June 25, 2007

நாளைக்கு வேண்டும் என்று தேடும் -

தன்னம்பிக்கையற்ற தன்மையும்,

எவ்வளவு கிடைத்தாலும் போதாது என்கின்ற ஆசையும்,

அடிமைத்தனமும், மனிதனின் இயற்கைத் தடைகள்


- பெரியார்

யார் குற்றம்?

இந்தக் கணினி யுகத்தில் நாம் எங்கே போய்க்கொண்டிருக்கிறோம்?

  • மாதவிலக்கு என்பது அவ்வளவு பெரிய குற்றமா?
  • 10 வயதுப் பெண்ணை 50 வயது ஆண் திருமணம் செய்வதும்,
  • 40 வயதுப் பெண் 10 வயது ஆண்களைத் திருமணம் செய்துகொள்வதும்,
  • யார் யாரிடம் வேண்டுமானாலும் போகலாம்

என்ற ஒரு கலாச்சாரம் நமது பாரம்பரியம் மிக்கத் தமிழ்க் கலாச்சாரத்தில், நமது தமிழ்நாட்டில், கரூர் பக்கத்திலுள்ள ஒரு கிராமத்தில் இன்றும் நடந்து கொண்டிருக்கிறது என்பதைக் கேட்கும்பொழுது உங்களுக்கு மட்டுமல்ல எனக்கும்
தலைசுற்றுகிறது.

  • இவர்களையெல்லாம் சுட்டுத்தள்ள வேண்டாமா?
  • இது எப்படி இத்தனை காலம் நமக்குத் தெரியாமல் போனது??

தொடர்ந்து இந்த அவலத்தைப் பார்க்க இந்த வீடியோவைப் பார்க்கவும். உங்களைப் போலவே நானும் ஆயிராமாயிரம் கேள்விகளுடனும், அதிர்ச்சியுடனும்.......


ப்ரசாந்த் vs கிரகலட்சுமி : ஸ்ரீகாந்த் vs வந்தனா

கடைசிவரைக் கதையைச் சொல்லாமல் வைத்திருந்ததற்குக் காரணம் படத்தில் "கதை என்ற ஒன்றே இல்லை" என்பதுதான் என்று பலர் பலவாறு பேசினாலும் பாடல்கள் கேட்கும்படியாக உள்ளதால் உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்.
"சிவாஜி" பாடல்கள் கேட்க கீழுள்ள "செயலி"யைப் பயன்படுத்திப் பாடல்களைக் கேட்கவும்
Powered by eSnips.com

இன்றைய குறள்

உரனென்னுந் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்து


உறுதியென்ற அங்குசம் கொண்டு, ஐம்பொறிகளையும் அடக்கிக் காப்பவன், துறவறம் எனும் நிலத்திற்கு ஏற்ற விதையாவான்

அறத்துப்பால் : நீத்தார் பெருமை

June 24, 2007

உண்மையான ஒழுக்கம், நாணயம் வேண்டுமானால் - தேவை குறைய வேண்டும், அவசியம் குறைய வேண்டும். தேவையும், அவசியமும் அதிகமாக அதிகமாக நாணயக்கேடும், ஒழுக்கக்கேடும் - வளர்ந்து கொண்டு தான் போகும்.
- பெரியார்

எனது சிறுகதை

"திண்ணை" என்ற இணைய சஞ்சிகையில் எனது சிறுகதையான "கிராமம்" பிரசுரமாயிருக்கிறது என்பதை மகிழ்வுடன் தெரியப்படுத்திக் கொள்கிறேன். அதனைப் படிக்கவும், தங்களின் மேலான கருத்துக்களைப் பதிவு செய்யவும் கீழுள்ள இணைப்பில் செல்லவும். Thinnai

தமிழோசை

இன்றைய (ஜுன் 24 ஞாயிற்றுக்கிழமை) "BBC" செய்தி கேட்க கீழுள்ள இணைப்பை அழுத்தவும்
BBCTamil.com Radio Player

"மங்கையர் இதழ்களில்
மிளகாயில் அல்வா
செய்யும் விதம் பற்றிய
குறிப்புகள் அல்ல
வாலண்டைனா வரலாறுகள்
வரவேண்டாமா?
பருவப்பெண்களை உறிஞ்சும்
பத்திரிகை அட்டைகளில் ஈன்ஸ்டீன் படம்
என்றைக்கு வருமோ
அன்றுதான் கொச்சைப்பட்ட
அச்சு யந்திரங்களும்
நிச்சயம் மகிழும்"

- கவிஞர் ஈரோடு தமிழன்பன்



"இமயப் பறவை நாம்,
எரிமலையின் உள்மனம் நாம்,
திக்குகளின் சுவர்கள்,
தேச வரம்பற்றவர்கள்"

இவரின் இணையதள செவ்வி படிக்க கீழுள்ள இணைப்பை அழுத்தவும் Tamil magazine Tamil news,poem,story,movie & song reviews

ஹரிஹரன் பாடல்கள்!
கேட்பதற்கினியவை! கேட்டுப்பாருங்கள்!!
Powered by eSnips.com

இன்றைய குறள்

இருமை வகைதெரிந் தீண்டறம் பூண்டார்
பெருமை பிறங்கிற் றுலகு

நன்மை எது, தீமை எது என்பதை ஆய்ந்தறிந்து நன்மைகளை மேற்கொள்பவர்களே உலகில் பெருமைக்குரியவர்களாவார்கள்

அறத்துப்பால் : நீத்தார் பெருமை

தமிழோசை

இன்றைய (ஜுன் 23 சனிக்கிழமை) "BBC" செய்தி கேட்க கீழுள்ள இணைப்பை அழுத்தவும் BBCTamil.com Radio Player

June 23, 2007

எழுத்தாளர் சுஜாதா நேர்முகம்

Essence of your life so far ரத்னச்சுருக்கமாக சொல்ல முடியுமா?

'ரத்னச்சுருககமாக' ஓரிரு வரிகளில்' எல்லாம் ஒரு வாழ்க்கையைச் சொல்ல முடியாது. இபபடிக் கேட்பது தமிழனின் சோம்பேறித்தனங்களில் ஒன்று, என் வாழ்க்கை என் எழுத்தில் முழுவதும் விரவிக் கிடக்கிறது. Please 'click' the link
Tamil magazine Tamil news,poem,story,movie & song reviews

மன அழுத்தம் (Depression)

சுவாமி அனுபவானந்தா அவர்கள் அமெரிக்கப் பண்பலை வரிசைக்கு அளித்த நேர்முகம். மன அழுத்தம் (Depression) ஒரு மனிதனை எந்த அளவுக்குப் பாதிக்கிறது, எப்படி அதிலிருந்து தற்காத்துக்கொள்வது என்பதைப் பற்றி தெளிவுபடுத்துகிறார்.
Get this widget | Share | Track details

தலைக்கு ஒரு கோடி

சர்ச்சைக்குரிய "சல்மான் ருஸ்டி" யின் பிரபலமான நாவல் "The Satanic Verses"-ல் இருந்து அவருடைய சொற்பொழிவு. பாகிஸ்தானில் ஒரு வர்த்தக சங்கம் இவரின் தலைக்கு ஒரு கோடி நிர்ணயித்திருக்கிறது.

"சல்மான் ருஸ்டி" யின் நேர்முகம்

எந்தக்காரியம் எப்படி இருந்த போதிலும், அரசியலில், பொதுவாழ்க்கையில் கண்டிப்பாக மனித தருமம் தவிர வேறு எந்தக் கால தர்மமோ, சமய தருமமோ, புகுத்தப்படக் கூடாது என்பது தான் எனது ஆசையேயொழிய உலகத்தில் உள்ள மக்கள் எல்லாம் என் விருப்பப்படி தான் நடக்க வேண்டும் என்பதல்ல.
- பெரியார்

நாலடியார்

1. அறத்துப்பால்

1.2 இளமை நிலையாமை

எனக்குத்தாய் ஆகியாள் என்னைஈங் கிட்டுத்
தனக்குத்தாய் நாடியே சென்றாள் - தனக்குத்தாய்
ஆகி யவளும் அதுவானால் தாய்த்தாய்க்கொண்டு
ஏகும் அளித்திவ் வுலகு.


- சமண முனிவர்கள்

தமிழ் விளக்கவுரை :

என்னை ஈன்றெடுத்த என் தாய், என்னைத்தவிக்க விட்டுவிட்டு அவளைத்தவிக்கவிட்டுச் சென்ற தன் தாயைத் தேடிக்கொண்டு போய்விட்டாள். என் தாயின் தாயாரின் நிலையும் அதுவேதான். இப்படி ஒவ்வொரு தாயும் தன் தாயைத் தேடிக்கொண்டு போவதுதான் உலகநியதி


- ஆதியக்குடியான்

ஆங்கில விளக்கவுரை :

She who was my mother, having borne me in this world, had departed seeking a mother for herself, if this be the case also with her mother, one mother seeking after another mother, then is this world wretched indeed.


- By Rev.F.J.Leeper, Tranquebar

இன்றைய குறள்

துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று

உலகில் இறந்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்று கூறமுடியுமா? அதுபோலத்தான் உண்மையாகவே பற்றுகளைத் துறந்த உத்தமர்களின் பெருமையையும் அளவிடவே முடியாது

அறத்துப்பால் : நீத்தார் பெருமை

June 22, 2007

"பட்டியல்" திரைப்படத்தில் மேஸ்ட்ரோ, "இசைஞானி இளையராஜா" வுடன் பாடிய "தமிழ்ப்பாடகி", இளம்பாடகி ரோஷினியின் நேர்முகம் பகுதி II