June 29, 2007

இன்றைய குறள்

நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்

சான்றோர்களின் பெருமையை, இந்த உலகில் அழியாமல் நிலைத்து நிற்கும் அவர்களது அறவழி நூல்களே எடுத்துக்காட்டும்

அறத்துப்பால் : நீத்தார் பெருமை

June 28, 2007

சேதி வந்தது : சிறுகதை - வாஸந்தி

அடுப்பில் அரிசியும் பருப்பும் சேர்ந்து வெந்ததும் கனகம்மா தயாராக இருந்த புளிக்குழம்பை அதில் ஊற்றி நன்றாகக் கலக்கினாள். கொப்பரையுடன் கூடிய மசாலாக் குழம்பின் வாசனை மிகச் சரியான பதத்தில் இருப்பதைக் கண்டு திருப்தி ஏற்பட்டது. எல்லாம் சேர்ந்து கொதித்து சுருளும்போது இறக்கி நெய்யில் கடுகையும் முந்திரிப்பருப்பையும் ஒரு பிடி கருவேப்பிலையும் தாளித்துப் மேலாகப் பரப்பியபோது ரமணா இதைச் சாப்பிட வந்தே ஆகவேண்டும் என்று தோன்றிற்று. அவனுக்குப் பிடித்த சேமியா பாயசம் தயாராகியிருந்தது.சேமியாவுடன் நான்கு கிராம்பையும் நெய்யில் வறுத்து பாலில் வேகவிடவேண்டும் அவனுக்கு.சாப்பாட்டில் அத்தனை வக்கணைப் பேசும் பிள்ளை. இதையெல்லாம் மறந்திருக்கமுடியாதுமைன்று காலை எழுந்திருக்கும்போது கனகம்மாவுக்குக் காரணம் புரியாமல் மனசு பரபரத்தது. நேற்று பின்னிரவிலோ இல்லை இன்று விடியலிலோ கண்ட கனவின் நினைவு ரம்யமாக மனசில் அமர்ந்திருந்தது.கனவு வீட்டில் கல்யாணக்களைக் கட்டியிருந்தது.தோரணமும் விளக்குகளுமாக.ரமணா கழுத்தில் மாலையுடன் நின்றான்.கனவு கலைந்த பிறகும் அந்தக் கனவுக் காட்சியில் அவள் மீண்டும் மீண்டும் திளைக்க முயன்றாள்.Please click the link
Thinnai

என்று மாறும் இந்த அவலம்??

ஒரு சினிமாவை எப்போது மனிதன் சினிமாவாகப் பார்க்கிறானோ அப்போதுதான் நமது தேசம் முன்னேறும். இன்றும் இப்படிப்பட்ட பரிதாபத்திற்குரிய பைத்தியக்காரர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

இங்கு அமெரிக்காவில் 'சிவாஜி' பார்க்க வந்த அனைவருக்கும் ஒருவர் பொங்கல் வழங்கினார் என்றால் பாருங்கள்! திரைகடலோடியும் திரவியம் தேடச்சொன்னால், இவர்கள் தியேட்டர் வாசலில் பொங்கல் வழங்குகிறார்கள். படித்த மேதாவிகளே இப்படி என்றால், பாவம் பாமரன் என்ன செய்வான்?

காலையிலிருந்து இரவுவரைக் கணவனின் வரவை நோக்கி பற்றவைத்த அடுப்போடு காத்துக்கிடக்கும் மனைவி, தந்தையின் மடிபார்த்து தட்டோடு காத்துக்கிடக்கும் குழந்தைகளை விட்டு திரையரங்கு வாசலிலும், வானவேடிக்கையிலும் தன்னை மறந்து திரியும் தமிழா! உன்னுடைய வியர்வையை வெள்ளிப்பணமாக்கி உயர்ந்த சினிமா நட்சத்திரங்களையும், அரசியல்வாதிகளையும் என்று நீ புறக்கணிக்கிறாயோ! அன்றுதான் தரணிபோற்றும் தமிழ் மண்ணில் ஏழ்மை மறையும்.
ஃப்ளாட்பாரங்களில் வாழ்க்கை நடத்தும் எனதருமைத் தோழனே! அடை மழைவந்தால் குழந்தை குட்டிகளோடு, பெட்டி, படுக்கையோடு எங்கே ஒதுங்குவதென்று சிந்தித்தாயா? உயரத்தில் இருக்கும் கூட்டத்தை உயர உயர உயர்த்திவிட்டு என் தோழனே நீ பாதாளம் நோக்கிப் பயணப்பட்டுக்கொண்டிருக்கிறாயே! என்று மாறும் இந்த அவலம்?

"சிவாஜி" பற்றி சங்கரின் நேர்முகம் 1


"சிவாஜி" பற்றி சங்கரின் நேர்முகம் 2

"சிவாஜி" பற்றி சங்கரின் நேர்முகம் 3

"சிவாஜி" பற்றிய "ரஜினி"யின் நேர்முகம்

திருமாவளவன்

முறுக்கிய மீசையுடன் முஷ்டி மடக்கி கர்ஜிக்கிறார். துப்பாக்கியால் எதிரியை குறி பார்க்கிறார். இரத்தம் வழியும் உடையுடன் கண் சிவக்கிறார். இவையெல்லாம் 'கலகம்' படத்துக்காக சிறுத்தைகளின் தலைவர் திருமாவளவன் காட்டும் திருமுகங்கள். இநதப் படத்தில் பாலசிங்கம் என்ற பேராசிரியராக நடிக்கிறார். ஏற்கனவே இவர் நடித்த 'அன்பு தோழி' சிக்கலில் உள்ளது. புலிகள் ஆதரவு பேச்சு மற்றும் காட்சிகள் இருப்பதாக சான்றிதழ் தர மறுக்கிறது சென்ஸார். இந்நிலையில் 'கலகம்' படத்தில் இவரது பெயர் பாலசிங்கம். புலிகளின் அரசியல் ஆலோசகர் மறைந்த ஆண்டன் பாலசிங்கத்தின் பெயர். Please click the link http://www.tamilbird.com/June'07/230607thiruma.html

Secret behind Rajini's colour

If you have watched Sivaji..You have observed the fair complexion of Rajinikanth in the song Oru Koodai Sunlight. Everyone thought it was make-up that made Superstar Rajinikanth look like a European in that song, but the secret is about a year of computer graphics.

"We used cutting edge grafting technology and it was Shankar's brain child," revealed the film's cinematographer KV Anand. "For the first time grafting technology has been used for an Indian film which was made possible by a Chennai based company Indian Arts who had worked in Shankar's earlier films," he said.

One of the dancers, Jacky, was chosen by Shankar and Rajini's skin tone was matched with her's. The six and a half minute song was shot in Spain. "Each shot of Rajni's in the song was once again shot with Jacky and was sent to Indian Arts.


Since the lighting varies in indoor and outdoor, to match the skin tone, expressions, lip and body movements of the two was a challenging task,"
explained Anand. A total of 6700 frames were been for post production. Rajinikanth himself was amazed after watching the song.

தமிழோசை

இன்றைய "BBC" (ஜுன் 28 வியாழக்கிழமை) செய்தி கேட்க இணைப்பை அழுத்துக BBCTamil.com Radio Player

கன்னியாகுமரி கடலோரக் கடலரிப்பு பற்றிய ஒரு பதிவு

இன்றைய குறள்

சுவையொளி ஊறோசை நாற்றமென் றைந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு

ஐம்புலன்களின் இயல்பை உணர்ந்து அவற்றை அடக்கியாளும் திறன் கொண்டவனையே உலகம் போற்றும்

அறத்துப்பால் : நீத்தார் பெருமை

வைத்தியத்திலேயே இரண்டு முறை சொல்வார்கள்
1 - Physicians Cure. 2 - Surgeons Cure. அதாவது மருந்து கொடுத்து வியாதியை சொஸ்தப்படுத்துவது ஒருமுறை. கத்தியைப் போட்டு அறுத்து ஆபரேஷன் செய்து நோயாளியைப் பிழைக்க வைப்பது இன்னொரு முறை. என்னைப் பொறுத்தவரையில் நான் நோயாளி செத்துப் போனாலும் பரவாயில்லை, நோய்க்குக் கஷ்டமில்லாமல் மருந்து மட்டுமே கொடுத்து சொஸ்தப்படுத்தலாம் என்று கருதுபவன் அல்ல. நோயாளிக்குக் கஷ்டம் ஏற்பட்டாலும் பரவாயில்லை, அவன் சாகக்கூடாது என்று கருதி அறுத்து ஆபரேஷன் செய்யும் இரண்டாவது முறையில் நம்பிக்கை உள்ளவன். எனது இலட்சியமெல்லாம் கஷ்டமாக இருந்தாலும் ஆள் பிழைக்க வேண்டுமே என்பது தான். நம்முடைய தோல் அப்படி லேசான தோல் அல்ல. 2 000- 3,000 வருஷங்களாக தடித்துப்போன கெட்டியான தோல். அதில் உறைக்க வேண்டுமென்றால் சிறிது கடினமாகத்தான் சொல்லியாக வேண்டும். உங்கள் நாட்டு மக்களைப் பாருங்கள்! உலகத்தையும் பாருங்கள்!சிந்தியுங்கள்! பரிகாரம் தேடுங்கள்!

- பெரியார் "குடிஅரசு"- 1947

June 27, 2007

from
"The most selfish one letter word"
to
"The most essential Ten-letter word"
.....................
இணைப்பை அழுத்துக

அன்னியன் யார்?

என்னை அடிமை என்பவனும், வைப்பாட்டி மகன் என்பவனும், கிட்டே வரவேண்டாம் - தொட வேண்டாம் என்பவனும், நான் தொட்டதை சாப்பிட்டால் - என் எதிரில் சாப்பிட்டால் நரகம் என்பவனும் அன்னியனா?அல்லது - "உனக்கும் எனக்கும் தொட்டாலும் பரவாயில்லை, நாம் எல்லோரும் சமம் தான்" என்று சொல்லுகின்றவன் அன்னியனா? என்பதை யோசித்துப் பாருங்கள்
- பெரியார்

இது 13 வது சட்டமன்றத் தேர்தல். மீண்டும் வாக்களிக்கப் போகிறீர்களா? ஒரு முறை ஏமாறுவது மனிதனுக்கு இயல்பு; இரண்டு முறை ஏமாறுபவன் ஏமாளி; மூன்று முறை ஏமாந்தால் அவனை முட்டாள் என்றும் சொல்லலாம்.12 முறை ஏமாற்றப் பட்டபிறகும் சொரணையில்லாமல் பல்லிளித்துக் கொண்டு ஓட்டுப் போடச் செல்பவர்களை என்ன பெயரிட்டு அழைப்பது?

அப்பன், பாட்டன், கொள்ளுப்பாட்டன் என்று மூன்று தலைமுறைகள் ஏமாந்த பிறகும் புத்தி வராமல்,''அன்பார்ந்த வாக்காளப் பெருமக்களே" என்ற சத்தம் கேட்டவுடனே நான்காவது தலைமுறையும் ஓடுகிறது; மசால் வடைக்கு மயங்கும் எலியைப்போல வாக்குச்சாவடியின் முன்னால் வரிசையில் நிற்கிறது. இந்த மானக்கேட்டை யாரிடம் சொல்லி அழுவது?

தேர்தல் என்ற அறிவிப்பு வந்தவுடன் கரண்டு கம்பத்தைக் கண்டால் காலைத்தூக்கும் தெருநாயைப் போல, தானாக வந்து ஓட்டுப் போடுவான் என்று நம்மைக் கேவலமாக நினைக் கிறார்களே ஓட்டுப் பொறுக்கிகள், இந்த அவமானத்திற்கு எப்போதுதான் முடிவு கட்டுவது?

பழனிக்கும் திருப்பதிக்கும் மொட்டை போடும் பக்தன் கூட தன்னுடைய நம்பிக்கைக்கு ஒரு விளக்கம் சொல்கிறான். 'இந்தச் சாமிக்கு நேர்ந்து கொண்டால் இது நடக்கும்" என்று நம்பவும் செய்கிறான். ஆனால் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை வாக்குச் 'சாவடியில்'தவறாமல் மொட்டை போட்டுக் கொள்ளும் வாக்காளனுக்கோ இந்தத் தேர்தலின் மீது அப்படியொரு நம்பிக்கை கூடக் கிடையாது.

'எவன் வந்தாலும் விலைவாசி குறையப் போவதில்லை, விவசாயம் விளங்கப் போவதில்லை, வேலை கிடைக்கப் போவதில்லை, லஞ்சம் ஒழியப் போவதில்லை, ஊழல் குறையப் போவதில்லை" என்று ஆணித்தரமாகப் பேசுகிறான். 'அப்புறம் எதற்காக ஓட்டுப் போடுகிறாய்?" என்று கேட்டால், 'வேறென்ன செய்ய முடியும்?" என்று எதிர்க் கேள்வி கேட்கிறான். வாக்குரி மையை 'வேஸ்ட்' க்காமல் யாராவது ஒரு திருடனுக்குக் காணிக்கையாகச் செலுத்திவிட வேண்டுமென்று துடிக்கிறான்.

'ஓட்டுப் போடவில்லையென்றால் செத்ததுக்குச் சமமாமே" என்று பாமரத்தனமாகச் சிலர்அஞ்சுகிறார்கள். இது உண்மை யென்றால் மன்மோகன்சிங் செத்த இடத்தில் புல் முளைத்திருக்க வேண்டும். 3 தேர்தலாக ஓட்டுப்போடாத மன்மோகன்சிங் தான் இந்த நாட்டின் பிரதமர். தேர்தல் ஒரு நாடகம் என்றும் எவன் ஜெயித்தாலும் அந்த ஆட்சி நம்ம ஆட்சிதான் என்றும் தெளிவாகப் புரிந்து வைத்திருக்கும் டாடா பிர்லா போன்ற பெரு முதலாளிகள் முதல் உள்ளூர்ப் பணக்காரர்கள் வரை யாரும் எப்போதும் ஓட்டுப் போடுவதில்லை. கொளுத்தும் வெயிலில் வரிசையில் நின்று இந்த 'ஜனநாயகத்தை'க் காப்பாற்றுவது பாமரமக்கள்தான்.
ஏனென்றால், 'தேர்தலைப் புறக்கணித்து விட்டால் இருக்கின்ற ஒரே ஒரு பிடியையும் நாம் இழந்துவிடுவோம். ஜெயலலிதா சரியில்லை என்றால் கருணாநிதியைக் கொண்டு வரலாம், சோனியா சரியில்லை என்றால் வாஜ்பாயியைக் கொண்டு வரலாம். புறக்கணிப்பதன் மூலம் என்ன சாதித்து விடமுடியும்? வேறென்ன வழி இருக்கிறது?"என்று எண்ணுகிறான் வாக்காளன்.தேர்தல் தோல்வி என்பது ஓட்டுப் பொறுக்கிகளுக்கு விதிக்கப்படும் தண்டனை அல்ல, இன்று தோற்றாலும் நாளை நாம்தான் என்று ஐந்தாண்டுகள் அவர்கள் ஓய்வெடுத்துக் கொள்கிறார்கள். ட்சிக்காலத்தில் அடித்த கொள்ளையை அனுபவிக்கிறார்கள். தத்தம் தொழிலை அபிவிருத்தி செய்துகொள்கிறார்கள். ஐந்தாண்டுகளுக்குப் பின் மீண்டும் அரியணை ஏறுகிறார்கள்.

'மக்களுக்குத்தான் இதை விட்டால் வேறு வழியில்லை" என்ற சலிப்பு! ஓட்டுக் கட்சிகளுக்கோ 'நம்மை விட்டால் மக்களுக்கு வேறு நாதி இல்லை" என்ற இறுமாப்பு!தேர்தலைப் புறக்கணிக்க மக்கள் தயங்கலாம். ஆனால் மக்களின் இந்தக் கையறு நிலையைப் பயன்படுத்திக் கொண்டுதான் கடந்த 50 ஆண்டுகளாக இந்த நாட்டின் பெரும்பான்மை மக்களை மிகவும் அலட்சியமாகப் புறக்கணித்து வருகிறது தேர்தல் அரசியல்.

தொடர்ந்து நம்மைப் புறக்கணித்து வரும் இந்தப் போலி ஜனநாயகத் தேர்தலை நாம் ஏன் புறக்கணிக்க மறுக்கிறோம் என்பதுதான் எங்களது கேள்வி.வாக்காளர்களா, பிச்சைக்காரர்களா?

'கலர் டிவி, கிலோ 2 ரூபாய்க்கு அரிசி, 2 ஏக்கர் நிலம்" என்று வாக்குறுதி தருகிறார் கருணாநிதி.
'இலவச சைக்கிள் கொடுத்தேன், பாடநூல் கொடுத்தேன், வெள்ள நிவாரணம் கொடுத்தேன், கோயிலில் அன்னதானம் போட்டேன், இலவசத் திருமணம் நடத்திவைத்தேன்" என்று சாதனைப் பட்டியல் படிக்கிறார் ஜெயலலிதா.
'மாதம் 15 கிலோ அரிசி இலவசமாகத் தருகிறேன், அதையும் வீட்டுக்கே கொண்டு வந்து தருகிறேன், கல்யாணம் பண்ணி வைத்து பிள்ளை பெத்தால் அதற்கும் பணம் கொடுக்கிறேன்" என்கிறார் நடிகர் விஜயகாந்த்.

இந்த வாக்குறுதிகளைப் படிப்பவர்கள், தமிழ்நாட்டு மக்களில் பெரும்பாலானோர் பிச்சைக்காரர்கள் என்ற முடிவுக்குத்தான் வரமுடியும். இப்படி எல்லாவற்றையும் இலவசமாக அள்ளி அள்ளிக் கொடுத்தால் அரசாங்க கஜானாவே காலியாகி விடுமென்று ஆத்திரம் பொங்க பத்திரிக்கைகளில் எழுதுகிறார்கள் திமிர் பிடித்த மேட்டுக்குடி அறிவாளிகள்.

யாருடைய பணத்திலிருந்து நமக்கு இந்த 'இலவசங்களை' வழங்குகிறார்கள் ஓட்டுப் பொறுக்கிகள்? அரசாங்க கஜானாவில் சேரும் வரிப்பணத்தில் கப்பெரும்பகுதி ஏழை- நடுத்தர மக்கள் கொடுக்கும் மறைமுக, நேர்முக வரிப்பணம்தான். ஏழை களின் வரிப்பணத்திலிருந்து ஏழைகளுக்குச் செலவிடுவதை 'இலவசம்' என்று எப்படி அழைக்க முடியும்?

இலவச சைக்கிளுக்கு 83 கோடி, பாடநூலுக்கு 113 கோடி, சத்துணவுக்கு 850 கோடி, உழவர் பாதுகாப்புத் திட்டத்துக்கு 300 கோடி - என்று பட்டியல் படிக்கிறார் ஜெயலலிதா.

