September 30, 2007

கவியரசு கண்ணதாசனின் குரலில் "அர்த்தமுள்ள இந்துமதம்"

சேதுசமுத்திரத்தில் ஆரம்பித்து இராமாயணம், மகாபாரதம் வரை சர்ச்சை கிளம்பியுள்ள இந்த நேரத்தில் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்து மதம் பற்றிய சொற்பொழிவை அவர் குரலாலேயே கேட்கத்தோன்றியது. எனவே இந்தப் பதிவை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன். இது மட்டுமல்ல இன்னும் இது சம்பந்தமான பதிவுகளும், இதைப்பற்றிய அவரின் குரலும் தொடர்ந்து வரும்...
Powered by eSnips.com

இந்தப்பிரபஞ்சத்தில் உள்ள எண்ணிலடங்கா இதயங்களே! இதோ ஓர் இதயத்தின் இதயப்பூர்வமான நல்வாழ்த்துக்கள்!!

"இன்று இதயதினம்"



பிளாக்மெயிலுக்காக கருணாநிதி உண்ணாவிரதம்!?

  • சுப்ரீம் கோர்ட் தடை என்ன ஆச்சு? : பொதுமக்கள் கேள்வி


சென்னை : தமிழகத்தில் பந்த் நடத்தக்கூடாது என்று சுப்ரீம் கோர்ட் தடை விதித்து நேற்று தீர்ப்பளித்தது. இதைத்தொடர்ந்து தமிழகத்தில் வழக்கம்போல பஸ்கள் ஓடும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் இன்று காலை முதலே மாநிலத்தின் அனைத்து நகரங்களிலும் பஸ்கள் ஓடவில்லை. ஒரு சில இடங்களில் திறக்கப்பட்டிருந்த கடைகளையும் மூடச் சொல்லி வற்புறுத்தப்பட்டன. இதனால் அனைத்து கடைகளும் மூடப்பட்டு விட்டன. இதனால் சுப்ரீம் கோர்ட் தடை என்ன ஆச்சு என்று பொதுமக்கள் கேள்வி எழுப்புகிறார்கள். பஸ்சுக்காக காலையில் இருந்து மணிக்கணக்கில் காத்திருந்த ‌பொதுமக்கள் அரசு பஸ்கள் இயக்கப்படாததற்கு கடும் கண்டனத்தை தெரிவித்தனர்.

  • உண்ணாவிரதம் துவங்கினார் கருணாநிதி : ராமதாஸ் உள்ளிட்ட கூட்டணி தலைவர்கள் பங்கேற்பு


சென்னை : தி.மு.க. அறிவித்த முழு அடைப்புக்கு சுப்ரிம் கோர்ட் தடை விதித்ததைத் தொடர்ந்து இன்று (1ம்தேதி) உண்ணாவிரதம் இருக்கப்போவதாக முதல்வர் கருணாநிதி அறிவித்தார். இதையொட்டி சென்னை வாலாஜா சாலை அரசினர் விருந்தினர் இல்லம் முன்பு இரவோடு இரவாக பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டது. காலை 9 மணிக்கு முதல்வர் கருணாநிதி உண்ணாவிரத மேடைக்கு வந்து அமர்ந்து உண்ணாவிரத போராட்டத்தை துவங்கினார். அவருடன் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், காங்கிஸ் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, மார்க்சிய கம்யூனிஸ்ட் தலைவர் வரதராஜன், இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர் ராஜா, திராவிடர் கழக தலைவர் வீரமணி, விடுதலை சிறுத்தைகள் திருமாவளவன், மத்திய அமைச்சர்கள் டி.ஆர்.பாலு, ஜி.‌கே.வாசன், கனிமொழி எம்.பி., தமிழக அமைச்சர்கள் ஸ்டாலின், ஆற்காடு வீராசாமி, அன்பழகன் மற்றும் தொண்டர்கள் உண்ணாவிரதம் இருந்தனர். இதேப்போல தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான இடங்களில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் உண்ணாவிரதம் இருந்தனர்.

  • கோவையில் கடைகளை மூடச் சொல்லி கல்வீச்சு பதட்டம்


கோவை : கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் இன்று அரசு மற்றும் தனியார் பஸ்கள் ஓடவில்லை. பெரும்பாலான கடைகள் மூடப்பட்டிருந்தன. கோவை சாய்பாபா காலனியில் ஓருசில கடைகள் திறக்கப்பட்டிருந்தன. அங்கு வந்த ஒரு கும்பல் கடைகளை மூடச் சொல்லி வற்புறுத்தியது. கற்களை வீசி தாக்குதலும் நடத்தப்பட்டது. இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது.

  • தமிழகம் முழுவதும் பஸ்கள் ஓடவில்லை : பந்த் இல்லை என்பது கண்துடைப்பு


சென்னை : சேது சமுத்திர திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வலியுறுத்தி தமிழகத்தில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் இன்று (1ம் தேதி) பந்த் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த பந்த்திற்கு சுப்ரிம் கோர்ட் நேற்று அதிரடியாக தடை விதித்தது. இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் சேது திட்டத்தை நிறைவேற்றக் கோரி உண்ணாவிரதம் இருப்பார்கள் என்று முதல்வரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதி அறிவித்தார். பந்த் இல்லை என்று தெரிவித்திருந்தாலும் மாநிலம் முழுவதும் பஸ்கள் எதுவும் இன்று ஓடவில்லை. சென்னை, திருச்சி, கோவை, சேலம், மதுரை, திருநெல்வேலி என அனைத்து நகரங்களிலும் அரசு பஸ்கள் இயங்கவில்லை. கடைகளும் மூடப்பட்டிருந்தன. பஸ்கள் ஓடாததால் பெரும்பாலான தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பந்த் இல்லை என்பது வெறும் கண்துடைப்பாகிப் போனது. இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமத்துக்குள்ளானார்கள்.

