September 12, 2007

உங்களின் அறிவை வளர்க்க வேண்டுமா?

அறிவு என்பது பொதுவாக சில நிர்ணயிக்கப்பட்ட சோதனைகளால் அளக்கப்படுகிறது. இந்த சோதனை தரும் அளவே Intelligence quotient அல்லது IQ என்று கூறப்படுகிறது. ஒரு குழந்தையின் IQ என்பது எவ்வாறு கூறப்படுகிறது? அந்த குழந்தையின் மன வயதை நிஜ வயதால் வகுத்து வருவதை நூறால் பெருக்க வேண்டும். உதாரணமாக ஒரு பையனின் மன வயது எட்டு என்றும் அவனது நிஜ வயதும் எட்டு என்றால் எட்டை எட்டால் வகுத்து வரும் எண்ணிக்கையான ஒன்றை நூறால் பெருக்கி வருவது நூறாகும். அதாவது அந்த குழந்தையின் IQ நூறாகும்.

இன்னொரு உதாரணம்: ஒரு குழந்தையின் மன வயது 12 என்றும் அவன் நிஜ வயது எட்டு என்றும் வைத்துக் கொண்டால் 12ஐ 8ல் வகுத்து வரும் தொகையான 1.5ஐ நூறால் பெருக்க வருவது 150 ஆகும். அப்போது அந்தக் குழந்தையின் IQ 150 ஆகும். மன வயது என்பது சில சோதனைகளால் நிர்ணயிக்கப்படுகிறது.

அறிவு 17 வயது வரை அதிகரிக்கிறது. பிறகு பொதுவாக குறிப்பிடத்தகுந்த வகையில் அதிகரிப்பதில்லை. ஆகவே பெரும்பாலான நாடுகளில் ஒரு பையன் 18 வயதில் வயதுக்கு வந்துவிட்டால் அவன் முதிர்ச்சி அடைந்தவனாகக் கருதப்படுகிறான். ஆகவே தான் 18 வயதில் போர்க்களங்களுகு கூட போக அனுமதிக்கப்படுகிறான். சாதாரணமாக வளர்ந்து விட்ட ஒருவனின் வயது அவனது வயது எதுவாக இருந்தாலும் கூட 16 என எடுத்துக் கொள்ளப்படுகிறது. ஆகவே வளர்ந்து விட்ட ஒரு பையனின் IQ என்பது அவனது மன வயது x 100 / 16 என்றாலும் கூட இந்த மனவயது என்ற கருத்து சர்ச்சைக்குரியதாக ஆகி விட்டது. ஆகவே இப்போது IQ என்பதை புள்ளிவிவரங்களின் பிரதிநிதித்துவ அடிப்படையில் இந்த வயதில் இந்த அளவு இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.
அறிவை நிர்ணயிக்கும் சோதனைகளின் அளவு அது பகுத்தளிக்கப்படும் வளைவில் நடுவில் வரும் வரை சராசரி என்ற அளவிலும் நடுப்பகுதியைத் தாண்டிவிட்டால் வெகுவேகமாக கீழேயும் இறங்குகிறது. மூன்றுக்கு இரண்டு அளவுகள் 85க்கும் 115க்கும் இடையில் உள்ளன. இந்த நிலையில் உள்ளவர்கள் தான் பெரும்பாலானோர். இருபதுக்கு பத்தொன்பது அளவுகள் 70க்கும் 130க்கும் இடையில் உள்ளன. IQ 130 உள்ளவர்கள் மேதைகள் என்றும் IQ 70க்கும் குறைவாக ஆக ஆக மக்கு என்பதில் ஆரம்பித்து IQ 29 என்பதில் முடியும் போது மூளை வளர்ச்சி குன்றிய நிலையில் இரண்டு வயதுக்கும் கீழாக உள்ள குழந்தையின் மனநிலையில் உள்ளவர்கள் என்றும் கூறப்படுகின்றனர்.

அறிவை ஒரு வரையறுப்பிற்குள் அடக்க முடியாது. புத்திசாலித்தனம், ஞானம், அறிவால் புதிர்களையும் பிரச்சினைகளையும் விடுவிக்கும் தன்மை, பகுத்தாளும் தன்மை மற்றும் கற்பனை வளம் என்றெல்லாம் அறிவைப் பற்றித் தங்கள் பார்வைக்குத் தக்கபடி மக்கள் கூறுகின்றனர். ஆனால் உளவியலாளர்களோ இது போன்ற தியரிகளுக்கெல்லாம் மசிவதில்லை. அவர்கள் அறிவுச் சோதனை எனப்படும் ஈன்டெல்லிகென்கெ டெஸ்ட் நடத்தி ஒருவரின் IQ வைத் தீர்மானிக்கின்றனர்.

ஆல்ஃப்ரட் பைனட் :
47 வயதான ஆல்ஃப்ரட் பைனட் என்ற பிரெஞ்சு உளவியலாளர் சாதாரண குழந்தைகளிடமிருந்து மன நலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளைப் பிரித்து இனம் காண்பதற்காக ஒரு சோதனையை அறிமுகப்படுத்தினார். 1905ல் அறிமுகப்படுத்தப்பட்ட இதுவே முதலாவது இன்டெலிஜன்ஸ் டெஸ்ட்.
மனோசக்தி, புதியன கண்டுபிடித்தல், வழிகாட்டல், விமரிசனம் (இன்வென்சன், அன்ட் க்ரிடிசிஸ்ம் ) ஆகிய நான்கோடு அறிவை பைனட் தொடர்பு படுத்திக் கூறி ஒரே வார்த்தையில் அதை ஜட்ஜ்மென்ட் என்று முடித்து விட்டார்.
டாக்டர் காதரீன் மோரிஸ் நன்கு விவரங்கள் குறிக்கப்பட்ட மேதைகளின் வாழ்க்கையை அலசி ஆராய்ந்து அவர்களது IQ வை மதிப்பீடு செய்துள்ளார்.
மொஜார்ட் ஆறு வயதிலேயே இசைக் கருவிகளை அற்புதமாக வாசித்தார். அதே எட்டு வயதிலேயே கவிதையை எழுதினார். ஆக இப்படி நன்கு விவரங்களை ஆராய்ந்த பின்னர், அவர் அளிக்கும் பிரபலங்களின் IQ வைக் கீழே காணலாம்:

ட்ரேக் 130
க்ராண்ட் 130
வாஷிங்டன் 140
லிங்கன் 150
நெப்போலியன் 145
ரெம்ப்ராண்ட் 155
ஃப்ராங்க்ளின் 160
கலிலியோ 185
லியனார்டோ டா வின்சி 180
மொஜார்ட் 165
வால்டேர் 190
டெஸ்கார்டஸ் 180
ஜான்ஸன் 165
லூதர் 170
நியூட்டன் 190
கதே 210
காண்ட் 175

உலக ஜனத்தொகையில் ஒரு சதவிகிதம் பேரே 140க்கு மேற்பட்ட IQ வைக் கொண்டுள்ளனர். பிரபலங்களின் சராசரி IQ 166! சரி, IQ வை அதிகப்படுத்துவது என்பது சாத்தியமான ஒன்றா? சாத்தியமானது தான். அறிவு மூன்றாகப் பிரிக்கப்படுகிறது.

1) ஜீன்ஸ் அடிப்படையில் நிர்ணயிக்கப்படும் மூளை அறிவு
2) சோதனைக்குட்பட்ட அறிவு. இது கற்பதால் வருவது.
3) ரெப்ளக்டிவ் அறிவு இதுவும் கற்பதால் வருவது.

ஆக முதல் இனத்தைத் தவிர மற்ற இரண்டையும் வளர்ப்பது சாத்தியமானதே. புதிர், புதிர்கணக்கு ஆகியவற்றை விடுவிப்பது கற்பனை வளத்தைப் பெருக்குவது பற்றிய பயிற்சிகள், காபி போன்ற ஊக்கிகளை அருந்துவது தற்காலிகமாக IQ வை அதிகரிக்கும். ஆழ்ந்து உள்ளிழுத்து மூச்சு விடுதலும் நல்ல பயனைத் தரும். நிரந்தர பயனை எதிர்பார்ப்போர் மனப் பயிற்சிகளையும் உடல் பயிற்சிகளையும் செய்வதன் மூலம் மூளை ஆற்றலைக் கூட்டி IQ வை அதிகரிக்க முடியும். இவை மிக அதிக வயதாகும் போது இயல்பாக மூளையின் ஆற்றல் குறைவதைக் கூடத் தடுக்க வல்லவை! எந்த மனப்பயிற்சிகளைச் செய்வது? உங்கள் மனம் எதில் நேரம் போவது தெரியாமல் லயிக்கிறதோ அதுவே சிறந்தது. அதற்காக டி.வி, பார்க்கிறேன் என்றால் அது மனப்பயிற்சியே இல்லை. ஆனால் கிராஸ் வோர்ட் பஜில்-குறுக்கெழுத்துப் போட்டி ஒரு நல்ல பயிற்சி. வார்த்தை விளையாட்டு, தத்துவ விசாரணை அல்லது விவாதம், மனதால் செய்யப்படும் கணக்குகள் இவற்றோடு அன்றாடம் எதையேனும் புதிதாக வடிவமைப்பது அல்லது வடிவமைக்கப்பட்டதை அபிவிருத்தி செய்வது ஆகிய இவையெல்லாம் சிறந்த மனப்பயிற்சிகள்.

உடல்பயிற்சி வகையில் டென்னிஸ், கால்பந்து, கூடைப்பந்து ஆகியவை சிறந்தவை. ஏனெனில் எதில் ஒருங்கிணைப்பு மற்றும் நேரத்திற்குச் செய்வது (Cஊர்டினடிஒன் அன்ட் டிமின்க்) ஆகிய இரண்டும் இணைகின்றனவோ அவையெல்லாமே சிறந்த உடல் பயிற்சிகள் தான். ஒரு நல்ல கார்டியோவாஸ்குலர் அமைப்பானது (கர்டிஒவஸ்குலர் சிஸ்டெம்) நல்ல ரத்த ஓட்டத்தாலேயே ஏற்படும். நல்ல ரத்த ஓட்டமே மூளைக்குத் தேவையான அதிக ஆக்ஸிஜனை ரத்தத்தில் எடுத்துச் செல்லும். ஆகவே தான் அறிவியல் இவற்றைச் சிறந்ததாக சிபாரிசு செய்கிறது. இவை நிலையான மாற்றத்தை மூளையில் ஏற்படுத்தும் என்பது ஒரு சுவையான செய்தி! ஒருங்கிணைப்பு மற்றும் டைமிங் ஆகிய இரண்டும் வாசிப்பிற்குத் தேவையான இசைக்கருவிகளை வாசித்தல், (பியானோ, ஆர்மோனியம் போன்றவை) ஒரு நல்ல பயிற்சி. இத்தோடு கண்களையும் கைகளையும் ஒரு சேரப் பயன்படுத்த வேண்டிய ஓவியம் வரைதலையும் மரவேலை செய்தல் போன்றவற்றையும் செய்யலாம்.

தியானம் செய்வது மூளை ஆற்றலை நிரந்தரமாகக் கூட்ட வல்லது. ப்ரீப்ரண்டல் கார்டெக்ஸ் மற்றும் வலது ஆன்டீரியர் இன்சுலா ஆகிய உணர்வுகளை அறியச் செய்யும் கார்டெக்ஸ் பகுதியின் கனத்தை இது அதிகரிக்கிறது. ஆக, IQ குறைவு என்று யாருமே பயப்படத் தேவை இல்லை. பயிற்சியால் கூட்டக் கூடிய அதிக பட்ச அளவை அடைய மனமிருந்து, பயிற்சிகளை விடாது மேற்கொள்ளும் விடாமுயற்சியும் இருந்தால் IQ கூடுவது நிச்சயம்!

இசைப்பவன் கருத்தும் கேட்பவன் எண்ணமும்
ஒன்றாய்க் கலப்பது ஓசையால் அன்று.
சொல்லே அதற்குத் துணையாய் நிற்பது.
அந்தச் சொல்லும் சொந்தச் சொல்லாம்;
தாய்மொழி ஒன்றே தனிச்சுவை ஊட்டும்.
அவரவர் மொழியில் அவரவர் கேட்பதே
'இசை' எனப் படுவதன் இன்பம் தருவது.
புரியாத மொழியில் இசையைப் புகட்டல்
கண்ணைக் கட்டிக் காட்சி காட்டுதல்.
தமிழன் சொந்தத் தாய்மொழிச் சொல்லில்
இசையைக் கேட்க இச்சை கொள்வதே
'தமிழிசை' என்பதன் தத்துவ மாகும்.

- நாமக்கல் கவிஞர்

இன்றைய குறள்

காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது

தேவைப்படும் காலத்தில் செய்யப்படும் உதவி சிறிதளவாக இருந்தாலும், அது உலகத்தைவிடப் பெரிதாக மதிக்கப்படும்
அறத்துப்பால் : செய்ந்நன்றியறிதல்

அது என்னால் முடியாது!

பிரபல எழுத்தாளர் ஆஸ்கார் ஒயில்டிடம் ஒரு பத்திரிகை ஆசிரியர், "நீங்கள் விரும்பும் சிறந்த நூறு புத்தகங்களின் பட்டியல் ஒன்றை அனுப்பி வையுங்கள்" என்று கேட்டுக்கொண்டார். ஆனால் ஆஸ்கார் ஓயில்டு, தம்மால் அது முடியாது என்று மறுத்து விட்டார். காரணம், "நான் இதுவரையில் ஐந்து புத்தகங்கள் மட்டுமே எழுதி இருக்கிறேன்" என்றார்.

  • நெடுமாறனின் உணவு அனுப்புவதற்கான முயற்சி தோல்வியில் முடிந்தது : தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ நெடுமாறன் மற்ற சில அமைப்புக்களுடன் இணைந்து, யாழ்ப்பாண குடா நாட்டிற்கு மருந்துகள் மற்றும் உணவுப்பொருட்களை தமிழகத்திலிருந்து திரட்டி, படகுகள் மூலம் அனுப்ப எடுத்த முயற்சி, இன்று தமிழகத்தில் தோல்வியில் முடிந்தது. நாகப்பட்டினத்திலிருந்து படகுகள் மூலம் புறப்பட நெடுமாறன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் எடுத்த முயற்சி, படகுகள் ஏதும் கிடைக்காததால் தோல்வியடைந்ததாகத் தகவல்கள் கூறுகின்றன.
    படகுகள் தமிழக காவல்துறையினரின் அச்சுறுத்தலால்தான் கிடைக்காமல் போய்விட்டன என்று இந்த முயற்சி எடுத்த அமைப்புகள் குற்றம் சாட்டின. இதற்கிடையே, இந்த தோல்வியடைந்த முயற்சிக்குப் பின்னர் காலவரையற்ற உண்ணாவிரதம் ஒன்றை தொடங்கிய நெடுமாறனை, போலிசார் கைது செய்தனர். நாகப்பட்டினத்தில் நடந்த பரபரப்பான சம்பவங்களைத் தொகுத்து எமது செய்தியாளர் டி.என்.கோபாலன் வழங்கும் மேலதிக தகவல்களை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம் http://www.bbc.co.uk/tamil/2115.ram
  • ரஷ்யாவின் புதிய பிரதமர் : மாஸ்கோவில் நடந்த எதிர்பாராத ஒரு அரசியல் திருப்பத்தில், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புட்டின், இதுவரை அதிகம் அறியப்படாத ஒரு அதிகாரியை தனது புதிய பிரதமராக பிரேரித்துள்ளார்.
    மிக்கெயில் ப்ரெட்கொவ் அரசின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்ட சற்று நேரத்துக்குப் பின்னர், புட்டின், நிதித்துறைக் குற்றங்கள் கண்காணிப்பு நிறுவனத்தின் தலைவராக இருக்கும், விக்டொர் ஸுப்கோவை இந்தப்பதவிக்கு தனது தேர்வாக அறிவித்தார்
  • சுமத்திரா தீவில் பூகம்பம் : இந்தோனேஷியாவின் சுமத்திரா தீவின் கடற்கரைக்கு அப்பால் இன்று இடம்பெற்ற வலுவான நிலநடுக்கம் காரணமாக பல நகரங்களிலும் பட்டினங்களிலும் இருக்கும் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இதனால் பீதியுற்ற மக்கள் பலர் கட்டிடங்களை விட்டு வீதிக்கு ஓடிவந்தனர்
  • ஜப்பானிய பிரதமரின் பதவி விலகல் குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ளன : ஜப்பானிய பிரதமர் ஷின்ஸோ அபே அவர்கள் திடீரென பதவி விலகியது குறித்து பரவலான விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.
    நாடாளுமன்றத்தின் மூலம் நிறைவேற்றவுள்ள பணிகளை அறிவித்த ஒரு சில நாட்களுக்குப் பின்னர் அவர், இந்தக் காலகட்டத்தில் பதவி விலகியது பொறுப்பற்றது என்று எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் கூறினர்
  • தலிபான்களால் சிறை பிடிக்கப்பட்ட 12 பாகிஸ்தான் சிப்பாய்கள் :
    பாகிஸ்தானின் வடமேற்குப்பிரதேசத்தில், ஆப்கானிஸ்தானுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான எல்லைப்புற சோதனைச்சாவடி ஒன்றின் மீது தாலிபன் ஆதரவு தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி பன்னிரண்டு பாகிஸ்தான் இராணுவ சிப்பாய்களை சிறை பிடித்துச் சென்றுள்ளனர்

September 11, 2007

இன்றைய குறள்

செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது

"வாராது வந்த மாமணி" என்பது போல், "செய்யாமற் செய்த உதவி" என்று புகழத்தக்க அரிய உதவி வழங்கப்பட்டால், அதற்கு இந்த வானமும் பூமியும் கூட ஈடாக மாட்டா.

அறத்துப்பால் : செய்ந்நன்றியறிதல்

திருமுருகக் கிருபானந்த வாரியார்

பழங்கள் : அந்தக் காலத்தில் பழங்கள் என்றால் விரும்பிச் சாப்பிடுவார்கள், ஆனால் இந்தக் காலத்தில் பழங்(கள்) என்றால் விரும்பிச் சாப்பிடுகிறார்கள்

செப்டம்பர் 11 தாக்குதலின் ஆறாவது ஆண்டு நினைவு தினம்

  • அமெரிக்காவின் இராணுவத் தலைமையகமான பெண்டகன் மற்றும் உலக வர்த்தக மையத்தின் இரட்டை கோபுரங்கள் ஆகியவை மீது நடத்தப்பட்ட தாக்குதலின் ஆறாம் ஆண்டு நிகழ்வுகள் இன்று நியூயார்க் மற்றும் வாஷிங்கடனில் இடம்பெற்றுள்ளன. ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் இடம் பெற்ற இந்தத் தாக்குதல்களில் குறைந்தது 3000 பேர் பலியாயினர். அந்த தாக்குதலின் போது நடைபெற்ற மீட்பு நடவடிக்கைகளில் உயிர்தப்பிய தீயணைப்புத் துறையினர் மற்றும் அவசரகால பணியாளர்கள், தாக்குதலில் உயிரிழந்த அனைவரின் பெயர்களையும் வாசித்தனர்
  • இராணுவத் தளபதியிடம் கடுமையான கேள்விகள் : இராக்கில் உள்ள , அமெரிக்காவின் உயர் இராணுவத் தளபதி, அவரது இராணுவ யுக்தி குறித்து, வாஷிங்டனில், முன்னோடி ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சிகளின் செனட் உறுப்பினர்களிடமிருந்து மேலும் அதிகக் கடுமையான கேள்விகளை எதிர்கொண்டு வருகிறார்
  • இஸ்ரேலிய இராணுவ முகாம் மீது ராக்கெட் தாக்குதல் : இஸ்ரேலிய இராணுவ முகாம் ஒன்றின் மீது பாலத்தீன ஆயுததாரிகள் நடத்திய ஒரு ராக்கெட் தாக்குதலில் கிட்டத்தட்ட எழுபது இஸ்ரேலிய இராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளார்கள். இதையடுத்து தமது இறையாண்மையை காத்துக் கொள்ளும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று இஸ்ரேல் கூறியுள்ளது
  • இராக்கில் பல ஆயுததாரிகளை கொன்றுள்ளதாக அமெரிக்க இராணுவம் கூறுகிறது : இராக்கின் தலைநகர் பாக்தாத் மற்றும் வட இராக்கில் தமது படையினர் நடத்திய தாக்குதலில் 23 ஆயுததாரிகள் பலியாகியுள்ளதாக இராக்கிலுள்ள அமெரிக்க இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
  • தொடர்ந்து இன்றைய (செப்டம்பர் 11 செவ்வாய்க்கிழமை 2007) "BBC" தமிழோசைச் செய்திகளுக்கு இணைப்பை அழுத்துக http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml?tamil_worldnews

September 10, 2007

சோ : அமெரிக்க அணு ஆயுத ஒப்பந்தம் (123) பற்றிய ஒரு ஆய்வு பகுதி 1

அமெரிக்க அணு ஆயுத ஒப்பந்தம் (123) பகுதி 2

இன்றைய குறள்

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று

இனிமையான சொற்கள் இருக்கும்போது அவற்றை விடுத்துக் கடுமையாகப் பேசுவது, கனிகளை ஒதுக்கிவிட்டுக் காய்களைப் பறித்துத் தின்பதற்குச் சமமாகும்

அறத்துப்பால் : இனியவை கூறல்

நம்பிக்கை

"இறைவனிடம் நம்பிக்கையில்லையென்றால் உங்களிடம் தன்னம்பிக்கை இருக்காது. முன்னேற்றம் வேண்டுமானால் முதலில் நம்மிடமும் பிறகு இறைவனிடமும் நம்பிக்கை வைக்க வேண்டும். அப்போதுதான் வாழ்க்கை நல்வழியில் செல்வதோடு எதையும் உங்களால் வெல்ல முடியும்"

- விவேகானந்தர்

  • நவாஸ் ஷெரீப் நாடுகடத்தல் குறித்த சர்வதேசக் கருத்துகள் : பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரான நவாஸ் ஷரிஃப் மீண்டும் நாடு கடத்தப்பட்டுள்ளமை பாகிஸ்தானின் உள்நாட்டு விவகாரம் என்று அமெரிக்கா கூறியுள்ளது.
    இருந்த போதிலும் அங்கு நடைபெறவுள்ள தேர்தல்கள் சுதந்திரமாகவும் நியாயமான முறையிலும் நடைபெற வேண்டும் என்றும் அமெரிக்கா கூறியுள்ளது.
    இதேவேளை, பாகிஸ்தான் அரசு அந்நாட்டு உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மதித்து நடந்து கொள்ள வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
    ஷெரீப் அவர்கள் மீது ஏதாவது சட்டரீதியான வழக்குகள் இருக்குமாயின், அந்த வழக்கை எதிர்கொள்ள பாகிஸ்தானின் ஒரு நீதிமன்றத்தில் அவருக்கு வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் எனவும் ஐரோப்பிய ஒன்யறியம் கூறியுள்ளது
  • வட இலங்கை மோதலில் 6 விடுதலைப்புலிகள் பலி : இலங்கையின் வடக்கே இலங்கை இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே நேற்றும் இன்றும் இடம்பெற்ற வேவ்வேறு மோதல் சம்பவங்களில் 6 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதாகவும், இரண்டு இராணுவத்தினர் காயமடைந்ததுடன், வவுனியாவில் இடம்பெற்ற கிளேமோர் கண்ணிவெடி தாக்குதல் சம்பவம் ஒன்றில் இரண்டு பொலிசார் காயமடைந்ததாகவும் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் அறிவித்துள்ளது
  • இராக்கில் வன்முறைகளில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக பிரதமர் மலிக்கி கூறுகிறார் : இராக்கில் அமெரிக்கப் படைகளின் எண்ணிக்கை கடந்த மார்ச் மாதம் முதல் அதிகரிக்கத் தொடங்கியதை அடுத்து, பாக்தாதிலும், மேற்கு இராக்கிலும் வன்செயல்களின் அளவு 75 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாக இராக்கிய பிரதமர் நூரி அல் மலிக்கி கூறியுள்ளார்
  • வங்கதேசத்தில் அரசியல் கட்சிகள் மீதான சில தடைகளைத் தளர்த்த நடவடிக்கை : வங்கதேசத்தில் அரசியில் கட்சிகள் தங்களது அரசியல் செயற்பாடுகளை நிகழ்த்தும் முகமாக, சில தடைகளை தளர்த்த அந்நாட்டின் இடைக்கால அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளை அங்குள்ள அரசியல் கட்சிகள் எச்சரிக்கையுடன் வரவேற்றுள்ளன
  • மேலும் இன்றைய (செப்டம்பர் 10 திங்கட்கிழமை 2007) "BBC" தமிழோசைச் செய்திகளுக்குக் கீழுள்ள இணைப்பில் செல்க http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml?tamil_worldnews

September 09, 2007

இன்றைய குறள்

இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ
வன்சொல் வழங்கு வது

இனிய சொற்கள் இன்பத்தை வழங்கும் என்பதை உணர்ந்தவர் அதற்கு மாறாக எதற்காகக் கடுஞ் சொற்களைப் பயன்படுத்தவேண்டும்?

அறத்துப்பால் : இனியவை கூறல்

வாரியார் சொல்கிறார்

  • சொல் உண்மையுடன் கூடியதாக இருக்க வேண்டும்.
  • உண்மையில் நன்மை கலந்திருக்க வேண்டும்.
  • அன்புடன் பேச வேண்டும்.
  • நிதானமாகப் பேச வேண்டும்.
  • ஆழமுடையதாகச் சிந்தித்துப் பேச வேண்டும்.
  • சமயமறிந்து பேச வேண்டும்.
  • அவையறிந்து பேச வேண்டும்

தமிழக அரசியல் போலவே இந்தப்பதிவும் தெளிவாக இருக்காது. சற்று உற்று நோக்கினால்தான் புலப்படும். இந்தப்பதிவைச் (அரசியலைச்)சற்று சீண்டித்தான் (அழுத்தித்தான்) பாருங்களேன். பிறகு தெளிவாகத் தெரியும். உண்மை புலப்படும்.

உங்களுக்குச் சர்க்கரை வியாதியா?

  1. உடலின் அவ்வப்போதைய தேவைக்கு ஏற்ப அளவாக உணவு உட்கொள்வது.
  2. உடலின் தேவையை அதிகரிப்பது - உடற்பயிற்சி செய்வது.
  3. இன்சூலின் எடுத்துக் கொள்வது. இன்சூலின் மாத்திரையாக உட்கொள்ள முடியாது. ஏனெனில் அது ஒரு புரதம் எனவே நமது உடலில் அது செரித்து மாற்ற மடைந்து விடும். எனவே அதை ஊசி மூலம் உடலில் செலுத்த வேண்டும்.
  4. க்ளுக்கோஸ் போன்ற உணவுப் பொருட்கள் உணவிலிருந்து நமது இரத்தத்தில் கலக்காமல் மாத்திரைகள் மூலம் தடுப்பது. மேலும் நமது உடலின் அனைத்து தசைகளையும் இரத்தத்தில் உள்ள அதிகமான க்ளுக்கோஸை உபயோகிக்க வைப்பது.
  5. பலருக்கு முறையான, சரியான, ஒழுங்கான உடற்பயிற்சி மற்றும் உணவுக் கட்டுப்பாடு இவைகளிலேயே இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறைந்து விடும். சிலருக்கு நோயின் தீவிரத்தைப் பொறுத்து ஊசியும் மாத்திரைகளும் தேவைப்படும்.
  6. நோயின் தன்மையைப் பொறுத்து தினமும் இன்சூலின் போடவேண்டுமா அல்லது தினசரி மாத்திரைகள் வேண்டுமா அல்லது இரண்டுமே சேர்த்து வேண்டுமா என மருத்துவர் தீர்மானிப்பார்.
  7. இந்தியாவில் சர்க்கரை வியாதி உள்ளவர்கள் அதிகம். ஜனத்தொகையில் 7-9 சதவீதம் வரை சர்க்கரை வியாதி உள்ளவர்களே.
  8. எந்த வியாதியாக இருந்தாலும் மனம் தளராமல் அதற்குரிய வழிமுறைகளை கடைபிடித்து அந்த வியாதியை கட்டுக்குள் வைத்திருப்பது நல்லது.

  • ஆசிய ஹாக்கிப் போட்டியில் இந்தியா வெற்றி : சென்னையில் நடைபெற்ற ஆசிய கோப்பை ஹாக்கிப் போட்டியை இந்தியா வென்றுள்ளது. இன்று மாலை சென்னை மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்தியா தென்கொரியாவை 7-2 என்கிற கோல் கணக்கில் வென்றது
  • நவாஸ் ஷெரீஃப்பின் ஆதரவாளர்கள் கைது : பாகிஸ்தான் அதிகாரிகள் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப்பின் ஆதரவாளர்களைத் தேடிப் பிடித்துக் கைது செய்து வருவதாக அங்கிருந்து கிடைக்கின்ற செய்திகள் கூறுகின்றன. நாட்டுக்கு வெளியே வாழ்ந்து வருகின்ற ஷெரீஃப் அவர்கள் மீண்டும் தாயகம் திரும்பப் போவதாக அறிவித்ததை அடுத்து இந்தக் கைதுகள் நடக்கின்றன
  • இராக்குக்குள் தீவிரவாதிகள் நுழைவதைத் தடுக்க இராக் உதவி கோருகிறது : இராக்கிய எல்லைக்குள் தீவிரவாதிகளும் கிளர்ச்சிக்காரர்களும் நுழைவதைத் தடுத்து நிறுத்துவதில் உதவுமாறு இராக் அண்டை நாடுகளைக் கேட்டுள்ளது
  • ஆசிய-பசுபிக் மாநாடு நிறைவுபெற்றது : ஆஸ்திரேலியாவின் ஸிட்னி நகரில் ஆசிய-பசிபிக் பகுதியைச் சேர்ந்த 22 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்ட மாநாடு தடைபட்டுப் போயுள்ள உலக வர்த்தக பேச்சுவார்த்தைகளை விரைவில் முடித்துக் கொள்வது என்ற தீர்மானத்தோடு முடிவடைந்துள்ளது
  • வஸிரிஸ்தான் தாக்குதலில் தீவிரவாதிகள் பத்துப் பேர் பலி: பாகிஸ்தான இராணுவத்தின் சார்பில் பேசும் அதிகாரி ஒருவர் ஆஃப்கான் எல்லைக்கருகே இருக்கின்ற பழங்குடிப் பிரதேசத்துக்குச் சென்று கொண்டிருந்த இராணுவ வண்டித் தொடரொன்றின் மீது திடீர்த் தாக்குதல் நடத்திய இஸ்லாமியத் தீவிரவாதிகளில் பத்துப் பேரை இராணுவம் கொன்றுள்ளது என்று தெரிவித்துள்ளார்
  • இன்றைய (செப்டம்பர் 09 ஞாயிற்றுக்கிழமை 2007) "BBC" செய்திகளை முழுமையாகக் கேட்கக் கீழுள்ள இணைப்பில் பிரயாணிக்கவும் http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml?tamil_worldnews

September 08, 2007

இன்றைய குறள்

சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும்
இம்மையும் இன்பம் தரும்

சிறுமைத்தனமற்ற இனியசொல் ஒருவனுக்கு அவன் வாழும் போதும், வாழ்ந்து மறைந்த பிறகும் புகழைத் தரக்கூடியதாகும்

அறத்துப்பால் : இனியவை கூறல்

இசைஞானி - மேஸ்ட்ரோ இளையராஜா

Powered by eSnips.com

வாரியார் சொல்கிறார்

"கங்கை நீர் சிறந்தது. அதனினும் சிறந்தது அபிஷேக நீர். அதனினும் உயர்ந்தது ஏழைகட்காக உழைக்கும் ஒரு உத்தமனுடைய முகத்தில் துளிர்க்கும் வியர்வை நீர்"

  • அல்ஜீரிய குண்டு வெடிப்பில் 20க்கும் அதிகமானோர் பலி : அல்ஜீரியா நாட்டில் கடந்த 48 மணி நேரத்தில் நடத்தப்பட்ட இரண்டாவது குண்டுத் தாக்குதலில் 20 க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது
  • புவி வெப்பமடைதலுக்கான இலக்குகள் குறித்து சீனா மற்றும் அமெரிக்கா இணக்கம் : சிட்னியில் 21 நாடுகள் கலந்து கொள்ளும் ஆசிய பசுபிக் மேநிலை மாநாட்டில் புவியை வெப்பமடையச் செய்வதற்கான வாயுக்களின் வெளியேற்றத்தைக் கட்டுப்ப்டுத்துவதற்கான உலக மட்டத்திலான இலக்குகள் குறித்து அமெரிக்காவும், சீனாவும் முதல் தடவையாக இணக்கம் தெரிவித்துள்ளன
  • பர்மாவில் தொழிலாளர் நல ஆர்வலர்கள் 6 பேருக்கு சிறை : பர்மாவின் ரங்கூனில் அமெரிக்க தூதரகத்தில் கருத்தரங்கம் ஒன்றை ஏற்பாடு செய்தமைக்காக, தொழிலாளர் நல ஆர்வலர்கள் 6 பேருக்கு 28 ஆண்டுகால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக பர்மியச் செய்திகள் கூறுகின்றன
  • கிரிக்கட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி : இந்தியாவுக்கு எதிரான கிரிக்கட் ஒருநாள் தொடரை இங்கிலாந்து வென்றுள்ளது.
    இன்று லண்டனில் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த இந்தியாவுக்கு எதிரான 7 வது ஒரு போட்டியில் 7 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம் 4-3 என்ற எண்ணிக்கையில் இந்தப் போட்டித் தொடரை இங்கிலாந்து வென்றது
  • இறுதிப் போட்டிக்கு இந்திய ஹாக்கி அணி தெரிவானது
    இதற்கிடையே, சென்னையில் நடைபெற்று வரும் ஆசியக் கோப்பை ஹாக்கிப் போட்டியில் இந்திய அணி இறுதிப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றுள்ளது. இன்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் 4 – 1 என்ற கோல் கணக்கில் ஜப்பானை இந்தியா வீழ்த்தியது. இந்தியா சார்பில் பிரப்ஜோத் இரண்டு கோல்களை அடித்தார்
  • மேலும் இன்றைய (செப்டம்பர் 08 சனிக்கிழமை 2007) "BBC" தமிழோசைச் செய்திகளுக்கு இணைப்பில் செல்க http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml?tamil_worldnews

September 07, 2007

இயக்குனர் மணிரத்னம்

இளம் இசைக்குயில் ஜனனி

இன்றைய குறள்

நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று
பண்பின் தலைப்பிரியாச் சொல்

நன்மையான பயனைத் தரக்கூடிய நல்ல பண்பிலிருந்து விலகாத சொற்கள் அவற்றைக் கூறுவோருக்கும் இன்பத்தையும், நன்மையையும் உண்டாக்கக் கூடியவைகளாகும்

அறத்துப்பால் : இனியவை கூறல்

ஓசாமா பின்லாடன் அமெரிக்கர்களுக்கு எச்சரிக்கை

கைரோ: முன்று ஆண்டுகளாக மவுனம் காத்து வந்த பின்லாடன் தற்போது அமெரிக்க ராணுவ நடவடிக்கைகளை கண்டிக்கும் விதத்தில் வீடியோ செய்தி அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் பின்லாடன் வழக்கத்துக்கு மாறாக கேசத்திற்கு டை அடித்து காணப்பட்டார். வெள்ளை டர்பன் மற்றும் வெள்ளை உடையணிந்து காட்சியளித்தார்.30 நிமிடம் ஓடிய அந்த வீடியோவில் அமெரிக்கர்கள் தங்களுக்கே உரிய அதிகாரப்போக்கினை நிறுத்தாத காரணத்தால் ஈராக் போர் முடிவடைவதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது எனவும், அமெரிக்காவுக்கு பாடம் புகட்டும் விதமாக மீண்டும் ஓர் பெரிய அளவு தாக்குதல் நடத்தப்படும் என எச்சரிக்கைவிடுத்ததுடன், அமெரிக்கர்கள் இஸ்லாம் மதத்திற்கு மாறுவதன் மூலம் போர் நிறுத்தம் நிகழலாம் எனவும் மதமாற்றத்திற்கு அழைப்பு விடுத்தார். இச்சம்பவத்தை தொடர்ந்து அமெரிக்கா முழுவதும் பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது.

திருமுருகக் கிருபானந்த வாரியார் சொல்கிறார்

"எல்லோருக்கும் நல்லவனாகவும், எல்லோரையும் மகிழச் செய்கிறவனாகவும் ஒருவன் இருக்க முடியாது. சந்திரன் குளிர்ந்த அமுத கிரணங்களை உலகிற்கு வழங்குகிறான். முழு நிலவைக் கண்டு எல்லா உயிர்களும் உவகையுறுகின்றன. ஆனால் முழு நிலவைக்கண்டு தாமரை குவிந்து விடுகின்றது. சந்திரன் தாமரைக்கு என்ன தீங்கு செய்தான்? ஒன்றுமேயில்லை. சந்திரனைப் போல் உலகுக்கு நன்மை செய்யும் நல்லோரைக் கண்டு சில புல்லோர்கள் இகழ்வார்கள்; வெறுப்பார்கள்; பகைப்பார்கள்; அதனால் நல்லோர்க்கு ஒன்றும் குறைவு உண்டாகாது"

இந்தியா – இலங்கை உயர்நிலைப் பாதுகாப்புக்குழு : உறுதி செய்ய இந்திய அதிகாரிகள் மறுப்பு : இந்தியா – இலங்கை இடையே, பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பான உயர்நிலைக் குழு ஒன்று அமைக்கப் பட்டிருப்பதாக, இலங்கை அரசு வெளியிட்ட அறிக்கையை உறுதி செய்ய இந்திய அதிகாரிகள் மறுத்துவிட்டார்கள். இலங்கை ஜனாதிபதியின் செயலர் லலித் வீரதுங்க, பாதுகாப்புச் செயலர் கோட்டாபாய ராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதியின் மூத்த ஆலோசகர் பசில் ராஜபக்ஷ ஆகியோர், கடந்த வாரம் புதுடெல்லி வந்து, இந்தியாவின் உயர் அதிகாரிகளைச் சந்தித்துப் பேசினார்கள்
முள்ளிக்குளம் பகுதியை கைப்பற்றியதாக இராணுவம் அறிவிப்பு :
இலங்கையின் வடமேற்கே மன்னார் மாவட்டம் தென்பகுதி கரையோரக் கிராமமாகிய முள்ளிக்குளம் பகுதியை இராணுவத்தினர் இன்று கைப்பற்றியுள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன
தமிழ் கட்சிகளின் வருகையைக் கண்டித்து மட்டக்களப்பில் துண்டுப் பிரசுரம் : இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணி, புளொட் மற்றும் ,ஈ.பி.டி.பி.உட்பட சில தமிழ் அரசியல் கட்சிகளுடன் தொடர்புகள் வைத்திருப்பவர்களுக்கு சென்னன் படை என்ற பெயரில் பகிரங்க எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ''ஆலவட்டம் பிடிப்போருக்கும் ஆதரவு வழங்குபவர்களுக்கும் எச்சரிக்கை" என்ற தலைப்பில் இது தொடர்பான பிரசுரங்கள் கிழக்கு மாகாணத்தின் சில பகுதிகளில் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது
இலங்கையில் கையடக்கத் தொலைபேசி பாவனை வரி 10 வீதமாக அதிகரிப்பு : இலங்கையின் மொத்த சனத்தொகையில் சுமார் 40 சதவீதத்தினர் தொலைபேசி இணைப்புக்களைக் கொண்டிருப்பதாகத் தகவல் வெளியிட்டுள்ள இலங்கை அரசு, நாட்டில் சுமார் 6.3 மில்லியன் கையடக்கத் தொலைபேசிகளும் புழக்கத்தில் இருப்பதாகத் தெரிவிக்கிறது
மேலும் தொடர்ந்து இன்றை (செப்டம்பர் 07 வெள்ளிக்கிழமை 2007) "BBC" தமிழோசைச் செய்திகளுக்கு கீழுள்ள இணைப்பில் செல்க http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml?tamil_worldnews

September 06, 2007

3 வயது சிறுமியைக் கற்பழித்துக் கொன்ற வாலிபரை அடித்துக் கொன்ற மக்கள்

லக்னோ:
உ.பி. மாநிலத்தில் 3 வயது சிறுமியைக் கற்பழித்த காமக் கொடூர வாலிபரை பொதுமக்கள் சரமாரியாக அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உ.பி. தலைநகர் லக்னோ அருகே உள்ள பாண்டே கஞ்ச் என்ற பகுதியில் பெற்றோருடன் வசித்து வருபவர் 3 வயது சிறுமியான ரியா. திடீரென ரியா காணாமல் போய் விட்டார். அவரது பெற்றோரும், அப்பகுதி மக்களும் பல்வேறு இடங்களிலும் தேடிப் பார்த்தனர். ஆனால் ரியா கிடைக்கவில்லை.

இந்த நிலையில் நேற்று காலை ரியாவின் தந்தைக்கு போன் வந்தது. அதில் பேசிய நபர் 10 மணிக்குள் ரியா வீடு திரும்பி விடுவாள் என கூறியுள்ளார். இதனால் அவர்கள் குழப்பமடைந்தனர்.

அருகே உள்ள ஒரு தொலைபேசி பூத்திலிருந்துதான் அந்த போன் வந்தது என்பது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கிருந்து யார் பேசியது என்பதை பொதுமக்கள் விசாரித்தனர். அப்போது சிவ்மோகன் என்பவர்தான் அந்த சமயத்தில் போனில் பேசியது தெரிய வந்தது.

இதையடுத்து நூற்றுக்கணக்கான பொதுமக்கள் சிவ்மோகனின் வீட்டுக்கு படையெடுத்துச் சென்றனர். அங்கு அவர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. சிறுமி ரியா, கழுத்தை அறுத்துக் கொலை செய்யப்பட்டிருந்தாள். அவளது உடலை துணியைப் போட்டு மூடி வைத்திருந்தார் சிவ்மோகன்.

ரியாவை கற்பழித்து பின்னர் கொடூரமாக கொலை செய்துள்ளது தெரிய வந்தது. இதைப் பார்த்த ரியாவின் பெற்றோர், உறவினர்கள், பொதுமக்கள் பெரும் கொதிப்படைந்தனர்.

சிவ்மோகனை சுற்றிச் சூழ்ந்து சரமாரியாக, வெறித்தனமாக அடித்து நொறுக்கினர். வீட்டுக்கு வெளியே இழுத்து வந்து தாறுமாறாக அடித்ததில் சிவ்மோகன் உயிரிழந்தார். அப்படியும் வெறி தீராமல் வீட்டில் இருந்த சிவ்மோகனின் 70 வயது தாயாரையும் அடித்து கொல்ல கூட்டத்தினர் பாய்ந்தனர். ஆனால்அதற்குள் விரைந்து வந்த போலீஸார் அந்த மூதாட்டியை கூட்டத்தினரிடமிருந்து மீட்டுக் கொண்டு சென்றனர்.

கொல்லப்பட்ட சிவ்மோகன் ஏற்கனவே 12 வயது சிறுமியை கற்பழித்துக் கொன்ற வழக்கில் கைதானவர். சமீபத்தில்தான் அந்த வழக்கிலிருந்து விடுதலையாகி வந்தார். வந்தவுடன் 3 வயது சிறுமியை கொடூரமாக கற்பழித்துக் கொன்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைய லஞ்சம், ஊழல் : ஒரு ஆய்வு

இன்றைய லஞ்சம், ஊழல் - 2: ஒரு ஆய்வு

நடிகர் அருண்குமார் சொல்கிறார்...

இன்றைய குறள்

அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின்

தீய செயல்களை அகற்றி அறநெறி தழைக்கச் செய்ய வேண்டுமானால், இனிய சொற்களைப் பயன்படுத்தி நல்வழி எதுவெனக் காட்டவேண்டும்

அறத்துப்பால் : இனியவை கூறல்

இன்றோ, நாளையோ என்றோ பறந்து விடப்போகுதெம் உயிர். அதற்குள் நமது வாழ்வின் கோலங்களைப் பற்றி நாம் போடும் கணக்குகள்தான் எத்தனை? எத்தனை??
- கவியரசு

  • டார்பூர் மோதலை முடிவுக்குக் கொண்டுவரும் பேச்சுக்கள் : சூடானின் டார்பூர் பிராந்தியத்தில் நிலவும் மோதலை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கிலான புதிய அமைதிப் பேச்சுவார்த்தைகள், அடுத்த மாதம் நடைபெற இருக்கின்றன. இந்த மோதல்களில் இதுவரை குறைந்தது இரண்டு லட்சம் பேர் கொல்லப்பட்டுள்ளனர்
  • எத்தியோப்பிய- எரித்திரிய விவகாரம் குறித்து எச்சரிக்கை :
    இரு நாடுகளின் எல்லையில் படையினர்எத்தியோப்பியாவுக்கும் எரித்ரியாவுக்கும் இடையிலான எல்லைத் தகறாறு தொடர்பிலான தீர்வை, இரு நாடுகளும் ஏற்காவிட்டால், இந்த நாடுகளுக்கு இடையே புதிய போர் மூளும் ஆபத்திருப்பதாக, ஆப்ரிக்காவின் கொம்புப் பிராந்தியத்திற்கான ஐ நா மன்றத்தின் முன்னாள் தூதர் கேல் போஞ்விக் அவர்கள் எச்சரித்துள்ளார்
  • பர்மியப் படையினரைப் பிடித்து வைத்த பிக்குமார் : பர்மாவின் மத்திய நகரான பக்கோக்குவில், பர்மிய பாதுகாப்புப் படையினர் 20 பேரைப் பிடித்து வைத்திருந்த பௌத்த பிக்குகள், அவர்களைப் பல மணி நேரத்தின் பின்னர் விடுதலை செய்துள்ளனர்
  • இந்தோனீசியாவிற்கு ரஷிய அதிபர் முக்கிய விஜயம் : இந்தோனீசியாவிற்கு மிக முக்கித்துவம் வாய்ந்த விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ள ரஷிய அதிபர் விளாடிமிர் புடின் அந்நாட்டுடன் பெரிய அளவிலான ஆயுத விற்பனை தொடர்பான ஒரு ஒப்பந்தத்திலும் கையொப்பமிட்டுள்ளார்
  • தொடர்ந்து இன்றைய (செப்டம்பர் 06 வியாழக்கிழமை 2007) "BBC" தமிழோசைச் செய்திகள் கேட்க இணைப்பில் செல்க http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml?tamil_worldnews

September 05, 2007

உங்களிடம் நோக்கியா மொபைல் இருந்தால் உடனே பேட்டரியை பார்க்கவும்

மும்பை : புகழ்பெற்ற மொபைல் கம்பெனியான நோக்கியா, உலகம் முழுவதிலும் உள்ள அதன் உபயோகிப் பாளர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நோக்கியா மொபைலில் பிஎல் 5 சி என்ற பேட்டரி பொருத்தப்பட்டிருந்தால் உடனே அதை மாற்ற சொல்கிறது. அந்த குறிப்பிட்ட நம்பர் பேட்டரியை சார்ஜ் செய்யும்போது சார்ட் சக்க்யூட் ஆகி, பேட்டரி சூடாகி விடுகிறதாம். உலகம் முழுவதிலும் இருந்து நூற்றுக்கும் அதிகமான புகார்கள் நோக்கியா நிறுவனத்திற்கு வந்ததால் அந்த குறிப்பிட்ட வகை பேட்டரியை இலவசமாக மாற்றித்தர நோக்கியா நிறுவனம் முன்வந்துள்ளது. இவ்வாறு பேட்டரி சூடானதால் இதுவரை யாருக்கும் உடல் ரீதியான பாதிப்பு ஏற்பட்டதாக புகார் இல்லை. எனினும் முன்னெச்சரிக்கையாக இந்த வகை பேட்டரிகளை மாற்றித்தர அந் நிறுவனம் முன்வந்துள்ளது. இந்த பிஎல் 5 சி வகை பேட்டரிகள் ஜப்பானின் மேட்சுசிடா நிறுவனம் தயாரித்து நோக்கியாவுக்கு சப்ளை செய்யதாம். நோக்கியா, அதன் மொபைல் போன்களுக்கு தேவையான பேட்டரிகளை பல கம்பெனிகளிடமிருந்து பெற்றிருக்கிறது. அவர்கள் எல்லோருமாக சேர்ந்து 30 கோடிக்கும் அதிகமான பிஎல் 5 சி பேட்டரிகளை சப்ளை செய்திருக்கிறார்கள். அதில் ஜப்பானின் மேட்சுசிடா நிறுவனம், டிசம்பர் 2005 இலிருந்து நவம்பர் 2006 வரை தயாரித்து வழங்கிய 4 கோடியே 60 லட்சம் பிஎல் 5 சி பேட்டரிகளில் தான் இந்த புகார்கள் வந்துள்ளன. இந்த குறிப்பிட்ட காலகட்டத்தில் தயாரிக்கப்பட்ட பேட்டரிகளை மட்டும் மாற்றினால் போதும். இதை தவிற வேறு வகை பேட்டரிகளை மாற்ற தேவை இல்லை. நம்மிடம் நோக்கியா மொபைல் இருந்து, அதிலிருக்கும் பேட்டரியும் பிஎல் 5 சி தான் என்றால், அதை மாற்ற வேண்டுமா வேண்டாமா என்று, நோக்கியா.காம் வெப்சைட்டில் சென்று பார்த்துக்கொள்ளலாம். www.nokia.com

இன்றைய குறள்

பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணியல்ல மற்றுப் பிற

அடக்கமான பண்பும், இனிமையாகப் பேசும் இயல்பும் தவிர, ஒருவருக்குச் சிறந்த அணிகலன்கள் வேறு இருக்க முடியாது
அறத்துப்பால் : இனியவை கூறல்

நாவே இன்னும் கொஞ்சம் மௌனம் கா...
வாயில்லாச் சில்லறைகள் சத்தமிட்டாலும்
வாய்திறந்தும் பேசாத சுருக்குப்பை போல

- கவிப்பேரரசு வைரமுத்து

தொடர்ந்து தரமான நிகழ்ச்சிகள் : இதில் சமரசம் இல்லை : மருத்துவர் இராமதாசு

இப்படித்தான் வாழவேண்டும் என்று தொன்றுதொட்டு ஆண்டாண்டுகாலமாய் இந்தச் சமுதாயத்தை அரித்துக்கொண்டிருக்கும் தொலைக்காட்சிக் குழுமங்களுக்குள் "இப்படியும் சிறப்பாக வாழலாம்" "இந்தச் சமுதாயத்தைச் சீர்தூக்கிப் பார்க்கலாம்" என்ற ஒரு "மாபெரும் புரட்சி" செய்து.. ... இந்தப் பிரபஞ்சத்தின் மூலை முடுக்குகளிலெல்லாம் உள்ள கோடானுகோடித் தமிழ்நெஞ்சங்களை, ஏன்? இந்திய நெஞ்சங்களை நன்றியுணர்வோடும், பிரமிப்போடும் "தங்கள் பக்கம்" திருப்பி, சேவைகளிலெல்லாம் பெருஞ்சேவை செய்து வரும் "மகத்தான மக்கள் தொலைக்காட்சி"யை ஒவ்வொரு சமுதாய நல்லெண்ணம் கொண்டவரும் பாராட்டாமல் இருக்க முடியாது. அந்த வரிசையில் இந்தச் சிறியேனும் "நீங்கள் பல்லாண்டு வாழ்க! தங்களின் சேவை இந்த மண்ணுள்ளவரை தொடர்க!! என்று உண்மையான உணர்வுகளோடு வாழ்த்துகிறேன்! "புரட்சியாளன் புதைக்கப்படுவதில்லை, விதைக்கப்படுகிறான்" என்பது மக்கள் தொலைக்காட்சிக்காகவே செதுக்கப்பட்டதாக உணர்கிறேன்.

மருத்துவர் இராமதாசு : மக்கள் தொலைக்காட்சியில் தொடர்ந்து தரமான நிகழ்ச்சிகள் மட்டுமே ஒளிபரப்பப்படும். வர்த்தக காரணங்களுக்காக தரத்தில் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ள மாட்டோம் என்று மக்கள் தொலைக்காட்சி நிறுவனர் ராமதாஸ் கூறினார். மக்கள் தொலைக்காட்சி இரண்டாவது ஆண்டில் அடிஎடுத்து வைப்பதையொட்டி சென்னை காமராஜர் அரங்கில் வரும் 6-ம் தேதி விழா நடைபெறுகிறது. இதையொட்டி மருத்துவர் இராமதாசு கூறியதாவது : தரமான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி ஒரு வித்தியாசமான தொலைக்காட்சி என்று மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது மக்கள் தொலைக்காட்சி. தமிழ் மொழியையும் தமிழ் சமுதாய வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படுகின்றன. திரைப்படம் அல்லாத அறிவார்ந்த நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி 2-ம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறோம். இரண்டாம் ஆண்டு தொடக்க விழா நிகழ்ச்சிகள் மிகப் பிரமாண்டமாக கொண்டாடப்படுகின்றன. மக்கள் தொலைக்காட்சி வெற்றிக்கு பாடுபட்டவர்கள் சிறப்பிக்கப்படுவார்கள். மத்திய அமைச்சர்கள் பிரிய ரஞ்சன் தாஸ் முன்சி, அன்புமணி ராமதாஸ், தமிழக அமைச்சர்கள் மு.க.ஸ்டாலின், ஆற்காடு வீராசாமி மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கலந்துகொள்கின்றனர்.


வீரப்பன் தொடர் : இரண்டாம் ஆண்டு தொடக்கத்தை ஒட்டி பல்வேறு புதிய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட உள்ளன. வீரப்பன் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு சந்தனக்காடு என்ற தொடர் ஒளிபரப்பாகும். மூட நம்பிக்கைகளை தோலுரிக்கும் "வெங்காயம்" வித்தியாசமான இசை நிகழ்ச்சியாக "ஏலேலங்கடி ... ஏலேலோ. 'வணிகர்களுக்கான முகவரி, தமிழ் சமூகத்தின் சமையலை அறிமுகப்படுத்தும் "கைமணம்" இப்படி 18 புதிய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படும். திரைப்படங்கள்: தரமான திரைப்படங்களை ஒளிபரப்புவது குறித்து பரிசீலித்து வருகிறோம். விளம்பரங்களை ஒளிபரப்புவதில் எங்களுக்கு என்று சில நெறிகளை ஏற்படுத்தி உள்ளோம். அதன்படி "கோக்" "பெப்சி" போன்ற வெளிநாட்டு குளிர்பான விளம்பரங்களை கூட ஒளிபரப்ப மாட்டோம். தற்போது ஐரோப்பா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் ஒளிபரப்ப ஒப்பந்தம் செய்துள்ளோம். இதுபோல் சிங்கப்பூர், மலேசியாவிலும் ஒளிபரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் ராமதாஸ்.

  • பிரிட்டனில் மனித - மிருக சேர்க்கைக் கருக்களை உருவாக்க கொள்கையளவில் அனுமதி : ஆராய்ச்சிக்காக மனிதன் மற்றும் மிருகங்களை இணைத்து, கருக்களை உருவாக்குவதற்கு பிரிட்டனின் ஒழுங்குமுறை ஆணையம் கொள்கையளவில் ஒப்புதல் அளித்துள்ளது.
    இதுபோன்ற ஆராய்ச்சிகளை சட்டபூர்வமாக்கும் ஒரு சில நாடுகளின் பட்டியலில் பிரிட்டனும் இணைந்துள்ளது.
    கலப்பின கருக்கள் 99 சதவீதம் மனிதத் தன்மை கொண்டவையாகவும் ஒரு சதவீதம் விலங்குத் தன்மை கொண்டவையாகவும் இருக்கும்.
    மூளை அழுகல் உள்ளிட்ட சில நோய்களை தீர்ப்பதற்குத் தேவையான குறுத்தணுக்களை பெறுவதற்காக இத்தகைய கலப்பின கருக்களை உருவாக்க விஞ்ஞானிகள் முயன்று வருகின்றனர்.
    இந்த ஆராய்ச்சிகள் கட்டுப்படுத்தப்பட்டவையாக இருக்கும். ஒவ்வொரு சோதனையும் மேலாய்வு செய்யப்படும்
  • டார்பூரில் பான் கீ மூண் : சுடானின் பலவருட மோதல்களால் இடம்பெயர்ந்த சில அகதிகள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தை அடுத்து, அங்கு மேற்கு சுடானின் டார்பூர் பகுதிக்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமைச் செயலர் பான் கீ மூண் அவர்கள், தனது பயணத் திட்டத்தின் ஒரு பகுதியை மாற்றி அமைத்துள்ளார்.
  • குண்டுத் தாக்குதல்களை நடத்தத் திட்டமிட்டவர்களே கைது: ஜெர்மனியில் நேற்று செவ்வாய்க்கிழமை தங்களால் கைது செய்யப்பட்ட மூன்று ஆண்கள், ஜெர்மனியில் இருக்கும் அமெரிக்கர்களை குறிவைத்து குண்டு தாக்குதல்களை நடத்த திட்டமிட்டிருந்ததாக, ஜெர்மனிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவர்களில், இருவர் ஜெர்மனியைச் சேர்ந்தவர்கள் என்றும், இஸ்லாம் மதத்திற்கு மாறியவர்கள் என்றும், ஒருவர் துருக்கி நாட்டைச் சேர்ந்தவர் என்றும் தெரிவித்திருக்கும் ஜெர்மனியின் மத்திய அரச வழக்கறிஞர், இவர்கள் மூன்றுபேரும் அல்கொய்தாவுடன் தொடர்புடைய குழுக்களால் பாகிஸ்தானில் நடத்தப்பட்டு வரும் முகாம்களில் பயிற்சிபெற்றவர்கள் என்றும் தெரிவித்திருக்கிறார்
  • ஜிம்பாவேயில் பாரிய கோதுமைத் தட்டுப்பாடு : ஜிம்பாவேயில் தேசிய அளவில் கோதுமைக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக, அங்கு ரொட்டித்( பாண்) தயாரிப்பை இரு நாட்களில் முற்றாக நிறுத்த வேண்டிய நிலைக்கு தாம் தள்ளப்பட்டுள்ளதாக அந்த நாட்டின் பெரிய ரொட்டித் தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்
  • தொடர்ந்து இன்றைய (செப்டம்பர் 05 புதன்கிழமை 2007) "BBC" தமிழோசைச் செய்திகளுக்கு இணைப்பில் செல்க http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml?tamil_worldnews

எலும்பில்லா மனிதன்

September 04, 2007

இன்றைய குறள்

துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மட்டும்
இன்புறூஉம் இன்சொ லவர்க்கு

இன்சொல் பேசி எல்லோரிடத்திலும் கனிவுடன் பழகுவோர்க்கு "நட்பில் வறுமை" எனும் துன்பமில்லை
அறத்துப்பால் : இனியவை கூறல்

"அன்பு, ஆசை, நட்பு என்பனவற்றின் பொருளைத்தவிர, வேறு பொருளைக் கொண்டதென்று சொல்லும்படியான காதல் என்னும் ஒரு தனித்தன்மை ஆண்-பெண் சம்பந்தத்தில் இல்லையென்பதை விவரிக்கவே இவ்வியாசம் எழுதப்படுவதாகும். ஏனெனில், உலகத்தில் காதலென்பதாக ஒரு வார்த்தையைச் சொல்லி, அதனுள் ஏதோ பிரமாதமான தன்மையொன்று தனிமையாக இருப்பதாகக் கற்பித்து மக்களுக்குள் புகுத்தி அனாவசியமாய் ஆண்-பெண் கூட்டு வாழ்க்கையின் பயனை மங்கச்செய்து காதலுக்காகவென்று இன்பமில்லாமல், திருப்தியில்லாமல், தொல்லைப் படுத்தப்பட்டு வரப்படுகிறதை ஒழிக்கவேண்டுமென்பதற்காகவேயாகும்"
- பெரியார்

  • வங்கக் கடலில் 5 நாடுகளின் போர்க் கப்பல்கள் பயிற்சி : இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் ஆகிய ஐந்து நாடுகளின் போர்க் கப்பல்கள் பங்கேற்கும் முக்கியமான பயிற்சி நடவடிக்கை ஒன்று இன்று வங்கக் கடலில் ஆரம்பமாகியுள்ளது
  • அமெரிக்க கணினி வலையமைப்பில் ஊடுருவல்: சீனா மறுப்பு அமெரிக்காவின் பாதுகாப்பு அமைச்சின் தலைமையகமான பென்டகனில், உள்ள கணினி வலையமைப்புகளில் சீன இராணுவம் வெற்றிகரமாக ஊடுருவியுள்ளதாக வெளிவந்த ஊடகத் தகவல்களை சீனா மறுத்துள்ளது
  • நிகராகுவா நாட்டை சூறாவளி தாக்கியது : மத்திய அமெரிக்கப் பகுதியில் பெலிக்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ள பெரிய அளவிலான சூறாவளி நிகராகுவா நாட்டின் கிழக்கு கடற்கரைப் பகுதியை தாக்கியுள்ளது
  • டென்மார்க்கில் தீவிரவாதிகள் என்று நம்பப்படுபவர்கள் பலர் கைது : டென்மார்க் நாட்டில் பல தீவிரவாதச் செயல்களை நடத்தவிருந்தார்கள் என்று சந்தேகிக்கப்படுபவர்கள் பலரை அந்நாட்டின் போலீஸ் மற்றும் புலனாய்வு அதிகாரிகள் கைது செய்துள்ளார்கள்
  • தொடர்ந்து இன்றைய (செப்டம்பர் 04 செவ்வாய்க்கிழமை 2007) "BBC" தமிழோசைச் செய்திகளுக்கு இணைப்பில் செல்க http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml?tamil_worldnews

September 03, 2007

இன்றைய குறள்

கூறல் முகத்தான் அமர்ந்தின்து நோக்கி
அகத்தானாம் இன்சொ லினதே

அறம் முகம் மலர நோக்கி, அகம் மலர இனிய சொற்களைக் கூறுவதே அறவழியில் அமைந்த பண்பாகும்

அறத்துப்பால் : இனியவை

மனமே! இழிந்தவர்க்கும் கூட இன்னும் பணிவுகாட்டு சாக்கடையிலும் தாழ்ந்து பணிந்தோடிவரும் தண்ணீர்போல...

- கவிப்பேரரசு வைரமுத்து

  • வங்கதேசத்தில் மற்றுமொரு முன்னாள் பிரதமர் கைது : ஊழல் மற்றும் மிரட்டிப் பணம் பறித்தல் ஆகியவை தொடர்பில் வங்காளதேசத்தின் முன்னாள் பிரதமர் காலிதா ஜியா அவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதுடன், விசாரணைகளுக்காக அவர் சிறையிலும் வைக்கப்பட்டுள்ளார்
  • அமெரிக்க அதிபர் புஷ் இராக்கிற்கு திடீர் விஜயம்
    அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் இராக் சென்றுள்ளார். கடந்த ஒரு வருடத்திற்கும் மேலான காலப்பகுதியில் அவர் அங்கு செல்வது இதுவே முதல் முறை
  • பாஸ்ரா நகரின் கட்டுப்பாட்டை இராக்கியர்கள் வசம் அளித்தது பிரிட்டன் : இராக்கின் தெற்குப் பகுதியிலுள்ள பாஸ்ரா நகரின் ஒரு முக்கிய பிரிட்டிஷ் தளத்தின் கட்டுப்பாட்டை இராக்கியத் துருப்புக்கள் ஏற்றுள்ளன
  • பிரான்ஸில் இரண்டு பெரிய எரிசக்தி நிறுவனங்கள் இணைந்தன
  • மேலும் இன்றைய (செப்டம்பர் 03 திங்கட்கிழமை 2007) "BBC" செய்திகளுக்கு இணைப்பில் செல்க http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml?tamil_worldnews

ஒரு நண்பர் குழுமத்தில் கேட்ட கேள்விக்கு நான் அளித்த பதில்கள்!

1. ஒன்றுக்கும் உதவாதவர்களை என்ன செய்யலாம்?

இந்த உலகத்தில் ஒன்றுக்கும் உதவாதவர்கள் என்று யாரும் இல்லை

2. விமர்சகர்கள் என்றால் யார்?

