலா குண்டுவெடிப்பில் 8 பேர் பலி : பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் மக்கள் நடமாட்டம் நிறைந்த கடை வளாகம் ஒன்றில் குண்டொன்று வெடித்துள்ளதை அடுத்து நாட்டின் பொலிஸ்துறையும் ராணுவமும் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக நாட்டின் அதிபர் கிளோரியா அர்ரோயோ கூறியுள்ளார்
  • இன்றைய (அக்டோபர் 19 வெள்ளிக்கிழமை 2007) "பிபிசி" தமிழோசைச் செய்திகள் கேட்க கீழுள்ள இணைப்பில் செல்க http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml?tamil_worldnews

"நான் பாட்டெழுத வந்தகாலம்" - கவிஞர் வைரமுத்து

"நான் பாட்டெழுத வந்தகாலம் - திரையுலகில் சுதந்திரப் போராட்டத்தின் சூடு குறைந்துபோன காலம்; பொதுவுடைமைச் சித்தாந்தம் வெளிநடப்புச் செய்த காலம்; திராவிட இயக்கத்தின் தீவிரம் தீர்ந்துபோன காலம்; வீரியத் தமிழ் பேசும் இதிகாசப் படங்கள் சரிந்துபோன காலம்; அண்ணன்-தங்கை, அன்னை-பிள்ளை, அண்ணன்-தம்பி என்ற உறவுகளை உள்ளடக்கம் கொள்ளலாம் என்றால் கூட்டுக் குடும்பங்கள் கலைந்து வந்த காலம், என் கையில் திணிக்கப்பட்டதும், என் பேனாவில் நிரப்பப்பட்டதும் காதல், காதல், காதல். அதுவும் நுகர்வுக் கலாசாரத்தில் நொறுங்கிப் போன காதல்" - கவிஞர் வைரமுத்து

கானல் குறும்படம்

October 18, 2007

இன்றைய குறள்

மறப்பினும் ஒத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்

பார்ப்பனன் ஒருவன் கற்றதை மறந்துவிட்டால் மீண்டும் படித்துக்கொள்ளமுடியும். ஆனால் பிறப்புக்குச் சிறப்பு சேர்க்கும் ஒழுக்கத்திலிருந்து அவன் தவறினால் இழிமகனே ஆவான்

அறத்துப்பால் : ஒழுக்கம் உடைமை

சமுதாய அளவில் ஏற்றத் தாழ்வுகள் நிலவுகின்றன

நம் சமூகம் குழப்பத்தில் இருக்கிறது. சமூக நீதியைக் காப்பதா? திறமையை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு திறமையானவர்களை ஊக்குவிப்பதா? என்பதே அது. சமுதாய அளவில் ஏற்றத் தாழ்வுகள் நிலவுகின்றன, சமூகத்தில் கீழ்நிலையில் உள்ளவர்களை மேலே கொண்டு வர இடஒதுக்கீடு அவசியம்தான். அதே நேரத்தில் மிகச் சிறந்த மேதைகளை உருவாக்குவதற்குத் திறமையை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட சீர்மிகு மையங்களை ஏற்படுத்தவேண்டும். - ஐராவதம் மகாதேவன், தொல்லியல் வல்லுநர், தினமணியின் முன்னாள் ஆசிரியர்

தவறு செய்தவனே தண்டனை பெறவேண்டும்?!