October 17, 2007

ஷூட்டிங் ஸ்டார்

இன்றைய குறள்

ஒழுக்க முடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும்

ஒழுக்கம் உடையவராக வாழ்வதுதான் உயர்ந்த குடிபிறப்புக்கு எடுத்துக்காட்டாகும். ஒழுக்கம் தவறுகிறவர்கள் யாராயினும் அவர்கள் இழிந்த குடியில் பிறந்தவர்களாகவே கருதப்படுவர்

அறத்துப்பால் : ஒழுக்கம் உடைமை

சென்னையில் தினசரி ஐந்து கொலைகள் நடக்கின்றன

"சென்னையைப் பொறுத்தவரை மக்கள் அச்சமின்றி வாழமுடியவில்லை. தினசரி ஐந்து கொலைகள் நடக்கின்றன. தலை ஒரு இடம், முண்டம் ஒரு இடம் என்று கொலை நடக்கிறது. காவல்துறையில் அரசியல் தலையீடுதான் இதற்குக் காரணம்"
- மருத்துவர் இராமதாசு

யால சரணாலயப் பகுதியில் தேடுதல் தொடர்கிறது

  • யால வன விலங்கு சரணாலயப் பகுதியில், இலங்கை இராணுவ நிலை ஒன்றை தாக்கிய விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினர்களை, அங்கு அந்த தேசியப் பூங்காவெங்கிலும் தேடும் நடவடிக்கையில், இலங்கை சிறப்புப் படைப்பிரிவினர் உட்பட சுமார் 500 படையினர் ஈடுபட்டுள்ளனர்
  • வறுமை ஒழிப்புக் கோரி பாரிய ஆர்ப்பாட்டங்கள் : உலகில் வறுமையை முடிவுக்கு கொண்டுவருவதற்காக உலக நாடுகளின் தேசிய அரசுகள் உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கோரி - உலக சர்வதேச நடவடிக்கை கோரும் நாளில் - நடைபெற்ற ஆர்பாட்டங்களில் பல லட்சம் பேர் பங்கேற்றுள்ளனர்
  • இந்திய பங்கு விலைகளில் வீழ்ச்சி : இந்திய பங்குத் தரகர் ஒருவர்வெளிநாட்டவர்கள் செய்யும் முதலீட்டில் சில கட்டுப்பாடுகளை கொண்டு வருவது குறித்த திட்டத்தைத் தொடர்ந்து, இந்தியாவில் பங்குகளின் விலை பெரிதும் குறைந்தது.
  • குர்து பிரிவினைவாதிகள் மீது எல்லை கடந்து தாக்க துருக்கிய நாடாளுமன்றம் அங்கீகாரம் : வட இராக்கில் குர்து இன பிரிவினைவாதிகளின் தளங்களின் மீது எல்லை கடந்த தாக்குதல்களை நடத்த, துருக்கிய இராணுவத்துக்கு அனுமதி அளித்து, துருக்கிய நாடாளுமன்றம் பெரும் ஆதரவுடன் வாக்கெடுப்பு ஒன்றை நிறைவேற்றியுள்ளது
  • கவலையில் அமெரிக்கா : நிச்சயமாக அமெரிக்கா கவலையில் இருக்கிறது. இராக்கில் இதற்கு மேலும் இராணுவ சவால்களை சந்திக்க அதற்கு வசதிகள் இல்லை.
    மேலும்,அங்கு அது இருப்பதற்கே, துருக்கியின் ஆதரவு அமெரிக்காவுக்கு பெருமளவில் தேவைப்படுகிறது
  • மொகதீசுவுக்கான உணவு விநியோகத்தை ஐ. நா நிறுத்தியது : சோமாலியாவின் தலைநகர் மொகதீசுவில் உள்ள தனது அலுவலகத்துக்குள், அரச துருப்புக்கள் நுழைந்து, உலக உணவுத் திட்டத்தின் உள்ளூர் தலைமை அதிகாரியை கைது செய்ததன் பிறகு, சோமாலியத் தலைநகருக்கான உணவு விநியோகத்தை தாம் நிறுத்தியுள்ளதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு கூறியுள்ளது
  • தென் ஆபிரிக்க எய்ட்ஸ் நிலவரம் குறித்து யூனிசெப் எச்சரிக்கை : தென் ஆப்ரிக்காவில், எய்ட்ஸ் நோய் தொற்றி இறப்போரின் எண்ணிக்கை, அந்த நோய் தொற்றி சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையை விட தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே போகும் நிலையில், எய்ட்சுக்கு எதிரான போரில் தென் ஆப்ரிக்கா தோற்று வருகிறது என்று ஐக்கிய நாடுகள் சிறார்கள் நிதியம், யூனிசெப் கூறுகிறது

