December 06, 2007

போலியோ தாக்கியதால் தாயாரால் அனாதையாக விடப்பட்ட கவுதம் லெவிஸ்

கொல்கத்தாவில் பிறந்த கவுதம் லெவிஸ், போலியோ தாக்கியதால் அவரது தாயாரால் அனாதையாக விடப்பட்டார். இவர் அன்னை தெரெசா ஆதரவற்றோர் இல்லத்தில் வளர்ந்து, தடைக்கற்கள் பல தாண்டி, ஐரோப்பிய விமான பைலட்டாக இருக்கிறார். இவர் மற்றவர்களைவிடத் திறமையாக விமானம் ஓட்டி பல விருதுகளை வென்றுள்ளார். இதைத் தவிர ஒரு பாப் இசைக்குழுவையும் நடத்திவருகிறார். ஊனம் என்பது மனதைப் பொறுத்ததுதான், உடலைப் பொறுத்ததில்லை என்பதற்கு கவுதம் லெவிஸ் ஒரு சான்று.

தீவிரவாதத்துக்கு ஆதரவாக கவிதை எழுதிய பிரிட்டிஷ் பெண்மணிக்கு தண்டனை

ஷமீனா மாலிக் : தீவிரவாதத்துக்கு ஆதரவாக கவிதைகள் எழுதிய ஒரு பிரிட்டிஷ் பெண்மணிக்கு இடை நிறுத்தி வைக்கப்பட்ட சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ஷமீனா மாலிக் எனப்படும் அந்தப் பெண்மணியின் குற்றம், குற்ற நடவடிக்கையின் விளிம்பிலிருந்ததாக நீதிபதி தெரிவித்துள்ளார். கடந்த மாதம் தீவிரவாதத்துக்கு உதவியாக இருக்கும் எனக் கருதப்படும் ஆவணங்களை வைத்திருந்ததாகக் கூறி கைது செய்யப்பட்ட முதல் பிரிட்டிஷ் பெண்மனி இந்த ஷமீனா மாலிக் ஆவார். அவர் தன்னை கவிதைத் தீவிரவாதி எனக் கூறிக்கொள்கிறார். அவர் தனது கவிதைகளில், முஸ்லீம்கள் அல்லாதவர்களின் தலை துண்டிக்கப்படுவதை பாராட்டியிருந்த போதிலும், தீவிரவாதத்துக்கான ஒரு ஆவணத்தை அவர் வைத்திருந்தார் என்கிற குற்றறச்சாட்டிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளளார்

டெல்லி மதுபானக் கடைகளில் பெண்கள் பரிமாற நீதிமன்றம் அனுமதி

இந்தியத் தலைநகர் டெல்லியில் உள்ள மதுபான விடுதிகள் மற்றும் உயர்தர உணவகங்களில், வாடிக்கையாளர்களுக்கு மது பரிமாறுவதற்கு பெண்களை பணியில் அமர்த்துவதற்கு இந்திய உச்சநீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. டெல்லியில் மதுபான விடுதிகள் மற்றும் உணவகங்களில், மதுபானம் பரிமாறுவதற்கான பணியில் பெண்களை ஈடுபடுத்தக்கூடாது. அதேபோல், 25 வயதுக்கு மேற்பட்ட ஆண்களை மட்டுமே அந்தப் பணியில் அமர்த்த வேண்டும் என்ற சட்டம் அமலில் இருந்தது. உணவு விடுதி உரிமையாளர் சங்கம் அந்தச் சட்டத்தை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. அதே நேரத்தில், அந்தச் சட்டம் நியாயமானதுதான் என்று கர்க் என்பவர் அந்த வழக்கில் தன்னையும் இணைத்துக் கொண்டார். அதை விசாரித்த உயர்நீதிமன்றம், அந்தச் சட்டம் செல்லுபடியாகாது என்று 2004-ம் ஆண்டு தீர்ப்பளித்தது. அந்தத் தீர்ப்பை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார் கர்க். அதே நேரத்தில், 25 வயதுக்கு மேற்பட்ட ஆண்களைத்தான் பணியில் அமர்த்த வேண்டும் என்ற விதியை எதிர்த்து உணவு விடுதி உரிமையாளர் சங்கம் மேல்முறையீடு செய்தது. அந்த மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம் இன்று வழங்கிய தீர்ப்பில், பெண்களை மதுபானம் பரிமாறுவதற்கான பணியில் அமர்த்துவதற்கு எந்தத் தடையும் இல்லை என்றும், உயர்நீதிமன்ற உத்தரவு சரிதான் என்றும் தீர்ப்பளித்தது

நடிகர் விஷாலின் தமிழ்ப் புரட்சி

ஏற்கனவே புரட்சி கலைஞர் விஜயகாந்த், புரட்சி தமிழன் சத்யராஜ் ஆகியோர் ஆற்றி வரும் தமிழ்ப் புரட்சி நாம் அனைவரும் அறிந்ததே. இது போதாதென்று புரட்சித் தளபதியாக நடிகர் விஷால் உருவெடுத்துள்ளார். அப்படி என்ன தமிழ்ப் புரட்சி அவர் செய்துவிட்டார் என்ற கேள்வி உங்கள் அனைவரிடமும் எழலாம். அவர் செய்த புரட்சி குறிப்பிட்டு சொல்ல முடியாத அளவுக்கு மிகப்பெரிய பட்டியலாக நீண்டு செல்கிறது.
  1. சண்டைகோழி என்ற படத்தில் "ஒரு நிமிஷம்" என்ற வசனத்தை மிக அழகாக "ஒனிஷம்" என்று சொல்லி அவர் ஆற்றியது மிகப்பெரும் புரட்சியன்றோ?
  2. சிவப்பதிகாரம் படத்தில் ஒரு நீண்ட வசனம் வரும். பத்துக்கும் மேற்பட்ட தமிழின் சிறப்பு "ழ" கரம் இடம் பெரும் பல வார்த்தைகளைக்கொண்ட வசனம் அது. ஒவ்வொரு தடவையும் "ழ" கரத்தை மிக அழகாக "ல" கரமாக உச்சரித்து அவர் செய்த தமிழ்ப் புரட்சிக்காகவே ஓராயிரம் புரட்சிப் பட்டங்கள் தரலாம்.


எப்பொழுது நடிகர் விஷால் புரட்சித் தளபதியாக பெயர் எடுத்தாரோ அதற்குமேல் கார்ல் மார்க்ஸ், லெனின், சே குவேரா, பிடல் காஸ்ட்ரோ, நேதாஜி, பகத்சிங், பிரபாகரன் போன்ற மாபெரும் புரட்சியாளர்களை இனிமேல் "புர்ச்சியாளர்கள்" என்று விஷால் பாணியில் அழைப்பதே சாலப்பொருந்தும்.

என்ன சொல்கிறீர்கள் என் இனிய தமிழ் மக்களே?

December 05, 2007

பின்னனிப்பாடகர் கிரிஷ்

இன்றைய குறள்

அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேருந்
திறனறிந் தாங்கே திரு

பிறர் பொருளைக் கவர விரும்பாத அறநெறி உணர்ந்த அறிஞர் பெருமக்களின் ஆற்றலுக்கேற்ப அவர்களிடம் செல்வம் சேரும்
அறத்துப்பால் : வெஃகாமை

கார்ல் மார்க்ஸ்

"மனித குலத்தின் நன்மைக்காக சிறப்பாக செயல்படுவதற்குரிய வேலையை நாம் தேர்ந்தெடுத்து விட்டால், அதன் சுமை நம்மை அழுத்த முடியாது. ஏனென்றால் அது எல்லோருடைய நன்மைக்காக செய்யப்படுகின்ற தியாகம்"

