September 08, 2007

இன்றைய குறள்

சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும்
இம்மையும் இன்பம் தரும்

சிறுமைத்தனமற்ற இனியசொல் ஒருவனுக்கு அவன் வாழும் போதும், வாழ்ந்து மறைந்த பிறகும் புகழைத் தரக்கூடியதாகும்

அறத்துப்பால் : இனியவை கூறல்

இசைஞானி - மேஸ்ட்ரோ இளையராஜா

Powered by eSnips.com

வாரியார் சொல்கிறார்

"கங்கை நீர் சிறந்தது. அதனினும் சிறந்தது அபிஷேக நீர். அதனினும் உயர்ந்தது ஏழைகட்காக உழைக்கும் ஒரு உத்தமனுடைய முகத்தில் துளிர்க்கும் வியர்வை நீர்"

  • அல்ஜீரிய குண்டு வெடிப்பில் 20க்கும் அதிகமானோர் பலி : அல்ஜீரியா நாட்டில் கடந்த 48 மணி நேரத்தில் நடத்தப்பட்ட இரண்டாவது குண்டுத் தாக்குதலில் 20 க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது
  • புவி வெப்பமடைதலுக்கான இலக்குகள் குறித்து சீனா மற்றும் அமெரிக்கா இணக்கம் : சிட்னியில் 21 நாடுகள் கலந்து கொள்ளும் ஆசிய பசுபிக் மேநிலை மாநாட்டில் புவியை வெப்பமடையச் செய்வதற்கான வாயுக்களின் வெளியேற்றத்தைக் கட்டுப்ப்டுத்துவதற்கான உலக மட்டத்திலான இலக்குகள் குறித்து அமெரிக்காவும், சீனாவும் முதல் தடவையாக இணக்கம் தெரிவித்துள்ளன
  • பர்மாவில் தொழிலாளர் நல ஆர்வலர்கள் 6 பேருக்கு சிறை : பர்மாவின் ரங்கூனில் அமெரிக்க தூதரகத்தில் கருத்தரங்கம் ஒன்றை ஏற்பாடு செய்தமைக்காக, தொழிலாளர் நல ஆர்வலர்கள் 6 பேருக்கு 28 ஆண்டுகால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக பர்மியச் செய்திகள் கூறுகின்றன
  • கிரிக்கட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி : இந்தியாவுக்கு எதிரான கிரிக்கட் ஒருநாள் தொடரை இங்கிலாந்து வென்றுள்ளது.
    இன்று லண்டனில் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த இந்தியாவுக்கு எதிரான 7 வது ஒரு போட்டியில் 7 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம் 4-3 என்ற எண்ணிக்கையில் இந்தப் போட்டித் தொடரை இங்கிலாந்து வென்றது
  • இறுதிப் போட்டிக்கு இந்திய ஹாக்கி அணி தெரிவானது
    இதற்கிடையே, சென்னையில் நடைபெற்று வரும் ஆசியக் கோப்பை ஹாக்கிப் போட்டியில் இந்திய அணி இறுதிப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றுள்ளது. இன்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் 4 – 1 என்ற கோல் கணக்கில் ஜப்பானை இந்தியா வீழ்த்தியது. இந்தியா சார்பில் பிரப்ஜோத் இரண்டு கோல்களை அடித்தார்
  • மேலும் இன்றைய (செப்டம்பர் 08 சனிக்கிழமை 2007) "BBC" தமிழோசைச் செய்திகளுக்கு இணைப்பில் செல்க http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml?tamil_worldnews

September 07, 2007

இயக்குனர் மணிரத்னம்

இளம் இசைக்குயில் ஜனனி

இன்றைய குறள்

நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று
பண்பின் தலைப்பிரியாச் சொல்

நன்மையான பயனைத் தரக்கூடிய நல்ல பண்பிலிருந்து விலகாத சொற்கள் அவற்றைக் கூறுவோருக்கும் இன்பத்தையும், நன்மையையும் உண்டாக்கக் கூடியவைகளாகும்

அறத்துப்பால் : இனியவை கூறல்

ஓசாமா பின்லாடன் அமெரிக்கர்களுக்கு எச்சரிக்கை

கைரோ: முன்று ஆண்டுகளாக மவுனம் காத்து வந்த பின்லாடன் தற்போது அமெரிக்க ராணுவ நடவடிக்கைகளை கண்டிக்கும் விதத்தில் வீடியோ செய்தி அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் பின்லாடன் வழக்கத்துக்கு மாறாக கேசத்திற்கு டை அடித்து காணப்பட்டார். வெள்ளை டர்பன் மற்றும் வெள்ளை உடையணிந்து காட்சியளித்தார்.30 நிமிடம் ஓடிய அந்த வீடியோவில் அமெரிக்கர்கள் தங்களுக்கே உரிய அதிகாரப்போக்கினை நிறுத்தாத காரணத்தால் ஈராக் போர் முடிவடைவதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது எனவும், அமெரிக்காவுக்கு பாடம் புகட்டும் விதமாக மீண்டும் ஓர் பெரிய அளவு தாக்குதல் நடத்தப்படும் என எச்சரிக்கைவிடுத்ததுடன், அமெரிக்கர்கள் இஸ்லாம் மதத்திற்கு மாறுவதன் மூலம் போர் நிறுத்தம் நிகழலாம் எனவும் மதமாற்றத்திற்கு அழைப்பு விடுத்தார். இச்சம்பவத்தை தொடர்ந்து அமெரிக்கா முழுவதும் பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது.

திருமுருகக் கிருபானந்த வாரியார் சொல்கிறார்

"எல்லோருக்கும் நல்லவனாகவும், எல்லோரையும் மகிழச் செய்கிறவனாகவும் ஒருவன் இருக்க முடியாது. சந்திரன் குளிர்ந்த அமுத கிரணங்களை உலகிற்கு வழங்குகிறான். முழு நிலவைக் கண்டு எல்லா உயிர்களும் உவகையுறுகின்றன. ஆனால் முழு நிலவைக்கண்டு தாமரை குவிந்து விடுகின்றது. சந்திரன் தாமரைக்கு என்ன தீங்கு செய்தான்? ஒன்றுமேயில்லை. சந்திரனைப் போல் உலகுக்கு நன்மை செய்யும் நல்லோரைக் கண்டு சில புல்லோர்கள் இகழ்வார்கள்; வெறுப்பார்கள்; பகைப்பார்கள்; அதனால் நல்லோர்க்கு ஒன்றும் குறைவு உண்டாகாது"

இந்தியா – இலங்கை உயர்நிலைப் பாதுகாப்புக்குழு : உறுதி செய்ய இந்திய அதிகாரிகள் மறுப்பு : இந்தியா – இலங்கை இடையே, பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பான உயர்நிலைக் குழு ஒன்று அமைக்கப் பட்டிருப்பதாக, இலங்கை அரசு வெளியிட்ட அறிக்கையை உறுதி செய்ய இந்திய அதிகாரிகள் மறுத்துவிட்டார்கள். இலங்கை ஜனாதிபதியின் செயலர் லலித் வீரதுங்க, பாதுகாப்புச் செயலர் கோட்டாபாய ராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதியின் மூத்த ஆலோசகர் பசில் ராஜபக்ஷ ஆகியோர், கடந்த வாரம் புதுடெல்லி வந்து, இந்தியாவின் உயர் அதிகாரிகளைச் சந்தித்துப் பேசினார்கள்
முள்ளிக்குளம் பகுதியை கைப்பற்றியதாக இராணுவம் அறிவிப்பு :
இலங்கையின் வடமேற்கே மன்னார் மாவட்டம் தென்பகுதி கரையோரக் கிராமமாகிய முள்ளிக்குளம் பகுதியை இராணுவத்தினர் இன்று கைப்பற்றியுள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன
தமிழ் கட்சிகளின் வருகையைக் கண்டித்து மட்டக்களப்பில் துண்டுப் பிரசுரம் : இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணி, புளொட் மற்றும் ,ஈ.பி.டி.பி.உட்பட சில தமிழ் அரசியல் கட்சிகளுடன் தொடர்புகள் வைத்திருப்பவர்களுக்கு சென்னன் படை என்ற பெயரில் பகிரங்க எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ''ஆலவட்டம் பிடிப்போருக்கும் ஆதரவு வழங்குபவர்களுக்கும் எச்சரிக்கை" என்ற தலைப்பில் இது தொடர்பான பிரசுரங்கள் கிழக்கு மாகாணத்தின் சில பகுதிகளில் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது
இலங்கையில் கையடக்கத் தொலைபேசி பாவனை வரி 10 வீதமாக அதிகரிப்பு : இலங்கையின் மொத்த சனத்தொகையில் சுமார் 40 சதவீதத்தினர் தொலைபேசி இணைப்புக்களைக் கொண்டிருப்பதாகத் தகவல் வெளியிட்டுள்ள இலங்கை அரசு, நாட்டில் சுமார் 6.3 மில்லியன் கையடக்கத் தொலைபேசிகளும் புழக்கத்தில் இருப்பதாகத் தெரிவிக்கிறது
மேலும் தொடர்ந்து இன்றை (செப்டம்பர் 07 வெள்ளிக்கிழமை 2007) "BBC" தமிழோசைச் செய்திகளுக்கு கீழுள்ள இணைப்பில் செல்க http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml?tamil_worldnews

September 06, 2007

3 வயது சிறுமியைக் கற்பழித்துக் கொன்ற வாலிபரை அடித்துக் கொன்ற மக்கள்

லக்னோ:
உ.பி. மாநிலத்தில் 3 வயது சிறுமியைக் கற்பழித்த காமக் கொடூர வாலிபரை பொதுமக்கள் சரமாரியாக அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உ.பி. தலைநகர் லக்னோ அருகே உள்ள பாண்டே கஞ்ச் என்ற பகுதியில் பெற்றோருடன் வசித்து வருபவர் 3 வயது சிறுமியான ரியா. திடீரென ரியா காணாமல் போய் விட்டார். அவரது பெற்றோரும், அப்பகுதி மக்களும் பல்வேறு இடங்களிலும் தேடிப் பார்த்தனர். ஆனால் ரியா கிடைக்கவில்லை.

இந்த நிலையில் நேற்று காலை ரியாவின் தந்தைக்கு போன் வந்தது. அதில் பேசிய நபர் 10 மணிக்குள் ரியா வீடு திரும்பி விடுவாள் என கூறியுள்ளார். இதனால் அவர்கள் குழப்பமடைந்தனர்.

அருகே உள்ள ஒரு தொலைபேசி பூத்திலிருந்துதான் அந்த போன் வந்தது என்பது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கிருந்து யார் பேசியது என்பதை பொதுமக்கள் விசாரித்தனர். அப்போது சிவ்மோகன் என்பவர்தான் அந்த சமயத்தில் போனில் பேசியது தெரிய வந்தது.

இதையடுத்து நூற்றுக்கணக்கான பொதுமக்கள் சிவ்மோகனின் வீட்டுக்கு படையெடுத்துச் சென்றனர். அங்கு அவர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. சிறுமி ரியா, கழுத்தை அறுத்துக் கொலை செய்யப்பட்டிருந்தாள். அவளது உடலை துணியைப் போட்டு மூடி வைத்திருந்தார் சிவ்மோகன்.

ரியாவை கற்பழித்து பின்னர் கொடூரமாக கொலை செய்துள்ளது தெரிய வந்தது. இதைப் பார்த்த ரியாவின் பெற்றோர், உறவினர்கள், பொதுமக்கள் பெரும் கொதிப்படைந்தனர்.