போர்டு, ஹண்டாய், கோகோ கோலா போன்ற பன்னாட்டு நிறுவனங்களுக்கு நிலமும், தண்ணீரும், மின்சாரமும், சாலை வசதிகளும் செய்து கொடுத்து அவர்களுக்கு வரிச் சலுகை களையும் வாரி வழங்கியிருக்கிறது ஜெ அரசு.
மக்களுடைய வரிப்பணத்திலிருந்து பன்னாட்டு முதலாளிகள் ஒவ்வொரு வருக்கும் எத்தனை ஆயிரம் கோடி சலுகைகள் வழங்கப்பட்டிருக்கின்றன என்ற இரகசியத்தை ஜெயலலிதா வெளியிடுவாரா? 'முதலாளிகளுக்கான இலவசத் திட்டங்கள்' என்று இவை அழைக்கப் படுவதில்லையே, ஏன்?

இளம்பாடகர் ரஞ்சித் நேர்முகம் பகுதி I

இன்றைய குறள்

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்

பெருமை தரும் செயல்களைப் புரிவோரைப் பெரியோர் என்றும், சிறுமையான செயல்களையன்றிப் பெருமைக்குரிய செயல்களைச் செய்யாதவர்களைச் சிறியோர் என்றும் வரையறுத்துவிட முடியும்

அறத்துப்பால் : நீத்தார் பெருமை

'தமிழோசை'

இன்றைய "BBC" (ஜுன் 27 புதன்கிழமை) செய்தி கேட்க இணைப்பை 'க்ளிக்' செய்க BBCTamil.com Radio Player

June 26, 2007



  • சினிமா தமிழை விட்டு விலகி பல காலமாகிவிட்டது.
  • இன்றைய புலம்பெயர்ந்த எழுத்தாளர்கள் மற்ற எழுத்தாளர்களால் எழுத முடியாதவைகளை எழுதும் வாய்ப்புகள் உண்டு. அதை அவர்கள் எழுதவேண்டும். தமிழ்ச் சமூகத்தைப்பற்றி மட்டுமே எழுதவேண்டுமென்ற அவசியமில்லை. மற்றைய சமூகத்தவர் எதிர்நோக்கும் பிரச்சனைகள் பற்றிக்கூட எழுதலாம். அந்தவகையில் அவர்கள் நல்ல படைப்புகளை உருவாக்கவேண்டும். மேலும் தொடர்ந்து படிக்க இணைப்பைக் 'க்ளிக்' செய்யவும் http://www.nilacharal.com/tamil/specials/tamil_malan_192.html

கர்ணனாக, வீரபாண்டிய கட்டபொம்மனாக, வ.உ.சியாக, நெற்றிக்கண் காட்டும் சிவனாக, தமிழக பராம்பரியக் கலையின் நாயகன் சிக்கல் சண்முகசுந்தரமாக, பிரிஸ்டிஜ் பத்மனாபனாக, பாரிஸ்டர் ரஜினிகாந்தாக, முதல் மரியாதை பெரிசாக திரையில் வாழ்ந்து காட்டிய அந்த மகா கலைஞனுக்கு, ஏதாவது ஒரு விஷயத்திலாவது இப்படம் மரியாதை செலுத்தியுள்ளதா? அல்லது வெறும் கவர்ச்சிக்காக அவரது பெயர் பயன்படுத்த்ப் பட்டுள்ளதா?
நாம் அனைவரும் நினைப்பதுபோல், அந்த மாபெரும் கலைஞன் 'சிவாஜி' பெயரைப் பயன்படுத்தியதாக எனக்குத்தெரியவில்லை. இவரின் இயற்பெயர் கூட 'சிவாஜிராவ்' தானே. அதைத்தான் உபயோகித்திருப்பார். மேலும் தொடர்ந்து படிக்க இணைப்பைக் 'க்ளிக்' செய்க Thinnai

எங்கே போகிறோம்?

நாய்க்கும், "மொபைல்' போன் வந்து விட்டது. அமெரிக்காவில் இது பிரபலமாக உள்ளது. நாயின் கழுத்தில் பட்டை போல இதை அணிவித்து விட்டால் போதும்... நாய் எங்கு ஓடினாலும், அதனுடன் பேசலாம். என்னவெல்லாம் கண்டுபிடிக்கின்றனர் பாருங்கள்... ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது. அமெரிக்காவில் சான்பிரான்சிஸ்கோ பகுதியை சேர்ந்த விஞ்ஞானி கேமரூன் ராப் என்பவர் தான் இந்த, "நாய் மொபைல்' கண்டுபிடித்துள்ளார். நாய் மொபைல் போனுக்கு பெயர், "ஜியோ போன்" கழுத்துப்பட்டை போலத்தான் இருக்கும். இதை நாயின் கழுத்தில் அணிவித்து விட்டால், போதும், அப்புறம் , நாய் எங்காவது நம்மை விட்டுச்சென்று விட்டால், நாம் அதை மொபைலில் கூப்பிட்டு பேசலாம் அதன் பாஷையில். இந்த மொபைல் போனில், பல வசதிகள் உள்ளன. இரண்டு வழி ஸ்பீக்கர் உள்ளது. போனில் எஜமான் கூப்பிட்டால், அவர் பேசும் நாய் பாஷைக்கு, நாய் பதில் சொல்லும். போனில் எஜமானன் குரல் கேட்டவுடன், அவர் கட்டளையை கேட்கும். இந்த போனில், ஜி.பி.எஸ். என்ற செயற்கைக்கோள் இணைப்புடன் கூடிய இடத்தை காட்டும் கருவி வசதி உள்ளதால், நாய் எங்கு போனாலும், அது போன இடத்தை துல்லியமாக ஜி.பி.எஸ். கண்டுபிடித்து கொடுத்துவிடும். போனில் உள்ள திரையில், எஜமான், தன் நாயை , காணலாம். அதன் மூலம், நாயை பின்தொடர்ந்து சென்று பிடிக்கவும் முடியும். இப்போது அமெரிக்காவில் உள்ள பலரும் இந்த நாய் மொபைல் வாங்கி வைத்திருக்கின்றனர். அவர்களுக்கு நாயை கண்டு பிடிப்பதில், இது மிகவும் சவுகரியமாக உள்ளது. இந்த நாய் மொபைல் போன் பயன்படுத்தும் நாய் பயிற்சியாளர் ஹாரிஸ் கூறுகையில், "நாயை "வாக்கிங்' அழைத்துப் போகும் போது, அது எங்காவது ஓடினால், அதை கண்டுபிடிக்க, கட்டளை போட இந்த போன் உதவும்!' என்கிறார்.

தமிழோசை

கடல் தளத்தின் மீது சீனா 36 கி.மீ. நீளமுள்ள பாலம் கட்டிச் சாதனை படைத்துள்ளது. நம்மூரில் 16 வயதுப் பையன் 'சிசேரியன்' அறுவை சிகிச்சை செய்ததையும் சாதனை வரிசையில் சேர்த்துக்கொள்ளலாமா? உலகிலேயே மிகப்பெரிய அமெரிக்க அனுசக்திக் கப்பல் சென்னைத் துறைமுகத்தில் நிறுத்தலாமா? நிறுத்தக்கூடாதா? தமிழக அரசியல் கட்சிகள் போர்க்கொடி. இன்றைய "BBC" தமிழோசை செய்தி (ஜுன் 26 செவ்வாய்க்கிழமை) கேட்க கீழுள்ள இணைப்பை 'க்ளிக்' செய்யவும். BBCTamil.com Radio Player

த்யான் விமல் நேர்முகம்

மனிதன் சந்தோசத்தை மட்டுமே தேடுகிறான். ஆனால் கஷ்டத்தை?
S'ness to Life


நாலடியார்

1. அறத்துப்பால்

1.3 யாக்கை நிலையாமை

கேளாதே வந்து கிளைகளாய் இல்தோன்றி
வாளாதே போவரால் மாந்தர்கள் - வாளாதே
சேக்கை மரன்ஒழியச் சேண்நீங்கு புள்போல
யாக்கை தமர்க்கொழிய நீத்து.

- சமண முனிவர்கள்
தமிழ் விளக்கவுரை

அழையாது தோன்றி செழுமையான உறவுகளை உண்டாக்கி, நிலையாது மறைந்து போகும் மனிதர்காள், தான் கட்டிய கூட்டை விட்டுப் பறந்து தூர இடம் போகும் பறவை போல தன் உடலை விட்டு, உறவுகளிடம் சொல்லாது மறைந்து போவார்.


- ஆதியக்குடியான்


ஆங்கில விளக்கவுரை

Men come into the world unasked for, appear in the house as relations and quietly depart, as the bird which goes far off, its nest-tree being forsaken, leaving their body without saying a word to relatives.


by Rev.F.J.Leeper, Tranquebar

இன்றைய குறள்

ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி

புலன்களை அடக்க முடியாமல் வழிதவறிச் சென்றிடும் மனிதனுக்குச் சான்றாக இந்திரன் விளங்கி, ஐம்புலன்களால் ஏற்படும் ஆசைகளைக் கட்டுப்படுத்தியதால் வான்புகழ் கொண்டவர்களின் ஆற்றலை எடுத்துக் காட்டுகிறான்

அறத்துப்பால் : நீத்தார் பெருமை

பாமரரின் ஞானசூனியம்,
சுயநலக்காரனின் எதிர்ப்பு -
என்னும் இரண்டு பெரிய விரோதிகளைக் கண்டு
கலங்காமல் வேலை செய்வோரே!!!
இனிவரும் உலகச் சிற்பிகளாக முடியும்.



- பெரியார்

June 25, 2007

மாவீரர் நாளன்று திரு.பிரபாகரனின் உரை

கவிஞர் ரமணன்

பாரதி யார்?

கவிஞர் புகாரி பற்றி கவிஞர் ரமணன்
எழுதாத போது எவன் கவிஞனோ அவன்தான் எழுதும்போதும் கவிஞன்
ஒரு கவிஞனுக்குத் திருப்தியென்பது அவன் சாவுதான்

"சிங்கை இக்பால்"

புத்தகத்திற்கு

'நூல்' என்று பெயர்
வைத்தவர்கள்
புத்திசாலிகள்
ஒன்று
கிழிந்த துணிகளைத்
தைக்கிறது
மற்றொன்று கிழிந்த
மனிதர்களைத் தைக்கிறது
தமிழ்க் கவிஞர் "சிங்கை இக்பால்" அவர்களின் நேர்முகம் படிக்கத் தயவுசெய்து இணைப்பை அழுத்துகTamil magazine Tamil news,poem,story,movie & song reviews

தமிழோசை

இன்றைய "BBC" (ஜுன் 25 திங்கட்கிழமை) 16 வயது சிறுவன் "சிசேரியன்" செய்த அவலம் பற்றிய செய்தி கேட்க கீழுள்ள இணைப்பை அழுத்தவும்.
BBCTamil.com Radio Player

சிவா என்ற ஒரு இணைய நண்பர் கேட்ட கேள்விக்கு நான் அளித்த பதில்கள்
1. கல்யாணம் அவசியமா?
வாழ்க்கையில் கஷ்டம் என்றால் என்ன என்பதை அறியாமலேயே இருக்க உங்களுக்கு ஆசையா?

2. நீங்கள் அடிக்கடி செல்லும் ஒரு இடம்? ஏன்?
கோவில். கல்யாணம் ஆகிவிட்டதே!
3. உங்கள் வீட்டில் நாய், பூனை ஏதாவது?
எனக்குத் தெரிந்து ஒன்றே ஒன்று இருக்கிறது
4. நீங்கள் அடிக்கடி விரும்பாமல் உண்ணும் உணவு?
எப்போதாவது விரும்பி உண்ணுவது

5. வித்யாசமான அனுபவம்?

நான், நீங்கள் சந்தித்துக் கொள்ளாமலே இப்படி இணையம் வழியாகப் பேசிக்கொள்வது

6. தவறான பஸ்ஸில் நுழைந்த அனுவபம்?

இல்லை, தவறாக நுழைந்திருக்கிறேன். ஆனால் தவறான பஸ் என்பது இதுவரை நான் கண்டதில்லை

நாளைக்கு வேண்டும் என்று தேடும் -

தன்னம்பிக்கையற்ற தன்மையும்,

எவ்வளவு கிடைத்தாலும் போதாது என்கின்ற ஆசையும்,

அடிமைத்தனமும், மனிதனின் இயற்கைத் தடைகள்


- பெரியார்

யார் குற்றம்?

இந்தக் கணினி யுகத்தில் நாம் எங்கே போய்க்கொண்டிருக்கிறோம்?

  • மாதவிலக்கு என்பது அவ்வளவு பெரிய குற்றமா?
  • 10 வயதுப் பெண்ணை 50 வயது ஆண் திருமணம் செய்வதும்,
  • 40 வயதுப் பெண் 10 வயது ஆண்களைத் திருமணம் செய்துகொள்வதும்,
  • யார் யாரிடம் வேண்டுமானாலும் போகலாம்

என்ற ஒரு கலாச்சாரம் நமது பாரம்பரியம் மிக்கத் தமிழ்க் கலாச்சாரத்தில், நமது தமிழ்நாட்டில், கரூர் பக்கத்திலுள்ள ஒரு கிராமத்தில் இன்றும் நடந்து கொண்டிருக்கிறது என்பதைக் கேட்கும்பொழுது உங்களுக்கு மட்டுமல்ல எனக்கும்
தலைசுற்றுகிறது.

  • இவர்களையெல்லாம் சுட்டுத்தள்ள வேண்டாமா?
  • இது எப்படி இத்தனை காலம் நமக்குத் தெரியாமல் போனது??

தொடர்ந்து இந்த அவலத்தைப் பார்க்க இந்த வீடியோவைப் பார்க்கவும். உங்களைப் போலவே நானும் ஆயிராமாயிரம் கேள்விகளுடனும், அதிர்ச்சியுடனும்.......


ப்ரசாந்த் vs கிரகலட்சுமி : ஸ்ரீகாந்த் vs வந்தனா

கடைசிவரைக் கதையைச் சொல்லாமல் வைத்திருந்ததற்குக் காரணம் படத்தில் "கதை என்ற ஒன்றே இல்லை" என்பதுதான் என்று பலர் பலவாறு பேசினாலும் பாடல்கள் கேட்கும்படியாக உள்ளதால் உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்.
"சிவாஜி" பாடல்கள் கேட்க கீழுள்ள "செயலி"யைப் பயன்படுத்திப் பாடல்களைக் கேட்கவும்
Powered by eSnips.com

இன்றைய குறள்

உரனென்னுந் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்து


உறுதியென்ற அங்குசம் கொண்டு, ஐம்பொறிகளையும் அடக்கிக் காப்பவன், துறவறம் எனும் நிலத்திற்கு ஏற்ற விதையாவான்

அறத்துப்பால் : நீத்தார் பெருமை

June 24, 2007

உண்மையான ஒழுக்கம், நாணயம் வேண்டுமானால் - தேவை குறைய வேண்டும், அவசியம் குறைய வேண்டும். தேவையும், அவசியமும் அதிகமாக அதிகமாக நாணயக்கேடும், ஒழுக்கக்கேடும் - வளர்ந்து கொண்டு தான் போகும்.
- பெரியார்

எனது சிறுகதை

"திண்ணை" என்ற இணைய சஞ்சிகையில் எனது சிறுகதையான "கிராமம்" பிரசுரமாயிருக்கிறது என்பதை மகிழ்வுடன் தெரியப்படுத்திக் கொள்கிறேன். அதனைப் படிக்கவும், தங்களின் மேலான கருத்துக்களைப் பதிவு செய்யவும் கீழுள்ள இணைப்பில் செல்லவும். Thinnai

தமிழோசை

இன்றைய (ஜுன் 24 ஞாயிற்றுக்கிழமை) "BBC" செய்தி கேட்க கீழுள்ள இணைப்பை அழுத்தவும்
BBCTamil.com Radio Player

"மங்கையர் இதழ்களில்
மிளகாயில் அல்வா
செய்யும் விதம் பற்றிய
குறிப்புகள் அல்ல
வாலண்டைனா வரலாறுகள்
வரவேண்டாமா?
பருவப்பெண்களை உறிஞ்சும்
பத்திரிகை அட்டைகளில் ஈன்ஸ்டீன் படம்
என்றைக்கு வருமோ
அன்றுதான் கொச்சைப்பட்ட
அச்சு யந்திரங்களும்
நிச்சயம் மகிழும்"

- கவிஞர் ஈரோடு தமிழன்பன்



"இமயப் பறவை நாம்,
எரிமலையின் உள்மனம் நாம்,
திக்குகளின் சுவர்கள்,
தேச வரம்பற்றவர்கள்"

இவரின் இணையதள செவ்வி படிக்க கீழுள்ள இணைப்பை அழுத்தவும் Tamil magazine Tamil news,poem,story,movie & song reviews

ஹரிஹரன் பாடல்கள்!
கேட்பதற்கினியவை! கேட்டுப்பாருங்கள்!!
Powered by eSnips.com

இன்றைய குறள்

இருமை வகைதெரிந் தீண்டறம் பூண்டார்
பெருமை பிறங்கிற் றுலகு

நன்மை எது, தீமை எது என்பதை ஆய்ந்தறிந்து நன்மைகளை மேற்கொள்பவர்களே உலகில் பெருமைக்குரியவர்களாவார்கள்

அறத்துப்பால் : நீத்தார் பெருமை

தமிழோசை

இன்றைய (ஜுன் 23 சனிக்கிழமை) "BBC" செய்தி கேட்க கீழுள்ள இணைப்பை அழுத்தவும் BBCTamil.com Radio Player

June 23, 2007

எழுத்தாளர் சுஜாதா நேர்முகம்

Essence of your life so far ரத்னச்சுருக்கமாக சொல்ல முடியுமா?

'ரத்னச்சுருககமாக' ஓரிரு வரிகளில்' எல்லாம் ஒரு வாழ்க்கையைச் சொல்ல முடியாது. இபபடிக் கேட்பது தமிழனின் சோம்பேறித்தனங்களில் ஒன்று, என் வாழ்க்கை என் எழுத்தில் முழுவதும் விரவிக் கிடக்கிறது. Please 'click' the link
Tamil magazine Tamil news,poem,story,movie & song reviews

மன அழுத்தம் (Depression)

சுவாமி அனுபவானந்தா அவர்கள் அமெரிக்கப் பண்பலை வரிசைக்கு அளித்த நேர்முகம். மன அழுத்தம் (Depression) ஒரு மனிதனை எந்த அளவுக்குப் பாதிக்கிறது, எப்படி அதிலிருந்து தற்காத்துக்கொள்வது என்பதைப் பற்றி தெளிவுபடுத்துகிறார்.
Get this widget | Share | Track details

தலைக்கு ஒரு கோடி

சர்ச்சைக்குரிய "சல்மான் ருஸ்டி" யின் பிரபலமான நாவல் "The Satanic Verses"-ல் இருந்து அவருடைய சொற்பொழிவு. பாகிஸ்தானில் ஒரு வர்த்தக சங்கம் இவரின் தலைக்கு ஒரு கோடி நிர்ணயித்திருக்கிறது.

"சல்மான் ருஸ்டி" யின் நேர்முகம்

எந்தக்காரியம் எப்படி இருந்த போதிலும், அரசியலில், பொதுவாழ்க்கையில் கண்டிப்பாக மனித தருமம் தவிர வேறு எந்தக் கால தர்மமோ, சமய தருமமோ, புகுத்தப்படக் கூடாது என்பது தான் எனது ஆசையேயொழிய உலகத்தில் உள்ள மக்கள் எல்லாம் என் விருப்பப்படி தான் நடக்க வேண்டும் என்பதல்ல.
- பெரியார்

நாலடியார்

1. அறத்துப்பால்

1.2 இளமை நிலையாமை

எனக்குத்தாய் ஆகியாள் என்னைஈங் கிட்டுத்
தனக்குத்தாய் நாடியே சென்றாள் - தனக்குத்தாய்
ஆகி யவளும் அதுவானால் தாய்த்தாய்க்கொண்டு
ஏகும் அளித்திவ் வுலகு.


