August 19, 2007

அறுசுவை உணவு என்றால் என்னவென்று தெரியுமா?

பழங்கால இந்திய மருத்துவங்களும், ஆயுர்வேதமும் நா அறியக்கூடிய சுவைகளை ஆறு வகைகளாகப் பிரிக்கின்றன. ஆயுர்வேதம், உடலின் ஆறு முக்கிய தாதுக்களுடன் இச்சுவைகளைச் சம்பந்தபடுத்தி, உடல் வளர்ச்சியில் இச்சுவைகளின் பங்குகளை விளக்குகின்றது. இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு, கசப்பு, கார்ப்பு மற்றும் துவர்ப்பு ஆகிய இந்த ஆறுசுவைகளின் பண்புகளையும், உடல் நலத்திற்கு இவற்றின் பங்குகளைப் பற்றியும் சற்று விரிவாய் பார்க்கலாம்.
தொன்றுதொட்டு பழக்கத்தில் இருந்து வரும் இந்திய மருத்துவங்களாகிய ஆயுர்வேதம், சித்த மருத்துவம் போன்றவற்றில் சுவைகள் ஆறு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. உடலானது ரத்தம், தசை, கொழுப்பு, எலும்பு,நரம்பு, உமிழ்நீர், மூளை ஆகிய ஏழு முக்கிய தாதுக்களைக் கொண்டது என்பதனால் உடலை "யாக்கை" என்று கூறினர். இதில் ஏழாவது தாதுவான மூளை சரிவர இயங்க முதல் ஆறு தாதுக்கள் தகுந்த அளவில் இருத்தல் அவசியம். இந்த ஆறு தாதுக்களும், ஆறு சுவைகளுடன் கீழ்கண்டவாறு சம்பந்தப்பட்டுள்ளன.
துவர்ப்பு - இரத்தத்தைப் பெருக்குகின்றது
இனிப்பு - தசையை வளர்க்கின்றது
புளிப்பு - கொழுப்பினை வழங்குகின்றது
கார்ப்பு - எலும்புகளை வளர்க்கின்றது
கசப்பு - நரம்புகளை பலப்படுத்துகின்றது
உவர்ப்பு - உமிழ்நீரைச் சுரக்கச் செய்கின்றது
அந்த கால மருத்துவங்களும், உணவு முறைகளும் இதனை அடிப்படையாகக் கொண்டே இருந்துவந்தது. உடல் தாதுவைப் பெருக்க, சமன் செய்ய அதற்கு ஏற்றவாறு உணவு வகைகளைத் தயாரித்து வந்தனர். இதனைக் கொண்டுதான் "உணவே மருந்து, மருந்தே உணவு" என்று சொல்வார்கள்.
துவர்ப்புச் சுவை (Astringent) இது அதிகம் விருப்பு, வெறுப்பு காட்டப்படாத சுவை. உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் உகந்த சுவை. அதிக வியர்வையைக் கட்டுப்படுத்துகின்றது. இரத்தப்போக்கினைக் குறைக்க வல்லது. வயிற்றுப்போக்கினை சரி செய்யவல்லது. இது அதிகமாயின், இளமையில் முதுமை தோற்றத்தை உண்டுவிக்கும். வாய் உலர்ந்து போகச் செய்யும், சரளமாக பேசுவதைப் பாதிக்கும். வாத நோய்கள் தோன்ற வழிவகுக்கும். கிடைக்கும் உணவுப் பொருட்கள் வாழைக்காய், மாதுளை, மாவடு, மஞ்சள், அவரை, அத்திக்காய் போன்ற காய் வகைகளில் அடங்கியுள்ளது.
இனிப்புச் சுவை (Sweet) மனிதர்களால் அதிகம் விரும்பப்படும் சுவை இதுதான். மனதிற்கு மட்டுமல்லாமல் உடலுக்கும் உடனடி உற்சாகத்தைத் தரக்கூடிய சுவையிது. குழந்தைகளின் வளர்ச்சிக்கு மிகவும் உதவுகின்றது. இது அதிகமாயின் உடல் தளர்வு, சோர்வு, அதிகத் தூக்கம், இருமல், உடல் எடைக் கூடுதல் போன்ற சிக்கல்கள் பலவும் தோன்ற வாய்ப்பு உள்ளது. கிடைக்கும் உணவுப் பொருட்கள் பழவகைகள், உருளை, காரட் போன்ற கிழங்கு வகைகள், அரிசி, கோதுமை போன்ற தானியங்கள் மற்றும் கரும்பு போன்ற தண்டு வகைத் தாவரங்களிலும் இனிப்புச் சுவை அதிக அளவில் அடங்கியுள்ளது.
புளிப்புச் சுவை (Sour) உணவிற்கு மேலும் ருசி சேர்க்கும் ஒரு சுவையிது. பசியுணர்வைத் தூண்டும். உணர்வு நரம்புகளை வலுப்பெறச் செய்கின்றது. இதயத்திற்கும், செரிமானத்திற்கும் மிகவும் நல்லது. இது அதிகமாயின், தாக உணர்வினை அதிகரிக்கும். பற்களைப் பாதிக்கும். நெஞ்செரிச்சல், இரத்தக் கொதிப்பு, அரிப்பு போன்ற தொந்திரவுகளை உண்டுவிக்கும். உடல் தளரச் செய்யும். எலுமிச்சை, புளிச்ச கீரை, இட்லி, தோசை, அரிசி, தக்காளி, புளி, மாங்காய், தயிர், மோர், நார்த்தங்காய் போன்றவற்றில் அதிகம் உள்ளது.
காரச் சுவை (Pungent) பசியுணர்வைத் தோற்றுவிப்பதோடு அல்லாமல், செரிமானத்திற்கும் பெரிதும் உதவுகின்றது. உடல் இளைக்கவும், உடலில் உள்ள அதிக்கப்படியான நீரை வெளியேற்றவும் செய்கின்றது. இரத்தச் சுத்திகரிப்புச் செய்கின்றது. தோல் நோய்களுக்கு நல்லதொரு பலனைத் தருகின்றது. அதிகப்படியான காரம், உடல் எரிச்சலை உண்டுவிக்கும். உடல் சூட்டை அதிகரித்து, வியர்வையை அதிகம் சுரக்கச் செய்யும். குடல் புண்கள் தோன்ற அதிக வாய்ப்பு அளிக்கும். வெங்காயம், மிளகாய், இஞ்சி, பூண்டு, மிளகு, கடுகு போன்றவற்றில் அதிகப்படியான காரச்சுவை அடங்கியுள்ளது.
கசப்புச் சுவை (Bitter) அதிகம் வெறுக்கப்படும் சுவையாக இருந்தாலும், அதிகம் நன்மைப் பயக்கும் சுவையும் இது ஒன்றே. மற்றச் சுவைகளை அறிய இது பெரிதும் உதவுகின்றது. சிறந்த நோய் எதிர்ப்புச் சக்தியாக செயல்படுகின்றது. தாக உணர்வைக் கட்டுப்படுத்துகின்றது. உடல் எரிச்சல், அரிப்புகளில் இருந்து நிவாரணம் தருகின்றது. காய்ச்சலைத் தணிக்கின்றது. இரத்தச் சுத்திகரிப்புச் செய்கின்றது. இது அதிகமாயின், உடலின் நீர் குறைந்துப் போகச் செய்யும். மேனி வறண்டு கடினத்தன்மைத் தோன்ற நேரிடும். எலும்புகளைப் பாதிக்கும். அடிக்கடி மயக்கம் உண்டாகும், உச்சகட்டமாய் சுயநினைவற்ற நிலைக்கும் செல்ல வழிவகுக்கும். பாகற்காய், சுண்டக்காய், கத்தரிக்காய், வெந்தயம், பூண்டு, எள், வேப்பம்பூ, ஓமம் போன்றவற்றில் இந்த சுவை மிகுதியாய் உள்ளது.
உவர்ப்புச் சுவை (Salt) தவிர்க்க இயலாத சுவை இது, அளவோடு இருக்கும்பட்சத்தில் அனைவராலும் விரும்பப்படும் ஒன்று. உமிழ்நீரைச் சுரக்கச் செய்கின்றது. மற்றச் சுவைகளைச் சமன்செய்ய உதவுகின்றது. உணவுச் செரிமானத்திலும் பங்கு வகிக்கின்றது. இது அதிகமாயின் தோல் தளர்வினை உண்டுவித்து, சுருங்கிப் போகச் செய்யும். தோல் வியாதிகளையும் தோன்றச் செய்கின்றது. உடல் சூட்டினை அதிகப்படுத்தி சிறுக் கட்டிகள், பருக்கள் தோன்ற வழிவகுக்கும். கீரைத்தண்டு, வாழைத்தண்டு, முள்ளங்கி, பூசணிக்காய், சுரைக்காய், பீர்க்கங்காய் போன்றவற்றில் அதிகமாய் இருக்கின்றது.

இன்றைய குறள்

புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை
அகத்துறுப் பன்பி லவர்க்கு

அன்பு எனும் அகத்து உறுப்பு இல்லாதவர்க்குப் புறத்து உறுப்புகள் அழகாக இருந்து என்ன பயன்?

அறத்துப்பால் : அன்புடைமை

அமைதி எப்படி கிடைக்கும்?

"பொய் பேசுதல், புறங்கூறுதல், இழித்துரைத்தல், பயனற்ற சோம்பல் பேச்சு இவைகளால் மனிதர்களுக்கு எந்த நன்மையும் இல்லை. எனவே, இவற்றில் இருந்து விலகியே இருங்கள்"

- புத்தர்

தமிழோசை

  • கைத்தறி நெசவிற்கு பெயர் பெற்ற அம்பாறை மாவட்டம் மருதமுனை பிரதேசத்தில் சுனாமிக்கு பின்பு கைத்தறி நெசவு மீண்டும் உயிர் பெற்று வருவதாக அந்த பிரதேச நெசவாளர்கள் கூறுகின்றார்கள்.
    சுனாமியின் போது இந்த பிரதேசத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைத்தறிகள் அழிந்து போயின. பலர் மரணமடைந்தனர்.
  • இலங்கையின் வடக்கே நெடுந்தீவு கடற்பரப்பில் விபத்து காரணமாக நீரில் படகு மூழ்கி ஐஸ் கட்டிகள் கொண்டு வந்த பெட்டிகளைப் பிடித்தபடி தத்தளித்துகொண்டிருந்த 4 இந்திய மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை காப்பாற்றியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
  • இந்திய அமெரிக்க அணுசக்தி உடன்பாடு பிரச்சனையில் ஆளும் மத்திய அரசுக்கு நெருக்கடி: இந்தியா – அமெரிக்கா இடையிலான அணுசக்தி உடன்பாடு பிரச்சினையில், இடதுசாரிக் கட்சிகளின் பிடி இறுகி வரும் நிலையில், ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்தச் சிக்கலுக்குத் தீர்வு காண்பதற்கான முயற்சியாக, ஆளும் கூட்டணிக்குத் தலைமை வகிக்கும் காங்கிரஸ் கட்சி, இன்று ஞாயிற்றுக்கிழமை பல்வேறு கூட்டங்களை நடத்தியது.
  • ஆசிய பசிபிக் பிராந்திய எட்டாவது சர்வதேச எயிட்ஸ் மாநாடு ஞாயிற்றுகிழமையன்று கொழும்பு பண்டாரநாயக்க நினைவு சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் தொடங்கியது. எதிர்வரும் 23 ம் திகதிவரை ஐந்து நாட்கள் இடம்பெறவுள்ள இந்த மாநாட்டில் 60 நாடுகளிலிருந்து சுமார் 3000 பேர் கலந்துகொண்டு இந்தக் கொடிய நோயின் தாக்கம் குறித்து விவாதிக்கவிருக்கிறார்கள். மேலும் இன்றைய (ஆகஸ்ட் 19 ஞாயிற்றுக்கிழமை 2007) "BBC" செய்திகள் கேட்க இணைப்பை அழுத்துக
    http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml?tamil_worldnews

அண்ணாகண்ணன் : பொதிகை நேர்காணல் 2005

ஆகஸ்ட் 18, சுபாஷ் சந்திர போஸ் நினைவு நாள் அந்தக் காலம் மீண்டும் வராதா ? !
- வி.ஏ.எம். அழகுமுத்து

''இன்குலாப் ஜிந்தாபாத் (புரட்சி வாழ்க) இந்துஸ்தான் ஆஸாத் (இந்தியா சுதந்திரம்) நேதாஜிக்கு ஜே!' என்று நாங்கள் யுத்த முழக்கமிடும் போது... நேதாஜி பின்புறம் இரு கைகளையும் கட்டிக் கொண்டு பார்வையிட்டவாறே வருவார். முதல் இரண்டு முழக்கத்திற்கும் கையை உயர்த்துவார். நேதாஜிக்கு ஜே எனும்போது கையை உயர்த்த மாட்டார். அவருடைய குறுகுறுப்பான பார்வை. அதிர்ந்து பேசத் தெரியாத குரல், சுவாமி விவேகாநந்தருக்குப் பிறகு யாரையும் எளிதில் கவரக்கூடிய முகக் கவர்ச்சி. உடலை அசைக்காமல் அப்படியே முகத்தை மட்டும் திருப்பிப் படையினரைப் பார்வையிடும் தன்மை...'' இப்படி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் இந்திய தேசிய ராணுவத்தில் இருந்த காலம் நோக்கி தன் நினைவைச் செலுத்திய வி.ஏ.எம். அழகுமுத்து, நா தழுதழுத்து, மீறி வந்த அழுகையைக் கொஞ்ச நேரம் மெளனித்து அடக்கிக் கொண்டார். சிறிது நேரம் தரையை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தவர் நிமிரும்போது ''எனக்கு நேதாஜிதான் தலைவர். இப்ப எவ்வளவோ பேர் இருக்கிறார்கள். ஆனால், யாரையும் என்னால் தலைவர் என்று ஒத்துக் கொள்ளவே முடியாது'' என்று திட்டவட்டமாகக் கூறியவரிடம் இடைமறித்து,
''நீங்கள் இந்திய தேசியப் படையில் சேர்வதற்கான காரணம் பற்றியும் அதில் உங்களுடைய பங்கு, நேதாஜியின் நடவடிக்கையில் மறக்க முடியாத நிகழ்வு இதைப் பற்றி சொல்லுங்கள்'' என்றதும் நிமிர்ந்து இருக்கையின் நுனியில் நகர்ந்து உட்கார்ந்து கொண்டு பேச ஆரம்பித்தார்.
வி.ஏ.எம். அழகுமுத்துவின் தந்தை தேசப் பற்று மிகுந்தவர். அவர், வி.ஏ.எம். மிடம் காந்தி, நேரு, விவேகாநந்தர், முத்துராமலிங்கத் தேவர் ஆகியோரைப் பற்றியெல்லாம் கூறியிருக்கிறார். வி.ஏ.எம். அழுகுமுத்துவுக்குப் பத்து வயது நிரம்பும்போது தந்தை இறந்துபோக, கூலி வேலைக்குச் சென்று தனது தாயையும், தமக்கையையும் காப்பாற்ற வேண்டிய குடும்பச்சூழல். இந்தக் காலகட்டத்தில் இவர்கள் வசித்தது பர்மாவின் தலைநகர் ரங்கூனிலிருந்து 83வது கிலோ மீட்டரில் உள்ள 'தன்னாமீன்' எனும் இடத்தில். ஜப்பானியர்களிடம் இவரைப் போலவே இன்னும் ஏராளமான தமிழர்கள் கூலி வேலை செய்தவர்கள். எந்தக் குற்றமும் செய்யாத ஒரு தமிழரை ஜப்பானியப் படை வீரன் ஒருவன் அடித்துவிட, இவர்களுக்கு மேஸ்திரியாக வேலை செய்த 'ஐயர் சாமி' என்பவரிடம் முறையிட்டிருக்கிறார்கள். இதற்கு அவர் ''பயப்படாதீர்கள். அடுத்த வருடம் இதே நேரம் எந்த ஜப்பானியனும் உங்களை அடிக்க மாட்டான். அடிக்கவும் அவர்களால் முடியாது'' என்று கூறியிருக்கிறார். இதற்கு விளக்கம் கேட்டபோது, ''சுபாஷ் சுந்திரபோஸ் என்னும் மாபெரும் தலைவர் இந்தியாவில் பிரிட்டிஷாரின் கட்டுக் காவலில் இருந்து தப்பி ஜெர்மனை அடைந்து, அந்நாட்டின் சர்வாதிகாரியான ஹிட்லரோடு தோழமை கொண்டு, அங்கிருக்கும் இந்தியர்களைத் திரட்டி ஒரு படையை அமைத்து இந்திய சுதந்திரத்தை மீட்க இருக்கிறார். எனவே அவரை அங்கிருந்து ஆசியாவுக்கு அழைத்து வரும் முயற்சி நடந்து கொண்டிருக்கிறது'' என்று பதில் வந்தது ஐயர்சாமியிடமிருந்து.
மேலும் ஐரோப்பா முழுவதும் ஜெர்மனியின் (ஹிட்லரின்) ஆதிக்கத்தில் இருந்தாலும் அங்குக் குடியேறி வாழும் இந்தியர்கள் மிகக் குறைவு. ஆனால் கிழக்காசியாவில் முப்பது லட்சம் இந்தியர்களுக்கு மேல் வாழ்கிறார்கள். ஜப்பானியர்களிடம் ஐம்பதாயிரம் பிரிட்டிஷ் இந்தியப் படைகள் கைதாகியிருப்பதால், அவர்களையும் இணைத்துக் கொண்டு இங்கு ஒரு பெரும் படையைத் திரட்டி, பிரிட்டிஷார் மேல் படையெடுக்கும் திட்டம் உருவாகி வருகிறது. அதைத் தலைமையேற்று நடத்த சுபாஷ் சந்திரபோஸ்தான் தகுதியானவர் என்பதால் அவர் விரைவில் இங்கு வர இருப்பதாகவும் மேஸ்திரியான ஐயர் சாமி என்பவர் கூறியிருக்கிறார். இரண்டாவது உலகப் போர் நடந்து கொண்டிருந்தபோது, ஆசியாவில் ஜப்பான் சீனாவின் ஒரு பகுதியைத் தனதாக்கிக் கொண்டதுடன், இந்தோ சீன நாடுகளையும், கொரியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், பர்மா போன்ற நாடுகளும், அந்தமான் நிக்கோபார் தீவுகளும் ஜப்பானியர் ஆதிக்கத்திற்குள் வந்திருந்தன. சீனாவின் பெரும் பகுதியையும், இந்தியாவையும், இலங்கையையும் தவிர, பிற ஆசிய நாடுகள் எல்லாம் ஜப்பானியர்களின் ஆளுகைக்குள் வந்திருந்தன. அடுத்த இலக்கு இந்தியா. இந்தியாவைத் தாக்குவது உறுதி என்று எல்லோரும் அறிந்திருந்தாலும், ஜப்பான் உடனடியாக அந்த வேலையைச் செய்யவில்லை. ஏனென்றால் சுபாஷ் சந்திரபோஸின் வருகைக்காகவே ஜப்பான் இந்தியாவின் மேல் தாக்குதல் நடத்தக் காலம் தாழ்த்துகிறது. அவர் இங்கு வந்தவுடன் ஜப்பானியரிடம் கைதாகியுள்ள ஐம்பதாயிரம் இந்தியப் படை வீரர்களையும், ஆயுதங்களுடன் ஒப்படைத்து எல்லாவித உதவிகளையும் செய்ய ஜப்பான் தயாராக இருப்பதாகவும், அப்போது எல்லோரும் சுபாஷ் சந்திரபோசின் சுதந்திரப் படையில் சேர்ந்து ராணுவப் பயிற்சி பெற்று ஆயுதம் ஏந்த இருப்பதால் எந்த ஜப்பானியன் உங்களைத் தொட்டு அடிக்க முடியும்? என்றும் அவர் விளக்கியிருக்கிறார்.
வி.ஏ.எம். அழகுமுத்து போன்றவர்களுக்கு மேஸ்திரியான ஐயர் சாமி கூறிய இந்தச் செய்தி மகிழ்ச்சியை அளித்தது என்றாலும், ''எப்படி எதிரிகளை ஏமாற்றிவிட்டு ஜெர்மனியிலிருந்து ஜப்பானுக்கு வர முடியும்?'' என்ற சந்தேகக் கேள்விகளுக்கெல்லாம் அவர் பதில் கூறியிருக்கிறார். வி.ஏ.எம். இதற்கு முன்பு 'சுபாஷ் சந்திரபோஸ்' என்ற பெயரையே கேள்விப்படாதவராக இருந்திருக்கிறார். மேஸ்திரி சொல்லச் சொல்ல 'சுபாஷ் சந்திரபோஸ்' என்ற மாமனிதரை எப்படியாவது சந்தித்துவிட வேண்டும் என்ற ஆவல். இந்நிலையில் தண்டோரா போட்டு எல்லோரையும் பர்மியப் பள்ளிக் கூடத்தில் மாலையில் கூடி விட வேண்டும் என்று அறிவித்திருந்தனர். 150 பேர் கூடியிருந்த அந்தக் கூட்டத்தில் டாக்டர் பரூவா, படாமியா ஆகியோர் ரங்கூன் சென்று திரும்பியதையும் ராஷ்பிகாரிபோஸ் தலைமையிலான 'இந்திய சுதந்திர லீக்கின்' கிளை ரங்கூன் தலைநகரான 'தன்னாபீனில்' நிறுப்பட்ட விஷயத்தையும் அதன் நிர்வாகிகளையும் அறிமுகம் செய்து வைத்திருக்கிறார்கள். அப்போது, 'சுபாஷ் சந்திரபோஸ் ஜெர்மனியிலிருந்து புறப்பட்டு ஏழு எட்டு மாதங்களாக நீர்மூழ்கிக் கப்பலில் பயணித்து ஜப்பானை அடைந்து மன்னர் ஹிரா ஹிட்டோவையும், பிரதமர் டோஜோவையும் கண்டு பேசியிருக்கிறார். அங்கிருந்து சிங்கப்பூர் வந்து ராஷ்பிகாரி போஸ் தலைமையிலான 'இந்திய சுதந்திர லீக்கின் தலைமைப் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டிருக்கிறார். கிழக்காசியாவில் உள்ள இந்திய மக்களை ஒன்று திரட்டி, ஒரு சுதந்திரப் படையை ஏற்படுத்தி இந்தியாவில் இருந்து ஆங்கிலேயரை விரட்ட இந்தியாவின் மேல் படையெடுக்கும் பணியைச் சுபாஷ் சந்திரபோஸ் தொடங்கி கிழக்காசியாவில் படை திரட்டிக் கொண்டிருந்தார். அவரது பணி தடங்கலின்றி நிறைவேற தன்னாபீன் தமிழர்களும் தங்கள் பங்கைச் செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். ''1943ம் ஆண்டு ஜூலை மாதம் சுபாஷ் சந்திரபோஸ் வந்து சேர்ந்தார். நான் மறுமாதமே அவரது இந்திய தேசியப் படையில் சேர்ந்தேன். அங்கு எனக்களிக்கப்பட்ட வேலை என்பது ஒற்றுவேலை. வேவு பார்ப்பதும், காயமடைந்தவர்களுக்கு உதவி செய்வதும் தான் பிரதானமாகயிருந்தது. என்னுடைய ஆசை ஒருவாறு நிறைவேறி சுபாஷ் சந்திரபோஸைச் சந்தித்துவிட்டேன். அவருடைய அதிகாரம் இப்போதுள்ள முதலமைச்சர், பிரதமர், குடியரசுத் தலைவர் இந்த மூன்று பேருடைய அதிகாரத்தையெல்லாம் மிஞ்சியது. ஆனால் பார்வைக்கு மிகவும் எளிமையானவர். அதே நேரத்தில் கம்பீரமானவர். அவர் மேடையேறினால் கீழே ஜப்பானியப் படையினர் உட்கார்ந்திருப்பார்கள்.
சுபாஷ் சந்திரபோஸ் பதவியேற்கும்போது கண்ணீர் வடித்ததை நான் பார்த்தேன். ''இத்தனையாயிரம் வீரர்கள் நம்மை நம்பி வந்திருக்கிறார்களே. இவர்களுக்கு நாம் என்ன செய்யப் போகிறோம்'' என்பதை நினைத்து அழுதார். அதே நேரத்தில் தமது சொந்த நாட்டில் அரசாங்கம் நடத்துவதைப் போல் துணிச்சலாக அரசு நடத்தினார். சுபாஷ் சந்திரபோஸ் முகத்தில் சிரிப்பையே பார்க்க முடியாது. நான் இரண்டே இரண்டு முறை மட்டுமே அவர் சிரித்துப் பார்த்திருக்கிறேன். ஒரு முறை நாங்கள் இருந்த முகாமுக்கு ஒரு சர்க்கஸ் கோமாளி வந்தான். அவனைக் கர்னலிலிருந்து அனைவருக்குமே நன்றாகத் தெரியும். தொழில் இல்லாததனால் அவன் அங்கு வந்தான். அவனுடைய ஆசை நேதாஜியை எப்படியாவது பார்த்து விட வேண்டும் என்பது. உள்ளே வந்தவன் 'என்னை யாராவது தூக்க முடியுமா?'' என்றான். ' அப்படி என்னைத் தூக்க முடியாவிட்டால் எனக்கு இரண்டு ரூபாய் தர வேண்டும். தூக்கிவிட்டாலோ நான் நான்கு ரூபாய் அவர்களுக்குத் தருவேன்'' என்றான். முதல் தடவை தூக்கிவிடலாம். இரண்டாவது முறை மூச்சைப் பிடித்து நின்று கொள்வான். இதை சுபாஷ் சந்திரபோஸ் தூரத்தில் நின்று பார்த்துவிட்டு மெளனமாகச் சிரித்தார். அந்தக் கோமாளி ஒரு கர்னலிடம் சுபாஷைப் பார்க்க விருப்பம் தெரிவித்தான். கர்னல் இதைப்போய் அவரிடம் சொன்னவுடன் அவனைக் கூப்பிட்டனுப்பினார். போனவன் ''என்னைத் தூக்குங்கள் பார்ப்போம்'' என்றான். மெளனமாகச் சிரித்த நேதாஜி அலக்காகப் பிடித்துத் தூக்கிவிட்டார். ''மற்றொரு முறை தூக்குங்கள் பார்ப்போம்'' என்றவனை தூக்கிப் பார்த்தார். இரண்டாவது முறை அவனைத் தூக்கவே முடியவில்லை. அப்போது அவர் பலமாகவே சிரித்ததைக் கண்டு மகிழ்ந்திருக்கிறேன். மற்றொரு முறை, பயங்கரமாகப் போர் நடந்து கொண்டிருக்கிறது. நமது ராணுவத்தினர் அணிவகுத்து நின்று போர் முழக்கம் செய்துவிட்டுத் தாக்குதலுக்குத் தயாரானோம். எதிரிகளின் துப்பாக்கிக் குண்டுகள் எங்களை நோக்கி வரும்போது, கர்னல் நேதாஜியைப் பார்த்து, பதுங்கு குழிக்குள் போய் விடும்படி கூறினார். அப்போது நேதாஜி ஒரு புன்சிரிப்பை உதிர்த்து விட்டு, ''வெள்ளைக்காரர்கள் இன்னும் என் மேல் போடுகிற குண்டைத் தயாரிக்கவில்லை'' என்று சொன்னார். பெரும்பாலும் அமைதியாகவேதான் பேசுவார். எந்த நேரமும் ஆழ்ந்த சிந்தனையில் இருப்பார். பயிற்சிக்களத்திற்கு வந்தால், நேராக சமையல் அறைக்குச் செல்வார். தயாரித்து வைத்திருக்கும் உணவு வகைகளைச் சாப்பிட்டுப் பார்ப்பார். தண்ணீரைக் குடித்துப் பார்ப்பார். கடைசியாக ''தண்ணீரைக் கொதிக்க வைத்தீர்களா?'' என்று கேட்பார். ஒரு முறை பத்திரிகையாளர்கள் நேதாஜியிடம், ''ஜப்பான் படையினரைச் சேர்த்துக் கொண்டு இந்திய விடுதலைக்குப் போராடுகிறீர்கள். அதே ஜப்பானியர்கள் இந்தியர்களை அடிமைப்படுத்த நினைத்தால் என்ன செய்வீர்கள்?'' என்றார்கள். அதற்கு அவர் சொன்னார், ''வெள்ளைக்காரர்களைச் சுட்ட துப்பாக்கியை கையில்தானே வைத்திருக்கிறோம்'' என்றார். நேதாஜிக்கு ஜே! நேதாஜிக்கு ஜே! நேதாஜிக்கு ஜேதான். அடடா! அந்தக் காலம் மீண்டும் வராதா? அந்தக் கொந்தளிப்பிலும், பேரலையிலும் நீந்திக் குளிக்க மாட்டோமா? அந்தப் பெருமழையிலும், பெரும் புயலிலும் பூகம்பத்திலும் மகிழ்ச்சி பொங்க ஓடியாடி வினையாற்றும் பேறு கிட்டாதா? உருகியோடும் எரிமலை என்னும் தியாகக் குழம்பில் உருகி ஓட மாட்டோமா? மீண்டும் அந்தக் காலம் வராதா? அந்தத் தலைவன் போல் மற்றொரு தலைவன் கிடைக்க மாட்டானா என்று ஏங்கி தவிக்கிறேன்'' என்று முடித்தார் கண்களைத் துடைத்துக் கொண்டே.
சந்திப்பு - பி. நந்தகுமார்.

August 18, 2007

நண்பர் யாழ் சுதாகர் தொகுத்து வழங்கும் இதயத்தைப் பிழிந்து எங்கோ எடுத்துச் செல்லும் யேசுதாஸின் இனிய பாடல்கள்!! இசையை ரசிக்கும் எவருக்கும் மொழி அவசியம் இல்லை என்பது இந்தப் பதிவின் மூலம் நிரூபணமாகும் என்பதில் ஐயமில்லை!

Powered by eSnips.com

இன்றைய குறள்

அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரந்தளிர்த் தற்று

மனத்தில் அன்பு இல்லாதவருடைய வாழ்க்கை, பாலைவனத்தில் பட்டமரம் தளிர்த்தது போன்றது

அறத்துப்பால் : அன்புடைமை

ஆராய்ச்சிக்குச் சமமான ஞானம் இல்லை, யோகத்துக்குச் சமமான பலம் இல்லை. இவ்விரண்டும் ஒன்றே என்று அறியத்தக்கது
- யாக்ஞவல்க்யர்

தமிழோசை

  • பருவ மழையினால் பாதிக்கப்பட்ட தெற்காசிய நாடுகளில் உணவுப்பற்றாகுறை ஏற்படக் கூடிய அச்சுறுத்தல்கள் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டிருப்பதாக ஐ.நா. தெரிவித்துள்ளது
  • இந்தியா – அமெரிக்கா இடையிலான அணுசக்தி உடன்பாடு பிரச்சினையில், இடதுசாரிக் கட்சிகள் தங்கள் நிலையைத் தளர்த்திக் கொள்ள முடியாது என்பதில் உறுதியாக இருக்கின்றன. தொடர்ந்து இன்றைய (ஆகஸ்ட் 18 சனிக்கிழமை 2007) "BBC" செய்திகள் கேட்க இணைப்பில் செல்க

August 17, 2007

எனது நெருங்கிய நண்பரும் நடிகருமான திரு.கரண் பகிர்ந்துகொள்ளும் ஒரு சிறிய நேர்முகம்

கரண் பகுதி 2

கரண் பகுதி 3

"ஒருவன் நம்மிடம் கோபப்படும் போது நாமும் திருப்பிக் கோபப்பட்டால், அவனை தண்டித்தால், அது அவனது கையிலுள்ள புண்ணுக்கு மருந்து போட்டு ஆற்றுவதற்கு பதில், அதைக் குத்தி மேலும் பெரிதாக்குவது போன்றது. அதன் பலனாக காயத்திலிருக்கும் சீழ் நம்மீதும் படுகிறது. நம் உடலிலும் துர்நாற்றம் பரவுகிறது. நமது கோபத்தால் அவன் மேலும் அகங்காரம் கொண்டவனாக மாறுகிறான். நாமோ அஞ்ஞானியாகின்றோம். மாறாக, நாம் பொறுமையாக இருந்தோமானால், அது கையிலுள்ள காயத்துக்கு மருந்து வைத்து ஆற்றுவதற்கு சமமாகும்"
- மாதா அமிர்தானந்தமயி

இந்தியாவுல எல்லோராலும் நல்ல மனிதன் என்று ஒத்துக்கொள்ளப்பட்ட ஒரு ஆள் அப்துல்கலாம்தான்

அவர் புத்தகம் இவ்வளவு காப்பி வித்ததற்கு அப்துல்கலாம்ங்கிற hype மிக முக்கிய காரணம். ஒரு கிராமத்துலயிருந்து ஒரு ஆள் வந்தார். சார் அப்துல்கலாம் புக் ஒரு காப்பி குடுங்க சார்ன்னு கேட்டார். எதுக்காக வாங்குறார்ன்னு ஒரு ஆர்வத்துல விசாரிச்சப்போ அவர் சொன்னார். சார் என்காலம் முடிஞ்சுப் போச்சு, இப்ப படிக்கிற புள்ளைங்களாவது நல்லா படிச்சு நல்ல பிள்ளைங்களா வரட்டும். எங்க ஊரு பள்ளிக்கூடத்து புள்ளைங்களுக்கு குடுக்கிறதுக்குதான் சார். ஊருக்கு இரண்டு அப்துல்கலாம் வந்தாகூட நல்லதுதானே.
பெரிய பெரிய விஷயங்களைக்கூட தன்னடக்கத்துடன் கூறும் காந்தி கண்ணதாசனின் பண்பும் அவரது வெற்றிக்கு முக்கிய காரணம்.. தொடர்ந்து படிக்க இணைப்பில் செல்க.. http://www.andhimazhai.com/news/viewmore.php?id=2839

எழுத்தாளன் பணி எழுதிக்கொண்டிருப்பதே. எவர் அங்கீகரிப்பையும் நிராகரிப்பையும் எதிர் பார்ப்பவன் நல்ல எழுத்தாளன் அல்ல - பாலகுமாரன்


ஜனரஞ்சக பத்திரிக்கையில் எழுதுபவர்களுக்கு இலக்கிய அந்தஸ்த்து கொடுக்க மறுக்கும் விமர்சகர்கள் பற்றி?
ஒருவரை அங்கீகரிப்பதற்கோ அல்லது அங்கீகரிக்க மறுப்பதற்கோ இன்று வாழும் சகமனிதர் எவருக்கும் அதிகாரம் இல்லை. தற்குறியே தான் அங்கீகரித்ததாக கபடம் பேசுவான், தான் அங்கீகரிக்கவில்லை என ஆணவம் காட்டுவான். காலம் மனிதரை விட பெரிய விஷயம், அதற்கு ஒரு இலக்கிய படைப்பை என்ன செய்ய வேண்டுமென்று தெரியும். எழுத்தாளன் பணி எழுதிக்கொண்டிருப்பதே. வேறு எவர் அங்கீகரிப்பையும் நிராகரிப்பையும் எதிர் பார்ப்பவன் நல்ல எழுத்தாளன் அல்லஎழுத்தாளர் பாலகுமாரன் நேர்முகம் தொடாந்து படிக்க இணைப்பில் செல்க http://www.andhimazhai.com/news/viewmore.php?id=849

இன்றைய குறள்

என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை அறம்

அறம் எதுவென அறிந்தும் அதனைக் கடைப்பிடிக்காதவரை, அவரது மனச்சாட்சியே வாட்டி வதைக்கும். அது வெயிலின் வெம்மை புழுவை வாட்டுவதுபோல இருக்கும்

அறத்துப்பால் : அன்புடைமை

தமிழோசை

கொழும்பில் கடந்த ஜூன் மாதத்தில் கடத்தப்பட்டு, கொலை செய்யப்பட்ட இலங்கை செஞ்சிலுவைச் சங்க ஊழியர்கள் இருவரின் கொலைச் சந்தேக நபரை அடையாளம் கண்டுள்ள பொலிஸார், அவர்களைக் கைது செய்ய உதவுபவர்களுக்கு சன்மானமும் அறிவித்துள்ளனர். மேலும் இன்றைய (ஆகஸ்ட் 17 வெள்ளிக்கிழமை 2007) "BBC" செய்திகள் கேட்க கீழுள்ள இணைப்பை அழுத்தவும் http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml?tamil_worldnews

காலஞ்சென்ற மாபெரும் மேதை திரு.மதுரை சோமு அவர்களின் "தேவரின் தெய்வம்" பாடல் இங்கே மீண்டும் சிறுவன் விக்னேஷ் குரலில்!

வறுமை, வேலையில்லை என்ற நாய் என்னைத் துரத்த அதுக்குப் பயந்து ஓடினவந்தான் நான். இப்ப இளைப்பாறும் போதுதான் தெரியுது இவ்வளவு தூரம் ஓடிவந்த்துருக்கேன்னு"

போலீஸ்காரர்களின் துரத்தல் எங்கே போய் முடியுமென்று எல்லாருக்கும் தெரிந்திருக்கலாம். ஆனால் பாலனின் அனுபவம் வேறு விதம் போலீஸ்காரனின் துரத்தல் பாலனை கோடீஸ்வரர் ஆக்கியிருக்கிறது.
எப்படி..? 1981 ல் வீட்டை விட்டு சென்னைக்கு ஒடிவந்த பாலனுக்கு படிப்பு, பணம், மற்றவர்கள் ஆதரவு எதுவுமே கிடையாது. எழும்பூரைச் சுற்றியுள்ள சுற்றுலா, பயண ஓட்டல் நிறுவனங்கள் என்று தென்பட்ட எல்லாரிடமும் வேலை கேட்டும் பார்த்தார்.கிடைக்கவில்லை. ஒரு நாள் இரவு பசி மயக்கத்தில் இவர் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த சமயத்தில் போலீஸ்காரர் சந்தேகக் கேஸில் இவரைக் கைது செய்ய அடித்து எழுப்பி ஏற்கனவே அங்கு நின்று கொண்டிருந்த ஒரு சிறு கும்பலுடன் போய் நிற்கச் சொன்னார். ஒன்றும் புரியாமல் பக்கத்திலிருந்தவரிடம் பேச்சு கொடுத்த பாலனுக்கு இவர்களோடு போனால் சிறையிலடைத்து விடுவார்கள் என்பது புரிந்தது. போலீஸ்காரர் வேறொருவரை எழுப்பிக் கொண்டிருந்த சமயத்தில் திசை தெரியாமல் ஓடத் தொடங்கினார். போலீஸ்காரர் துரத்த இன்னும் வேகமெடுத்தார். சிறிது நேரம் கழித்து திரும்பி பார்த்த போது போலீஸ்காரர் இல்லை.
ஓடி ஓடி களைத்துப் போய் மனிதர்கள் வரிசையாக நின்று கொண்டிருந்த ஒரு இடத்தைப் பார்த்து, அதுதான் பாதுகாப்பான இடம் என்று முடிவெடுத்து அங்கேயே நின்றுவிட்டார். சோர்ந்து போய் அந்த இடத்தில் உட்கார்ந்தவர் கண் அயர்ந்து போய்விட்டார். காலையில் விழித்துப் பார்த்தால் அவருக்கு முன்னால் 20 பேரும் பின்னால் 200 பேரும் நின்று கொண்டிருந்தார்கள். ஒருவர் அவரிடம் வந்து, 'தம்பி, இடம் தருவாயா, 2 ரூபாய் தருகிறேன்' என்றார் இன்ப அதிர்ச்சிக்குள்ளான பாலன் பணத்தை வாங்கி கண்களில் ஒற்றிக் கொண்டார். அது அவரது முதல் வருமானம். முதலீடும் கூட. அதன் பிறகு தான் அவருக்குத் தெரிந்தது அது அமெரிக்கத் தூதராலயம் என்று. வருமானத்துக்கு இதுவே சிறந்த வேலை என நினைத்த பாலன் அங்கு வந்து செல்லும் பயண முகவர்களுடன் நல்லுறவுகளை ஏற்படுத்தி விமான டிக்கெட்டின் விலை, விசா, பயணத் தேவைக்கான விபரங்கள் அனைத்தையும் அவர்களிடமிருந்து கற்றுக்கொண்டார். வரிசையில் நிற்கும் நேரத்தில் உடன் நிற்பவர்களுடன் பேச்சுக் கொடுத்து அவர்களுக்கு பயணச் சீட்டு வாங்கிக் கொடுப்பது, அவர்கள் பயணத் தேவைகளை பூர்த்தி செய்வது, விமான நிலையம் வரை அவர்களது பெட்டி படுக்கைகளை சுமந்து சென்று வழியனுப்புவது என்று தனது பணிகளை விரிவாக்கினார். வாடிக்கையாளரின் திருப்தியே , தமது திருப்தி என்று இயங்க ஆரம்பித்த பாலனை நம்பி பல லட்சங்களும் கடன் கொடுக்க பல விமான பயண முகவர்கள் முன்வந்தனர். இதனையே மூலதனமாகக் கொண்டு 1986ல் மதுரா டிராவல் சர்வீஸ்' என்ற நிறுவனத்தை தொடங்கினார் பாலன். இன்று அது வருடத்துக்கு 12 கோடிக்கும் மேலான வர்த்தக எல்லையைத் தாண்டி உயர்ந்து நிற்கிறது. "நான் எதையும் சாதிச்சுட்டுதா நினைக்கல. பெருசா தன்னம்பிக்கை வைச்சு பிளான் பண்ணி எல்லாம் வரல. ஒருநாய் துரத்தினா உயிருக்குப் பயந்தவன் எப்படி ஓடுவான்? வறுமை, வேலையில்லை என்ற நாய் என்னைத் துரத்த அதுக்குப் பயந்து ஓடினவந்தான் நான். இப்ப இளைப்பாறும் போதுதான் தெரியுது இவ்வளவு தூரம் ஓடிவந்த்துருக்கேன்னு"என்று தன்னுடைய வளர்ச்சி பற்றி கூறுகிறார் 'மதுரா டிராவல்ஸ்' கம்பெனியின் நிறுவனரும் நிர்வாக இயக்குநருமான வீ.கே.டீ. பாலன்
உங்கள் வளர்ச்சிக்கான காரணங்கள்?
நான் 'நாணயம்' தவறியதேயில்லை. நாணயத்தை நான் கட்டிப்பிடிச்சுக்கிட்டேன். ஒரு மனிதன் நாணயத்தை இழந்துட்டானா அதுக்குமேல அவனிடம் இழப்பதற்கு எதுவுமிருக்காது. 'நாணயம்'னா "சொல்வதைச் செய் செய்வதைச் சொல்" அவ்வளவே. உழைச்சு முன்னேறுவதுங்கிறது மோசடி வார்த்தை.வெயில்ல ரோட்டுல கான்கிரீட் போடுறவனை விட, மூட்டை தூக்குறவனை விட யாராவது கஷ்டப் பட்டு உழைக்க முடியுமா? கஷ்டப்பட்டு உழைச்சா மட்டும் முன்னேறிட முடியாது. இஷ்டப்பட்டு உழைச்சாத்தான் முன்னேறலாம்.
மிகவும் குழப்பமான நேரங்களில் சரியான முடிவுகளை எடுப்பதெப்படி?
எல்லா மனிதனும் எல்லா முடிவுகளும் சரியாக எடுப்பதில்லை. அப்படி எடுத்திருந்தா ஹிட்லர், முசோலினி, எல்லாம் செத்திருக்கமாட்டாங்க.என்ன முடிவெடுப்பது என்று தெரியாமல் குழம்புவதை விட ஏதாவது முடிவெடுப்பதே சிறந்தது. எந்த முடிவும் சரியான முடிவு, தவறான முடிவுன்னு அதன் விளைவுகளைப் பொறுத்துதான் தீர்மானிக்கப்படுது. ஜெயிச்சவங்க எல்லாரும் சரியா முடிவெடுத்து ஜெயிச்சவங்க கிடையாது. அவங்க ஒவ்வொரு முறை சறுக்கி விழும் போதும் காப்பாத்துறதுக்கு யாராவது இருந்திருப்பாங்க. கொஞ்சம் மனசாட்சியோட பேசினோம்னா பலர் ஒருவருக்காகவும் ஒருவர் பலருக்காகவும் வாழ்றதுதான் வாழ்க்கை தொழில் செய்யனுங்கிற முடிவு நிச்சயம் வெற்றியைத்தான் தரும். தொழில் ஒருவன் தோற்றுப் போனால் அது தொழில் செய்தவனின் தவறேயொழிய தொழிலின் தவறல்ல. If you don't run your business properly, one day you'll have to run away from your business.
உங்களை மாதிரி சில முதல் தலைமுறையினர் கஷ்டப்பட்டு நிறுவனத்தை வளர்க்க அவர்கள் வாரிசுகள் மிக எளிதாக நிர்வாகப் பொறுப்புக்கு வந்துடறாங்களே?
வாரிசுகளை நிர்வாகம் பண்ணவிடறது தப்பு. அவங்களுக்கு அனுபவிக்க மட்டும் தான் தெரியும்.வியாபாரத்தை வளர்க்கணும், இன்னும் உயாரத்துக்கு கொண்டு போகணும் அப்படின்னெல்லாம் எண்ணமிருக்காது. பிள்ளைகளுக்கு சொத்து சேர்த்து வைக்கிறதே அவர்களுக்குச் செய்ற மிகப் பெரிய தீங்கு. நல்ல பிள்ளைகளுக்கு சொத்து சேர்த்து வைக்கணும்னு அவசியமில்லை. கெட்ட பிள்ளைகளுக்கு சொத்து சேர்த்து வைத்துப் பிரயோஜனமில்லை.வாரிசுகளுக்கு உண்மையிலேயே வியாபாரத்துல விருப்பம் இருந்தா கம்பெனியில சாதரண ஊழியரா வேலைக்குச் சேர்ந்து படிப்படியா வளர்ந்து வரணும். இல்லைன்னா நல்ல காலேஜ்ல முறைப்படி M.B.A படிச்சுட்டு கூட வரலாம்.
எதுவுமே படிக்காமல் தொழில் தொடங்குபவருக்கும் M.B.A படித்து தொழில் தொடங்குபவருக்கும் இருக்கும் வித்தியாசம்?
முதல் முதலா பள்ளிக்கூடம் கட்டினவன் பள்ளிக்கூடம் போகாதவனாத்தான் இருப்பான். முதன்முதல் சிலபஸ் பள்ளிக்கூடம் போகாதவங்க, அனுபவம் மூலமா வாழ்வை புரிஞ்சிகிட்டவங்க எல்லாம் சேர்ந்து உருவாக்கினதாத்தான் இருக்கும். 'சேர்மன்' பதவி, 'M.D' பதவி எல்லாருக்கும் கிடைக்கும். ஆனா 'Founder' பதவி வேணும்னா நீங்கதான் ஏதாவது உருப்படியா செய்யணும்.
நீங்க டிராவல் ஏஜென்சி ஆரம்பித்த காலத்துக்கும் இன்றைக்கும் உள்ள மாற்றங்கள்?
முதல் டிராவல் ஏஜன்ட் எப்படி வேலை பார்த்திருப்பான்.. தோள்ல வைத்து மனிதர்களை தூக்கிட்டுப் போயிருந்திருப்பான். அப்புறம் பல்லக்குல . நீங்க சீஸன் நேரங்கள்ல சபரிமலைக்குப் போனீங்கன்னா இன்றும் பல்லக்குத் தூக்குபவர்களை பார்க்கலாம். அறிவியல் வளர்ச்சியோடு எப்போதும் தொழிலை இணைத்துக் கொள்ள வேண்டும்.
உங்கள் வாழ்க்கையைத் திரும்பி பார்க்கும் போது எப்படி உணர்கிறீர்கள்?
ஆரம்பத்துல ரொம்ப கஷ்டப்பட்டேன். துயரமா இருந்தது. Suicide பண்ணக்கூடபோய்ட்டேன். ஆனா அதுக்கு முன்னாடியே மயங்கி விழுந்துட்டேன்.இன்னிக்கு மகிழ்ச்சியா இருக்கேன். Suicide பண்ணியிருந்தா இந்த நல்ல வாழ்க்கையை இழந்திருப்பேனில்லையா. நல்ல வாழ்க்கைன்னா நான் வசதி வாய்ப்பைச் சொல்லலை. நண்பர்கள் உறவினர்கள் என்று எவ்வளவு பேர் உங்களை நேசிக்கிறவர்கள் இருக்கிறார்கள் என்று பாருங்கள். உங்கள் தாய், தந்தை, தம்பி, பக்கத்துவீட்டுக்காரர்கள், பால்காரி, மீன்காரி என்று எல்லாருடனும் உங்கள் உறவு எப்படியிருக்கிறது என்று பாருங்கள். இந்த வீதியில் தான் உங்கள் தேரோட வேண்டும். இவங்க தானே உங்கள் வாழ்க்கை. உங்க மேல் யார் பொறாமைப்படப் போறாங்க.அப்துல்கலாமா? பில்கிளின்டனா? உங்க அந்தஸ்தில் உள்ளவர்கள் மட்டும் தானே. அவர்களோடு உறவுகளை நன்றாக அமைத்துக்கொள்ளுங்கள். வியாபார நேரம் போக மீதமிருக்கிற நேரத்தை சமூகத்திற்காக செலவழிக்கும் பாலன் இதுவரை பேட்டி காணப்படாத சாமானிய மனிதர்களை பொதிகை சேனலின் வெளிச்சத்தின் மறுபக்கம் நிகழ்ச்சிக்காக பேட்டி காண்கிறார். இரண்டாம் மகளின் திருமணத்திற்காக கிட்னி விற்ற தாய், இருபத்தி மூன்று வயதில் கணவன் மூலம் எய்ட்ஸ் நோயாளியான பரிதாப மனைவி, சென்னை பொது மருத்துவமனையில் போஸ்ட்மார்டம் செய்யும் மருத்துவர் என்று பல்வேÚ விதமான மனிதர்களை வாரந்தோறும் சந்திக்கிறார். 300 வாரங்களைத் தாண்டி வெற்றிகரமாக ஒளிபரப்பப்படும் இந்த நிகழ்ச்சி பலரின் பிரச்சினைகளுக்கு தீர்வாக அமைந்திருக்கிறது. இது போன்ற விஷயங்கள் தான் திருப்தியைக் கொடுக்கிறது என்கிறார் பாலன். வெற்றியடைவது மட்டுமல்ல, வெற்றிபெற்றபின் தனது பங்களிப்பாக சமூகத்திற்கு திருப்பி கொடுக்கும் மனது சிலருக்கு தானிருக்கும். அந்த சிலரில் வி.கே.டி.பாலனும் ஒருவர்.
- சந்திப்பு என்.எஸ்.ராமன்

August 16, 2007

கொதித்து போயிருக்கேன் - ராமதாஸ் (மருத்துவர் இராமதாசு) பேட்டி

கட்சியை வளர்ப்பதற்காக நாட்டை காடாக்கும் எந்த போராட்டத்தையும் நடத்தலாம் என்று செயல்படுபவர்கள் குறித்து முடிவெடுக்கும் காலம் நெருக்குவதாக முதலமைச்சர் கருணாநிதி கூறியிருப்பதை கண்டு மனம் கொதித்துப் போயிருப்பதாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியிருக்கிறார். காங்கிரஸ் ஆதரவு மட்டும் போதும் என்று கருணாநிதி கருதுகிறாரா என்ற கேள்விக்கும் அவர் பதிலளித்துள்ளார்.
கே: முடிவெடுக்கும் காலம் நெருங்கி கொண்டிருக்கிறது என்று முதல்வர் கூறுவதன் அர்த்தம் என்ன?
ப: முதல்வர் என்ன கருதுகிறார் என்பதை உங்கள் யூகத்திற்கே விட்டு விடுகிறேன். அதில் நான் கருத்து சொல்ல விரும்பவில்லை. ஆனால் இதற்கான காரணம் என்று கூறியிருப்பதுதான் என்னை பெரிதும் பாதித்துள்ளது. திரும்ப திரும்ப அதை படித்து மனம் கொதித்துப் போயிருக் கிறேன்.சமூகங்களுக்கு இடையே நல்லிணக்கமும், ஒற்றுமையும், அமைதியும் ஏற்பட வேண்டும் என்று மாவட்டந் தோறும் மாநாடுகளை நடத்தி வருகிறேன். அப்படி நடந்த ஒரு மாநாட்டில் முதலமைச்சரே கலந்து கொண்டு பேசியிருக்கிறார்.இப்படியெல்லாம் பாடுபட்டு வருகிற எங்களை பார்த்து நாட்டை காடாக்கும் நாகரீகமற்ற முறைகளுக்கு தூபம் போடுபவர்களை போலவும், வன்முறையை தூண்டுபவர்களை போலவும் முத்திரை குத்தும் முயற்சி என்னை பெரிதும் பாதித்துள்ளது. இதனால் நான் மனம் நொந்து போயிருக்கிறேன். கடந்த இரண்டு நாட்களாக இந்த பழிச் சொற்கள் என்னை பெரிதும் பாதித்துள்ளது. தொடர்ந்து பாமக மருத்துவர் இராமதாசு நேர்முகம் படிக்க இணைப்பில் செல்க http://idlyvadai.blogspot.com/2007/08/blog-post_6694.html

இப்படியும் கணக்குப் போடலாம்!?

இயக்குனர் திரு.சீமான் நேர்முகம்

இவ்வளவு பெரிய கோபத்தோடும், கொள்கைகளோடும் இருக்கிற உங்களோட லட்சியம் கடைசிவரை சினிமாவா இருக்கிறதுக்கு வாய்ப்பே இல்லைன்னு தோணுது. சினிமாவுக்கு அடுத்து என்ன செய்யணும்னு நினைக்கிறீங்க?

நான் பத்தாம் வகுப்பு படிக்கும்போது ஒரு பெண்ணை நேசிச்சேன். எனக்குத் தெரியும் அவங்களோட வாழ முடியாதுன்னு. ஆனா இன்னும் அவங்களை என்னால மறக்க முடியலை. அதுமாதிரிதான் விவரம் தெரியாத வயசிலேயே சினிமா மேல ஒரு ஆசை வந்திடுச்சி. நான் இந்த சினிமாவுக்கு பொருத்தமான ஆள் இல்லைன்னு இப்போது எனக்குத் தெரியுது. மானம், ரோஷம், சுயமரியாதை இருக்கிற எவனும் இந்தத் தொழிலுக்கு பொருத்தமானவன் கிடையாது.நான் எடுக்கிறது தான் சினிமா, அதை வாங்கி விக்கிறதுக்கு ஒரு குழு, அதைப் பார்க்கிறதுக்கு என் மக்கள் இப்படி ஒரு நிலை வந்தால் சினிமா ஒரு சுகமான தளமாக இருக்கும். அது இல்லாதபோதும் இதை விட்டுட்டுப் போக முடியலை. விட்டுட்டுப் போனா தோத்துட்டு போறான்னு சொல்லுவாங்க. அதனாலே இங்க இருந்துட்டே, இந்த ஊடகத்தை எப்படி என் மண்ணுக்கேத்த, மக்களுக்கேத்த ஊடகமா மாத்த முடியும்னு தான் யோசிக்கறேன். நானும் இங்க இல்லைன்னா ஒரு கலகக்காரன், கிளர்ச்சியாளன் இங்க இல்லை. என்னை மாதிரி நூறு பேராவது உருவாகிட்டா எனக்கு இங்கே வேலை இல்லை.தம்பி படத்தோட தணிக்கையில் ஒரு அதிகாரி, ‘அய்யய்யோ என்ன நீங்க ஏன் இவ்வளவு இடதுசாரி இருக்கீங்க? சே ஒரு தீவிரவாதி, அவரோட இயக்கங்களை உலக நாடுகள் தடை பண்ணியிருக்கு. அவரைப் போய் படத்தில காட்டியிருக்கீங்களே’ அப்படின்னார். ‘சே தீவிரவாதியாவே இருக்கட்டும். அவரை நெஞ்சிலத் தாங்கின என்னோட கதாநாயகன் யாரையுமே கொலை பண்ணலையே. இதில என்ன தப்பு’ன்னு கேட்டேன்.படத்துல ஒரு இடத்தில மயிருன்னு ஒரு வார்த்தை வரும். ‘ஒரு பெண் அதிகாரி இந்த மாதிரி வார்த்தையெல்லாம் பயன்படுத்தக்கூடாது, அதை எடுத்துடணும்’னு வாதம் பண்ணினாங்க. அவங்ககிட்ட கேட்டேன். ‘மயிரு என்ன அவ்வளவு கெட்ட வார்த்தையா’?‘ஆமா அநியாயத்துக்கு கெட்ட வார்த்தை’ன்னாங்க. ‘அப்புறம் எதுக்காக அதை அவ்வளவு நீளமா வளர்த்து கோவில்ல போய் காணிக்கையா குடுக்கறீங்க. மோசமான விஷயத்தை தான் கடவுளுக்கு தருவீங்களா, அப்படின்னா உங்க கடவுளை நீங்க அவ்வளவு கேவலமானவராத்தான் மதிக்கிறீங்களா’ன்னு கேட்டேன். அந்தம்மா பதிலே சொல்லலை. இந்த மாதிரி பல நெருக்கடிகளைத் தாண்டித்தான் ஒரு நல்ல படம் குடுக்க முடியுது. என்னை மாதிரி ஆட்களாலத் தான் இவங்களோட எல்லாம் போராட முடியுது.படத்தோட தயாரிப்பாளருக்கோ, நடிச்சவருக்கோ சே, மாவோ பத்தியெல்லாம் தெரியாது. தெரிஞ்சா படத்தை இயக்கியிருக்கவே முடியாது. இங்க ஒரு விஷயத்தை சொல்றதுக்குள்ள நம்மளை எவ்வளவு தளர்ச்சியடைய வைக்க முடியுமோ அவ்வளவு தளர்ச்சியடைய வைச்சி, வீரியமில்லாத ஆளா மாத்திடுவாங்க. தமிழ் வார்த்தைகளில் உரையாடல்கள் எழுதினாலே பார்க்கிறவன் சிரிச்சிடுவான் வேண்டாம்னு தடுத்துடுவாங்க. என் சொந்த மண்ணில், சொந்த மொழியில் படம் எடுக்கிறதுக்கே அவ்வளவு கஷ்டப்பட வேண்டியிருக்குது.இதையெல்லாம் தாண்டி தனிப்பட்ட வாழ்க்கையில் எனக்கு இப்ப சொற்ப பொருளாதாரத் தேவை இருக்கிறது. ஊரில் அம்மாவுக்கு ஒரு வீடு, என்னை சார்ந்திருக்கிற என் தோழர்கள், தம்பிகளுக்கான தேவைகள். எப்ப சீமான்கிட்ட போனாலும் வயிறார சாப்பிடலாம், காசுக் கேட்டா கடன் வாங்கியாவது தருவாங்கிற நம்பிக்கையில் என்கிட்ட வருகிறவர்களுக்கு உதவணும். இதுக்கெல்லாம் கொஞ்சம் பொருளாதாரம் தேவை. அதுக்காக இந்தத் தொழிலை செய்ய வேண்டியிருக்குது. இதிலும் என் கொள்கைக்கு விரோதமாக நடக்க வேண்டியிருந்தால் இதை விட்டுட்டு போய் பெட்டிக்கடை வைச்சிடுவேன். விவசாயம் செய்வேன், எதுவும் சரிவரலைன்னா சாராயம் கூட காய்ச்சுவேன். எப்படியும் பிழைச்சுக்கலாம். ஆனால் கொள்கையை விட்டுக் கொடுக்க முடியாது.இதைத்தவிர சினிமாவில் இருந்துட்டே மாற்று வேலைகள் செய்யும் எண்ணமும் இருக்கு. நல்லப் படங்கள் எடுக்கிற ஒரு தயாரிப்பாளரா மாறலாம். அதுக்கு முதலில் பணம் தேவை, சீமானை நம்பி யாரும் பணம் தரலாங்கிற நம்பிக்கையை உருவாக்கணும். இதைத்தவிர நான் செய்ய வேண்டிய சமூகப்பணிகள் நிறைய இருக்கிறது. பேச்சுதான் எனக்கு ஆயுதம். பேசிப் பேசியே இவங்களை மாத்தணும். யாரோ ஒருத்தரோட பேச்சு தான் என்னை மாத்தியிருக்கு. என் பேச்சும் நிச்சயம் சிலரையாவது மாத்துங்கிற நம்பிக்கையில் தான் என் பயணம் தொடர்கிறது.  இயக்குனர் திரு.சீமான் நேர்முகம் முழுவதும் படிக்க இணைப்பை அழுத்தவும். http://keetru.com/literature/interview/seemaan.php

இன்றைய குறள்

அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை

வீரச்செயல்களுக்கும் அன்பு துணையாகத் திகழ்கிறது என்பதை அறியாதவர்களே, அறச்செயல்களுக்கு மட்டுமே அன்பு துணையாக இருப்பதாகக் கூறுவார்கள்

அறத்துப்பால் : அன்புடைமை

"ஆத்மாவைப் பற்றி மீண்டும் மீண்டும் வெவ்வேறு விதமாகச் சொன்னாலாவது சம்சாரிகள் ஆத்மாவின் பெருமையறிந்து சம்சார பந்தத்திலிருந்து விடுபட முயற்சி செய்யக்கூடும் என்று பரிவுடன் கருதி, சொன்னதையே திரும்பச் சொல்லுகிறான் வாசுதேவன்"

- ஸ்ரீ சங்கரர்

தமிழோசை

August 15, 2007

இன்றைய குறள்

அன்புற் றமர்ந்த வழக்கென்ப வையகத்து
இன்புற்றார் எய்தும் சிறப்பு

உலகில் இன்புற்று வாழ்கின்றவர்க்கு வாய்க்கும் சிறப்பு, அவர் அன்புள்ளம் கொண்டவராக விளங்குவதன் பயனே என்று கூறலாம்

அறத்துப்பால் : அன்புடைமை

"சமண மதத்தைச் சார்ந்த பெருமக்கள் இன்றும் கதிரவன் மறைவிற்குப் பின்னர் உணவு எடுத்துக் கொள்ளாமைக்குக் காரணம், இரவில் சாப்பிடும் பொழுது தவறியும் பறக்கும் பூச்சிகள் உணவில் விழுந்து இறந்து விடக்கூடாது என்னும் அருள் தன்மையே"

தமிழோசை

இந்திய சுதந்திரத்தின் 60 வருட நிறைவைக் கொண்டாடும் நிகழ்வுகள், இன்று, புதன்கிழமை நாடெங்கிலும் இடம்பெற்றன. தலைநகர் டெல்லியில், செங்கோட்டையில் நடந்த வண்ணமிகு விழாவில், தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார் பிரதமர் மன்மோகன் சிங். இன்றைய (ஆகஸ்ட் 15 புதன்கிழமை 2007) "BBC" செய்திகள் கேட்க இணைப்பில் செல்க http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml?tamil_worldnews

August 14, 2007

An eye for an eye only ends up making the whole world blind

Mahatma Gandhi

கண்ணுக்குக் கண் என்று ஒவ்வொருவரும் அஹிம்சா வழியில் இறங்கி விட்டால் ஒரு நாள் இந்த உலகமே குருடாகி நிற்கும்!

அனைவருக்கும் எனது சுதந்திரதின நல்வாழ்த்துக்கள் !! சுதந்திர தின நாளில் நீங்களும் கொடியேற்ற வேண்டுமா? "இங்கு" அழுத்தவும்!!

இன்னொரு பிறவியென்றொன்றிருந்தால் நான் மீண்டும் இந்தியனாகவே பிறக்கவேண்டும்!! ஜெய்ஹிந்த்!!!

ஒரு வெளிநாட்டவரின் குரலில் நமது "தேசியகீதம்"

வந்தே மாதரம்!!

ஜெய்ஹிந்த்!

எனது இந்தியா!

அன்பு நண்பர்களே!

இந்தியாவின் 60ஆம் சுதந்திரத் திருநாளான இன்று சீனு தாத்தா என்று அன்புடன் அழைக்கப்படு 76 வயது நிரம்பிய அன்பர் நம் நாடு ஆங்கிலேய ஆதிக்கதிலிருந்து சுதந்திரமடைந்த பொழுதுதான் கண்ட கேட்டவற்றை நினைவுகூர்கிறார்.

மஹாத்மா காந்தியடிகளின் வாழ்வில் முக்கியமான சம்பவம் ஒன்றை அவர் ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். அவ்விவரத்தைக் கீழே படியுங்கள். இதைத் தவிர இந்தியாவின் முதல் துணை ஜனாதிபதியாயிருந்த டாக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் முதல் பாரதப் பிரதமர் நேரு ஆகியோர் ஆற்றிய முதல் சுதந்திர தின உரைகளை ஒலிப்பதிவு செய்து அதனை எழுத்தில் வடித்து

http://www.mazhalaigal.com/

சுதந்திர தின சிறப்புக் கட்டுரைகளாக வழங்கியுள்ளார். அவற்றையும்
படித்து மகிழுங்கள். தாத்தா சீனு எழுதுகிறார்:
Gandhiji's Noakhali Peace Mission (From a speech under the Heading Gandhi's ' Human Touch' by Lecture by Professor Madhu Dandwate I said I will begin from the end and move backwards. I will,therefore, take you now to Noakhali. There were 'brave men' in Indiawho from house tops were saying: "Hindus are being butchered, they aresubjected to atrocities in Noakhali and we must save them." But, therewas only one Gandhi and his peace mission went to Noakhali. TheNoakhali episode and Gandhi's peace March brings out his courage aswell as compassion.
I will give some of the instances which I gatheredfrom no less a person than Sucheta Kripalani, who had accompaniedGandhi on his peace mission to Noakhali. Gandhi went from village tovillage. He carried holy books with him. He went to every village. Heappealed to all the men and women, Hindus as well as Muslims, toensure peace. They offered prayers and Gandhi made them take a pledge that they will not kill each other. But he waited for a few days inevery village to see that whatever pledges that were given were implemented. There was a moving incident at one village. Gandhivisited that village. He asked the Hindus and Muslims to come out oftheir hutments for a common prayer and a common pledge for peace. Noelderly person turned up. He waited for half an hour, not even oneHindu or Muslim turned up. Gandhi was very ingenious. He had carried aball with him and then addressing children from the village he said:"Small kids from this village, your parents are frightened of eachother but what fright you can have? Elderly Hindus and Muslims mightbe frightened of one another. But children are innocent. You arechildren of God. I am inviting you to play the game of ball.
"The Hindu and Muslim children started moving towards the dais where Gandhiwas sitting. Gandhi threw the ball at them. Boys and girls threw itback. He played for half an hour and then he told the villagers: "You have no courage but if you want that courage, induct it from yourchildren. A child belonging to the Muslim community is not afraid ofthe child belonging to the Hindu community and so also, a Hindu childis not frightened of a Muslim child. They have come together, theywere playing with me for half an hour. Please learn something fromthem. If you have no inner courage, try to emulate it from yourchildren." And one after another elders - both Hindus and Muslims -started coming. A big gathering assembled. He made them take a pledgethat they will not kill each other. He stayed there for sometime. Thenhe went from village to village and brought peace to Noakhali. Whattype of human experience he had? Horace Alexander, an eminentjournalist of those days, gave a story to one of the leaders. He saidthat when Gandhi's prayer was going on in one village, all of a suddena Muslim person pounced on him. He caught his throat.
Gandhi almost collapsed. While falling down Gandhi recited a beautiful quotation from the Quran. Hearing the words of Quran, the Muslim, instead of throttling Gandhi, touched his feet and with a feeling of guilt he said: "I am sorry. I was committing a sin. I am prepared to remain with you to protect you. Give me any work, entrust to me any task, tell me what work I should do?" Gandhi had a sense of humour and compassion. He said: "Do only one thing. When you go back home, do not tell anyone what you tried to do with me. Otherwise there will be Hindu-Muslim riots. Forget me and forget yourself. "That man went away with a feeling of repentance.

Jaihind!

இன்றைய குறள்

அன்பீனும் ஆர்வம் உடைமை அதுஈனும்
நண்பென்னும் நாடாச் சிறப்பு

அன்பு பிறரிடம் பற்றுள்ளம் கொள்ளச் செய்யும் அந்த உள்ளம், நட்பு எனும் பெருஞ்சிறப்பை உருவாக்கும்

அறத்துப்பால் : அன்புடைமை

தமிழோசை

தீவிரவாதத்திற்கு எதிரான போர் தொடரும் என்கிறார் முஷாரஃப்
பாகிஸ்தான் அதிபர் முஷாரஃப் பிரிட்டனிலிருந்து பாகிஸ்தான் சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகள் ஆவதையொட்டிய நிகழ்வுகள் இன்று பாகிஸ்தானில் அனுசரிக்கப்பட்டன.

சுதந்திரத்தின் 60 ஆம் ஆண்டு விழாவில் உரையாற்றிய பாகிஸ்தானின் அதிபர் பர்வேஸ் முஷாரஃப், தீவிரவாதத்தை ஒழிக்க தனது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.தொடர்ந்து இன்றைய (ஆகஸ்ட் 14 செவ்வாய்க்கிழமை 2007) "BBC" செய்திகள் கேட்க கீழுள்ள இணைப்பை அழுத்துக http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml?tamil_worldnews

August 13, 2007

தேவதைகளுக்கு எழுதப்பட்ட மரண சாசனம்

"எங்களை அடித்த கிபிர்களை சுட்டுவிழுத்த வேண்டும்" என்று சுருண்டிருந்த உடல் நடுங்கும் வண்ணம் வார்த்தைகள் கோபத்துடன் அவளிடம் இருந்து வந்தன. தேய்ந்து கொண்டு போன குரலிலும் இவ்வளவு கோபம் கொண்டு சொல்கிறாள், அந்த வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவின் கட்டிலில் வாடிய மலரென கிடக்கும் கௌசிகா.
அவள்தான் உதயகுமார், பாக்கியலட்சுமியின் முதல் கனவு. அவர்களை பொறுத்த வரை குடும்பத்தின் நம்பிக்கை. குமுளமுனை மகா வித்தியாலயத்தின் அனைவரும் அறிந்த உயர்தரம் பயிலும் கெட்டிக்கார மாணவி அவள். அவள் செஞ்சோலை வளாகத்தில் நடக்கும் வதிவிட தலைமைத்துவ பயிற்சி நெறியில் கலந்து கொள்ள பாடசாலை சார்பில் தயாரானாள். அதற்கு முன் "தமிழ்த்தினம்" என்னும் மாணவர்களின் தமிழ்த்திறமைக்கான போட்டி ஒன்றில் தமிழ் இலக்கண பிரிவில் போட்டியிட சென்றாள். அருகில் இருந்த முல்லைத்தீவு மகாவித்தியாலயத்தில் இருந்து கலைப்பிரியா என்னும் மாணவியும் கலந்து கொண்டாள். போட்டிக்களை முடித்துகொண்ட சில நாட்களிலேயே, செஞ்சோலை வளாகத்திற்கு தலைமைத்துவ வதிவிட பயிற்சி நெறியில் கலந்து கொள்ள வந்துவிட்டனர்.
ஒகஸ்ட் 14 ம் நாள் 2006 ஆம் ஆண்டு காலை 7 மணி செஞ்சோலை வளாகம் எங்கும் முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மிகச்சிறந்த மாணவிகளால் நிறைந்திருந்தது. அப்போதுதான் யாரும் எதிர்பார்த்திராத யாரும் கற்பனை செய்ய முடியாத அந்த சம்பவம் நடந்தேறியது. திடீரென அங்கு வந்த இலங்கை அரசின் "கிபிர்" எனப்படும் யுத்தக்குண்டு விமானங்கள் நான்கு சேர்ந்து தாழ பதிந்து பதிந்து வீசிய குண்டுகள் அங்கு கூடியிருந்த நூற்றுக்கணக்கான மாணவிகளின் உடல்களை கிழித்து ரத்தசகதியில் போட்டன. ஒலியை விட வேகம் கூடிய, இலங்கை விமானப்படையின் யுத்த விமானங்களில் ஏறத்தாழ 40 வீதமான விமானங்கள் வந்து ஒவ்வொன்றும் 250 கிலோ எடையுள்ள, யுத்தத்தில் வீசப்படும் குண்டுகளை தங்கள் மீது வீசும் என அவர்கள் கற்பனை கூடச் செய்து இருக்கவில்லை என்பதினால் அவர்கள் ஓடி ஒளிந்து தப்பித்துக் கொள்ள முடியமால் போனது. தங்களது பாடசாலைகளின் சார்பில் தமிழ்த்தின போட்டியில் கலந்து கொண்ட மாணவிகள் முதல் இரு இடங்களை பெற்றிருந்த சந்தோசச் செய்தி இரு பாடசாலைகளின் முதல்வர்களுக்கு கிடைத்தாலும் இவை எவற்றையும் அறியதவளாய் கிபிர் குண்டுகளால் கிழிக்கப்பட்ட கலைப்பிரியா உயிரற்ற உடலாக புதுக்குடியிருப்பு வைத்திய சாலையில் கிடந்தாள். அதே போல் கௌசிகாவும் மரணத்துடன் போராடிக்கொண்டு இருந்தாள்.
குண்டுகள் அவள் வயிற்றைக் கிழித்துக் குடல்களை பெருஞ்சேதம் செய்திருந்தன. மருந்துவர் அவளின் காயத்தின் நிலை பற்றி இன்னொரு மருந்துவருடன் ஆங்கிலத்தில் உரையாடியது அவளது காதிலும் விழுந்தது.
(இதுதான் கலைப்பிரியா)

கௌசிகா இனிமேல் உயிருடன் இருக்கபோவதில்லை என்பதை தெரிந்துகொண்டாள். தன்னுடன் பக்கத்தில் இருந்து சண்டை போட்டு விளையாடிய சிறுவர்கள், உறவினர்கள் எல்லாருடனும் கதைக்க வேணும் போல இருப்பதாக சொன்னாள். அவள் விருப்பப்படி ஊரே வந்து குவிந்தது. ஒகஸ்ட் 14-ம் நாள் 2006, காலை 10 மணியிருந்து 7 மணிவரை- புதுக்குடியிருப்பு வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் கௌசிகாவின் கட்டிலைச் சுற்றி அவள் பார்க்க விரும்பியவர்கள் நின்றிருந்தனர். அவள் உயிர் வலிக்க வலிக்க தனது இறுதி வார்த்தைகளை மெல்ல மெல்ல உதிர்ந்தாள்.

"அம்மா....நான் மீள முடியாது போல் இருக்கிறது என்னை கட்டிப்பிடிச்சுக்கொண்டு படுங்கோ அம்மா" "தங்கச்சி விலோ...நீ அம்மாவின்ர சொல்லை கேட்டு நடக்க வேணும், நீ ஒருத்திதான் மிஞ்சப்போகின்றாய் கவனம்" "அப்பா நீங்கள் இனிமேல் குடிக்க கூடதப்பா" சிங்களப் படைக்கு முன்னால் மாணவர்களும் எதிரியாச்சு, இனி மாணவர்கள் மாணவராக இருந்தால் போதாது அவன் நினைக்கிற மாதிரியே எதிரியாகவே மாற வேண்டும்" "எங்களை அடித்த கிபிர்களை சுட்டுவிழுத்த வேண்டும்" அம்மம்மா, அன்ரி, சித்தப்பா, மாமா, அப்பப்பா எல்லாரும் எனக்கு சோடா பருக்குங்கோ, அம்மா உன்னை பிரியும் காலம் வருகுது.

என்னை கட்டியணைம்மா..." "எல்லாரும் எனக்கு சோடா பருக்குங்கோ" "அம்மா என்னை கொஞ்சிக்கொண்டு படு அம்மா" "கஜி...தேவாரம் பாடு" "பாய்....பாய்....பா....ய்ய்...இரவு 7.15 மணியளவில் எல்லோருடைய வேண்டுதல்கள், நேர்த்திகள், அழுகைகள் தாண்டி அவள் கையசைப்புடன் அவர்களிடம் இருந்து விடைபெற்றாள்

(ஒகஸ்ட் 14 ஆம் நாள் ஈழத்தின் செஞ்சோலை சிறுவர் இல்ல வளாகத்தில் வதிவிட பயிற்சி நெறியில் ஈடுபட்டிருந்த 52 மாணவிகள் இலங்கையரசின் விமானப்படை விமானங்களால் குண்டு வீசிக் கொல்லப்பட்டனர்)

"நமது கொடிவந்த கதை"

The story relating to the different stages and landmarks in the evolution of our national flag is indeed inspiring:The historic dates and landmarks are:
  • 1906: Three colours: Saffron with eight stars across, white with Vande Mataram and green with moon to right and sun to left. This flag was proposed by some Indians in England and France who thought of an 'Indian National Flag'. Not recognised in India.
  • 1916: Two colours: Red and green, with five red and four green stripes. Emblem of Great Bear. Union Jack at top left. In vogue during 'Home rule days'.
  • 1921: Three colours: White, green and red, with Charkha across all colours. Sponsored by Mahatma Gandhi at the Bezwada Session of the Indian National Congress (this flag was informally used at all sessions of the Congress till 1931, though not officially accepted/adopted by the Congress).
  • March, 1931: One colour: Saffron with Charkha at top left. This flag was proposed by a committee appointed by Working Committee after Karachi Congress. This flag was not approved by Working Committee.
  • August, 1931:Three colours: Saffron, white and green, Charkha in blue colour in middle across white strip. Length and breadth in proportion of 3:2. Proposed by Congress Working Committee. Form of Flag suggested by Mahatma Gandhi retained with slight changes in order of colours and position of Chakra. Accepted by AICC officially in Bombay in August 1931.

  • August 15, 1947: The present tricolour National Flag was adopted.

இடஒதுக்கீடு பகுதி 2

நமது இந்தியா

சுதந்திர நன்னாள் நெருங்குகிற வேளையில் நமது இந்தியா பற்றிய சில விசயங்கள். இணைப்பில் செல்க http://navneethsmart.googlepages.com/IndiaAtAGlance.pps

இன்றைய குறள்

அன்போ டியைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு
என்போ டியைந்த தொடர்பு

உயிரும் உடலும்போல் அன்பும் செயலும் இணைந்திருப்பதே உயர்ந்த பொருத்தமாகும்

அறத்துப்பால் : அன்புடைமை

"புத்தாடை உடுப்பவன் போல் மகிழ்ச்சியடைய வேண்டும்"

- ஸ்ரீ இராமானுஜர்

August 12, 2007

60 வது சுதந்திரப் பொன்விழா

நமது 60 வது சுதந்திரப் பொன்விழாவைக் கொண்டாடப்போகும் இந்த மகிழ்ச்சியான வேளையில், எத்தனையோ மாவீரர்கள் சுதந்திர தாகம் கொண்டு விடுதலைப்போரை துவக்கி வைத்து தன் உடல், பொருள், ஆவி அனைத்தையும் இந்த மண்ணுக்காகவும், எதிர்காலத்தில் வரப்போகும் சந்ததியினருக்காகவும் மாண்டு போன மாவீரர்களை இந்த நாட்களில் நினைவுகூர்வோம். சுதந்திரம் என்றவுடன் நமக்குக் காந்தி போன்றவர்கள்தான் முதலில் நினைவுக்கு வருவர், என்னைப்பொருத்தவரையில் காந்தியடிகள் மாண்டுபோன மகான்களின் வழித்தோன்றலே! காந்தியடிகள் பிறப்பதற்கு முன்னமே கூட சுதந்திர வெறியால் வீர மரணம் நீத்த எத்தனையோ தியாகிகளின் பெயர்கள் கூட நமக்கு நினைவுகளில் இல்லாமல் போய்விடலாம். அந்த வரிசையில் இங்கே சிலர்.... இணைப்பில் பிரயாணிக்கவும்.http://navneethsmart.googlepages.com/60thindependencedayspl_part2.zip

இன்றைய குறள்

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு

அன்பு இல்லாதவர், எல்லாம் தமக்கே என உரிமை கொண்டாடுவர், அன்பு உடையவரோ தம் உடல், பொருள், ஆவி ஆகிய அனைத்தும் பிறருக்கென எண்ணிடுவர்

அறத்துப்பால் : அன்புடைமை

"கடல் இருந்தபடி இருக்க அதனுள் நீர் இடம் மாறி அமைகிறது, ஆறாக ஓடுகிறது பனிக்கட்டியாக உறைகிறது, இது போன்றே ஆத்மாவில் மாறுதல் இல்லை, ஆதலால் ஆத்மா நித்தியமானது"
- சுவாமி சித்பவானந்தர்

தமிழோசை

இன்றைய (ஆகஸ்ட் 12 ஞாயிற்றுக்கிழமை 2007) "BBC" செய்திகள் கேட்க இணைப்பில் செல்க http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml?tamil_worldnews

செவ்வணக்கம் தோழர்களே

மேற்கண்ட பொருளின் தமிழாக்கமும், தொடர்பும் இங்கே தரப்பட்டுள்ளது. சில மணித்துளிகள் செலவிட்டு தமிழர்கள் அனைவரும் தங்களின் உணர்வை வெளிப்படுத்த வேண்டுகிறேன்.

மொழிமற்ற அனுபமின்மையாலும், நேரக்குறைவினாலும் சிலப்பல குறைகள் காணலாம். இதன் ஆங்கில வடிவம் தொடர்பு முகவரியில் காணக்கிடைக்கும்.

------------------------------------------------------

பெறுனர் : சப்பான் அரசு

அனுப்புனர்:

பேச்சுரிமயற்றவர்களின் மனித உரிமைக்கான ஆசுதிரேலியர்கள் (AHRV),
அ.பெ.எண்-991,
சிற்றாத் ஃபீல்டு,
NSW- 2135, ஆசுதிரேலியா.

ஆகசுட்டு - 2007


மான்புமிகு சின்ச்சோ அஃபே,

சப்பான் தலைமை அமைச்சர்.


பிரதிகள்:

திரு.எரிக் சோல்ஃகைம் - அமைச்சர்-அனைத்துலக முன்னேற்றம், நோர்வே,

திரு.ரிச்சர்டு பெலிட்ச்சர் - துணை அமைச்சர், அமெரிக்கா,

திரு. யாசுசி அகாசி, சிறப்புத்தூதுவர், சப்பான்,

திரு.ஆண்ற்றியாசு மைக்கேலிசு, பொது இயக்குனர், அய்ரோப்பிய ஒன்றிய சனாதிபதியம்,

திரு.சேம்சு மோர்ரன், இணைப் பொது இயக்குனர், அய்ரோப்பிய ஒன்றியம்.


மதிப்புயர் தலைமை அமைச்சர் அவர்களுக்கு,


இலங்கைத் தமிழர்கள் மீதான வன்படுகொலைகள் மற்றும் மனித உரிமை மீறல்கள்.

AHRV என்பது ஆசுதிரேலியாவில் பதிவு செய்யப்பட்ட பேச்சுரிமையற்றவர்களாகவும், தங்களுக்கென போராடும் சக்தியற்றவர்களாகவும் உள்ள பாதிக்கப்பட்ட மக்களுக்காக வாதாடும்/போராடும் அமைப்பாகும். இக்கடிதம் இலங்கையில் படுகொலை மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு உள்ளாக்கப்படும் இலங்கைத் தமிழர்களைக் குறித்தானது.

சுதந்திர தமிழர் வாழ்விடத்திற்க்காக போராடும் விடுதலை புலிகளுக்கும் இலங்கை அரசிற்கும் இடையே தொடர்ந்து நடைபெற்று வரும் ஆயுதப்போராட்டம் தாங்கள் அறிந்த்தே.

கடந்த இரண்டு ஆண்டுகளாக தங்களின் பிரதிநிதி திரு. யாசுகி அகாசி அவர்கள் பலமுறை இலங்கைக்குச் சென்று இருதரப்பிற்கும் இடையே சமாதானம் ஏற்ப்படுத்தும் முயற்ச்சி தோல்வியில் முடிவது அறிந்த்தே. இம்முயற்ச்சிகளுக்கு எங்களின் நன்றி, மேலும் தொடர்ந்து மிகுந்த விருப்பத்தோடு செய்துவரும் பணிக்களுக்கு நாங்கள் மிகவும் கடைமமைபபட்டுள்ளோம்.

அதிபர் ராசபக்சே பதவியேற்றப்பின் தமிழர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள், சிம்பாவேயில் அதிபர் முகாபேயும், ஈராக்கில் அதிபர் சதாமும் செய்ததற்கு இணையானதாகும்.

தமிழர்கள் பாதுகாப்போடும், தன்மானத்துடனும் அவர்களின் சொந்த மண்ணிலே கூட வாழமுடியாமல், அதிபர் ராசபக்சேவினால் திட்டமிட்டும், தீவிரமாகவும் படுகொலைகள் செய்யப்படுவதாக நாங்கள் நம்புகின்றோம்.

வான்வழி தாக்குதல்களாலும், நீதியற்ற முறையிலும், கடத்திக் கொண்டு செல்லப்பட்டும், மன உளைச்சலை ஏற்ப்படுத்தியும், உடல் வழியாகவும் தமிழர்களுக்கு எதிராக மனித உரிமை மீறல்கள் தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்டு வருகிறது.

மாணவர்கள், பத்திரிக்கையாளர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் வாயை அடைப்பதற்க்காக அவர்கள் கொல்லப்படுகின்றனர்.

வழிபாட்டுத்தலங்கள் மீது தாக்குதல், உணவு மற்றும் மருந்துப் பொருள்களின் பறிமற்றம், வினியோகம் தடை செய்யப்பட்டுள்ளது, தமிழர்கள் தம் சொந்த வீட்டிலிருந்தும் மண்ணிலிருந்தும் விரட்டப்படுகின்றனர். அவர்கள் உயிர் வாழத்தேவையான அனைத்தும் மறுக்கப்படுகிறது. குழந்தைகளுக்கு கல்வி மறுக்கப்படுகிறது. கல்விச்சாலைகளும் வழிபாட்டுத்தலங்களும் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

உள்நாடு மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்த தொண்டு புரியும் ஊழியர்கள் கடத்திச் செல்லப்பட்டும், கொல்லப்பட்டும் உள்ளனர். தமிழர் பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்ட தமிழர்களை சந்திக்கவும் இவர்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளது.

இலங்கை விடுதலைப்பெற்ற பின் 35 ஆண்டுகளாக சிறுபான்மைத் தமிழர்கள் தங்கள் உரிமைக்காக பல்வேறு அமைதிப்போராட்டங்களை நடத்தியும், நல்ல தீர்வு கிடைக்காததாலேயே கடந்த 25 ஆண்டுகால ஆயுதமேந்திய போராட்டம் தொடர்கிறது.

பல்வேறு உடன்பாட்டை தமிழ் அரசியல் கட்சிகள் மதிது ஏற்றுக்கொண்டபோதிலும், பெரும்பாண்மை சிங்களர் அரசுகள் அவற்றை மதிது நடந்ததில்லை.

சமீபத்தில், பல்வேறு உலகலாவிய மனித உரிமை அமைப்புகளும், அரசுகளும் இலங்கை அரசின் தீவிரவாத ஆதரவுப்போக்கினை கண்டித்துள்ளன,
சப்பானைத் தவிர்த்த நாடுகள் ஒன்றினைந்து இலங்கைக்கான பொருளாதார உதவியை நிறுத்திவைத்துள்ளன். இலங்கையானது தங்களது போர்த் தேவைகளுக்கு வெளிநாட்டு உதவியை எதிர்பார்த்தே உள்ளது. அரசாங்கம் நடத்திவரும் தமிழர்களுக்கெதிரான படுகொலைகு உதவிட ஏனைய பிற பொருளாதாரத்தை திருப்பிவிட ஏதுவாக வெளிநாட்டு உதவிகள் அமைந்துள்ளது. எனவே, இலங்கைக்கு சப்பான் செய்யும் உதவியானது தமிழர்களுக்கு எதிரான படுகொலைக்கும் போருக்கும் உதவிட்டதாகவே அமையும்.

மேலும் கடந்த 5 ஆண்டுகளில் தங்கள் அரசாங்கம் மிகப் பெருமளவிலான பொருளாதார உதவியை இலங்கை மக்கள் வாழ்வியல் முன்னேற்றத்திற்க்காக அளித்துள்ளது அனைவரும் அறிந்த்தே. இவ்வுதவியானது வடகிழக்குப் பகுதிகளுக்கும் சம அளவில் உதவியிருக்கும் என்ற தங்களின் எதிபார்ப்பு இயற்க்கையானதே.

ஆனால், மிகச்சொற்ப அளவிலேயே தமிழர்கள் வாழும் பகுதிகளுக்கு உதவி செய்யப்பட்டுள்ளது என்பதை எங்களால் உறுதியாகக் கூறமுடியும். புவியமைப்படியிலான உதவி செய்த வரவு செலவு கணக்குகளை இலங்கை அரசிடமிருந்து பெறப்படுமானால் இதை எங்களால் நிரூபிக்க முடியும்.
இலங்கை அரசின் இத்தைகைய மோசமான மனித உரிமை மீறல்களை நிறுத்தும் வரை, பிற நாடுகள் செய்தது போல, தங்கள் அரசும் இலங்கைக்கு வழங்கிவரும் அனைத்து உதவிகளையும் நிறுத்தி வைக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

மேலும், இலங்கை அரசானது அதிகரித்து வரும் மனித உரிமை மீறல்களை அர்த்தமுள்ள நேர்மையான நடவடிக்கையின் மூலம் நிறுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறோம்.

நன்றி.

ஒப்பம். இதை ஆதரிக்கும் தனிமனிதர்களும் சங்கங்களும்

உணமையுள்ள,

ஒப்பம்.

தொடர்பு : http://www.petitiononline.com/GLOBE/petition.html

August 11, 2007

பாலு மகேந்திரா

இட ஒதுக்கீடு பற்றிய பதிவு பகுதி 2

இட ஒதுக்கீடு பற்றிய பதிவு பகுதி 3

இன்றைய குறள்

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புண்கணீர் பூசல் தரும்

உள்ளத்தில் இருக்கும் அன்பைத் தாழ்ப்பாள் போட்டு அடைத்து வைக்க முடியாது. அன்புக்குரியவரின் துன்பங்காணுமிடத்து, கண்ணீர்த்துளி வாயிலாக அது வெளிப்படும்

அறத்துப்பால் : அன்புடைமை

"அரசனுடைய காமக்கிழத்தி தெருப்பிச்சைக்காரனைக் கண்ணெடுத்தும் பார்க்க மாட்டாள்"

- ஸ்ரீ இராமகிருஷ்ணர்

தமிழோசை

இன்றைய (ஆகஸ்ட் 11 சனிக்கிழமை 2007) "BBC" செய்திகள் கேட்க இணைப்பில் செல்க http://www.bbc.co.uk/mediaselector/check/tamil/meta/tx/tamil_1545?size=au&bgc=003399&lang=ta&nbram=1&nbwm=1

August 10, 2007

ஹரிஹரன் ஜெயா டிவி-யில் I

ஹரிஹரன் ஜெயா டிவி-யில் II

நான் பாமரன்..முரட்டுத்தனமானவன்.. கஞ்சா கருப்பு

பல தீபாவளிகள் தன் வறுமையால் கொண்டாட முடியாமல் போனதுண்டாம். "என் கஷ்டம் என்னோடு போகட்டும் எல்லாரும் சந்தோசமா இருக்கணும். எனக்கு கஷ்டம் வர்றப்ப நான் நினைப்பது என்ன தெரியுமா என் கஷ்டம் இனி யாருக்கும் வரக்கூடாதுன்னுதான்" என்கிற கருப்புவை இயக்குனர் பாரதிராஜா அழைத்து ராம் பட நடிப்பை ஒரு மணிநேரம் பாராட்டினாராம். அதுமட்டுமல்ல பதினாறு வயதினிலே படத்தில் ரஜினிக்கு கொடுத்த பரட்டை ரோல் மாதிரி உனக்கு ஒன்று தர்றேண்டா என்று வாக்கு கொடுத்திருக்கிறாராம். சொல்லும் போதே வாயெல்லாம் பல்லாகிறது கருப்புக்கு.

இவரது பெயர் கருப்புராஜா. ராம் படம் மூலம் கஞ்சா கருப்பு ஆனார். சொந்த ஊர் சிவகங்கை. சினிமா ஆர்வம் உந்தித்தள்ள ஊரில் பொறுப்பற்று திரிந்து கொண்டிருந்தவரை சென்னைக்கு அழைத்து வந்தவர் பாலா. பிதாமகன் படத்தில் திரை தரிசனம். அமீரோ ராம் மூலம் அழுத்தமாக அடையாளம் காட்டினார். அதன் பின் மளமளவென படங்கள் வரவே பதினைந்தை தாண்டிவிட்டார் எண்ணிக்கையில். கருப்பை கேட்டால் எனக்கு எண்ணிக்கை முக்கிதமில்லண்ணே கொஞ்ச நேரம் வந்தாலும் சனங்க மனசுல நிக்கனுமிண்ணே" என்கிறார். தொடாந்து படியுங்கள்... http://www.webulagam.com/cinema/vip/0610/14/1061014002_1.htm

"அருட்பெருஞ்சோதி என்னும் அமுதக் கள் உண்டவன் கீழான உடல் இன்ப இச்சையில் உழன்று ஆட மாட்டான்"

- வடலூர் இராமலிங்க சுவாமிகள்

இன்றைய குறள்

மகன் தந்தைக் காற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்லெனும் சொல்

"ஆகா! இவனைப் பிள்ளையாகப் பெற்றது இவன் தந்தை பெற்ற பெறும்பேறு" என்று ஒரு மகன் புகழுப்படுவதுதான், அவன் தன்னுடைய தந்தைக்குச் செய்யக்கூடிய கைம்மாறு எனப்படும்

அறத்துப்பால் : மக்கட்பேறு

இந்தியர் வளர்ச்சியும், கறுப்பினத்தவர் கசப்பும்

தென்னாப்பிரிக்க கரும்புத் தோட்டங்களில் ஒப்பந்தக் கூலிகளாக வேலை செய்ய சென்ற இந்தியர் வெள்ளையர் அடக்கு முறைகளையும் மீறி சமூக, பொருளாதார ரீதியில் வளரத் தொடங்கினர்.

