December 16, 2007

ஹைக்கூ கவிதைகள்

1.வாழ்க்கைச் சுமைகளை
வரிசையாகச் சுமக்கும்
ஏழை விவசாயி….

குட்ஸ் வண்டி

2.வண்டுக் காதலனைக் கண்டதும்
மலருக்குப் பதட்டம்
வியர்வையாய்….

பனித்துளிகள்

3.அழுதவானம் எழுதிப்பார்க்கும்
அந்தரங்க வரிகள்….

நீரோடை

4.இந்தியத் தாயின்
இறுதிக் கண்ணீர்த்துளி....

இலங்கை

5.சொந்தமண்ணிலிருந்து
துரத்தப்பட்ட அகதி
துடுப்பற்ற பரிசல்

பிறைநிலா


வார்ப்பு.காம்-ல் எனது கவிதைகள்http://www.vaarppu.com/view.php?poem_id=949

No comments: