July 20, 2007

மனத்தின் சமநிலையோடு, மனக் கொந்தளிப்பைச் சாட்சியாக விலகி நின்று எழுத்தாளன் பார்க்கக் கற்றுக் கொள்ளவேண்டும்

- பிரபஞ்சன்

இன்றைய குறள்

அறன்எனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன்பழிப்ப தில்லாயின் நன்று


பழிப்புக்கு இடமில்லாத இல்வாழ்க்கை இல்லறம் எனப் போற்றப்படும்


அறத்துப்பால் : இல்லறவியல்

தமிழோசை

July 19, 2007

வரலாற்றின் நீண்ட சரித்திரத்தில் வன்முறையுடன் எந்த ஒரு நாடு மீதும் படை எடுக்காத ஒரே நாடு இந்தியா தான் என்பது உண்மை


- சுவாமி விவேகானந்தர்

"வேதாந்த் பரத்வாஜ்" இளம் இசைக்கலைஞர் பகுதி 3

இன்றைய குறள்

ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை
நோற்போரின் நோன்மை உடைத்து


தானும் அறவழியில் நடந்து, பிறரையும் அவ்வழியில் நடக்கச் செய்திடுவோரின் இல்வாழ்க்கை, துறவிகள் கடைப்பிடிக்கும் நோன்பைவிடப் பெருமையுடையதாகும்


அறத்துப்பால் : இல்லறவியல்

தமிழோசை

பாடல் இயற்றுபவரைப் பாடலாசிரியர் என்போம். பாடுபவரைப் பாடகர் என்போம். படத்தை இயக்குபவரை இயக்குனர் என்போம். படத்தில் நடிப்பவரை நடிகர் என்போம். படத்தில் நடனமாடுபவரை, நடனக் கலைஞர் என அழைப்போம். சாதாரணமாக ஒவ்வொரு துறையில் ஒவ்வொருவர் சிறந்த புலமை பெற்றிருப்பது வழக்கம். அபூர்வமாகச் சிலர் தம்முள் பன்முகத் திறனை வளர்த்துக் கொண்டு அஷ்டவதானியாகவும், சதாவதானியாகவும் திகழ்வதுண்டு. மனோரஞ்சித மலர் யார் எந்தப் பழத்தை நினைத்துக் கொண்டு முகர்ந்தாலும் அந்த மணத்தை அளிப்பதாகச் சொல்வார்கள். தொடர்ந்து படிக்க இணைப்பில் செல்க
Tamil movie links presenting cinema news,movie reviews,song reviews,actors,actresses&pictures

July 18, 2007

திரு.யாழ் சுதாகர் அவர்களைப் பற்றி நான் சொல்லி உங்களுக்குத் தெரியவேண்டியதில்லை. அவர், தான் வானொலி அறிவிப்பாளராக இருந்தபோது நடந்தவைகளையும், அனுபவங்களையும் அழகாகப் பாடல்களோடு தொகுத்து வழங்கியிருக்கிறார். நீங்களும் கேட்டு ரசியுங்கள்.
Get this widget | Share | Track details

இன்றைய குறள்

இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான் முயல்வாருள் எல்லாம் தலை

நல்வாழ்வுக்கான முயற்சிகளை மேற்கொள்வோரில் தலையானவராகத் திகழ்பவர், இல்வாழ்வின் இலக்கணமுணர்ந்து அதற்கேற்ப வாழ்பவர்தான்

அறத்துப்பால் : இல்லறவியல்

"இந்திய விடுதலைக்காகப் பிசாசின் உதவியைப் பெற வேண்டியிருந்தால் கூட நான் அதனோடு பேசுவேன்"

- நேதாஜி

தமிழோசை

இன்றைய (ஜுலை 18 புதன்கிழமை) "BBC" செய்திகள் கேட்கக் கீழுள்ள இணைப்பில் செல்க BBCTamil.com Radio Player

வேதாந்த் பரத்வாஜ் இசைக்கலைஞர் பகுதி 2

July 17, 2007

எழுத்தாளனுக்குக் கொந்தளிப்புத் தேவைதான், ஆனால் அந்தக் கொந்தளிப்பிலேயே அவன் ஆழ்ந்துவிட்டால் நல்ல இலக்கியம் படைக்க முடியாது

- பிரபஞ்சன்

நாலடியார்

1. அறத்துப்பால்

1.7. சினம் இன்மை

காவா தொருவன்தன் வாய்திறந்து சொல்லும்சொல்
ஓவாதே தன்னைச் சுடுதலால் - ஓவாதே
ஆய்ந்தமைந்த கேள்வி அறிவுடையார் எஞ்ஞான்றும்
காய்ந்தமைந்த சொல்லார் கறுத்து



- சமண முனிவர்கள்

தமிழ் விளக்கவுரை


சினத்துடன் கூடிய சுட்டெரிக்கும் வார்த்தைகளைப் பயன்படுத்திய ஒருவனை, அந்தச் சினமே சுட்டெரிந்து கொல்லுவதால், கற்றுணர்ந்த பெரியவர்கள் அப்படிப்பட்ட வார்த்தைகளை எப்போதும் பயன்படுத்த மாட்டார்கள்

- ஆதியக்குடியான்

ஆங்கில விளக்கவுரை
Placidity

As the angry words which a man speaks, opening his mouth unguardedly, continually burn him, so those who possess that knowledge which arises from oral instruction and incessant search after truth will never be angry and utter burning words of fury.

Translation of Selected Verses
by Rev.F.J.Leeper, Tranquebar

இன்றைய குறள்

அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில்
போஒய்ப் பெறுவ தெவன்

அறநெறியில் இல்வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர்கள் பெற்றிடும் பயனை, வேறு நெறியில் சென்று பெற்றிட இயலுமோ? இயலாது

அறத்துப்பால் : இல்லறவியல்

தமிழோசை

இலங்கையில் தற்போதைய உள் நாட்டு நிலைமைகள், குறிப்பாக கிழக்கு மாகாணத்தின் போர், அதனைத்தொடர்ந்த மக்களின் இடப்பெயர்வுகள், சமாதான முயற்சிகள், அதில் திருச்சபையின் பங்கு ஆகியவை உட்பட பலவிதமான விடயங்கள் குறித்து கத்தோலிக்க ஆயர் வணக்கத்துக்குரிய கிங்ஸிலி சுவாம்பிள்ளை "BBC" க்கு செவ்வி ஒன்றை வழங்கியிருந்தார். கேட்க இணைப்பில் செல்க, BBCTamil.com மேலும் இன்றைய (ஜுலை 17 செவ்வாய்க்கிழமை) நிகழ்ச்சிகளைக் கேட்க கீழே 'க்ளிக்' செய்க BBCTamil.com Radio Player

கண்ணுக்குக் கண் -- பல்லுக்குப் பல்

இளம் இசைக்கலைஞர் வேதாந்த் பரத்வாஜ்

July 16, 2007

"நிலாச்சாரல்" இணைய சஞ்சிகைக்காக திருமதி.ரஜினி அவர்களுடன் நான் கண்ட நேர்முகம்

இந்தியப் பண்பாட்டைக் கடைப்பிடிப்பதில் அதிக ஆர்வத்துடன் இருக்கிறார்கள். ஆப்பிரிக்கர்களுக்கு இந்தியர்களை மிகவும் பிடித்திருக்கிறது, காந்திஜி, நெல்சன் மண்டேலா போன்ற சுதந்திர உணர்வளித்தவர்களின் நினைவுகளோடு இந்தியர்களை அணுகுகிறார்கள்.

இந்தியாவில் காணப்படும் விருந்தோம்பல் எங்கும் காணக் கிடைக்கவில்லை. கலாசாரம், பண்பாடு, ஆன்மீக வளம் காரணத்தால் பிரமிக்க வைப்பது இந்தியா, இந்தியா..... இந்தியாதான்....

தொடர்ந்து படிக்க கீழுள்ள இணைப்பில் செல்க.Tamil magazine Tamil news,poem,story,movie & song reviews