December 20, 2007

இந்தியர்களை மலேசியா வெறுத்து பழிவாங்குவது ஏன்?

மலேசியப் பிரதமர் படாவி அங்கு வாழும் தமிழர்கள் மீது அடக்குமுறையை ஏவிவிட்டிருக்கிறார். இதன் பின்னணி பயங்கரமானது. இனி அங்கு வாழும் இந்தியர்கள் கவுரவத்துடன் வாழ முடியுமா என்ற கேள்வி எழுந்து விட்டது. கடந்த 2005-ம் ஆண்டில் மலேசிய ராணுவத்தில் பணியாற்றிய மூர்த்தி என்ற வீரர் கொல்லப்பட் டார். அவர் உடலை முஸ்லிம்கள் நடைமுறைப்படி புதைப்பது என்றும், இல்லை இந்து முறைப்படி எரிக்க வேண்டும் என்றும் சர்ச்சை எழுந்தது. மூர்த்தி மனைவி நீதிமன்றம் சென்றார். ஆனால், ஷரிஅத் கோர்ட் வென்றது.
அதற்குப் பின் கடந்த ஆண்டு அக்டோபர் 30-ம் தேதி படாங்ஜவா பகுதியில் மாரியம்மன் கோவில் தகர்க்கப்பட்டது. அதற்குப் பின் ஒருவாரம் கழித்து தீபாவளி நன்னாள் வந்த போது எல்லாரும் வேதனையுடன் அதைக் கொண்டாடினர். மலேசிய அரசியலமைப்புச் சட்டத்தின் விதி 3 ( பிரிவு 1) `மற்ற மதங்களை அமைதி நல்லிணக்கத்துடன் அனுசரிக்கலாம்' என்று குறிப்பிட்ட போதும், அரசமைப்புச் சட்ட விதி 12 (1) ன்படி இஸ்லாமிய கோர்ட் உத்தரவுக்கு நீதித்துறை கட்டுப்பட்டது என்றிருக்கிறது.முன்பு மகாதிர் முகமது பிரதமராக இருந்த போதே இஸ்லாமிய அடிப்படையில் நாட்டை வழி நடத்த முடிவு செய்யப்பட்டது. அப்போது உருவானதே `பூமிபுத்ரா' என்ற வார்த்தை. கல்வி, வேலைவாய்ப்பில் முஸ்லிம்களுக்கு முன்னுரிமை என்ற நடைமுறை அமலானது.ஆனால், மலேசியாவில் வாழும் பெரும்பான்மை இந்தியர்களில் பலர் பெரிய அளவில் வசதி வாய்ப்பற்றவர்கள். படிப் படியாக கடந்த 20 ஆண்டுகளில் தமிழ், தெலுங்கு, மலையாளம் கற்றுத்தரும் பள்ளிகள் குறைக்கப் பட்டன. கடந்த 50 ஆண்டுகளில் பத்தாயிரம் இந்துக் கோவில்கள் அழிக்கப் பட்டதால், இந்துக்களின் கவுரவம் படிப்படியாகக் குறைக்கப்பட்டது. பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் தோட்ட வேலை பார்க்க அழைத்துச் சென்ற மக்கள் அங்கே தொடர்ந்து வாழ்கின்றனர். இவர்களில் 70 சதவீதம் பேர் தமிழர்கள், அதே சமயம் அங்கே வர்த்தகர்கள், வட்டிக்கு கடன் கொடுக்கும் தொழிலுக்காக சென்றவர்கள், அதிகாரிகள் என்று செட்டியார்கள், மரைக்காயர்கள், இலங்கைத் தமிழர்கள் சென்றனர். மலையாளிகளும் அங்கு சென்று குடியேறினர். தற்போது, மலேசியாவின் வளம் அதிகரித்திருப்பதால், சராசரி வருமானம் அதிகரித்ததால் அங்குள்ளவர்கள் வளமாக இருப்பதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. ஆனால் தமிழரில் அதிகப் பணக்காரர் என்று அரசால் அங்கீகரிக்கப்பட்டவர் ஆனந்த கிருஷ்ணன். இவர் இலங்கைத் தமிழர். அதனால் தான் தற்போது போராட்டம் நடத்தும் இண்ட்ராப்' அமைப்பு தெரிவித்த தகவலில் `அரசு உயர் பதவிகளில் ஐம்பது ஆண்டுகளுக்கு முன் 40 சதவீதம் இருந்த தமிழர்கள் இன்று அதில் 2 சதவீதம் மட்டுமே என்று சுட்டிக்காட்டுகிறது. மலேசியாவில் 15 பொதுப் பல்கலை உள்ளது. அதில், மொத்தமுள்ள மாணவர்கள் 45 ஆயிரம். ஆனால் இந்தியர்கள் 5 சதவீதம் மட்டுமே' என்று குறிப்பிட்டிருக் கிறது. அதுமட்டுமல்ல, கிரிமினல் வழக்குகளில் தண்டனை பெற்ற மொத்த குற்றவாளிகளில் 40 சதவீதம் இந்தியர்கள் என்பதும் வேதனை தரும் தகவலாகும்.
மலேசிய மக்கள் தொகை 2.7 கோடியில் 1.6 கோடிப் பேர் மலாய் மக்கள். 50 லட்சம் பேர் சீனர்கள், 27 லட்சம் பேர் இந்தியர். மலாய் என்றழைக்கப்படும் பூமிபுத்ரர்களுக்கு' அதிக வாய்ப்பு தரும் பொருளாதாரத் திட்டங்கள் அமல்படுத்தப்பட்டிருக்கின்றன.இப்போது உலக அரசியல் தலைவர்கள் பார்வை மலேசியா மீது விழுவதால் பிரதமர் படாவி சற்று சுருதி குறைந்து காணப்படுகிறாரே தவிர அடிப்படையாக இந்தியர் மீது மலேசிய அரசு வெறுப்புக் கொண்டிருக்க மூன்று காரணங்கள் உள்ளன.அவை வருமாறு:எண்ணெய் வள நாடுகள் அமைப்பான ஒ.ஐ.சி-யுடன் படாவி சேர்ந்து கொண்டு அமெரிக்க எதிர்ப்பு சக்தியாக அணிசேரா நாடுகளின் அமைப்பான நாம் மாற்றப்பட வேண்டும் என்று விரும்பினார். அதை இந்தியா ஆதரிக்கவில்லை. அமெரிக்க எதிர்ப்பு என்பதைவிட இஸ்லாமிய சக்திகளின் ஆதரவாக அணிசேரா இயக்கத்தை மாற்ற விரும்பிய படாவி செயல் முறியடிக்கப்பட்டது.`ஆசியான்' நாடுகள் கூட்டமைப்பு ஆசிய நாடுகளில் பொருளாதார இணக்கம் காண விரும்பிச் செயல்படுகிறது. இதில் இந்தியா, சீனா முக்கிய நாடுகள், சிங்கப்பூர், மலேசியாவும் அங்கம் வகிக்கின்றன. கிழக்கு ஆசியாவில் இந்து-புத்தமத கலாசார நெருக்கம் இருப்பதை இந்தியா சுட்டிக் காட்டி, அந்த அடிப்படையில் பொருளாதார வளம் காண விரும்புகிறது. இதை சிங்கப்பூர் ஆதரிக்கிறது. இம்முயற்சிக்கு சீனா ஆதரவு காட்டவில்லை, அவர்களின் கைப்பாவையாக மலேசியா இருக்கிறது. ஆசியான் நாடுகளுக்கும் பாகிஸ்தானுக்கும் அதிக சம்பந்தமில்லை, வரைபடத் தில் மேற்கே இருக்கிறது பாகிஸ் தான். மலேசியாவுக்கு ஆதரவு தருகிறது பாகிஸ்தான். இந்த அமைப்பில் பாகிஸ்தானும் அங்கம் வகிக்கிறது. சீனா, மலேசியா, பாகிஸ்தான் ஆகியவை இந்தியாவுக்கு எதிராகச் செயல்பட மலேசிய அதிபர் படாவி முக்கியப் பங்காற்றுகிறார். பீஜிங்- இஸ்லாமாபாத்- கோலாலம்பூர் கூட்டணியை அவர் விரும்புகிறார். அந்த அமைப்பில் சிங்கப்பூர்- இந்தியா - ஜப்பான் ஒரே கருத்தில் சிந்திக்கின்றன.குறிப்பாகச் சொன்னால் அமெரிக்காவுக்கு எதிராக சீனாவுக்கு ஆதரவாக செல்லும் படாவி அதனால் அங்குள்ள சீனர்களைத் தாக்கவில்லை.பெரிய அண்ணனைத் தாக்க விரும்பாமல் இந்தியர்களைத் தாக்குகிறார். இதைச் சரியாகப் புரிந்து கொண்டால் படாவி அணுகுமுறை எப்படி இருக்கும் என்று யூகிக்கலாம்.

No comments: