December 16, 2007

கடிகார முட்களைப்போல் தி.மு.க.,வில் அழகிரி, ஸ்டாலின் செயல்பட கவிஞர் வைரமுத்து வலியுறுத்தல்

திருநெல்வேலி : கடிகாரத்தின் இரண்டு முட்களைப்போல ஸ்டாலினும் அழகிரியும் இணைந்து செயல்பட வேண்டும் என நெல்லை தி.மு.க.,இளைஞரணி மாநாட்டில் நடந்த காவியக்கலைஞர் நிகழ்ச்சியில் கவிஞர் வைரமுத்து வலியுறுத்தினார். அவர் மேலும் பேசியதாவது: இந்த மாநாட்டுக்கு வந்துள்ள இளைஞர்களின் கட்டுப்பாட்டை பார்த்து மகிழ்ந்து வியந்தேன். தமிழகத்தில் பிறந்ததுபாயும் ஒரே நதி தாமிரபரணி. அத்தகைய சிறப்பு பெற்ற நெல்லையில் இந்த மாநாடு நடத்துவதுசிறப்பானதாகும். கருணாநிதியின் தாயார் சிந்திய கண்ணீர், கருணாநிதியின் வியர்வை, ஸ்டாலின் வடித்த ரத்தம் என மூன்று தலைமுறை தியாகங்கள் இந்த இயக்கம் வலுப்பெற்றுள்ளது. கருணாநிதி ஒரு அபூர்வகலவை. ஒரு நாவலாசிரியராக இருந்து 15 நிதிநிலை அறிக்கைகளை தாக்கல் செய்துள்ளார். 1969-70களில் அவர் தாக்கல் செய்த பட்ஜெட் மதிப்பு 280.91 கோடி. 2007ல் அவர் தாக்கல் செய்த 15வது பட்ஜெட்டின் மதிப்பு ரூ 46 ஆயிரத்து 592 கோடிஆகும். தனிமனிதர் போனால் இயக்கம் அழிந்துவிடாது. இந்த இயக்கம் இன்னும் நுாற்றாண்டுக்குதொடர வேண்டும். ஒரு கடிகாரத்திற்கு சிறிய முள், பெரிய முள் தேவை. இரண்டு முட்களும் இல்லையென்றால் நேரத்தை காட்ட முடியாது. ஸ்டாலினும், அழகிரியும் இரண்டு முட்களைப்போல இந்த இயக்கத்திற்கு தேவை. திராவிட இயக்கத்தின் மீதுஆசை உள்ளவன் என்ற முறையில் இதனை கேட்டுக்கொள்கிறேன். இந்த மாநாடு புதிய தலைமுறைகளை உருவாக்கும் மாநாடாக மாற வேண்டும் என்றார்

No comments: