May 16, 2019
September 05, 2018
ஒரு கடைக்கோடி தமிழனின் கண்ணியமான குரல் !
Posted by
Manuneedhi - தமிழன்
at
10:03 PM
0
comments (நெற்றிக்கண்)
August 14, 2018
என் நேசமிகு உறவுகளுக்கு என் நெஞ்சார்ந்த “சுதந்திர தின” நல்வாழ்த்துகள்
Posted by
Manuneedhi - தமிழன்
at
8:40 PM
0
comments (நெற்றிக்கண்)
June 15, 2018
Nawin Seetharaman Actor, Writer and Co-Director Interview
Posted by
Manuneedhi - தமிழன்
at
1:00 PM
0
comments (நெற்றிக்கண்)
May 29, 2018
Necessity of NEET Exam. A Detailed Discussion with Prof.Thangavelu G
Posted by
Manuneedhi - தமிழன்
at
4:03 AM
0
comments (நெற்றிக்கண்)
May 21, 2018
Sunny Leone talks about First Look of Veeramadevi
Posted by
Manuneedhi - தமிழன்
at
9:09 AM
0
comments (நெற்றிக்கண்)
May 10, 2018
Filming in Fiji, Mauritius, USA, Malaysia, Singapore, Thailand and all over the Planet? Please contact us
Posted by
Manuneedhi - தமிழன்
at
10:21 AM
0
comments (நெற்றிக்கண்)
Nawin Seetharaman Actor and Co-Director Interview
Posted by
Manuneedhi - தமிழன்
at
9:40 AM
0
comments (நெற்றிக்கண்)
September 07, 2017
வேலூர் CMC செய்வது அயோக்கிய தனம் ! இதுதான் 'நீட்' புரட்சியா ?
Posted by
Manuneedhi - தமிழன்
at
6:42 AM
0
comments (நெற்றிக்கண்)
August 24, 2017
1 YES TV தொலைக்காட்சியில் எனது நேர்முகம் - 1
Posted by
Manuneedhi - தமிழன்
at
9:06 PM
0
comments (நெற்றிக்கண்)
1 YES TV தொலைக்காட்சியில் எனது நேர்முகம் - 2
Posted by
Manuneedhi - தமிழன்
at
8:56 PM
0
comments (நெற்றிக்கண்)
"வதம்" தமிழ் திரைப்பட படப்பிடிப்புத் தளத்தில்...
Posted by
Manuneedhi - தமிழன்
at
8:45 PM
0
comments (நெற்றிக்கண்)
பீச்சாங்கை முன்னோட்டம் : இதில் நான் மருத்துவராக நடித்துள்ளேன் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்
Posted by
Manuneedhi - தமிழன்
at
8:38 PM
0
comments (நெற்றிக்கண்)
January 16, 2017
என் அம்மா !
"அம்மா.... எப்படியிருக்கம்மா ?" (ஒருமை என நினைக்க வேண்டாம்... அதுதான் அழகு)
"அய்யா.... படம் பாத்தையா... சூப்பரா இருந்துச்சுய்யா... ஆனா! கடைசிவரைக்கும் ஒனக்கு பிரியாணி கெடைக்கவே இல்லையேய்யா.... அழுதுட்டேன்யா....
இதுதான் என் அம்மா.... (படத்தில் எனக்கு கடைசி வரை பிரியாணி கிடைக்காததுபோல் ஒரு நகைச்சுவைக் காட்சி)
என் அம்மாவை சிலர் வெகுளி என்பார்கள். சிலர் சிறந்த நகைச்சுவையுணர்வுள்ள, சுவாரசியமானவர் என்பார்கள். சிலர் மிகுந்த இரக்க குணம் உடையவர் என்பார்கள். இன்னும் சிலர் 'கோபமா? அப்படின்னா?' என கேட்கும் அளவுக்கு அதீத பொறுமை குணம் கொண்டவர் என்றெல்லாம் சொல்வார்கள்.
என்னை, 'அய்யா, தம்பி, அய்யாவு, பெரிய தம்பி, மூத்தவன், குட்டி, தக்காளி என.... இப்படித்தான் என் அம்மா, என் கிராமத்து உறவுகள், தோழமைகள்... ஏன்! என் தங்கைகளின் குழந்தைகள் உட்பட என்னை... அப்படித்தான் அழைப்பார்கள்.
"ஏம்மா ! எம்பேர சொல்லி கூப்பிட மாட்டேங்கிற"
பேரு சொன்னா பெலன் (பலம்) கொறஞ்சிரும்தான்ய்யா...
இதுதான் எனக்கு கிடைத்த பதில்.
நான் எங்கிருந்தாலும்... இரண்டு நாட்களுக்கும் மேல் அழைக்காவிடில்... என்னை தவறாமல் அழைத்துப்பேசும் என் அம்மா. என்னை மட்டுமில்லை என் குடும்பத்தில் அனைவரையுமேதான். என் அம்மாவின் ஒவ்வொரு அசைவிலும் ஒர் இராணுவ ஒழுங்கிருக்கும். என்னிடம் இருப்பதாய் என் தோழன் ஆம்பல் கென்னடி (இயக்குநர்) சொல்வார். ஒருவேளை என் அம்மாவிடம் இருந்து எனக்கு வந்திருக்கலாம்.
ஒருமுறை என் இளைய தங்கை கல்பனா "அண்ணே! அம்மா ஏதோ பேசணும்னு சொன்னிச்சு. கூப்பிடு" என்றாள். அழைத்தேன்.
"அம்மா ! சொல்லும்மா...."
"தம்பி! எனக்கு மொழங்கைய்க்கி மேல, தோள்பட்டைக்கி கீழ... கடுக்குதுய்யா !
நான் கொஞ்சம் படபடப்புடன்...
"அனுசுயாவுக்கு கால் பண்ணி, (என் மூத்த தங்கை - மருத்துவக்கல்லூரி பேராசிரியை) டாக்டர்கிட்ட கூட்டிட்டுப் போகச் சொல்லு, இல்லாட்டி நானே பேசுறேன்."
"சொல்றத கேளுய்யோவ்.... அதெல்லாம் எனக்கு ஒன்னுமில்ல... நீ பயப்படாத. எனக்கு... ம்ம்.. இந்த காதுல வச்சு, போனை எடுக்காமலே பேசுவாங்கள்'ல....."
சற்று குழுப்பத்துடன்... "என்னம்மா! சொல்ற.... புரியல"
"அதான்ய்யா... நீ, தம்பியெல்லாம் கார் ஓட்டும்போது போனை எடுக்காமலே, காதுல எதையோ தண்டட்டி மாதிரி வச்சுகிட்டு பேசிகிட்டே போவியளே அது என்ன....?"
"ஓ....ப்ளூ டூத்தா ?"
"ம்ம்... ஆமா! அது ஒன்னு வாங்கிக்குடுய்யா"
"சரிம்மா.. நான் வரும்போது வாங்கிட்டு வர்றேன், சரி.... யாருக்குமா அது?"
எனக்குதான்யோவ்....
கொஞ்சம் சிரிப்பை அடக்க முடியாதவனாய்... "ம்ம்.... சரிம்மா, வாங்கிட்டு வர்றேன். நீ டாக்டர போயி பாரு, நான் அனு'வுக்கு போன் பண்றேன்."
"நீ ஏண்டா தம்பி.... இன்னும் இப்படி வெகுளியாவே இருக்கே !
"என்னம்மா"
கை வலி'க்கி காரணம் புரியலயா ஒனக்கு?
"ம்ம்.... சொல்லு"
"ஓந்தங்கச்சிங்க ரெண்டு பேரும் போன எடுத்து எங்கிட்ட பேச ஆரம்பிச்சாளுகன்னா.... அய்யா ! மூணு மணி நேரம் பேசுவா மூத்தவ. நானும் இந்தக்கைய்ய மாத்தி, அந்தக்கைய்ய மாத்தி... வலி தாங்க முடியாம ஒரு வழியா பேசி முடிச்சு போனை அங்குட்டு அக்கடா'ன்ன வைப்பேன். எப்படித்தான் தெரியுமோ... கழுகுக்கு மூக்கு வேர்த்தமாதிரி ஓந்தங்கச்சி எளயவ ஆரம்பிப்பாய்யா... அடுத்து அவ போனை வைக்க அங்குட்டு ஒரு மூணு மணிநேரம். முடியலய்யா.... நானும் திட்டிக்கூட பாத்துட்டேன், வெக்கத்தெ விட்டு... பல தடவை சொல்லியும் பாத்துட்டேன். ம்ஹீம்... நடக்கலயே!"
ம்ம்..... ஒரு வழியாய் என்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு, "அவங்க போன் பண்ணா நீ இனிமே எடுக்காத, அப்படியே எடுத்தா கொஞ்ச நேரம் பேசிட்டு வச்சுரு"
"எப்படிய்யா அப்படி இருக்க முடியும்? இங்கென ஒண்டிக்கட்டையா இருக்கேன். நான் போனை எடுக்காட்டி புள்ளைய பயந்துராதுகளா ?"
இதுதான் என் அம்மா.
நான் எப்போது அலைபேசியில் அழைத்தாலும் என் அம்மா என்னிடம் பேசுவதற்குள் எனக்கு முதலில் கேட்கும் குரல் என் அம்மாவின் செல்லப்பிள்ளைகளான வான்கோழிகள், கோழி-சேவல்கள், கிண்ணிக்கோழிகள், வாத்துகள் அல்லது ஏதாவது புதியதாய் அடைக்கலம் புகுந்துள்ள ஒரு ஜீவராசியாகத்தான் இருக்கும்.
ஒருமுறை அமெரிக்காவிலிருந்து அழைக்கிறேன். இந்தியாவில் அந்தி சாயும் நேரம்.
"தம்பி... நல்லாருக்கியாய்யா, விவேகா, புள்ளைங்கள்லாம் சும்மாருக்குகளா?"
"ம்ம்... எல்லாம் நல்லாருக்கோம்மா, நீ எப்படியிருக்கே, மருந்து மாத்திரையெல்லாம் ஒழுங்கா சாப்புடுறியா, டெய்லி காலைல நடக்குறியா?"
இப்படி சில மணித்தியாலங்கள் பேசிக்கொண்டிருக்கையில்.....
"ஏய்யா... அங்கென போறது யாரு? வெளிச்சம் தெரியல...." அங்கு யாரிடமோ என் அம்மா.
"தம்பி செத்த இருய்யோவ்... வெளி லைட்ட போட்டுட்டு வாரேன். உள்ள போன டவர் எடுக்காது" இது என்னிடம்.