- சமண முனிவர்கள்

தமிழ் விளக்கவுரை :

என்னை ஈன்றெடுத்த என் தாய், என்னைத்தவிக்க விட்டுவிட்டு அவளைத்தவிக்கவிட்டுச் சென்ற தன் தாயைத் தேடிக்கொண்டு போய்விட்டாள். என் தாயின் தாயாரின் நிலையும் அதுவேதான். இப்படி ஒவ்வொரு தாயும் தன் தாயைத் தேடிக்கொண்டு போவதுதான் உலகநியதி


- ஆதியக்குடியான்

ஆங்கில விளக்கவுரை :

She who was my mother, having borne me in this world, had departed seeking a mother for herself, if this be the case also with her mother, one mother seeking after another mother, then is this world wretched indeed.


- By Rev.F.J.Leeper, Tranquebar

இன்றைய குறள்

துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று

உலகில் இறந்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்று கூறமுடியுமா? அதுபோலத்தான் உண்மையாகவே பற்றுகளைத் துறந்த உத்தமர்களின் பெருமையையும் அளவிடவே முடியாது

அறத்துப்பால் : நீத்தார் பெருமை

June 22, 2007

"பட்டியல்" திரைப்படத்தில் மேஸ்ட்ரோ, "இசைஞானி இளையராஜா" வுடன் பாடிய "தமிழ்ப்பாடகி", இளம்பாடகி ரோஷினியின் நேர்முகம் பகுதி II

'காதலும் நட்பும் ஒன்றுதான்'

ஒரேயொரு இடத்தில் மட்டுமே வித்யாசப்படும்

நட்பு வளர வளர அது ஆணாக இருக்கும் பட்சத்தில் அது தலைமுறையும் தாண்டிய ஒரு உறவாக மாறுகிறது. அதுவே ஒரு பெண்ணாக இருக்கும் பட்சத்தில் அது காதலாக மாறி கல்யாணத்தில் போய் நிற்கிறது. அதுவும் தலைமுறைக்குத் தொடர்கிறது.

இப்போது உங்கள் கேள்விக்கு வருகிறேன், நட்புக்கும் காதலுக்கும் உள்ள ஒரேயொரு வித்யாசம்
  • நட்பால் ஆத்மார்த்தமான அன்பைமட்டுமே பகிர்ந்துகொள்ள முடியும்.

    அதனைத்தேடி யாரும் செல்வதில்லை, தானாக வரக்கூடியது, அல்லது ஏற்படுத்திக்கொள்ளக்கூடியது.
  • ஆனால் காதலால் உடலையும் பகிர்ந்துகொள்ள முடியும்.

அதானால்தான் உடலால் கிடைக்கக்கூடிய இன்னொன்றையும் தேடி காதல் என்ற ஒன்றுக்காக தலைமுறை தலைமுறையாக நாம் அலைகிறோம். இது தவறோ குற்றமோ இல்லை. இது மனித நியதி, ஏன் உயிருள்ள ஜீவராசி ஒவ்வொன்றுக்கும் உரியது. ஆத்மா நம்மால் கட்டுப்படுத்த முடியாத ஒன்று.

அப்படி நம்மால் கட்டுப்படுத்தமுடியுமெனில் அங்கே காதலுக்கு இடமில்லை, அது இறைவனுடைய திருவடி நோக்கிப் பிரயாணிக்கும் ஆன்மீகவழி

- இது ஒரு நண்பரின் கேள்விக்கான என்னுடைய பதில்

தமிழோசை

இன்றைய "BBC" (ஜுன் 22 வெள்ளிக்கிழமை) செய்திகள் கேட்க கீழுள்ள இணைப்பை அழுத்தவும் BBCTamil.com Radio Player

  • Our lives are not what we deserve; they are, let us agree, in many ways deficient.
  • Most of what matters in your life takes place in your absence.
  • In this world without quiet corners, there can be no easy escapes from history, from hullabaloo, from terrible, unquiet fuss.
  • A book is a version of the world. If you do not like it, ignore it; or offer your own version in return.
  • A poet's work is to name the unnameable, to point at frauds, to take sides, start arguments, shape the world, and stop it going to sleep.
  • Be sure that you go to the author to get at his meaning, not to find yours. Books choose their authors; the act of creation is not entirely a rational and conscious one.
  • I do not need the idea of God to explain the world I live in.
  • I hate admitting that my enemies have a point.

- Salman Rushdie

பிரபல எழுத்தாளர் சல்மன் ருஸ்டி-யின் தலையைத் துண்டிப்பவர்க்கு ஒரு கோடி ரூபாய் பரிசு என்று அறிவித்திருக்கிறது பாகிஸ்தான் வர்த்தக சங்கம். இவர் இந்தியாவில் பிறந்த பிரபல எழுத்தாளர். எழுத்துத் துறையில் இவர் ஆற்றிய சேவையைப் பாராட்டிப் பிரிட்டன் அரசு "வீரப்பட்டம்" ஒன்றைச் சமீபத்தில் வழங்கியது. இது பாகிஸ்தானில் வாழும் முஸ்லீம்கள் இடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம். எது எப்படியோ? அவரின் "பொன்மொழிகள்" நமக்குத் தேவை.

விதி என்பது – மிதிக்கப்பட்டவர்களுக்கும், ஒடுக்கப்பட்டவர்களுக்கும், கொதித்து எழாதிருக்கச் செய்யப்பட்ட சதியாகும்

- பெரியார்

64 - வது நாயன்மார்

திருமுருகக் கிருபானந்த வாரியார் அவர்களின் அற்புதச் சொற்பொழிவு : 64 - வது நாயன்மார் என்று போற்றக்கூடிய அளவுக்குப் புகழ்வாய்ந்த அந்த மகானின் குரலை எத்தனைபேர் உண்மையாகவே கேட்டிருப்பர் என்று எனக்குத் தெரியாது. ஆனாலும் எனக்குக் கிடைத்த இந்த சொறிபொழிவின் ஒலிப்பதிவை உங்களோடு பகிர்ந்துகொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். கேட்டுவிட்டுத் தங்களின் மேலான கருத்துக்களை இங்கே பதிவு செய்க.






Powered by eSnips.com

இன்றைய குறள்

ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு

ஒழுக்கத்தில் உறுதியான துறவிகளின் பெருமை, சான்றோர் நூலில் விருப்பமுடனும், உயர்வாகவும் இடம் பெறும்

அறத்துப்பால் : நீத்தார் பெருமை

1. தாய் மொழி தவிர வேறொரு பிடித்த மொழி ?
இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து மொழியுமே பிடிக்கும். குறிப்பாகச் சொல்லவேண்டுமெனில் குழலினிது யாழினிது என்பதம் மக்கள் மழலைச்சொல் கேளாதவர்.

2. நீங்கள் அடிக்கடி ரசிக்கும் ஒரு கலை ?
நமது பாரம்பரியக்கலையான பரதக்கலை

3. ஒரு நட்பு காதாலாக மாறுகிறது. இதை பற்றி உங்கள் கருத்து ?
காதலும் நட்பும் ஒரேயொரு இடத்தில் மட்டுமே வித்யாசப்படும். மற்றபடி இரண்டுமே ஒன்றுதான்


4. நீங்கள் அடிக்கடி திட்டும் நபர், திட்டு வாங்க கூடிய நபர் ?
என்னைத்தான். திட்டு வாங்குவது நான்தான்.


5. திமுரு பற்றி உங்களுடைய கருத்து ?
அது ஒவ்வொரு தமிழனுக்கும் இருக்கவேண்டிய ஒன்று

June 21, 2007


"மனசே ரிலேக்ஸ் ப்ளீஸ்" என்றாலே சுவாமி சுகபோதானந்தா அவர்களின் நினைவுதான் அனைவருக்கும் வருமென்பதில் ஐயமில்லை. அவர் நம்மோடு பகிர்ந்துகொள்கிறார். ஒவ்வொருவரும் கேட்கவேண்டிய ஒலிப்பதிவு இது.
Powered by eSnips.com

தமிழோசை

தமிழ்நெட் முடக்கத்திற்கும் தமக்கும் எவ்வித தொடர்புமில்லை என கூறுகிறது இலங்கை அரசு : விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு ஆதரவான இணையத் தளமாகக் கருதப்படும் தமிழ்நெட் இணைய தளத்தை கடந்த சில தினங்களாக இலங்கை அரசு முடக்கியுள்ளதாக கூறப்படும் பரவலான குற்றச்சாட்டினை இலங்கை அரசு மறுத்துள்ளது. இன்றைய (ஜுன் மாதம் 21 - ம் தேதி வியாழக்கிழமை) "BBC" செய்தி கேட்க கீழுள்ள இணைப்பை அழுத்தவும் BBCTamil.com Radio Player

"பட்டியல்" திரைப்படத்தில் மேஸ்ட்ரோ, இசைஞானி இளையராஜா'வுடன் பாடிய தமிழ்ப்பாடகி, இளம்பாடகி ரோஷினியின் நேர்முகம் பகுதி I

நாலடியார்

1. அறத்துப்பால்

1.1. செல்வம் நிலையாமை

அறுசுவை யுண்டி அமர்ந்தில்லாள் ஊட்ட
மறுசிகை நீக்கியுண் டாரும் - வறிஞராய்ச்
சென்றிரப்பர் ஓரிடத்துக் கூழ்எனின், செல்வம்ஒன்று

உண்டாக வைக்கற்பாற் றன்று


- சமண முனிவர்கள்


தமிழ் விளக்கவுரை :

ஆறு விதமான சுவை படைத்த உணவை, அருகே அமர்ந்து, தன் இன்ப மனைவி, தன் கையால் கொடுக்க, அந்த உணவின் மறுபகுதியைத் தொடுவதற்கு முன்னர், வறுமை வந்து, எல்லாம் இழந்து, இன்னொரு இடத்துக்குப் பிச்சை எடுக்கப் போய்விடுவார். அளப்பரிய செல்வம் சேர்ந்து இருப்பினும் ஒன்றுமில்லாத நிலையே!

- ஆதியக்குடியான்


ஆங்கில விளக்கவுரை :


CHAPTER 1.--Unstable Wealth.

Even those who have eaten of every variety of food of six flavours laid before them by their wives with anxious attention, not taking a second portion from any dish, may yet become poor and go and beg somewhere for pottage. Verily riches are but seeming, not to be considered as actually existing.

Translation of Selected Verses by
Rev.F.J.Leeper, Tranquebar

இன்றைய குறள்

நீரின் றமையா துலகெனின் யார்யார்க்கும்
வானின் றமையா தொழுக்கு

உலகில் மழையே இல்லையென்றால் ஒழுக்கமே கெடக்கூடும் என்ற நிலை இருப்பதால், நீரின் இன்றியமையாமையை உணர்ந்து செயல்படவேண்டும்.

அறத்துப்பால் : வான்சிறப்பு

இடுப்புக்குக் கீழே உள்ள உறுப்புகளை இழந்த பிறகும் நாட்டின் விடுதலையின் பொறுப்புகளை இழக்காத இந்த மயூரித் தங்கைகளின் உணர்வை மதித்து நான் பெண்களின் உறுப்புகளை வர்ணித்து திரைப்படத்துக்குப் பாடல் எழுதுவதை நிறுத்திவிட்டேன்" என்று தனக்கென ஒரு பாதையை வகுத்துக்கொண்ட கவிஞன். வானொலி நேர்முகத்தின் ஒலிப்பதிவைக் கேட்க கீழுள்ள செயலியை இயக்கவும்

Get this widget Share Track details

June 20, 2007

உலக அகதிகள் நாள்

உலகில், இன்றைய நிலையில் வன்முறைகளால் குறைந்தது 44 மில்லியன் பேர் அகதிகளாக இருக்கின்றனர் என்று
ஐ நா மதிப்பிடுகிறது.



தமிழ் நெட் இணையதளம் இலங்கையில் முடக்கப்பட்டுள்ளது விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான இணைய தளமாகக் கருதப்படும் தமிழ்நெட் இணைய தளத்தை இலங்கை அரசு முடக்கியுள்ளது. மேலும் மிக முக்கியமான செய்திகளை "BBC" தமிழோசை வழங்கியிருக்கிறது. முழு செய்திகளையும் கேட்க கீழுள்ள இணைப்பை அழுத்தவும்.BBCTamil.com Radio Player



கங்கை அமரன் @ ஜாலிஅமரன்

'மண்ணில் இந்தக் காதல் இன்றி யாரும் வாழ்தல் கூடுமோ'
'தம்தன தம்தன தாளம் வரும் - புது ராகம் வரும் - அதில் சந்தன மல்லிகை வாசம் வரும்'
'ஓரம் போ... ஓரம் போ... ருக்குமணி வண்டி வருது..'
'அண்ணே அண்ணே சிப்பாய் அண்ணே'

மனசில் இனிய நினைவுகளை எழுப்பும் பல பாடல்களை எழுதியிருக்கும் கவிஞர் கங்கை அமரனிடம் பேசியதிலிருந்து... Please 'click' the link

இந்திய ஏவுகணையில் பொறிக்கப்பட வேண்டிய மகாகவியின் உருவம் கழிப்பறையிலா?

கவிஞர் வைரமுத்து விடுத்துள்ள அறிக்கையில், இது சமூகப் பிழையோடு சரித்திரப் பிழையுமாகும். வேறெங்கு நிகழ்ந்திருந்தாலும், அறியாதார் தவறென்று கொள்ளலாம். கர்நாடக மாநிலத்தில் இது நிகழ்ந்திருப்பது உள்நோக்கம் உள்ளதோ என்று கவலை கொள்ளச் செய்கிறது. இந்திய ஏவுகணையில் பொறிக்கப்பட வேண்டிய மகாகவியின் உருவம் கழிப்பறையிலா அந்த மீசை சூரியனை தமிழின் தேசிய அடையாளத்தை இவ்வளவு இழிவு செய்வதா இது உடனே அழிக்கப்பட வேண்டும். கர்நாடக அரசு தலையிட வேண்டும். இல்லாவிட்டால், கவிஞர்கள் திரண்டு தலையிட வேண்டியிருக்கும். இதை இதயக் குமுறலாக எடுத்துக் கொண்டாலும் சரி, எச்சரிக்கையாக எடுத்துக் கொண்டாலும் சரி என்று கூறியுள்ளார் வைரமுத்து. Please click here..http://sadnyvadai.blogspot.com/2007/06/blog-post.html

இன்றைய குறள்

தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம்
வானம் வழங்கா தெனின்

இப்பேருலகில் மழை பொய்த்து விடுமானால் அது, பிறர் பொருட்டுச் செய்யும் தானத்திற்கும், தன்பொருட்டு மேற்கொள்ளும் நோன்புக்கும் தடங்கலாகும்

அறத்துப்பால் : வான்சிறப்பு

இலக்கியம் என்பது

நாகரிகத்தைப் புகட்ட வேண்டும். மக்களிடம் உயரிய குணங்களைப் புகுத்துவதாக இருக்க வேண்டும். எப்படிப்பட்ட கலையும் ஒழுக்கக் குறைவுக்கும், மூட நம்பிக்கைக்கும், சிறிதும் பயன்படக் கூடாததாய் இருக்க வேண்டும்.

- பெரியார்

"நான்மணிக்கடிகை"


தமிழ்பால் தீராத காதலும், பற்றும், மரியாதையும் கொண்ட எத்தனையோ நபர்களில் இவரும் ஒருவர். திரு.ஆதியக்குடி சம்பத், தற்சமயம் சவூதி அரேபியாவில் ஒரு மிகப்பெரிய நிறுவனத்தில் பணிபுரிகிறார். நம்மைப்போல் தமிழ்மேல் பற்றிருக்கும் எவருக்கும் அவர்பால் பற்றிருப்பது ஆச்சர்யமில்லைதான். நான் நெடுநாட்களாகக் கேட்டுக் கொண்டதற்கிணங்க நமது தளத்தில் தொடர்ந்து எழுதி "தமிழ்ச்சேவை" செய்ய ஒப்புக்கொண்டுள்ளார். சுவாசிக்கக்கூட நேரமில்லா வேலைப் பளுவுக்கு இடையிலும் தன்னாலான தமிழ்த்தொண்டை அங்கிருந்து நமக்காகச் செய்யத் தயாராயிருப்பதை நினைத்துப் பெருமைப்படுகிறேன். இருகரம் கூப்பி வரவேற்கிறேன். தொடர்ந்து எழுதுவார்..ஆவலோடு காத்திருப்போம். இன்று "நான்மணிக்கடிகை"யிலிருந்து ஒரு பாடல், விளக்கத்துடன் தருகிறார். நன்றி.

கள்வம்என் பார்க்கு துயில் இல்லை, காதலிமாட்டு

உள்ளம்வைப்பார்க்கும் துயில் இல்லை, ஒண்பொருள்

செய்வம்என் பார்க்கும் துயில் இல்லை, அப்பொருள்

காப்பார்க்கும் இல்லை துயில்.

தமிழ் விளக்கம் :

நான்கு வகையான மனிதர்களுக்கு கண்ணுறக்கம் வராது:

1.பிறர் பொருளை அவருக்குத்தெரியாமல் அபகரிப்பவர்க்கு

2.மனமொத்த அன்புக் காதலியிடம் மனதைக் கொடுத்தவர்க்கு

3.எப்படியாவது பெரும்பொருள்ச் சேர்த்துத் தனவந்தனாகிவிடவேண்டுமென்று சதா எண்ணிக்கொண்டிருப்பவர்க்கு

4.அப்படிப் பாடுபட்டுச் சேர்த்த பெரும்பொருளைக் காத்துக்காத்துக் கிடப்பவர்க்கு

ஆங்கில விளக்கம் :

In the song which follows, the theme is about four different groups of people who cannot sleep well at night, namely, the thief, a person in love, the person after money and the miser looking after his money:

June 19, 2007

திரு.சிவா என்ற ஒரு நண்பர் கேட்ட கேள்விகளும் நான் அவருக்கு அளித்த பதில்களும்

1. இன்றைய விருந்தோம்பல் பற்றி உங்கள் கருத்து?

விருந்தோம்பல் என்பது அருமையான தமிழ்வார்த்தை : அதைப்போல் விருந்தோம்பல் மிகச்சிறப்பானது. நாம் எப்படி விருந்தோம்பல் செய்கிறோம் என்பதைப் பொறுத்து நமக்கு விருந்தோம்பல் கிடைக்கும். விருந்தோம்பலுக்கு வடை, பாயாசம் தேவையில்லை. பச்சைத்தண்ணீர் பருகுவதற்குப் பரிவோடு கொடுத்தாலே அது விருந்தோம்பல்தான். ஆங்கிலத்தில் அதனை ஹாஸ்பிடாலிடி என்றுகூடச் சொல்லலாம்.

2. உங்களைப் பொருத்தவரை எது ரொம்ப கஷ்டம்?


