February 21, 2009
February 12, 2009
Slumdog millionaire: சர்வதேச அரங்கில் கொச்சைப்படுத்தப்பட்டுள்ள இந்தியாவின் மானம்
சர்வதேச அரங்கில் கொச்சைப்படுத்தப்பட்டுள்ள இந்தியாவின் மானம்
- தமிழ்ச்செல்வன்
ஸ்லம்டாக் மில்லினியர் என்ற திரைப்படத்தின் மூலம் இந்தியாவின் உள்கட்டமைப்பு வாழ்க்கை முறையின் தனித்துவத்தை கொச்சைப்படுத்தி இந்தியாவின் மானத்தை ஒரு அயல்நாட்டு திரைப்பட இயக்குனரின் சாமர்த்திய திறமையா
ல் சர்வதேச அரங்கில் அசிங்கப்படுத்தபட்டுள்ளன.இது போன்ற நிகழ்வுகள் வரும் காலங்களில் நிகழாமல் இருக்க அரசு உரிய நடவடிக்கைகள் எடுக்குமா?கடந்த சில தினங்களுக்கு முன் ''சினிமாத்துறையில் ஊறிப்போயுள்ள காவி சிந்தனை" என்ற தலைப்பில் ஒரு பதிவு வெளியிட்டிருந்தேன். அந்தப் பதிவிற்கான பல விமர்சனங்கள் மின் அஞ்சலின் மூலம் வரப் பெற்றேன் அதில் ஒரு விமர்சனம் அமெரிக்காவிலிருக்கும் ஒரு சகோதரரிடமிருந்து வந்தது இவை...
***----------***
From: Navaneetha Krishnan. USA.
மிகவும் உணர்வுப்பூர்வமான... அதே சமயம் ஒவ்வொரு தமிழனுக்கும், ஏன் ஒவ்வொரு மனிதனுக்கு எழ வேண்டிய உணர்வு! அருமை.... அற்புதம்! நீங்கள் ஏன் இதுபோன்ற வித்தியாசமான, நியாயமான ஆக்கங்களை அதிகாலை.காம் இணையம் வழியாக வாசகர்களோடு பகிர்ந்துகொள்ளக்கூடாது? இன்னும் அதிகமான உள்ளங்கள் படித்துப் பயன்பெறுமே! ஒரு விழிப்புணர்ச்சி ஏற்பட்டுவிட்டுப்போகட்டுமே! நாம் அதைச் செய்வோமே!
இதுதான் என்னை தங்களுக்கு எழுதத் தூண்டியது. இந்த உணர்வுகளை நானும் அடைந்தேன்! அமெரிக்காவின் ஒரு பிரபல திரையரங்கிற்கு, நான் இந்தத் திரைப்படத்தை ஏ.ஆர்.ரஹ்மானுக்காகவே பார்க்கச் சென்றது நூறு சதம் உண்மை. ஆனால் வெட்கித்தலைகுனிந்தேன். காரணம் மும்பைக்குடிசைகளைப்பற்றிய காட்சியமைப்புக்காக அல்ல, அந்தத் திரையரங்கில் கிட்டத்தட்ட 2-3 நபர்கள்தான் இந்தியர்கள், இதில் நானும் என் மனைவியும் உட்பட. படம் முடிந்ததும் அனைத்து அமெரிக்கர்களின் பார்வையும் எங்கள் மீது இருந்ததை இப்பொழுதும் நான் உணர்கிறேன். ஏதோ அந்தப்படத்தில் நடித்த ஒரு நடிகர் அங்கு வந்து படம் பார்த்துவிட்டு வெளியே வரும்பொழுது எப்படி மேலும் கீழுமாக பார்ப்பார்களோ அது போல் பார்த்ததற்கு காரணம் பிறகுதான் புரிந்தது. பச்சையாகச் சொல்லவேண்டுமெனில் "கேவலப்படுத்தியிருக்கிறார்கள்". இந்தியா வல்லரசாகும், அப்படியாகும், இப்படியாகும் என்று மார்தட்டிக்கொள்ளும் இந்த 2009-ல் இன்றும் இந்தியா இப்படித்தான் இருக்கிறதா? என்ற கேள்விக்கனைகளும், இந்தியா மீதான் அவர்களின் தவறான கோணமும் இன்னும் தொடருவதற்கு இது உந்துகோலாக இருக்கிறது. இந்தக்காட்சிகளின்படி இது உண்மையா? பொய்யா? என்ற விவாதம் வேறு. ஆனால் ஆஸ்கார் நோக்கி செல்லும் ரஹ்மான் மாத்திரமே நம் கண்ணுக்குத் தெரிவதால் நாம் இதை இப்போதைக்கு ஒரு புறம் தள்ளிவைப்போம் அவ்வளவே! நன்றி!!
***---------------***
இந்த விமர்சனம் கண்டவுடன் நண்பர் வைத்தீஸ்வரன் மூலம் இத்திரைப்படத்தின் குறுந்தகடு வாங்கப் பெற்று இந்த திரைப்படம் பற்றிய விமர்சனம் எழுதினேன். இந்தியாவின் மிகப் பெரும் வர்தக நகரமான, மும்பை நகரை அழகான வார்த்தையில் சொல்வதென்றால் "தூங்காத நகரம்" என்று சொல்லலாம் அந்த நகரை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படம் மும்பையின் குடிசை வாழ் பகுதி மக்களின் வாழ்க்கை முறையின் மறுபக்கத்தை மிக துல்லியமாக பதிவு செய்திருக்கிறது. இதுவரை இந்திய திரைப்படத் தயாரிப்பாளர்கள் இந்திய மொழிகளில் தயாரித்து வெளியிட்டு வந்த அசிங்கங்கள் ஒரு சில பகுதியாகவே இருந்திருக்கும். ஆனால் சர்வதேச சமூகத்திற்கு தெரியாமல் மறைத்தோ அல்லது தெரியாமலோ வந்த பல சம்பவங்கள் இந்த படத்தின் மூலம் உலகின் வெளிச்சத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. நூற்றுப்பத்து கோடி மக்கள் தொகையுடன், மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியா, தொழில்துறையிலும் விஞ்ஞான வளர்ச்சியிலும் மிகப்பெரிய அளவில் சாதனைகள் படைத்துவரும் ஒரு நாடு. உலகின் அடுத்த வல்லரசு என்று சொல்லிக்கொள்ளும் ஒரு தேசத்தின் மானம் உலக அளவில் துகிலுரியப்பட்டு இருக்கிறது.இந்தியாவில் பிறந்து பிரிட்டனில் வாழ்ந்து வரும் அஹமது சல்மான் ருஸ்டி கடந்த 1988 ம் ஆன்டு தனது 4வது நூலான "சாத்தானின் வேதங்கள்" மூலம் இஸ்லாத்தை விமர்சித்து எழுதியதற்காக ருஸ்டியை ஈரான் முன்னாள் அதிபர் ஆயத்துல்லாஹ் கொமெய்னி கொலை செய்ய வேண்டும் என்று தீர்ப்பளித்தார். ஆனால் மேற்கத்திய நாடுகள் அவனது நரகல் நடை எழுத்திற்கு விருதுகள் வழங்கி கவுரவித்தது. கர்ப்பப்பை சுதந்திரம் (?) கேட்டு எழுதிய வங்கதேச எழுத்தாளர் தஸ்லீமாவுக்கு அமோக வரவேற்புகள் வாழ்த்துக்கள். இது போல் ஒரு சமூகத்தை இழிவு படுத்தி எழுதினால் அதற்கு ஆஸ்கார் விருது. இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. மேற்கத்திய நாட்டின் கேடு கெட்ட கலாச்சாரப் புத்தி இது. மிக திறமைவாய்ந்த இயக்குனரான அந்த வெள்ளைக்காரன் இந்தியாவின் கேவலங்கள் என்று என்ன இருக்கிறதோ, அதை எல்லாம் ஒரே படத்திலேயே வரிசைப்படுத்தி இருப்பது அவனின் அதீத திறமைக்கு ஒரு சான்று. இதில் வரும் அவலங்களான வன்முறை, ஏமாற்றல், அடிப்படை வசதியின்மை, குழந்தை தொழிலாளி, வறுமை, குப்பைகள் நிறைந்த சேரிப்புற வாழ்க்கை, வீட்டு வன்முறை, பாலியல் தொழில், சிறுவர் சீர்கேடு, சிறுவர் வன்முறை, நிழல் உலக தாதாக்கள், மத ரீதியான சண்டைகள், வெட்டுக்குத்துகள், இந்திய சமூகத்தில் பெண் தொடர்பான பார்வை, தொலைக்காட்சி/சினிமா தொடர்பான அதீத மோகம், அதற்கும் மேலாக திருட்டு என்று இத்தனை வருட கால இந்திய சினிமா வரலாற்றில் கொஞ்சம் கொஞ்சமாக, பகுதி பகுதியா காட்டப்பட்டதை எல்லாம் இரண்டு மணி நேரம் மட்டுமே ஓடும் ஒரே படத்தில் காட்டி இந்தியாவின் மானத்தை சர்வதேச அரங்கில் தலைகுனிய வைத்துள்ளான் அந்த இயக்குனன்.இதன் காரணமாகவோ என்னவோ இந்தியரான அந்தப் படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானுக்கு கோல்டன் குலோப் மற்றும் பாஃப்டா விருதுகளும் படத்தொகுப்பாளர், ரெசூல் பூக்குட்டி என்பவருக்கு பாஃப்டா விருதும் வழங்கி அவர்களை ஆஸ்காருக்கும் பரிந்துரைத்திருக்கிறார்கள்.இந்தியாவை கவுரவமாக கேவலப்படுத்த மேற்குலகுக்கு கிடைத்த அரிய ஆயுதம் இந்த படம். அதனால் தான் இந்தப்படத்திற்கு விருது மேல் விருது கொடுத்து அருமையாக விளம்பரம் செய்கிறார்கள்.
முதல் சந்தேகம், ஏ.ஆர் ரஹ்மான் ஆங்கில படத்துக்கு இசை அமைப்பது இது முதல் முறை அல்ல . அவரது முந்தய படங்கள் அதிகம் பேசப்பட வில்லை அல்லது ஏதாவது விருதுக்கு கூட பரிந்துரைக்கப்படவில்லை. இதற்கு என்ன காரணம்.? அவரது திறமை இந்த படம் மூலமாக தான் உலகுக்கு தெரிய வேண்டிய அவசியம் என்ன?
படத்தில் நடிக்கும் எந்த ஒரு முக்கிய கதாபாத்திரமும்(இந்தியர்) ஏன் நல்ல முறையில் சித்தரிக்கப்படவில்லை?நாயகனாக வரும் 2 சகோதரர்களை அதாவது திருடர்களை முஸ்லிம்களாக காட்டியுள்ள இயக்குனன் அதில் ஒரு தொழுகைக் காட்சியும் வைத்து 'நான் பாவம் செய்பவன், என்னை மன்னித்துவிடு இறைவா' என்று இறையும் காட்சிகள் தேவையில்லாமல் புகுத்தப்பட்டு முஸ்லிம்களின் கண்ணியத்தை கொச்சைப் படுத்தியிருக்கின்றான். கதாநாயகனை சுற்றி நடக்கும் அனைத்து கதாபாத்திரங்களும் கொடூரமாக சித்தரிக்கப்பட்டுள்ளதற்கான காரணம் என்ன ...?அவர்கள் மிக மிக கொடூரமாக சித்தரிக்கப்பட வேண்டிய தேவை என்ன? உதாரணமாக அந்த போலீஸ் காரர், தொகுப்பாளராக வரும் அனில் கபூர் கூட ஏன் வில்லனாக சித்தரிக்கப்பட வேண்டும்.சிறுவர்களை கடத்தும் அந்த கும்பல், கண்களை குருடாக்கும் காட்சிகள், அண்ணன் தம்பி உறவு முறிவுக்கான காட்சிகளில் ஏன் அளவு கடந்த கொடூரம்?இவ்வளவு கீழ்த்தரமாக இந்திய மனிதர்களை காட்டும் இயக்குனன், உல்லாச பயணிகளாக வரும் இரு அமெரிக்க பாத்திரங்களை மட்டும் மனிதாபிமானம் உள்ளவர்களாக காட்டுகிறான். அந்த காட்சியிலும் கூட இந்திய போலீஸ்காரர் கொடூரமானவராக சித்தரிக்கப்பட்டுள்ளார். இப்படியான காட்சி அமைப்பு கதையின் கருவிற்கு கட்டாயம் தேவை தானா?