நான் காத்திருக்கிறேன். என் அம்மா அங்கே யாருடனோ பேசிக்கொண்டிருப்பதை நன்றாக கேட்க முடிகிறது.
"ஏய்யா... யாரு... தம்பி நீங்களா? எங்கேப்பா இந்த மசண்டை நேரத்துல, இருட்டுல.. கால்'ள மிதியடிகூட இல்லாம எங்கே போறே?"
"இல்லம்மா... ஆடு கெடைல கெடக்கு... இன்னும் வீட்லருந்து சோறு குடுத்து விடல. அதான் சாப்புட போறேன்"
"அட... ஒனக்கென்ன புத்தியா மலுங்கிப்போச்சு ? புள்ளகுட்டிக்காரன்..... பூச்சி பொட்ட கெடந்து கடிச்சா ஓம்பொண்டாட்டி புள்ளயல யாரு பாப்பா? அட! இங்குட்டு வா.... இந்தா இப்படி திண்ணைல ஒக்காரு... சாப்பாடு எடுத்துட்டு வர்றேன்" அங்கு அவரிடம்.
என்னிடம்....
"தம்பி ! போனை வய்யிய்யா... இந்த கீதாரி தம்பிக்கி சாப்பாடு போடறேன். இந்த இருட்டுல சோத்துக்காக எம்புட்டுத் தூரம் போகும்... இங்கன சாப்புடட்டும். பொண்டாட்டி சாப்பாடு கொண்டு வந்தா தண்ணிய ஊத்தி வச்சா காலைல பழைய கஞ்சிக்கி ஆயிட்டுப்போகுது. நான் போனை வச்சிறன்யா... நீ ஒடம்ப பாத்துக்க. புள்ளையகிட்ட சனி, ஞாயிறுல பேசுறேன்."
இதுவும் என் அம்மா!
"தம்பி ! மத்தியான சாப்பாட்டுக்கு வந்துருவியளாய்யா?"
"அம்மா ! நீ பேசாம ரெஸ்ட் எடும்மா, நைட் சாப்பாடு செஞ்சா போதும். நாங்க வந்து பாத்துக்குறோம்"
"ஆடும் கதவும் நிகராம்" பள்ளிப் பிராயத்தில் வாசித்திருக்கிறேன்.
எப்படித்தான் தெரியுமோ? என் கிராமம் செல்லுமுன், சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ள காளையார்கோவிலில் மகிழ்வுந்துகளை நிறுத்தம் செய்வது வழக்கம்.
"காளையார்கோயில் வந்துட்டீங்களாய்யா?"
"இப்பத்தான் காரை நிறுத்துனோம்மா. எதுவும் வாங்கணுமா?"
"எல்லாமே இருக்கு. வேனும்னா... பால் மட்டும் வாங்கிக்கிட்டு வாங்க. அய்யா... கருப்பன் பேரம்பேத்திய, பள்ளிக்கொடம் போற புள்ளகுட்டிய இங்குட்டு வருங்க... அதுகளுக்கு எதாச்சும் திம்பண்டங்க கொஞ்சம் வாங்கிட்டு வாங்க. கையப்பாக்குங்க.
"பாபு இருக்கானா?" (என் கடைசித்தம்பி).
"ஏம்மா ? அவன் கடைக்கி போய்ட்டான்....சொல்லு"
"இல்லய்யா... ஒங்கிட்ட காசு இருக்காதுய்யா..." (நான் சினிமா வாய்ப்பு தேடி அமெரிக்காவிலிருந்து சென்னை வந்து சிரமப்படுகிறேன் என்பதில் என் அம்மாவுக்கு மிகுந்த வலி)
"நீ சொல்லும்மா.... நான் வாங்கிட்டு வாரேன்"
"நீ... வாங்க வேணாம். பாபுகிட்ட சொல்லி.... மறக்காம முருகனுக்கும், சுந்தரம் மாமாவுக்கும் முடிஞ்சா தண்ணிகிண்ணி (சரக்கு) வாங்கிட்டு வாங்க"
பால், தயிர், மாலைகள் (என் தந்தையின் கல்லறைக்கும்..... கூடவே கோயில்களுக்கும்), அம்மா சொன்ன மேற்படி சோமபானங்கள் சகிதமாக, ஒருவழியாய் வீடு வந்து சேர்வோம்.
வந்ததும்.... காரை விட்டு இறங்கியதும் முதன் முதலில் என் (எனக்கு மட்டுமே) இரு கன்னத்திலும் என் அம்மா தரும் "இரு முத்தங்கள்"..... அவை போதும்....ஆயுள் கூடும்....
ஒரு வழியாய்... அனைவரும் அசெம்பிள். என் அம்மாவின் சமையல் கலை கட்டும். மேற்படி கருப்பன் பேரன் பேத்திகள், சுந்தரம் மாமா, முருகன், மாப்பிள்ளை, மச்சான், சித்தப்பா.... அனைவரும் என் வீட்டு வாசலில் சங்கமம்.....
தெரிந்தும் தெரியாததுபோல்... என் மருமகள்கள் மூலமாய்... எங்களுக்கு வரவேண்டிய என் அம்மாவின் அனைத்து நொறுக்குத்தீணிகளும், சோமபானத்திற்கு சொகுசு சேர்க்கும்.
எங்களனைவரையும் சாப்பிட வைத்து, நடுநிசியில் உறங்கச் செல்லும் என் அம்மா உறங்கப்போகும் நிசப்தத்தை நானறியேன். திடீரென வெண்கலப்பாத்திரங்களுக்கு ஈயம்பூசுவதுபோல் ஏதோ சத்தம் கேட்டு, புரண்டு படுக்கையில் என் அம்மா அடுப்பாங்கரையில் ஏதோ செய்து கொண்டிருப்பது மட்டும் எனக்கு கனவுபோல் வந்து செல்லும்.
ஸ்லோமோஷனில் வரும் ஒலியலையைப்போல்.... என் சகோதரச்சேவல்களின் 'வேக்-அப் அலாம்' என்னை உசுப்பி விடும். ஒரு வழியாய் டீ, காபி, குழந்தைகளனைவருக்கும் தேவையான பால், செர்லாக், ஹார்லிக்ஸ், பூஸ்ட்..... பிறகு, அனைவருக்கும் காலைச் சிற்றுண்டி பரிமாறப்படும். இட்லி, பொங்கல், தோசை, உப்புமா, குறைந்த பட்சம் ஒரு நான்கு வகை சட்னிகளோடு, சாம்பார் தயாராகி நடுவில் என் அம்மா பரிமாற அனைவரும் சாப்பிடும் அழகு அற்புதம்.
ஆனால்....
எனக்கு மட்டும் அவை எதுவுமே என் அம்மா தர மாட்டாள்.....
"தம்பி வாடா.... வந்து ஒக்காந்து... சேந்து சாப்புடு" இது என்னை அம்மா அழைக்கும் குரல்
வர்தா புயலாய் நான் வர..... வழி விட்டு அனைவரும் விலகி உட்கார.....
சுடு கஞ்சியும், பழைய சாதமும், சின்ன வெங்காயமும், பச்சை மிளகாயும், அளவோடு கலந்த உப்பும், கடைந்தெடுத்த மோரில் மூழ்கிக்கிடக்கும் ஒரு குண்டா எனக்காக காத்திருக்கும்.....
குண்டாவுக்குத் துணையாக.....
உறித்து கழுவிய சின்ன வெங்காயம், வத்தல், கூழ் வடகம், ஊறுகாய், புளி-மிளகாய் (கோஸ்-மல்லி), உப்புக்கண்டம், கருவாடு, மிதுக்க வத்தல், மோர் மிளகாய், கத்தரி வத்தல், பாவைக்காய் வத்தல், கொத்தரை வத்தல்..... இத்தனையும்......
கூடவே... நேற்று அல்லது முந்தாநாள் வைத்த பழைய (மீன் - புளிக்) குழம்பும் அதைச் சாப்பிட ஒரு சிறு டேபிள்ஸ்பூன்....
இதைவிட வேறு எனக்கு என்ன வேண்டும்..... எனக்குத் தெரிந்தவரை இதுதான் சொர்க்கம்.
இது என் அம்மா(வின் கைவண்ணம்) ஸ்பெஷல்....
இப்படி என் அம்மா பற்றி எழுத எவ்வளவோ இருக்கிறது.....
நான் ஏழு வயதில் முதல் ஏர் பூட்டி என் வயலில் உழுவதை ரசிக்க ஏழு மணிக்கே சாப்பாடு கொண்டு வரும் என் அழகு அம்மாவை...
நடவு நடும் தலித் மகளிரின் செல்லக்குழந்தைகளையெல்லாம் வயல் வெளியில் மதிய சாப்பாட்டிற்கு பேர் சொல்லியழைக்கும் பாசத்திற்குரிய சிக்கலம்மாவை... (என் அம்மா பிறந்த ஊர் சிக்கல்-நாகப்பட்டினம்)
மழையில் யார் நனைந்தாலும் தன் முந்தானையில் துவட்டும் என் அம்மாவை....
என் அம்மாவின் பீரோவில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் அழகு கைத்தறி சேலைகளை....
எப்போது என் கிராமத்திற்கு சென்றாலும்... நான் விரித்துக்கொள்ள, போர்த்திக்கொள்ள தரும் என் 'அம்மாவின் மணம்' மாறாத புடவைகளை......
கோபமாய் கத்துவதாய் கத்தி.... பிறகு கூப்பிட்டு கோழியடித்து சாப்பாடு போடும் என் அம்மாவின் அதீத பாசத்தை....
யார் வந்தாலும்... காபி, டீ போட்டுக் கொடுக்கும் ஒரு தேநீ(னீ)ர் தாயை....
மறக்காமல் அனைவரையும் அலைபேசியில் அழைத்துப் பேசும் அன்புத்தாயை....
அமுதசுரபியாய் அனைவருக்கும் பரிமாறும் அமுதசுரபியை...
ஆடு, கோழி, மாடு, மரங்களின் பாசைகளைப் புரிந்த ஒரு தமிழச்சியை...
பழைய சோறை பக்குவமாய் பறிமாறும் 'பக்கா பெர்ஃபெக்ட் ஸ்பெஷலிஸ்ட்'டை.....
மது குடிப்பதை வன்மையாகக் கண்டித்தபோதும், மகன்(ள்)களுக்கும், மகன்(ள்)களின் நட்பு-மகன்(ள்)களுக்கு மகத்தான 'சைட்-டிஷ்'ஐ செய்து தரும் மகத்தான தாயை....
"நீ... வீட்டுக்கு மூத்தவன்டா...." என அவ்வப்போது அறிவுரை சொல்லும் என் மூத்த சகோதரியை....
நான் கல்லூரியில் படிக்கையில்.... "ஒனக்கு என்ன வேணும்'மா என்றதும் "எனக்கு எதுவும் வேணாய்யா... நான் சாகுறதுக்குள்ள எனக்கு ஒரு பத்து பவுன் ரெட்டை வடம் சங்கிலி மட்டும் பண்ணிப் போட்டுருய்யா" (அம்மா பாசையில் : ஒரு குண்டுமணிகூட நான் வாங்கிக் குடுக்கல)
நான் அமெரிக்கா அழைத்துச் செல்லும்போது.... என் தந்தை பற்றியே புலம்பிக்கொண்டிருந்த ஓர் அற்புதமான என் தந்தையின் காதலியை.....
அமெரிக்காவில் எங்களோடு இருக்கையில்.... நீ செய்த குறும்புத்தனங்கள், அமெரிக்க நெடுஞ்சாலையில் விரைந்து செல்லும் கார்களை பார்த்து நீ "பறக்குறாய்ங்களேய்யா.... அப்படி எங்கேதான்யா போவாய்ங்கெ" என்ற உன் வெள்ளை உள்ளத்தை....
விவேகா அலுவலகம் சென்றாலும்... எங்களுக்கு சுடச்சுட நீ செய்து கொடுத்த நம்ம ஊர் மீன் குழம்பை....
கிராமத்தில் இருக்கும் உன்னையும், அமெரிக்க அலுவலகத்தில் இருக்கும் விவேகாவையும், சினிமா வாய்ப்புத் தேடி வடபழனியில் இருக்கும் நான் "கான்ஃபரன்ஸ்" செய்து பேச நினைக்கையில், அலுவலகத்தில் இருக்கும் மனைவி விவேகா, மிகவும் தாழ்ந்த குரலில் பேசும்போது உன் குரலையும் தாழ்த்திக்கொள்ளும் உன் வெகுளித்தனத்தை.... நீங்கள் இருவரும் பேசுவது புரியாமல் கடுப்பாகும் என் துர்ப்பாக்கிய சூழுலை....
நம் சூரகுடியில்.... நான் கேட்டும், முருங்கைக்கீரை சமைத்துத் தர மறந்துபோனதால்..... புலம்பித்தள்ளிய என் அம்மாவை.....
திரையரங்கின் வாசலில் உள்ள பேனரில் "நம்ம அண்ணன் போட்டோ எப்ப வரும்" என தம்பியிடம் கேட்கும் என் வெகுளித்தாயை....
நான் பாடிய "காவேரி பாடல்" ஒலிப்பதிவுக்கு அழைத்துச் செல்லவில்லை என்று கோபித்துக்கொண்ட என் மூத்த மகளை.....
என் அப்பாவை சினேகித்த ஆழத்தை என்னிடம் மட்டுமே பகிர்ந்துகொண்ட என் சினேகிதியை....
"பாவாடை தாவணியில்.... பார்த்த உருவாமா" - என் அப்பா... அம்மாவை திருமணம் செய்ய இயலாத நிலையில் பாடியதாய்... பகிர்ந்து கொண்டவளை....
பிறகு ஒரு வழியாய்... திருமணமானபின்...
இடதுசாரி இயக்கத்தில் தீவிரமாய் இருந்த என் அப்பாவின் நிழலாய், நிஜமாய், வெற்றியாய்.... இருந்த மார்க்ஸ் - ஜென்னியை....
என் மூத்த தம்பியின் திருமணத்திற்கு இரண்டு நாட்கள் முன் இறந்து போன என் தந்தையைப் பற்றிய துக்கத்தை சுமந்தவளானாலும்..... "பரவால்லடா, என் தாலி இறங்கியது இருக்கட்டும். அவளை தாலி கட்டி கூட்டிட்டு வாடா" என்று நடத்திக் காட்டிய என் வீரத்தாயை...
இப்படி... என் அம்மாவைப் பற்றி எழுதிக்கொண்டே போகலாம்.... எழுதுவேன் !
பிறகு... எல்லோருக்கும் வழக்கம்போல் முத்தங்கள் தந்து... வழியனுப்பும்போது....
"இன்னும் ஓங்கஷ்டம் தீரலயேய்யா....." என்று எல்லோரின் முன்னிலையில் என்னிடம் கூறுகையில்....
என் தம்பிகள், அவர்தம் மனைவிகள், தங்கைகள், குழந்தைகள்..... நகைச்சுவையாய்....
"அவனுக்கென்ன ! அவன் ஜாலியா லைஃப்-ஐ எஞ்சாய் பண்றான்" என்று சொல்ல....
என் அம்மாவும்.... நானும் பார்த்துக்கொள்ளும் அந்த கண்களின் பாசைகளை, வலிகளை நானும், என் அம்மாவையும் தவிர வேறு யாரால் புரிந்து கொள்ள முடியும்....
...ம்ம்.... இதுவும் கடந்து போகும் !
நான்... ஒரு பணக்கார ஏழை.....
அம்மா ! இன்று உன் பிறந்த நாள்.....
உன்னுடைய பாசையில் உன்னை வாழ்த்துகிறேன்...
"நீ... தீர்க்காயிசோட.... நல்லா ஏழு தலைவாசல் கட்டி, மக்களோடும், மகிமையோடும் நல்லா, சிறப்பா வாழணும்"
நான் உன் மூத்த மகன்.... செல்ல மகன்.... தம்பி, அய்யா.... பெரிய தம்பி... வாழ்த்துகிறேன்.
"நீ என் செல்லம்மா.... "
"பிறந்த நாள் வாழ்த்துகள் அம்மா"
Posted by
Manuneedhi - தமிழன்
at
1:13 PM
0
comments (நெற்றிக்கண்)
November 13, 2016
காவேரி தண்ணீர் உரிமை பிரச்சினை - விழிப்புணர்ச்சி பாடல்
தொகையாறா
தமிழ்நாட்டு ரத்தநாளம்
காவேரி ஆறு – அத
தவறவிட்டா விவசாயம்
என்னவாகும் கூறு
ஆகச் சிறந்த தேசம் - இதில்
வாழ்வது சந்தோஷம்
ஆனா வாழ்க்கை நாசம் - மெல்ல
ஆகுது படுமோசம்
பல்லவி 1
இங்க நீவேற நான்வேற இல்ல - வேணாம்
நமக்குள்ள பேதங்கள் கொள்ள
நாம பாரத அன்னைக்கி பொறந்தோம்
அத பாதிபேர் இன்னைக்கி மறந்தோம்
மேடு பள்ளங்கள்
மண்ணுல கிடக்கட்டும்
ஓடும் வெள்ளங்கள்
அணைகள கடக்கட்டும்
கோரஸ்
ஆகச் சிறந்த தேசம் - இதில்
வாழ்வது சந்தோஷம்
ஆனா வாழ்க்கை நாசம் - மெல்ல
ஆகுது படுமோசம்
சரணம் 1
வானத்த எதிர்பாத்து
பாதி வாழ்க்கை போச்சி
வயவரப்பு செழிச்சாதான்
எங்களுக்கு மீட்சி
இலவசமா கேட்கவில்லை
இத்தனைக்கும் நாங்க
எளக்காரமா பாக்குறீங்க
எப்பவுமே நீங்க
தரை வெடிச்சிக் கெடக்குதுபார்
தாயோட பூமி
ஒருபோகம் அறுப்பறுக்க
ஒத்தவழி காமி
கோரஸ்
ஆகச் சிறந்த தேசம் - இதில்
வாழ்வது சந்தோஷம்
ஆனா வாழ்க்கை நாசம் - மெல்ல
ஆகுது படுமோசம்
சரணம் 2
உங்களுக்குக் கோபம் என்ன
உடன்பொறந்த உறுப்பா
எங்களுக்கும் கோபம் வரும்
எழுந்து நிப்போம் நெருப்பா
வருஷத்துக்கு மூனு மாசம்
கெஞ்சிக்கிட்டே இருக்க
வார்த்தைகள மதிக்காம
ஏளனமா மறுக்க
அடங்கிப்போக காரணமே
தாய் பிள்ளை என்று
அடிக்கடி ஏன் அடிதடிகள்
தேவையில்லை இன்று
கோரஸ்
ஆகச் சிறந்த தேசம் - இதில்
வாழ்வது சந்தோஷம்
ஆனா வாழ்க்கை நாசம் - மெல்ல
ஆகுது படுமோசம்
சரணம் 3
பழிக்குப் பழி தீர்வுன்னா
பகுத்தறிவு எதுக்கு
ஆத்திரம்தான் கண்ணை மூடும்
அறிவை நீ செதுக்கு
எக்கச் சக்க சேதாரம்
யாருக்கென்ன லாபம்
கரைவேட்டி வன்முறைக்கு
காட்டுகிற தூபம்
அணைக்கட்டி தேக்கி வையி
அது உன் தண்ணீரு
அண்டை நாட்டு மனுஷனாநீ
இந்தியனா கூறு
கோரஸ்
ஆகச் சிறந்த தேசம் - இதில்
வாழ்வது சந்தோஷம்
ஆனா வாழ்க்கை நாசம் - மெல்ல
ஆகுது படுமோசம்
சரணம் 4
தமிழ்மறைய தெறந்து பாத்தா
வீர தீரம் தெறிக்கும் – உங்க
வன்முறைய தெறந்து பாத்தா
மானம் ரோசம் சிரிக்கும்
அன்புகாட்டு சக உயிர்மேல்
என்பதையும் படிச்சோம்
புலியக்கூட முறத்தைக்கொண்டு
தொரத்தி நாங்க அடிச்சோம்
ஒருத்தியோட கோபம் பொங்கி
மதுரை பத்தி எரிஞ்சது
ஒன்னுகூடி தமிழன் வந்தா
ஒங்க கதை முடிஞ்சது
கோரஸ்
ஆகச் சிறந்த தேசம் - இதில்
வாழ்வது சந்தோஷம்
ஆனா வாழ்க்கை நாசம் - மெல்ல
ஆகுது படுமோசம் !
Posted by
Manuneedhi - தமிழன்
at
8:54 PM
0
comments (நெற்றிக்கண்)
July 02, 2016
"வதம்" தமிழ் திரைப்பட படப்பிடிப்பின்போது
Posted by
Manuneedhi - தமிழன்
at
3:21 AM
0
comments (நெற்றிக்கண்)
November 03, 2015
இளைஞர்களுக்கு இதோ என் பதில்
"நேரத்திற்கு வீட்டுக்குப் போங்கள், சமைக்கக் கற்றுக்கொள்ளுங்கள், குறைந்த பட்சம் சமைக்கும் அம்மா அல்லது அப்பாக்களுக்கு உதவி செய்யுங்கள். பாத்திரம் கழுவுங்கள், ஜன்னல், கதவு, தொலைக்காட்சி, காலணிதாங்கி, பால்கனி போன்றவற்றை சுத்தம் செய்யுங்கள். வீடு முழுக்க அங்கங்கு கழன்ற நிலையில் இருக்கும் போல்ட்டுகளை சரி செய்யுங்கள். தனியாக உங்கள் துணிகளையும் சேர்த்து துவைக்கும் அம்மாவிடம் அவற்றை வாங்கி வெயிலில் உலர்த்துங்கள். வீட்டைச் சுற்றி செடிகள், புல் தரையிருப்பின் அவற்றுக்கு தண்ணீர் விடுங்கள். அதிகம் வளர்ந்துள்ள புல்லை வெட்டி சீராக்குங்கள். வாகனங்களை கழுவி சுத்தம் செய்யுங்கள். பரணியில் இருக்கும் பழைய புகைப்படங்களையும், புத்தகங்களையும் தூசி தட்டுங்கள். இரும்புப் பெட்டிக்குள் இருக்கும் தாத்தா பாட்டியின் வெற்றிலை பாக்கு இடிக்கும் உலக்கை - உரலை ஒருமுறை தட்டிப் பாருங்கள். தொடர்ந்து வாசிக்க 'க்ளிக்' செய்யவும்
Posted by
Manuneedhi - தமிழன்
at
10:31 PM
0
comments (நெற்றிக்கண்)
November 02, 2015
"பூங்காத்து திரும்புமா ? ஏம்பாட்ட விரும்புமா ?"
இந்த பாட்ட எப்ப கேட்டாலும், எனக்கு மனசுக்குள்ள ரொம்ப வலிக்கும். ஆமா ! எல்லாருக்குமேதான். ஆனா, எனக்கு கொஞ்சம் அதிகமாவே.....
கனத்த மனசையும், கண்ணீரையும் என்னால கட்டுப்படுத்த முடியறதில்ல. 1990-ன்னு நெனைக்கிறேன். இந்தப் படம் ரிலீஸ் ஆனது 1985-ன்னாலும், எங்க ஊருக்கெல்லாம் லேட்டாதான் படம் வரும், நல்ல படம்'னா அடிக்கடி திரையிடுவாங்க. சிவகங்கை ஸ்ரீராம் தியேட்டர் இப்போதைய ரவிபாலா. பொதுவா நடிகர் திலகத்தின் நடிப்பை அதிகம் சிலாகிச்சு பேசுற எங்க அப்பா, அவரு சின்ன வயசுல பாத்த படங்கள், ரசிச்ச பாடல்கள் எல்லாம் எனக்கு இப்பவும் அத்துபடி. கம்யூனிஸ்ட் இயக்கத்துல ரொம்ப தீவிரமா, பரபரப்பா இருந்த காலகட்டங்கறதால அதிகமா படங்கள் பாக்க மாட்டார். எனக்கு பள்ளி விடுமுறைன்னா எங்கப்பா கலந்துக்கற எந்த பொதுக்கூட்டம், போராட்டம், சாலை மறியலா இருந்தாலும் என்னையும் கூட்டிட்டு போறது வழக்கம். இரவு சிவகங்கைல ஒரு பொதுக்கூட்டத்துல பேசி முடிச்சுட்டு, நள்ளிரவாயிட்டதாலயும், அப்பதான் மழை பேஞ்சு விட்டிருந்ததாலயும், எங்க கிராமத்துக்கு பேருந்து போக்குவரத்து இல்லாததாலயும், இப்ப என்ன செய்யலாம்'னு கேட்டார். நான் படத்துக்கு போகலாம்'னு சொன்னேன். அப்போ சிவகங்கைல மூணு தியேட்டர்னு ஞாபகம். அதுல ஒரு தியேட்டர்ல "முதல் மரியாதை"னு சொன்னேன். படம் பாக்க அவருக்கு உடன்பாடு இல்லன்னாலும், எனக்காகவும், சிவாஜி கணேசன் படங்கறதாலயும் எங்கப்பா ஒத்துக்கிட்டாரு. போறதுக்கு முன்னாடி ரோட்டுக் கடைல ஆட்டுக்கறி தோசையும், ஆம்லேட்டும் சாப்பிட்ட ஞாபகம். மழை விட்டிருந்த நள்ளிரவும், அந்த மணமும் அப்பப்பா... இன்னிக்கும் என்னால உணர முடியுது. அப்பறம் சைக்கிள்ல தியேட்டருக்கு போனோம். தியேட்டருக்கு ஒரு நூறு அடிக்கு முன்னால சைக்கிள நிறுத்தினாரு. எங்கப்பா தோள்ல எப்பவும் கம்பீரமா காட்சியளிக்கும் சிவப்புத்துண்டு மடிக்கப்பட்டு அவருடைய சிவப்பு பேக்'குக்குள்ள ஐக்கியமானது. என்னப்பா'ன்னு கேட்டேன். "யாராவது தெரிஞ்சவங்க இருப்பாங்க, நான் பொதுவா இந்த மாதிரி எடத்துக்கெல்லாம் வர்றதில்ல இல்லயா?"ன்னாரு. ஒரு வழியா திரையரங்குக்குள்ள போயி, கடைசி சீட், எங்க தலைக்கு மேல ஆபரேட்டர் ரூம்ல இருந்து படம் வர்ற ரெண்டு துளைகள். எத்தனையோ படங்கள் ஊர்ல திரையிடும்போது சேந்து பாத்திருக்கோம். ஆனா தியேட்டர்ல அப்பாவோட சேந்து பாத்ததா எனக்கு ஞாபகம் இல்ல. அதுனால, இந்தப் படம் எனக்கு ரொம்ப ஸ்பெஷல். படம் பாத்திட்டுருக்கோம்.
