November 11, 2007
தமிழக அரசின் சமீபத்திய தொழில்வளர்ச்சித்திட்டங்கள் : ஓர் ஆய்வு
Posted by
Manuneedhi - தமிழன்
at
2:11 PM
0
comments (நெற்றிக்கண்)
பெரிய நிறுவனங்களின் வருகையால் வேலைவாய்ப்புக்கள் பெருகியுள்ளதா?
Posted by
Manuneedhi - தமிழன்
at
2:10 PM
0
comments (நெற்றிக்கண்)
தமிழக அரசின் சமீபத்திய தொழில்வளர்ச்சி அறிவிப்புகள் - ஓர் ஆய்வு 3
Posted by
Manuneedhi - தமிழன்
at
1:45 PM
0
comments (நெற்றிக்கண்)
மு.க.ஸ்டாலின் தாய்லாந்து விஜயம் : சர்ச்சை ஏன்? திமுக-வுக்குள் (குடும்பத்தில்) நடப்பது என்ன? தெளிவான விளக்கம்
Posted by
Manuneedhi - தமிழன்
at
1:29 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: Courtesy : Indiainteracts
இன்றைய குறள்
ஒறுத்தார்க் கொருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்
பொன்றுந் துணையும் புகழ்
Posted by
Manuneedhi - தமிழன்
at
1:00 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: 156 - ம் குறள்
வாழ்க வளமுடன்
Posted by
Manuneedhi - தமிழன்
at
12:56 PM
0
comments (நெற்றிக்கண்)
தமிழகத்தில் தமிழ்ச்செல்வன் வீரவணக்கக் கூட்டங்களுக்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு
- இலங்கை வான்படை தாக்குதலில் கொல்லப்பட்ட விடுதலைப் புலிகளின் அரசியற்துறை பொறுப்பாளர் சுப தமிழ்செல்வன் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வீரவணக்க கூட்டங்கள் தமிழ்நாட்டில் நடத்தப்படுவதற்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு காட்டத்துவங்கியுள்ளது. இத்தகைய கூட்டம் ஒன்று தமிழ்நாட்டின் வேலூரில் ஞாயிற்றுகிழமை நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கு, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அந்த ஊரின் சட்டமன்ற உறுப்பினர் ஞானசேகரன் அவர்கள் மாவட்ட ஆட்சியரிடமும் மாவட்ட காவல்துறை அதிகாரியிடமும் ஆட்சேபம் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து, அந்த கூட்டம் நடைபெறவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதை தொடர்ந்து ஞானசேகர னின் கொடும்பாவி எரிப்பு சம்பவங்களும், அதற்கு பதிலடியாக காங்கிரஸ் கட்சியினரின் சாலை மறியல் போராட்டங்களும் நிகழ்ந்ததோடு, சம்பந்தப்பட்டவர்கள் பலர் கைதும் செய்யப் பட்டிருக்கின்றனர். இந்த கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தது ஏன் என்பது குறித்தும், சுப தமிழ்செல்வன் அவர்களுக்கு தமிழக முதல்வர் மு கருணாநிதி அஞ்சலி கவிதை எழுதியது பற்றி காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு என்ன என்பது குறித்தும் சட்டமன்ற உறுப்பினர் ஞானசேகரன் அவர்களின் செவ்வியை நேயர்கள் இன்றைய செய்தி அரங்கத்தில் கேட்கலாம்
- இலங்கை இனப்பிரச்சனைக்கு பேச்சுக்கள் மூலம் தீர்வைக் காணவேண்டும் - இந்திய நிதியமைச்சர் : பல்லாயிரக்கணக்கான உயிர்களைப் பலிகொண்டுவரும் இலங்கை இனப்பிரச்சனைக்கு இராணுவ வழியில் அல்லாது சமாதானப் பேச்சுக்களினூடான அரசியல் தீர்வொன்றினைக் காணவெண்டுமென இலங்கைக்கு குறுகிய விஜயமொன்றினை மேற்கொண்டிருந்த இந்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் தெரிவித்திருக்கிறார். கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்ற இலங்கையின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமரின் ஞாபகார்த்த உரையின் போது கருத்து வெளியிட்டுள்ள திரு. ப.