சும்மா இருப்பது

3. ஹிட்லரை பார்க்க வாய்ப்பு கொடுத்தால் எதை பற்றிப் பேசுவீர்கள்?

உங்களைப் பார்த்துப் பிரமிக்கும் அளவுக்கு நீங்கள் எப்படி மற்றவரின் கவனத்தை உங்கள் பக்கம் திருப்பினீர்கள் என்றும், உங்களுக்கு இன்ஸ்பிரேசன் (மண்ணிக்க தமிழ்வார்த்தை தெரியவில்லை) யாரென்றும் கேட்பேன்.

4. வாழ்க்கையில் நிறையப் பேர் மிருகமாக இருக்கிறார்கள். அதற்கு மூல காராணமாக இருப்பது எது?

மனிதர்கள்தான்

5. மனிதன் என்பதற்கு அடையாளம்?

பிறர் துயர் பார்த்துக் கண் கலங்குபவன். "காயத்திற்கு மருந்துவேண்டாம், கனிவான பார்வைபோதும்". மொத்தத்தில் "மனிதம்" எவனிடம் உள்ளதோ அவனே மனிதன்.

"ஹைகூ"

சொந்தமண்ணிலிருந்து

துரத்தப்பட்ட அகதிகளாய்…

துடுப்பற்ற பரிசலாய்…



...................பிறைநிலா

மரணதண்டனை எதிர்ப்பாளர்களை தூக்கில் இட வேண்டும்

மரணதண்டனையை எதிர்ப்பவர்கள் உண்மையில் மேலும் 18 கொலைகள் நடக்க காரணமாகிறார்கள். மரணதண்டனையை ஆதரிக்கும் ஒவ்வொருவரும் உண்மையில் 18 கொலைகளை தடுக்கிறார்கள். Please 'click' the link Thinnai

திரைப்பட இயக்குனர் "வசந்த்" நேர்முகம்

இன்றைய குறள்

சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு

வானமே பொய்த்து விடும்போது, அதன்பின்னர் அந்த வானத்தில் வாழ்வதாகச் சொல்லப்படுகிறவர்களுக்கு விழாக்கள் ஏது? வழிபாடுதான் ஏது?

அறத்துப்பால் : வான்சிறப்பு

தமிழோசை

இன்றைய "BBC" செய்தி (ஜுன் 19 செவ்வாய்க்கிழமை) கேளுங்கள், சேது சமுத்திரம் பற்றிய ஒரு பெட்டகம் கேட்க கீழுள்ள இணைப்பை அழுத்துக. BBCTamil.com Radio Player

என் அபிப்பிராயத்தை மறுக்க
உங்களுக்கு உரிமையுண்டு
ஆனால் என் அபிப்பிராயத்தை வெளியிட எனக்கு உரிமை உண்டு
- பெரியார்

June 18, 2007

யார் குற்றம்? - சிறுகதை

செல்போனை ‘வைப்ரேஷன்’ மோடில் வைத்திருந்தாலும் தொடர்ந்து யாரோ அழைப்பதை உணர்ந்து எரிச்சலாகிப்போனான் நிதிஷ். சமீபத்தில் இம்போர்டரிடமிருந்து வந்த க்ளைம் பற்றி மேனேஜிங் டைரக்டர் மிகக் காரசாரமாக கான்ஃபரன்ஸ் ரூமில் விவாதித்துக்கொண்டிருந்தார். நிதீஷ், அந்த நிறுவனத்தின் மேலாளர், பொறுப்புள்ள பதவியிலிருப்பதால் அனைத்தையும் கையாளவேண்டியது அவன் கடமை. ஆனால் இப்படிப் பொறுப்பே இல்லாமல் இருந்தால் எப்படி என்று மிகவும் கோபித்துக்கொண்டவரிடம், ‘ஓ.கே. சார், ஐல் டேக் கேர்! லெட் மி ஹேவ் சீரியஸ் லுக் இன்டுயிட்’ என்று சமாளித்து ஒரு வழியாக வெளியே வந்தவன் செல்போனை எடுத்துப்பார்த்தான். ஏழு மிஸ்டு கால்ஸ், இரண்டு மெஸேஜ் வேறு. எல்லாம் மனைவி ஸ்வேதாவிடமிருந்து. கோபம் தலைக்கேறியது, ‘காலையில கௌம்பும்போதே மீட்டிங் இருக்குனு சொல்லிட்டுத்தானே அவசர அவசரமா வந்தேன், அப்படியென்ன தலைபோற விசயம்’ என்று மனதுக்குள் கடிந்துகொண்டே, போன் செய்வதற்கு முன், மெஸேஜைப் படித்தான். இடிந்தே போய்விட்டான் நிதிஷ். மை காட்….ஓ’வென அழமுடியாத குறையாய்….எம்.டி.யிடம், “சார், எம்பையன் இறந்துட்டான் சார், நான், கௌம்புறேன் சார்’ என்று சொல்லி முடிப்பதற்குள் கதறியே விட்டான். உடனடியாக எம்டி-யின் டிரைவர் நிதீஷ்-ஐ காரில் ஏற்றிக்கொண்டு மருத்துவமனை நோக்கிப் பறந்தான்.

அப்போதுதான் காலையில் வீட்டில் நடந்தது நிதிஷ்-ன் நினைவுக்கு வந்தது. “ஸ்வேதா! நான் கௌம்புறேன், டைம் ஆச்சு, டிபன் எல்லாம் வேண்டாம், சேத்து லஞ்ச் சாப்டுக்கிறேன்டா, ப்ளீஸ்..சொன்னாக்கேளு! நைட் எல்லாம் ஒடம்பு சரியில்லாம இறுமிக்கிட்டுக் கெடந்தேல்ல, இங்க வா! ஃபர்ஸ்ட், பெட்-டுமேல இருக்கற ஒன்னோட மெடிசின்ஸ், காஃப் சிரப் எல்லாத்தயும் எடுத்துவை, ஸ்வரேஷ் எடுத்து சாப்டாலும் சாப்டுருவாம்பா” என்று தன் ஒன்றரை வயது மகனைத் தூக்கி ஹாலில் விட்டு விட்டு சமயலறையில் இருந்தவளிடம் “பாய்டா, ஐல் கால் யு’ என்று கூறி அவசரமாகச் சென்றுவிட்டான். “ஐயோ! என் மகனே! கடவுளே! என்னாச்சோ தெரியலயே! என்ன நடந்துருக்கும்...ம்ம்... சீரியஸா இருந்தாலும் பரவாயில்ல, டாக்டர்ஸ் எப்படியாவது காப்பாத்திருவாங்க, ஆனா உயிருக்கு மட்டும் எதுவும் ஆயிருக்கக்கூடாது” என்று அவன் வேண்டாத தெய்வமே இல்லை.

மருத்துவமனையில் காரை நிறுத்துவதற்குள், நிதீஷ் இறங்கி ஓடி ரிஷப்சனில், “ஸ்வரேஷ்-னு என்னோட சன்….? … “சாரி, சார்…சிரப், டேப்ளட்ஸ் எல்லாம் முழுங்கி, ஓவர்டோஸாகி….காப்பாத்த முடியல, பையன் எறந்துட்டான், கொஞ்சம் முன்னாடிக் கொண்டு வந்துருந்தாக்கூடக் காப்பாத்தியிருக்கலாம்’னு டாக்டர் சொன்னாங்க…எக்ஸ்ட்ரீம்லி சாரி சார்….அதோ அந்த எமெர்ஜென்ஸி வார்டுல இருக்காங்க பாருங்க”. நிதீஷ் இடிந்து போய் கீழே விழப்போகும் தருவாயில், டிரைவர் அப்படியே தாங்கலாகப் பிடித்துப் பக்கத்தில் இருந்த நாற்காலியில் அமரவைத்தான். நர்ஸ் தண்ணீர் கொண்டு வந்து முகத்தில் தெளித்துக் கொஞ்சம் குடிக்கக் கொடுத்தாள்.

“நான் எப்போ அந்த எம்பிஞ்சு மொகத்தைப் பாப்பேன், எப்படி என் ஸ்வேதா மொகத்துல முழிப்பேன், ஐயோ! கடவுளே! ஒனக்குக் கண்ணே இல்லையா? நாங்க என்ன பாவம் செஞ்சோம்? ஐயோ! அவள எடுத்து வைக்கச் சொன்ன நான், அந்த மருந்தெல்லாம் நானே எடுத்து வச்சுட்டுப் போயிருக்கலாமே! கண்ணுக்குத் தெரிஞ்சே இப்படி எம்புள்ளய நானே கொன்னுட்டனே!’ என்று தன்னையும் மீறி கதறும்போது பக்கத்தில் நின்ற அனைவருமே கலங்கி விட்டனர்.

அதற்குள் ஸ்வேதா தன் மகனைக் கையில் அணைத்துக்கொண்டு அலறியபடியே ஓடி வந்து தன் கணவனை கட்டிப்பிடித்து, ‘என்னெ மண்ணிச்சுருங்க! பாவி! நானே எம்புள்ளயக் கொன்னுட்டேன், அப்பவே சொன்னிங்களே! நான் கேர்லெஸ்-ஸா இருந்துட்டேங்க! கொஞ்சம் முன்னாடிக் கொண்டுவந்துருந்தாலும் காப்பாத்தியிருக்கலாமே! அதுக்குத்தானெ நான் ஒங்களுக்கு போன் பண்ணேன். டாக்ஸி-ல கொண்டுவர்றதுக்குள்ள எல்லாமே போச்சே!...ஐயோ நான் என்ன செய்வேன்”……

ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர், யாரைக் குற்றம் சொல்வது, சுலபமாக ஒருவர் மீது ஒருவர் குற்றம் சுமத்திக்கொள்ளும் அளவுக்குச் அவர்கள் சராசரி மனிதர்கள் இல்லை. நன்கு படித்தவர்கள். இழந்த இழப்பை யாராலும் ஈடுசெய்யமுடியாது. நிதீஷ், தன் இறந்துபோன மகனை ஒரு கையிலும், தன் மனைவியை மற்றொரு கையிலும் அணைத்துக்கொண்டு கண்ணீரோடு “ஐ லவ் யு ஸ்வேதா, ஐ லவ் யு” என்றான்.