October 16, 2007

இன்றைய குறள்

பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கந் தெரிந்தோம்பித்

தேரினும் அஃதே துணை

எந்தெந்த வழிகளில் ஆராய்ந்தாலும் வாழ்க்கையில் ஒழுக்கமே சிறந்த துணை என்பதால், எத்தகையத் துன்பத்தை ஏற்றாவது அதைக் காக்க வேண்டும்

அறத்துப்பால் : ஒழுக்கம் உடைமை

தேர்தல் வருமா? - 1

தேர்தல் வருமா? - 2

தேர்தல் வருமா? - 3

எடிட்டர் அந்தோணி

டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம்

"நான் எந்தப் பரிசுப்பொருளையும் ஏற்கமாட்டேன். எனது இரண்டு சூட்கேசுகளை மட்டுமே எடுத்துக் கொண்டு ராஷ்டிரபதி பவனத்திலிருந்து நான் வெளியேறுவேன்" - முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம், பதவிக் காலத்தின் இறுதி நாட்களில்

இந்திய அமெரிக்க அணு ஒப்பந்தம் குறித்த நடவடிக்கைகள் இடைநிறுத்தம்

  • பல ஆண்டுகள் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு இந்தியாவுக்கும் - அமெரிக்காவுக்கும் இடையே எட்டப்பட்ட அணு ஒப்பதத்தை, இடைநிறுத்தி வைக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது.
    இந்தியாவின் மத்திய அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளிக்கும் இடது சாரிகள் இந்த ஒப்பந்தத்தை கடுமையாக எதிர்க்கின்றனர். ஒப்பந்தத்தை செயற்படுத்தினால், மத்திய அரசுக்குத் தரும் ஆதரவைத் திரும்பப்பெறப் போவதாகவும் அவர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.
    இந்நிலையில், உள்நாட்டில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடிகள் காரணமாக இந்த ஒப்பந்தத்தை மேலெடுத்துச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக, இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் புஷ்ஷுடம் தொலைபேசி மூலம் தெரிவித்துள்ளார்.
    இந்த ஒப்பந்தத்தை இடைநிறுத்தம் செய்ததன் காரணமாக, இந்தியாவின் நம்பகத்தன்மை பாதிக்கும் என்று தமிழோசையிடம் தெரிவித்த பாதுகாப்பு ஆய்வாளர் கே. சுப்பிரமணியம், இந்திய அமெரிக்க உறவுகளில் இது பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது என்றும் கூறினார். இதே விடயம் தொடர்பாக கருத்து வெளியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழுவின் உறுப்பினரான, உ ரா வரசராசன், நாடாளுமன்றத்தின் பெரும்பாலான உறுப்பினர்கள் இந்த ஒப்பந்தத்தை ஆதரிக்காத நிலையில், அக் கருத்துக்களை ஏற்று செயற்படும் ஆட்சியாளர்களின் மதிப்பு உலக அரங்கில் உயரும் என்றார்.
  • இலங்கை மோதல்களில் 30க்கும் அதிகமான புலிகளை கொன்றதாக இராணுவம் அறிவிப்பு : இலங்கையின் வடக்கே இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் திங்கள் கிழமையன்று இடம்பெற்ற கடுமையான வெவ்வெறு மோதல்களின் போது 30க்கும் மேற்பட்ட விடுதலைப் புலிகளும் ஒரு இராணுவச் சிப்பாயும் கொல்லப்பட்டதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது
  • அனைவருக்கும் அறிவியல் : டைனோசாரின் நீளம் 100 அடியை விட அதிகம் அர்ஜென்டினாவின் தென் மேற்குப்பகுதியில் சமீபத்தில் மிகப்பெரிய டைனோசார் எலும்புக்கூடு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட டைனோசோர்களிலேயே, இது மிகப்பெரிய எலும்புக்கூடு என்று இதைக் கண்டு பிடித்த விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கின்றனர்
  • ரஷ்ய- இரானிய அதிபர்கள் முக்கியச் சந்திப்பு : ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் அவர்கள், இரானிய அதிபர் மஃமுட் அஹமதி நெஜாத் அவர்களுடன் தெஹ்ரானில் பேச்சு நடத்தியுள்ளார்
  • இரானிய மனித உரிமை ஆர்வலர் கைதுக்கு சர்வதேச கண்டிப்பு : இரானில் மிகவெளிப்படையாக கருத்து தெரிவித்து வந்த மனித உரிமை ஆர்வலர் ஒருவர், கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டதை இரானிலும் வெளிநாடுகளிலும் செயற்பட்டு வரும் மனித உரிமை குழுக்கள் கண்டித்திருக்கின்றன

October 14, 2007

சீறிலங்கா ஒரு பார்வை

கையில் ஆயுதமேந்தத் தோன்றுகிறது....உங்களுக்கெப்படி?

சொந்த மண்ணிலிருந்து துரத்தப்பட்ட என் உடன்பிறப்புக்களான தமிழ்ச்சகோதர சகோதரிகளை நினைத்துவிட்டு இந்தப் பாடலைக் கேட்கும்போது என்னையுமறியாமல் கையில் ஆயுதமேந்தத் தோன்றுகிறது....உங்களுக்கெப்படி?



இஸ்லாம் விளக்கம் P.ஜைனுல் ஆபுதீன்

இஸ்லாம் : கேள்வி பதில் - P.ஜைனுல் ஆபுதீன்

இன்றைய குறள்

ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்

ஒருவர்க்கு உயர்வு தரக்கூடியது ஒழுக்கம் என்பதால் அந்த ஒழுக்கமே உயிரைவிட மேலானதாகப் போற்றப்படுகிறது

அறத்துப்பால் : ஒழுக்கம் உடைமை

"சிலம்பம்" குறும்படம்

தமிழகத்தின் எங்கோ ஒரு மூலையில் உள்ள மூளையின் பிரதிபலிப்பும், ஏக்கமும், ஆதங்கமும் இந்தக் குறும்படத்தின் வாயிலாக வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. இது பார்ப்பதற்கு மெதுவான, சற்று வேகமாக நகராத குறும்படம்தான். ஆனால் சொல்லப்பட்டிருக்கிற விசயம் ஒவ்வொரு தமிழனின் நெஞ்சத்திலும் எழுத்தாணிகொண்டு எழுதப்பட்டுவிடும் என்பதில் எனக்குத் துளியளவும் ஐயமில்லை. இதேபோன்று நமது கலாசாரப்பிரதிபலிப்புகளோடு பல நல்ல குறும்படங்களைத் தொடர்ந்து எடுக்கவேண்டுமென்று திரு.நா.கவி.குமார் அவர்களைக் கேட்டுக்கொண்டு, அவரையும், அவரோடு இணைந்து பணியாற்றிய அனைத்து நண்பர்களையும் பாராட்டுவதோடு வாழ்த்துக்களையும் கூறுகிறேன்.இந்தப்படைப்பாளியின்(நா.கவி.குமார்)அதே ஆதங்கப்பெருமூச்சுடன் இங்கே உங்களோடு இந்தக் குறும்படத்தை இணையத்தில் முதன் முதலாகப் பெருமையோடு பகிர்ந்துகொள்கிறேன். நன்றி- "இசங்கமம் விஜய்" (http://www.sangamamlive.com/)


சங்கவை, அங்கவை

"இன்றைய சினிமாவில், தமிழ்ச்செல்வி என்ற பெண் கதாபாத்திரத்தில் நடிக்கும் பெண்ணிடம், தமிழ்ப் பெண்ணுக்கான ஆடையைப் பார்க்கமுடியவில்லை. அள்ளிக்கொடுத்த வள்ளல் பாரியின் மகள்கள் சங்கவை, அங்கவை. அப்பெயர்களை ஒரு தமிழ்ப்படத்தில் எவ்வளவு சீரழித்திருக்கிறார்கள்!"