சிதம்பரம் இந்தியா இலங்கை இனப்பிரச்சனைக்கு முன்னர் மத்தியஸ்தம் வகிக்கும்போது விடுதலைப்புலிகளை தனித் தமிழீழக் கோரிக்கையைக் கைவிட்டு ஒருமித்த இலங்கைக்குள் தீர்வினைக்காண முன்வரவேண்டுமென்றும், இலங்கை அரசினை அர்த்தமுள்ள சகலாராலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய அரசியல் தீர்வுத் திட்டமொன்றினை முன்வைக்கும்படி வேண்டியிருந்தது என்றும் இந்தியாவின் அந்த நிலைப்பாட்டில் தற்போதுகூட மாற்றமேதுமில்லை என்றும் தெரிவித்தார்
- பாகிஸ்தானில் வரும் ஜனவரி மாதம் தேர்தல்-முஷாரஃப் அறிவிப்பு : பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் ஒன்பதாம் தேதிக்கு முன்னர் பொதுத் தேர்தல்களை நடத்த தாம் விரும்புவதாக அந்நாட்டு அதிபர் ஜெனரல் பர்வேஸ் முஷாரஃப் கூறியுள்ளார். இருந்த போதிலும் தேர்தல் நடவடிக்கைகளை தொடங்க ஏதுவாக அங்கு அமலில் இருக்கும் நெருக்கடி நிலையை தளர்த்த அவர் மறுத்து விட்டார்
- ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான தூதர் பர்மா விஜயம் : ஐக்கிய நாடுகள் சபையின் பர்மாவுக்கான மனித உரிமைகள் குறித்த தூதர் பர்மா சென்றுள்ளார். கடந்த நான்கு ஆண்டுகளில் முதல் முறையாக அவர் அங்கு வர அனுமதிக்கப்பட்டுள்ளார்
- இஸ்ரேலியப் பிரதமர் மீது ஊழல் தொடர்பான விசாரணைகள் : இஸ்ரேலியப் பிரதமர் எஹுத் ஓல்மர்ட் அவர்களுக்கு எதிராக கூறப்படும் ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுகளின் விசாரணைகள் தொடர்பாக, அந்நாட்டு காவல் துறையினர் இருபதுக்கும் அதிகமான அரச கட்டிடங்கள் மற்றும் தனியார் அலுவலங்களில் சோதனைகளை நடத்தியுள்ளனர்
- சூறாவளியால் ரஷ்யா கப்பல்கள் மூழ்கியுள்ளன : ரஷ்யாவிற்கும் உக்ரைனிற்கும் இடையிலான கெர்ச் வளைகுடாவில் ஏற்பட்ட சூறாவளியினால் நான்கு கப்பல்கள் நாசமடைந்திருப்பதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
- இன்றைய (நவம்பர் 11 ஞாயிற்றுக்கிழமை 2007) "பிபிசி" தமிழோசைச் செய்திகள் கேட்க இணைப்பை அழுத்தவும் http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml?tamil_worldnews
Posted by
Manuneedhi - தமிழன்
at
12:35 PM
0
comments (நெற்றிக்கண்)
November 10, 2007
இன்றைய குறள்
ஒறுத்தாரை யொன்றாக வையாரே வைப்பர்
பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து
Posted by
Manuneedhi - தமிழன்
at
2:57 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: 155 - ம் குறள்
"கிரிவலம்" மகிமைபற்றி திருவாளர் சுகி.சிவம்
Posted by
Manuneedhi - தமிழன்
at
2:51 PM
1 comments (நெற்றிக்கண்)
பிரபல எழுத்தாளர் நார்மன் மெய்லர் காலமானார்
கடந்த ஐம்பதாண்டுகளில் அமெரிக்க கலாச்சாரத்தில் முக்கியமான நபராக திகழ்ந்த நார்மன் மெய்லர் தனது 84 வது வயதில் காலமாகியுள்ளார்.இருபதாம் நூற்றாண்டின் மிகச்சிறந்த இலக்கியவாதிகளில் நார்மன் மெய்லரும் ஒருவர். தன்னுடைய முதலாவது நாவலான 'தி நேகட் அண்டு தி டெட்' மூலம் முத்திரையை பதித்தார் நார்மன் மெய்லர். இரண்டாவது உலகப் போரில் தனக்கு கிடைத்த அனுபவங்களை அடிப்படையாக கொண்டு நார்மன் மெய்லர் இந்நாவலை உருவாக்கினார். நாவல்கள் மட்டுமன்றி, கட்டுரைகள், நாடகங்கள், செய்திகள், திரைப்படம் போன்றவற்றிலும் நார்மன் மெய்லர் நன்கு அறியப்பட்டார்.
