July 03, 2007

தமிழோசை

இன்றைய "BBC" (ஜுலை 03 செவ்வாய்க்கிழமை) செய்திகள் கேட்க இணைப்பைத் தொடரவும் BBCTamil.com Radio Player

இன்றைய குறள்

அறத்தினூஉங் காக்கமும் இல்லை அதனை
மறத்தலின் ஊங்கில்லை கேடு

நன்மைகளின் விளைநிலமாக இருக்கும் அறத்தைப் போல ஒருவருடைய வாழ்க்கைக்கு ஆக்கம் தரக்கூடியது எதுவுமில்லை; அந்த அறத்தை மறப்பதை விடத் தீமையானதும் வேறில்லை

அறத்துப்பால் : அறன் வலியுறுத்தல்

'கல்யாணம் ஆகாமல் செத்து மடிந்தாலும் மடிவேனே யல்லாது, வரதட்சிணை கொடுக்க மாட்டேன்' என்று ஒவ்வொரு பெண்ணும் சொல்ல முன்வரவேன்டும்

- மகாத்மா காந்தி

மனிதனால் முடியாத ஏதாவதொன்று இருக்கிறதா? இந்த வீடியோவிற்கு விளக்கம் தேவையில்லையென நினைக்கிறேன்.

வாழ்க்கையின் உச்சத்துக்குச் செல்ல வேண்டுமெனில் எதையாவது மனிதன் சாதித்துக்கொண்டே இருக்கவேண்டும். இவர் பெயர் ஜிம் ஸ்பிக்லெர், உலகத்திலேயே மிக உயரமான மரத்தில் ஏறி அதன் உயரத்தைக் கணக்கிட்டுச் சாதனை படைத்திருக்கிறார். மரத்தின் உயரம் 115.55 மீட்டர் உயரம். இது ஒட்டாவா சமாதானக் கோபுரத்தின் உயரத்தைவிட 23 மீட்டர் அதிகம். சாதனைக்கு எல்லை ஏது?

மேட் மெக் அலிஸ்டர் 155 T - சர்ட்டுகளை நான்கு மணிநேரத்தில் தொடர்ந்து அணிவித்துக் கின்னஸ் சாதனை படைத்த வீடியோ

July 02, 2007

அவன் அன்று
நட்ட மரங்கள்
நிமிர்ந்து விட்டன
இவன் நடும்போது
குனிந்தவன்தான்,
இன்னும் நிமிரவே இல்லை...

எங்கள் அரசியல்வாதிகளின் அகராதியில் இல்லாத ஒரு வார்த்தை 'பந்தா'. இதற்கு பல உதாரணங்களை என்னால் சொல்லமுடியும். அந்தஸ்தில் ஒரு இந்திய அரசியல்வாதி இருந்தால் அவர் இருக்கும் பகுதிப் பக்கம் கூட என்னைப் போன்ற ஒருவர் போக முடியுமா என்பது சந்தேகம்.

மலேசிய எழுத்தாளர் வீ.செல்வராஜ் அவர்களின் நேர்முகம் Please visit the link Interview with V Selvaraj

மலேசியத் தமிழர்களைக் காப்பாற்றுங்கள்

மலேசியாவில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் சிறைக் கொட்டடியில் வாடும் செய்தி மனதைப் பதைக்க வைக்கிறது. சொந்த நாட்டில் பிழைக்க வழியின்றி, வருமானமின்றி, செய்வதறியாது, இருப்பவற்றை எல்லாம் அடகு வைத்தும் விற்றும், யார் யாரையோ நம்பிப் பிழைப்புத் தேடி அன்றாடம் பலரும் சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளுக்கு குடிபெயர்ந்து வருகின்றனர். பல கனவுகளோடும், எதிர்கால நம்பிக்கையோடும் அங்கு சென்று, இன்று சரியான ஆவணங்கள் இல்லை என்று குற்றம்சாட்டப்பட்டு சிறையில் தள்ளப்பட்டிருக்கும் எவரும், பெரிய படிப்புப் படித்து, பெரிய வேலைகளுக்குச் சென்றவர்கள் அல்லர். பெரும்பாலானோர் உடல் உழைப்பை உறிஞ்சும் வேலைகள் செய்யவே அங்கு சென்றனர். தொடர்ந்து படிக்க இணைப்பிற்குச் செல்க. Thenseide - HOME