-நெல்லை கண்ணன்

இந்தியாவில் வரதட்சிணைக் குற்றங்களுக்கான தண்டனையை அதிகரிக்க இந்திய சட்ட ஆணையம் பரிந்துரை

  • இந்தியாவில் வரதட்சிணைக் குற்றங்களுக்கான தண்டனையை அதிகரிக்க வேண்டும் என்று இந்தியாவின் சட்ட ஆணையம் மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்திருக்கிறது. அரசு கேட்டுக் கொண்டதற்கிணங்க, உச்சநீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.ஆர். லட்சுமணன் தலைமையிலான சட்ட ஆணையம் தனது பரிந்துரைகளை சட்ட அமைச்சர் பரத்வாஜிடம் சமர்ப்பித்துள்ளது.
    ஏற்கெனவே, வரதட்சிணைக் குற்றங்களுக்கு தண்டணை விதிக்க சட்டத்தில் இடம் உள்ள நிலையில், அதில் மாற்றம் செய்ய வேண்டியதன் அவசியம் என்ன என்று நீதிபதி லட்சுமணன் அவர்களிடம் கேட்டபோது, மகளிர் அமைப்புக்கள் உள்பட பல்வேறு தரப்பிலிருந்தும் வந்த கோரிக்கைகளை அடுத்து, இதுகுறித்து ஆய்வு செய்யுமாறு அரசு சட்ட ஆணையத்தைக் கேட்டுக் கொண்டதாகத் தெரிவித்தார். அதிகபட்ச தண்டனையாக தற்போதுள்ள ஆயுள் தண்டனையை தூக்குத் தண்டனையாக மாற்ற வேண்டும் என்றும் கோரிக்கைகள் வைக்கப்பட்டிருந்தன. ஆணையத்தில் நடைபெற்ற விவாத்தின்போதும் அதுபோன்ற கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன. ஆனால், உலக அளவில் தூக்கு தண்டனையை ஒழிக்க வேண்டும் என்ற கருத்து நிலவி வரும் நிலையிலும், பல்வேறு தீர்ப்புக்களை அடிப்படையாகக் கொண்டும், ஆயுள் தண்டனையே போதுமானது என்று முடிவு செய்யப்பட்டதாகத் தெரிவித்தார் சட்ட ஆணையத்தின் தலைவர் ஏ.ஆர். லட்சுமணன். அதே நேரத்தில், குறைந்தபட்ச தண்டனையாக தற்போது 7 ஆண்டுகளாக இருப்பதை, பத்து ஆண்டுகளாக அதிகரிக்குமாறு அரசுக்குப் பரிந்துரைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
  • இலங்கைக்கும் ஐ.நாவுக்கும் இடையேயான மோதல் குறித்த செய்தி ஆய்வு : கடந்த வாரம் இலங்கை சென்றிருந்த ஐ நா மன்றத்தின் மனித உரிமை ஆணையர் லூயிஸ் ஆர்பர் அவர்கள் தமது பயணத்தின் முடிவில் செய்தியாளர்களிடம் பேசும்போது, இலங்கையில் நிலவும் மனித உரிமைகள் மீறல் தொடர்பில் தமது கவலைகளையும் விமர்சனங்களையும் வெளியிட் டிருந்தார்
  • மத்திய கிழக்கு விஜயத்தில் கொண்டலீசா ரைஸ் : தற்போது மத்திய கிழக்குப் பயணத்தில் ஈடுபட்டுள்ள அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலர் கொண்டலீசா ரைஸ் அவர்கள், முதலாவதாக இஸ்ரேலியத் தரப்புடன் பேசியுள்ளார்
  • கிரிக்கெட் போட்டிகளில் நடைபெற்ற இனக்குரொத கூச்சல் தொடர்பாக கிரிக்கெட் சபை விளக்கம் : ஆஸ்திரேலிய வீரர் ஆண்ட்ரு சிமெண்ட்ஸ்
    இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் அண்மையில் நடந்த சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் இரண்டிலே நடைபெற்றதாகக் கூறப்படுகின்ற இனக்குரொத கூச்சல்கள் குறித்து சர்வதேச கிரிக்கெட் சபை விளக்கம் கேட்டுள்ளது

இன்றைய தலைமுறைக் காதலர்கள்