இது யார் குற்றம்?
இது அன்றாட வாழ்வில் நடக்கக் கூடிய,
ஏன் நடந்த ஒரு சம்பவம்.
குற்றம் யாருடையது?
முடிவை உங்கள் கைகளுக்கே விட்டுவிடுகிறேன்.


- நவின்

டாக்டர் பத்மஸ்ரீ P.B.ஸ்ரீனிவாஸ் II

Powered by eSnips.com

அரசியல் மூலம் பணம், புகழ், பதவி, முதலியவற்றைச் சம்பாதிக்கத் திட்டமிடும் கூட்டத்தினர் மனித சமூதாயத்திற்கு- "எலும்புருக்கி நோய்" போன்றவர்கள்

- பெரியார்

இன்றைய குறள்

நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின்

ஆவியான கடல்நீர் மேகமாகி அந்தக் கடலில் மழையாகப் பெய்தால்தான் கடல்கூட வற்றாமல் இருக்கும். மனித சமுதாயத்திலிருந்து புகழுடன் உயர்ந்தவர்களும் அந்தச் சமுதாயத்திற்கே பயன்பட்டால்தான் அந்தச் சமுதாயம் வாழும்

அறத்துப்பால் : வான்சிறப்பு

தமிழோசை

இன்றைய "BBC" செய்தியில் (ஜுன் 18 திங்கட்கிழமை) அடுத்த குடியரசுத் தலைவரும் மேதகு.ஏ.பி.ஜே.அப்துல் கலாம்' தான் என்று உரக்க முழங்குகிறார் முன்னால் முதல்வர் ஜெயலலிதா அவர்கள். மேலும் ரஜினி'யின் சிவாஜி திரைப்படம் ஒரு பார்வை...ஆங்கில தொலைக்காட்சி சானல்கள் மணிக்கணக்கில் சிவாஜியைப் பற்றி ஏதாவது பேசிகொண்டிருக்கின்றன. அனுபவமிக்க சினிமா நோக்கர் ஸ்ரீதர்பிள்ளை ஆசியாவிலேயே இரண்டாவது அதிகபட்ச சம்பளம் பெறும் நடிகர் ரஜினி என்றும், இயக்குநர் சங்கர் மற்றும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ஆகியோருடன் கூட்டணியில் உருவான இத்திரைப்படம் மிகப்பெரும் வெற்றிபெறும் என்கிறார். மேலும் தமிழோசை கேட்க கீழுள்ள இணைப்பை அழுத்தவும். BBCTamil.com BBCTamil.com

திரு.B.H.அப்துல் ஹமீது

'இலங்கை ஒலிபரப்புக் கூட்டு ஸ்தாபனம், தமிழ்ச்சேவை' என்று கூறும்போதே அது பிரபல அப்துல் ஹமீது அவர்களின் குரல் என்று சொல்லக்கூடிய அளவுக்கு "உலகெங்கிலும் உள்ள தமிழ் நெஞ்சங்களை"க் கவர்ந்தவருடனான ஒரு நேர்முகம். Please 'click' the link FreeTamil magazine presenting news,poem,story,movie & music reviews

June 17, 2007

ஆத்மா, மோட்சம், நரகம், மறுபிறப்பு, பிதிர்லோகம், ஆகியவைகளைக்- கற்பித்தவன் அயோக்கியன்; நம்புகிறவன் மடையன்; இவற்றால் பலன் அனுபவிக்கிறவன்- மகா மகா அயோக்கியன்.
- பெரியார்

உலகப் புகழ்பெற்ற அறிவியல் கண்டுபிடிப்புகள்

மூளையின் குறிப்பிட்ட பகுதி சரியான முறையில் இயங்காமலிருப்பதே காக்கை வலிப்பு நோய்க்குக் காரணம்; அப்பகுதியை அறுவை சிகிச்சையின் வாயிலாக அகற்றிவிட்டால் நோய் குணமாகும் Please 'click' Tamil magazine Tamil news,poem,story,movie & song reviews

இன்றைய குறள்

விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண் பரிது

விண்ணிலிருந்து மழைத்துளி விழுந்தாலன்றி மண்ணில் பசும்புல் தலை காண்பது அரிதான ஒன்றாகும்

அறத்துப்பால் : வான்சிறப்பு

தமிழோசை

இன்றைய (ஜுன் 17 ஞாயிற்றுக்கிழமை) "BBC" செய்தி கேட்க கீழுள்ள இணைப்பை அழுத்தவும் BBCTamil.com Radio Player

June 16, 2007

"கையை வெட்டினாலொழிய பிழைக்கமாட்டாய்"
என்று டாக்டர் சொன்னால் வெட்டிவிடச் சம்மதிக்கிறோம்.
"காலை வெட்டினால் ஒழிய பிழைக்கமாட்டாய்"
என்றால், காலை வெட்டிவிடச் சம்மதிக்கிறோம்.
"மலஜலம் கழிக்க வேறு ஓட்டைப் போட வேண்டும்"
என்றால், போட்டுக் கொண்டு அதில் மலஜலம் கழிக்கிறோம். எடுத்து விட வேண்டும் என்றால்
"கருப்பையை" எடுத்து விடச் சம்மதிக்கிறோம். இன்னும் முக்கிய உறுப்புகளை, முக்கிய பண்டங்களை இழந்தாவது உயிர் வாழ சம்மதிக்கிறோம். அப்படியிருக்க ஒரு "அயோக்கியக் கூட்டம்" நம்மை ஜெயித்து, அடிமையாக்கி, தங்களுக்கு அடிமை என்கின்ற தத்துவம் கொண்ட ஒரு கொள்கையை நம் மீது பலாத்காரத்தாலும், தந்திரத்தாலும், புகுத்தி இழிவு படுத்தி வைத்திருப்பதை ஒழிக் வேண்டும் என்றால் இதற்கு இவ்வளவு யோசனை, எதிர்ப்பு, தயக்கம், வெட்கம், என்றால் இந்த இழிவு (சூத்திரத் தன்மை) எப்பொழுது தான், எந்த வகையில் தான் மறைவது? என்று கேட்கின்றேன். என் மீது கோபிப்பவர்கள் இதற்குப் பரிகாரம் சொல்லாமல் கோபித்தால் அவர்களை வெறும் "வெறியர்கள்"!!! என்று தானே அறிவாளிகள் சொல்லுவார்கள்.

இன்றைய குறள்

கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை


பெய்யாமல் விடுத்து உயிர்களின் வாழ்வைக் கெடுக்கக் கூடியதும், பெய்வதன் காரணமாக உயிர்களின் நலிந்த வாழ்வுக்கு வளம் சேர்ப்பதும் மழையே ஆகும்

அறத்துப்பால் : வான்சிறப்பு

தமிழோசை

இன்றைய (ஜுன் 16 சனிக்கிழமை) "BBC" செய்தி, ஐ.நா.சபை முன்பு தமிழர்களின் "உரிமை ஊர்வலம்" மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'சிவாஜி' திரைப்பட வெளியீடு போன்ற சுவாரஸ்யமான செய்திகள் கேட்க கீழுள்ள இணைப்பை அழுத்தவும்.
BBCTamil.com Radio Player

"கொடைநாடு எஸ்டேட்"

இது எனது கல்லூரிக்காலத்துக் கவிதை!

நீதானே
பௌர்ணமி

நான் ஏன்
தேய்ந்து போகிறேன்?

நீதானே
தலை வாறுகிறாய்
நான் ஏன்
கலைந்து போகிறேன்...

நீயல்லவோ பூ
நான் ஏன்
வாடிப்போகிறேன்?

Today's Quote

All the actions that we see in the world,
all the movement in human society,
all the works that we have around us,
are simply the display of thought,
the manifestation of the human will...
And this will is caused by character,
and character is manufactured by karma.
As is karma, so is the manifestation of the will.


Karma Yoga. New York, 1895. Complete Works, 1: 30.

June 15, 2007

எழுத்தாளர் அனுராதா ரமணன் அவர்களின் நேர்முகம். Please 'click' the link

தமிழ் தேசியம் : ஐ.நா. சபை முன்பு


சுவிஸ் ஜெனீவாவில் நடைபெற்ற 'வெல்க தமிழ் - 2007" நிகழ்வில் வாசிக்கப்பட்ட பிரகடன அறிக்கையின் ஒரு பகுதி. ஒலிப்பதிவை தவறாமல் கேளுங்கள்!Tamil Nation & Beyond - தமிழ் தேசியம்: ஓரு வளர்கின்ற

இன்றைய குறள்

ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்
வாரி வளங்குன்றிக் கால்

மழை என்னும் வருவாய் வளம் குன்றிவிட்டால், உழவுத் தொழில் குன்றி விடும்.

அறத்துப்பால் : வான்சிறப்பு

தமிழோசை

இன்றைய "BBC" (ஜுன் 15 வெள்ளிக்கிழமை) செய்திகள் கேட்க கீழுள்ள இணைப்பை அழுத்தவும் BBCTamil.com Radio Player

Today's Quote

Have faith in yourselves,
great convictions are the mothers of great deeds.
Onward for ever! Sympathy for the poor,
the downtrodden, even unto death--this is our motto.
Onward, brave lads!

From Chicago. Letter to his disciples in Chennai. January 24, 1894. CW, 5: 30.