அவருக்கு, 'தி ஆர்மிஸ் ஆஃப் தி நைட்' மற்றும் 'தி எக்ஸிகியூஷனர்ஸ் சாங்' ஆகிய இரண்டு படைப்புக்காக இருமுறை புலிட்சர் பரிசு வழங்கப்பட்டது. இதில் 'தி எக்ஸிகியூஷனர்ஸ் சாங்'கில் காணப்பட்ட அவருடைய எழுத்து முறை அவருடைய முத்திரையாக பதிந்தது. அரசியலில் துடிப்புடன் இருந்த நார்மன் மெய்லர் 1960 ஆண்டுகளில் வியட்நாம் போருக்கு எதிராக நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்றார்.
Posted by
Manuneedhi - தமிழன்
at
2:48 PM
0
comments (நெற்றிக்கண்)
துபாய் கட்டுமானப் பணி விபத்தில் பலியானவர்களுக்கு நஷ்டஈடு பெற்றுத் தர பேச்சுவார்த்தை
இலங்கையின் வடக்கே இடம்பெற்ற மோதலில் பலர் பலி : இலங்கையின் வடக்கே மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களின் இராணுவ முன்னரங்க பகுதிகளில் வெவ்வேறு இடங்களில் இடம்பெற்ற வெவ்வேறு மோதல் சம்பவங்களில் 23 விடுதலைப் புலிகளும், இராணுவச் சிப்பாய ஒருவரும் கொல்லப்பட்டுள்ளதாகத் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் கூறியிருக்கின்றது- பாகிஸ்தான் தலைமை நீதிபதியை சந்திக்க பேநசிர் பூட்டோவிற்கு அனுமதி மறுப்பு : பாகிஸ்தான் எதிர்க்கட்சித் தலைவி பேநசிர் பூட்டோ பதவியகற்றப்பட்ட நாட்டின் தலைமை நீதிபதி இஃப்திகார் முகமது சௌத்ரியைச் சந்திப்பதை பொலிசார் தடுத்துள்ளனர். ஒரு வாரத்துக்கு முன்பு அதிபர் முஷாரஃப் நாட்டில் அவசரநிலையைப் பிரகடனம் செய்ததிலிருந்து தலைமை நீதிபதி தனது இஸ்லாமாபாத்தில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். நேற்று வெள்ளிக்கிழமையை பூட்டோ அம்மையாரும் கூட வீட்டுக்காவலில்தான் கழித்திருந்தார். தனது இஸ்லாமாபாத் வீட்டின் முன்பு குவிக்கப்பட்டிருந்த பொலிசார் அகன்று சென்றதை அடுத்து அவர் ஜனநாயகத்துக்கு ஆதரவாக குரலெழுப்புவதைத் தொடர்ந்துள்ளார். வரும் ஜனவரி மாதத்தில் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்று அவர் கோருகிறார். ஒரு மாத காலத்தில் அவசரநிலை விலக்கப்பட வாய்ப்புள்ளது என்று மட்டும் கூறியுள்ள பாகிஸ்தான் சட்டமா அதிபர் மாலிக் முகமது கையும் வேறு விபரம் எதனையும் தெரிவிக்கவில்லை
- மேற்கு வங்கத்தின் நந்திகிராமில் மோதல் : மேற்கு வங்க மாநிலத்தில் நந்திகிராம் பகுதியில் நிலம் கையகப்படுத்துவதை எதிர்க்கும் இயக்கத்தாருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவாளர்கள் என்று கூறப்படுவோருக்கும் இடையே சனிக்கிழமையன்று ஏற்பட்ட மோதலில் இரண்டு பேர் உயிரிழந்ததாகவும், ஏராளமானவர்கள் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது
- துபாய் கட்டுமானப் பணி விபத்தில் பலியானவர்களுக்கு நஷ்டஈடு பெற்றுத் தர பேச்சுவார்த்தை - இந்திய அமைச்சர் : துபாய் நகரில் கட்டுமானப் பணி நடந்துகொண்டிருந்த பாலம் இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில், உயிரிழந்த ஐந்து தமிழர்கள் உள்பட ஏழு இந்தியர்களின் குடும்பத்தாருக்கு, போதுமான இழப்பீடு பெற்றுத்தர இந்திய அரசு நடவடிக்கை எடுத்திருப்பதாக வெளிநாடு வாழ் இந்தியர் விவகாரங்களுக்கான அமைச்சர் வயலார் ரவி தெரிவித்தார். துபாயின் புறநகர்ப் பகுதியான மரினாவில் பாலம் கட்டுமானப் பணி நடந்துகொண்டிருந்தது. கடந்த வியாழக்கிழமை மாலை, கட்டுமானப் பகுதி திடீரென்று இடிந்து விழுந்தது. இதில், இந்தியத் தொழிலாளர்கள் ஏழு பேர் உயிரிழந்தார்கள். 24 பேர் காயமடைந்தார்கள். மதுரை மாவட்டம் தும்பைபட்டியைச் சேர்ந்த ஷாஜஹான் சம்சுதீன், திண்டுக்கல் மாவட்டம மூங்கில்பட்டியைச் சேர்ந்த கார்த்தி, தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள காரப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த மதியழகன், கடலூர் மாவட்டம் நத்தமலை கிராமத்தைச் சேர்ந்த அருள்மொழி கோவிந்தன் மற்றும் மோகன் லட்சுமணன் ஆகிய ஐந்து தமிழர்கள் உயிரிழந்ததாகத் தகவல் கிடைத்துள்ளது. அவர்கள் பணியாற்றி வந்த நிறுவனத்துடன், துபையில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகள் பேச்சு நடத்தியிருப்பதாகவும், அவர்களது உடல்களை விமானம் மூலம் தமிழ்நாட்டுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் அமைச்சர் வயலார் ரவி தெரிவித்தார். விபத்து எப்படி ஏற்பட்டது என்ற விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகக் கூறிய அமைச்சர், உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு 120 மாத சம்பளத்தை இழப்பீடாகப் பெற்றுத்தர அவர்கள் பணியாற்றி வந்த நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இதனிடையே, உயிரிழந்த ஐந்து தமிழர்களின் குடும்பத்தாருக்கும் இழப்பீடாக தலா இரண்டு லட்சம் ரூபாய் வழங்க தமிழக முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளதாக அரசு இன்று சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது
- இராக் தீவிரவாதிகளால் அல்கொய்தாவினர் கொல்லப்பட்டுள்ளனர் : இராக்கின் சமாரா நகரத்தில் அல்கொய்தாவினர் மீது இராக்கிய தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பதினெட்டு அல்கொய்தாவினர் கொல்லப்பட்டுள்ளதாக இராக்கிய காவல்துறையினர் கூறுகின்றனர்
Posted by
Manuneedhi - தமிழன்
at
2:37 PM
0
comments (நெற்றிக்கண்)
"நான் படைப்பாற்றல் அற்றவன்" : இந்திரன் - எழுத்தாளர்
"மொழிபெயர்ப்பின் மூலம் நான் அடைந்த வாசிப்பு அனுபவத்தை என் சக மனிதர்களும் அடையவேண்டும் எனும் ஆசையில் நான் மொழிபெயர்ப்பு செய்கிறபோது, நான் படைப்பாற்றல் அற்றவன் என்று எங்கே என்னை நினைத்து விடுவார்களோ என்ற அச்சம் என் தொடக்க நாள்களில் இருந்தது. இதனால் என் தொடக்க நாள்களின் மொழிபெயர்ப்புத் தொகுதிகளான 'அறைக்குள் வந்த ஆப்பிரிக்க வானம்', 'காற்றுக்குத் திசை இல்லை' ஆகிய நூல்களில் புத்தகத்தைத் திறந்தவுடன் என்னுடைய சொந்தக் கவிதை ஒன்றை வைத்து எனது திறமையை வெளிக்காட்டிவிடுவேன். நாளடைவில் எனது கவிதைத் தொகுதிகள் நிறைய வெளிவந்த பிறகுதான் என்னிடமிருந்து இந்தப் பழக்கம் விலகியது. தன்னம்பிக்கை பிறந்தது" - இந்திரன், எழுத்தாளர், பத்திரிகை பேட்டியில்