பழ. நெடுமாறன் உரை

ஒரே ஒரு கைத்துப்பாக்கியுடன் தொடங்கப்பட்ட இயக்கம், அந்த ஒரு துப்பாக்கியும், அருமைத் தம்பி பிரபாகரனின் நெருங்கிய தோழன் பண்டிதர். பண்டிதரின் தாயார் ஒரே ஓரு பசுமாட்டை வைத்து பால் கறந்து விற்று குடும்பத்தை காத்து வந்த நிலையில், அந்த பசுமாட்டை தன் தாயாருக்கு தெரியாமல் பண்டிதர் ஓட்டிச் சென்று விற்று, அதில் கிடைத்த பணத்தில் வாங்கிய ஒரே ஒரு துப்பாக்கியுடன் தொடங்கப்பட்ட இயக்கம், இன்று மரபு வழி இராணுவமாக வளர்ந்து, சிங்கள கடற்படையை ஓட ஓட விரட்டியடிக்கும் கடற் புலிப்படையை தன்னகத்தேக் கொண்டு, இன்று வரன் புலிகளையும் பறக்க விடும் அளவிற்கு முப்படைகளோடு வளர்ந்திருக்கிறது.

தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு உறுதுணையாக நின்றோம் என்று ஒவ்வொரு உலகத் தமிழனும் பெருமைப்பட வேண்டும். இலண்டன் அய்பிசி தமிழ் வானொலி சேவையின் ஆண்டு விழாவில் பழ. நெடுமாறன் உரை தொடர்ந்து படிக்க இணைப்பிற்குச் செல்க. மேலும் ஒலிப்பதிவில் இடையிடையில் தடங்கல் இருக்கும் என்பதைத் தெரியப்படுத்திக்கொள்கிறேன். மன்னிக்கவும்.Thenseide - HOME

பெண்மக்களை இன்று ஆண்கள் நடத்தும் மாதிரியானது மேல் சாதிக்காரன் கீழ்சாதிக்காரனை நடத்துவதை விட, ஆண்டான் அடிமையை நடத்துவதை விட மோசமானதாகும்.
அவர்கள் எல்லாம் இருவருக்கும் சம்பந்தமேற்படும் சமயங்களில் மாத்திரம் தான் தாழ்மையாய் நடத்துகிறார்கள். ஆனால் ஆண்களோ பெண்களைப் பிறவி முதல் சாவுவரை அடிமையாகவும், கொடுமையாகவும் நடத்துகிறார்கள்.

- பெரியார்

தமிழோசை

அமெரிக்க அணு ஆயுதக் கப்பலை அனுமதித்ததால் ஆர்ப்பாட்டம் செய்யும் அரசியல் கட்சிகள் பற்றிய சென்னை செய்திகள் மற்றும் இன்றைய "BBC" (ஜுலை 02 திங்கட்கிழமை), செய்திகள் கேட்க இணைப்பைத் தொடரவும் BBCTamil.com Radio Player

நாலடியார்

1. அறத்துப்பால்

1.4 அறன் வலியுறுத்தல்

வைகலும் வைகல் வரக்கண்டும் அஃதுணரார்
வைகலும் வைகலை வைகுமென் றின்புறுவர்
வைகலும் வைகல்தம் வாழ்நாள்மேல் வைகுதல்
வைகலை வைத்துணரா தார்.


- சமண முனிவர்கள்

தமிழ் விளக்கவுரை

நாட்கள் வருவதையும் போவதையும் கண்டு, அதை உணராமல் எப்போதும் இப்படியே வந்துபோகும் என்று சந்தோசமாக இருப்பவர், தன் வாழ்நாளில் ஒரு நாள் கழிந்து போனது என்பதை அறிந்து உணராதவர்

- ஆதியக்குடியான்

ஆங்கில விளக்கவுரை

Although they daily see the passing away of days, yet they think not of it, and daily rejoice over the present day, as if it would last for ever, for they do not consider the past day to be one day added to the portion of their life that has expired.

Translation of Selected Verses
by Rev.F.J.Leeper, Tranquebar

இன்றைய குறள்

சிறப்பீனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு

சிறப்பையும், செழிப்பையும் தரக்கூடிய அறவழி ஒன்றைத்தவிர ஆக்கமளிக்கக் கூடிய வழி வேறென்ன இருக்கிறது?


அறத்துப்பால் : அறன் வலியுறுத்தல்

July 01, 2007

பட்டிமன்றப் பேச்சாளர் பேராசிரியர் திரு.ஞானசம்பந்தன் அவர்கள் அமெரிக்கப் பண்பலை வரிசையில் அளித்த நேர்முகத்தின் வானொலிப் பதிவு
Powered by eSnips.com

'ஒரு போதும் கடந்தகாலம் திரும்பி வராது. எதிர்காலத்தைப் பற்றியும் நமக்குத் தெரியாது. அவற்றை நினைத்து நேரத்தையும், ஆரோக் கியத்தையும் இழக்காமல் நிகழ்காலத்தைப் பயனுள்ளதாக்க முயற்சி செய். மூன்று காலங்களையும் பற்றி அறிந்தவர் பரமாத்மா ஒருவரே. அதனால் நீங்கள் மூன்று காலங் களையும் இறைவனுக்கு சமர்பித்துவிட்டு, அவரை நினைத்துக் கொண்டு முன்னோக்கிச் செல்ல முயற்சி செய்யுங்கள். அப்படிச் செய்தால் சதா நம் முகத்தில் புன்னகை மறையாமல் இருக்கும்.'

- மாதா அமிர்தானந்தமயி

தமிழோசை

இன்றைய (ஜுலை 01 ஞாயிற்றுக்கிழமை) "BBC", சர்ச்சைக்குரிய இராணுவக் கப்பல் சென்னை வருவது பற்றிய செய்தி கேட்க கீழுள்ள இணைப்பை அழுத்தவும். BBCTamil.com Radio Player

அபஸ்வரம் ராம்ஜி அவர்களுடன் ஒரு நேர்முகம்.

பிரபல இசைக்கலைஞர்கள் என்றால் அவர்களுள் போட்டி, பொறாமை இருக்கும். ஆனால் இந்த மழலைகள் இசையை ஒரு விளையாட்டாகக் கருதி அவர்களுக்குள் பாடல்களை எப்படிப் பாடவேண்டும், எப்படி மேலும் புதுமையாகப் பாடலாம் என்றெல்லாம் விவாதிக்கிறார்கள். ஒரு நிகழ்ச்சியில் ஒருவர் பாடியதை மற்றவர் ஆக்கப்பூர்வமாக விமர்சிக்கிறார். இதனால் எதிர்காலத்தில் போட்டி பொறாமையற்ற ஒரு இசைச் சமுதாயம் உருவாகும். Please 'click' the link
Tamil magazine Tamil news, poem, story, movie & song reviews

பெண்மக்களை இன்று ஆண்கள் நடத்தும் மாதிரியானது மேல் சாதிக்காரன் கீழ்சாதிக்காரனை நடத்துவதை விட, ஆண்டான் அடிமையை நடத்துவதை விட மோசமானதாகும்.

- பெரியார்

தாஜ்மகாலுக்கு ஓட்டு போடாதீர்கள்

புதிய உலக அதிசயங்கள் வரிசையில் தாஜ்மகாலும் இடம் பிடிக்க இந்த நம்பருக்கு SMS செய்து தாஜ்மகாலுக்கு ஓட்டளியுங்கள் என உங்களுக்கு உங்கள் நண்பர் SMS அனுப்புகிறாரா? நீங்களும் அதை நம்பி SMS ஓட்டு போட்டீர்களா?... போடாதீர்கள்.. இதெல்லாம் சுத்த ஏமாற்று வேலை..."உலகத்தின் புதிய ஏழு அதிசயங்கள் தீர்மாணிக்கப்படுகிறது.. அதற்கான ஓட்டெடுப்பு" என்று நடத்தப்படும் இந்த ஓட்டெடுப்பின் பின்னனி என்ன என்று பார்த்தோமானால் அதிர்ச்சியாக இருக்கிறது...
சுவிட்சர்லாந்தில் உள்ள NOWC (New Open World Cooperation) என்னும் தனியார் நிறுவனத்தின் தலைவர் Bernard Webber என்பவரால் முடுக்கி விடப்பட்டுள்ள இந்த வாக்கெடுப்பு உலகெங்கிலும் நடந்து கொண்டிருக்கிறது...இலவச மற்றும் கட்டண ஓட்டுக்கள் உதவியுடன் நடத்த படும் இந்த வாக்கெடுப்பு செல்பேசி SMS, தொலைபேசி அழைப்பு மற்றும் இணையத்தின் மூலம் நடத்தப்படுகிறது. இதை பற்றி மேலும் தகவல்கள்

1) இது முழுக்க முழுக்க தனியார் நடத்தும் வாக்கெடுப்பு... இதற்கும் எந்த நாட்டின் அரசுகளுக்கும் தொடர்பில்லை...

2) உலக பாரம்பரியங்களை அறிவிக்கும், சேர்க்கும், நீக்கும் அதிகாரம் உடையது ஐக்கிய நாடுகள் சபையின் துணை நிறுவனமான UNESCO (The United Nations Educational, Scientific and Cultural Organization) மட்டுமே... UNESCO இந்த வாக்கெடுப்பை அங்கீகரிக்க மறுத்துள்ளது... UNESCO இதன் வாக்கெடுப்பு நடத்தப்படும் முறைகள் மற்றும் அதன் நம்பகத்தன்மை குறித்து அவநம்பிக்கையும், கவலையும் தெரிவித்துள்ளது...

3) இந்த வாக்கெடுப்புக்கும் அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று நமது மத்திய அரசும் மறுத்துள்ளது...

4) இது முழுக்க முழுக்க லாப நோக்கோடு தனியார் நடத்தும் கருத்து கணிப்பு என்றும் இதை தடை செய்ய வேண்டும் என்று உலகெங்கிலும் எதிர்ப்பு குரல் கிளம்ப ஆரம்பித்துள்ளது... எகிப்து நாட்டில் ஏற்கனவே இதற்கு எதிராக, "ஓட்டளிக்காதீர்கள்" என்று பிரச்சாரம் கிளம்பி இருக்கிறது...

5) ஒவ்வொருவர் போடும் ஒரு SMS வோட்டுக்கும் மொபைல் நிறுவனங்களால் வசூலிக்கப்படும் கட்டணத்தில் ஒரு பகுதி இந்த தனியார் நிறுவனத்தை சென்றடையும் வகையில் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாம்...

நமது அரசாங்கத்தின் BSNL கூட இதற்கு விதிவிலக்கல்ல
6) இன்னும் T சர்ட்டுகள் மற்றும் மெலும் பல வியாபார பொருட்கள், உலக சுற்றுலா மற்றும் பல வியாபாரங்கள் இதன் மூலம் முடுக்கி விடப்பட்டுள்ளன... அதன் லாபங்களும் சர்வதேச நிறுவனங்களிடையே பங்கிடப்படுகின்றன...
அப்பாவி மக்களின் நாட்டுப்பற்றை கூட காசாக்கும் எண்ணம் கொண்ட இத்தகைய நிறுவனங்களை என்ன செய்வது...

இன்றைய குறள்

அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்


அனைத்து உயிர்களிடத்திலும் அன்பு கொண்டு அருள் பொழியும் சான்றோர் எவராயினும் அவர் அந்தணர் எனப்படுவர்

அறத்துப்பால் : நீத்தார் பெருமை