"பூங்காத்து திரும்புமா ? ஏம்பாட்ட விரும்புமா ?" இந்த பாட்டு திரையில ஓடிட்டு இருக்கு. ஏதோ சரசர'ன்னு சத்தம். எங்கப்பா திடீர்னு எந்திரிச்சு ஆபரேட்டர் துளைக்கு பக்கத்துல செவுத்துல தட தடன்னு தட்டினாரு. லைட்டெல்லாம் போட்டுட்டாங்க. லைட் போட்டதால அணைக்கச் சொல்லி ஒரே விசிலும், சத்தமும் காத கிழிச்சது. எனக்கு ஒன்னும் புரியல. ஓரத்து சீட்டுல ஒக்காந்திருந்த எங்கப்ப எந்திரிச்சாரு. பக்கத்துல ஒருத்தர் கீழ கெடந்து துடிக்கிறார். கை கால் எல்லாம் வெட்டி வெட்டி இழுக்குது, சிமெண்ட் தரைல தேச்சு தேச்சு கை கால் எல்லாம் ரத்தம் ஒழுக ஆரம்பிக்கிது. திடீர்னு எங்கப்பா அவர அப்படியே அலேக்கா தூக்கிட்டு வெளியே போறாரு. லைட் எல்லாம் அணைச்சிட்டாங்க.... பாட்டு ஓடிட்டு இருக்கு. எனக்கு ஒன்னும் புரியல. நானும் எந்திரிச்சு அப்பா பின்னாடியே போறேன். அவர தூக்கிட்டுப் போன எங்கப்பா நேரா ஆபரேட்டர் ரூமுக்குள்ள போயி, ஏதோ ஒரு இரும்புக் கம்பிய கொடுத்து, அவர ஆசுவாசப்படுத்தி ஒக்காற வைக்கிறாரு. கொஞ்ச நேரத்துல கோலி சோடா, டீ எல்லாம் வருது.
ஆபரேட்டர் எங்கப்பாகிட்ட, "காக்கா வலிப்பு தோழர், நீங்க எப்படி இங்கே...?", "இப்பதான் பொதுக்கூட்டம் முடிஞ்சது. பஸ் இல்ல, தம்பி படம் பாக்கணும்னான். வந்தேன்.
"என்ன ஆச்சரியம் ! "பூங்காத்து திரும்புமா ? ஏம்பாட்ட விரும்புமா ?" மறுபடியும் ஓட ஆரம்பிச்சது. எனக்கு ஒரே சந்தோசம், தியேட்டருக்குள்ளயும் ஒரே சந்தோச விசில் மட்டும் குரல். அந்த லேசான முகம் தெரியிற வெளிச்சத்துல அப்பா முகத்த பாத்தேன். என்னைப்பாத்து அவர் சிரிச்ச அந்த அழகு முகம் இப்பவும் என் மனசுக்குள்ள நிக்கிது. ஒரு வழியா படம் பாத்துட்டு அங்கருந்து ஜெயவிலாஸ் பஸ்ல காளையார்கோயில் வந்து இறங்கி, நானும் என் அப்பாவும் ரத்தக்கறையோடும், மன நிறைவோடும் கிட்டத்தட்ட 15 கி.மீ சைக்கிள்ல வீடு வந்து சேந்தோம்.
அந்த சிவப்புக்கறையும், என் மனசுல பதிஞ்சிருந்த நிறைவும், இன்னிக்கு ஏற்பட்டிருக்கிற வலியும் எப்படி மறையும் ?
"பூங்காத்து திரும்புமா ? ஏம்பாட்ட விரும்புமா ?"
இசைஞானிக்கு என் நன்றி
Posted by
Manuneedhi - தமிழன்
at
2:15 AM
0
comments (நெற்றிக்கண்)
Labels: adhikaalai, athikalai, Navanee, Nawin, nawin seetharaman, அதிகாலை, சீதாராமன், சீத்தாராமன், நவநீ, நவின் சீதாராமன்
October 24, 2015
வணக்கம் உறவுகளே ! சவுகார்பேட்டை திரைப்படத்தில் நானும் நடித்திருக்கிறேன்
Posted by
Manuneedhi - தமிழன்
at
12:55 AM
0
comments (நெற்றிக்கண்)
October 21, 2015
திண்ணையில்... நானும் என் ஈழத்து முருங்கையும்
Posted by
Manuneedhi - தமிழன்
at
4:12 AM
0
comments (நெற்றிக்கண்)
Labels: அதிகாலை, அதிகாலை நவின், அதிகாலை நவீன், சென்னை நவின், நவநீ, நவின் சீதாராமன்