  • மதுரையில் தனியார் பஸ் கண்ணாடி உடைப்பு


மதுரை : முழு அடைப்புக்கு தடை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து பஸ்கள் ஓடும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் மதுரையில் இயக்கப்பட்ட தனியார் பஸ் மீது கல் வீசி தாக்கப்பட்டது. காம்ப்ளக்ஸ் பஸ் நிலையத்தில் நின்ற பஸ் மீது மர்ம கும்பல் கற்களை வீசியது. இதில் பஸ் கண்ணாடிகள் உடைந்தன. நகரில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயங்கவில்லை.



பிளாக்மெயிலுக்காக கருணாநிதி உண்ணாவிரதம் : வி.எச்.பி. கருத்து


அகமதாபாத் : சேது சமுத்திர திட்டத்தை விரைந்து நிறைவேற்றக் கோரி தமிழகத்தில் தி.மு.க. சார்பில் முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த முழு அடைப்புக்கு சுப்ரீம் கோர்ட் தடை விதித்ததைத் தொடர்ந்து இன்று (1ம்தேதி) உண்ணாவிரதம் இருக்கப் போவதாக முதல்வர் கருணாநிதி அறிவித்தார். இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள விசுவ இந்து பரிஷத் தேசிய பொதுச் செயலாளர் பிரவீன் தொகாடியா, கருணாநிதியின் உண்ணாவிரதம் பிளாக்மெயில் போல உள்ளது என்றார். சுப்ரிம் கோர்ட்டின் உத்தரவு மகிழ்ச்சி தரத் தக்கதாக இருப்பதாகவும் தொகாடியா கூறியுள்ளார்.

இன்றைய குறள்

சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபாற்
கோடாமை சான்றோர்க் கணி

ஒரு பக்கம் சாய்ந்து விடாமல் நாணயமான தராசு முள் போல இருந்து நியாயம் கூறுவதுதான் உண்மையான நடுவு நிலைமை என்பதற்கு அழகாகும்

அறத்துப்பால் : நடுவு நிலைமை

பொன்மொழி

"தோல்வி மூலம் நாம் பெறப்போகும் உத்திகளுக்காகவேணும் மனிதன் தோல்வியுறவேண்டும்"

  • திமுக-வின் முழு அடைப்புக்கு உச்சநீதிமன்றம் தடை : திமுகவும் அதன் தோழமைக் கட்சிகளும் திங்கட்கிழமை நடத்தத் திட்டமிட்டிருந்த முழு அடைப்புப் போராட்டத்துக்கு இந்திய உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. திங்கட்கிழமையோ அல்லது அதன் பிறகு வேறு எந்த நாளிலுமோ இந்தப் போராட்டத்தை நடத்தக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமாக இருந்தபோதிலும் வழக்கத்துக்கு மாறாக சிறப்பு அமர்வு மூலம். பி.என். அகர்வால் மற்றும் பி.பி. நவ்லேகர் கொண்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள் குழு இந்த மனுவை விசாரித்து தீர்ப்பளித்தது.
    ராமர் சேது என்று அழைக்கப்படும் ஆதம்ஸ் பாலம் பகுதியை இடிக்கக் கூடாது என பாஜக மற்றும் இந்து அமைப்புக்கள் போராடி வருகின்றன. இதுதொடர்பான வழக்கும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. இதனிடையே சேது சமுத்திரத் திட்டத்தை விரைவாக நிறைவேற்றக் கோரி முழு அடைப்புப் போராட்டம் நடத்த திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் முடிவு செய்தன. உண்ணாவிரதம் இருக்கிற போகிறார் தமிழக முதல்வர் அதை எதிர்த்து அதிமுக சார்பிலும் மேலும் சிலரது சார்பிலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதுபற்றி கடந்த வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்த உயர்நீதிமன்றம் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என மாநில அரசு அளித்த உறுதிமொழியை ஏற்று போராட்டத்துக்குத் தடை விதிக்க மறுத்துவிட்டது. இதை எதிர்த்து அதிமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் சனிக்கிழமையன்று மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை ஞாயிற்றுகிழமை காலை மூன்று மணி நேரம் நடைபெற்றது. பந்த் என்று தீர்மானித்த பிறகும் அதற்குத் தடை விதிக்கத் தவறியதன் மூலம் உயர்நீதிமன்றம் தனது கடமையிலிருந்து தவறிவிட்டதாகவும் நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். அரசியல் கட்சிகளின் உரிமைகளைவிட பொதுமக்களின் உரிமைதான் முக்கியமானது என்று நீதிபதிகள் கருத்துத் தெரிவித்தனர். இந்த விசாரணையின்போது அனைத்துத் தரப்பினரும் ஆச்சரியப்படும் வகையில் சேதுசமுத்திரத் திட்டத்தை மாற்று வழியில் செயல்படுத்துவதை எதிர்க்கவில்லை என்று திமுக வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். ஆனால் அந்தப் பிரச்சினையைப் பற்றி இப்போது நீதிமன்றம் கவலைப்படவில்லை என்றும் பந்த் நடத்தப்படுவது சரியா என்பதுதான் கேள்வி என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். யாருக்கு எதிராக பந்த் நடத்துகிறீர்கள்? மத்திய அரசுக்கு எதிராகவா அல்லது இந்த நீதிமன்றத்துக்கு எதிராகவா? என்று நீதிபதிகள் கேட்டனர். சம்பந்தப்பட்ட அனைத்துக் கட்சிகளுக்கும் நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதனிடையே பந்த் நடத்த நீதிமன்றம் தடை விதித்துவிட்டாலும் அதற்குப் பதிலாக திங்கட்கிழமை தமிழகம் முழுவதும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு. கருணாநிதி அறிவித்துள்ளார்
  • சேது சமுத்திரத் திட்டத்தால் இலங்கை கடல் வாழ் உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்கிறது இலங்கையின் வல்லுநர் குழு : இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் இலங்கையையும் இந்தியாவையும் பிரிக்கும் கடல் எல்லைக்கு அண்மையாக சர்ச்சைக்குரிய இந்தியாவின் சேதுசமுத்திரக் கால்வாய்த் திட்டம் தொடரப்பட்டால் இலங்கையின் கடல் வாழ் உயிரினங்களுக்கு, மூலப்பொருட்களுக்கும் அது கடுமையான பாதிப்பினை ஏற்படுத்துமென இந்தத்திட்டம் குறித்து ஆராந்துவரும் இலங்கை நிபுணர் குழுவில் அங்கம் வகிக்கும் அங்கத்தவரான லங்கா ஹைட்ரோலிக் இன்ஸ்டிடியூட்டின் நிறைவேற்று அதிகாரி, மலித் மெண்டிஸ் தெரிவித்திருக்கிறார். பாக்கு நீரிணைப் பகுதியில் இந்திய அரசினால் முன்னெடுக்கப்பட்டு வரும் இந்தத் திட்டம் குறித்து இலங்கை அதிகாரிகள் இந்தியத் தரப்பினரைவிட நன்கு விரிவான முறையில் ஆய்வுகளை மேற்கொண்டிருப்பதாகவும், இந்தத் திட்டம் அமல்படுத்தப்பட்டால் கடலின் தற்போதைய ஓட்டத்தில் பாரிய மாற்றங்கள் ஏற்படுவதோடு, இங்கே கடலின் மடியில் வாழக்கூடிய தாவரங்கள், மற்றும் உயிரினங்களிற்கும் அவை எதிர்வுகூற முடியாத அளவிற்கு பாதிப்புக்கள் ஏற்படுமெனவும் மலித் மெண்டிஸ் தெரிவித்திருக்கிறார். இலங்கைக்கும், இந்தியாவிற்கும் இடையிலான கடலின் மடியில் இருப்பதாகக் கூறப்படும் இராமர் சேது அணையின் குறுக்காக சுமார் 167 கிலோமீற்றர்கள் நீளமாக வெட்டப்படவுள்ள இந்தக் கப்பல் கால்வாய்த்திட்டம் குறித்த இந்த நிபுணர்கள் குழுவின் அறிக்கை ஏற்கனவே இலங்கை வெளிநாட்டமைச்சிடம் கையளிக்கப்பட்டிருப்பதாக அறியப்படுகிறது
  • உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றார் விஸ்வநாதன் ஆனந்த் : இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் இரண்டாவது முறையாக உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். மெக்சிகோவில் நடைபெற்ற உலக சாம்பியனுக்கான செஸ் போட்டியின் இறுதி சுற்றில் ஹங்கேரி நாட்டின் பீட்டர் லீக்கோவை அவர் வெற்றி பெற்றார். இந்தப் போட்டிகளில் அனைத்து ஆட்டங்களிலும் அவர் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆறு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் உலக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது தமக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது என்று தமிழோசையிடம் ஆனந்த் தெரிவித்தார். இந்தப் போட்டி மிகவும் கடுமையாக இருந்தது என்றும், முக்கியமாக ரஷ்யாவை சேர்ந்த அலெக்ஸாண்டரை கிருஷ்சுக்கை வெற்றி கொண்டது மிகவும் முக்கியமானது என்றும் அவர் குறிப்பிட்டார். அவர் தமிழோசைக்கு வழங்கிய சிறப்பு பேட்டியை திங்கட்கிழமை விளையாட்டு அரங்கத்தில் கேட்கலாம்.
  • மன்னார் மோதல்களில் 6 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டிருப்பதாக இராணுவம் தெரிவித்துள்ளது : இலங்கையின் வடமேற்கே மன்னார் முன்னரங்க பகுதிகளில் இராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே தொடர்ந்து இடம்பெற்று வரும் மோதல்களில் 6 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுள்ளதாகத் தேசியபாதுகாப்புக்கான ஊடகத் தகவல் நிலையம் தெரிவித்துள்ளது. கள்ளிக்குளம் முன்னரங்க பகுதியிலேயே இவர்கள் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது
  • பேச்சுவார்த்தைக்கான அழைப்பை தலிபான்கள் நிராகரிப்பு : ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீது கர்சாய் பேச்சுவார்த்தைக்கு விடுத்த அழைப்பை தலிபான்கள் சார்பில் பேசவல்லவர் நிராகரித்துள்ளார்.
    ஆப்கானிஸ்தானில் அன்னியப் படைகள் இருக்கும் வரையில் தலிபான்கள் ஒரு போதும் ஆப்கானிஸ்தான் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தமாட்டார்கள் என காரி யூசப் அஹமதி என்ற அப்பேச்சுவார்த்தையாளர் கூறினார்
  • எகிப்தில் சிக்கித்தவித்த பாலஸ்தீனர்கள் காசா திரும்ப அனுமதி : கடந்த மூன்று மாத காலத்திற்கு மேலாக எகிப்தில் சிக்கித்தவித்து வந்த 85 பாலஸ்தீனர்கள், காசாவிற்கு திரும்புவதற்கு எகிப்து அதிகாரிகள் அனுமதியளித்துள்ளனர்