அணு சக்தி ஒப்பந்தம் போடும் நாட்டில் பசியில் திருடும் சிறுவனை ஓடும் ரயில் இருந்து தள்ளி விடுகிறார்கள். மற்ற நாடுகளுக்கு ஆயுத உதவி செய்யும் நாட்டில் எத்தனை கோடி மக்களுக்கு கழிப்பிட வசதி இல்லை.? சந்திரனுக்கு ராக்கெட் விடும் நாட்டில் தான் எத்தனை குழந்தைகள் குப்பை பொருக்கி பிழைக்கிறார்கள். வல்லரசு கனவு காணும் தேசத்தில் எத்தனை கோடி பிச்சைக்காரர்கள்? இதை எல்லாம் பார்க்கும் மேற்கு உலகின் எத்தனை பேர் இந்தியாவுக்கு வர அஞ்சுவர். இதை பார்க்கும் அவர்களுக்கு ஏற்படும் உள ரீதியான தாக்கம் எப்படி இருக்கும். கண்களில் சூடான திராவகத்தை ஊற்றி ஸ்பூனால் கண்களை தோண்டி சிறுவர்களை பிச்சை எடுப்பதற்கு தயார்படுத்துவதை பார்க்கும் அமெரிக்க குழந்தைகள் இனிமேல் இந்தியர்களை எப்படி பார்ப்பார்கள்?வர்த்தக/வளர்ச்சியடைந்த மும்பை நகரின் புற தோற்றமே இது என்றால் மற்ற இந்திய நகரங்கள் பற்றி இதுபோன்ற கேள்விகள் அந்த காட்சிகளை பார்க்கையில் எழும். ஆனாலும் இயக்குனன் பொய்யான ஒன்றை காட்டவில்லை, நிஜமான ஒரு சில சம்பவங்களை காட்சிப்படுத்தியிருக்கிறான். நாம் அமெரிக்கா போன்ற நாடுகளின் மக்களையும், அந்த நாட்டு வாழ்க்கை முறையையும் கேவலமாக சித்தரித்தால் அவர்களும் இது போல தான் கொண்டாடுவார்களா?இந்தியத் திரைப்படத்துறைக்கு அந்த தைரியம் இருக்கிறதா? இந்த படம் மறைமுகமாக ஏற்படுத்தும் சமூக பொருளாதார தாக்கம் என்ன?
இன்னுமொரு சான்று, இந்திய எழுத்தாளர் அரவிந்த் அடியா என்ற ஒருவர் எழுதிய வைட் டைகர் என்ற புத்தகம் கடந்த வருடம் சர்வதேச விருதான பூக்கேர் (The White Tiger wins the 2008 Man Booker Prize for Fiction ) விருது பெற்றது. இதில் கூட அந்த எழுத்தாளர் இந்திய ஏகாதிபத்தியத்தையும், அதன் கலாச்சாரம் மற்றும் பல ஊழல் நடைமுறைகளையும் கடுமையாக விமர்சித்து இருந்தார். அதற்காக விருது வழங்கி அந்த புத்தகம் உலக அளவில் பிரபலப்படுத்தப்பட்டது. இம்முறையும் அது போன்ற ஒரு நிகழ்வே நடை பெறுகிறது. அந்நிய நாட்டு திரை துறையினரின் இந்த போக்கை இந்திய அரசு தொடர்ந்து அனுமதிக்குமேயானால் வரும் காலங்களில் இந்தியாவின் நீதித்துறை, நிர்வாகத்துறை, பாதுகாப்புத் துறைகளில் நடைபெறும் ஊழல்கள் மற்றும் தவறுகள் காட்சிகளாக பதியப்பட்டு சர்வதேச அரங்கில் துகிலுரிக்கப்படும் ஆட்சியாளர்கள் இப்போதே விழித்துக் கொள்ளாவிட்டால் நாட்டின் பாதுகாப்பு எதிர்காலத்தில் கேள்விக்குறியாகிவிடும் என்பதை எச்சரிக்கையுடன் சொல்லி வைக்கிறோம்.
Posted by
Manuneedhi - தமிழன்
at
11:23 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: Adhikaalai Nawin, courtesy : adhikaalai.com, Navanee, Nawin
February 10, 2009
இன்றைய செய்திகள்
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10504&lang=ta&Itemid=52
ஆப்கானில் படுகொலை செய்யப்பட்ட சைமன் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதிஉதவி
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10503&lang=ta&Itemid=52
முல்லைத்தீவு நோக்கி தமிழக வழக்கறிஞர்கள் பயணம்: போலீஸ் கைது நடவடிக்கை
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10502&lang=ta&Itemid=55
வழக்கறிஞர்கள் கோர்ட் புறக்கணிப்பு போராட்டம் வாபஸ்
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10501&Itemid=52
மும்பையில் விமானம்-ஹெலிகாப்டர் மோதல் தவிர்ப்பு
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10500&Itemid=52
வரும் 17-ம் தேதி தமிழக சட்டசபையில் பட்ஜெட் தாக்கல்
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10499&Itemid=52
செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயிலை தொடங்கி வைத்தார் லாலு பிரசாத்
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10496&Itemid=52
சவூதிக்கான இந்திய தூதருக்கு தமிழ்ச்சங்கப் பாராட்டு விழா
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10507&Itemid=52
ஓய்வூதிய அதிருப்தி : விருதுகள் திருப்பியளிப்பு : முன்னாள் ராணுவத்தினர்
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10506&Itemid=52
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலில் தைப்பூச ஜோதி
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10505&Itemid=52
எந்திரனில் (ரோபோ) ரஜினியா? டேனியா?
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10523&Itemid=67
பாலாவின் அடுத்த நான்கு படங்கள்! யாருக்கு ஜாக்பாட்?
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10522&Itemid=67
ஆர்யா இப்போ சூர்யா ரேஞ்சுக்குப் போய்ட்டாருங்க!
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10521&Itemid=67
கல்யாண மாப்பிள்ளையாகப்போகிறார் கஞ்சாகருப்பு
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10520&Itemid=67
டமிளு நாக்கு ஒத்தண்டி : நிகிதா
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10519&Itemid=67
விக்ரம் - கந்தசாமி பாடல் ஒலிப்பதிவு புகைப்படத்தொகுப்பு
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10517&Itemid=67
ரகசியா-கலக்கல் புகைப்படத்தொகுப்பு
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10516&Itemid=67
தினம் ஒரு தகவல் : நிம்மதி - கொல்லிமலைச் சாரல் பொ.ஆனந்த் பிரசாத்
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=blogcategory&id=155&Itemid=244
ஒன்றிப்போதலே வெற்றியின் இரகசியம் - சேமுமு
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10514&Itemid=164
Posted by
Manuneedhi - தமிழன்
at
12:13 AM
0
comments (நெற்றிக்கண்)
Labels: Adhikaalai Nawin, adhikaalai.com, Navanee
January 30, 2009
"அதிகாலை" இன்றைய செய்திகள்
போர்நிறுத்தமும், உத்திரவாதமான பேச்சுவார்த்தையுமே அமைதி தரும்:பா.நடேசன்
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10225&Itemid=52
சென்னை - காந்தி நினைவு தினம் : அரசியில் பிரமுகர்கள் பங்கேற்பு-காணொளி
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10228&Itemid=52
தீக்குளிப்பதற்கு முன் முத்துக்குமார் வினியோகித்த துண்டுப் பிரசுரம்
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10205&Itemid=52
தீக்குளித்து வீர மரணமடைந்த முத்துக்குமாருக்கு விடுதலைப்புலிகள் அஞ்சலி
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10204&Itemid=52
மும்பை தாக்குதல் : ப.சிதம்பரம் - பாகிஸ்தான் தூதரக அதிகாரி சந்திப்பு
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10220&Itemid=52
அமெரிக்கா : ஹிலாரி கிளின்டனின் வெளியுறவு அமைச்சர் பதவி செல்லாது
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10217&Itemid=52
முல்லைத்தீவு-வெளியேறும் பொதுமக்களை நாங்கள் தடுக்கவில்லை:பா.நடேசன்
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10216&Itemid=52
காந்தி நினைவு தினத்தில் புழல் கைதிகளுக்கு விழிப்புணர்ச்சி வகுப்புகள்
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10203&Itemid=52
பார்த்திபன் கனவு # 16 : இரண்டாம் பாகம் - அத்தியாயம் 6 : கலைத்திருநாள்
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10197&Itemid=110
சென்னை - காந்தி நினைவு தினம் : அரசியில் பிரமுகர்கள் பங்கேற்பு-காணொளி
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10228&Itemid=52
காதலா? ஆக்சனா? ஆக்சன்தான் என்கிறார் அருண்விஜய்!
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10233&Itemid=67
மம்மூட்டி பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகிறார்
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10234&Itemid=67
Posted by
Manuneedhi - தமிழன்
at
8:57 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: Adhikaalai Nawin, courtesy : adhikaalai.com, Navanee
January 13, 2009
பாலஸ்தீன் - இஸ்ரேல் : ஆவணப்படம்
Posted by
Manuneedhi - தமிழன்
at
5:05 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: Adhikaalai Nawin, Courtesy : Google Video, Navanee, அதிகாலை, நவநீ, நவின்
January 11, 2009
காங்கிரசின் பச்சைத்துரோகமும் தி.மு.கவின் ஒட்டுத் துரோகமும்!
1956-ல் தமிழகத்தின் பெயர் சென்னை மாகாணம் என்று இருந்ததை தமிழ்நாடு என்று மாற்றச்சொல்லி அறவழியில் உண்ணா நோன்பிருந்தார் சங்கரலிங்கனார். 76 நாள்கள் நோன்பிருந்தும் காங்கிரசின் வஞ்ச மனம் கனியவில்லை. இறுதியில் காலமானார் சங்கரலிங்கனார். இத்தனைக்கும் சங்கரலிங்கனாரும் ஒரு காங்கிரசுக்காரர்தான். காந்தியாருடன் தண்டியாத்திரை சென்றவர் அவர்.தமிழ், தமிழர் என்று வந்தால் காங்கிரசு கட்சிக்கு காங்கிரசுக் காரரும் பகையாவர் என்பதற்கு இது சான்று. அந்த சூக்குமம் புரிந்ததால்தான் எந்தத் தமிழ்நாட்டுக் காங்கிரசுக்காரரும் தமிழ் தமிழர் என்று பேசுவதில்லை என்பதை ஓர்க. வெள்ளையர் போனபின்னர் தமிழ்நாட்டிற்காக, தமிழருக்காக உயிர் ஈந்த இவரோடு காங்கிரசின் கணக்கு தொடங்கி குறி வைத்து தமிழினத்தை அது அழித்து வருகிறது.
"தமிழ், தமிழர் என்று வந்தால் காங்கிரசு கட்சிக்கு காங்கிரசுக் காரரும் பகையாவர்"
ஒவ்வொரு தமிழரைக் கொன்ற போதும், "இந்தி தெரியாவிட்டால் நீ இந்தியனே இல்லை" என்று சொல்லிக் கொன்று போட்டன காங்கிரசின் வடக்கு மூளைகள்! அந்தப் பகையோடு 1967-ல் இடுப்பொடிந்து போன காங்கிரசு 1987-ல் தமிழீழத்தில் திலீபன் உண்ணா நோன்பிற்குக் காரணமாய் இருந்து அவர் உயிரையும் காவு வாங்கியது. காங்கிரசை காந்தியார் கலைக்க வேண்டும் என்று சொன்னது அதன் இரத்த வெறியை அறிந்ததனால் இருக்கக் கூடும்.
தமிழகத்தில் சங்கரலிங்கனாரையும், தமிழீழத்தில் திலீபனையும் பலிவாங்கியது காங்கிரசு. காந்தியம் பேசும் காங்கிரசிடம் அறப்போராட்டங்களும் செல்லாது என்பதற்கு தமிழினத்தின் மேல் அது தொடுத்த இந்தத் தாக்குதல்கள் காட்டா நிற்கின்றன.
