December 03, 2007

முதல்ல உன் பெயரை மாத்துப்பா

"எழுத்தாளர் ரா.கி. ரங்கராஜனின் 80-வது பிறந்த நாள் விழாவில் விழுந்த கிசு கிசு. ரா.கி.ர.விடம் யார் வேலை கேட்டு வந்தாலும் முதலில் அவர்களது பெயரைக் கேட்பாராம். இப்படித்தான் ஒருவர் தனது பெயர் ரங்கராஜன் என்றதும் ரா.கி. "முதல்ல உன் பெயரை மாத்துப்பா, அப்புறம் நீ நல்ல கதை எழுதி பேர் வாங்கிடுவ, அது நான்தான்னு எல்லாரும் என்னைப் பாராட்டுவாங்க" என்றாராம். அந்த ரங்கராஜனும் திருமணத்திற்குப் பிறகு பெயரை மாற்றிக்கொண்டு கதை எழுத ஆரம்பித்தாராம். அவர் வேறு யாருமில்லை பிரபல எழுத்தாளர் சுஜாதாதான்"

கட்டாய கிராம சேவை: தமிழக மருத்துவ மாணவர்கள் போராட்டத்தினை தொடர்கிறார்கள்

மருத்துவ பட்டப்படிப்பின் ஒரு பகுதியாக ஓர் ஆண்டு கிராமப்புறங்களில் பணிபுரியவேண்டுமென்ற மத்திய அரசின் யோசனையினை எதிர்த்து தமிழக மருத்துவ மாணவர்கள் தங்கள் போராட்டத்தினை தொடர்கிறார்கள். இப்பிரச்சினை குறித்து ஆராயவென அமைககப்பட்ட சாம்பசிவராவ் குழுவின் அறிக்கைக்கு பிறகே இறுதிமுடிவு எடுககப்படும் என்று மத்திய நல்வாழ்வுத்துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ் உறுதியளித்தும் தங்கள் போராட்டத்தை நிறுத்த மாணவர்கள் முன்வரவில்லை. இன்று தமிழக மருத்துவக் கல்லுரிகளை மாநில அரசு மூடிவிட்டது. விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்களும வெளியேறிவிட்டனர். ஆனால் பிரச்சினை எதுவும் எழவில்லை. சென்னையிலும் மற்ற பகுதிகளிலும் இன்றிலிருந்து காலவரையற்ற உண்ணாவிரதம் என மாணவர்கள் அறிவித்திருககின்றனர். ஆனால் மாணவர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு வகுப்புகளுக்கு திரும்பவேண்டுமென முதல்வர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்திருக்கிறார். நிபுணர்குழு அமைத்த பிறகும் புதிய திட்டம் அமல்படுத்தப்படும் என்ற ரீதியில் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் பேசிவருவதால் மாணவர்களுக்கு அச்சம் ஏற்பட்டிருககும் என்றால்கூட, குழுவின் அறிக்கைக்கு பிறகே இறுதிமுடிவு என்று மீண்டும் அவர் உறுதியளித்திருககிறார். எனவே மாணவர்கள் போராட்டதினை கைவிடவேண்டுமென முதல்வர் தனது அறிககையில் கூறியிருககிறார். மாணவர்களோ மத்திய அரசு கிராமப்புற பணித் திட்டம் கைவிடப்படுகிறது என்று அறிவிக்கும் வரை தங்களது போராட்டம் தொடரும் எனக் கூறுகின்றனர். இதனிடையே பாட்டாளி மககள் கட்சி நிறுவனரும் மத்திய நல்வாழ்வுத்துறை அமைச்சருமான டாகடர் ராமதாஸ், கிராமப்புற மருத்துவமனைகளில் அடிப்படைவசதிகளைப் பெருக்கவேண்டும், போதுமான அளவில் மருத்துவர்கள் நியமிககப்படவேண்டுமெனக் கோரி தமிழகம் முழுதும் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் முன் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படுமென அறிவித்திருக்கிறார்

கரடி பொம்மைக்கு 'முகமது' பெயர் சர்ச்சை: பிரிட்டிஷ் ஆசிரியைக்கு சுடான் அதிபர் மன்னிப்பு

  • சுடான் தலைநகர் கார்டூமில் பள்ளி ஆசிரியையாக இருந்துவருகிறார் கில்லியன் கிப்பன்ஸ்சுடானில், தனது வகுப்பிலுள்ள குழந்தைகள் ஒரு கரடி பொம்மைக்கு 'முகமது' என்று பெயர்வைக்க அனுமதித்த காரணத்திற்காக சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்த பிரிட்டிஷ் ஆசிரியைக்கு சுடானின் அதிபர் மன்னிப்பு வழங்கியுள்ளார். முஸ்லிம் பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் மத்தியஸ்தம் செய்ததை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பிரிட்டன்-சுடான் இடையிலான உறவுகளிலும் அதற்கும் மேலாய் மேற்கத்திய நாடுகள்-இஸ்லாம் இடையிலும் இச்சம்பவம் நெருடல்களை ஏற்படுத்தியுள்ளது
  • ரஷ்ய தேர்தல்: தன் கட்சியின் வெற்றி நியாயமானது என்கிறார் ரஷ்ய அதிபர் புட்டின் : ரஷ்யாவில் நேற்று ஞாயிறன்று நடந்த நாடாளுமன்றத் தேர்தல்கள் நியாயமானவை என்றும், ரஷ்யாவின் வளரும் பொருளாதாரம் மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மையின் சமிக்ஞையே இந்த வெற்றி என்றும் அதிபர் விளாடிமிர் புட்டின் விபரித்துள்ளார்
  • நவாஸ் ஷெரிஃப் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடத் தடை : பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட நவாஸ் ஷெரிஃப் அவர்கள் தாக்கல் செய்திருந்த வேட்பு மனுவை அந்த நாட்டின் தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது
  • உலக காலநிலை மாற்றம் குறித்து பாலியில் உலக மாநாடு துவங்கியது : புவி வெப்பமடைவதைத் தடுப்பதற்கான புதிய ஒப்பந்தம் ஒன்றை வடிவமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்காக, இந்தோனேஷியத் தீவான பாலியில், சுமார் 200 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் சந்திப்பு ஒன்றை மேற்கொள்கிறார்கள்
  • வெனிசுவேலா அரசியல் சாசன திருத்தம் குறித்த கருத்து வாக்கெடுப்பில் அதிபர் ஹியூகோ சாவேஸ் தோல்வி : வெனிசுவேலாவின் அதிபர் ஹியூகோ சாவேஸ், நாட்டின் அரசியல் சாசனத்தில் சில மாற்றங்களை கொண்டு வர நடைபெற்ற மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பில் தோல்வியடைந்த போதிலும், மீண்டும் அதற்கான முயற்சிகளில் ஈடுபடப்போவதாக கூறியுள்ளார்
  • வட இலங்கையில் கடும் சண்டை - பலர் உயிரிழப்பு : இலங்கையின் வடக்கே மன்னார், வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் முகமாலை போர்முனைகளில் இன்று திங்கட்கிழமையும் நேற்று ஞாயிற்றுக்கிழமையும் இடம்பெற்ற சண்டைகளில் குறைந்தது 42 விடுதலைப் புலிகளும், 6 இராணுவத்தினரும் கொல்லப்பட்டிருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது

எவனோ ஒருவன் - க்ளிப்ஸ்

December 02, 2007

இன்றைய குறள்

அருள்வெஃகி யாற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப்
பொல்லாத சூழக் கெடும்

அருளை விரும்பி அதனை அடைவதற்கான வழியில் செல்பவன் தவறிப்போய்ப் பிறர் பொருளை விரும்பிப் பொல்லாத செயலில் ஈடுபட்டால் கெட்டொழிய நேரிடும்

அறத்துப்பால் : வெஃகாமை

பொன்மொழிகள்

  • பாறைகளைச் சந்திக்காவிடில் ஓடைகளுக்குச் சங்கீதம் இல்லை
  • வலைகளின் எண்ணிக்கை அதிகமாவதால் மீன்களின் எண்ணிக்கைக் குறைந்துபோவதில்லை
  • புதைக்கப்படுவதுதான் கல்லறையென்றால் ஒவ்வொரு மனிதனின் இதயமும் கல்லறைதான்

- சூரகுடி பாலா, சென்னை

இலங்கையின் வடக்கில் தொடரும் மோதல்கள்

  • இலங்கை அரசுக்கான ஆதரவை மறுபரீசிலனை செய்வோம் - மலையக மக்கள் முன்ணணி : கொழும்பில் கடந்த சில தினங்களாக கைது செய்யப்பட்ட தமிழர்களை விடுவிக்க அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிட்டால், இலங்கை அரசுக்கான தங்களது ஆதரவை மறுபரிசீலனை செய்வது குறித்து தமது கட்சி சிந்தித்து வருவதாக மலையக மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரும், ஆளும் கூட்டணியில் அமைச்சராகவும் உள்ள பெ.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்
  • ரஷ்யத் தேர்தல் : ரஷ்யத் தேர்தல் ஆணையகம், அங்கே நடக்கும் நாடாளுமன்றத் தேர்தல் வாக்களிப்பில் இதுவரை ஏராளம் பேர் கலந்து கொள்ள வந்திருக்கிறார்கள் என்று கூறுகிறது
  • இராக்கின் மேம்பட்ட பாதுகாப்பு நிலையை பயன்படுத்த வேண்டும் - அமெரிக்கா : இராக்கில் மேம்பட்டு இருக்கின்ற பாதுகாப்பு நிலைமையை, இராக் தலைவர்கள் ஆதாயமாக பயன்படுத்தி அரசியல் முயற்சியை முன்னெடுக்காவிட்டால், இராக் மீண்டும் இன வன்முறையில் வீழ்ந்து விடும் என அமெரிக்க இராஜாங்கத்துறை துணைச் செயலர் ஜான் நெக்ரபோண்டே தெரிவித்துள்ளார்
  • பசுமை வளாகத்திற்குள் கொண்டு செல்லப்பட்டுள்ளார் சுனி அரபு தலைவர் : இராக்கின் பிரதான சுனி அராப் தலைவரான அட்னன் அல் துலாய்மி தற்போது பசுமை வளாகத்திற்குள் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பாக்தாத்தில் இருக்கின்ற அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
  • ஆப்கானிஸ்தானின் இராணுவ பலம் அதிகரிக்க வேண்டும் - ஆப்கானிஸ்தான் : ஆப்கானிஸ்தானை பாதுகாப்பாக மாற்ற, தற்போது இருக்கும் இராணுவம் போல மும்மடங்கு தேவை என ஆப்கானிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது
  • கிழக்கு மாகாண முஸ்லிம்கள் பிரச்சனைகள் குறித்து புகார் : கிழக்கு மாகாண முஸ்லிம்கள் எதிர் நோக்குவதாகக் கூறப்படும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் மற்றும் சில பிரச்சினைகள் தொடர்பாக விரைவில் தீர்வொன்றை பெற்றுத்தர வேண்டும் என கிழக்கு மாகாண அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளனத்தினால் ஜனாதிபதியிடம் கோரிக்கையொன்று முன் வைக்கப்பட்டுள்ளது
  • இலங்கையின் வடக்கில் தொடரும் மோதல்கள் : இலங்கையின் வடக்கே வவுனியா, மன்னார், யாழ்ப்பாணம் மற்றும் வெலிஓயா பிரதேசங்களில் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் சனிக்கிழமை இடம்பெற்ற கடுமையான நேரடி மோதல்களில் குறைந்தது 60 விடுதலைப் புலிகளும் 6 இராணுவத்தினரும் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்திருக்கின்றது

December 01, 2007

இன்றைய குறள்

அஃகி யகன்ற அறிவென்னாம் யார்மாட்டும்
வெஃகி வெறிய செயின்
யாராயிருப்பினும் அவரது உடைமையை அறவழிக்குப் புறம்பாகக் கவர விரும்பினால் ஒருவருக்குப் பகுத்துணரும் நுண்ணிய அறிவு இருந்துதான் என்ன பயன்?
அறத்துப்பால் : வெஃகாமை

ஐ.நா.மன்ற கௌரவ தூதராக கமல்

எய்ட்ஸ் நோயாளிகளின் உரிமைகளின் பாதுகாப்பதற்கான புதிய பிரச்சார நடவடிக்கையில் கௌரவத் தூதராக நியமிக்கப்பட்டுள்ள சினிமா நட்சத்திரம் கமலஹாசன், "ஹெச்.ஐ.வி. தொற்று வந்தவர்கள் பாவிகள் அல்ல" என்கிறார். http://www.bbc.co.uk/mediaselector/check/tamil/meta/dps/2007/12/071201_kamal?size=au&bgc=003399&lang=ta&nbram=1&nbwm=1 தமிழகத்தின் எய்ட்ஸ் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஐ.நா.மன்றத்தின் கௌரவத் தூதராக நியமிக்கப்பட்டுள்ள நடிகர் கமலஹாசன், பிபிசி பண்பலை ஒலிபரப்புக்காக பேட்டி காணப்பட்டார். எய்ட்ஸ் வந்தவர்களை அங்கீகரிக்காத சமூகம் 'ஜன்னல் இல்லா வீடு' என்றும் அங்கு சுவாசிக்க முடியாது என்றும் அவர் அப்பேட்டியில் தெரிவிக்கிறார். எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வைப் பெறுவதோடு மனிதாபிமான உணர்வையும் தூண்டிவிடுவது அவசியம் என்றும் அவர் குறிப்பிடுகிறார்

ஞானிகள் இத்தகைய காந்தம் போன்றவர்கள்

"காந்தத்தை தரையில் தேய்த்தால், அதன்மீது மண்ணில் இருக்கும் இரும்புத் துகள்கள் ஒட்டிக்கொள்ளும். அதேசமயம் மண், காந்தத்துடன் ஒட்டுவதில்லை. இவ்விடத்தில் காந்தம் தன்னுடன் இரும்புத்துகளை ஈர்க்க வேண்டும் என்றோ, இரும்புத்துகள் தான் காந்தத்திடம் செல்ல வேண்டுமென்றோ எண்ணுவதில்லை. ஆனால், இவ்விரண்டின் விருப்பம் இல்லாமலேயே அவை ஒன்றிவிடுகின்றன. இரும்புத்துகளை ஈர்க்கும் அளவிற்கு, காந்தம் சக்தி பெற்றிருப்பதால், இயல்பாகவே இந்நிகழ்வு நடந்து விடுகிறது. அப்போது, காந்தத்தின் சக்தி இரும்புத்துகளுக்குள் பாய்கிறது. எனவே, இரும்புத்துகளும் காந்த தன்மை பெறுகிறது. ஞானிகளும் இத்தகைய காந்தம் போன்றவர்களே. ஒருவர் தான் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் ஞானிகள் அருகில் செல்லும்போது, தானாகவே அவருடன் ஒன்றிவிடுகிறார். ஞானியிடம் ஒன்றிச் செல்பவர்கள் மனதில் நல்ல எண்ணங்களோடும், விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும். அவ்வாறு இருப்பவர்கள் இரும்புத்துகளுக்கு ஒப்பானவர் ஆவர். இவர்கள் எளிதில் ஞானிகளிடம் விரும்பி ஒட்டிக்கொள்வர். அதேசமயம் மண் போன்று மந்த தன்மை உடையவர்கள் ஞானிகளை ஆரத்தழுவிக் கொண்டாலும்கூட அவர்களுக்குள் எந்த மாற்றமும் நிகழ்வதில்லை. ஆகவே, மனதை இறைவனிடம் செல்லும்படியாக வைத்துக்கொள்ள வேண்டும்" - பரமஹம்ச நித்யானந்தர்

எங்கள் உள்விவகாரத்தில் இந்தியா தலையிட வேண்டாம் - மலேசியா

மலேசியாவின் உள் விவகாரத்தில் இந்தியா தலையிட வேண்டாம் என மலேசியா எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்திய வம்சாவழியினர் மலேசியாவில் நடத்தப்படும் விதம் குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி கவலை வெளியிட்டதை தொடர்ந்து மலேசியா இவ்வாறு கூறியுள்ளது. கடந்த ஞாயிறன்று, கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் சமஉரிமை மற்றும் பாரபட்சம் இருக்கக் கூடாது என கோரி தடை செய்யப்பட்ட ஊர்வலத்தில் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கான இந்திய பூர்வீகத்தினர் மீது மலேசிய பொலிஸார் தடியடி நடத்தியதோடு தண்ணீரையும் பீய்ச்சியடித்தனர். இதனை அடுத்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கவலை வெளியிட்டார். இதற்கிடையே, தங்களுடைய பிரஜைகள் எந்த பூர்வீகத்தை கொண்டிருந்தாலும், அவர்களை தங்களுடைய சட்டத்திட்டத்தின்படி கவனித்துக் கொள்வோம் என மலேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் சையத் ஹமீது அல்பர் கூறியுள்ளார். மலேசிய ஜனத்தொகையில் இந்திய வம்சாவளியினர் சுமார் ஏழு சதம் ஆகும்.

எய்ட்ஸ் விழிப்புணர்வுக்காக இந்தியாவில் சிறப்பு இரயில்

  • இன்று உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு, உலகிலேயே மிகப்பெரிய அளவில் எய்ட்ஸ் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியாக, இந்தியாவில் சிவப்பு ரிப்பன் எக்ஸ்பிரஸ் என்ற ரயில் சனிக்கிழமையன்று புதுடெல்லியில் துவக்கிவைக்கப்பட்டது. சிவப்பு, மஞ்சள் மற்றும் பச்சை வர்ணம் தீட்டப்பட்ட இந்த சிறப்பு ரயிலை, ஆளும் கூட்டணிக்குத் தலைமை வகிக்கும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி துவக்கி வைத்தார். அடுத்த ஓராண்டுக்கு இந்த ரயில், இந்தியாவின் முக்கிய நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் செல்லும். 180 ரயில் நிலையங்களில் நிற்கும் இந்த ரயில், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் வழியாகச் செல்லும். ஒவ்வொரு ரயில் நிலையத்திலும், அந்த ரயிலில் உள்ள எய்ட்ஸ் தடுப்பு பிரசார தன்னார்வலர்கள், பாதுகாப்பான உடலுறவு குறித்தும், எய்ட்ஸ் விழிப்புணர்வு குறித்தும் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் மூலம் பொதுமக்களிடம் விளக்குவார்கள். அப்போது, ஆணுறைகளும் இலவசமாக வழங்கப்படும். நைஜீரியா மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு அடுத்தபடியாக, இந்தியாவில்தான் அதிகபட்சமாக சுமார் 25 லட்சம் பேர் எய்ட்ஸ் கிருமிகளால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
    சிவப்பு ரிப்பன் எக்ஸ்பிரஸ் ரயில் துவக்க விழாவில் கலந்துகொண்ட இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ், இந்த ரயிலின் நோக்கம் குறித்து விளக்கினார்.
  • இலங்கையின் தெற்குப்பகுதியில் நூற்றுக்கணக்கான தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் : இலங்கையின் தலைநகர் கொழும்பில் சமீபத்தில் நடந்த வெடிகுண்டு தாக்குதலை தொடர்ந்து, கொழும்பு உட்பட இலங்கையின் தெற்குப் பிரதேசங்களில் இருக்கும் தமிழர்கள் பலர் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவல் முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன
  • இலங்கை இனப்பிரச்சனைக்கு அதிகார பகிர்வுத் திட்டம் முக்கியப் பங்காற்றும் - இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் : இலங்கை இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு, நம்பகத்தன்மை கொண்ட அதிகாரப் பகிர்வுத் திட்டம் முக்கியப் பங்காற்றும் என்று இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் கருத்து வெளியிட்டிருக்கின்றன
  • இராக்கில் அல்கைதாவின் தாக்குதலில் 14 பேர் பலி : பாக்தாத்துக்கு வடக்கேயுள்ள ஒரு கிராமத்தில் அல்கைதா தீவிரவாதிகள் நடத்தியுள்ள ஒரு தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டுள்ளதாக இராக்கிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன
  • இராக் சுனி நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு : இராக் சுனி தலைவர் ஒருவரை வீட்டுக் காவலில் வைத்ததாக கூறி இராக் நாடாளுமன்றத்தில் இருக்கின்ற பெரும்பான்மை சுனி அராப் குழுவினர் நாடாளுமன்றத்தை விட்டு வெளிநடப்பு செய்துள்ளனர்
  • இருபதாம் உலக எய்ட்ஸ் தினம் : இருபதாம் உலக எய்ட்ஸ் தினமான இன்று, எய்ட்ஸை தடுப்பதில் அதிகரித்து வரும் கவனமின்மை குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எய்ட்ஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருப்பதாக கூறியுள்ள ஐ.நா வின் செயலாளர் நாயகம் பான் கீ மூன், எய்ட்ஸை ஒழிப்பதற்கு உலகளாவிய ரீதியில் ஒரு வலுவான தலைமை தேவை எனக் கூறியுள்ளார். தென்னாப்பிரிக்காவின் ஜோஹனஸ்பெர்க் நகரத்தில் எய்ட்ஸ் நிவாரண உதவிக்காக நடத்தப்படும் நிகழ்ச்சியை காண்பதற்காக ஆயிரக்கணக்கானவர்கள் கூடியுள்ளனர்
  • இன்றைய (டிசம்பர் 01 சனிக்கிழமை 2007) "பிபிசி" தமிழோசைச் செய்திகள் கேட்க கீழுள்ள இணைப்பை அழுத்தவும் http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml?tamil_worldnews

நந்திகிராம் பிரச்சினை - ஓர் ஆய்வு

மலேசியத் தமிழர்களின் போர்க்கொடி தேவையா?

November 30, 2007

மருத்துவப்படிப்பு ஆண்டு நீட்டிப்பு தேவையா?

வசீகரப்பாடகி வசுந்த்ரா தாஸ்

இன்றைய குறள்

இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற
புன்மையில் காட்சி யவர்

புலனடக்கம் வாய்ந்த தூயவர், வறுமையில் வாடும் நிலையிலேகூடப் பிறர் பொருளைக் கவர்ந்திட விரும்ப மாட்டார்

அறத்துப்பால் : வெஃகாமை

கடன்தான் பொருளாதாரத்தை ஏற்றுகிறது

"ஒரு கிளை சிறப்பாக நடைபெற வேண்டுமென்றால் நிறைய வைப்புத் தொகை வரவேண்டும். அதன் மூலமே கடன் வழங்க முடியும். கடன்தான் பொருளாதாரத்தை ஏற்றுகிறது. டாடா, பிர்லா யாராக இருந்தாலும் சரி கடன்தான் அவர்களின் பொருளாதாரத்தை உயர்த்துகிறது. புத்திசாலிகள் சேமிக்கிறார்கள். அதிபுத்திசாலிகள் கடன் வாங்குகிறார்கள். சேமிப்பது ஒரு பகுதி. கடன் வாங்குவது ஒரு பகுதி. கடன் வாங்க வேண்டும். கடன் வாங்குவது குற்றமல்ல. லஞ்சம் வாங்குவதுதான் குற்றம். கடன் வாங்கித் தொழில் செய்ய வேண்டும். வீடு கட்ட வேண்டும். குழந்தைகளைப் படிக்க வைக்க வேண்டும்" - ப. சிதம்பரம்

இந்திய கிரிக்கெட் லீக்கின் முதல் போட்டி ஆரம்பம்

கடந்த 30 ஆண்டுகளில் முதன்முறையாக, தனியார் நடத்தும் தொழில் முறையிலான சர்வதேச கிரிக்கெட் லீக் ஒன்று, தனது முதல் போட்டியை வடஇந்தியாவில் நடத்திக்கொண்டிருக்கிறது. கிரிக்கெட் விளையாட்டை சர்வதேச அளவில் நெறிமுறைப்படுத்தும் அமைப்பான சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், இந்த போட்டியை அங்கீகரிக்க மறுத்திருக்கிறது. இந்திய கிரிக்கெட் வாரியம் இந்த அமைப்பை ஒரு போக்கிரி அமைப்பு என்று வர்ணித்திருக்கிறது. இந்த அமைப்பு, மேற்கிந்திய கிரிக்கெட் விளையாட்டு வீரர் ப்ரையன் லாரா, முன்னாள் பாகிஸ்தான் அணித்தலைவர் இன்சமாம்-உல்-ஹக் போன்ற உலகின் சில மிகச் சிறந்த ஆட்டக்காரர்களை இந்த ஒரு நாள் ஆட்டங்களில் ஆட சேர்த்துக்கொண்டிருக்கிறது. பல நாடுகளின் கிரிக்கெட் வாரியங்கள் தங்களது நாட்டு கிரிக்கெட் விளையாட்டு வீரர்களை இந்த போட்டிகளில் கலந்துகொள்ளக்கூடாது என்று எச்சரித்திருக்கின்றன.

மலேஷியாவின் இந்திய வம்சாவழித் தமிழர்கள் குறித்து இந்திய பிரதமர் மன்மோகன் சிங் கவலை

  • இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் மலேஷியாவின் இந்திய வம்சாவழியினர் பற்றி இன்று வெள்ளிக்கிழமை கருத்துத் தெரிவிக்கையில், "இது நமக்குக் கவலையளிக்கக்கூடிய பிரச்சினை. வெளிநாட்டில் உள்ள இந்தியர்களோ, வெளிநாடுகளில் வாழும் இந்திய வம்சாவழியினரோ எப்போது பாதிக்கப்பட்டாலும், அது நிச்சயமாக இந்தியாவுக்குக் கவலையை ஏற்படுத்தும்" என்று கூறியுள்ளார். மலேஷியாவில் சம-உரிமை கோரி் போராட்டம் நடத்திய இந்திய வம்சாவழியினரின் போராட்டத்தை அடுத்து ஏற்பட்ட பிரச்சினை தொடர்பாக, அந்த நாட்டு அரசுடன் இந்தியா தொடர்பு கொண்டு வருவதாக இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை கோலாலம்பூரில் நடந்த போராட்டத்தில் கலந்துகொண்டவர்களை அடக்க காவல்துறை எடுத்த நடவடிக்கைகள் தொடர்பாக பல்வேறு தரப்பிலிருந்தும் கவலைகள் வெளியிடப்பட்டுள்ளன. அவர்களின் நலனைப் பாதுகாப்பது தொடர்பாக மத்திய அரசு பொருத்தமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி பிரதமருக்குக் கடிதம் எழுதினார் தமிழக முதல்வர் கருணாநிதி. ஜெயலலிதா உள்ளிட்ட மற்ற தலைவர்களும் இந்தக் கருத்தை வலியுறுத்தினார்கள். இந்தப் பிரச்சினை தொடர்பாக, தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பினார்கள். இதன் தொடர்ச்சியாக, வெள்ளிக்கிழமையன்று அந்தப் பிரச்சினை குறித்து மக்களவையில் அறிக்கை தாக்கல் செய்தார் பிரணாப் முகர்ஜி. "வெளிநாடுகளில் வாழும் இந்திய வம்சாவழியினர் நலனில் அரசு எப்போதும் அக்கறை கொண்டிருக்கிறது. மலேஷியாவில் கணிசமான அளவில் உள்ள இந்திய வம்சாவழியினர் அந்த நாட்டின் பிரஜைகளாக இருக்கிறார்கள். மலேஷியாவுடன் இந்தியா நல்ல நட்புறவு கொண்டுள்ளது. இந்தப் பிரச்சினை தொடர்பாக, மலேஷிய அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு வருகிறோம்" என்று பிரணாப் முகர்ஜி தெரிவித்தார்.
  • புத்தகத்தின் சர்ச்சைக்குரிய பகுதிகளை நீக்கிக்கொள்வதாக தஸ்லிமா நஸ்ரின் அறிவிப்பு : தஸ்லிமா நஸ்ரின்வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின், தான் எழுதிய'த்விக்ஹோண்டிதோ' புத்தகத்தில் இடம்பெற்றிருந்த சர்ச்சைக்குரியதாகக் கூறப்படும் பகுதிகளைத் திரும்பப் பெற்றுக்கொள்வதாக அறிவித்திருக்கிறார். கடந்த பல ஆண்டுகளாக இந்தியாவில் தங்கியிருக்கும் தஸ்லிமா நஸ்ரின், தனது புத்தகத்தில் இஸ்லாமுக்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டிருப்பதாக இஸ்லாமிய அமைப்புக்கள் பல போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. சமீபத்தில், மேற்கு வங்கத் தலைநகர் கொல்கத்தாவில் அவருக்கு எதிராக இஸ்லாமிய அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். தஸ்லிமாவை வெளியேற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூருக்கு அனுப்பப்பட்ட அவர், பின்னர் புதுடெல்லிக்கு அழைத்து வரப்பட்டார். தற்போது, மத்திய அரசின் பாதுகாப்பில் ரகசிய இடத்தில் தங்கவைக்கப்பட்டிருக்கிறார். இரு தினங்களுக்கு முன்பு தஸ்லிமா தொடர்பாக நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்த வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, இந்தியாவில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்கள், பொதுமக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் கருத்துக்களை வெளியிடக்கூடாது என்று குறிப்பிட்டிருந்தார். அதேநேரத்தில், தஸ்லிமா தொடர்ந்து இந்தியாவில் தங்கியிருக்க அனைத்துப் பாதுகாப்பும் வழங்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார். இந்நிலையில், தனது புத்தகத்தில் சர்ச்சைக்குரியதாகக் கூறப்படும் பகுதிகளை நீக்க முடிவுசெய்திருப்பதாக பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு தொலைபேசி மூலம் அவர் தெரிவித்திருக்கிறார். "மதச்சார்பின்மையின் மகத்துவத்துக்காகக் குரல் கொடுத்தவர்களுக்கு ஆதரவாக இந்தப் புத்தகத்தை எழுதினேன். யாருடைய உணர்வுகளையும் புண்படுத்தும் எண்ணம் எனக்கு இல்லை. தற்போது இந்தியாவில் உள்ள சிலர், இது அவர்களது உணர்வுகளைப் புண்படுத்துவதாகக் கருதுவதால், அந்தப் புத்தகத்தில் உள்ள சில வரிகளைத் திரும்பப் பெற்றுக் கொள்கிறேன்" என்று தஸ்லிமா தெரிவித்திருக்கிறார். இந்த முடிவின் காரணமாக, சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டதாகவும், இனி இந்த நாட்டில் நிம்மதியாக வாழ முடியும் என்று நம்புவதாகவும் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் குருதாஸ் தாஸ்குப்தா, தஸ்லிமாவின் இந்த முடிவு, அவர் மீண்டும் கொல்கத்தா திரும்வுதற்கு வழிவகுக்கும் என்றார். தஸ்லிமாவின் முடிவை, ஜமியதுல் உலாமை ஹிந்த் அமைப்பின் பொதுச்செயலர் மஹமூத் மதனியும் வரவேற்றுள்ளார்