நீ மனிதனாகிறாய்

"எப்போது மற்றவரின் துன்பத்தை உன்னுடையதாய் நினைக்கிறாயோ அப்போதுதான் நீ மனிதனாகிறாய்"

ஐ.ஒ.தூரிகை (I.O.Brush)


September 29, 2007

5. சர்க்கரை நோயால் ஏற்படக்கூடிய விளைவுகள் என்னென்ன?

1. சர்க்கரை நோய் என்றால் என்ன?


முதலில் நாம் உண்ணுகின்ற உணவு உடலுக்குள் என்ன செய்கிறது என்றுபார்ப்போம். நமது இரைப்பையும் குடலும் உணவிலிருந்து க்ளுகோஸ் எனும் சர்க்கரையை எடுத்து இரத்தத்தில் செலுத்துகிறது. அதே சமயம் கணையத்திலிருந்து இன்சுலின் உற்பத்தியாகி இரத்தத்தில் கலக்கிறது. க்ளுகோஸ் எனும் சர்க்கரைதான் நம் உடலுக்கு கிடைக்கும் சக்தி. இது ரத்தத்தின் மூலம் உடலில் உள்ள செல்களை சென்றடைய வேண்டும். ஆனால் செல்கள் தானாக சர்க்கரையை உள்ளே அனுமதிக்காது. அதற்குத் தான் இன்சுலின் உபயோகப்படுகிறது. ஏதாவது ஒரு காரணத்தால் ரத்தத்தில் உள்ள சர்க்கரை தேவையான அளவிற்கு செல்களுக்குள் செல்ல முடியாமல் ரத்தத்திலேயே தங்கி விடுகிறது என்றுவைத்துக் கொள்வோம். இதனால் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாகி விடும். இவ்வாறு இருக்கும் நிலை தொடர்ந்து காணப்பட்டால்தான் அது சர்க்கரை நோய். சர்க்கரை நோய் உள்ளவர்கள் தாங்கள் சாப்பிடும் உணவை உடலுக்கான சக்தியாக மாற்ற முடியாததால் தேவையான அளவு உணவு உண்டும் களைத்தும் சோர்வாகவும் காணப்படலாம்.


2. ரத்தத்தில் உள்ள சர்க்கரை செல்களுக்குள் நுழைய முடியாததன் காரணம்?


பல காரணங்களால் இது நிகழலாம். தேவையான அளவு இன்சுலின் கணையத்திலிருந்து உற்பத்தியாகாமல் போகலாம். இன்சுலின் தேவையான அளவு இருந்தும் சரியாக செயல்படாமல் இருத்தல் போன்ற காரணங்களால் ஏற்படலாம்.


3. சர்க்கரை நோய் யாருக்கு ஏற்படும்?


யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். இருப்பினும் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள், பரம்பரையில் சர்க்கரை நோய் இருப்பவர்கள், எடை அதிகமாக இருப்பவர்கள் ஆகியவர்களுக்கு சர்க்கரை நோய் வர அதிக வாய்ப்புண்டு. இவர்கள், தங்களுடைய மருத்துவரிடம் ஆலோசிப்பது நல்லது.


4. சர்க்கரை நோய் வந்ததன் அறிகுறிகள் என்னென்ன?


பல சமயங்களில் அறிகுறிகள் சரியாக தென்படாமல் போகிறது. சில பொதுவான அறிகுறிகள் அடிக்கடி சிறுநீர் கழிப்பது, அடிக்கடி தாகம், அதிக பசி, மிக வேகமாக எடை குறைதல், அதிகமாக சோர்வடைவது, கண்பார்வை மங்குதல், வெட்டு காயம் / சிராய்ப்பு ஆகியவை ஆறுவதற்கு அதிக காலம் பிடித்தல், திரும்ப திரும்ப சருமம், ஈறு மற்றும் சிறுநீர்ப் பையில் தொற்று நோய்


5. சர்க்கரை நோயால் ஏற்படக்கூடிய விளைவுகள் என்னென்ன?


இரண்டாம் வகை சர்க்கரை நோயால் ஏற்படக் கூடியவை. பார்வை இழப்பு, மாரடைப்பு, சிறுநீரகக் கோளாறு, பக்கவாதம், கால்களை இழத்தல், கோமா மற்றும் இறப்பு

இன்றைய குறள்

கெடுவாக வையா துலகம் நடுவாக
நன்றிக்கண் தங்கியான் தாழ்வு


நடுவுநிலைமை தவறாமல் அறவழியில் வாழ்கிற ஒருவருக்கு அதன் காரணமாகச் செல்வம் குவியாமல் வறுமை நிலை ஏற்படுமேயானால் அவரை உலகம் போற்றுமே தவிரத் தாழ்வாகக் கருதாது

அறத்துப்பால் : நடுவு நிலைமை

கிழக்குக் கடற்கரைச்சாலை - நமது சென்னை


கோவை குண்டு வெடிப்பு அப்துல் நாசர் மதானி விடுதலை

கோவை குண்டு வெடிப்பு வழக்குத் தீர்ப்பு : தமிழகத்தின் கோவை நகரில் 1998-ம் ஆண்டு நடந்த தொடர் குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பான வழக்கில், குற்றவாளிகளுக்கு சிறப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை முதல் தண்டனை வழங்கத் துவங்கியுள்ளது. முதல் கட்டமாக, 41 பேருக்கு தண்டனை அறிவிக்கப்பட்டிருக்கிறது. குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படவில்லை என்று கூறி, கேரள மாநிலத்தைச் சேர்ந்த மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் அப்துல் நாசர் மதானி உள்ளிட்ட 8 பேரை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட அல்-உம்மா இயக்கத்தின் பாஷா, முகமது அன்சாரி உள்ளிட்டோருக்கான தண்டனை விவரங்கள் பின்னர் அறிவிக்கப்பட உள்ளது
திமுகவின் முழு அடைப்புக்குத் தடை இல்லை : இதனிடையே, சேதுசமுத்திரத் திட்டத்தை விரைவாக நிறைவேற்ற வலியுறுத்தி, திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் தமிழகம் முழுவதும் அக்டோபர் முதலாம் தேதி நடத்தத் திட்டமிட்டுள்ள முழு அடைப்புப் போராட்டத்துக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. இந்தப் போராட்டம் சட்டவிரோதமானது என்று அறிவிக்கக் கோரியும், அதற்குத் தடை விதிக்க வேண்டும் என்றும், அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் உள்ளிட்டோர் மனுத்தாக்கல் செய்திருந்தனர். முழு அடைப்புப் போராட்டம் அமைதியாக நடைபெறுவதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாகவும், வன்முறையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக அரசின் சார்பில் நீதிமன்றத்தில் உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து, முழு அடைப்புப் போராட்டத்தைத் தடை செய்ய முடியாது என நீதிபதிகள் அறிவித்தனர்.
எச்ஐவி தொற்றிய தாயின் குழந்தை பராமரிப்பு யார் வசம்? வட இந்திய மாநிலமான ராஜஸ்தானைச் சேர்ந்த பெண்மணி ஒருவர், எச்ஐவி தொற்றுக்கு உள்ளாகியிருப்பதால், அவரது 9 வயது பெண் குழந்தையை அவருடைய பராமரிப்பில் விட முடியாது என்று அந்த மாநிலத்தில் இருக்கும் கீழ் நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்திருந்தது. எச்ஐவி தொற்றுக்கு உள்ளாகியிருப்பவர்கள் மத்தியில், இந்த தீர்ப்பு பெரும் சர்ச்சையை உருவாக்கியது. எச்ஐவி தொற்றை காரணம் காட்டி தங்களுக்கான அடைப்படை மனித உரிமைகள் மறுக்கப்படுவதாக இவர்களுக்கான குழுக்கள் குரல் கொடுத்தன. இந்த பின்னணியில் சர்ச்சைக்குரிய இந்த தீர்ப்புக்கு மேல் நீதிமன்றம் இன்று தடை விதித்திருக்கிறது. சர்ச்சைக்குரிய கீழ் நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து, எச்ஐவி தொற்றுக்கு உள்ளான பெண்கள் கூட்டமைப்பின் தலைவி பி.கவுசல்யா அவர்களின் செவ்வியை நேயர்கள் இன்றைய செய்தி அரங்கத்தில் கேட்கலாம்
திருகோணமலை கடற்பரப்பில் கடுமையான மோதல் : இலங்கையின் கிழக்கே திருகோணமலை மாவட்டத்தில் புல்மோட்டைக் கடற்பரப்பில், இலங்கைக் கடற்படையினருக்கும், விடுதலைப்புலிகளின் அமைப்பின், கடற்புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற பெரும் மோதல் ஒன்றில் விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்த 18 பேர்வரை கொல்லப்பட்டதாகவும் கடற்புலிகளின் 3 படகுகளை கடற்படையினர் நிர்மூலம் செய்ததாகவும், இலங்கை கடற்படையினர் அறிவித்துள்ளனர்
வவுனியா மற்றும் மன்னாரில் வீடுகள் கையளிப்பு : இலங்கையின் வடக்கே வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் ஏற்கனவே போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான மனிதாபிமான உதவிச் செயற்பாடுகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்படும் என இப்பகுதிகளில் இடம்பெயர்ந்த மக்களுக்கென அமைக்கப்பட்டுள்ள 230 க்கும் மேற்பட்ட வீடுகளைக் கையளிப்பதற்காக வருகை தந்த பன்னாட்டு தன்னார்வ தொண்டு நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்இன்றைய (செப்டம்பர் 28 வெள்ளிக்கிழமை 2007) "BBC" தமிழோசைச் செய்திகள் கேட்க இணைப்பில் செல்க http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml?tamil_worldnews

விட்டமின்கள்

விட்டமின் E, விட்டமின் C, B விட்டமின்கள், விட்டமின் D, கால்சியம், மக்னீசியம் மற்றும் இரும்பு : சில வருடங்கள் முன்பு வரை மல்டி விட்டமின் மாத்திரைகள் கொஞ்சம் அபூர்வம். இப்போது நிறைய புதுப்புது மாத்திரைகள், டானிக்குகள் வந்து விட்டன. அமெரிக்க தேசிய அறிவியல் அகாடமியின் உணவு மற்றும் ஊட்டச்சத்து வாரியம் இருபாலருக்கும் வெவ்வேறு வயதில் தினமும் பெற வேண்டிய விட்டமின்கள் மற்றும் தாதுப் பொருள்களின் அளவை பட்டியலிட்டிருக்கிறது. ஆனால் பத்தில் ஒருவர் தான் சரியான அளவு விட்டமின்கள் மற்றும் தாதுப் பொருட்களை உணவு மூலமாக பெறுவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. பெரும்பாலோர் மிக முக்கியமான ஊட்டச்சத்துக்களை அளிக்கும் உணவை உட்கொள்வதே
இல்லை. இதனாலேயே தற்போது மருத்துவர்கள் அதிக அளவில் மல்டி விட்டமின்களைப் பரிந்துரைப்பதாக கூறப்படுகிறது. நீங்கள் விட்டமின் மாத்திரை அல்லது தாது புஷ்டி டானிக் உட்கொள்ள நினைத்தால் உங்கள் மருத்துவரை கலந்தாலோசிக்கவும்.

விட்டமின் E:
தினசரி அளவு அபாய அளவு 15mg (சிந்தெடிக் Eயில் 33 IU அளவு) 1000 IU அளவு - உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்கக் கூடியது. கண்ணில் காட்ராக்ட் ஏற்படுவதைத் தவிர்க்கும். அல்ஜைமர்ஸ் எனும் ஞாபக மறதி நோயின் முன்னேற்ற வேகத்தைக் குறைக்கும். இதைத்தவிர ரத்தக்குழாய்களில் ரத்தம் உறைவதைத் தடுக்கும். பாஸ்டனைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் 'ஜெப்ரி ப்ளும்பெர்க்' என்பவர் ஒரு நாளைக்கு 100 முதல் 400 IU அளவு இந்த விட்டமினைப் பெறுவது உடலுக்கு நன்மை பயக்கும் என்று தெரிவிக்கிறார். அபாய அளவு தாண்டி உட்கொண்டால் மூளை உறைந்து போக வாய்ப்புண்டு (Haemorrhage). மேலும் ரத்தத்தை உறைய விடாமல் தடுப்பதால் காயம் பட்டால் சிரமமும் ஏற்படும்.

விட்டமின் C:
தினசரி அளவு அபாய அளவு பெண்களுக்கு 75mg ஆண்களுக்கு 90mg தொடர்ந்து 2000mgக்கு மேல் விட்டமின் C - யால் சளி தடுக்கப்படுவதாக மருத்துவ ஆராய்ச்சியில் நிரூபிக்கப்படவில்லை. ஆனால் சளி பிடிக்கும் ஆரம்பகட்டங்களில் அதிக அளவு விட்டமின் C - யை தினமும் உட்கொள்பவர்களுக்கு சளியின் தாக்கம் குறைவதாக சர்வே முடிவுகள் தெரிவிக்கின்றன. ஒரு நாளுக்குத் தேவையான அளவு சராசரியாக ஒரு டம்ளர் ஆரஞ்சு பழச்சாற்றில் கிடைக்கிறது. புகைப் பிடிப்பவர்கள் மேலும் ஒரு 35mg அளவு உட்கொள்ள வேண்டும். அபாய அளவு மீறினால் வயிற்றுப் பிடிப்பு, மூச்சடைப்பு, கழிச்சல் போன்றவை ஏற்படும். ஒரு நாளில் 200mg அளவைத் தாண்டினாலே குடலின் உறிஞ்சும் தன்மை குறையும், குடலில் வருகின்ற கழிவுப் பொருட்களில் நீர் உறிஞ்சப்படாவிட்டால் மலம் கழிச்சலாகப் போகும்.

B விட்டமின்கள்:
தினசரி அளவு அபாய அளவு 50 வயதிற்குள் 1.3mg 50 வயதிற்கு மேல் ஆண்கள் 1.7mg பெண்கள் 1.5mg 1000mgக்கு அதிகமான போலிக் அமிலம். B6 - 100mg. போலிக் அமிலம் (Folic Acid) (B12 மற்றும் B6) இதயத்தைப் பாதுகாக்கும், பிறப்பில் ஏற்பட்ட குறைகளை நீக்கும், வயோதிகத்திலும் மூளையைச் சுறுசுறுப்பாக இயங்கச் செய்யும். ரத்ததில் உள்ள ஹோமோசிஸ்டீன் (homocysteine) எனும் பொருளின் அளவைச் சீராக வைத்திருக்கும். இந்த அளவு
உயர்ந்தால் இதய நோய், சுவாசக் கோளாறுகள் முதலியவைகளுக்கு வழி வகுக்கக் கூடியது. கொஞ்ச நாளாகவே மூளை வழக்கமான சுறுசுறுப்போடு இல்லையே என்று தோன்றினால் உங்களுக்கு விட்டமின் B12 குறைபாடு இருக்கலாம். இதன் அளவு மிகக் குறைந்தால் தளர்வு, நரம்புக் கோளாறு போன்றவை ஏற்படும். வயோதிகர்களுக்கு உணவிலிருந்து B12ஐப் பெறும் தன்மை குறைவதால் அவர்களுக்கு B12 குறைபாடு ஏற்பட வாய்ப்புகள் அதிகம். அபாய அளவைத் தாண்டினால் போலிக் அமிலம் B12 குறைபாட்டை நிறைவு செய்வதற்கு பதிலாக நரம்புச் சிதைவில் முடியும். தொடர்ந்து அதிக அளவு உட்கொண்டால் நிலை தடுமாற்றம், மரத்துப் போதல், தசை பலவீனம், நரம்புச் சிதைவு ஆகியவை ஏற்படக் கூடும். ஆனால் தேவையான அளவை மிஞ்சும் ஆபத்து சாதாரணமாக ஏற்படுவதில்லை.

கால்சியம்:
தினசரி அளவு அபாய அளவு 50 வயது வரை 1000mg 50 வயதுக்கு மேல் 1200mg - 2500mg வலுவான பற்களுக்கும், வலுவான எலும்புகளுக்கும் கால்சியம் அதிக அளவில் தேவைப்படுகிறது. ஆஸ்டியோபோரோசிஸ் (Osteoporosis) நோயைத் தவிர்க்கவும் கால்சியம் தேவைப்படுகிறது. இதற்காக தினசரி தேவைப்படும் அளவை சமீபத்தில் கூட்டி அறிவித்துள்ளார்கள். சாதாரணமாக மூன்று அல்லது நான்கு டம்ளர் ஸ்கிம்டு பாலில் ஒரு நாளின் தேவை கிடைக்கும். அபாய அளவைத் தாண்டினால் மலச்சிக்கலும், சிறுநீரகக் கோளாறுகளும் உருவாகலாம்.

விட்டமின் D:
தினசரி அளவு அபாய அளவு 50 வயதிற்குள் - 200 IU 50 முதல் 70 வரை - 400 IU 70 வயதிற்கு மேல் - 600 IU தொடர்ந்து 1000 - 2000 IU - கால்சியம் மட்டும் தனியே உடலுக்கு பயனளிக்காது. அத்துடன் இந்த 'சூரிய ஒளி' விட்டமினும் கிடைக்கபெற வேண்டும். கால்சியம், பாஸ்பரஸ் போன்ற தாதுப் பொருட்களை நமது உடல் ஏற்றுக் கொள்வதற்கு விட்டமின் D உதவி செய்கிறது. இது பால், முட்டையின் வெள்ளைக் கரு போன்ற மிகச் சில உணவுப் பொருள்களில்
மட்டுமே கிடைக்கிறது. ஆனால் சூரிய ஒளி உடலில் படும்போது தோலின் அடியில் இது உற்பத்தியாகிறது. ஆகையால் நீங்கள் வெயிலே படாதவராகவோ, மொடாப் பால்குடியராகவோ இல்லாவிட்டால் உங்களுக்குத் தேவையான அளவு உங்களுக்கு கிடைக்காமல் போகலாம். அபாய அளவைத்
தாண்டி தொடர்ந்து உட்கொண்டால் மூச்சடைப்பு, தளர்ச்சி, இதயத் துடிப்பு
வேறுபாடு ஆகியவை ஏற்படக்கூடும்.

மக்னீசியம்:
தினசரி அளவு அபாய அளவு ஆண் - 420mg பெண் - 320mg 320mg - பல்லுக்கும், எலும்புக்கும் அத்தியாவசியமான மற்றொரு தாதுப் பொருள். முழு தானியங்கள், கடலை போன்ற வகைகள், கீரை வகைகள் ஆகியவற்றிலிருந்து
உடலுக்குத் தேவையான மக்னீசியம் கிடைக்கிறது. ஒரு சராசரி மல்டிவிட்டமின் மாத்திரை தினசரி தேவையில் 25% வரை அளிக்கிறது. 350mg-க்கு மேல் மாத்திரையாக உட்கொண்டால் கழிச்சலும், மூச்சடைப்பும்
ஏற்படும்.

இரும்பு:
தினசரி அளவு அபாய அளவு பெண் 50 வயதிற்குள் - 15mg 75mg - குழந்தைகள், விடலைகள் (Teenagers), குழந்தை பெறும் வயதடைந்த பெண்கள் ஆகியோருக்கு இரும்புசத்து குறைவு ஏற்பட வாய்ப்புண்டு. அதே சமயம்
ஆரோக்கியமான ஆண்களுக்கும், 'மெனோபாஸ்' கடந்த பெண்களுக்கும் இந்த குறைபாடு பொதுவாக ஏற்படுவதில்லை. அளவு மிஞ்சினால் மூச்சடைப்பு, கழிச்சல், அடிவயிற்றில் வலி போன்றவை ஏற்படும். அந்தச் சமயத்தில் உடல் மற்ற தாதுப்பொருட்களை பெறுவதையும் தடுத்துவிடும்.