தொடரும் அதன் தமிழின இரத்த வேட்கையே, 1987-ல் ஒன்னே கால் இலக்க அரணத்தை அனுப்பி, தமிழீழத்தில் 8000 பேரைக் கொன்றதும், கண்ணில் பட்ட மகளிரை சீரழித்ததும். மற்று, 2004ல் ஆட்சிக்கு வந்த காங்கிரசு கருணாநிதியுடன் ஒரு புரிந்துணர்வை ஏற்படுத்திக் கொண்டு, மெல்ல மெல்ல தமிழீழத்தில் நடந்த பேச்சு வார்த்தைகளைக்கெடுத்து, தமது இத்தாலி வழி தொடர்புகளாலும், இந்தியாவின் பல்வேறு துறைசார் தொடர்புகளாலும் தமிழீழ மக்களை உலக அரங்கில் தனிமைப் படுத்தி, சிங்களன் துணையோடு இன்றைக்குப் பல்லாயிரம் தமிழர்களைக் கொன்று வருகிறது.
Posted by
Manuneedhi - தமிழன்
at
10:13 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: Adhikaalai Nawin, courtesy : adhikaalai.com, Navanee
January 10, 2009
ஐக்கிய அமீரகத்திலும் ஆர்.எஸ்.எஸ் ஆதிக்கமா?
ஐக்கிய அமீரகத்திலும் ஆர்.எஸ்.எஸ் ஆதிக்கமா? ஐக்கிய அமீரகத்தில் உள்ள ஷார்ஜா ஒளிபரப்பு சேவையில் வெளிநாட்டு இலக்கியங்கள் என்ற பெயரில் ஒளிபரப்பும் நிகழ்ச்சியை நடத்துபவரான ராயத் அமான் என்பவர் இதை வெளிப்படுத்தியுள்ளார். டாக்டர் ஆர்.சிங் எழுதியுள்ள "அனைத்து இந்துக்களும் விழிப்படையுங்கள்" - இந்து தலைவர்களின் உடன்படிக்கை குறிப்பேடு : என்று பெயரிடப்பட்டுள்ள இப்புத்தகத்தில் மற்றவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும்படியான அந்த 13 கட்டளைகள் என்ன?
http://manuneedhy.googlepages.com/PAGE2.pdf
Posted by
Manuneedhi - தமிழன்
at
4:26 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: adhikaalai, Adhikaalai Nawin, manuneedhi, Navanee, nawin collections
January 06, 2009
அதிகாலை இன்றைய செய்திகள்
ஐயப்ப பக்தர்கள் தங்குவதற்கு மசூதியில் இடமளிக்கும் முஸ்லிம்கள்
சபரிமலை ஜன 07 : திருச்சூர் அருகே உள்ள ஒரு மசூதியில் ஐயப்ப பக்தர்கள் தங்குவதற்கு முஸ்லிம் மக்கள் வசதி செய்து கொடுக்கும் சம்பவம், மத நல்லிணக்கத்திற்கு ஓர் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=9497&lang=ta&Itemid=52
சென்னை வரும் பிரதமருக்கு கறுப்புக் கொடி: பழ.நெடுமாறன்
தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்பு குழுவின் அமைப்பாளர் பழ.நெடுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=9461&lang=ta&Itemid=52
பாகிஸ்தான்:"நாங்களும் போருக்குத்தயார்"-ஷெர்ரி ரெஹ்மான் (Sherry Rehman)
இஸ்லாமாபாத் ஜன 06 : பழி சுமத்தும் விளையாட்டை இந்தியா முதலில் நிறுத்தவேண்டும். தீவிரவாதத்தை ஒழிக்க எப்படி முயற்சிக்கலாம் என்பதை விட்டுவிட்டு பாகிஸ்தான் மீது எப்படியெல்லாம் பழிசுமத்தலாம் என்பதில் மட்டுமே இந்தியா கவனமாக இருக்கிறது
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=9453&lang=ta&Itemid=52
சென்னையில் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் விழா:
பிரதமர் இன்று வருகை வெளிநாட்டில் வாழும் இந்தியர்களுக்கான விழாவில் கலந்து கொள்ள பிரதமர் மன்மோகன் சிங் இன்று (புதன்கிழமை) டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வருகிறார்.
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=9460&lang=ta&Itemid=52
லாரிகள் வேலை நிறுத்தம் :உரிமங்களை அரசிடம் ஒப்படைக்க உரிமையாளர்கள் தயார்
மத்திய அரசு எச்சரிக்கையை மீறி லாரிகள் வேலை நிறுத்தம் நேற்று 3-வது நாளாக நீடித்தது. வெளிமாநில லாரிகள் வராததால் சர்க்கரை மூட்டைக்கு ரூ.40 உயர்ந்தது.
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=9459&lang=ta&Itemid=52
இலங்கை பிரச்சனை - மத்திய அரசுக்கு எதிராக போராட்டம்: நல்லகண்ணு
இலங்கை பிரச்சினையில் மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால், போராட்டம் தொடரும் என்று, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு கூறினார்.
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=9458&lang=ta&Itemid=52
வெளிநாட்டு விமானக்கட்டணம் குறைக்கப்படமாட்டாது : ஜெட் ஏர்வேஸ்
மும்பை ஜன 07 : வெளிநாட்டு விமானக்கட்டணம் தற்போது குறைக்கப்படமாட்டாது என்று ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. கச்சா எண்ணைய் விலை அதிகரிப்பு : கடந்த வருடம் கச்சா எண்ணையின் விலை ஒரு பேரலுக்கு 140 டாலருக்கு மேல் உயர்ந்தது.
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=9455&lang=ta&Itemid=52
அபுதாபியில் முதன்முறையாக இலவச பேருந்து சேவை
அபுதாபி ஜன 07 : குறிப்பாக வளைகுடா நாடுகளில் போக்குவரத்துப் பிரச்சினைகளை சந்திப்பது பெரும்பாலும் புலம்பெயர்ந்து அங்கு வாழும் வெளிநாட்டவர்களே. காரணம் அங்கு நிரந்தரமாக வசிப்பவர்கள் அனைவருமே கார் போன்ற வாகனங்கள் சொந்தமாக வைத்திருப்பவர்கள்தான்.
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=9469&lang=ta&Itemid=52
இஸ்ரேலிய தாக்குதல் : சவுதி அரேபியாவில் ரத்ததான முகாம்கள்
மனிதர்களுக்குள் பாகுபாடு, பிரிவினை போன்றவைகள் இருப்பினும் ஆபத்துக் காலங்களில் தேவையறிந்து செய்யும் சேவைகளில் இரத்ததானம் என்பது விலை மதிப்பற்ற ஒரு தானம் என்பது நாமனைவரும் அறிந்ததே!
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=9466&lang=ta&Itemid=52
திருமங்கலம் பிரசாரம் இன்றுடன் முடிகிறது திருமங்கலம்
இடைத்தேர்தலுக்கான பிரசாரம் புதன்கிழமை (ஜன.7) மாலை 5 மணியுடன் முடிவடைகிறது.
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=9468&lang=ta&Itemid=52
பாகிஸ்தான் அரசின் கொள்கையே தீவிரவாதம்தான்: பிரதமர் குற்றச்சாட்டு
பாகிஸ்தான் அரசின் கொள்கையே தீவிரவாதம்தான் என்றும் மும்பையில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள், பாகிஸ்தான் அரசு அமைப்புகளின் உதவியுடன் தாக்குதல் நடத்தி இருப்பதற்கு ஆதாரம் கிடைத்து உள்ளதாகவும் பிரதமர் மன்மோகன்சிங் கூறியுள்ளார்.
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=9463&lang=ta&Itemid=52
Honey, I Shrunk the Kids - திரைப்பட விமர்சனம்
Wayne Szalinski என்ற குறும்பு விஞ்ஞானி ஒருவர் செய்யும் விஷப்பரிட்சைகளால் குழந்தைகள் சுறுங்கி எறும்பை விட சிறியதாய் உருமாறி விடுவதே Honey, I Shrunk the Kids வெளி வந்தது 1989. பொருட்களை மிகச் சிறியதாய் உருமாறச் செய்யும் ஒரு நவீன கருவி கண்டுபிடிக்கிறார் Wayne Szalinski.
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=9451&lang=ta&Itemid=71
Honey I Blew Up the Kid - திரைப்பட விமர்சனம்
விஞ்ஞானி Wayne Szalinski. ஆனால் இந்த முறை மின்சாரம் மூலம் பொருட்களை மிகப்பெரியதாய் உருமாறும் கருவியை கண்டுபிடிக்கிறார். இந்த முறையும் சரியாக வேலை செய்யவில்லை.
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=9450&lang=ta&Itemid=71
Posted by
Manuneedhi - தமிழன்
at
11:48 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: Adhikaalai Nawin, courtesy : adhikaalai.com, manuneedhi, Navanee
January 05, 2009
சேதுசமுத்திரமும் வேண்டாம் ஒரு மயிரும் வேண்டாம்!
கன்னடத்தான் வெளிப்படையாகச் சொல்லிவிட்டான் - 'எங்கள் கட்சி தமிழர்களை ஒழிக்க முழுமனதோடு சிங்களவனுக்கு உதவுகிறது' என்று. சிங்களனின் கட்சியாகிவிட்ட காங்கிரசின் தயவும், அக்கட்சியின் எந்த உதவியும் இனி தமிழகத்திற்குத் தேவையில்லை. காங்கிரசே அந்நியன் கட்சியாக, பகைவனின் கட்சியாகப் போய்விட்ட பின்னர் அந்தக் கட்சி தமிழகத்தில் எதுவும் செய்யமுடியாமல் ஒழிந்து போக வேண்டும். அது மட்டுமல்ல, அவர்கள் தயவால் தமிழருக்குப் பயன் எதுவும் தேவையில்லை. தமிழனுக்கு இன்னும் கொஞ்சம் மானமும் சூடு சொரனையும் இருக்கவே செய்கிறது.என்னையும் உள்ளிட்ட பலர் சேது சமுத்திர திட்டத்தினை எதிர்பார்த்தவர்கள்தான். தமிழக மக்களின் ஞாயமான எதிர்பார்ப்புதான் அது என்பதில் ஐயமில்லை. ஆனால், சிங்களனின் கைப்பாவையான சோனியா காந்தியின் தயவாலோ, மன்மோகன் என்ற துரோகியின் ஆதரவாலும், ப.சிதம்பரம் என்ற தமிழ்க் குலக் கருங்காலியாலும் இந்த சேது சமுத்திர திட்டம் தமிழர்களுக்கு நடை பெற வேண்டாம். இவர்களினால் இந்தத் திட்டம் தமிழ்நாட்டுக்கு வரும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை என்ற போதிலும், இதையெல்லாம் வைத்து கருணாநிதியோ மற்ற தமிழக அரசியல்வாதிகளோ காங்கிரசிற்குப் போவார்களே ஆனால், அது தமிழ் மக்களுக்கு அவமானம். சேது சமுத்திரம் என்பது தமிழ்நாடு மேலும் வளர்ச்சி பெற நடைபெறுகின்ற ஒரு முனையல். அவ்வளவுதான். தமிழ் இனமே புல் பூண்டு இல்லாமல் காங்கிரசுக் காரர்களால் அழிக்கப் படும்போது, அந்தப் பேரழிவைச் செய்யும் காங்கிரசுக்கட்சியின் தயவால் எந்த ஒரு பயனும் தமிழகத்திற்கு வேண்டியதில்லை. சேது சமுத்திர முனையல் இல்லாவிடில் தமிழகத்தில் எதுவும் குடி முழுகிப் போகப் போவதில்லை. ஒரு இனம் உயிர் வாதையில் இருக்கும்போது உயிர் காப்பது முக்கியமா? அல்லது அந்த உயிர்களை வாங்கும் காங்கிரசுக்கட்சியை நக்கிக் கொண்டு இருப்பது முக்கியமா?