எந்த ஒரு பச்சாதாபமும் இல்லாமல் தன்னைத்தானே எவனொருவன் முதலில் விமர்சித்துக்கொள்கிறானோ அவனே ஒரு உண்மையான விமர்சகன். உதாரணம் : கவியரசு கண்ணதாசன். அவரே சொன்னது : ஒரு மனிதன் எப்படியெல்லாம் வாழக்கூடாதோ அப்படியெல்லாம் நான் வாழந்திருக்கிறேன். அதனால் மற்றவர்களுக்கு அறிவுரை சொல்ல எனக்கு அறுகதை இருக்கிறது.
3. உங்களை சினிமாத் தணிக்கைக்குழு உறுப்பினராக்கினால்?


நான் முதலில் சொன்னதுபோல் ஒரு நல்ல விமர்சனாகவே இருப்பேன். ஆனாலும் திரைத்துறையில் உள்ள கடைநிலை ஊழியர்களின் வயிற்றில் அடிக்க நான் விரும்பவில்லை. காரணம் நிறையை பேர் வேலை இழந்துவிடுவர்.
4. தர்மம் தலை காக்குமா?


கட்டாயம் காக்கும். தருமத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் தருமம் மறுபடி வெல்லும். நண்பரே! நாமெல்லாம் தமிழர்கள், குறிப்பாக இந்தியர்கள். இந்தக் கேள்வியைத் தயவு செய்து இன்னொரு முறை கேட்காதீர்கள். காரணம் நமது இதிகாசங்கள், புராணங்கள் எல்லாம் வலியுறுத்துவதே அதைத்தான்.

5. அடுத்தவர் குறைகளையே அலசிக் கொண்டிருப்பவர்களைப் பற்றி?
அதில் நீங்கள், நான், யாருமே கவனம் செலுத்தாமல் நமது வேலையைப்பார்ப்போம். அவரும் அவர் வேலையைச் செய்கிறார். செய்துவிட்டுப்போகட்டும். மேற்சொன்ன தருமம் மறுபடி வெல்லும்.

பாலைவனப் பரிதாபங்கள்

இரு தினங்களுக்கு முன் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த இளைஞரை சந்திக்க நேர்ந்தது. அவர் துபாயிலிருந்து திரும்பி இருந்தார், (அரசின் கருணை மூலம்)-amnesty அம்னெஸ்டி மூலம். தம்பியின் கதை கேட்டு மனதே கனத்தது. என்ன செய்வது ஒரு பக்கம் சாப்ட்வேர் (software) மூலம் நம் இளைஞர்கள் பணத்தில் மிதப்பதும் ஞாபகம் வந்தது.தம்பி பத்தாவது வரை படித்துள்ளார்... வெளிநாட்டு மோகத்தினால் மட்டும் இல்லாமல் தன் குடும்ப நிலையை மாற்றவும் நினைத்து ஒரு பெரும் தொகையை ஏஜென்டுக்கு கொடுத்துவிட்டு விமானம் ஏறியுள்ளார். இறங்கியபின்பு தான் தெரிந்தது, அது ஒட்டக கூடாரம் என்று. துபாய் நகரிலிருந்து வெகு தொலைவில் ஆள் அரவம் இன்றி இருந்ததாம். வேலை புல் தோட்டத்தில் புல் அறுத்து ஒட்டகத்துக்கு இடுவது. தன் ஊரில் வீட்டில் உள்ள மாட்டுக்குக் கூட ஒரு வேளை புல் போடாதவன். புது வாழ்க்கை புல்லே ஆனது கொடுமையாய் இருந்தது. ஏஜென்ட் ஏமாற்றி இருக்கிறான். பொறுத்துக் கொண்டு காசுக்காக பணி செய்தபோது அரபி உரிமையாளர் சம்பளமே கொடுக்காத போது தான் புரிந்ததாம், அரபி நேர்மையான ஆள் அல்ல என்று. மூன்று அல்லது நான்கு சம்பளமே இல்லையாம். பின்பு ஒரு மாதம் சம்பளம் கிடைத்ததாம். இப்படி ஒரு வருடம் தண்டனையைக் கழித்து, ஒரு நாள் சொல்லிக் கொள்ளாமல் வெளியேறி துபாய் நகருக்கு சென்றிருக்கிறார்.அங்கே வேறு ஒரு தமிழ் நண்பரின் உதவியுடன் ஒரு கார் ஒர்க்ஷாப்-பில் சேர்ந்திருக்கிறார். இது முறை தவறிய (illegal) பணி தான். என்ன செய்வது... குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும், முக்கியமாக வாங்கிய கடனுக்கு வட்டி கட்டியாக வேண்டும். வெளியே தலையே காட்டாமல் இரு வருடங்கள் வேலை செய்திருக்கிறார், கிடைக்கும் பணத்தை தெரிந்தவர்கள் மூலமாக வீட்டுக்கும் அனுப்பி இருக்கிறார். இதனிடையே அரசு, விசிட் விசாவில் வந்து திரும்பாதவர்களுக்கும், வேறு வேலைக்குத் தப்பி ஓடியவர்களுக்கும் கருணை அடிப்படையில் தங்கள் நாடு திரும்பலாம் என அறிவித்தது. அந்தந்த நாட்டு தூதரகங்கள் மூலமாக திருப்பி அனுப்ப ஏற்பாடு செய்தது. விமான டிக்கெட் எடுக்க வழியில்லாதவர்களுக்கு இந்திய சேவை அமைப்புகள் உதவி செய்தன. தம்பி இதை அறிந்து இந்திய தூதரகத்தில் அடைக்கலம் ஆகியிருக்கிறார். அங்கு இருந்த அதிகாரிகள் இவர் கதையை கேட்டு உதவி செய்வதாய் ஆறுதல் வார்த்தை கூறியிருக்கின்றனர். புல் தோட்டத்து முதலாளி அரபியிடம் பாஸ்போர்ட் மாட்டிக்கொண்டதால், சிரமப்பட்டு அரசின் ஆதரவினால் தமிழ்நாடு வந்து சேர்ந்துள்ளார். கடைசியாக, இனி என்ன செய்யப்போகிறீர்கள் எனக் கேட்டேன். பதிலைக் கேட்டு திடுக்கிடத் தான் முடிந்தது.''தடைக்காலம் (Ban period) முடிந்தவுடன் ஒரு வருடம் கழித்து மீண்டும் துபாய் செல்வேன்''.

September 02, 2007

கற்பு என்பதற்குப் "பதிவிரதம்" என்று எழுதிவிட்டதன் பலனாலும், பெண்களைவிட ஆண்கள் செல்வம், வருவாய், உடல் வலிவு கொண்டவர்களாக ஆக்கப்பட்டுவிட்டதனாலும், பெண்கள் அடிமையாவதற்கு, புருஷர் மூர்க்கர்களாகி கற்பு என்பது தங்களுக்கு இல்லை என்ற நினைப்பதற்கும் அனுகூலம் ஏற்பட்டதே தவிர வேறில்லை. தவிர, புருஷர்கள் கற்புடையவர்கள் என்று குறிக்க நமது பாஷைகளில் தனி வார்த்தைகளே காணாமல் மறைபட்டுக் கிடப்பதற்குக் காரணம் ஆண்களின் ஆதிக்கமே தவிர வேறில்லை


- பெரியார்

எச்சரிக்கை : பக்கவாதம்!

(ஆங்கிலத்திற்கு மன்னிக்க) STROKE: Remember The 1st Three Letters... S.T.R. My friend sent this to me and encouraged me to post it and spread the word. I agree. If everyone can remember something this simple, we could save some folks. Seriously.. Please read: STROKE IDENTIFICATION: During a BBQ, a friend stumbled and took a little fall - she assured everyone that she was fine (they offered to call paramedics) and just tripped over a brick because of her new shoes. They got her cleaned up and got her a new plate of food - while she appeared a bit shaken up, Ingrid went about enjoying herself the rest of the evening. Ingrid's husband called later telling everyone that his wife had been taken to the hospital - (at 6:00pm , Ingrid passed away.) She had suffered a stroke at the BBQ. Had they known how to identify the signs of a stroke, perhaps Ingrid would be with us today. Some don't die. They end up in a helpless, hopeless condition instead. It only takes a minute to read this... A neurologist says that if he can get to a stroke victim within 3 hours he can totally reverse the effects of a stroke...totally. He said the trick was getting a stroke recognized, diagnosed, and then getting the patient medically cared for within 3 hours, which is tough.
RECOGNIZING A STROKE Thank God for the sense to remember the "3" steps, STR . Read and Learn! Sometimes symptoms of a stroke are difficult to identify. Unfortunately, the lack of awareness spells disaster. The stroke victim may suffer severe brain damage when people nearby fail to recognize the symptoms of a stroke. Now doctors say a bystander can recognize a stroke by asking three simple questions:
  • S * Ask the individual to SMILE.
  • T * Ask the person to TALK..... TO SPEAK A SIMPLE SENTENCE (Coherently) (i.e. . .. It is sunny out today).
  • R * Ask him or her to RAISE..... B OTH ARMS.
NOTE : Another 'sign' of a stroke is this: Ask the person to 'stick' out their tongue. If the tongue is 'crooked', if it goes to one side or the other that is also an indication of a stroke. If he or she has trouble with ANY ONE of these tasks, take the person immediately!! to the nearest hospital. A cardiologist says if everyone who gets this e-mail sends it to 10 people; you can bet that at least one life will be saved.

நண்பர் யாழ் சுதாகர் தொகுத்துவழங்கும் ஜெயச்சந்திரன் வாணி ஜெயராம் பாடல்கள்!

Powered by eSnips.com

இன்றைய குறள்

அகன் அமர்ந் தீதலின் நன்றே முகனமர்ந்து
இன்சொலன் ஆகப் பெறின்

முகம் மலர்ந்து இனிமையாகப் பேசுவது, அகம் குளிர்ந்து ஒன்றைக் கொடுப்பதைவிட மேலான பண்பாகும்

அறத்துப்பால் : இனியவை கூறல்

  • கருத்து வேற்றுமை காரணமாகவே முஷாரப்புடன் நடத்திய பேச்சு தோல்வியடைந்தது : பெனாசீர் - பாகிஸ்தான் அதிபர் ஜெனரல் முஷாரப்புடன் தாம் நடத்திய, அதிகாரப்பகிர்வு பற்றிய பேச்சுவர்த்தகள், அதிபரின் அதிகாரங்கள் மற்றும் நாடாளுமன்றத்தின் அதிகாரங்கள் ஆகிய விடயங்களின் ஏற்பட்ட வேற்றுமைகள் காரணமாக தடைபட்டு நிற்பதாக நாடு கடந்து வாழும் முன்னாள் பிரதமர் பெனாசீர் பூட்டோ கூறியிறுக்கிறார்
  • பாதுகாப்பு செலவு பற்றிய விவரங்களை தெரிவிக்க சீனா முன்வந்துள்ளது : தனது ராணுவத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகை எவ்வாறு செலவிடப்படுகிறது என்பது குறித்த விபரங்களை ஆண்டுதோரும் ஐக்கிய நாடுகள் சபைக்கு வழங்கப் போவதாக சீனா அறிவித்துள்ளது. சீனாவின் இராணுவப் படைப் பெருக்கம் குறித்து சர்வதேச அளவில் வெளியிடப்படும் கவலைகளுக்கு பதில் அளிக்கும் விதமாக இந்த நடவடிக்கை வந்துள்ளது
  • இரான் அணுதிட்டம் பெரும் முன்னேற்றமடைந்துள்ளதாக அகமதுநிஜாத் அறிவிப்பு : இரான் தனது அணு ஆற்றல் திட்டத்தின் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளதாக அந்நாட்டு அதிபர் முகமது அகமதுநிஜாத் தெரிவித்துள்ளார். யூரேனியத்தை செரிவூட்டக்கூடிய மூவாயிரம் சென்டிரிபூயூஜ்ஜுகள் இரானிடம் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய நாடுகளின் அணு ஆற்றல் அமைப்பு இது குறித்து கடந்த வாரம் வெளியிட்ட மதிப்பீட்டை விட இது அதிகம்

நான்கு மனைவிகள், 11 குழந்தைகளுடன் `சவுக்கிய'மாக வாழ்கிறார் ஒசாமா

அமெரிக்க படையினரிடம் சிக்காமல் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தாலும், தனது குடும்பம் குழந்தைகளுடன் பாதுகாப்பாகவே இருக்கிறார் அல்-குவைதாவின் ஒசாமா பின் லாடன். ஆறு ஆண்டுகளுக்கு முன் அமெரிக்க வர்த்தக மையத்தின் மீது அல்-குவைதா பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலிலிருந்து, அதன் தலைவர் ஒசாமா பின் லாடனை எப்படியும் பிடித்து விட வேண்டும் என்ற வெறியில் இருக்கிறது அமெரிக்கா. அமெரிக்காவின் சி.ஐ.ஏ., புலனாய்வு அமைப்பின், பயங்கரவாத ஒழிப்புப் பிரிவு தலைவர், தனது பிரிவினரிடம், `ஒசாமாவின் தலையை அறுத்து, பெட்டியில் வைத்து கொண்டு வாருங்கள். எப்போதும், ஐஸ்கட்டிகள் நிறைந்த பெட்டி உங்களுடன் இருக்கட்டும்' என்று உத்தரவிடும் அளவுக்கு கோபத்தின் உச்சத்தில் இருந்தார். அமெரிக்க படையினரும், உளவுப் பிரிவினரும் ஒசாமாவை தீவிரமாக தேடினர். அமெரிக்காவால் தீவிரமாக தேடப்பட்டாலும், ஒசாமா தனது குடும்பத்துடன் தான் தலைமறைவாக இருக்கிறார். அவரை சுற்றி குறைந்த பட்சம் 40 காவலர்கள் நிற்பர். அதைத்தாண்டி, அடுத்தடுத்த அடுக்கு பாதுகாப்பும் அவருக்கு உள்ளது. ஒரு கட்டத்தில் அமெரிக்க படையினர் ஒசாமா தலைமறைவாக இருக்கும் இடத்தை நோக்கி நகர்ந்து வந்ததை, மெய்காவலர் பார்த்து விட்டார். உடனடியாக ஒயர்லெஸ் ரேடியோ மூலம் தகவல் அனுப்பினார். தனது மெய்க்காவலர்களுக்கு வேத மந்திரமாக ஒரு விஷயத்தை போதித்து வைத்திருக்கிறார் ஒசாமா. அமெரிக்கப் படை சுற்றி வளைத்துவிட்டால், `ஒசாமவை கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொள்ளவேண்டும்' என்பது தான் அது. அமெரிக்கப் படையினர் நெருங்கியதை அறிந்த மெய்க்காவலர்கள், அவரை படுக்க வைத்து வேறிடத்துக்கு துாக்கிச் சென்று விட்டனர். மலைப்பகுதி போர் தந்திரத்தில் அமெரிக்கப் படையினருக்கு திறமை இல்லாததால், ஒசாமாவை பிடிக்க முடியாமல் போய்விட்டது. மலைக்குகைகளை வெறுமனே சோதனையிடுவது தான் அவர்களது வழக்கமாக இருந்தது. அமெரிக்காவில் தாக்குதல் நடத்துவதற்கு முன் ஒசாமாவின் மெய்க்காவலராக இருந்தவர் நசிர் அல் பாரி. ஒசாமாவின் வாழ்க்கை முறை பற்றி, `நியூஸ் வீக்' இதழுக்கு பிரத்யேகமாக அவர் பேட்டி அளித்தார்.

