August 19, 2007
இன்றைய குறள்
புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை
அகத்துறுப் பன்பி லவர்க்கு
அன்பு எனும் அகத்து உறுப்பு இல்லாதவர்க்குப் புறத்து உறுப்புகள் அழகாக இருந்து என்ன பயன்?
Posted by
Manuneedhi - தமிழன்
at
6:00 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: 79 - ம் குறள்
அமைதி எப்படி கிடைக்கும்?
Posted by
Manuneedhi - தமிழன்
at
5:59 PM
0
comments (நெற்றிக்கண்)
தமிழோசை
- கைத்தறி நெசவிற்கு பெயர் பெற்ற அம்பாறை மாவட்டம் மருதமுனை பிரதேசத்தில் சுனாமிக்கு பின்பு கைத்தறி நெசவு மீண்டும் உயிர் பெற்று வருவதாக அந்த பிரதேச நெசவாளர்கள் கூறுகின்றார்கள்.
சுனாமியின் போது இந்த பிரதேசத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைத்தறிகள் அழிந்து போயின. பலர் மரணமடைந்தனர். - இலங்கையின் வடக்கே நெடுந்தீவு கடற்பரப்பில் விபத்து காரணமாக நீரில் படகு மூழ்கி ஐஸ் கட்டிகள் கொண்டு வந்த பெட்டிகளைப் பிடித்தபடி தத்தளித்துகொண்டிருந்த 4 இந்திய மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை காப்பாற்றியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
- இந்திய அமெரிக்க அணுசக்தி உடன்பாடு பிரச்சனையில் ஆளும் மத்திய அரசுக்கு நெருக்கடி: இந்தியா – அமெரிக்கா இடையிலான அணுசக்தி உடன்பாடு பிரச்சினையில், இடதுசாரிக் கட்சிகளின் பிடி இறுகி வரும் நிலையில், ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்தச் சிக்கலுக்குத் தீர்வு காண்பதற்கான முயற்சியாக, ஆளும் கூட்டணிக்குத் தலைமை வகிக்கும் காங்கிரஸ் கட்சி, இன்று ஞாயிற்றுக்கிழமை பல்வேறு கூட்டங்களை நடத்தியது.
- ஆசிய பசிபிக் பிராந்திய எட்டாவது சர்வதேச எயிட்ஸ் மாநாடு ஞாயிற்றுகிழமையன்று கொழும்பு பண்டாரநாயக்க நினைவு சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் தொடங்கியது. எதிர்வரும் 23 ம் திகதிவரை ஐந்து நாட்கள் இடம்பெறவுள்ள இந்த மாநாட்டில் 60 நாடுகளிலிருந்து சுமார் 3000 பேர் கலந்துகொண்டு இந்தக் கொடிய நோயின் தாக்கம் குறித்து விவாதிக்கவிருக்கிறார்கள். மேலும் இன்றைய (ஆகஸ்ட் 19 ஞாயிற்றுக்கிழமை 2007) "BBC" செய்திகள் கேட்க இணைப்பை அழுத்துக
http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml?tamil_worldnews
Posted by
Manuneedhi - தமிழன்
at
5:45 PM
0
comments (நெற்றிக்கண்)
அண்ணாகண்ணன் : பொதிகை நேர்காணல் 2005
Posted by
Manuneedhi - தமிழன்
at
4:04 AM
0
comments (நெற்றிக்கண்)
Posted by
Manuneedhi - தமிழன்
at
3:33 AM
0
comments (நெற்றிக்கண்)
Labels: நன்றி : ஆறாம்திணை
August 18, 2007
நண்பர் யாழ் சுதாகர் தொகுத்து வழங்கும் இதயத்தைப் பிழிந்து எங்கோ எடுத்துச் செல்லும் யேசுதாஸின் இனிய பாடல்கள்!! இசையை ரசிக்கும் எவருக்கும் மொழி அவசியம் இல்லை என்பது இந்தப் பதிவின் மூலம் நிரூபணமாகும் என்பதில் ஐயமில்லை!
| Powered by eSnips.com |
Posted by
Manuneedhi - தமிழன்
at
4:20 PM
0
comments (நெற்றிக்கண்)
இன்றைய குறள்
அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரந்தளிர்த் தற்று
Posted by
Manuneedhi - தமிழன்
at
4:06 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: 78 - ம் குறள்
Posted by
Manuneedhi - தமிழன்
at
4:02 PM
0
comments (நெற்றிக்கண்)
தமிழோசை
- பருவ மழையினால் பாதிக்கப்பட்ட தெற்காசிய நாடுகளில் உணவுப்பற்றாகுறை ஏற்படக் கூடிய அச்சுறுத்தல்கள் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டிருப்பதாக ஐ.நா. தெரிவித்துள்ளது
- இந்தியா – அமெரிக்கா இடையிலான அணுசக்தி உடன்பாடு பிரச்சினையில், இடதுசாரிக் கட்சிகள் தங்கள் நிலையைத் தளர்த்திக் கொள்ள முடியாது என்பதில் உறுதியாக இருக்கின்றன. தொடர்ந்து இன்றைய (ஆகஸ்ட் 18 சனிக்கிழமை 2007) "BBC" செய்திகள் கேட்க இணைப்பில் செல்க
Posted by
Manuneedhi - தமிழன்
at
3:50 PM
0
comments (நெற்றிக்கண்)
August 17, 2007
எனது நெருங்கிய நண்பரும் நடிகருமான திரு.கரண் பகிர்ந்துகொள்ளும் ஒரு சிறிய நேர்முகம்
Posted by
Manuneedhi - தமிழன்
at
10:35 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: Courtesy : Indiainteracts
கரண் பகுதி 3
Posted by
Manuneedhi - தமிழன்
at
10:28 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: Courtesy : Indiainteracts
Posted by
Manuneedhi - தமிழன்
at
3:20 PM
0
comments (நெற்றிக்கண்)
இந்தியாவுல எல்லோராலும் நல்ல மனிதன் என்று ஒத்துக்கொள்ளப்பட்ட ஒரு ஆள் அப்துல்கலாம்தான்
அவர் புத்தகம் இவ்வளவு காப்பி வித்ததற்கு அப்துல்கலாம்ங்கிற hype மிக முக்கிய காரணம். ஒரு கிராமத்துலயிருந்து ஒரு ஆள் வந்தார். சார் அப்துல்கலாம் புக் ஒரு காப்பி குடுங்க சார்ன்னு கேட்டார். எதுக்காக வாங்குறார்ன்னு ஒரு ஆர்வத்துல விசாரிச்சப்போ அவர் சொன்னார். சார் என்காலம் முடிஞ்சுப் போச்சு, இப்ப படிக்கிற புள்ளைங்களாவது நல்லா படிச்சு நல்ல பிள்ளைங்களா வரட்டும். எங்க ஊரு பள்ளிக்கூடத்து புள்ளைங்களுக்கு குடுக்கிறதுக்குதான் சார். ஊருக்கு இரண்டு அப்துல்கலாம் வந்தாகூட நல்லதுதானே.
Posted by
Manuneedhi - தமிழன்
at
2:37 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: நன்றி : அந்திமழை
எழுத்தாளன் பணி எழுதிக்கொண்டிருப்பதே. எவர் அங்கீகரிப்பையும் நிராகரிப்பையும் எதிர் பார்ப்பவன் நல்ல எழுத்தாளன் அல்ல - பாலகுமாரன்
Posted by
Manuneedhi - தமிழன்
at
12:50 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: நன்றி : அந்திமழை
இன்றைய குறள்
என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை அறம்
அறம் எதுவென அறிந்தும் அதனைக் கடைப்பிடிக்காதவரை, அவரது மனச்சாட்சியே வாட்டி வதைக்கும். அது வெயிலின் வெம்மை புழுவை வாட்டுவதுபோல இருக்கும்
Posted by
Manuneedhi - தமிழன்
at
12:43 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: 77 - ம் குறள்
தமிழோசை
Posted by
Manuneedhi - தமிழன்
at
12:39 PM
0
comments (நெற்றிக்கண்)
வறுமை, வேலையில்லை என்ற நாய் என்னைத் துரத்த அதுக்குப் பயந்து ஓடினவந்தான் நான். இப்ப இளைப்பாறும் போதுதான் தெரியுது இவ்வளவு தூரம் ஓடிவந்த்துருக்கேன்னு"
போலீஸ்காரர்களின் துரத்தல் எங்கே போய் முடியுமென்று எல்லாருக்கும் தெரிந்திருக்கலாம். ஆனால் பாலனின் அனுபவம் வேறு விதம் போலீஸ்காரனின் துரத்தல் பாலனை கோடீஸ்வரர் ஆக்கியிருக்கிறது.
Posted by
Manuneedhi - தமிழன்
at
2:34 AM
0
comments (நெற்றிக்கண்)
Labels: நன்றி : தமிழ் நண்பர்கள்
August 16, 2007
கொதித்து போயிருக்கேன் - ராமதாஸ் (மருத்துவர் இராமதாசு) பேட்டி
கட்சியை வளர்ப்பதற்காக நாட்டை காடாக்கும் எந்த போராட்டத்தையும் நடத்தலாம் என்று செயல்படுபவர்கள் குறித்து முடிவெடுக்கும் காலம் நெருக்குவதாக முதலமைச்சர் கருணாநிதி கூறியிருப்பதை கண்டு மனம் கொதித்துப் போயிருப்பதாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியிருக்கிறார். காங்கிரஸ் ஆதரவு மட்டும் போதும் என்று கருணாநிதி கருதுகிறாரா என்ற கேள்விக்கும் அவர் பதிலளித்துள்ளார்.
Posted by
Manuneedhi - தமிழன்
at
8:27 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: நன்றி : இட்லிவடை
இயக்குனர் திரு.சீமான் நேர்முகம்
இவ்வளவு பெரிய கோபத்தோடும், கொள்கைகளோடும் இருக்கிற உங்களோட லட்சியம் கடைசிவரை சினிமாவா இருக்கிறதுக்கு வாய்ப்பே இல்லைன்னு தோணுது. சினிமாவுக்கு அடுத்து என்ன செய்யணும்னு நினைக்கிறீங்க?
Posted by
Manuneedhi - தமிழன்
at
11:58 AM
1 comments (நெற்றிக்கண்)
Labels: நன்றி : கீற்று
இன்றைய குறள்
அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை
Posted by
Manuneedhi - தமிழன்
at
11:07 AM
0
comments (நெற்றிக்கண்)
Labels: 76 - ம் குறள்
Posted by
Manuneedhi - தமிழன்
at
11:04 AM
0
comments (நெற்றிக்கண்)
August 15, 2007
இன்றைய குறள்
அன்புற் றமர்ந்த வழக்கென்ப வையகத்து
இன்புற்றார் எய்தும் சிறப்பு
Posted by
Manuneedhi - தமிழன்
at
4:04 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: 75 - ம் குறள்
Posted by
Manuneedhi - தமிழன்
at
3:55 PM
0
comments (நெற்றிக்கண்)
தமிழோசை
Posted by
Manuneedhi - தமிழன்
at
3:53 PM
0
comments (நெற்றிக்கண்)
August 14, 2007

Mahatma Gandhi
கண்ணுக்குக் கண் என்று ஒவ்வொருவரும் அஹிம்சா வழியில் இறங்கி விட்டால் ஒரு நாள் இந்த உலகமே குருடாகி நிற்கும்!
Posted by
Manuneedhi - தமிழன்
at
11:43 PM
0
comments (நெற்றிக்கண்)
இன்னொரு பிறவியென்றொன்றிருந்தால் நான் மீண்டும் இந்தியனாகவே பிறக்கவேண்டும்!! ஜெய்ஹிந்த்!!!
Posted by
Manuneedhi - தமிழன்
at
6:35 PM
0
comments (நெற்றிக்கண்)
ஒரு வெளிநாட்டவரின் குரலில் நமது "தேசியகீதம்"
Posted by
Manuneedhi - தமிழன்
at
6:20 PM
0
comments (நெற்றிக்கண்)
அன்பு நண்பர்களே!
மஹாத்மா காந்தியடிகளின் வாழ்வில் முக்கியமான சம்பவம் ஒன்றை அவர் ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். அவ்விவரத்தைக் கீழே படியுங்கள். இதைத் தவிர இந்தியாவின் முதல் துணை ஜனாதிபதியாயிருந்த டாக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் முதல் பாரதப் பிரதமர் நேரு ஆகியோர் ஆற்றிய முதல் சுதந்திர தின உரைகளை ஒலிப்பதிவு செய்து அதனை எழுத்தில் வடித்து
http://www.mazhalaigal.com/
சுதந்திர தின சிறப்புக் கட்டுரைகளாக வழங்கியுள்ளார். அவற்றையும்
படித்து மகிழுங்கள். தாத்தா சீனு எழுதுகிறார்:
Jaihind!
Posted by
Manuneedhi - தமிழன்
at
4:32 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: Courtesy : Google-Group
இன்றைய குறள்
அன்பீனும் ஆர்வம் உடைமை அதுஈனும்
நண்பென்னும் நாடாச் சிறப்பு
அன்பு பிறரிடம் பற்றுள்ளம் கொள்ளச் செய்யும் அந்த உள்ளம், நட்பு எனும் பெருஞ்சிறப்பை உருவாக்கும்
Posted by
Manuneedhi - தமிழன்
at
4:14 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: 74 - ம் குறள்
தமிழோசை
பாகிஸ்தான் அதிபர் முஷாரஃப் பிரிட்டனிலிருந்து பாகிஸ்தான் சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகள் ஆவதையொட்டிய நிகழ்வுகள் இன்று பாகிஸ்தானில் அனுசரிக்கப்பட்டன.
சுதந்திரத்தின் 60 ஆம் ஆண்டு விழாவில் உரையாற்றிய பாகிஸ்தானின் அதிபர் பர்வேஸ் முஷாரஃப், தீவிரவாதத்தை ஒழிக்க தனது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.தொடர்ந்து இன்றைய (ஆகஸ்ட் 14 செவ்வாய்க்கிழமை 2007) "BBC" செய்திகள் கேட்க கீழுள்ள இணைப்பை அழுத்துக http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml?tamil_worldnews
Posted by
Manuneedhi - தமிழன்
at
3:45 PM
0
comments (நெற்றிக்கண்)
August 13, 2007
தேவதைகளுக்கு எழுதப்பட்ட மரண சாசனம்

(இதுதான் கலைப்பிரியா) கௌசிகா இனிமேல் உயிருடன் இருக்கபோவதில்லை என்பதை தெரிந்துகொண்டாள். தன்னுடன் பக்கத்தில் இருந்து சண்டை போட்டு விளையாடிய சிறுவர்கள், உறவினர்கள் எல்லாருடனும் கதைக்க வேணும் போல இருப்பதாக சொன்னாள். அவள் விருப்பப்படி ஊரே வந்து குவிந்தது. ஒகஸ்ட் 14-ம் நாள் 2006, காலை 10 மணியிருந்து 7 மணிவரை- புதுக்குடியிருப்பு வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் கௌசிகாவின் கட்டிலைச் சுற்றி அவள் பார்க்க விரும்பியவர்கள் நின்றிருந்தனர். அவள் உயிர் வலிக்க வலிக்க தனது இறுதி வார்த்தைகளை மெல்ல மெல்ல உதிர்ந்தாள்.