Posted by
Manuneedhi - தமிழன்
at
12:26 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: நவநீ, நவின், நன்றி : நாக.இளங்கோவன், மனுநீதி, மானஸ்தன்
December 24, 2008
ராஜீவ் காந்தி கொலை - அவிழத் தொடங்கியுள்ள மர்மங்கள்
ரங்கநாத்..... முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ்காந்தியின் படுகொலை வழக்கைப் பற்றி அறிந்து வைத்திருப்பவர்களுக்கு இந்தப் பெயர் நன்கு பரிச்சயம். ஏனெனில்,ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட பிறகு, சம்பவத்திற்குக் காரணமான முக்கியக் குற்றவாளிகள் சுமார் இருபத்தொரு நாட்கள் பெங்களூருவில் பதுங்கியிருந்தது ரங்கநாத்தின் வீட்டில்தான். ராஜீவ் கொலை வழக்கில் 26-வது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்ட ரங்கநாத், தூக்குத் தண்டனைக் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு, பின்னர் விடுதலை செய்யப்பட்டவர்.91-ம் ஆண்டு மே மாதம் 21-ம் தேதி இரவு ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்டார். விடுதலைப் புலிகள் அமைப்பினர்தான் இந்தப் படுகொலையைச் செய்தார்கள் என 26 பேருக்கு தடா நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்தது. பின்னர் உச்சநீதிமன்றத்தில் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி ஆகியோருக்குத் தூக்குத் தண்டனையும், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது. இதில் சோனியாகாந்தியின் கருணையால் நளினியின் தூக்கு, ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. `ராஜீவ்காந்தி படுகொலைக்கு உண்மையான காரணம் என்ன?' என்று அறிவதற்கு காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டதாகச் சொல்கிறார்கள். அந்த நேரத்தில்தான் ஒற்றைக்கண் சிவராசன், சுபா உள்பட சில குற்றவாளிகள் கடைசியாக ரங்கநாத்தின் வீட்டில் பதுங்கி இருந்ததால், அவருக்கு இந்தப் படுகொலையின் நிஜப்பின்னணி தெரிய வாய்ப்புள்ளது என்று சோனியாகாந்தி உறுதியாக நம்பியிருக்கிறார். ஏனென்றால், படுகொலைச் சம்பவம் நடந்தபிறகு, பெங்களூருவில் குற்றவாளிகள் பதுங்கியிருந்த 21 நாட்களும் அவர்களைச் சுற்றி நடந்த பல்வேறு விஷயங்கள் சோனியாவின் கவனத்திற்குப் போயிருக்கின்றன. இதையடுத்து, ரங்கநாத்தைச் சந்திக்க சோனியா விருப்பப்பட்டிருக்கிறார். அதன்பேரில், தமிழ்நாட்டில் உள்ள முக்கியமான தமிழ் உணர்வாளர் (முன்பு காங்கிரஸில் பொறுப்பு வகித்தவர்) ஒருவர் மூலம், தமிழக காங்கிரஸ் வி.ஐ.பி. ஒருவர் இந்தச் சந்திப்புக்கு ஏற்பாடு செய்தார் எனவும் தகவல்கள் உலா வருகின்றன. டெல்லியில் நடந்த இந்த 'ரகசிய சந்திப்பில்' படுகொலையின் முக்கியமான விஷயங்களை சோனியாவிடம், ரங்கநாத் கூறியதாகவும் சொல்கின்றனர். தற்போது சிறையில் உள்ள 'ராஜீவ் கொலையாளிகள் வெறும் கருவிகள்தான்' என்ற மனநிலைக்கு சோனியா மாறியதற்கும் ரங்கநாத்தின் சந்திப்பைத்தான் முக்கியமானதாகக் கூறுகிறார்கள் தமிழ் உணர்வாளர்கள். இந்தச் சந்திப்பு குறித்து இதுவரை சோனியாவோ, ரங்கநாத்தோ மீடியாக்களின் கவனத்திற்குக் கொண்டு செல்லவில்லை. சோனியாவும், 'எனது கணவர் கொலையில் தொடர்புடையதாகச் சொல்லப்படுபவர்களை தூக்கில் போட எமக்கோ, எமது குழந்தைகளுக்கோ சிறிதும் விருப்பமில்லை' என தனது நிலையைத் தெளிவாக எடுத்துக்கூறியுள்ளார். தொடர்ந்து வாசிக்க இணைப்பில் செல்க : http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=9068&lang=ta&Itemid=163
Posted by
Manuneedhi - தமிழன்
at
8:47 AM
0
comments (நெற்றிக்கண்)
Labels: courtesy : adhikaalai.com
December 16, 2008
நக்கிப்பிழைக்கும் சிங்களப் பொன்சேகனின் கொக்கரிப்புகள்!
ஈராக்கிற்குச் சென்ற சியார்ச் புச்சிற்கு (George W Bush) அந்நாட்டு மிடையக்காரர் ஒருவர் செருப்பால் அடி கொடுத்து அவமானம் செய்திருக்கிறார். ஈராக்கில் போர் தொடுத்து பல ஆயிரம் பேர்களைக் கொன்று குவித்த வெறுப்பில் அப்படி நடந்தது என்று அவரும் அந்நாட்டு மக்களும் சொல்வதாக செய்திகள் சொல்லுகின்றன.1987ல் சிங்களத்திற்கு ஆதரவாக இந்தியத் தலைமை அமைச்சர் இராசீவ்காந்தி நடந்து கொண்டு, அந்நாட்டிற்குப் பயணம் செய்தபோது, தமிழர்களுக்கு எதிராக காங்கிரசு அரசும், சிங்கள அரசும் செய்த அரசியலுக்கு உடந்தையாக இராசீவ் காந்தி இருந்த போதும், இந்தியாவை சிங்களச் சிறுசக்தியின் கையாளாகவே இராசீவ் ஆக்கிய போதும் கூட, இந்தியாவின் மேலும் இந்தியர்களின் மேலும் உள்ள வெறுப்பாலும் பகையாலும் அந்நாட்டின் அரணவீரர் ஒருவர் இராசீவ்காந்திக்குக் கொடுக்கப்பட்ட அரச வரவேற்பின்போது துப்பாக்கியாலேயே அடித்தார். அப்பொழுது இந்தியாவே வெட்கப்பட்டது. அரசியலின் வயதும் வரலாற்றின் வயதும் மிகப் பெரியது; இந்திய அரசு மற்றும் அரசியல்வாதிகளின் காலை நக்கி உதவி பெற்று பிழைப்பை ஓட்டும் பொன்சேகன் அதே இந்திய அரசியல்வாதிகளைக் கோமாளி என்கிறான்.
புச்-ஐ ஈராக்கியன் ஒருவன் செருப்பால் அடித்ததும் இராசீவை சிங்களன் ஒருவன் துப்பாக்கியால் அடித்ததும் பகை வெறுப்பின் வெளிப்பாடுகள்தானே.
இந்தியாவின் பகை நாடுகளுடன் மிகுந்த நட்பு கொண்டுள்ள சிங்களர்கள் இந்தியாவை எப்பொழுதும் பகைவராகவே கருதுபவர்கள். இந்திய வெறுப்பு என்பது சிங்களர்களின் குருதியில் ஊறிய ஒன்று.
ஈராக்கின் அமெரிக்க, புச் வெறுப்பினால் எப்படி ஒரு தனியர் அந்நாட்டின் தலைவரை செருப்பால் அ
டித்தாரோ, அதே வெறுப்பைத்தான் சிங்களர் இந்தியாவின் மேலும் இராசீவ் காந்தியின் மேலும் கொண்டிருந்தனர், கொண்டிருக்கிறார்கள். தீராத அழுக்காறு கொண்டுள்ள அந்தச் சிங்களத்திற்குப் பரிந்து கொண்டுதான் இந்தியாவும் காங்கிரசும் இராசீவ் காந்தியின் கொலைக்கு முன்னரும் சரி பின்னரும் சரி தமிழர்களுக்கு எதிராகவும் சிங்களச் சிறுமைக்கு ஆதரவாகவும் நடந்து கொள்கின்றன. இந்தியாவை என்றைக்கும் வெறுக்கும் சிங்களர்களுக்கு ஆதரவாக, இந்தியாவின் பகை நாடுகளின் பேரன்பையும் பேராதரவையும் பெற்றுள்ள சிங்களத்திற்கு ஏன் இந்தியா இத்தனை பரிவு காட்டுகிறது?குறைந்த பட்சம் தமிழ்நாட்டு அழுகுனிகளும், பொய்யர்களும், காங்கிரசுக்காரர்களும் இராசீவ் காந்தி சிங்களவனால் அடித்து அவமானப் படுத்தப்பட்டது இராசீவ் மரணத்திற்கு 4 ஆண்டுகளுக்கு முன்னர் என்பதனை ஒத்துக் கொள்வார்கள். இராசீவ் காந்தியை அடித்து அவமானப் படுத்திய சிங்களவர்களைக் குளிர்விக்க இராசீவ் காந்தியின் இந்திய அரசால் அனுப்பப்பட்ட இந்திய அமைதிப் படை 10,000 தமிழர்களுக்கு மேல் கொன்று குவித்தது.
இப்படி இராசீவ் குடும்பம், இராசீவ் காலத்திலே 10000க்கும் மேலான தமிழர்களைக் கொன்று தனது சிங்கள நேயத்தைக் காட்டியும், பின்னர் இராசீவ் மறைந்த பின்னர், சோனியாகாந்தியும் மன்மோகனும் சிங்களர்களுக்கு நேயமாக இருந்து தமிழர்களைக் கொன்று குவித்துக் கொண்டிருந்தும், சிங்களனின் இந்திய எதிர்ப்பும், வெறுப்பும், பகையும் துளியும் குறையவில்லை.
அதனால்தான் இன்றைக்குப் பொன்சேகன் என்ற சிங்களப் படைத்தலைவன், "இந்திய அரசியல் வாதிகள் கோமாளிகள்" என்று சொல்கிறான்.
சிங்களன் தொடர்ந்து இந்தியர்களை அவமானப் படுத்தவேண்டிய காரணமும் என்ன?
அன்று இந்திய நாட்டின் தலைமை அமைச்சரான இராசீவ் காந்தியை அடித்ததும் அதே சிங்கள அரணவன்தான். இன்றைக்கு இந்திய நாட்டின் அரசியல்வாதிகளை கோமாளிகள் என்று சொல்பவனும் அதே சிங்கள அரணவன்தான்.
இப்படித் தொடர்ந்து பக்கத்துப் பகை நாடான சிங்களனிடம் தொடர்ந்து அவமானத்தை இந்தியாவிற்கு அள்ளிக்கொண்டு வரும் பணியைத்தான் இராசீவ் குடும்பத்தினரும், காங்கிரசுக் கட்சியும், நாராயணனும், சிவசங்கரனும் இன்ன பிறரும் செய்து கொண்டே இருக்கிறார்கள். இவர்கள் எல்லாம் சேர்ந்து பல்லாயிரம் தமிழர்களை சிங்களனுக்குப் பந்தி வைத்துவிட்டவர்கள்.
இருப்பினும், இந்திய அரசியல்வாதிகள் உலகிலே எந்த நாட்டிலும் இல்லாத சனநாயகத்திற்குச் சொந்தக்காரர்கள். இந்த அரசியல்வாதிகளின் பல்குரல்களையும் பலத்த குரல்களையும் பற்றிப் பேச, இனவெறியிலும், நாசகாரத்திலும், அடக்குமுறையிலும் ஊறிப்போன சிங்களவனுக்கு சிறு அருகதையும் கிடையாது.
செயலலிதாவாகட்டும், தமிழகக் காங்கிரசுக் காரர்களாகட்டும், கருணாநிதி ஆகட்டும் இன்ன பிற இந்திய அரசியல்வாதிகளாகட்டும் - அவர்கள் எம் நாட்டு மக்கள், எமது மக்களுக்காக ஒரு கணமேனும் உழைத்த அரசியல்வாதிகள்.
எமது ஊரிலே பழமொழி சொல்வார்கள். "கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை" என்று. எமது இந்திய அரசியல்வாதிகளின் அருமையும் எமது சனநாயகத்தின் அருமையும், இனவெறியில் ஊறித்திளைக்கும் பண்பாடற்றவர்களுக்கு மட்டும்தான் கோமாளித்தனமாக இருக்கும்.
எமக்குள், எமது இந்திய நாட்டுக்குள், எமது அரசியல்வாதிகளுக்குள், எமது கட்சிகளுக்குள் ஆயிரம் வேறுபாடுகள் இருக்கும்.
அது எமது சனநாயகத்தின், ஒரு மாபெரு பன்முகக் குமுகத்தின் அடிப்படை நாதம்!
அதன் வேர்களும் விழுதுகளும் ஆகிய எமது இந்திய அரசியல்வாதிகளை கோமாளிகள் என்று சொல்ல அறிவும் பண்பாடும் அற்ற வெறியர்களால் மட்டுமே முடியும். அந்த வெறிக் குணத்தைத்தான் சிங்களத்தின் அரணனான பொன்சேகன் காட்டுகிறான்.
வைகோ என்ற எமது தமிழ்-இந்திய அரசியல்வாதி ஏற்ற கொள்கையில் என்றும் நிற்பவர்!
எமது நாட்டின் சனநாயகத்திலே வைகோவின் அரசியல் நிலையிலே எமது மக்கள் அவரின் மாற்றங்களைக் கிடுக்கக் கூடும்! இது எமது சனநாயக அரசியலிலே மிகச் சாதாரணம். சிலர் கிடுக்குவதால் வைகோ எமது நெஞ்சை விட்டு அகன்றவர் இல்லை. தமிழர் நெஞ்சங்களில் அரசியலுக்கு அப்பாற்பட்டு நீங்காத இடம் வைகோவிற்கு உண்டென்பது முட்டாள்களுக்குப் புரியாது என்பது போலவே பொன்சேகனுக்கும் புரியவில்லை.
Posted by
Manuneedhi - தமிழன்
at
8:41 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: Adhikaalai Nawin, Navanee, சென்னை நவின், நவநீ, நவின், நன்றி:அதிகாலை
December 09, 2008
சர்ச்சைக்குரிய பாபர் மசூதியின் பாரம்பரிய வரலாறும் அதன் திசை திருப்பப்பட்ட சோடிப்புகளும்
1949ஆம் ஆண்டு டிசம்பர் 23 அன்று முஸ்லிம்கள் பாபர் மசூதியில் இரவுத் தொழுகையை நிறைவேற்றிவிட்டு வீடுகளுக்குச் சென்றனர். மீண்டும் வைகறைத் தொழுகைக்காக பள்ளிவாசலுக்கு வந்த முஸ்லிம்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பள்ளிவாசலுக்குள் ராமர், சீதை, இலட்
சுமணர் ஆகியோரின் சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. ராமர் தனது ஜென்மஸ்தானத்தில் அவதரித்து விட்டார் என்று ஒரு கும்பல் கலாட்டாவில் இறங்கியது. வன்முறைக் கும்பல் பள்ளிவாசலுக்குள் நுழைந்து சிலைகளை வைத்ததாக பைஸாபாத் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. இதன் பின்னர் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி புரிந்த காங்கிரஸ் அரசுகள் தொழுகைக்குத் தடை விதித்ததிலிருந்து பாபர் மசூதி பிரச்சினை நாட்டில் மிக முக்கியமான பிரச்சினையாக நீடித்து வருகிறது. 'இராமர் கோயிலை இடித்துக் கட்டப்பட்டதே பாபர் மஸ்ஜித்' என்ற புளுகு மூட்டையை சூதுவாது அறியாத இந்துக்கள் மனதில் அவிழ்த்துவிட்டு அவர்களில் பலர் அந்தப் பொய்யை நம்புகின்ற நிலையும் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க இணைப்பில் செல்க : http://manuneedhy.googlepages.com/Babari_Masjid_History.pdf
Posted by
Manuneedhi - தமிழன்
at
10:14 AM
0
comments (நெற்றிக்கண்)
Labels: Adhikaalai Nawin, Courtesy:onlinepj, Navanee, tntj, அதிகாலை நவின், சென்னை நவின், நவநீ, நவின், பாபர் மசூதி
November 29, 2008
நன்றி நவிலல் தினம் - Thanks Giving Day
"டாங்க்கி"
"கா பை"
"ஹ்வாலா"
"மாகே"
"டாரிம்"
என்ன? புதுசுபுதுசா எதோ சொல்றேன்னு பாக்குறீங்களா? இந்த முகவரிக்கு எப்படிப் போகலாங்க"ன்னு ஒருத்தர்ட்ட கேட்டா, அவர் பொறு
மையா அந்த இடத்துக்குப் போகும் வழியைச் சொன்னா நாம் என்ன சொல்வோம். ரெம்ப நன்றிங்க என்று சொல்கிறோம் இல்லையா? அந்த நன்றி என்ற சொல்லுக்கு உலகில் ஒவ்வொரு நாடும் என்ன மாதிரி சொல்றாங்க? அதத்தான் மேல சொன்னேன். எந்த நாட்டுல் எப்படிச் சொல்றாங்கன்னு இந்தக் கட்டுரையின் இறுதியில் ஒரு பட்டியல் இருக்கு. அதப் பாத்து நீங்க நன்றியை எங்க எப்படிச் சொல்லலாம்ன்னு தெரிஞ்சுக்கலாம். சரி இப்ப விசயத்துக்கு வருவோம்!"எந் நன்றி கொண்டார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய் நன்றி கொன்ற மகற்கு"
இன்று நேற்றல்ல ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அய்யன் திருவள்ளுவர் திருவாய் மலர்ந்தருளிய வேதமிது. அமெரிக்கர்கள் வருடத்தில் ஒருநாளை நன்றி சொல்ல ஒதுக்கியிருக்கிறார்கள். அதுக்காக மத்த நாள்ல அமெரிக்கர்கள் நன்றி சொல்ல மாட்டாங்களா என்று யாரும் கேட்டுவிடாதீர்கள்.
அமெரிக்கா வாழ் இந்தியர்கள் ஒருவரை ஒருவர் நேருக்கு நேர் சந்திக்க நேர்ந்தால் கூட பார்க்காத மாதிரி ஒதுங்கியும், முகத்தைத் திருப்பிக் கொண்டும் செல்வதை பெரும்பாலும் அமெரிக்காவில் காண முடியும். அறிமுகமில்லாத ஒரு இந்தியர் இன்னொரு இந்தியரைப் பார்த்து நமஸ்தே... வணக்கம்.... ஹாய்..... என்று சொல்கிறார் என்றால் சொன்னவர் அமெரிக்காவுக்குப் புதுசு என்று அர்த்தம்.அதே நேரத்தில் அறிமுகமில்லாத ஒரு அமெரிக்கர்/ரி ஒருவரை ஒருவர் சந்திக்க நேரிட்டால் ஹலோ... ஹாய் என்பார்கள். எப்படி இருக்கிறீர்கள்? என்றெல்லாம் கூட விசாரிப்பதும், உதவி என்ற வகையில் அல்லாமல் ஒரு சாதாரண தகவலைச் சொன்னால் கூட நன்றி என்று நாலு முறை நாவலிக்காமல் சொல்லுகிறவர்கள் அமெரிக்கர்கள். வருசம் முழுக்க எங்களுக்காக உழைச்சீங்க, உங்களுக்கு எங்கள் நன்றிகள்! முதலாளிகள், தொழிலாளிகளுக்கும்; நிர்வாகம் தங்கள் ஊழியர்களுக்கும்; ஒருவருக்கொருவர் நன்றி பரிமாறிக்கொள்ளும் நன் நாளாக, ஆண்டுதோறும் நவம்பர் மாதம் நான்காம் வாரத்தில் வியாழக் கிழமை அனுசரிக்கப்படுகிறது. இன்றைக்கு அமெரிக்கா முழுமைக்கும் இந்த நன்றி நவிலப்படுகிறதற்கு காரணம் யார்?
இங்கிலாந்து...!
ஏன்?
இதற்கும் ஒரு பின்னணி உண்டு. அது என்னவென்று பார்ப்போமா?
இங்கிலாந்து
1600-களில் இங்கிலாந்து நாட்டின் கிறிஸ்தவ தேவாலயங்கள் அந்த நாட்டை ஆண்டுவந்த அரசனின் இரும்புப் பிடிகளுக்குள் சிக்கித்தவித்தது. இப்படித்தான் வழிபடவேண்டும்; மதச் சடங்குகள் இன்னின்னபடிதான் நடைபெறவேண்டும்; பிறப்பாயிருந்தாலும், இறப்பாயிருந்தாலும் அரசகட்டளைப்படிதான் நடக்கவேண்டும், என்கிற கட்டுப்பாடு கிறிஸ்தவர்களுக்குள் பிரிவினையை ஏற்படுத்தியது. ஒரு சாரார் அரச கட்டளைக்கு எதிரானவர்கள் என முத்திரை குத்தப்பட்டு வெஞ்சிறைகளில் அடைக்கப்பட்டு சித்திரவதைகளுக்கு ஆளாகினர். தங்களுக்கு விருப்பமான முறையில் கடவுளை வணங்கமுடியவில்லையே என்று எண்ணியவர்கள் ரகசியமாக திட்டம் தீட்டி இங்கிலாந்தைவிட்டு வெளியேறுவது என்ற முடிவுக்கு வந்தனர். இவர்கள் "புரிடான்ஸ்" (puritans) என அழைக்கப்பட்டனர்.மத சுதந்திரம் வேண்டி, தங்கள் தாயகத்தை விட்டு ஆண்களும் பெண்களும் குழந்தைகளுமாக, "ஸ்பீட் வெல்" மற்றும் "மே ·ப்ளவர்" என்ற இரண்டு கப்பல்களில் இலக்கு இல்லாத தங்கள் பயணத்தை (செப்டெம்பர் ,1620ம் ஆண்டு) துவங்கினர். உணவு, துணி, யுதம், விவசாயக் கருவிகள், விதைகள் என்கிற சேகரிப்புகளோடு நிரந்தரமாகப் புலம் பெயர்ந்துவிடுகிற முயற்சியாகப் பயணித்தனர்.
கனவு பூமி
ஏதோ ஒரு துணிச்சலில் குழந்தை குட்டிகளோடு 1620ம் ஆண்டு செப்டெம்பர் திங்கள் ஆறாம் தேதி 102 பயணிகளுடன் 32 குழந்தைகள் உடபட கிளம்பிய அவர்களுக்கு இன்ன இடத்துக்குத்தான் போகிறோம் என்கிற உறுதியில்லாமல் கப்பல் போன போக்கில் பயணித்தனர்! கடற்பயணம் எளிதாக அமைந்துவிடவில்லை. நிலம் காணா நீர்ப்பரப்பு நீண்டு கொண்டே போக, கடல் நோய் கண்டு பலர் தங்கள் கனவு நிறைவேறாமலேயே மாண்டுபோயினர். கடற்பயணத்திலேயே இரு தம்பதியர்க்கு குழந்தை பிறந்ததும் குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து வாசிக்க இணைப்பில் செல்க : http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=7600&lang=ta&Itemid=163
Posted by
Manuneedhi - தமிழன்
at
3:43 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: Adhikaalai Nawin, Thanks giving day, அதிகாலை நவின், அதிகாலை.காம், சென்னை நவின், நவநீ, மனுநீதி
October 17, 2008
“தாம்பத்யம்” – நவநீ
“ஒன்னெ மட்டும் நான் சந்திக்கலேன்னா என்னிக்கோ ஆத்துலயோ, ஒரு கொளத்துலயோ விழுந்து செத்துருப்பேன் சிவகாமி. அந்தப் பகவானாப் பாத்து ஒன்னெ எங்கிட்ட கொண்டுவந்து சேத்துருக்கார். ஏதோ முன் ஜென்மப் பந்தம்! இல்லாட்டி நான் ஒன்னெ சந்திச்சுருப்பேனா சொல்லு. ஒனக்கு ஒன்னும் ஆகாது சிவகாமி! ஒன்னோட கையிலதான் என்னோட உயிரு போகணும்னு அந்தப் பகவான் ஏற்கனவே எழுதிட்டான் சிவகாமி” என்று துக்கம் தொண்டை அடைக்க, பெட்டில் படுத்திருந்த சிவகாமியின் கைகளைத் தன் ஒரு கையால் பிடித்துக்கொண்டு, இன்னொரு கையால் அவள் தலையை வருடிக்கொண்டிருந்தார் பரமசிவம்.
டாக்டர் வந்து பரிசோதித்துவிட்டு, “சுகர் கொஞ்சம் ஹை-யா இருக்கு, ப்ரஷரும் நார்மலா இல்ல, அதான் ஒங்களுக்கு மயக்கம் ஜாஸ்தியா வருதும்மா, மெடிசின்ஸ் தர்றேன்…. எடுத்துக்கங்க, சாப்பாடு நான் சொன்னபடி சாப்பிடுங்க, எல்லாம் சரியாய்டும், நத்திங் டு வொர்ரி, கண்ணெவிட மேலாக் கவனிச்சுக்க ஒங்க கணவர் பக்கத்துல இருக்கறச்ச நீங்க ஒர்ரி பண்ணலாமா? ரொம்ப ஸ்ட்ரெய்ன் பண்ணப்படாது, சரியா?” என சிரித்த முகத்தோடு, சிவகாமியிடம் கூறிவிட்டு, “டேக் கேர் மிஸ்டர் பரமசிவம்” என்று சொல்லிச் சென்றார் டாக்டர்.
“சிவம் நான் ஒண்ணு சொன்னாத் தப்பா நெனைக்க மாட்டீங்களே? எனக்கு இப்படி அடிக்கடி ஒடம்பு சரியில்லாம வர்றத நெனச்சா மனசுக்கு ரொம்பப் பயமா இருக்கு. யாருக்கும் தெரியாம நம்ம காம்பவுன்ட்-ல இருக்கற முப்பாத்தம்மன் கோயில்ல வச்சு எனக்கு ஒரு மாங்கல்யம் கட்டிடுறீங்களா? நான் நிம்மதியா மாங்கல்யத்தோட, பொட்டும், பூவுமா நித்ய சுமங்கலியாப் போய்ச் சேருவேன்… சிவம்! செய்வீங்களா?” - என்று கலங்கிய கண்களை தன் முந்தானையால் துடைத்துக்கொண்டே சொன்னாள் சிவகாமி.
பதறிப்போன பரமசிவன் “என்ன சிவகாமி நீ! பெரிய பெரிய வார்த்தையெல்லாம் பேசுற! ஒங்கண்ணுக்கு முன்னாடிதானே டாக்டர் சொல்லிட்டுப்போனாங்க, நீ நல்லாருப்பெ சிவகாமி! ஒனக்கு ஒன்னும் செய்யாது சிவகாமி! மாங்கல்யந்தானே! சரி கவலய விடு, நீ சொன்னமாதிரியே நான் வர்ற வெள்ளிக்கிழமை ஒங்கழுத்துல தாலி கட்டுறேன் சரியா? நீ எனக்குன்னே பொறந்தவ சிவகாமி. விசாலம் செத்த அன்னைக்கே, அவகூட நானும் போய்ச்சேந்துருக்கணும், பகவான் என்னெ ரொம்பச் சோதிச்சுட்டார். ஆனா விசாலம் என்னெத் தனியா விடக்கூடாதுன்னு, ஒன்னோட ரூபத்துல வந்து எங்கூடவே வாழ்ந்துகிட்டு இருக்கா, நாம ரெண்டு பேரும் இன்னும் ரொம்ப நாள் உயிரோட இருப்போம்” என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே
“ஐயா! ஒங்களுக்குப் போன் வந்திருக்காம், ஆபீஸ்ல கூப்படுறாங்க! ஆயாம்மாள் வந்து சொல்லிச் சென்றாள்.
“ஹலோ! என்னப்பா! சௌக்யமா இருக்கேளா? பணமெல்லாம் டைமுக்கு வந்து சேந்துருக்குமே! நான் ஒரு ப்ராஜக்ட் விசயமா சைனா வந்தேன். கொஞ்சம் டைம் கெடச்சது, அதான் ஏர்போர்ட்ல இருந்து பேசுறேன். நான் யு.எஸ். போனதும் கால் பண்றேன், ஒடம்பப் பாத்துக்கங்க! முடிஞ்சா இந்த இயர் என்ட்-ல பசங்களுக்கு சம்மர் வெகேசனுக்கு சென்னை வர்றதா இருக்கோம். கன்ஃபாம் ஆனா சொல்றேம்பா, வேற ஒண்ணும் சேதி இல்லயே!” ஒரே மூச்சில் மகன் ஸ்ரீகாந்த் எதிர்முனையில்.
“….ம்ம்…ம்.. இல்லப்பா” பரமசிவம் சொல்லி முடித்தவுடன் தொலைபேசி துண்டிக்கப்பட்டது.
பரமசிவம் ஒரு ரிடையடு தாசில்தார். நேர்மையான, கௌரமான மனிதர். தனது மனைவி விசாலம். குழந்தையே இல்லாமல் தவமாய் தவமிருந்து திருமணமாகிப் பதினான்கு வருடங்களுக்குப்பின் பெற்றெடுத்த ஒரே பிள்ளை ஸ்ரீகாந்த். மகன், தனக்கு இது வேண்டுமென்று நினைக்கும்போதே அவன் கண் முன் கொண்டுவந்து அதை நிறுத்தியிருப்பார் பரமசிவம். அளவுக்கு மீறிய சுதந்திரம் பிள்ளைக்குக் கொடுத்தவர். படித்தவராயிற்றே! கேம்பஸ் இன்டர்வியு மூலமாகவே வேலை கிடைத்துத் தற்போது அமெரிக்காவில் மிகப்பெரிய நிறுவனத்தில் உயர்ந்த பதவியில் இருக்கும் ஸ்ரீகாந்த் ஒரு முறை இந்தியா வந்திருந்தபோது தனது பெற்றோரிடம், தான் ஒரு இந்திய வம்சாவழிப் பெண்ணை விரும்புவதாகவும், திருமணம் செய்ய இருப்பதாகவும், அனுமதி கேட்பதற்குப் பதிலாக தகவல் சொன்னான். சற்று அதிர்ச்சியுற்றாலும், அதனைப் புரிந்துகொண்ட பரமசிவமும் விசாலமும் மகனின் மனம் புண்படக்கூடாதென்பதற்காக ‘சரி’ என்று ஒப்புக்கொண்டனர்.
திரும்ப அமெரிக்கா சென்ற ஸ்ரீகாந்த், மூன்று மாதங்கள் கழித்து, பெற்றோரை அமெரிக்கா அழைத்துச்செல்வதற்கான, விசாவில் தாமதம் ஏற்படுகிறதென்பதால், அதுவரை பொறுக்கமுடியாத வம்சாவழிப்பெண், எங்கே வேறொரு கை மாறிவிடுமோ என்று திருமணத்தை முடித்துவிட்டு வழக்கம்போலப் பெற்றோருக்குத் தகவல் சொன்னான். இந்த அதிர்ச்சியைத் தாங்கிக்கொள்ள முடியாமலும், தன் கணவர் இவற்றையெல்லாம் நினைத்து மனதுக்குள்ளேயே வேதனைப்படுவதையும் பார்க்கப் பொறுக்காமல், பல நாள், இதுபற்றியே பேசிப்பேசிக் கவலையடைந்த விசாலம் அவளுக்கே தெரியாமல் ஒருநாள் தூக்கத்திலேயே போய்ச்சேர்ந்துவிட்டாள். விசாலமும் தன் பிள்ளையும்தான் இந்த உலகம் என்ற குறுகிய வட்டத்துக்குள்ளேயே இருந்த பரமசிவம் தனியாளாய் தவித்து நின்றார்.
அதுவரை கலங்காத பரமசிவம் தன்னையும் மீறிக் கதறிக் கதறிக் கண்ணீர்விட்டுத் தானும் உயிரை விட்டுவிடுவோம் என்று நினைக்கையில்,
“அப்பா ஒங்களவிட்டா எனக்கு யாருப்பா இருக்கா? என்னெ மன்னிச்சுருங்கப்பா, அம்மா என்னெ நெனச்சு ரொம்பக் கவலப்பட்டே போய்ச்சேந்துட்டாங்கப்பா, நீங்களாவது இனிமே எங்ககூட இருங்கப்பா” என்று தன் மகன் தன்னைக்கட்டிப் பிடித்துக்கொண்டு அழுது, தான் கூடிய விரைவில் தன்னை அமெரிக்கா அழைத்துச் செல்வதாகச் சொல்லிக் கொஞ்சம் ஆறுதலாகப் பேசியதும் பரமசிவன் மனம் மாறிவிட்டார்.
ஆனால் நடந்த கதை வேறு, விசா எல்லாம் தயார் செய்துகொண்டு அழைத்துப்போகும்வரை, தன்னைத் தனியாக விட்டால் அம்மாவையே நினைத்து ரொம்பக் கவலைப்பட்டு எதுவும் செய்து கொள்வார் என்ற அக்கறையில், இப்போது தங்கியிருக்கும் முதியோர் இல்லத்தில் கொண்டுவந்து சேர்த்துவிட்டுச் சென்றவன்தான். வருடங்கள் 7 ஆகிவிட்டது. வாரம் தவறாமல் மகனிடமிருந்து போன் வரும். ஆனால் விசா இன்னும் வந்தபாடில்லை. பரமசிவனும் இதுவரை அதுபற்றிக் கேட்டதும் இல்லை. தனக்கு மாதாமாதம் வரும் பென்சன் பணத்தையும், மகன் அனுப்பும் பணத்தையும் கூட அந்த இல்லத்துக்கே அவர் கொடுத்துவிடுவதால், அனைவருக்குமே பரமசிவத்தின்மேல் மதிப்பும் மரியாதையும் அதிகம். பரமசிவத்தின் ஆலோசனையின் பேரில் இப்போது முதியவர்கள் மட்டுமல்லாது ஆதரவற்ற சில குழந்தைகளையும் அந்த இல்லம் தத்தெடுத்துக்கொண்டது.
பரமசிவனைச் சிவகாமி தன்னுடைய 50-வது வயதில் சந்தித்தாலும், தனக்குப் பரமசிவன் மேல் அளவுகடந்த மரியாதை, இதுவரை உணராத ஒரு பாச உணர்வு. இத்தனை வருடங்களுக்குப் பிறகு தனக்கு ஏதோ நெருங்கிய சொந்தம் கிடைத்தது போன்ற ஒரு தெளிவு. தனக்கென்று கடவுள் இவரை அனுப்பியிருக்கிறார் என்றெல்லாம் ஏதேதோ மனதுக்குள் தோன்றிற்று. காதல், காமம், உறவு, இல்லறம், பிரிவு இவையெல்லாம் சிவகாமிக்குத் தெரியாது. அவருக்குத் தெரிந்தது கருணை ஒன்றே! தியானம், பக்தி, படிப்பு இவைகள்தான் வாழ்க்கை என்று நினைத்துக்கொண்டிருந்த சிவகாமிக்கு தன்மீது பரமசிவம் காட்டும் அக்கறை, பொறுப்பு, பாசம், பரிவு, பகிர்தல் இவையெல்லாம் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. பிறகு அந்தப்பாச உணர்வுகளை மனம் தேட ஆரம்பித்தது. இருவருக்குமே இந்த வயதில் எது தேவையோ அந்தத் தேவைகள் ஒருவரிடமிருந்து ஒருவருக்குக் கிடைத்ததை மனப்பூர்வமாக, ஆத்மார்த்தமாக உணர்ந்தனர். தத்தம் உணர்வுகளைச் சரியான அலைவரிசையில் பகிர்ந்துகொள்வதும், புரிந்துகொள்வதும் இருந்துவிட்டால் அந்த உறவில் ஏற்படும் பலமே வீரியம் மிக்கதுதான். அது அங்கு இரட்டிப்பானது. எப்போதும் இருவரும் ஒன்றாகவே இருப்பார்கள். ஒன்று கோவிலில் இருப்பார்கள் அல்லது அங்குள்ள சிறிய பூங்காவில் குழந்தைகளோடு குழந்தைகளாக விளையாடிக் கொண்டிருப்பார்கள்.
சிவகாமி முதன்முறையாக அழுதது அன்னைத் தெரெசாவின் மறைவின்போதுதான். இரண்டாவது முறையாக இன்றுதான் அழுதிருக்கிறாள். தனக்கு உடல்நிலை மோசமாகி அடிக்கடி படுத்த படுக்கையாகி விடுவதால், எங்கே? தான் பரமசிவத்தை விட்டுப் பிரிந்துவிடுவோமோ என்று எண்ணித் தனக்கு மாங்கல்யம் கட்டச்சொல்லும்போதுதான் அழுதிருக்கிறாள். கடவுளிடம் இந்தக் கன்னியுள்ளம் வேண்டுவதெல்லாம் “நான் மறுபடியும் சிவகாமியாகவே பிறக்கவேண்டும். பரமசிவனின் மனைவி ஆவதற்காகவாவது பிறக்கவேண்டும். ஆனால் ஒரு ஆதரவற்ற அனாதையாக மறுபடிப் பிறக்கவே கூடாது” என்பதுதான்.
இன்று சிவகாமி மிகவும் தெளிவான முகத்தோடு காணப்பட்டாள். வெள்ளிக்கிழமையும் வந்தது. அங்குள்ள பிள்ளைகளும், முதியோர்களும் புத்தாடையிலும் இனிப்புகளிலுமாக குதூகளித்து அனைவரும் பேசிக்கொண்டனர். “சிவகாமிப்பாட்டிக்கும் பரமசிவம் தாத்தாவுக்கும் பொன்விழாவாம். அந்தத் தாத்தாவுக்கு 75 வயசாச்சாம். சீக்கிரமே 100-வது வயசுக்கல்யாணமும் கொண்டாடணும், அப்பத்தானே எங்களுக்கெல்லாம் நெறைய ஸ்வீட், ட்ரெஸ் எல்லாம் கெடைக்கும்... ஹையா.. ஜாலி.... பெஸ்ட் ஆப் லக் தாத்தா!’’ தனக்கு 75 வயது ஆகாவிட்டாலும் அனைவரிடமும் அவ்வாறு சொல்லி, எந்த உறவுகளுமே இல்லையென்றாலும், அந்த இல்லம்தான் உலகம் என்று ஆயிரமாயிரம் கனவுகளோடு துள்ளிக்குதிக்கும் கள்ளம் கபடமற்ற பிஞ்சு உள்ளங்களின் முன்னிலையிலும், வாழ் நாளெல்லாம் தான் பெற்ற பிள்ளைகளுக்காக மெழுகாக உருகித் தன்னை அர்ப்பணித்துவிட்டுக் கடைசிக்காலத்தில், எப்பொழுது ஆதரவும், பரிவும், பாசமும் அவர்களுக்குத் தேவையோ அப்பொழுது, பெற்ற பிள்ளைகளாலேயே சுமையென நினைத்துத் தூக்கி வீசப்பட்ட அந்த ஆதரவற்ற முதியோர்களும் வாழ்த்துவதைவிடவா வேறொருவர் வாழ்த்திவிட முடியும்? அந்த அற்புத உலகத்தைத் தமதாக்கிக் கொண்டு அவர்களின் ஆசீர்வாதத்தோடு, வாழ்க்கை, இல்லறம் என்றால் என்னவென்றே தெரியாமல், பாசம், பரிவு, கருணை இவைகளே வாழ்க்கை என்று எண்ணி வேறு எந்த எதிர்பார்ப்பும் இன்றி வாழ்ந்து மறைந்த அந்த அன்னைத் தெரசாவைப் போன்றே வெள்ளை உள்ளம் படைத்த அந்தக் கன்னி சிவகாமியின் கழுத்தில் பரமசிவன் தாலியைக் கட்டித் தன் சொந்தமாக்கிக்கொண்டு அந்த இல்லத்துக்குள்ளேயே இருவரும் தன் சொந்தங்களான அந்தப் பிஞ்சுக்குழந்தைகளோடு குழந்தைகளாக அடைக்கலம் புகுந்தனர்.
Posted by
Manuneedhi - தமிழன்
at
8:14 AM
0
comments (நெற்றிக்கண்)
Labels: Adhikaalai Nawin, Navanee, Thaambathyam, Thambathyam, அதிகாலை நவின், தாம்பத்யம், திண்ணை, நவநீ, நவின்
October 10, 2008
பட்டன் குடை
சில காட்சிகள், சில நிகழ்வுகள் சிலவற்றை நினைவுபடுத்தும். அவை மனதுக்குள் குதூகலத்தையும் வர வைக்கலாம் அல்லது மனதின் எங்கோ ஓர் மூலையில் வலியையும் ஏற்படுத்தலாம் அல்லது அதுவே நெருடலாகவும் இருக்கலாம். இப்படி எல்லோருக்கும்போல் எனக்குள்ளும் ஏற்பட்டவைகளைத்தான் இனி நான் உங்களுடன் பகிர்ந்துகொள்ளப்போகிறேன்.நல்ல மழை! ஆம்! மழை என்றால் பேய் மழை. நான் பள்ளிக்குச் செல்லமாட்டேன் என்று அடம்பிடிக்கிறேன். காரணம், என்னோடு பள்ளிக்கு வருபவர்கள் அனைவருமே கையில் குடை வைத்திருக்கிறார்கள். ஆம், அந்த வயதில் பள்ளிக்கு குடை கொண்டுவந்தால் ஏதோ ஒரு பெரிய சாதனையாளன் போன்ற ஒரு தொணியில் நடைகூட மாறிப்போய்விடும். சிலர் மட்டும் கலர் கலராய் விற்கும் பாலித்தீன் கவர்களை, (எங்கள் கிராமங்களில் கொங்கானி என்று சொல்லப்படும்) மடித்து, புத்தகப்பையோடு கொண்டுவருவர். எங்கள் வீட்டிலிருந்த ஒரு குடையையும் என் அப்பா வெளியில் எடுத்துச்சென்றுவிட்டார். இன்னொரு குடையோ, கம்பி நீட்டிக் கொண்டிருந்தது. அதை எடுத்துச்சென்றால் அனைவரும் சிரிப்பார்கள் என்று அடம் பிடித்து அழுதுகொண்டிருந்தேன். வெளியில் பார்த்தால் மழை விட்டிருந்தது. ஓ.... இதுதான் சமயம் என்று நினைத்து, அடுத்த மழை வருவதற்குள் பள்ளி சென்றுவிடலாம் என்று எண்ணி, கிளம்புகிறேன்.
திடீரெனச் சந்தேகம், போகும் வழியில் மழை வந்துவிட்டால்! சரி, அதற்கு அம்மாவிடம் "அம்மா நல்ல ஒரச்சாக்கு இருந்தா, மடிச்சுக் குடும்மா" என்கிறேன். "எப்படியும் இந்த வாரச் சந்தையில ஒரு கொடை வாங்கியாந்துருவம்யா" என அம்மாவும் ஒரு வழியாக என்னைச் சமாதானப்படுத்தி, வயல்களில் உரம் போட்டு, சுத்தமாகக் கழுவிக் காயவைத்து, மடித்து வைக்கப்பட்டு, இருப்பதிலேயே கொஞ்சம் 'பளிச்' என இருக்கும் ஒரு சாக்கை எடுத்து, கொங்கானி-யாக மடித்து,
பள்ளிக்கூடம் கிட்டத்தட்ட 2-3 கி.மீ இருக்கும். போகும் வழியில் சாக்கை மடித்துத் தலையில் போட்டுக்கொண்டால் யார் பார்க்கப்போகிறார்கள்? பள்ளிக்கு அருகில் சென்றதும் ஆவரைத்துறில் மடித்து வைத்துவிட்டு மாலை வரும்போது எடுத்து வந்து விடலாம் என்று என்னை நானே சமாதானப்படுத்திக்கொண்டு புறப்படுகிறேன். காரணம் ‘படிப்பில் அவ்வளவு அக்கறை’ எனத் தவறாக நினைக்கவேண்டாம். பள்ளிக்குப் போகாவிட்டால் "முதுகுப்பட்டைத்தோலு பிஞ்சுரும்" என் அப்பாவின் இந்த ஸ்லோகம் என் காதுகளுக்குள் அவ்வப்போது ஒலிக்கத் தவறியதில்லை.
ஒரு வழியாக, நான் புறப்பட்டு எங்கள் ஊர் கண்மாய்க் கரை வழியாகச் சென்று கொண்டிருக்கையில், வயல் பக்கம் எங்கள் ஊர் "நொண்டி சுப்ரமணி" எருமை மாடுகளை மேய்த்துக்கொண்டிருந்தார். அந்தக் காட்சி என் கண்களை வெகுவாக உறுத்தியது. ஒரு பக்கம் வயிற்றெரிச்சல் வேறு. நான் அவரைப் பார்த்துக்கொண்டே செல்கிறேன். அவரும் என்னையே வைத்த கண் வாங்காமல் பார்க்கிறார். "தம்பி! நில்லுய்யா" என்று என் அருகே வருகிறார். நான் நிற்கிறேன். "இந்தா வச்சுக்க, எடுத்துகிட்டுப் போய்ட்டு, சாயந்தரம் கொண்டாந்து குடு" என்று தன் கையில் இருந்த பட்டன் குடையை நீட்டுகிறார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. திகைத்து நிற்கிறேன். "அட! என்ன அப்படி முழிக்கிற, இங்கெ பாரு...இந்தா இருக்குல பட்டன், அத அமுக்குனா அதுவா விரிஞ்சுக்குரும், சுருக்கும்போது மாத்தரம் கொஞ்சம் சூதானமா சுருக்கோணும், இல்லாட்டி கண்ணு-காத கெடுத்துப்புரும் சரியா" என்றதும்,
"அப்ப ஒனக்கு" என்கிறேன்.
"தம்பி! கொடைய தூக்கிப்புடி, தூத்த தலையில் விழுகுது" என்றதும் சுதாரித்தவனாக, குதூகலத்தில் பள்ளிக்கூடத்தை அடைந்தேன். அந்தக் குடையை நான் வழி நெடுக சுழற்றிக்கொண்டே சென்றதில் என் கைகள் கொப்பளித்துப்போனதும், அன்று முழுவதும் ஒருவரைக்கூட என் குடையை தொடாமல் காவல் காத்ததும், வழக்கத்திற்கு மாறாக அன்று எனக்கு அடிக்கடி "நம்பர் ஒன்" வந்ததும், யாருக்கு 'நம்பர் ஒன்' வந்தாலும் என் குடையோடு அவர்களை அழைத்துச்சென்று, ஒரு "கொடைவள்ளல்" ஆனதும் இன்றும் என் மனதில் நிழலாடுகிறது.
ஒரு சில மாணவிகளுக்கு என் குடையைக் கொடுக்கும்போது மட்டும் எனக்குள் "சிலு சிலுவென குளிரடித்ததும்" எனக்குள் இன்றளவும் சிலிர்க்க வைக்கிறது. அப்போது எனக்கு பத்து அல்லது பதினோறு வயதிருக்கும்.
வீடு திரும்பிய நான் அன்று நடந்த அனைத்தையும் கதை கதையாய் என் அம்மாவிடம் சொல்லிச் சொல்லி அம்மாவை உறங்கவே வைத்துவிட்டேன். அன்று இரவு முழுவதும் எனக்கு பட்டன் குடை கனவுதான். வழக்கத்திற்கு மாறாக அதிகாலையில் எனக்கு முழிப்பு வந்து, "அம்மா! ஏம்மா நொண்டிச் சுப்ரமணிக்கி, நொண்டிச்சுப்ரமணி-னு பேரு?" அம்மாவுக்கும் பதில் தெரியாதவளாய், அது நொண்டி நொண்டி நடக்குதுல, அதான் அதுக்கு அப்படிப் பேரு" என்று சமாளித்தாள். ஆனால் அது நொண்டி நடப்பதில்லை, எல்லோரைப் போலவும் நன்றாகத்தான் நடக்கும். அந்த வயதில் அதுவரை எழாத சந்தேகம் எனக்குக் குடை கொடுத்தபிறகு எனக்கு எழுந்தது ஏன்? என இன்றுவரை தெரியவில்லை.
என் கதாநாயகனை நொண்டி சுப்ரமணி என யார் அழைத்தாலும் எனக்கு நெடுநாள் கோபம் வரும். பிறகு நான் கல்லூரிக்குச் செல்லும் காலத்தில் "தம்பி! என என்னைப் பாசமாக அழைத்த சுப்ரமணி, அய்யா! என என்னை அழைத்தபோதுதான் எனக்குள் வலிக்க ஆரம்பித்தது. தாழ்ந்த சாதியினர் எனத் தள்ளி வைத்தது மட்டுமின்றி, அவர்களை ஊனமுற்றவர்களாக்கி வேறு இந்தச் சமூகம் ஒடுக்கி வைத்தததை எண்ணி வேதனைப்பட்டதுண்டு. ஆனால் நானே சுப்ரமணியிடம் "இனிமே என்னை அய்யா-ன்னு கூப்பிடக்கூடாது, தம்பி-ன்னே கூப்புடுங்க" எனச் சொன்னதை என் அப்பாவிடம் வந்து சொல்லி, என் அப்பா என்னை கட்டியணைத்துக் கொண்டது இன்னும் கண்களை ஈரமாக்குகிறது. பிறகு நான் எங்கள் ஊர் சுற்று வட்டாரத்தில், கீழ் சாதி என முத்திரை குத்தப்பட்ட அனைவரையும் என்னை "அய்யா-வுக்குப் பதிலாக, அண்ணன் என" அழைக்க வைத்ததால் நான் சந்தித்த பிரச்சினைகள், அடிதடிகள் ஏராளம். அதற்கு ஒரே உதாரணம் இன்றும் என் கிராமத்தில், சுற்றுவட்டாரத்தில் என்னை மட்டுமில்லை, இந்தத் தலைமுறையினரையும் "அண்ணன்" என்றுதான் அழைக்கிறார்கள் என்பது கண்கூடாகப் பார்க்க முடிந்த உண்மை. இப்படி ஒரு மாற்றம் வரவேண்டும் என்று எண்ணியெல்லாம் நான் அன்று செய்யவில்லை. அன்று எனக்குள் அப்படித் தோன்றுவதற்குக் காரணம், என் தந்தையின் வாழ்வில் அன்று நடந்த சில சம்பவங்கள், பிரச்சினைகள், நிகழ்வுகள்தான். இவையனைத்திற்கும் ஒரு சராசரித் தந்தையாக என் தந்தை இல்லாமல், எனக்கு முழு சுதந்திரம் தந்து என்னை ஆளாக்கிய என் அப்பாவும் இன்று இல்லை, என் குடை கொடுத்த அந்தக் "கொடைக் கதாநாயகன்" சுப்ரமணியும் இன்று இல்லை.
Posted by
Manuneedhi - தமிழன்
at
10:44 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: Adhikaalai Nawin, adhikaalai.com, Button Kudai, Childhood recollection, Navanee
October 07, 2008
தமிழின் தலைமகன் கலைஞர் அவர்களுக்கு - கை.அறிவழகன்
திராவிட முன்னேற்றக் கழகம் என்கிற ஒரு மிகப்பெரிய சக்தியை, அதன் கொடியின் நிறத்தை நீங்கள் எப்படி உங்கள் குருதியால் உருவாக்கினீர்களோ, அதே வழிவந்த உங்கள் தமிழ்ப் பேரனின் குருதியில்தான் இந்தக்கடிதம் எழுதப்படுகிறது.
{xtypo_quote}இந்தக் கடிதம் உங்கள் மனதை வென்றுவிடுமேயானால் அது தமிழின் வெற்றி மட்டுமில்லை, ஒட்டு மொத்தத் தமிழினத்தின் உயர்வானவெற்றி{/xtypo_quote}
அன்று அண்ணாவுக்காக, நீங்கள் எழுதிய இரங்கற்பாவைப் போல, நீதி மறுக்கப்பட்ட இன்னொரு அண்ணனுக்காக எழுதப்படுகிற கண்ணீர்க்கடிதம். விலைமதிக்க முடியாத மனிதஉரிமைகளின் மறுப்பையும், மீறலையும் சந்தித்த அண்ணனின் அடக்க முடியாத உணர்வுகளால் உந்தப்பட்டு எழுதப்படும் மன்றாடல் கடிதம். மறுக்கவும், மறைக்கவும் முடியாத துன்பம்தான் மறைந்த முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியின் மரணம். அவரது மறைவுக்காக, அவர்கொல்லப்பட்ட விதத்துக்காக மனித நேயம் மிக்க மனிதர்களாகிய நாம் அனைவரும் கலங்கிப்போனோம், கண்ணீர் விட்டோம். அவரைக் கொன்றவர்கள் யாராக இருப்பினும் தண்டனைக்குரியவர்கள். குற்றவாளிகள் என்பதில் நமக்கு ஒருபோதும் மாற்றுக் கருத்துக்கிடையாது. ஆனால் சட்டத்திற்குப் புறம்பாகக் கொடுமையான மனநெருக்கடிகளுக்கும், கடும் தாக்குதல்களுக்கும் ஆளாக்கப்பட்டு ஒரு பொய்யான ஒப்புதல் வாக்குமூலத்தின் மூலம், இன்று தூக்குக் கயிறுகளின் இறுக்கத்தில் இருந்து நீதிகேட்டுக் கடிதம் எழுதிய அண்ணன் பேரறிவாளனுக்கு நீதிகேட்டு, உள்ளக் குமுறல்களில் இருக்கும் தமிழ்த்தம்பிகளின் சார்பில் எங்கள் குடும்பத்தின் மூத்த தலைவரிடத்தில் முறையிடும் கடிதம்.
தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளின் சாரத்தை அறிவதற்கே அவனுக்குப் பத்து ஆண்டுகள் ஆகிவிட்டது. முறையீடுகளைச் செவிமடுக்காத மறுக்கப்பட்ட நீதிகளோடு மரணத்தை நோக்கி நிற்கின்ற அண்ணன் உயிர்ப்பிச்சை கேட்டுக்கடிதம் எழுதவில்லை. நீதி மறுக்கப்பட்டது என்கிற மனவேதனையோடு கடிதம் எழுதுகிறான். செய்யாத குற்றத்துக்காய், வெங்கொடுமைச் சாக்காட்டில் கதிரவனைக் கூடக்காணக்கிடைக்காத கொடுஞ்சிறை வாசம் என் அண்ணனுக்கு நிகழ்ந்ததென்றால் அதனைக் கண்டும். காணாமல் வாழ நினைக்கிற வெற்றுத் தம்பிகள் அல்லவே நாங்கள். தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும் வார்த்துக் கொடுத்த தம்பியின் ஆட்சியில் வாழும், தமிழ்த்தம்பிகள் தானே நாங்கள்! தொடர்ந்து படிக்க இணைப்பில் செல்க...
Posted by
Manuneedhi - தமிழன்
at
10:49 AM
0
comments (நெற்றிக்கண்)
Labels: Adhikaalai Nawin, LTTE, Tamil Eelam, www.adhikaalai.com
September 14, 2008
அண்ணா நூற்றாண்டு விழா சிறப்பிதழ்
சுவைத்துப் பெற்ற இன்பத்தை பகிர்க பலருக்கு! - ஆசிரியர்
Posted by
Manuneedhi - தமிழன்
at
8:57 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: Anna 100th Anniversary, www.adhikaalai.com
September 02, 2008
விநாயகர் சதுர்த்தி
Courtesy : prashant Kadkol
Posted by
Manuneedhi - தமிழன்
at
3:33 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: Adhikaalai Nawin, manuneedhi, Navanee, Vinayagar chathurthi
August 27, 2008
பழ.நெடுமாறனுக்கு கலைஞர் கவிதைக் குத்து
சமீப காலமாக முதல்வர் கருணாநிதியின் கவிதைகள் சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன. சமீபத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. டி.கே.ரங்கராஜனை மறைமுகமாக சாடி கவிதை பாடியிருந்தார் கருணாநிதி.
இந்த நிலையில் பழ. நெடுமாறனை மிகக் கடுமையாக சாடி கவிதை எழுதியுள்ளார் கருணாநிதி. அதற்குப் பதிலடியாக முதல்வரின் கவிதை இதோ...
விடுதலைப் போர் நாயகராம்
விருதுநகர் மாவீரர் காமராஜரின்
விசுவாசமிக்க சீடர் என்று
விரிவுரைகள் பல நிகழ்த்தி; பின்னர்
வேறு கொடி பிடிப்பேன் என்று - அவர்
விலாவில் குத்திய விபீஷ்ண ஆழ்வார்!
அண்ணாவின் அணிவகுப்பில் நானும் ஒருவன் என நவின்று
கண்ணான அண்ணாவின் கழுத்தறுக்க முனைந்திட்ட சுக்ரீவன்!
மூப்பனாரின் காலடியே மோட்சமென்றும் சொர்க்கமென்றும்
முகஸ்துதி பல செய்து மோசடியால் புதுக்கொடி ஏற்றிவிட்ட எட்டப்பன்!
குன்றணைய குமரி அனந்தரின் புகழ் மறைக்க
குறுக்குச் சுவர் கட்டி, தடை மீறிய தமிழ் ஈழப் பயணமென
தவிக்க விட்டு கடல் நடுவே அவரை;
தான் மட்டுமே தப்பி வந்த ஆஞ்சநேயன்!
வலியின்றி புலிக் கூட்ட முதுகினிலே
குத்திக் கொண்டே பணம் பறிக்கும் இனத் துரோகி!
தரணிதனில் பல புராணங்கள் இருக்க
தசரதன் புராணத்தில் இவர் இறங்கி
அவன் காதோரம் நரைத்த மயிரின் கதையை -
தன்கட்டுரைக்கு விதையாக்கி
விஷத்தைக் கக்கியிருப்பததுதான் பெரும் விந்தை!
சீராக்கவே முடியாத சீழ் பிடித்த சிந்தை!
கூராக்கவே இயலாத மூளையிலே விஷம் ஒரு மொந்தை!
என்று மிகக் கடுமையாக தாக்கியுள்ளார் கருணாநிதி.
(முதல்வரின் அடுத்த குத்து யாருக்கோ?)
Posted by
Manuneedhi - தமிழன்
at
1:32 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: www.adhikaalai.com, அதிகாலை, கருணாநிதி, பழ.நெடுமாறன்
August 25, 2008
"ஒரு லட்சம் தேவேந்திரகுல வேளாளர் முஸ்லிம்களாக மதம் மாற முடிவு" - சி.பசுபதி பாண்டியன்
திருநெல்வேலி மாவட்டம், குற்றாலத்தில் ஞாயிற்றுக்கிழமை தமிழ்நாடு தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பின் மாநிலச் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் இயற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள் வருமாறு :
- "தியாகி இமானுவேல் சேகரனின் நினைவுநாளை தமிழ்ச் சமூகங்களின் சமத்துவ நாளாக அரசு அறிவித்து ஆண்டுதோறும் விழா நடத்த வேண்டும். தமிழகம் முழுவதும் வைக்கப்பட்டுள்ள அரசியல் மற்றும் சமூகத் தலைவர்களின் அனைத்து சிலைகளையும் அகற்றி அருங்காட்சியகத்தில் வைக்கவேண்டும்.
- தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தை ஆதிதிராவிடர் பட்டியலிலிருந்து நீக்கவேண்டும் என பலமுறை வலியுறுத்தியும், அதுதொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்காத மாநில அரசைக் கண்டிக்கிறோம்.
- ஆதிதிராவிடர் பட்டியலிலிருந்து நீக்கி, "தேவேந்திரகுல வேளாளர்'' என தனிப்பட்டியல் கோரி புதுதில்லியில் 5 ஆயிரம் பேர் கலந்துகொள்ளும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தவேண்டும்.
- இலங்கைவாழ் தமிழர்களின் வாழ்வுரிமையைப் பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
- இலங்கை ராணுவத்தால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுத்து நிறுத்தி நிரந்தரத் தீர்வு காணவேண்டும்'.
- இந்தத் தீர்மானங்களை வலியுறுத்தி மாவட்டங்கள் தோறும் விழிப்புணர்வுக் கூட்டங்கள் நடத்துவது என மற்றொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டம் முடிந்தபின், சி. பசுபதி பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது :
எங்களுடை பூர்வீகத் தொழில் விவசாயம். இந்தியாவில், தமிழகத்தைத் தவிர விவசாயம் செய்யும் மக்களை யாரும் எஸ்.சி. என அழைக்கவில்லை. எங்களுக்கு இடஒதுக்கீடு தேவையில்லை.
எங்களுடைய மக்கள் தொகையைக் கணக்கிட்டு விகிதாசார அடிப்படையில் தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.
தமிழன் என்ற மரியாதையை எங்களுக்கு வழங்கினால் போதும். பல்வேறு ஜாதிக் கலவரங்களால் நாங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டதோடு மிகவும் இழப்புகளைச் சந்தித்து விட்டோம்.
தில்லியில் நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு பிறகும், ஆதிதிராவிடர் பட்டியலிலிருந்து எங்களுடைய தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தை நீக்காவிட்டால், ஒரு லட்சம் பேர் இஸ்லாத்துக்கு மாறுவதைத் தவிர வேறுவழியில்லை.
Posted by
Manuneedhi - தமிழன்
at
8:11 AM
2
comments (நெற்றிக்கண்)
Labels: adhikaalai, Islam, manuneedhi, Muduvai Hidayath, Sheduled Caste