Posted by
Manuneedhi - தமிழன்
at
2:33 PM
0
comments (நெற்றிக்கண்)
நீலம்! (குறும்படம்) - அறிவுமதி
Posted by
Manuneedhi - தமிழன்
at
1:57 AM
0
comments (நெற்றிக்கண்)
Labels: Courtesy : PrinceNRSama
November 09, 2007
இன்றைய குறள்
நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை
போற்றி யொழுகப் படும்
Posted by
Manuneedhi - தமிழன்
at
4:38 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: 154 - ம் குறள்
"மன்மதராசா மாலதி"
Posted by
Manuneedhi - தமிழன்
at
4:28 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: Courtesy : Indiainteracts
"அருள் கிடைக்கும்" - சத்யசாய்
Posted by
Manuneedhi - தமிழன்
at
4:25 PM
0
comments (நெற்றிக்கண்)
சிவகங்கை, இராமநாதபுரம், மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை போன்ற வறட்சியான மாவட்டங்களுக்கு காவிரி-வைகை இணைப்பு நீர்வரத்து?!
- காவிரி-வைகை இணைப்புத் திட்டம்: பூர்வாங்க ஆய்வுப் பணிகளை தமிழக அரசு மேற்கொள்கிறது : காவிரியையும் வைகையையும் வாய்க்கால் மூலம் இணைப்பது குறித்து தமிழக அரசு ஆராய்ந்துவருகிறதுகாவிரியையும் வைகையையும் இணைத்து வரண்டு கிடக்கும் தென்மாவட்டங்களில் பாசன வசதியைப் பெருக்கலாம் என்று முடிவுசெய்து அதற்கான ஆயத்தப் பணிகளை தமிழக அரசு மேற்கொண்டிருக்கிறது. கடந்த முப்பது ஆண்டுகளைக் கணக்கிலெடுத்துப் பார்க்கையில், பெரும்பாலனா வருடங்களில் காவிரியில் தேவைக்கு அதிகமான நீர்வரத்து இருந்துள்ளது. ஆதலால் இராமநாதபுரம், மதுரை, விருதுநகர் புதுக்கோட்டை போன்ற வறட்சியான மாவட்டங்களுக்கு இந்த உபரி நீரை கொண்டுசென்று பயன்படுத்துவது பற்றிய ஒரு விரிவான ஆய்வறிக்கை தற்போது மேற்கொள்ளப்பட்டுவருவதாக தமிழக அரசின் பொதுப்பணித்துறை செயலர் ஆதிசேஷையா தெரிவித்தார். திட்ட அளவில் இந்த முயற்சி வரவேற்கத்தக்கதுதான், ஆனால் இருக்கின்ற காவிரிக் கால்வாய்களே சரிவர பராமரிக்கப்படாத நிலையில் புதிய நீர் இணைப்பை உருவாக்கி அதைப் பேணுவதென்பது பெரும் சிரமமென்று சென்னை வளர்ச்சி ஆய்வுமையத்தின் நீர் ஆதாரங்கள் நிபுணர் டாக்டர் ஜனகராஜ் கூறுகிறார்
- சிங்கள தேசிய வாதம் இலங்கை இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் இடைஞ்சலாய் இருப்பதாக சர்வதேச நெருக்கடிகள் ஆய்வுக்குழு கருத்து : இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் காணப்படும் இடைஞ்சல்களில் ஒன்றாக, தென்னிலங்கையில் காணப்படும் சிங்கள தேசிய வாதம் மற்றும் தென்னிலங்கையில் உள்ள பிரதான அரசியல் கட்சிகளிடையே கருத்தொற்றுமை இல்லாமை ஆகியவை இருப்பதாக பிரஸ்ஸல்சில் இருந்து இயங்கும் சர்வதேச நெருக்கடிகள் தொடர்பான குழுவான 'ஐ.சி.ஜி', இலங்கை நிலவரம் தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டிருக்கிறது.
ஆனாலும் பகுத்தறிவுக்கு ஒவ்வாதது, இனவாதப் போக்குடையது என்று கூறி இந்த சிங்கள தேசியவாதத்தை புறந்தள்ளிவிட முடியாது என்றும் அந்தக் குழு தெரிவித்துள்ளது. சிங்கள தேசியவாதத்தைப் புரிந்துகொள்ள முயற்சிக்கும் நிலையிலேயே, இலங்கை இனப்பிரச்சினைக்கு ஒரு நீண்ட காலத் தீர்வைக் காண அது உதவியாக இருக்கும் என்றும் சர்வதேச நெருக்கடிகள் குறித்த குழு கூறியுள்ளது. இந்த கருத்து குறித்து தனது அபிப்பிராயத்தைக் கூறிய இலங்கை அரசியல் பகுப்பாய்வாளரும் தற்போது டோக்யோவில் ஐ.நா பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்து கொண்டிருப்பவருமான பேராசிரியர் கீத பொன்கலன் அவர்கள், கடந்த பல வருடங்களாக இனப் பிரச்சினை தீர்க்கப்படாததற்கான முக்கிய காரணங்களில் மிகத் தீவிரமான தேசியவாதப் போக்கும் ஒன்று என்று கூறினார். சிங்கள தேசியவாத நிலைப்பாட்டைக் கடைப்பிடிக்கின்ற, ஆனால் தமிழ் மக்களின் அபிலாஷைகளை மதிக்கக்கூடிய சில குழுக்களும் இருக்கின்றன என்று கூறுகின்ற கீதபொன்கலன் அவர்கள், மிகத் தீவிரமான சிங்கள தேசியவாதமே பிரச்சினைத் தீர்வுக்கு காரணமாக இருப்பதாகவும் கூறுகிறார் - பிரிட்டன்-சௌதியரேபியா ஆயுத வர்த்தக ஊழல்: விசாரணையை நிறுத்திய பிரிட்டிஷ் அரசாங்கத்தின் முடிவு மறுபரிசீலிக்கப்பட வேண்டுமென்கிறது நீதிமன்றம் : பிரிட்டனுக்கும் சௌதியரேபியாவுக்கும் இடையே பல பில்லியன் டாலர்கள் பெறுமதியான ஆயுத வர்த்தகத்தில் நடந்த ஊழல்கள் குறித்து நடந்துகொண்டிருந்த விசாரணையை கடந்த ஆண்டு பிளேர் அரசு நிறுத்தும்படி உத்தரவிட்டது
- பர்மாவின் இராணுவ ஆட்சியாளர்களுடன் பேசுவதில் நம்பிக்கை தெரிவித்துள்ளார் எதிர்க்கட்சித் தலைவி : பர்மாவில் இராணுவ அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தும் முயற்சிகள் பற்றி தமக்கு நம்பிக்கை இருப்பதாக தடுத்துவைக்கப்பட்டுள்ள பர்மிய எதிர்க்கட்சி தலைவி ஒங் சான் சூ சீ அம்மையார் தமது கட்சிக்காரர்களிடம் கூறியிருக்கிறார்
- புலிகளின் ஆதரவாளர் என்று கூறப்படும் நபர் மீது லண்டனில் பயங்கரவாத குற்றச்சாட்டுக்கள் : தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் ஆதரவாளர் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அருணாச்சலம் கிருஷாந்தக்குமார் (சாந்தன்) என்பவர் மீது இன்று லண்டனின் பிரதான குற்றவியல் நீதிமன்றமான ஓல்ட் பெய்லி நீதிமன்றத்தில் பயங்ககரவாதக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன
Posted by
Manuneedhi - தமிழன்
at
4:13 PM
0
comments (நெற்றிக்கண்)