"அம்மா....நான் மீள முடியாது போல் இருக்கிறது என்னை கட்டிப்பிடிச்சுக்கொண்டு படுங்கோ அம்மா" "தங்கச்சி விலோ...நீ அம்மாவின்ர சொல்லை கேட்டு நடக்க வேணும், நீ ஒருத்திதான் மிஞ்சப்போகின்றாய் கவனம்" "அப்பா நீங்கள் இனிமேல் குடிக்க கூடதப்பா" சிங்களப் படைக்கு முன்னால் மாணவர்களும் எதிரியாச்சு, இனி மாணவர்கள் மாணவராக இருந்தால் போதாது அவன் நினைக்கிற மாதிரியே எதிரியாகவே மாற வேண்டும்" "எங்களை அடித்த கிபிர்களை சுட்டுவிழுத்த வேண்டும்" அம்மம்மா, அன்ரி, சித்தப்பா, மாமா, அப்பப்பா எல்லாரும் எனக்கு சோடா பருக்குங்கோ, அம்மா உன்னை பிரியும் காலம் வருகுது.
என்னை கட்டியணைம்மா..." "எல்லாரும் எனக்கு சோடா பருக்குங்கோ" "அம்மா என்னை கொஞ்சிக்கொண்டு படு அம்மா" "கஜி...தேவாரம் பாடு" "பாய்....பாய்....பா....ய்ய்...இரவு 7.15 மணியளவில் எல்லோருடைய வேண்டுதல்கள், நேர்த்திகள், அழுகைகள் தாண்டி அவள் கையசைப்புடன் அவர்களிடம் இருந்து விடைபெற்றாள்
(ஒகஸ்ட் 14 ஆம் நாள் ஈழத்தின் செஞ்சோலை சிறுவர் இல்ல வளாகத்தில் வதிவிட பயிற்சி நெறியில் ஈடுபட்டிருந்த 52 மாணவிகள் இலங்கையரசின் விமானப்படை விமானங்களால் குண்டு வீசிக் கொல்லப்பட்டனர்)
Posted by
Manuneedhi - தமிழன்
at
11:57 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: நன்றி : கூகிள் குழுமம்
"நமது கொடிவந்த கதை"
The story relating to the different stages and landmarks in the evolution of our national flag is indeed inspiring:The historic dates and landmarks are: - 1906: Three colours: Saffron with eight stars across, white with Vande Mataram and green with moon to right and sun to left. This flag was proposed by some Indians in England and France who thought of an 'Indian National Flag'. Not recognised in India.
- 1916: Two colours: Red and green, with five red and four green stripes. Emblem of Great Bear. Union Jack at top left. In vogue during 'Home rule days'.
- 1921: Three colours: White, green and red, with Charkha across all colours. Sponsored by Mahatma Gandhi at the Bezwada Session of the Indian National Congress (this flag was informally used at all sessions of the Congress till 1931, though not officially accepted/adopted by the Congress).
- March, 1931: One colour: Saffron with Charkha at top left. This flag was proposed by a committee appointed by Working Committee after Karachi Congress. This flag was not approved by Working Committee.
- August, 1931:Three colours: Saffron, white and green, Charkha in blue colour in middle across white strip. Length and breadth in proportion of 3:2. Proposed by Congress Working Committee. Form of Flag suggested by Mahatma Gandhi retained with slight changes in order of colours and position of Chakra. Accepted by AICC officially in Bombay in August 1931.
- August 15, 1947: The present tricolour National Flag was adopted.
Posted by
Manuneedhi - தமிழன்
at
11:22 PM
1 comments (நெற்றிக்கண்)
இடஒதுக்கீடு பகுதி 2
Posted by
Manuneedhi - தமிழன்
at
11:19 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: Courtesy : Indiainteracts
நமது இந்தியா
Posted by
Manuneedhi - தமிழன்
at
1:22 PM
0
comments (நெற்றிக்கண்)
- அமெரிக்க அதிபரின் நெருங்கிய சகா பதவி விலகவுள்ளார்
அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் அவர்களின் நெருங்கிய சகாவும், அவரது அரசியல் யுக்திகளை வகுக்கும் முக்கிய ஆலோசகருமான கார்ல் ரோவ் தனது பதவியை இந்த மாத இறுதியில் இராஜிநாமா செய்யப் போவதாக அறிவித்துள்ளார். - தாலிபான்களால் பிடிக்கப்பட்ட கொரியர்களில் இருவர் விடுதலை
- இராக்கில் அமெரிக்கப் படைகள் புதிய தாக்குதல் நடவடிக்கைகள்... போன்ற செய்திகளைத் தொடர்ந்து ஒலி வடிவில் கேட்கவும் இன்றைய (ஆகஸ்ட் 13 திங்கட்கிழமை 2007) "BBC" தமிழோசைச் செய்திகள் கேட்கவும் இணைப்பில் செல்கhttp://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml?tamil_worldnews
Posted by
Manuneedhi - தமிழன்
at
12:52 PM
0
comments (நெற்றிக்கண்)
இன்றைய குறள்
அன்போ டியைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு
என்போ டியைந்த தொடர்பு
Posted by
Manuneedhi - தமிழன்
at
4:15 AM
0
comments (நெற்றிக்கண்)
Labels: 73 - ம் குறள்
"புத்தாடை உடுப்பவன் போல் மகிழ்ச்சியடைய வேண்டும்"
Posted by
Manuneedhi - தமிழன்
at
4:14 AM
0
comments (நெற்றிக்கண்)
August 12, 2007
60 வது சுதந்திரப் பொன்விழா
Posted by
Manuneedhi - தமிழன்
at
2:04 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: Courtesy : Dinamalar
இன்றைய குறள்
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு
Posted by
Manuneedhi - தமிழன்
at
1:49 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: 72 - ம் குறள்
Posted by
Manuneedhi - தமிழன்
at
1:48 PM
0
comments (நெற்றிக்கண்)
தமிழோசை
Posted by
Manuneedhi - தமிழன்
at
1:41 PM
0
comments (நெற்றிக்கண்)
செவ்வணக்கம் தோழர்களே
மேற்கண்ட பொருளின் தமிழாக்கமும், தொடர்பும் இங்கே தரப்பட்டுள்ளது. சில மணித்துளிகள் செலவிட்டு தமிழர்கள் அனைவரும் தங்களின் உணர்வை வெளிப்படுத்த வேண்டுகிறேன்.
மொழிமற்ற அனுபமின்மையாலும், நேரக்குறைவினாலும் சிலப்பல குறைகள் காணலாம். இதன் ஆங்கில வடிவம் தொடர்பு முகவரியில் காணக்கிடைக்கும்.
------------------------------------------------------
பெறுனர் : சப்பான் அரசு
அனுப்புனர்:
அ.பெ.எண்-991,
சிற்றாத் ஃபீல்டு,
NSW- 2135, ஆசுதிரேலியா.
ஆகசுட்டு - 2007
மான்புமிகு சின்ச்சோ அஃபே,
சப்பான் தலைமை அமைச்சர்.