பேட்டியில் அவர் கூறியதாவது: எனக்கு முதல் ஆண் குழந்தை பிறந்தபோது, பேரீச்சம்பழத்தை தனது வாயில் கூழ்போல அரைத்து, அதை அக்குழந்தைக்கு ஊட்டினார். அப்போது, குழந்தையின் இருகரங்களையும் பிடித்துக் கொண்டு, குழந்தையின் காதருகே, `அல்லா ஓ அக்பர்' என்று கூறினார்.மெய்க்காவலர்களிடம் பெரிதும் அன்பு செலுத்துபவர் ஒசாமா. தலைமறைவு வாழ்க்கை வசித்தாலும், குடும்பத்தை விட்டு அவர் பிரிவது இல்லை. நான் அவரிடம் மெய்க்காவலராக இருந்த போது, அவருக்கு ஆறு மனைவிகள். எட்டு ஆண் குழந்தைகள்; ஆறு பெண் குழந்தைகள். இவர்களில் மூத்த ஆண் குழந்தைகள் மூன்று பேர் சவுதி சென்றிருந்தனர்.தற்போது, ஒசாமா தனது நான்கு மனைவிகள் மற்றும் 11 குழந்தைகளுடன், குடும்ப வாழ்க்கையில் தான் உள்ளார். திருப்தியான குடும்ப வாழ்க்கையை அவர் மேற்கொண்டு வருகிறார். அவர் உண்மையான குடும்பத் தலைவராக செயல்படுகிறார். மனைவி மற்றும் குழந்தைகள் தேவையிலும் கவனம் செலுத்துகிறார். அவரை மரியாதையுடன், `ஷேக்' என்று தான் நாங்கள் அழைப்போம். உலகிலேயே வல்லரசு நாடான அமெரிக்காவால் கூட அவரை பிடிக்க முடியாததால், முஸ்லிம்கள் மத்தியில் அவர் மீது மரியதை அதிகரித்து உள்ளது. ஒசாமாவின் கவுரவமும், தைரியமும் முஸ்லிம்கள் மத்தியில் அவரது புகழை மேலும் உயர்த்தி உள்ளது. அல்லாவால் அனுப்பப்பட்டவர் என்று கருதுவதால், ஒசாமா செய்யும் எந்த காரியமும் சரியானதாகவே இருக்கும் என்று உறுதியாக நம்புகின்றனர் முஸ்லிம்கள். பயங்கரவாதிகள் ஆவேசமாக பேசுவர் என்று தான் மற்றவர்கள் நினைப்பர். ஆனால், ஒசாமா மென்மையாக பேசக்கூடியவர். தனது பேச்சின் இடையே, குரானில் இருந்தும் சில கவிதைகளில் இருந்தும் மேற்கோள் காட்டுவார். எல்லாமே இஸ்லாமிய வழி அறப்போரை வலியுறுத்துவதாகத்தான் இருக்கும். அவர் பேசும் போது, அமெரிக்கா பற்றி மட்டும் கோபமாக குறிப்பிடுவார். குழந்தைப் பருவத்திலிருந்தே அவருக்கு அமெரிக்கா மீது வெறுப்பு வளர்ந்திருக்க வேண்டும். அமெரிக்காவில் தயாரான எதையும் அவர் பயன்படுத்துவது இல்லை. பெப்சி கூட குடித்தது இல்லை. ஒசாமாவின் மெய்காவலர் குழுவில் இருந்து நான் விலகி ஏமன் வந்து விட்டாலும், இப்போதும் கூட அல்-குவைதாவின் அனுதாபி தான். இவ்வாறு அல் பாரி கூறினார். அல் பாரி கூறியிருப்பதை சுட்டிக்காட்டிய, `நியூஸ் வீக்' பத்திரிகை, `இன்னும் மலை சூழ்ந்த பகுதியில் தான் ஒசாமா தலைமறைவு வாழ்க்கையில் இருக்க வேண்டும்; அப்பகுதியில் கவனம் செலுத்தினால், ஒசாமாவை பிடித்து விடலாம்' என குறிப்பிட்டுள்ளது.

September 01, 2007

"குறிக்கோள் இல்லாத கடமை, மனிதம் இல்லாத மனிதன் போன்றது"

  • இராக்கில் தாக்குதல்களை தாம் நிறுத்தப் போவதாக வல்லமை மிக்க ஷியாப் படைப் பிரிவின் வாக்குறிதியின்படி அவர்கள் நடந்து கொண்டால், இராக்கிய கட்டளைப் படைகளின் படைகளும், இராணுவ வளங்களும் அல் கையீதாவுக்கு எதிரான போரில் மேலும் கூடுதலாக ஈடுபடுத்தப்படலாம் என்று இராக்கிலுள்ள அமெரிக்கத் தளபதிகள் அறிவித்துள்ளார்கள்.
  • தற்போது நாடு கடந்த நிலையில் வாழ்ந்து வரும் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பேனசிர் புட்டோ விரைவில் தாம் நாடு திரும்பப் போவதாக கூறியுள்ளார்.
  • இந்தியாவின் தென்மாநிலமான ஆந்திராவின் தலைநகர் ஹைதராபாதில் கடந்த வாரம் 40 பேரின் உயிரை பலிகொண்ட குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக நால்வர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாக அம்மாநில போலீசார் தெரிவித்துள்ளனர்
  • மண்ணிலிருந்து அகழ்ந்து எடுக்கப்பட்ட வைரங்களில் மிகப் பெரிய வைரம் என்று கருதப்படக் கூடிய கண்டுபிடிப்பு தொடர்பான விபரங்களை தென்னாபிரிக்க பத்திரிகை ஒன்று வெளியிட்டுள்ளது.

August 31, 2007

அமெரிக்கப் பண்பலை வரிசையில் தமிழ் பாடல்கள்!

அமெரிக்க மண்ணில் வாழும் இந்தியர்கள் அதிவேக வாழ்க்கையில் இருந்தாலும் தமிழ் பாடல்களை அதிலும் குறிப்பாக பழைய பாடல்களைக் கேட்க வாய்ப்புக்கள் உள்ளதென்று நினைக்கும்போது மனதுக்கு மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவது நண்பர் திரு.ஸ்ரீ மற்றும் திரு.இராஜன் அவர்கள். இந்த நிகழ்ச்சி மாபெரும் இசைமேதை திரு.கே.வி.மகாதேவன் அவர்கள் பற்றியது.
Powered by eSnips.com

ஞானி என்பவர் யார்?

ஒருவர் ஞானியாக என்ன செய்ய வேண்டும்? என்ற கேள்விக்கு விளக்கம் அளிக்கிறது ஒரு சாஸ்திர நூல். "மந்திரத்தாலோ, செப்படி வித்தையாலோ திடீரென வருவதல்ல ஞானம், அது மனதுக்குள் தானாக வரவேண்டும். முதலில் படிப்பு வேண்டும். பகுத்து ஆராயும் பகுத்தறிவு வேண்டும். எதையும் ஆராய்ந்து தெளிவு பெறும் திறன் வேண்டும். அதோடு, தத்துவத் தேடலும், அதை முழுதாக புரிந்துகொள்வது பற்றியும் தெரியவேண்டும். இதன்பிறகுதான் ஒருவர் ஞானியாவது குறித்து யோசிக்க வேண்டும்" என்கின்றன ஆன்மீக நூல்கள்.

பஹ்ரைன் நாட்டில் பணிபுரியும் இந்திய நண்பர்களே எச்சரிக்கை!

கறுப்பு பட்டியலில் 45 பஹ்ரைன் கம்பெனிகள் : ஊழியர்களை மோசமாக நடத்துவது, ஊதியம் வழங்காமை போன்ற மோசடியில் ஈடுபடும் 45 பஹ்ரைன் நிறுவனங்களை இந்திய தூதரகம் கறுப்பு பட்டியலில் சேர்த்துள்ளது. பஹ்ரைனில் உள்ள பல கட்டுமான கம்பெனிகளில் ஆயிரக்கணக்கான இந்திய ஊழியர்கள் பணிபுரிகின்றனர். இதில் பல நிறுவனங்கள் உள்ளூர் சட்டத்தை மதிக்காமல் தொழிலாளர்களுக்கு சரிவர சம்பளம் வழங்காமலும், அவர்களுக்கு மோசமான நிலையில் உள்ள தங்குமிடங்களை அளித்தும் அவர்களை மோசமாக நடத்துவதாக கடந்த ஒரு ஆண்டு காலமாக இந்திய தூதரகத்திற்கு பல்வேறு புகார்கள் வந்தன. இந்நிலையில் அவ்வாறு விதிமுறைகளை மீறி செயல்படும் 45 பஹ்ரைன் கம்பெனிகளை இந்திய தூதரகம் அடையாளம் கண்டு அவற்றை கறுப்பு பட்டியலில் சேர்த்துள்ளது. இந்த நிறுவனங்கள் தங்களது தவறுகளை சரி செய்யாதவரை, அந்நிறுவனங்கள் இந்தியப் பணியாளர்களை வேலையில் அமர்த்துவதற்கான அனுமதியை இந்தியத் தூதரகம் அளிக்காது என துபாயில் உள்ள இந்திய தூதரக அதிகாரி பாலகிருஷ்ண ஷெட்டி தெரிவித்தார். மேலும் கறுப்பு பட்டியலில் இடம்பெற்றுள்ள 45 பஹ்ரைன் நிறுவனங்களின் உரிமையாளர்களோ அல்லது அவற்றின் பிரதிநிதிகளோ இந்தியாவுக்கு வர விசா வழங்கப்பட மாட்டாது என்றும் அவர் கூறினார்.
துபாய்(ஏஜென்சி), வியாழக்கிழமை, 30 ஆகஸ்டு 2007 ( 15:07 IST )
(மூலம் - வெப்துனியா)

உலகின் சக்தி வாய்ந்த பெண்கள் சோனியா, இந்திரா நூயி

உலகின் சக்தி வாய்ந்த 10 பெண்களில் சோனியா, இந்திரா நூயி
வாஷிங்டன் (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 31 ஆகஸ்டு 2007 ( 15:42 IST )
உலகின் சக்தி வாய்ந்த 10 பெண்களின் பட்டியலில் சோனியா காந்திக்கு 6 வது இடம் கிடைத்துள்ளது. பிரபல அமெரிக்க பத்திரிகையான ஃபோர்ப்ஸ் ஒன்று உலகின் சக்தி வாய்ந்த 10 பெண்களை பட்டியலிட்டுள்ளது. இதில் ஜெர்மனியின் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் (தொடர்ந்து இரண்டாவதாண்டாக) முதலிடத்திலும், சீனாவின் துணை பிரதமர் வூ யி இரண்டாவது இடத்திலும், சிங்கப்பூரின் மிகப்பெரிய தொழில் நிறுவனமான காங்லோமெரேட் 3 வது இடத்திலும் உள்ளதாக அப்பத்திரிகை தெரிவித்துள்ளது. நான்காவது இடத்தில் அமெரிக்க அமைச்சர் கண்டலிசா ரைஸ் இடம்பெற்றுள்ளார். காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு ஆறாவது இடமும், பிரபல பெப்சி குளிர்பான தயாரிப்பு நிறுவனத்தின் தலைமை நிர்வாகியும், அமெரிக்க இந்தியருமான இந்திரா நூயிக்கு 7 வது இடமும் கொடுத்துள்ளது அப்பத்திரிகை.

'அகில இந்திய சமத்துவமக்கள் கட்சி'

நடிகர் சரத்குமாரின் புதிய கட்சி இன்று மாலை உதயமானது. புதிய கட்சிக்கு 'அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
நடிகர் விஜயகாந்த்தைத் தொடர்ந்து சரத்குமாரும் அரசியல் களம் கண்டுள்ளார். தனது கட்சி இன்று தொடங்கப்படும் என்று அறிவித்திருந்தார் சரத்குமார். அதன்படி இன்று மாலை சென்னை வடபழனி பத்மாராம் கல்யாண மண்டபத்தில் சரத்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். சரியாக இன்று (31-08-2007) மாலை 6.30 மணிக்கு தனது கட்சியின் பெயரை அவர் அறிவித்தார். தனது புதிய கட்சிக்கு 'அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி' என்று பெயர் சூட்டியுள்ளார் சரத்குமார். கட்சியின் தலைவராக சரத்குமார் அறிவிக்கப்பட்டுள்ளார். பிற நிர்வாகிகள் விவரம்: அவைத் தலைவர் - முருகன் (முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி) பொதுச் செயலாளர் - கரு. நாகராஜன் துணைத் தலைவர் - எர்ணாவூர் நாராயணன். பொருளாளர் - செல்வராஜ். துணை பொதுச் செயலாளர் - சுந்தரேசன் கொள்கை பரப்புச் செயலாளர் - மருது அழகுராஜா. கட்சிப் பெயரை அறிவித்து செய்தியாளர்களிடம் சரத்குமார் பேசுகையில், இரண்டு கழகங்களுக்கும் மாற்றாக, ஒரு புதிய அரசியல் நாகரீகத்தை உருவாக்கவே இந்த கட்சி தொடங்கப்பட்டுள்ளது. படித்த இளைஞர்களை அரசியல் ஈடுபடுத்தத் திட்டமிட்டுள்ளோம். அவர்கள் மூலம் தமிழக அரசியல் வரலாற்றில் புதிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தப் போகிறோம். அதை ஏற்படுத்தக் கூடிய தகுதி படைத்தது எங்களது கட்சி மட்டும்தான். மற்ற கட்சிகளுக்கு அந்த அருகதை கிடையாது. பிற கட்சிகள் எல்லாம் தங்களது சுய லாபத்திற்காக தொடங்கப்பட்டவை. நாங்கள் அப்படி இல்லாமல், இன்றைய இளைஞர்களை ஆக்கப்பூர்வமான வழியில் அரசியலில் ஈடுபடுத்தி புதிய மறுமலர்ச்சியை ஏற்படுத்துவோம். முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் காட்டிய வழியில்தான் நாங்கள் போகப் போகிறோம். அவர் கண்ட கனவையே நாங்களும் காணுகிறோம். எங்களது முக்கிய நோக்கம் காமராஜர் ஆட்சி அமைப்பதுதான். அதே நோக்கத்தில்தான் காங்கிரஸ் கட்சியும் உள்ளது. இரு கட்சிகளுக்கும் ஒரே நோக்கம்தான். எனவே எதிர் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இரு கட்சிகளும் இணக்கமான நட்பை ஏற்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்புகள் உள்ளன என்றார் சரத்குமார்.

உயிரை பறிக்கும் "செல்போன்"


20 நிமிடத்திற்கு மேல் பேசாதீர்கள் உயிரை பறிக்கும் "செல்போன் பயங்கரம்"