இந்த வளர்ச்சி பெரும்பான்மை கறுப்பின மக்கள் மத்தியில் தவறான அபிப்பிராயங்களைத் தோற்றுவித்தது. இந்தியர்கள் தம்மைச் சுரண்டி வாழ்கிறார்கள் என்று அவர்கள் எண்ண ஆரம்பித்தனர். இந்த எண்ணத்துக்கு வெள்ளை இன நிறவேற்றுமை அரசு எண்ணெயூற்றியது.
கடைசியில் 19949இல் கறுப்பின மக்களுக்கும் இந்தியருக்கும் இடையில் பெரும் கலவரம் மூண்டது. அதில் பல இந்தியர் கொல்லப்பட்டனர். சொத்துக்கள் சூறையாடப்பட்டதுடன் தீக்கிரையாக்கப்பட்டன. இந்தியப் பெண்ணெருத்தியின் வயிறு கிழிக்கப்பட்டு அதற்குள் பால்மா டின்கள் அடைக்கப்பட்டன.

கலவரம் முடிந்ததும் இரு தரப்புத் தலைவர்களும் ஒன்று சேர முற்பட்டனர். இதை வெள்ளையரின் நிறவேற்றுமை அரசு விரும்பவில்லை. சட்ட ரீதியாக நிற வேற்றுமையைத் திணிக்கத் தொடங்கியது. இந்திய வம்சாவழியினர் வாழ்ந்த இடங்களை விட்டு, வீடு வாசல், வியாபாரங்களை விட்டு அகற்றப்பட்டு வேறு இடத்தில் குடியேற்றப்பட்டனர். சட்டத்தின் மூலம் ஏற்படுத்தப்பட்ட இனப் பாகுபாடு சிறியவர் முதல் பெரியவர் அனைவரையும் பாதித்தது.

கறுப்பினத் தலைவர்களும், இந்தியத் தலைவர்களும் விழிப்புணர்வு பெற்று வெள்ளையரின் நிறவேற்றுமை ஆட்சிக்கு எதிராகக் கைகோர்த்து உரிமைப் போர் நடத்தத் தொடங்கினர். இப்படிப் பல பேராட்டங்களைக் கண்டு தென்னாப்பிரிக்கத் தலைவர்கள் நெல்சன் மன்டேலா, வால்டர் சிசிலு ஆகியோருடன் சிறை சென்ற இந்தியரான அகமத் கத்ரடாவும் இந்த நிகழ்ச்சியில் பேசுகிறார். http://www.bbc.co.uk/tamil/highlights/story/2004/11/041030_safrica.shtmlமேலும் தொடர்ந்து இன்றைய (ஆகஸ்ட் 10 வெள்ளிக்கிழமை 2007) "BBC" செய்திகள் கேட்க கீழுள்ள இணைப்பில் செல்க

உதவும் கைகளும் கால்களும்

பிறப்பதற்கும், செத்துப் போவதற்கும் இடையே மனிதனுக்கு எத்தனை போராட்டங்கள், இலக்குகள், தோல்விகள், தற்காலிகமானதும், நிரந்தரமனாதுமான சந்தோஷங்கள்? இவற்றுக்கு மத்தியில் மற்றவர்களைப் பற்றி சிந்திப்பதற்கும், நேரம் ஒதுக்குவதற்கும் நம்மைப் போன்ற சாதாரண நடுத்தர வர்க்கத்தினரால் முடிவதில்லை.


பிச்சைக்காரனுக்கு ஒரு ரூபாய் போடுவது, கோவில் உண்டியலில் பணம் போடுவது, திருப்பதியில் கால் கடுக்க வரிசையில் நின்று மொட்டை போடுவது என எதையாவது செய்து பாவங்களைப் போக்கவும், நிம்மதியை நாடவும் முயற்சிக்கிறோம். ஆனாலும், உலகம் survival of the fittest என்ற டார்வின் நியதின் அடிப்படையிலேயே இயங்குகிறது. அவனவனுக்கு வேண்டியதை அவனவன்தான் செய்துகொள்ள வேண்டும்; யாரும் யாரையும் தூக்கிவிடுவது இயற்கைக்குப் புறம்பானது என்பது எழுதப்படாத விதியாகவே இருந்து வந்திருக்கிறது.


உதவுவதற்கான மனம் இருந்தாலும் பல பேருக்கு சூழ்நிலை அனுமதிப்பதில்லை. சுருக்கமாகச் சொன்னால்.. "காசு பணம் வேண்டுமானால் தரலாம். ஆனால், நம்முடைய நேரத்தை ஒதுக்கி சமூக சேவையில் ஈடுபட முடியாது" என்ற நிலைமை. இருந்தாலும், காசு கொடுத்தால் சரியாக, நேர்மையாகக் கையாண்டு வேலை செய்வார்களா என்ற சந்தேகம்
தவிர்க்க இயலாதது. சேவையை மட்டுமே மனதில் கொண்டு தம்முடைய வாழ்க்கையையின் முன்னேற்றத்தைக் காட்டிலும் பிறருக்காக நேரம் செலவிடும் மனிதர்களால் நடத்தப்படும் அமைப்புகளைப் பற்றிய செய்தி நம்மை வந்தடையாமலே நின்றுவிடுகிறது. ஒரு வேளை அவை தெரிய வந்தால் நமது பணமும், அவர்களது நேரமும் ஒன்றாகச் சேர்ந்து
சமுதாயத்திற்கு உதவட்டும் என நினைப்போம்.

அப்படிப்பட்ட அர்ப்பணிப்பு உணர்வுள்ள இரண்டு மனிதர்களைப் பற்றிய அறிமுகமே இந்தப் பதிவு.

முதலாமவர் தமிழர்.
இவரது பெயர் சிதம்பரநாதன். இளம்பிள்ளை வாதத்தில் இரண்டு
கால்களும் பாதிக்கப்பட்டு சக்கர நாற்காலியில் சுழல்கிற மனிதர்.

இவர் கடந்து வந்த பாதை சாதாரணமானதல்ல. தமிழ்நாடு ஊனமுற்றோர் மறுவாழ்வுக்கான அமைப்பு ஒன்றை 'Tamil Nadu Handicapped Federation Charitable Trust' என்ற பெயரில் நிறுவி அதன் தலைவராக இருந்து வருகிறார். வறுமையில் வாடும் ஊனமுற்றோருக்கு வேண்டிய சக்கர நாற்காலி, தையல் இயந்திரம் முதலிய உதவிகளை இந்த அமைப்பு செய்துவருகிறது. மேலதிக விவரங்களுக்கு கீழுள்ள சுட்டியைக் காணுங்கள்.

http://www.tnhfctrust.in/home.htm
http://www.chennaionline.com/health/hopeislife/08life10.asp

மிகுந்த தன்னம்பிக்கை அளிக்கிறது இவரது கதை. ஊனம் என்பது தடையல்ல என்பதை உணர முடிவதோடு ஒரு தனி மனிதனால் இவ்வளவு செய்ய முடியுமா என்றும் மலைப்பு உண்டாகிறது.

இந்த அமைப்பு செய்து வரும் பணிகளை நேரில் பார்வையிடவோ அல்லது தொலைபேசி மூலம் கேட்டுத் தெரிந்து கொள்ளவோ விரும்பினால் கீழ்க்கண்ட முகவரியை அணுகலாம்.

TAMILNADU HANDICAPPED FEDERATION CHARITABLE TRUST
NO.21 AA,
Earikarai Salai,
Kottur,Chennai - 600 085.
Tamilnadu, India
Ph : + 91 44 - 32927664
Fax : + 91 44 – 24405584

உங்களுடை நேரத்தையோ அல்லது பணத்தையோ இவர்களுக்காக சற்று ஒதுக்க முடியுமென்றால் மகிழ்ச்சி.

இரண்டாமவர் பெங்காளி.
பெயர் பார்த்தா பாக்சி (Partha Bagchi) 24 வயது வரை திக்குவாய் பிரச்சினையால் பெருத்த அவமானத்திற்கு ஆளாகி, அதன் பிறகு தானாகவே
பயிற்சி எடுத்து அந்தச் சிக்கலில் இருந்து விடுபட்டவர். "Stammering is not a
disease, it is a habit, bad habit indeed" என்று தனது சொந்த அனுபவத்தில் கூறுகிற இந்த மனிதர் தனக்கு உதவிய டெக்னிக் எல்லாவற்றையும் ஒன்றாகத் திரட்டி பிற திக்குவாயர்களுக்குப் பயிற்சி அளித்து வருகிறார். இது குறையே கிடையாது. சராசரி மனிதனின் மூளையை விட வேகமாகச் சிந்திக்கும் மூளை சிலருக்கு அமைந்து விடுவதுண்டு. காட்டாறு போன்ற அந்த எண்ணத்தை வேகமாகக் கொட்டி விரைவாகப் பேசி முடிக்க நினைக்கிறவர்களுக்கு சிந்தனை-பேச்சு இரண்டும் வெவ்வேறு வேகத்தில் அமைந்து பேச்சில் தடுமாற்றத்தைத் தருகிறது என்கிறார். இது மருந்து மாத்திரைகளால் குணப்படுத்துவதற்கு வியாதியல்ல. மாறாக, மனவியல் சார்ந்த பிரச்சினை என்கிறார். இரண்டு வாரம் பெங்களூரில் தங்கி இவரது வகுப்புகளில் பங்கெடுத்தால் நிச்சயமான முன்னேற்றம் ஏற்படும். அதற்கு மேலும் சுயமாக பயிற்சி தொடர வேண்டும். After all, old habits die hard.

மேலதிக விவரங்களுக்கு. http://www.stammeringcurecentre.com

இந்த இரண்டு மனிதர்களையும் காணும் போது ஒன்று நமக்குப் புரிகிறது. குறைபாடு என்ற ஒற்றைக் காரணத்தினால் துவண்டு போகாமல், தமது சொந்த வாழ்க்கையைச் செம்மையாக அமைத்துக்கொண்டதோடு நின்று விடாமல், மற்றவர்களுக்கும் வழி காட்டுகின்றனர். இரண்டு பேருக்குமே ஆதரவான வாழ்க்கைத் துணை கிடைத்ததுதான் அவர்களுக்கு பெரும்
ஊக்க சக்தியாக இருந்து இயக்குவிக்கிறது என நான் கருதுகிறேன். தன்னை நிரூபித்தாக வேண்டிய கட்டாயம் இல்லாமல் கிடைக்கக் கூடிய நிபந்தனையற்ற அன்புக்கும், ஆதரவுக்கும், காதலுக்கும் அத்தகைய மகத்தான சக்தி இருக்கிறது. அந்த வகையில், உடல் ரீதியாக குறைபாடு இல்லாத எத்தனையோ பேர் மனதளவில் ஊனப்பட்டுக் கிடக்கிறார்கள் என்றே தோன்றுகிறது.

இந்தப் பதிவினைக் காண நேரிடுகிறவர்களுக்கு சில வேண்டுகோள்கள்.

1. உதவ மனமும், பணமும் உள்ளவர்கள் திரு. சிதம்பரநாதன் அவர்கள் நடத்தும் அமைப்பைத் தொடர்பு கொள்ளவும். அல்லது அது பற்றிய தகவலை பிறருக்குத் தெரியப்படுத்தவும்.

2. உங்களுக்குத் தெரிந்தவர்கள் யாராவது பதட்டமாக தடுமாறிப் பேசினால் அவர்களிடம் Stammering Cure center குறித்து பக்குவமாகத் தெரியப்படுத்துங்கள். இந்தியா முழுவதும் இரண்டு கோடி திக்குவாயர்கள் உள்ளதாக சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

3. இனிமேல் சினிமாவில் ஊனமுற்றவர்கள், அரவாணிகள், திக்குவாயர்கள், சொட்டைத் தலையர்கள் பற்றிய ஜோக் எதாவது வந்தால், குறைந்த பட்சம் ஒரு தடவையாவது சிரிக்காமல் இருக்க முயன்று பாருங்கள்.
திருடர்களும், பிச்சைக்காரர்களும், ஜோசியக்காரர்களும் இல்லாத சமுதாயத்தை அமைப்பது மட்டும் நமது கடமையல்ல. சுய பச்சாதாபம் என்பது வேதனை கலந்த போதை. அதிலிருந்து சில பேரையாவது மீட்டெடுப்பதும் நமது கடமைதான்.

August 09, 2007

உங்கள் குழந்தைகளிடம் செக்ஸ் பற்றிப் பேசியிருக்கிறீர்களா?

"மாறன் பிரதர்ஸ்"

இன்றைய குறள்

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்

நல்ல மகனைப் பெற்றெடுத்தவள் என்று ஊரார் பாராட்டும் பொழுது அவனைப் பெற்றபொழுது அடைந்த மகிழ்ச்சியைவிட அதிக மகிழ்ச்சியை அந்தத் தாய் அடைவாள்
அறத்துப்பால் : மக்கட்பேறு

கார்ப்பண்யம்
மனத்தின் கண் அமைந்துள்ள ஏழ்மையானது கார்ப்பண்யம் எனப்படுகிறது. பிறர் பார்த்து இரங்கி வருந்துதற்கேற்ற நிலையும் கார்ப்பண்யம். ஒரு நெருக்கடியில் மனதினுள் வருவித்துக் கொண்ட தளர்வும் துயரமும் அதன் கண் உண்டு"

- சுவாமி சித்பவானந்தர்

தமிழோசை

  • இட ஒதுக்கீடு தொடர்பாக தொடர்ந்து இந்திய உச்ச நீதிமன்றத்தில் விசாரணை
  • மடுமாதா ஆலயத்திற்கான மடுக்கோவில் வீதி திறக்கப்படமாட்டாது என அறிவிப்பு
  • சர்வதேச தன்னார்வப் பணியாளர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கான சேவைகளை வழங்க இலங்கை உத்தரவாதம்
  • இலங்கையின் கிழக்கே மிதிவெடிகள் குறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகள்.... தொடர்ந்து இன்றைய (ஆகஸ்ட் 09 வியாழக்கிழமை 2007) "BBC" தமிழோசை செய்திகள் கேட்க இணைப்பில் செல்க..http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml?tamil_worldnews

August 08, 2007

இன்றைய குறள்

தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது

பெற்றோரைக் காட்டிலும் பிள்ளைகள் அறிவிற் சிறந்து விளங்கினால், அது பெற்றோருக்கு மட்டுமேயன்றி உலகில் வாழும் அனைவருக்கும் அக மகிழ்ச்சி தருவதாகும்
அறத்துப்பால் : மக்கட்பேறு

"உலகில் பாவம் என்பது உண்டு என்றால் அதுதான் பயமும் பலஹீனமும். இந்த ஒரு சுலோகத்தை ஒருவன் படித்தால் கீதை முழுதும் படித்த பயன் எய்துகிறான். இந்த ஒரு சுலோகத்தில் கீதையின் இரகசியம் முழுவதும் அடங்கியுள்ளது"

- சுவாமி விவேகானந்தர்

தமிழோசை

இன்றைய (ஆகஸ்ட் 08 புதன்கிழமை 2007) "BBC" கேட்க இணைப்பில் செல்க http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml?tamil_worldnews

புதிதாக வரப்போகும் டாடாவின் டைட்டேனியம் டை ஆக்ஸைடு தொழிற்சாலை பற்றிய ஒரு கண்ணோட்டம்

Part II

August 07, 2007

  • 'நான்' எங்கிருந்து வருகிறேன்?
  • 'நான்' எதனை நோக்கிப் பயணிக்கிறேன்?
  • இந்த 'முதலுக்கும்' 'முடிவுக்கும்' இடையில் 'நான்' யார்?
  • எத்தனை கல்பகாலத்திற்கு 'நான்'?
  • விரஹத்தில் உழல்வது மட்டுமே இந்த 'நான்' லீலைகளின் பிரதானமா?
  • பிரளயமற்றவனா?
  • முடிவென்பதில்லையா?
  • அனந்த சயனமற்ற உயிரா 'நான்'?
  • 'பிறவி பற்றிய பிரக்ஞையற்று என்னை 'நீ' 'சுமந்து செல்கிறாய்.
  • உன் எண்ணம், பார்வை, குரல், இயக்கம் அனைத்தும் நான். நீ விழும்போது விழுந்து எழும்போது எழுந்திருக்கிறேன். ம்..
  • 'நீ ' ஓடுவது எதற்காகவென்றும் எனக்குப் புரிகின்றது.
  • ஜீவாத்மாவில் பாசி படிந்துவிடக்கூடதென்கின்ற அக்கறை

அசட்டுப்பிள்ளையே! உன் பாதை முழுக்க பாசியாகவுள்ளதை அறிவதெப்போது? என்னைத் துலக்க நீ துலங்கியாகவேண்டும். துலக்க உதவும் பொருட்களுக்கா பஞ்சம்? கொஞ்சம் முனைப்பு வேண்டும். 'நாம் இருவருமே பிரம்மத்தின் கூறுகள்.. நிலையற்ற இன்பங்கைளைத் தேடி பிறவிகளின் எண்ணிக்கையைக் கூட்டிக் கொள்ளாதே. ஞானம் பெறு! கட்டுகளை விலக்கு! உண்மை இன்பம் விளங்கும். கேட்டல், சிந்தித்தல், தெளிதல் செயற்பாடுகளில் எனக்கு முத்தி கொடு. எல்லாம் பிரம்மம் எனபதை 'நீ' அறிவாயாக!

- நீலக்கடல்

நாகரத்தினம் கிருஷ்ணா

இன்றைய குறள்

தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்

தந்தை தன் மக்களுக்குச் செய்யவேண்டிய நல்லுதவி அவர்களை அறிஞர்கள் அவையில் புகழுடன் விளங்குமாறு ஆக்குதலே ஆகும்

அறத்துப்பால் : மக்கட்பேறு

தமிழோசை

இன்றைய (ஆகஸ்ட் 07, செவ்வாய்க்கிழமை) "BBC" செய்திகள் கேட்க இணைப்பில் செல்க http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml?tamil_worldnews

ஓவிய(ம்)த்தில் பெண்க(ளில்)ள்!!

August 06, 2007

இன்றைய குறள்

குழலினி தியாழினி தென்பதம் மக்கள்
மழழைச்சொல் கேளா தவர்

தங்கள் குழந்தைகளின் மழலைச் சொல்லைக் கேட்காதவர்கள்தான் குழலோசை, யாழோசை ஆகிய இரண்டும் இனிமையானவை என்று கூறுவார்கள்

அறத்துப்பால் : மக்கட்பேறு

கீதோபதேசத்தின் துவக்கம் இது தான்.

"பண்பட்ட மனதும், சிறந்த வாழ்க்கை முறையும் எவனிடத்துளதோ அவனே ஆரியன். இது போன்று துரை, ஜென்டில்மேன், அந்தணன், சாஹிப் முதலிய சொற்கள் மேன் மக்களது பண்பைக் குறிக்கும்"
- சுவாமி சித்பவானந்தர்

தமிழோசை

இன்றைய (ஆகஸ்ட் 06 திங்கட்கிழமை 2007) "BBC" செய்திகள் கேட்க இணைப்பில் செல்க http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml?tamil_worldnews

டாக்டர் அலர்மேலு ரிஷி அவர்கள், வளைகுடாப் பகுதியில் உள்ள தமிழ்ப் பண்பலை வரிசையில் (KZSU Stanford 90.1 FM radio show) சமீபத்தில் தொகுத்து வழங்கிய "இசையும் ரசனையும்" என்ற நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக இருந்தது. அவரைப்பற்றி நிறையச் சொல்லிக்கொண்டே போகலாம். அவர், நான் சமீபத்தில் 'நிலாச்சாரல்' இணைய சஞ்சிகைக்காக எடுத்த நேர்முகத்தில், அவரைப்பற்றி ஏராளமான விசயங்கள் பகிர்ந்து கொண்டார். நீங்களும் படித்திருப்பீர்கள். அவருக்கு தற்போது வயது 72, இந்த வயதிலும் அவருடைய சுறுசுறுப்பு, தெளிவு, குரல்வளம், மொழிப்பற்று, தேர்ந்த அறிவு இன்னும் எவ்வளவோ! ரத்தினச்சுருக்கமாகச் சொல்லப்போனால் அவர் இன்றைய தலைமுறையினருக்கு ஒரு முன்னோடி மற்றும் வழிகாட்டி என்று சொல்லலாம். அவர் ஏற்கனவே தொகுத்து வழங்கிய 'பழமொழி' என்ற நிகழ்ச்சியும் மிகவும் சிறப்பான, குறிப்பிடத்தக்க நிகழ்ச்சியாகும். இந்த நிகழ்ச்சியையும் கேட்டுத் தங்களின் கருத்துக்களை இங்கே பதிவு செய்யவும். இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் அருமை நண்பர் திரு.ஸ்ரீ அவர்கள். பாராட்டுக்கள் நண்பர் ஸ்ரீ அவர்களே!
Powered by eSnips.com

August 05, 2007

'நிலாச்சாரல்' இணைய சஞ்சிகைக்காக டாக்டர் அலர்மேலு ரிஷி அவர்களை நான் எடுத்த செவ்வி

என்னைப் பொறுத்தவரை அவசியத்தின் காரணமாய் இடம் மாறினாலும் என் கொள்கையைப் பொறுத்தவரை நான் என்றுமே தமிழ்க் கலாசாரத்தை விட்டுக் கொடுக்க விரும்பாதவள். இதனால் நான் அமெரிக்கக் கலாச்சார விரோதி என்பது பொருளல்ல. அவரவர் கலாச்சாரத்தைப் பின்பற்ற அவரவர்க்கு உரிமை உண்டு. "திணிக்கப் படுவதல்ல கலாச்சாரம்". நம்முடைய தேசப்பிதா மகாத்மா காந்தியையே இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம். லண்டனில் வட்டமேசை மாநாட்டிற்கு ஒரு இந்தியராகவே உடை அணிந்து சென்றது இந்தத் தலைமுறையினருக்கு எந்த அளவிற்குத் தெரியும் என்று எனக்குத் தெரியாது. பாரம்பரியக் கலாச்சாரம் அழிந்து விடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன். இதனால் நான் ஒரு conservative என்று முடிவெடுத்து விடவேண்டாம். "புலியைப் பார்த்துப் பூனை சூடு போட்டுக் கொள்ளவேண்டாம்" என்பதுதான் என் கருத்து. தொடாந்து படிக்க இணைப்பில் செல்க..

சென்னையிலிருந்து மும்பைக்கு ஆட்டோவில் பயணம்!

76 ஆட்டோ ரிக்ஷாக்கள் ஹங்கேரி, பல்கேரியா, அமெரிக்கா, லண்டன் போன்ற 8 நாடுகளிலிருந்தும் இந்தியாவிலிருந்து 2 பேரும் சென்னையிலிருந்து மும்பைக்கு சுமார் 1921 கி.மீ. தூரம் 3 மாநிலங்களின் வழியாகச் செல்கின்றனர். சமூக சேவையை கருத்தில்கொண்டு நடைபெறுகிறது. நோட்டுப்புத்தகங்கள் வழங்குதல், கிராம மக்களிடம் நெருங்கிப்பழகுதல் போன்றவை இந்தப்பயணத்தில் குறிப்பிடத்தக்கது. பாராட்டுக்கள்!

தமிழோசை

  • இராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தம்
  • அகதிகளாக வந்த 19 பேர் இராமேஸ்வரத்திலிருந்து தப்பி மன்னார் சென்றுவிட்டனர்
  • புலம் பெயர்ந்த இலங்கைத்தமிழர்கள் லண்டனில் நாடகம்
  • பீகார் மாநிலத்தில் வெள்ளம் காரணமாக ஒரு கோடிக்கு மேல் மக்கள் இடம் பெயர்வு
  • ஏராளமானோர் வீடிழந்தனர்
  • பலி எண்ணிக்கை உயர்வு போன்ற
  • இலங்கையின் மன்னார் மாவட்டத்தில் விடுதலைப் புலிகளின் பிரதேசத்தில் உள்ள மடுக்கோவிலின் ஆகஸ்ட் மாதத் திருவிழாவையொட்டி, ஒரு வருடகாலமாக மூடப்பட்டிருந்த நேரடியாகச் செல்லும் வீதி வரும் 10 ஆம் திகதி முதல் திறக்கப்படவுள்ளது போன்ற

இன்றைய (ஆகஸ்ட் 05 ஞாயிற்றுக்கிழமை 2007) "BBC" கேட்க செய்திகள் இணைப்பில் செல்க http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml?tamil_worldnews

இன்றைய குறள்

மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு

தம் குழந்தைகளைத் தழுவி மகிழ்வது உடலுக்கு இன்பத்தையும், அந்தக் குழந்தைகளின் மழலை மொழி கேட்பது செவிக்கு இன்பத்தையும் வழங்கும்

அறத்துப்பால் : மக்கட்பேறு

"நான் ஒரு வெண்மேகம் எனக்கு வடிவம் கிடையாது, பாதை கிடையாது. மனமோ எதிர்காலமோ கிடையாது. இங்கே, இப்போது மட்டும் இருப்பது. காரணமற்ற ஒரு மனமே மதி உணர்வுள்ளது. சொந்தமான தடம் கிடையாது. அலைந்து திரிவது"
- ஓஷோ

இந்திய மற்றும் தமிழகச் சாலைகள் பற்றிய ஒரு அலசல்

இட ஒதுக்கீடு பற்றிய ஒரு பார்வை

பொருளாதார வளர்ச்சிபற்றிய ஒரு ஆய்வு

நீங்கள் ஒருவருக்கு பணிந்து நடக்கும் சூழ்நிலை வந்தால், அவர்களிடமிருந்து விலகி வேண்டுமானால் இருக்கலாம். அதற்காக பயந்து ஒதுங்கிவிடக்கூடாது. உங்களது முழு வலிமை, நேர்மை மற்றும் பொறுமையை பயன்படுத்தி அச்சத்தை மனதில் இருந்து அறவே விலக்கிவிட வேண்டும். அச்சம் கொண்டுள்ளவர்களைக் கண்டால், கோழை கூட மிரட்டி விளையாடுவான். எனவே, அச்சம் தவிருங்கள்.

- ஸ்ரீஅன்னை

இன்றைய குறள்

அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ்

சிறந்த பொருளை அமிழ்தம் எனக் குறிப்பிட்டாலுங்கூடத் தம்முடைய குழந்தைகளின் பிஞ்சுக்கரத்தால் அளாவப்பட்ட கூழ் அந்த அமிழ்தத்தைவிடச் சுவையானதாகிவிடுகிறது

அறத்துப்பால் : மக்கட்பேறு

August 04, 2007

மரணதண்டனை அல்லது தூக்குத்தண்டனை தேவையா?

நான் கடந்த வாரம் பதிவு செய்த "மனிதம் ஏன் மரணதண்டனையை எதிர்க்கிறது" என்ற பதிவிற்கு வந்த மாற்றுக்கருத்தை இங்கே தருகிறேன். படித்துவிட்டு நீங்கள் வேறு ஏதாவது சொல்ல நினைத்தால் அதனை இங்கே தயவு செய்து பதிவு செய்யவும்.
மரியாதைக்குரிய திரு.சம்பத் அவர்கள் எழுதியது....
"மரண தண்டனை பற்றிய விளக்கம்..படித்தேன்.. நீங்கள் தவறாக எடுத்துக்கொள்ளாவிட்டால்.. உங்களின் மனித உணர்வை என் கருத்துக்கள் பாதிக்கலாம்..
ஒரு 3 வயது சின்ன சிறு பெண் குழந்தையை..கற்பழித்து..சின்ன சின்ன துண்டுகளாக வெட்டி..சாக்கடையில் போட்ட ஒருத்தனுக்கு என்ன தண்டனை..கொடுக்கலாம்..ஒரு 5 வருடம்..அல்லது ஆயுள் தண்டனை போதுமா..?..3 வயது சிசுவை கொன்ற அந்த கொடியவனை, எப்படி கொன்றாலும் தப்பில்லை..

250 பேரை குண்டு வைத்து கொன்ற கொலைகாரனுக்கு..தூக்கு தண்டனை கொடுப்பது தவறா?...அதை எப்படிகொடூரத்தின் உச்சம் என்று சொல்ல முடியும்??..ஒரு நரகாசுரனைக் கொன்று மக்கள் உயிர்களைக் காப்பாற்றியதாகத்தான் கருதப்படவேண்டும்..

நன்றியுடன் : சம்பத் (ஆதியக்குடியான்) - சவூதி அரேபியா



அதாவது சமீபத்தில் நான் படித்த ஒரு ஆராய்ச்சிக்குறிப்பொன்று, "மரணதண்டனையின் மூலமாக குற்றங்கள் குறைவதாகத் தெரிவிக்கிறது".


ஆனாலும் குற்றம் புரிந்த அந்தக் குற்றவாளி திருந்தி வாழ ஒரு வாய்ப்புக் கொடுக்கும் பட்சத்தில், இந்த அற்புதமான மனிதப் பிறவியை அவன் வாழ்ந்துவிட்டுப் போகட்டுமே என்ற மனிதாபிமானம் மேலோங்கி நிற்பதால்தான் மரணதண்டனை வேண்டாம், அதனைக்குறைந்தபட்சம் ஆயுள் தண்டனையாகவாவது மாற்றி, நடந்த தவற்றை உணரவைக்கலாம் என்பது இந்தச் சிறியேனின் தாழ்மையான கருத்து என்பதை இங்கே சொல்லிக்கொள்ள நினைக்கிறேன்.

தமிழோசை

இன்றைய (ஆகஸ்ட் 04 சனிக்கிழமை 2007) "BBC" செய்திகள் கேட்க இணைப்பில் செல்கhttp://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml?tamil_worldnews

இன்றைய குறள்

தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்
தந்தம் வினையான் வரும்

தம் பொருள் என்பது தம்மக்களையேயாம். அம்மக்களின் பொருள்கள் அவரவர் செயல்களில் விளைவாக வரக்கூடியவை

அறத்துப்பால் : மக்கட்பேறு

து(ப்)பாய்!!?

துபாயில் பணிபுரிய ஆசைப்படும் ஒவ்வொரு இந்தியனும் பார்க்கவேண்டிய ஒரு பதிவு இது. அது சிலருக்குச் சொர்க்கம்! பலருக்கு நரகம்!! பிரமிக்க வைக்கும் நகரம்!!! அழுத்துக! பெட்டிக்குள் உள்ள து(ப்)பாய்
து(ப்)பாய்
து(ப்)பாய்.pps
Hosted by eSnips

பழ.நெடுமாறன் வேண்டுகோள்!

கோவை வெடிகுண்டு வழக்கில் விடுதலை செய்யப்பட்ட கேரள மக்கள் ஜனநாயகக் கட்சியின் நிறுவனர் மதானிக்கு நஷ்டஈடு வழங்கவேண்டும் என்று தமிழர் தேசியஇயக்கத்தலைவர் பழ.நெடுமாறன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கோவை வெடிகுண்டு வழக்கில் கேரள மக்கள் ஜனநாயகக் கட்சியின் நிறுவனர் மதானி மீதான ஐந்து குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்படவில்லை. அவர்மீது பொய்யான குற்றம்சாட்டிய அதிகாரிகள் அவர்களுக்குப் பின்னால் இருந்து இயக்கிய அரசியல்வாதிகள் ஆகியோர் இப்போது மக்கள் மன்றத்திற்கு முன்னால் தலைகுனிந்து நிற்கவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. பொய்வழக்கு தொடர்ந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கையை தமிழக அரசு எடுக்கவேண்டும். அப்போதுதான் எதிர்காலத்தில் இதுபோன்ற பொய் வழக்குப்போடும் போக்குக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். மதானிக்கு தகுந்த நஷ்டஈட்டை வழங்கவேண்டியது தமிழக அரசின் கடமையாகும் என்று பழ.நெடுமாறன் நேற்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.