சிவ்மோகனை சுற்றிச் சூழ்ந்து சரமாரியாக, வெறித்தனமாக அடித்து நொறுக்கினர். வீட்டுக்கு வெளியே இழுத்து வந்து தாறுமாறாக அடித்ததில் சிவ்மோகன் உயிரிழந்தார். அப்படியும் வெறி தீராமல் வீட்டில் இருந்த சிவ்மோகனின் 70 வயது தாயாரையும் அடித்து கொல்ல கூட்டத்தினர் பாய்ந்தனர். ஆனால்அதற்குள் விரைந்து வந்த போலீஸார் அந்த மூதாட்டியை கூட்டத்தினரிடமிருந்து மீட்டுக் கொண்டு சென்றனர்.

கொல்லப்பட்ட சிவ்மோகன் ஏற்கனவே 12 வயது சிறுமியை கற்பழித்துக் கொன்ற வழக்கில் கைதானவர். சமீபத்தில்தான் அந்த வழக்கிலிருந்து விடுதலையாகி வந்தார். வந்தவுடன் 3 வயது சிறுமியை கொடூரமாக கற்பழித்துக் கொன்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைய லஞ்சம், ஊழல் : ஒரு ஆய்வு

இன்றைய லஞ்சம், ஊழல் - 2: ஒரு ஆய்வு

நடிகர் அருண்குமார் சொல்கிறார்...

இன்றைய குறள்

அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின்

தீய செயல்களை அகற்றி அறநெறி தழைக்கச் செய்ய வேண்டுமானால், இனிய சொற்களைப் பயன்படுத்தி நல்வழி எதுவெனக் காட்டவேண்டும்

அறத்துப்பால் : இனியவை கூறல்

இன்றோ, நாளையோ என்றோ பறந்து விடப்போகுதெம் உயிர். அதற்குள் நமது வாழ்வின் கோலங்களைப் பற்றி நாம் போடும் கணக்குகள்தான் எத்தனை? எத்தனை??
- கவியரசு

  • டார்பூர் மோதலை முடிவுக்குக் கொண்டுவரும் பேச்சுக்கள் : சூடானின் டார்பூர் பிராந்தியத்தில் நிலவும் மோதலை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கிலான புதிய அமைதிப் பேச்சுவார்த்தைகள், அடுத்த மாதம் நடைபெற இருக்கின்றன. இந்த மோதல்களில் இதுவரை குறைந்தது இரண்டு லட்சம் பேர் கொல்லப்பட்டுள்ளனர்
  • எத்தியோப்பிய- எரித்திரிய விவகாரம் குறித்து எச்சரிக்கை :
    இரு நாடுகளின் எல்லையில் படையினர்எத்தியோப்பியாவுக்கும் எரித்ரியாவுக்கும் இடையிலான எல்லைத் தகறாறு தொடர்பிலான தீர்வை, இரு நாடுகளும் ஏற்காவிட்டால், இந்த நாடுகளுக்கு இடையே புதிய போர் மூளும் ஆபத்திருப்பதாக, ஆப்ரிக்காவின் கொம்புப் பிராந்தியத்திற்கான ஐ நா மன்றத்தின் முன்னாள் தூதர் கேல் போஞ்விக் அவர்கள் எச்சரித்துள்ளார்
  • பர்மியப் படையினரைப் பிடித்து வைத்த பிக்குமார் : பர்மாவின் மத்திய நகரான பக்கோக்குவில், பர்மிய பாதுகாப்புப் படையினர் 20 பேரைப் பிடித்து வைத்திருந்த பௌத்த பிக்குகள், அவர்களைப் பல மணி நேரத்தின் பின்னர் விடுதலை செய்துள்ளனர்
  • இந்தோனீசியாவிற்கு ரஷிய அதிபர் முக்கிய விஜயம் : இந்தோனீசியாவிற்கு மிக முக்கித்துவம் வாய்ந்த விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ள ரஷிய அதிபர் விளாடிமிர் புடின் அந்நாட்டுடன் பெரிய அளவிலான ஆயுத விற்பனை தொடர்பான ஒரு ஒப்பந்தத்திலும் கையொப்பமிட்டுள்ளார்
  • தொடர்ந்து இன்றைய (செப்டம்பர் 06 வியாழக்கிழமை 2007) "BBC" தமிழோசைச் செய்திகள் கேட்க இணைப்பில் செல்க http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml?tamil_worldnews

September 05, 2007

உங்களிடம் நோக்கியா மொபைல் இருந்தால் உடனே பேட்டரியை பார்க்கவும்

மும்பை : புகழ்பெற்ற மொபைல் கம்பெனியான நோக்கியா, உலகம் முழுவதிலும் உள்ள அதன் உபயோகிப் பாளர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நோக்கியா மொபைலில் பிஎல் 5 சி என்ற பேட்டரி பொருத்தப்பட்டிருந்தால் உடனே அதை மாற்ற சொல்கிறது. அந்த குறிப்பிட்ட நம்பர் பேட்டரியை சார்ஜ் செய்யும்போது சார்ட் சக்க்யூட் ஆகி, பேட்டரி சூடாகி விடுகிறதாம். உலகம் முழுவதிலும் இருந்து நூற்றுக்கும் அதிகமான புகார்கள் நோக்கியா நிறுவனத்திற்கு வந்ததால் அந்த குறிப்பிட்ட வகை பேட்டரியை இலவசமாக மாற்றித்தர நோக்கியா நிறுவனம் முன்வந்துள்ளது. இவ்வாறு பேட்டரி சூடானதால் இதுவரை யாருக்கும் உடல் ரீதியான பாதிப்பு ஏற்பட்டதாக புகார் இல்லை. எனினும் முன்னெச்சரிக்கையாக இந்த வகை பேட்டரிகளை மாற்றித்தர அந் நிறுவனம் முன்வந்துள்ளது. இந்த பிஎல் 5 சி வகை பேட்டரிகள் ஜப்பானின் மேட்சுசிடா நிறுவனம் தயாரித்து நோக்கியாவுக்கு சப்ளை செய்யதாம். நோக்கியா, அதன் மொபைல் போன்களுக்கு தேவையான பேட்டரிகளை பல கம்பெனிகளிடமிருந்து பெற்றிருக்கிறது. அவர்கள் எல்லோருமாக சேர்ந்து 30 கோடிக்கும் அதிகமான பிஎல் 5 சி பேட்டரிகளை சப்ளை செய்திருக்கிறார்கள். அதில் ஜப்பானின் மேட்சுசிடா நிறுவனம், டிசம்பர் 2005 இலிருந்து நவம்பர் 2006 வரை தயாரித்து வழங்கிய 4 கோடியே 60 லட்சம் பிஎல் 5 சி பேட்டரிகளில் தான் இந்த புகார்கள் வந்துள்ளன. இந்த குறிப்பிட்ட காலகட்டத்தில் தயாரிக்கப்பட்ட பேட்டரிகளை மட்டும் மாற்றினால் போதும். இதை தவிற வேறு வகை பேட்டரிகளை மாற்ற தேவை இல்லை. நம்மிடம் நோக்கியா மொபைல் இருந்து, அதிலிருக்கும் பேட்டரியும் பிஎல் 5 சி தான் என்றால், அதை மாற்ற வேண்டுமா வேண்டாமா என்று, நோக்கியா.காம் வெப்சைட்டில் சென்று பார்த்துக்கொள்ளலாம். www.nokia.com

இன்றைய குறள்

பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணியல்ல மற்றுப் பிற

அடக்கமான பண்பும், இனிமையாகப் பேசும் இயல்பும் தவிர, ஒருவருக்குச் சிறந்த அணிகலன்கள் வேறு இருக்க முடியாது
அறத்துப்பால் : இனியவை கூறல்

நாவே இன்னும் கொஞ்சம் மௌனம் கா...
வாயில்லாச் சில்லறைகள் சத்தமிட்டாலும்
வாய்திறந்தும் பேசாத சுருக்குப்பை போல

- கவிப்பேரரசு வைரமுத்து