  • பேநசிர் பூட்டோ தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிட்டுள்ளார் : தேர்தல் விஞ்ஞாபனத்துடன் பேநசிர் பூட்டோடிசம்பர் மாதம் 16 ஆம் திகதி அவசரநிலை விலக்கப் போவதாக பாகிஸ்தான் அதிபர் முஷாரஃப் அவர்கள் அறிவித்ததை அடுத்து, ஜனவரி மாதம் நடக்கவுள்ள தேர்தலுக்கான தமது கட்சியின் விஞ்ஞாபனத்தை பாகிஸ்தானின் எதிர்க்கட்சித் தலைவியான பேநசிர் பூட்டொ வெளியிட்டுள்ளார். தொழில்வாய்ப்பு, கல்வி, சக்தி, சுற்றுச்சூழல் மற்றும் சமத்துவம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டதாக தனது கட்சியின் கொள்கை இருக்கும் என்று திருமதி பூட்டோ தெரிவித்துள்ளார். இந்த தேர்தல்களில் தான் ஒரு எதிர்ப்புடனேயே பங்கேற்பதாகவும், அவற்றை தான் அங்கீகரிக்கவில்லை என்று அவர் மேலும் கூறினார்
  • கொழும்புக்கும் வவுனியாவுக்கும் இடையிலான ரயில் சேவை அனுராதபுரத்துடன் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது : நாட்டின் தலைநகரமாகிய கொழும்பு பிரதேசத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவங்களையடுத்து, கொழும்புக்கும் வவுனியாவுக்கும் இடையில் நடைபெற்று வந்த ரயில் சேவை, இன்று அனுராதபுரம் நகருடன் மட்டுப்படுத்தப்பட்டிருப்பதாக ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்தனர்
  • இலங்கை யுத்தத்தில் பொதுமக்கள் அதிகம் கொல்லப்படுவது குறித்து யுத்தநிறுத்தக் கண்காணிப்புக்குழு அதிர்ச்சி : இந்த வாரத்தின் முதல் நான்கு தினங்களில், இலங்கையின் வடக்கிலும் கொழும்பிலும் இடம்பெற்ற குண்டுத்தாக்குதல்களின்போது சுமார் 49 சிவிலியன்கள் கொல்லப்பட்டதோடு, சுமார் 60 பேர்வரையில் காயமைடைந்திருப்பது மிகவும் வேதனைக்குரிய விடயம் என்றும், இது குறித்து தாம் மிகுந்த கவலையடைந்திருப்பதாகவும் இலங்கை யுத்தநிறுத்தக் கண்காணிப்புக்குழு தெரிவித்திருக்கிறது
  • புவி வெப்பமடைதலை தடுப்பது தொடர்பில் உலக முன்னணி வணிக நிறுவனங்கள் கோரிக்கை : புவியை வெப்பமடையச் செய்யும் வாயுக்களின் வெளியேற்றத்தை கட்டுப்படுத்துவதற்கான சர்வதேச இலக்கு ஒன்றை நிர்ணயிப்பது தொடர்பில் உலக நாடுகள் மத்தியில் ஒரு இணக்கப்பாடு காணப்பட வேண்டும் என்று உலகின் முன்னணி வணிக நிறுவனங்கள் இணைந்து கோரிக்கை விடுத்துள்ளன. இளவரசர் சார்ல்ஸ் அவர்களின் முன்முயற்சியுடன் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஒன்றுபட்ட கோரிக்கையை அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் சீனா உட்பட பல நாடுகளைச் சேர்ந்த 150க்கும் அதிகமான சர்வதேச முன்னணி வணிக நிறுவனங்கள் முன்வைத்துள்ளன
  • கடத்தப்பட்டிருந்த கொரில்லாக்கள் பிறப்பிடம் திரும்புகின்றன : ஐந்து ஆண்டுகாலமாய் ஒரு சர்வதேச பிணக்குக்கு காரணமாக அமைந்திருக்கின்ற நான்கு அரிய வகை ஆப்பிரிக்க கொரில்லாக்கள், மத்திய ஆப்பிரிக்காவின் கேமரூன் நாட்டிலுள்ள தமது பிறப்பிடத்துக்குத் திரும்பும் பயணத்தின் கடைசி நிலைக்கு தற்போது வந்துள்ளன
  • யுரேனியம் செறிவாக்கலில் இரான் ஈடுபடுவதைத் தடுக்க ஐரோப்பிய ஒன்றியம் முயற்சி : ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுக் கொள்கைத் தலைவர் ஹாவியர் சொலானா, இரானை அதன் யூரேனியம் செறிவூட்டும் நடவடிக்கைகளில் ஈடுபடாமல் இருக்கவைக்க எடுக்கப்படும் மற்றொரு முயற்சியில், இரானின் தலைமை அணுசக்தி பேச்சுவார்த்தையாளர் சயீத் ஜலீலியை லண்டனில் சந்தித்து பேசியுள்ளார்
  • கரடி பொம்மைக்கு 'முகமது' பெயரிட்ட சர்ச்சை - ஆசிரியருக்கு தண்டனை போதாது என்று கூறி கார்டூமில் ஆர்ப்பாட்டம் : பிரிட்டிஷ் பள்ளிக்கூட ஆசிரியை கிலியன் ஜிப்பொன்ஸ்ஸுக்கு வழங்கப்பட்ட தண்டனை போதாது என்று கூறி அதனைக் கண்டித்து, சுடானின் தலைநகர் கார்ட்டூமின் ஊடாக நூற்றுக்கணக்கானோர் ஊர்வலம் ஒன்றை நடத்தியுள்ளனர்