பிரதிகள்:
திரு.எரிக் சோல்ஃகைம் - அமைச்சர்-அனைத்துலக முன்னேற்றம், நோர்வே,
திரு.ரிச்சர்டு பெலிட்ச்சர் - துணை அமைச்சர், அமெரிக்கா,
திரு. யாசுசி அகாசி, சிறப்புத்தூதுவர், சப்பான்,
திரு.ஆண்ற்றியாசு மைக்கேலிசு, பொது இயக்குனர், அய்ரோப்பிய ஒன்றிய சனாதிபதியம்,
திரு.சேம்சு மோர்ரன், இணைப் பொது இயக்குனர், அய்ரோப்பிய ஒன்றியம்.
மதிப்புயர் தலைமை அமைச்சர் அவர்களுக்கு,
இலங்கைத் தமிழர்கள் மீதான வன்படுகொலைகள் மற்றும் மனித உரிமை மீறல்கள்.
AHRV என்பது ஆசுதிரேலியாவில் பதிவு செய்யப்பட்ட பேச்சுரிமையற்றவர்களாகவும், தங்களுக்கென போராடும் சக்தியற்றவர்களாகவும் உள்ள பாதிக்கப்பட்ட மக்களுக்காக வாதாடும்/போராடும் அமைப்பாகும். இக்கடிதம் இலங்கையில் படுகொலை மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு உள்ளாக்கப்படும் இலங்கைத் தமிழர்களைக் குறித்தானது.
சுதந்திர தமிழர் வாழ்விடத்திற்க்காக போராடும் விடுதலை புலிகளுக்கும் இலங்கை அரசிற்கும் இடையே தொடர்ந்து நடைபெற்று வரும் ஆயுதப்போராட்டம் தாங்கள் அறிந்த்தே.
கடந்த இரண்டு ஆண்டுகளாக தங்களின் பிரதிநிதி திரு. யாசுகி அகாசி அவர்கள் பலமுறை இலங்கைக்குச் சென்று இருதரப்பிற்கும் இடையே சமாதானம் ஏற்ப்படுத்தும் முயற்ச்சி தோல்வியில் முடிவது அறிந்த்தே. இம்முயற்ச்சிகளுக்கு எங்களின் நன்றி, மேலும் தொடர்ந்து மிகுந்த விருப்பத்தோடு செய்துவரும் பணிக்களுக்கு நாங்கள் மிகவும் கடைமமைபபட்டுள்ளோம்.
அதிபர் ராசபக்சே பதவியேற்றப்பின் தமிழர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள், சிம்பாவேயில் அதிபர் முகாபேயும், ஈராக்கில் அதிபர் சதாமும் செய்ததற்கு இணையானதாகும்.
தமிழர்கள் பாதுகாப்போடும், தன்மானத்துடனும் அவர்களின் சொந்த மண்ணிலே கூட வாழமுடியாமல், அதிபர் ராசபக்சேவினால் திட்டமிட்டும், தீவிரமாகவும் படுகொலைகள் செய்யப்படுவதாக நாங்கள் நம்புகின்றோம்.
வான்வழி தாக்குதல்களாலும், நீதியற்ற முறையிலும், கடத்திக் கொண்டு செல்லப்பட்டும், மன உளைச்சலை ஏற்ப்படுத்தியும், உடல் வழியாகவும் தமிழர்களுக்கு எதிராக மனித உரிமை மீறல்கள் தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்டு வருகிறது.
மாணவர்கள், பத்திரிக்கையாளர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் வாயை அடைப்பதற்க்காக அவர்கள் கொல்லப்படுகின்றனர்.
வழிபாட்டுத்தலங்கள் மீது தாக்குதல், உணவு மற்றும் மருந்துப் பொருள்களின் பறிமற்றம், வினியோகம் தடை செய்யப்பட்டுள்ளது, தமிழர்கள் தம் சொந்த வீட்டிலிருந்தும் மண்ணிலிருந்தும் விரட்டப்படுகின்றனர். அவர்கள் உயிர் வாழத்தேவையான அனைத்தும் மறுக்கப்படுகிறது. குழந்தைகளுக்கு கல்வி மறுக்கப்படுகிறது. கல்விச்சாலைகளும் வழிபாட்டுத்தலங்களும் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
உள்நாடு மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்த தொண்டு புரியும் ஊழியர்கள் கடத்திச் செல்லப்பட்டும், கொல்லப்பட்டும் உள்ளனர். தமிழர் பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்ட தமிழர்களை சந்திக்கவும் இவர்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளது.
இலங்கை விடுதலைப்பெற்ற பின் 35 ஆண்டுகளாக சிறுபான்மைத் தமிழர்கள் தங்கள் உரிமைக்காக பல்வேறு அமைதிப்போராட்டங்களை நடத்தியும், நல்ல தீர்வு கிடைக்காததாலேயே கடந்த 25 ஆண்டுகால ஆயுதமேந்திய போராட்டம் தொடர்கிறது.
பல்வேறு உடன்பாட்டை தமிழ் அரசியல் கட்சிகள் மதிது ஏற்றுக்கொண்டபோதிலும், பெரும்பாண்மை சிங்களர் அரசுகள் அவற்றை மதிது நடந்ததில்லை.
சமீபத்தில், பல்வேறு உலகலாவிய மனித உரிமை அமைப்புகளும், அரசுகளும் இலங்கை அரசின் தீவிரவாத ஆதரவுப்போக்கினை கண்டித்துள்ளன,
சப்பானைத் தவிர்த்த நாடுகள் ஒன்றினைந்து இலங்கைக்கான பொருளாதார உதவியை நிறுத்திவைத்துள்ளன். இலங்கையானது தங்களது போர்த் தேவைகளுக்கு வெளிநாட்டு உதவியை எதிர்பார்த்தே உள்ளது. அரசாங்கம் நடத்திவரும் தமிழர்களுக்கெதிரான படுகொலைகு உதவிட ஏனைய பிற பொருளாதாரத்தை திருப்பிவிட ஏதுவாக வெளிநாட்டு உதவிகள் அமைந்துள்ளது. எனவே, இலங்கைக்கு சப்பான் செய்யும் உதவியானது தமிழர்களுக்கு எதிரான படுகொலைக்கும் போருக்கும் உதவிட்டதாகவே அமையும்.
மேலும் கடந்த 5 ஆண்டுகளில் தங்கள் அரசாங்கம் மிகப் பெருமளவிலான பொருளாதார உதவியை இலங்கை மக்கள் வாழ்வியல் முன்னேற்றத்திற்க்காக அளித்துள்ளது அனைவரும் அறிந்த்தே. இவ்வுதவியானது வடகிழக்குப் பகுதிகளுக்கும் சம அளவில் உதவியிருக்கும் என்ற தங்களின் எதிபார்ப்பு இயற்க்கையானதே.
ஆனால், மிகச்சொற்ப அளவிலேயே தமிழர்கள் வாழும் பகுதிகளுக்கு உதவி செய்யப்பட்டுள்ளது என்பதை எங்களால் உறுதியாகக் கூறமுடியும். புவியமைப்படியிலான உதவி செய்த வரவு செலவு கணக்குகளை இலங்கை அரசிடமிருந்து பெறப்படுமானால் இதை எங்களால் நிரூபிக்க முடியும்.
இலங்கை அரசின் இத்தைகைய மோசமான மனித உரிமை மீறல்களை நிறுத்தும் வரை, பிற நாடுகள் செய்தது போல, தங்கள் அரசும் இலங்கைக்கு வழங்கிவரும் அனைத்து உதவிகளையும் நிறுத்தி வைக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.