விஞ்ஞானிகள் எச்சரிக்கை தகவல்-சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு 10 அக்கம், பக்கத்து கிராமங்களுக்கு மத்தியில் ஒரே ஒரு ஊர் பண்ணையார் வீட்டில் மட்டும் இருந்தது அந்த டெலிபோன். அழகான பெண்ணின் இடைபோல, கன்னங்கரேல் உருவத்தில், சுமார் 2 கிலோ எடை அளவு கொண்ட அந்த போனில் வளையம், வளையமாக 10 ஓட்டைகள் இருக்கும். குறிப்பிட்ட எண்ணை விரலால் இடமிருந்து வலமாக சுற்றிவிட்டால் 'ஸ்பிரிங்' போல ரிவர்ஸ்சில் வந்து டிரிங்... டிரிங்... என்று மணியடிக்கும். அப்போதெல்லாம் உலகம் முழுவதும் ஒரே ஒரு 'ரிங்டோன்' தான்! இப்போது ஒரே சட்டைப் பையில் விதம் விதமாக 4 செல்போன்களை தாராளமாக வைத்திருக்கிறார்கள். ஒருபுறம் வேடிக்கையாகவும் இருக்கிறது. காதில் 'ஹெட்போனை' வைத்துக் கொண்டு நடுரோட்டில் தனக்குத்தானே பேசிக் கொண்டு போவதை செத்துப் போன நமது தாத்தா - பாட்டி பார்க்க நேர்ந்தால் 'பாவம், யாரு பெத்த புள்ளையோ இப்படி பைத்தியம் புடிச்சு அலையுது" என்பார்கள்.கற்பனைக்கும் எட்டாத இந்த செல்போனை யார் கண்டுபிடித்தது?சிகாகோவைச் சேர்ந்த 'மார்ட்டின் கூப்பர்' என்பவர்தான் இந்த நவீன செல்போனை கண்டுபிடித்தது.1973-ம் ஆண்டு ஏப்ரல் 3-ந் தேதி உலகின் முதல் செல்போனை கண்டு பிடித்து முதன் முதலாக பேசியதும் இவர்தான். பிரபல 'மோட்டோரல்லா' கம்பெனிதான் முதல் செல்போனை உலகிற்கு காட்டியது.இந்த நிறுவனத்தை சேர்ந்த மார்ட்டின் கூப்பர் முன்னதாக வயர்லெஸ், ஆன்டனா சம்பந்தமான கடை வைத்திருந்தவர் என்பது விசேஷம்.எனினும் இந்த செல்போனுக்கு அடிப்படை ஆதாரத்தை அமைத்துக் கொடுத்தது அமெரிக்காவின் நியூஜெர்சியை அடுத்து 'முர்ரேஹில்' பகுதியில் உள்ள 'பெல்' லேபாரட்டரிதான்.இவர்கள்தாம் வயர்கள் இல்லாத வாக்கி - டாக்கி ரேடியோவை 1947-ல் கண்டுபிடித்து ராணுவ உபயோகத்திற்காக தந்தார்கள். இது அதிக எடைகொண்டதாக இருந்தது. இதனை 1960 வாக்கில் ஓரளவுக்கு நவீனமாக்கினார்கள். இதைத்தொடர்ந்துதான் 1973-ல் மார்ட்டின் கூப்பர் நவீன உயர்ரக செல்போனை கண்டுபிடித்தது. 1990-ல் உலகம் முழுவதும் செல்போன்கள் முற்றிலும் நவீன யுகத்திற்கு போய்விட்டன. செல்போனை கண்டு பிடித்ததற்காக கடந்த 2003-ல் வார்தான் இன்போசிஸ் பிசினஸ் டிரான்ஸ்பர்மேசன் விருது கிடைத்திருக்கிறது மார்ட்டின் கூப்பருக்கு!முதல் செல்போனை 'மோட்டோரல்லா' கண்டு பிடித்தாலும் இன்று உலகம் முழுவதும் செல்போன் வியாபாரத்தில் சக்கைப் போடு போடுவது 'நோக்கியா' நிறுவனம் தான்! உலகில் 36 சதவீதம் பேர் இதைத்தான் வைத்திருக்கிறார்கள். இது தவிர எல்.ஜி. மிட், சுபிசி, பேனாசோனிக், சோனி எரிக்சன், சன்யோ, சாம்சங், சைமன்ஸ், தோஷிபா, பிலிப்ஸ் நிறுவனங்களும் போட்டியில் உள்ளன.இன்றைக்கு உலகம் முழுக்க சுமார் 350 கோடி பேர் செல்போன் வைத்திருக்கிறார்கள். இவர்களில் அதிகம் பேர் செல்போன்கள் வைத்து நம்பர் 1 இடத்தில் இருப்பவர்கள் சீனாக்காரர்கள். இங்கு 50 கோடி பேரிடம் செல் இருக்கிறது.இந்தியாவை பொறுத்த வரையில் கடந்த 2007 ஜுன் மாத கணக்குப்படி பதினெட்டே முக்கால் கோடி பேரிடம் செல்போன் இருக்கிறது. இந்தியாவில் மாதத்திற்கு 73 லட்சம் செல்போன்கள் விற்கின்றன. வருகிற 2010-ம் ஆண்டுக்குள் 50 கோடி செல்போன்கள் விற்பனையாகும் என்று கணக்கிடப்பட்டு இருக்கிறது.உலகின் பல நாடுகளில் ஜனத்தொகையை விடவும் செல்போன்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.இதில் லக்சம்பர்க்காரர்கள் 164 சதவீதம் செல்போன் வைத்து உலகின் முதல் இடத்திலும், ஹாங்ஹாங்கினர் 117 சதவீதம் செல்போன் வாங்கி 2-ம் இடத்திலும் இருக்கின்றனர்.


வருகிற 2015-ம் ஆண்டு உலகின் 90 சதவீதம் பேரிடம் செல்போன் இருக்குமாம்.'அதிர்ச்சி' இங்கிருந்துதான் ஆரம்பமாகிறது. ஒருவேளை இந்த செல்போனே உலகை அழிக்க காத்திருக்கும் சுனாமி எமனாக இருக்கலாம்.எந்த ஒரு அபாயகரமான சூழ்நிலையையும் அது வரும் முன்பே கண்டுபிடித்து உலகுக்கு எச்சரிக்க வேண்டியது விஞ்ஞானிகளின் கடமையாகும்.அந்த வகையில் செல்போன் பற்றிய அதிர்ச்சி தகவல்கள் வேகமாக வெளியே வர ஆரம்பித்திருக்கின்றன. அமெரிக்க அரசின் உணவு மற்றும் மருந்து நிர்வாக மையம் நடத்திய ஆராய்ச்சியில் செல்போனின் அதீத பயன்பாட்டால் மூளையில் புற்றுநோய் வர வாய்ப்பு இருப்பதாக கண்டுபிடித்தது, எனினும் அறிக்கைக்கு போதுமான ஆதாரங்கள் இல்லாமல் இது ஒரு தற்காலிக முடிவு என்று விட்டுவிட்டார்கள். செல்போன் என்பது சமீபத்தில் தான் கண்டு பிடிக்கப்பட்டது என்பதால் இதுபற்றிய உண்மைகளை அறிய கால அவகாசம் தேவைப்படும் என்று உலக விஞ்ஞானிகள் அறிவித்த பட்சத்தில் உலக சுகாதார மையமும் முன்னர் அமெரிக்கா கண்டுபிடித்த விஷயத்தில் மூக்கை நுழைத்து 'ஆம்' என்று கூறியிருக்கிறது.கடந்த 10 வருடங்களாக தொடர்ந்து செல்போனை உபயோகித்து வந்த 3 ஆயிரம் பேரை பரிசோதித்து பார்த்தபோது அவர்களில் 40 சதவீதம் பேருக்கு மூளையில் கேன்சர்கட்டிகள் உருவாகி உள்ளது. இவை 2 விதமான புதிய கேன்சர் நோயாக உள்ளன.பொதுவாக செல்போனில் இருந்து வெளிவரும் 'ரேடியேசன்' என்ற கதிர்வீச்சு மிகக் குறைந்த அளவுதான் என்றாலும் அது மனித உடலின் திசுக்களை ஓரளவு பாதிக்கத்தான் செய்கிறது.செல்போனில் அதிக நேரம் பேசிக் கொண்டிருப்பவர்களுக்குத்தான் இத்தகைய ஆபத்து. காதையும் உட்காதையும் மூளையுடன் இணைக்கின்ற 'ஆக்யூஸ்டிக் நியூரோம்ஸ்' என்கிற நரம்பு பாதிப்பும் இவர்களுக்கு ஏற்படுகிறதாம். அதிக அளவு செல்போன் உபயோகிப்பவர்களுக்கு மூளைச் செயல்பாடுகள், தூக்கம், விழிப்புணர்வு ஆகியவற்றில் மாற்றம் ஏற்படுவதாகவும் கண்டுபிடித்து இருக்கிறார்கள். இதில் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் விஷயம் உடல் திசுக்கள் முழு வளர்ச்சி அடையாத நிலையில் குழந்தைகளும் செல்போனை பயன்படுத்தி வருகின்றனர். செல்போன் கதிர்வீச்சுகள் இவர்களின் திசுக்களை மிக எளிதாகவே பாதித்துவிடும் என்ற நிலையில் இவர்கள் வளர்ந்து பெரியவர்கள் ஆகும்போது நீண்டகாலம் செல்போனை பயன்படுத்தியவர்கள் ஆகிறார்கள். எனவே அதிக ஆபத்து இவர்களைச் சூழ்ந்திருக்கிறது என்கிறார்கள்.இதுபற்றி அயிஸ் செல்சின், லாவரிசாலிஸ் என இரு விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆராய்ச்சி செய்த வண்ணம் இருக்கிறார்கள்.இதுதவிர உளவியல் ரீதியான ஆராய்ச்சி முடிவு களும் தற்போது வெளிவர ஆரம்பித்திருக்கின்றன. செல்போனை அதிகம் பயன்படுத்துபவர்களில் 60 சதவீதம் பேருக்கு கோப குணமும், தலைவலியும், பெருகுவதாக அவர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஒருவேளை செல்போனால் கேன்சர் நோய் உறுதி செய்யப்பட்டால் 2015-ல் உலகில் 90 சதவீதமான மக்களின் கதி என்னவாகும். - 'இப்பவே கண்ணைக்கட்டுதே"


எச்சரிக்கை டிப்ஸ்: செல்போன் என்பது அடிப்படை தகவல் பரிமாற்றத்திற்காகத்தான் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், அதனை நம்மவர்கள் நீண்ட நேர அரட்டைக் கச்சேரிக்காக பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறார்கள். பேசுவது காதலியாக இருந்தாலும் கூட ஒருவரிடம் 20 நிமிடங்களுக்கு அதிகமாக பேசாதீர்கள். நட்புகளை வளர்த்துக் கொண்டு அதிகம் பேரிடம் இடைவெளியின்றி பேசாதீர்கள். போதிய ஓய்விற்கு பிறகே அடுத்தவரிடம் பேச வேண்டும். ஒரே சமயத்தில் பல போன்களில் பேசாதீர்கள். வள, வள பேச்சுக்களை தவிருங்கள். இரவில் செல்போனுக்கும் ஓய்வு கொடுத்துவிடுங்கள்.

வெறிநாய்கள் ஜாக்கிரதை!

ஜோஸப் மெய்ஸ்டர் என்பவர் 1885 ஜூலை 4-ம் தேதி ஒரு வெறிநாய் கடியால் கடிப்பட்டார். இங்ஙனம் கடிப்பட்டால் 3 தினங்களில் சாவு நிச்சயம் எனக் கொள்ளலாம். மெய்ஸ்டான் தாய், விஞ்ஞானி லுயிஸ் பாஸ்டரை அணுகினார். அவர் அச்சமயம் வெறிநோய் பற்றி நாய்கள், முயல்கள் மீது பரிசோதனை செய்து கொண்டிருந்தார். ஜூலை 6-ம் தேதி, அது வரை சோதனைச் செய்யப்படாத ஒரு புது தடுப்பூசி மருந்தை அளித்தார். மெய்ஸ்டர் உயிர் பிழைத்தார். அச்சம் ஊட்டும் வெறிநோய் வெற்றிக் கொள்ளப்பட்டது.
நாய்க்கடி என்பது மூளையைத் தக்கும் ஒருவகை நுண்ணுயிரால் (வைரஸ்) ஏற்படும் நோயாகும். அது அதிகமாக நாய்கடியால் ஏற்பட்டாலும் எப்போதாவது அரிதாக பூனைகள், குரங்குகள், ஓநாய்களாலும் ஏற்படலாம்.
உலகம் முழுவதும் சுமார் 1 கோடி மக்கள் ஒவ்வோர் ஆண்டும் நாய்கடி தடுப்பூசி போட்டுக் கொள்கிறார்கள். ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவில் சுமார் 50,000 மக்கள் நாய்க்கடி நோயால் ஒவ்வோர் ஆண்டும் இறக்கிறார்கள். இதில் 20,000 முதல் 25,000 வரை 15 வயதுக்குட்பட்ட சிறார்கள் என்பது குறிப்பிடதக்கது.

இந்த நாய்க்கடியில் சுமார் 67% இந்தியாவில் ஏற்படுகிறது. இந்தியாவில் மட்டும் சுமார் 30,000 பேர் நாய்க்கடியால் ஒவ்வோர் ஆண்டும் இறக்கிறார்கள். அதே சமயம் 50 லட்சம் பேர் நாய்க்கடித்த பிறகு தடுப்பூசி போட்டுக்கொள்கிறார்கள். இந்தியாவில் உள்ள நாய்களின் எண்ணிக்கை மட்டும் சுமார் 2 கோடி! கடிப்பட்டதில் இருந்து நோய் தொடங்கும் வரையான காலம் 5 நாட்கள் முதல் ஒரு ஆண்டு வரை வேறுபடுகிறது. சராசரியாக இரண்டு மாதங்களில், சதரணமாக இந்த நோய் தொடங்குகிறது. முதலில், முதல் 2-10 நாட்கள் தெளிவற்ற சில அறிகுறிகள் தென்படும். நோயாளி காய்ச்சல், தலைவலி, பசியின்மை, வாந்தி போன்றவற்றால் அவதிப்படுவார். மேலும் கடிபட்ட இடத்தில் வலி, அறிப்பு, மருத்துப்போதல், நமைச்சல் முதலியன இருக்கும். கடைசிக் கட்டத்தில் நோயாளி விழுங்குவதற்குச் சிரமப்படுவார். சில நோயாளிகள் கலக்கத்துடனும், தடுமாற்றத்துடனும் செயல்படத் தொடங்குவர். நோய் வந்த பிறகு இதற்கு வைத்தியம் இல்லை. ஆனால் இந்த நோய் 100% வராமல் தடுக்க தடுப்பூசி உள்ளது. நாய்க்கடி நோய்க்கு 3 வகையான தடுப்பூசிகள் உள்ளன. மிருகத்தின் மூ¨ல்திசு அல்லது திசுவிலிருந்து எடுத்த தடுப்பூசி மருந்து (NTV) ஏ.வியன் தடுப்பூசி (AV)
திசுக்களில் இருந்து பண்ணிய தடுப்பூசி (TCV) திசுகளிலிருந்து உண்டு பண்ணிய தடுப்பூசியால் பல நன்மைகள் உள்ளன. கடிபடுவதற்கு முன்பே, எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ளும் சிகிச்சை முறைக்கும், கடிபட்ட பின் செய்யும் சிகிச்சைக்கும் இது மிகவும் பயனளிக்கிறது. மிகவும் குறைந்த வலி உடையது. மிகக் குறைந்த அளவு மருந்தே தேவைப்படும். வயிற்றில் ஊசி போட தேவை இல்லை. நாய்க்கடி நோயின் தாக்குதல் ஏற்படக்கூடிய நிலையில் எவ்வளவு சீக்கிரம் இம்மினோகுளோபிளினும் ஒரு தடுப்பூசியும் எடுத்துக் கொள்ள வேண்டும். அன்றிலிருந்து 3, 7, 14, 28, 90-வது நாட்களில் மேலும் 5 தடுப்பூசிகள் போட்டுக்கொள்ள வேண்டும். நாய்க்கடி நோயின் தாக்குதல் ஏற்படக்கூடிய நிலையில் எத்தனை விரைவாக முடியுமோ அத்தனை விரைவாக மருத்துவ உதவி நாடவேண்டும். உடனடியாக, நாய்க்கடி உள்ள இடங்களையும், நகத்தால் பிராண்டிய இடங்களையும் கவனித்துச் சுத்தப்படுத்த வேண்டியது மிக மிக முக்கியமானதாகும், இது முதலாவதாகவும் செய்ய வேண்டியது ஒன்று. காயம் பட்ட இடங்களையும், அவற்றைச் சுற்றியுள்ள இடங்களையும் உடனேயே குழாயின் கீழ் ஓடும் நீரால் நன்றாக சோப்பு போட்டு கழுவ வேண்டும். நிறைய சோப்பும் நீரும் உபயோகிக்கவும். அதன் பின்னும் இருக்கக் கூடிய கிருமிகளை செயலிழக்கச் செய்ய டிஞ்சர், ஆல்கஹால், டெட்டால், சாவலான் போட்டுக் கழுவ வேண்டும். எரிச்சல் உண்டாக்கக்கூடிய செடிகளின் சாறுகள், காப்பிப்பொடி, மிளகாய்ப் பொடி, உலோகங்கள், அமிலங்கள், சுண்ணாம்பு போன்றவற்றைத் தடவக்கூடாது. கடிப்பட்ட இடத்தைத் தையல் இட்டு உடனடியாக மூடக்கூடாது. மருத்துவரை உடனே அனுகவும். முடிந்தால் கடித்த விலங்கைப் பிடித்து, தனி அறையில் இட்டு, பத்து நாட்கள் உன்னிப்பாகக் கவனித்து, அதற்கு வெறிநோய்க்கான அறிகுறிகள் தோன்றுகின்றனவா என்று பார்க்க வேண்டும்.


நன்றி -குழந்தை மருத்துவர், சைல்ட் டிரஸ்ட் மருத்துவ மனை

கவிப்பேரரசு வைரமுத்துவிலிருந்து காமெடியரசு விவேக் வரை

விருமாண்டி நேர்முகம்

இன்றைய குறள்

இன்சொலால் ஈரம் அளைஇப் படிறிலவாம்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்

ஒருவர் வாயிலிருந்து வரும் சொல் அன்பு கலந்ததாகவும், வஞ்சனையற்றதாகவும், வாய்மையுடையதாகவும் இருப்பின் அதுவே இன்சொல் எனப்படும்
அறத்துப்பால் : இனியவை கூறல்

முதலில் உனது பயத்திலிருந்து உன்னைச் சுதந்திரமாக்கு! பிறகு ஒவ்வொருவரும் சுதந்திரத்தைச் சுவாசிப்பார்கள்!