பருத்திவீரன் முதல் பனிக்கட்டிப் பென்(ண்)குயின்

அடி என்னடி ராக்கம்மா

பின்னனிப்பாடகி கலகல...கல்பனா

September 28, 2007

பிரபஞ்சன்

எனக்குப்பிடித்த எத்தனையோ சிறுகதைகளில் இதுவும் ஒன்று. உங்களுக்கும் பிடிக்கும் தொடர்ந்து படியுங்கள். ஹேமாவதியைத் தஞ்சாவூருக்கு அழைத்துச் செல்லக்கூடாது என்று நினைத்திருந்தேன். சென்றாலும், பெரிய கோவிலுக்குள் நுழையக்கூடாது என்றும் ஒரு தீர்மானத்தில் நான் இருந்தேன். இரண்டு முடிவுகளையும் நான் மீறும் சந்தர்ப்பம் எனக்கு ஏற்பட்டது.இது இப்படித்தான். நான் எதையெல்லாம் செய்யக் கூடாது என்று என் டயரியில், டிசம்பர் மாதத்துக் கடைசி நாளில் எழுதி வைக்கிறேனோ, அதே காரியங்களை ஜனவரி முதல் தேதியிலிருந்தே செய்யும்படியாக ஆகிவிடும்.என் நண்பர், அழகிய புதுவருஷத்து டயரி ஒன்றை எனக்கு அன்பளித்தார். டிசம்பர் மாதத்துக் கடைசி நாளில், இரவு முழுக்க விழித்திருந்து, மணி பன்னிரண்டைத் தொட்ட அந்த நிமிஷம், டயரியை எடுத்துப் புது வருஷத்துக்கு நல்வரவு கூறி ஒரு கவிதை எழுதினேன். பிறகு என் சங்கல்பங்களை எழுதினேன். என் சங்கல்பங்கள் கை விரல் எண்ணிக்கையில் அடங்குபவை. அவைகளில், நான் கடைசியாக எழுதியது இதுதான். 'எந்தச் சந்தர்ப்பத்திலும் சுமதியை மீண்டும் எனக்கு நினைவுப்படுத்தும் இடங்களையோ, மனிதர்களையோ தேடி நான் போவதில்லை. என்னால் மீண்டும் அந்த வலி தாங்க முடியவில்லை!'
என்னை விடவும் வலிமை படைத்த கரம் ஒன்று, என் பிடரியைப் பிடித்து உந்தி, என்னை என் விருப்பத்துக்கெதிரான வழியில் நடத்திச் செல்கிறது என்றே நான் நம்புகிறேன். டிசம்பர் கடைசித் தேதி நான் எனக்கு விதித்துக்கொண்ட தடையை, ஜனவரி இருபதாம் தேதி மீறும்படியாக ஆனது. எனினும், எழுதி எழுதி மேற்செல்லும் விதியின் கையில், என்னை ஒப்புக் கொடுத்தபின் எனக்கு நிகழ்வது நன்மைகளாகவே இருந்ததை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. என் தஞ்சை அனுபவமும் அவ்வாறாகவே முடிந்தது. இணைப்பில் தொடர்க... http://www.nilacharal.com/stage/kathai/tamil_story_331b.asp

"ராமர் என்ன கட்டிடப் பொறியாளரா பாலம் கட்டுவதற்கு?"

'தி.மு.க. ஆட்சியில் தனக்கு ஏதும் சலுகை கிடைக்கவில்லையே, இனி யாருக்கும் பல்லக்கு தூக்க மாட்டேன்' என்று விஜய டி. ராஜேந்தர் மனம் குமுறியதற்குக் கைமேல் பலன். சிறுசேமிப்பு துணை நிர்வாக அதிகாரியாகப் பதவி. Please click the link...http://www.nilacharal.com/tamil/politics/tamil_politics_331.asp

September 27, 2007

கேள்வி: சிரிப்பில் எத்தனை வகை உண்டு?

  • டாக்டர் ராம்தாஸ் கலைஞரைப் பார்த்து சிரிப்பது டார்ச்சர் சிரிப்பு.
  • கம்யூனிஸ்டுகளைப் பார்த்து மன்மோகன் சிரிப்பது நக்கல் சிரிப்பு.
  • மிருக வதைச் சட்டத்தைப் பார்த்து சல்மான்கான் சிரிப்பது கேலிச் சிரிப்பு.
  • டால்மியா வகையறாக்களைப் பார்த்து கங்குலி சிரிப்பது எக்காளச் சிரிப்பு.
  • சன் டி.வி.யைப் பார்த்துக் கருணாநிதி சிரிப்பது சவால் சிரிப்பு.
  • சிம்புவைப் பார்த்து நயன்தாரா சிரிப்பது எஸ்கேப் சிரிப்பு.
  • இப்படி சிரிப்பில், பல வகைகள்.

இன்றைய குறள்

கெடுவல்யான் என்ப தறிகதன் நெஞ்சம்
நடுவொரீஇ அல்ல செயின்

நடுவுநிலைமை தவறிச் செயல்படலாம் என்று ஒரு நினைப்பு ஒருவனுக்கு வந்து விடுமானால் அவன் கெட்டொழியப் போகிறான் என்று அவனுக்கே தெரியவேண்டும்

அறத்துப்பால் : நடுவு நிலைமை