மேலும், இலங்கை அரசானது அதிகரித்து வரும் மனித உரிமை மீறல்களை அர்த்தமுள்ள நேர்மையான நடவடிக்கையின் மூலம் நிறுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி.
ஒப்பம். இதை ஆதரிக்கும் தனிமனிதர்களும் சங்கங்களும்
உணமையுள்ள,
ஒப்பம்.
தொடர்பு : http://www.petitiononline.com/GLOBE/petition.html
Posted by
Manuneedhi - தமிழன்
at
12:54 AM
0
comments (நெற்றிக்கண்)
Labels: (நன்றி: தமிழ்நாடன், முத்தமிழ் குழுமம்)
August 11, 2007
இட ஒதுக்கீடு பற்றிய பதிவு பகுதி 3
Posted by
Manuneedhi - தமிழன்
at
1:18 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: Courtesy : Indiainteracts
இன்றைய குறள்
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புண்கணீர் பூசல் தரும்
Posted by
Manuneedhi - தமிழன்
at
12:57 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: 71 - ம் குறள்
Posted by
Manuneedhi - தமிழன்
at
12:54 PM
0
comments (நெற்றிக்கண்)
தமிழோசை
Posted by
Manuneedhi - தமிழன்
at
12:52 PM
0
comments (நெற்றிக்கண்)
August 10, 2007
நான் பாமரன்..முரட்டுத்தனமானவன்.. கஞ்சா கருப்பு
பல தீபாவளிகள் தன் வறுமையால் கொண்டாட முடியாமல் போனதுண்டாம். "என் கஷ்டம் என்னோடு போகட்டும் எல்லாரும் சந்தோசமா இருக்கணும். எனக்கு கஷ்டம் வர்றப்ப நான் நினைப்பது என்ன தெரியுமா என் கஷ்டம் இனி யாருக்கும் வரக்கூடாதுன்னுதான்" என்கிற கருப்புவை இயக்குனர் பாரதிராஜா அழைத்து ராம் பட நடிப்பை ஒரு மணிநேரம் பாராட்டினாராம். அதுமட்டுமல்ல பதினாறு வயதினிலே படத்தில் ரஜினிக்கு கொடுத்த பரட்டை ரோல் மாதிரி உனக்கு ஒன்று தர்றேண்டா என்று வாக்கு கொடுத்திருக்கிறாராம். சொல்லும் போதே வாயெல்லாம் பல்லாகிறது கருப்புக்கு. இவரது பெயர் கருப்புராஜா. ராம் படம் மூலம் கஞ்சா கருப்பு ஆனார். சொந்த ஊர் சிவகங்கை. சினிமா ஆர்வம் உந்தித்தள்ள ஊரில் பொறுப்பற்று திரிந்து கொண்டிருந்தவரை சென்னைக்கு அழைத்து வந்தவர் பாலா. பிதாமகன் படத்தில் திரை தரிசனம். அமீரோ ராம் மூலம் அழுத்தமாக அடையாளம் காட்டினார். அதன் பின் மளமளவென படங்கள் வரவே பதினைந்தை தாண்டிவிட்டார் எண்ணிக்கையில். கருப்பை கேட்டால் எனக்கு எண்ணிக்கை முக்கிதமில்லண்ணே கொஞ்ச நேரம் வந்தாலும் சனங்க மனசுல நிக்கனுமிண்ணே" என்கிறார். தொடாந்து படியுங்கள்... http://www.webulagam.com/cinema/vip/0610/14/1061014002_1.htm
Posted by
Manuneedhi - தமிழன்
at
1:11 PM
1 comments (நெற்றிக்கண்)
Posted by
Manuneedhi - தமிழன்
at
1:09 PM
0
comments (நெற்றிக்கண்)
இன்றைய குறள்
மகன் தந்தைக் காற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்லெனும் சொல்
"ஆகா! இவனைப் பிள்ளையாகப் பெற்றது இவன் தந்தை பெற்ற பெறும்பேறு" என்று ஒரு மகன் புகழுப்படுவதுதான், அவன் தன்னுடைய தந்தைக்குச் செய்யக்கூடிய கைம்மாறு எனப்படும்
Posted by
Manuneedhi - தமிழன்
at
12:55 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: 70 - குறள்
இந்தியர் வளர்ச்சியும், கறுப்பினத்தவர் கசப்பும்
இந்த வளர்ச்சி பெரும்பான்மை கறுப்பின மக்கள் மத்தியில் தவறான அபிப்பிராயங்களைத் தோற்றுவித்தது. இந்தியர்கள் தம்மைச் சுரண்டி வாழ்கிறார்கள் என்று அவர்கள் எண்ண ஆரம்பித்தனர். இந்த எண்ணத்துக்கு வெள்ளை இன நிறவேற்றுமை அரசு எண்ணெயூற்றியது.
கடைசியில் 19949இல் கறுப்பின மக்களுக்கும் இந்தியருக்கும் இடையில் பெரும் கலவரம் மூண்டது. அதில் பல இந்தியர் கொல்லப்பட்டனர். சொத்துக்கள் சூறையாடப்பட்டதுடன் தீக்கிரையாக்கப்பட்டன. இந்தியப் பெண்ணெருத்தியின் வயிறு கிழிக்கப்பட்டு அதற்குள் பால்மா டின்கள் அடைக்கப்பட்டன.
கலவரம் முடிந்ததும் இரு தரப்புத் தலைவர்களும் ஒன்று சேர முற்பட்டனர். இதை வெள்ளையரின் நிறவேற்றுமை அரசு விரும்பவில்லை. சட்ட ரீதியாக நிற வேற்றுமையைத் திணிக்கத் தொடங்கியது. இந்திய வம்சாவழியினர் வாழ்ந்த இடங்களை விட்டு, வீடு வாசல், வியாபாரங்களை விட்டு அகற்றப்பட்டு வேறு இடத்தில் குடியேற்றப்பட்டனர். சட்டத்தின் மூலம் ஏற்படுத்தப்பட்ட இனப் பாகுபாடு சிறியவர் முதல் பெரியவர் அனைவரையும் பாதித்தது.
கறுப்பினத் தலைவர்களும், இந்தியத் தலைவர்களும் விழிப்புணர்வு பெற்று வெள்ளையரின் நிறவேற்றுமை ஆட்சிக்கு எதிராகக் கைகோர்த்து உரிமைப் போர் நடத்தத் தொடங்கினர். இப்படிப் பல பேராட்டங்களைக் கண்டு தென்னாப்பிரிக்கத் தலைவர்கள் நெல்சன் மன்டேலா, வால்டர் சிசிலு ஆகியோருடன் சிறை சென்ற இந்தியரான அகமத் கத்ரடாவும் இந்த நிகழ்ச்சியில் பேசுகிறார். http://www.bbc.co.uk/tamil/highlights/story/2004/11/041030_safrica.shtmlமேலும் தொடர்ந்து இன்றைய (ஆகஸ்ட் 10 வெள்ளிக்கிழமை 2007) "BBC" செய்திகள் கேட்க கீழுள்ள இணைப்பில் செல்க
Posted by
Manuneedhi - தமிழன்
at
11:38 AM
0
comments (நெற்றிக்கண்)
Labels: Courtesy : BBC "Tamilosai"
உதவும் கைகளும் கால்களும்
பிச்சைக்காரனுக்கு ஒரு ரூபாய் போடுவது, கோவில் உண்டியலில் பணம் போடுவது, திருப்பதியில் கால் கடுக்க வரிசையில் நின்று மொட்டை போடுவது என எதையாவது செய்து பாவங்களைப் போக்கவும், நிம்மதியை நாடவும் முயற்சிக்கிறோம். ஆனாலும், உலகம் survival of the fittest என்ற டார்வின் நியதின் அடிப்படையிலேயே இயங்குகிறது. அவனவனுக்கு வேண்டியதை அவனவன்தான் செய்துகொள்ள வேண்டும்; யாரும் யாரையும் தூக்கிவிடுவது இயற்கைக்குப் புறம்பானது என்பது எழுதப்படாத விதியாகவே இருந்து வந்திருக்கிறது.
உதவுவதற்கான மனம் இருந்தாலும் பல பேருக்கு சூழ்நிலை அனுமதிப்பதில்லை. சுருக்கமாகச் சொன்னால்.. "காசு பணம் வேண்டுமானால் தரலாம். ஆனால், நம்முடைய நேரத்தை ஒதுக்கி சமூக சேவையில் ஈடுபட முடியாது" என்ற நிலைமை. இருந்தாலும், காசு கொடுத்தால் சரியாக, நேர்மையாகக் கையாண்டு வேலை செய்வார்களா என்ற சந்தேகம்
தவிர்க்க இயலாதது. சேவையை மட்டுமே மனதில் கொண்டு தம்முடைய வாழ்க்கையையின் முன்னேற்றத்தைக் காட்டிலும் பிறருக்காக நேரம் செலவிடும் மனிதர்களால் நடத்தப்படும் அமைப்புகளைப் பற்றிய செய்தி நம்மை வந்தடையாமலே நின்றுவிடுகிறது. ஒரு வேளை அவை தெரிய வந்தால் நமது பணமும், அவர்களது நேரமும் ஒன்றாகச் சேர்ந்து
சமுதாயத்திற்கு உதவட்டும் என நினைப்போம்.
அப்படிப்பட்ட அர்ப்பணிப்பு உணர்வுள்ள இரண்டு மனிதர்களைப் பற்றிய அறிமுகமே இந்தப் பதிவு.
முதலாமவர் தமிழர்.
கால்களும் பாதிக்கப்பட்டு சக்கர நாற்காலியில் சுழல்கிற மனிதர்.
இவர் கடந்து வந்த பாதை சாதாரணமானதல்ல. தமிழ்நாடு ஊனமுற்றோர் மறுவாழ்வுக்கான அமைப்பு ஒன்றை 'Tamil Nadu Handicapped Federation Charitable Trust' என்ற பெயரில் நிறுவி அதன் தலைவராக இருந்து வருகிறார். வறுமையில் வாடும் ஊனமுற்றோருக்கு வேண்டிய சக்கர நாற்காலி, தையல் இயந்திரம் முதலிய உதவிகளை இந்த அமைப்பு செய்துவருகிறது. மேலதிக விவரங்களுக்கு கீழுள்ள சுட்டியைக் காணுங்கள்.
http://www.tnhfctrust.in/home.htm
http://www.chennaionline.com/health/hopeislife/08life10.asp
மிகுந்த தன்னம்பிக்கை அளிக்கிறது இவரது கதை. ஊனம் என்பது தடையல்ல என்பதை உணர முடிவதோடு ஒரு தனி மனிதனால் இவ்வளவு செய்ய முடியுமா என்றும் மலைப்பு உண்டாகிறது.
இந்த அமைப்பு செய்து வரும் பணிகளை நேரில் பார்வையிடவோ அல்லது தொலைபேசி மூலம் கேட்டுத் தெரிந்து கொள்ளவோ விரும்பினால் கீழ்க்கண்ட முகவரியை அணுகலாம்.
TAMILNADU HANDICAPPED FEDERATION CHARITABLE TRUST
NO.21 AA,
Earikarai Salai,
Kottur,Chennai - 600 085.
Tamilnadu, India
Ph : + 91 44 - 32927664
Fax : + 91 44 – 24405584
உங்களுடை நேரத்தையோ அல்லது பணத்தையோ இவர்களுக்காக சற்று ஒதுக்க முடியுமென்றால் மகிழ்ச்சி.
இரண்டாமவர் பெங்காளி.
பயிற்சி எடுத்து அந்தச் சிக்கலில் இருந்து விடுபட்டவர். "Stammering is not a
disease, it is a habit, bad habit indeed" என்று தனது சொந்த அனுபவத்தில் கூறுகிற இந்த மனிதர் தனக்கு உதவிய டெக்னிக் எல்லாவற்றையும் ஒன்றாகத் திரட்டி பிற திக்குவாயர்களுக்குப் பயிற்சி அளித்து வருகிறார். இது குறையே கிடையாது. சராசரி மனிதனின் மூளையை விட வேகமாகச் சிந்திக்கும் மூளை சிலருக்கு அமைந்து விடுவதுண்டு. காட்டாறு போன்ற அந்த எண்ணத்தை வேகமாகக் கொட்டி விரைவாகப் பேசி முடிக்க நினைக்கிறவர்களுக்கு சிந்தனை-பேச்சு இரண்டும் வெவ்வேறு வேகத்தில் அமைந்து பேச்சில் தடுமாற்றத்தைத் தருகிறது என்கிறார். இது மருந்து மாத்திரைகளால் குணப்படுத்துவதற்கு வியாதியல்ல. மாறாக, மனவியல் சார்ந்த பிரச்சினை என்கிறார். இரண்டு வாரம் பெங்களூரில் தங்கி இவரது வகுப்புகளில் பங்கெடுத்தால் நிச்சயமான முன்னேற்றம் ஏற்படும். அதற்கு மேலும் சுயமாக பயிற்சி தொடர வேண்டும். After all, old habits die hard.
மேலதிக விவரங்களுக்கு. http://www.stammeringcurecentre.com
இந்த இரண்டு மனிதர்களையும் காணும் போது ஒன்று நமக்குப் புரிகிறது. குறைபாடு என்ற ஒற்றைக் காரணத்தினால் துவண்டு போகாமல், தமது சொந்த வாழ்க்கையைச் செம்மையாக அமைத்துக்கொண்டதோடு நின்று விடாமல், மற்றவர்களுக்கும் வழி காட்டுகின்றனர். இரண்டு பேருக்குமே ஆதரவான வாழ்க்கைத் துணை கிடைத்ததுதான் அவர்களுக்கு பெரும்
ஊக்க சக்தியாக இருந்து இயக்குவிக்கிறது என நான் கருதுகிறேன். தன்னை நிரூபித்தாக வேண்டிய கட்டாயம் இல்லாமல் கிடைக்கக் கூடிய நிபந்தனையற்ற அன்புக்கும், ஆதரவுக்கும், காதலுக்கும் அத்தகைய மகத்தான சக்தி இருக்கிறது. அந்த வகையில், உடல் ரீதியாக குறைபாடு இல்லாத எத்தனையோ பேர் மனதளவில் ஊனப்பட்டுக் கிடக்கிறார்கள் என்றே தோன்றுகிறது.
இந்தப் பதிவினைக் காண நேரிடுகிறவர்களுக்கு சில வேண்டுகோள்கள்.
1. உதவ மனமும், பணமும் உள்ளவர்கள் திரு. சிதம்பரநாதன் அவர்கள் நடத்தும் அமைப்பைத் தொடர்பு கொள்ளவும். அல்லது அது பற்றிய தகவலை பிறருக்குத் தெரியப்படுத்தவும்.
2. உங்களுக்குத் தெரிந்தவர்கள் யாராவது பதட்டமாக தடுமாறிப் பேசினால் அவர்களிடம் Stammering Cure center குறித்து பக்குவமாகத் தெரியப்படுத்துங்கள். இந்தியா முழுவதும் இரண்டு கோடி திக்குவாயர்கள் உள்ளதாக சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
3. இனிமேல் சினிமாவில் ஊனமுற்றவர்கள், அரவாணிகள், திக்குவாயர்கள், சொட்டைத் தலையர்கள் பற்றிய ஜோக் எதாவது வந்தால், குறைந்த பட்சம் ஒரு தடவையாவது சிரிக்காமல் இருக்க முயன்று பாருங்கள்.
Posted by
Manuneedhi - தமிழன்
at
1:36 AM
0
comments (நெற்றிக்கண்)
Labels: நன்றி:karaiyoram
August 09, 2007
உங்கள் குழந்தைகளிடம் செக்ஸ் பற்றிப் பேசியிருக்கிறீர்களா?
Posted by
Manuneedhi - தமிழன்
at
9:10 PM
0
comments (நெற்றிக்கண்)
"மாறன் பிரதர்ஸ்"
Posted by
Manuneedhi - தமிழன்
at
8:51 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: Courtesy : Indiainteracts
இன்றைய குறள்
ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்
Posted by
Manuneedhi - தமிழன்
at
1:56 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: 69 - ம் குறள்
Posted by
Manuneedhi - தமிழன்
at
1:47 PM
0
comments (நெற்றிக்கண்)
தமிழோசை
- இட ஒதுக்கீடு தொடர்பாக தொடர்ந்து இந்திய உச்ச நீதிமன்றத்தில் விசாரணை
- மடுமாதா ஆலயத்திற்கான மடுக்கோவில் வீதி திறக்கப்படமாட்டாது என அறிவிப்பு
- சர்வதேச தன்னார்வப் பணியாளர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கான சேவைகளை வழங்க இலங்கை உத்தரவாதம்
- இலங்கையின் கிழக்கே மிதிவெடிகள் குறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகள்.... தொடர்ந்து இன்றைய (ஆகஸ்ட் 09 வியாழக்கிழமை 2007) "BBC" தமிழோசை செய்திகள் கேட்க இணைப்பில் செல்க..http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml?tamil_worldnews
Posted by
Manuneedhi - தமிழன்
at
1:41 PM
0
comments (நெற்றிக்கண்)
August 08, 2007
இன்றைய குறள்
தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது
Posted by
Manuneedhi - தமிழன்
at
11:58 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: 68 - ம் குறள்
Posted by
Manuneedhi - தமிழன்
at
11:55 PM
0
comments (நெற்றிக்கண்)
தமிழோசை
Posted by
Manuneedhi - தமிழன்
at
11:44 PM
0
comments (நெற்றிக்கண்)
புதிதாக வரப்போகும் டாடாவின் டைட்டேனியம் டை ஆக்ஸைடு தொழிற்சாலை பற்றிய ஒரு கண்ணோட்டம்
Posted by
Manuneedhi - தமிழன்
at
2:16 AM
0
comments (நெற்றிக்கண்)
Labels: Courtesy : Indiainteracts
Part II
Posted by
Manuneedhi - தமிழன்
at
2:09 AM
0
comments (நெற்றிக்கண்)
Labels: Courtesy : Indiainteracts
August 07, 2007
- 'நான்' எங்கிருந்து வருகிறேன்?
- 'நான்' எதனை நோக்கிப் பயணிக்கிறேன்?
- இந்த 'முதலுக்கும்' 'முடிவுக்கும்' இடையில் 'நான்' யார்?
- எத்தனை கல்பகாலத்திற்கு 'நான்'?
- விரஹத்தில் உழல்வது மட்டுமே இந்த 'நான்' லீலைகளின் பிரதானமா?
- பிரளயமற்றவனா?
- முடிவென்பதில்லையா?
- அனந்த சயனமற்ற உயிரா 'நான்'?
- 'பிறவி பற்றிய பிரக்ஞையற்று என்னை 'நீ' 'சுமந்து செல்கிறாய்.
- உன் எண்ணம், பார்வை, குரல், இயக்கம் அனைத்தும் நான். நீ விழும்போது விழுந்து எழும்போது எழுந்திருக்கிறேன். ம்..
- 'நீ ' ஓடுவது எதற்காகவென்றும் எனக்குப் புரிகின்றது.
- ஜீவாத்மாவில் பாசி படிந்துவிடக்கூடதென்கின்ற அக்கறை
அசட்டுப்பிள்ளையே! உன் பாதை முழுக்க பாசியாகவுள்ளதை அறிவதெப்போது? என்னைத் துலக்க நீ துலங்கியாகவேண்டும். துலக்க உதவும் பொருட்களுக்கா பஞ்சம்? கொஞ்சம் முனைப்பு வேண்டும். 'நாம் இருவருமே பிரம்மத்தின் கூறுகள்.. நிலையற்ற இன்பங்கைளைத் தேடி பிறவிகளின் எண்ணிக்கையைக் கூட்டிக் கொள்ளாதே. ஞானம் பெறு! கட்டுகளை விலக்கு! உண்மை இன்பம் விளங்கும். கேட்டல், சிந்தித்தல், தெளிதல் செயற்பாடுகளில் எனக்கு முத்தி கொடு. எல்லாம் பிரம்மம் எனபதை 'நீ' அறிவாயாக!
- நீலக்கடல்
நாகரத்தினம் கிருஷ்ணா
Posted by
Manuneedhi - தமிழன்
at
4:35 PM
0
comments (நெற்றிக்கண்)
இன்றைய குறள்
தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்
Posted by
Manuneedhi - தமிழன்
at
11:10 AM
0
comments (நெற்றிக்கண்)
Labels: 67 - ம் குறள்
தமிழோசை
இன்றைய (ஆகஸ்ட் 07, செவ்வாய்க்கிழமை) "BBC" செய்திகள் கேட்க இணைப்பில் செல்க http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml?tamil_worldnews
Posted by
Manuneedhi - தமிழன்
at
11:08 AM
0
comments (நெற்றிக்கண்)
August 06, 2007
இன்றைய குறள்
குழலினி தியாழினி தென்பதம் மக்கள்
மழழைச்சொல் கேளா தவர்
Posted by
Manuneedhi - தமிழன்
at
8:10 PM
1 comments (நெற்றிக்கண்)
Labels: 66 - ம் குறள்
கீதோபதேசத்தின் துவக்கம் இது தான்.
Posted by
Manuneedhi - தமிழன்
at
8:04 PM
0
comments (நெற்றிக்கண்)
தமிழோசை
Posted by
Manuneedhi - தமிழன்
at
11:02 AM
0
comments (நெற்றிக்கண்)
| Powered by eSnips.com |
Posted by
Manuneedhi - தமிழன்
at
1:08 AM
0
comments (நெற்றிக்கண்)
Labels: Courtesy : itsdiff.com
August 05, 2007
'நிலாச்சாரல்' இணைய சஞ்சிகைக்காக டாக்டர் அலர்மேலு ரிஷி அவர்களை நான் எடுத்த செவ்வி
Posted by
Manuneedhi - தமிழன்
at
10:32 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: நன்றி : நிலாச்சாரல்
சென்னையிலிருந்து மும்பைக்கு ஆட்டோவில் பயணம்!
76 ஆட்டோ ரிக்ஷாக்கள் ஹங்கேரி, பல்கேரியா, அமெரிக்கா, லண்டன் போன்ற 8 நாடுகளிலிருந்தும் இந்தியாவிலிருந்து 2 பேரும் சென்னையிலிருந்து மும்பைக்கு சுமார் 1921 கி.மீ. தூரம் 3 மாநிலங்களின் வழியாகச் செல்கின்றனர். சமூக சேவையை கருத்தில்கொண்டு நடைபெறுகிறது. நோட்டுப்புத்தகங்கள் வழங்குதல், கிராம மக்களிடம் நெருங்கிப்பழகுதல் போன்றவை இந்தப்பயணத்தில் குறிப்பிடத்தக்கது. பாராட்டுக்கள்!
Posted by
Manuneedhi - தமிழன்
at
1:56 PM
0
comments (நெற்றிக்கண்)
தமிழோசை
- இராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தம்
- அகதிகளாக வந்த 19 பேர் இராமேஸ்வரத்திலிருந்து தப்பி மன்னார் சென்றுவிட்டனர்
- புலம் பெயர்ந்த இலங்கைத்தமிழர்கள் லண்டனில் நாடகம்
- பீகார் மாநிலத்தில் வெள்ளம் காரணமாக ஒரு கோடிக்கு மேல் மக்கள் இடம் பெயர்வு
- ஏராளமானோர் வீடிழந்தனர்
- பலி எண்ணிக்கை உயர்வு போன்ற
- இலங்கையின் மன்னார் மாவட்டத்தில் விடுதலைப் புலிகளின் பிரதேசத்தில் உள்ள மடுக்கோவிலின் ஆகஸ்ட் மாதத் திருவிழாவையொட்டி, ஒரு வருடகாலமாக மூடப்பட்டிருந்த நேரடியாகச் செல்லும் வீதி வரும் 10 ஆம் திகதி முதல் திறக்கப்படவுள்ளது போன்ற
இன்றைய (ஆகஸ்ட் 05 ஞாயிற்றுக்கிழமை 2007) "BBC" கேட்க செய்திகள் இணைப்பில் செல்க http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml?tamil_worldnews
Posted by
Manuneedhi - தமிழன்
at
1:32 PM
0
comments (நெற்றிக்கண்)
இன்றைய குறள்
மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு
Posted by
Manuneedhi - தமிழன்
at
12:49 AM
0
comments (நெற்றிக்கண்)
Labels: 65 - ம் குறள்
Posted by
Manuneedhi - தமிழன்
at
12:30 AM
0
comments (நெற்றிக்கண்)
இந்திய மற்றும் தமிழகச் சாலைகள் பற்றிய ஒரு அலசல்
Posted by
Manuneedhi - தமிழன்
at
12:30 AM
0
comments (நெற்றிக்கண்)
Labels: Courtesy : Indiainteracts
இட ஒதுக்கீடு பற்றிய ஒரு பார்வை
Posted by
Manuneedhi - தமிழன்
at
12:28 AM
0
comments (நெற்றிக்கண்)
Labels: Courtesy : Indiainteracts
பொருளாதார வளர்ச்சிபற்றிய ஒரு ஆய்வு
Posted by
Manuneedhi - தமிழன்
at
12:25 AM
0
comments (நெற்றிக்கண்)
Labels: Courtesy : Indiainteracts
Posted by
Manuneedhi - தமிழன்
at
12:19 AM
0
comments (நெற்றிக்கண்)
இன்றைய குறள்
அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ்
Posted by
Manuneedhi - தமிழன்
at
12:13 AM
0
comments (நெற்றிக்கண்)
Labels: 64 - ம் குறள்
August 04, 2007
மரணதண்டனை அல்லது தூக்குத்தண்டனை தேவையா?
250 பேரை குண்டு வைத்து கொன்ற கொலைகாரனுக்கு..தூக்கு தண்டனை கொடுப்பது தவறா?...அதை எப்படிகொடூரத்தின் உச்சம் என்று சொல்ல முடியும்??..ஒரு நரகாசுரனைக் கொன்று மக்கள் உயிர்களைக் காப்பாற்றியதாகத்தான் கருதப்படவேண்டும்..
நன்றியுடன் : சம்பத் (ஆதியக்குடியான்) - சவூதி அரேபியா
அதாவது சமீபத்தில் நான் படித்த ஒரு ஆராய்ச்சிக்குறிப்பொன்று, "மரணதண்டனையின் மூலமாக குற்றங்கள் குறைவதாகத் தெரிவிக்கிறது".
ஆனாலும் குற்றம் புரிந்த அந்தக் குற்றவாளி திருந்தி வாழ ஒரு வாய்ப்புக் கொடுக்கும் பட்சத்தில், இந்த அற்புதமான மனிதப் பிறவியை அவன் வாழ்ந்துவிட்டுப் போகட்டுமே என்ற மனிதாபிமானம் மேலோங்கி நிற்பதால்தான் மரணதண்டனை வேண்டாம், அதனைக்குறைந்தபட்சம் ஆயுள் தண்டனையாகவாவது மாற்றி, நடந்த தவற்றை உணரவைக்கலாம் என்பது இந்தச் சிறியேனின் தாழ்மையான கருத்து என்பதை இங்கே சொல்லிக்கொள்ள நினைக்கிறேன்.
Posted by
Manuneedhi - தமிழன்
at
2:42 PM
0
comments (நெற்றிக்கண்)
தமிழோசை
Posted by
Manuneedhi - தமிழன்
at
2:28 PM
0
comments (நெற்றிக்கண்)
இன்றைய குறள்
தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்
தந்தம் வினையான் வரும்
Posted by
Manuneedhi - தமிழன்
at
2:24 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: 63 - ம் குறள்
து(ப்)பாய்!!?
| து(ப்)பாய்.pps |
| Hosted by eSnips |
Posted by
Manuneedhi - தமிழன்
at
3:42 AM
0
comments (நெற்றிக்கண்)
பழ.நெடுமாறன் வேண்டுகோள்!
கோவை வெடிகுண்டு வழக்கில் விடுதலை செய்யப்பட்ட கேரள மக்கள் ஜனநாயகக் கட்சியின் நிறுவனர் மதானிக்கு நஷ்டஈடு வழங்கவேண்டும் என்று தமிழர் தேசியஇயக்கத்தலைவர் பழ.நெடுமாறன் வேண்டுகோள் விடுத்துள்ளார். கோவை வெடிகுண்டு வழக்கில் கேரள மக்கள் ஜனநாயகக் கட்சியின் நிறுவனர் மதானி மீதான ஐந்து குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்படவில்லை. அவர்மீது பொய்யான குற்றம்சாட்டிய அதிகாரிகள் அவர்களுக்குப் பின்னால் இருந்து இயக்கிய அரசியல்வாதிகள் ஆகியோர் இப்போது மக்கள் மன்றத்திற்கு முன்னால் தலைகுனிந்து நிற்கவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. பொய்வழக்கு தொடர்ந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கையை தமிழக அரசு எடுக்கவேண்டும். அப்போதுதான் எதிர்காலத்தில் இதுபோன்ற பொய் வழக்குப்போடும் போக்குக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். மதானிக்கு தகுந்த நஷ்டஈட்டை வழங்கவேண்டியது தமிழக அரசின் கடமையாகும் என்று பழ.நெடுமாறன் நேற்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
Posted by
Manuneedhi - தமிழன்
at
12:11 AM
0
comments (நெற்றிக்கண்)
Labels: நன்றி : Yahoo Group