இந்தியப் பொருளாதரம் தொடர்ந்து வளர்ச்சி

  • இந்தியப் பொருளாதாரம் தொடர்ந்து மிகப் பெரும் அளவில் வளர்ந்து வருகிறது. அரசு கணக்கீடுகளின்படி கடந்த ஆண்டு இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சி ஒன்பது சதவீதமாக இருக்கிறது.
    கடந்த இருபது ஆண்டுகளில் கடந்த ஆண்டில்தான் இந்தியப் பொருளாதாரம் இவ்வளவு வேகமாக ஆய்வாளர்களின் எதிர்பார்ப்பையும் மீறி வளர்ந்துள்ளது.
    இந்தியாவின் பொருளாதாரம் சரியாக 9.3 சதவீதம் வளர்ந்தாலும் அது அரசை கவலையில் ஆழ்த்தக் கூடும் என பிபிசியின் செய்தியாளர் கூறுகிறார்.
    இந்தியாவில் உணவுப் பொருட்களின் விலைகள் உயர்ந்து வருவது குறித்து அரசு கவலை கொண்டுள்ளது எனவும் எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.
    கடந்த பத்தாண்டுகளில் இந்தியப் பொருளாதாரம் சராசரியா ஏழு சதவீதம் வளர்ந்து வருகிறது என்பதும் உலக அளவில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் இந்தியப் பொருளாதாரமும் ஒன்று என்பதும் குறிப்பிடத்தக்கது.
  • பத்தாண்டுகளுக்கு முன் மறைந்த டயானாவுக்கு மக்கள் அஞ்சலி:
    பத்தாண்டுகளுக்கு முன்னர் இதே தினத்தில் ஒரு சாலை விபத்தில் உயிரிழந்த வேல்ஸ் இளவரசி டயானா
    வை நினைவு கூறும் முகமாக இன்று மத்திய லண்டனில் அஞ்சலி செலுத்தப்பட்டது
  • மத்திய கிழக்கின் காசா நிலப்பரப்பில் ஹமாஸ் இயக்கத்திற்கு எதிரான போரட்டங்கள், வன்முறையில் முடிந்திருக்கின்றன.
  • இராக்கின் ஆயுத குழுக்கள் தங்களது செயற்பாடுகளை இடைநிறுத்த வேண்டும் என்று, இராக் அரசாங்கம் வேண்டுகோள் விடுத்திருக்கிறது
  • மேலும் இன்றைய (ஆகஸ்ட் 31 வெள்ளிக்கிழமை 2007) "BBC" தமிழோசை செய்திகள் கேட்க இணைப்பில் செல்க http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml?tamil_worldnews

பின்னனிப் பாடகர் சங்கீதா - 1

பின்னனிப் பாடகர் சங்கீதா - 2

பின்னனிப் பாடகர் ஜெயதேவ் 1

பின்னனிப் பாடகர் ஜெயதேவ் - 2

குடும்பப் பின்னனியால் இல்லாமல் திறமையை மட்டுமே நம்பி வளர்ந்துகொண்டிருக்கும் ஒரு நடிகர்

August 30, 2007

இன்றைய குறள்

மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து


அனிச்சம் எனப்படும் பூ, முகர்ந்தவுடன் வாடிவிடக் கூடியது. அதுபோலச் சற்று முகங்கோணி வரவேற்றாலே விருந்தினர் வாடிவிடுவர்

அறத்துப்பால் : விருந்தோம்பல்

"நம் கையிலுள்ள தீப்பொறி வேண்டுமானால் சிறியதாக இருக்கலாம். ஆனால் பற்றப்போவது பிரபஞ்ச நெருப்பு. இந்தப்பொறி உங்கள் ஒவ்வொருவரிடமும் இருக்கிறது. நீ தீப்பந்தத்தை ஏந்திப்பிடிக்கக் கற்றுக்கொள், மற்றதை அது முடித்துவைக்கும்"

தமிழோசை

  • காணமல்போனவர்களின் உறவினர்கள் தொடர்ந்து தவிப்பு
    போர் மற்றும் பல்வேறு கரணங்களினால் காணாமல் போனவர்களை நினைவு கூறும் வகையில் சர்வதேச காணாமல் போனோர் தினம் இன்று வியாழக்கிழமை அனுசரிக்கப்படுகிறது. இவ் வேளையில் இலங்கையில் உள்நாட்டு யுத்தம் மற்றும் பல்வேறு காரணங்களினால் இது வரை காணாமல் போனதாகக் கூறப்படும் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்டோரை உறவினர்கள் நினைவு கூறுகின்றார்கள்
  • பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப்புக்கும், தற்போது நாடுகடந்து லண்டனில் வாழும் அந்நாட்டின் முன்னாள் பிரதமர் பெனாசிர் புட்டோவுக்கும் இடையில், அந்நாட்டின் அரசியல் அதிகாரத்தை பகிர்ந்து கொள்வது தொடர்பான ஒப்பந்தம் குறித்த ரகசிய பேச்சுவார்த்தைகள் ஏறக்குறைய இறுதி கட்டத்தை எட்டியிருப்பதாக, பெனாசிர் புட்டோ பிபிசியிடம் தெரிவித்தார்.
  • அணு ஒப்பந்தம் தொடர்பாக அரசியல் கருத்து வேறுபாடுகளை களைய குழு அமைக்க முடிவு : இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான ராணுவம் சாரா அணுசக்தி உடன்பாடு தொடர்பான சர்ச்சைக்குத் தீர்வு காணும் முயற்சியாக ஒரு குழுவை அமைக்க முடிவு செய்யப் பட்டிருக்கிறது.
  • இன்றைய (ஆகஸ்ட் 30 வியாழக்கிழமை 2007) "BBC" செய்திகளுக்கு இணைப்பில் செல்க http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml?tamil_worldnews

நெஞ்சு பொறுக்குதில்லையே!

“அன்னையர் தினம்”

அதிகாலையில்
அழைத்து வாழ்த்துச் சொன்னால்
அன்னையின்
அயர்ந்த தூக்கம் கெட்டுவிடும் என்று
அலுவலகம் சென்றவன்
அனுமதி பெற்று
அவசர அவசரமாகக் காரில்
பறந்துசென்றான்
பார்வையாளர் நேரம் முடிவதற்குள்…
ஆதரவற்றோர் இல்லம் நோக்கி!
- நவநீ
கருவறை; தாய்மையின் அடையாளம்; கரு உருவாகி, மெல்ல... மெல்ல வளர ஆரம்பித்ததும், அப்பெண்ணின் தன்மையே மாறிவிடும். ஈருயிர், ஓர் உடலாக வாழ்வாள். தனக்காக இல்லாவிட்டாலும், கருவறையில் குடியிருக்கும் குழந்தைக்காக பார்த்து, பார்த்து சாப்பிடுவாள். பிடிக்காதென ஒதுக்கி வைத்த உணவு பொருட்களாக இருந்தாலும், "குழந்தை சத்து போடும்' என நினைத்து சாப்பிடுவாள். பத்து மாதங்கள் தவமிருந்து பெற்ற பின்பும்கூட, குழந்தை நோய் எதிர்ப்பு சக்தி பெற வேண்டும் என்பதற்காக, தனது ஒவ்வொரு சொட்டு ரத்தத்தையும், தாய் பாலாக்கி ஊட்டுவாள். ஒவ்வொரு தாயும், கடவுளுக்கு சமம்!
ஆனால், இன்றைய சமுதாயத்தில் தாய்மார்களின் நிலை, கேள்விக்குறியாகி வருகிறது. பெத்த மனம் பித்து; பிள்ளை மனம் கல்லு என்று சொல்வதற்கேற்ப, முதியோர் இல்லங்களில், பெற்றோரை ஒப்படைப்பது அதிகரித்து வருகிறது. கோவை நகரில் அங்கொங்கொன்றும், இங்கொன்றுமாய் இருந்த முதியோர் இல்லங்கள், இன்று புற்றீசல் போல பல இடங்களில் தோன்ற ஆரம்பித்துள்ளன. கடந்த சில ஆண்டுகளில் கோவை நகரில் மட்டும் 60 முதியோர் இல்லங்கள் துவக்கப்பட்டுள்ளன. பொத்தி, பொத்தி பாதுகாக்க வேண்டிய பெற்றோரை, இன்றைய இளைஞர்களில் சிலர், நெஞ்சிரக்கமின்றி தனியார் காப்பகங்களில் விட்டுவிட்டு, தங்களது பொறு ப்பை தட்டிக் கழிக்கின்றனர்.அவர்களும், உற்றார் உறவினர் இல்லாமல், பேரன், பேத்திகளை கொஞ்சி மகிழ முடியாமல், கண்ணீரோடு நாட்களை கடத்திக் கொண்டிருக்கின்றனர். "என்னோட பிள்ளை கலெக்டராகணும்; கமிஷனராகணும்; டாக்டராகணும்' என பலவிதமான கனவுகளோடு வியர்வை சிந்தித்து சம்பாதித்து ஒவ்வொரு காசையும், தனது குழந்தையின் கல்விக்காக கொட்டுகின்றனர் பெற்றோர். ஆனால், மெத்த படித்ததும் வெளிநாட்டு கனவில் மிதக்கின்றனர். வேலை கிடைத்ததும், பெற்றோர் ஒதுக்கித்தள்ள "துணிந்து' முடிவெடுத்து விடுகின்றனர்.

"வெளிநாட்டில் அதிகம் குளிர் இருக்கும்; உன்னோட உடம்பு தாங்காது; முதியோர் இல்லத்தில், கொஞ்சள் நாள் இருங்கள்; திரும்பி வந்து உங்களை கூட்டிச் செல்கிறேன்' இதுவே, பெற்றோருக்கு, அக்குழந்தைகள் சொல்லும் கடைசி வார்த்தைகள். அதன்பின், பாசத்துக்கு பதில், பணம் தான் வரும், பராமரிப்பு செலவுக்காக. முதியோர் இல்லங்களை பராமரித்து வருபவர்களிடம் விசாரித்தபோது, "பெற்ற குழந்தைகளை காட்டிலும், பேரன், பேத்திகளே, தாத்தா, பாட்டிகளை அதிகம் வெறுக்க துவங்குகின்றனர். அக்காலத்தில் குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பு முதியோர்களிடம் இருந்தது. இப்போது, இரண்டு வயதானதும், அருகிலுள்ள காப்பகத்தில் குழந்தையை பெற்றோர்கள் விட்டுச் செல்கின்றனர். இதனால், தாத்தா, பாட்டிகளின் அருமை தெரியாமல், இக்குழந்தைகள் வளர்கின்றன.

"வீட்டுக்கு வரும் குழந்தைகளுக்கு, பெரியவர்கள் கூறும் அறிவுரையால் எரிச்சல் அடைகின்றனர்; வயதான காலத்தில் அவர்கள் இருமுவது கூட சிறிய குழந்தைகளுக்கு ஆத்திரத்தை உருவாக்குகிறது. தங்களது குழந்தைகளுக்காக, பெற்றோர்களை முதியோர் இல்லத்தில் கொண்டு வந்து சேர்ப்பதும் அதிகரித்து வருகிறது' என்கின்றனர் காப்பக நிர்வாகிகள்.
மாமியார் மருமகள் இடையே ஏற்படும் பிரச்னை, வயதாகும்போது வரும் உடல் நலக்குறைவு, பேரன், பேத்திகளால் ஓரம் கட்டப்படுவது என பல்வேறு காரணங்களால்,கோவையில் சமீபகாலமாக முதியோர் இல்லங்கள் நிரம்பி வழிகின்றன. முதியோர் உதவித்தொகையாக, மாதம் ரூ.400 கருணை தொகையாக தமிழக அரசு வழங்குகிறது. ஆனால், இத்தொகை தனியார் காப்பகங்களில் வசிக்கும் முதியோருக்கு கிடைப்பதில்லை.

"ஜப்பான் நாட்டில் மொத்த வருவாயில் 30 சதவீதம், அந்நாட்டின் முதியோர்களுக்கு செலவு செய்யப்படுகிறது. ஆனால், இந்தியாவின் மொத்த வருவாயில் இரண்டு சதவீதம் கூட சீனியர் சிட்டிசன்களுக்கு செலவு செய்யப்படவில்லை' என்கிறார் ஓய்வு பெற்ற தாசில்தார் கிருஷ்ணசாமி. இந்தியாவில் 2055ம் ஆண்டில் மொத்த மக்கள் தொகையில் 35 சதவீதம் பேர் முதியோர்களாக இருப்பர். அப்போது, "முதியோரை பராமரிப்பது நாட்டின் மிகப்பெரிய சவாலாக இருக்கும்' என பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். அதற்குமுன், நாட்டிலுள்ள அனைத்து முதியோர் இல்லங்களையும் அரசுடமையாக்க வேண்டும்; மருத்துவம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்து தர வேண்டும். பெற்றோரை கடைசி காலத்தில் கவனிக்க, பிள்ளைகளின் சம்பளத்தில் குறிப்பிட்ட தொகையை பிடித்தம் செய்ய வேண்டும். இருப்பினும், தங்களது பெற்றோரை முதியோர் இல்லத்துக்கு அனுப்பும் ஒவ்வொரு மகனும், மகளும், தங்களது மனசாட்சியிடம் "எனக்கும் வயதாகுமோ' என்று ஒரே ஒரு கேள்வி மட்டும் கேட்டுப் பாருங்கள்!

அமெரிக்க அணு ஆயுத ஒப்பந்தம்

காமராஜரைப் பயன்படுத்தும் அரசியல் கட்சி - 2

ஜாதி அரசியல் - 3

இந்தியத்தேர்தல் - 4

August 29, 2007


சாதனையாளர்கள் செய்வதை வித்தியாசமாகத்தான் செய்வார்கள்!!

இன்றைய குறள்

உடைமையுள் இன்மை விருந்தோமபல் ஓம்பா
மடமை மடவார்கண் உண்டு

விருந்தினரை வரவேற்றுப் போற்றத் தெரியாத அறிவற்றவர்கள் எவ்வளவு பணம் படைத்தவர்களாக இருந்தாலும் தரித்திரம் பிடித்தவர்களாகவே கருதப்படுவார்கள்

அறத்துப்பால் : விருந்தோம்பல்

நீ உன்னைக் கேட்டுக்கொள்ளவேண்டியது, “நான் அறிவாளியா? தகுதியானவனா? என்னால் முடியுமா? என்பவை அல்ல. நான் ஏன் அறிவாளியாக இருக்கக் கூடாது? நான் ஏன் தகுதியானவனாக இருக்கக்கூடாது? என்னால் ஏன் முடியாது? என்பவைதான்.

தமிழோசை

  • இந்தியாவின் ஒரிசா மாநிலத்தில் காலாரா நோய் காரணமாக நுறு பேர் வரை உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
  • பாக்தாத் தங்கும் விடுதியில் வைத்து எட்டு இரானியர்களை தவறுதலாக தாங்கள் கைது செய்ததை, இராக்கிலிருக்கும் அமெரிக்க கட்டளைத் தளபதிகள் ஒப்புக் கொண்டிருப்பதுடன், இது மிகவும் வருந்தத்தக்க சம்பவம் என்றும் தெரிவித்துள்ளனர்.
  • அப்கானிஸ்தானில் உள்ள தலிபான் தீவிரவாதிகளால், கடந்த ஆறு வாரங்களாக கடத்தி வைக்கப்பட்டிருந்த 19 தென் கொரியர்களில், 12 பேர் இன்று விடுவிக்கப்பட்டுள்ளனர்.
  • இராக்கிய ஷியாக் குழு தனது இராணுவ நடவடிக்கைகளை இடைநிறுத்துவதாக அறிவித்துள்ளது
  • இன்றைய (ஆகஸ்ட் 29 புதன்கிழமை 2007) "BBC" செய்திகள் கேட்க இணைப்பில் செல்க http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml?tamil_worldnews