அடுத்த முதல்வர்? பதற்றத்தில் ஸ்டாலின்

திரு. மு. கருணாநிதிக்குப் பிறகு, திமுக-வின் தலைமைப் பொறுப்பை ஏற்பதற்காக 'ஜனநாயக' முறைப்படி கட்சிக்குள் வளர்க்கப்பட்டவர் அவரது மகன் திரு. ஸ்டாலின். திரு. வை. கோபால்சாமியின் வெளியேற்றத்துக்குப் பிறகு, கட்சிக்குள் ஸ்டாலினுக்கு முழு ஆதரவு இருப்பதுபோல் தெரிந்தாலும், கருணாநிதியின் குடும்பத்துக்குள் இந்தப் பிரச்சினை இன்னும் 'நீருபூத்த நெருப்பாகவே' இருப்பது அரசியல் தெரிந்தவர்கள் அறிந்ததுதான். திமுக தலைவரின் குடும்பப் பிரச்சினை, உச்ச கட்டத்தில் இருக்கும் இந்தச் சூழ்நிலையில், திமுக இளைஞர் அணியின் மாநில மாநாடு டிசம்பர் 15, 16-ம் தேதிகளில் 'அழகிரி நாட்டின்' ஒரு பகுதியான திருநெல்வேலியில் நடைபெற இருக்கிறது. விஜயகாந்த், சரத்குமார் போன்ற சினிமா நட்சத்திரங்கள் ஆரம்பித்த புதிய கட்சிகளை நோக்கி இளைஞர்கள் செல்வதைத் தடுப்பதற்காகவும், தமிழக இளைஞர்கள் திமுக-வின் பக்கமே இருக்கிறார்கள் என்பதை நிரூபிப்பதற்காகவுமே இந்த மாநாடு என்று உதட்டளவில் அறிவிக்கப்பட்டாலும் கூட, ஒட்டுமொத்த திமுக-வும் தனது பக்கமே இருக்கிறது என்பதை நிரூபிப்பதற்காகவே திரு. ஸ்டாலினால் இந்த மாநாடு நடத்தப்படுகிறது என்பது அரசியல் ஆய்வாளர்களின் கணிப்பு. உள்ளாட்சித் துறை அமைச்சராகவும் இருக்கும், இளைஞர் அணிச் செயலாளர் ஸ்டாலினின் நேரடி மேற்பார்வையில் ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அழகிரியின் ஆதிக்கம் பரவிக் கிடக்கும் தென் மாவட்ட திமுக நிர்வாகிகளை நேரில் சந்தித்து வருகிறார் ஸ்டாலின். அமைச்சர்கள் தினம் தினம் மாநாட்டு ஏற்பாடுகளை நேரில் ஆய்வு செய்து வருகிறார்கள். ஆனால் 'அனா' அழகிரியோ இன்றுவரை அந்தப் பக்கமே எட்டிப் பார்க்கவில்லை. இத்தகைய பரபரப்பான சூழ்நிலையில் நடக்கும் இந்த மாநாட்டில் என்ன எதிர்பார்க்கலாம்? இதோ சில ஊகங்கள்: - வீரபாண்டி ஆறுமுகம் போன்ற ஒரு சிலரைத் தவிர மற்ற இரண்டாம் கட்டத் தலைவர்கள், ஸ்டாலினின் தலைமையை ஏற்கத் தயாராக இருப்பதாக வெளிப்படையாக முழங்குவார்கள் - 'இளைஞர்களுக்கு வாய்ப்புக் கொடுப்பதாகச்' சொல்லி, இளைஞரணிப் பொறுப்பிலிருந்து ஸ்டாலின் விலகுவார் - சூழ்நிலைகள் சாதகமாக இருப்பதாகத் தெரிந்தால், திமுக-வின் அடுத்த தலைவராக திரு. ஸ்டாலினை கலைஞர் அறிவிப்பார் - 'இளைஞர்களுக்கு வாய்ப்புக் கொடுக்கும்' அதே காரணத்தைச் சொல்லி, முதல்வர் பதவியிலிருந்து தான் விலகத் தயார் என கலைஞர் அறிவிப்பார் - குறைந்த பட்சம் 'துணை முதல்வர்' பதவி ஸ்டாலினுக்கு வழங்க உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் ஆட்சி அதிகாரத்தில் இருந்துகொண்டு நடத்துவதால், இந்த மாநாடு வெற்றி பெறுவதில் எந்தத் தடங்கலும் இல்லை. ஆனால் தனது தந்தை தலைவராக இருக்கும் திமுக-வில் தனக்கும் "பங்கு" உண்டு என்பதில் மிக உறுதியாக இருக்கிறார் 'அஞ்சா நெஞ்சன்' அழகிரி. ஒன்றை அடைவதற்காக, 'எதையும்' செய்யத் தயாராக இருக்கும் தனது சகோதரர் திரு. அழகிரியை சமாளித்து கட்சியையும், ஆட்சியையும் ஸ்டாலின் தனதாக்கிக் கொள்வாரா? முடிவுகளை அறிய ஆவலுடன் காத்திருக்கிறது உலகத் தமிழினம்!

"எழுதுவதை நிறுத்தப் போவதில்லை" - தஸ்லிமா நசரீன்

  • வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நசரீன் அவர்களுக்கு எதிராக சமீபத்தில் இந்தியாவில் நடைபெற்ற ஆர்பாட்டங்கள் காரணமாக அவர் தமது எழுத்துக்களை நிறுத்தப்போவதில்லை என்று அவர் அறிவித்திருக்கிறார். மேலும், தமது எழுது பொருளும் இதனால் மாறாது என்றும் அவர் கூறியிருக்கிறார். சமீபகாலத்தில் தாம் வாழ்ந்துவந்த கொல்கத்தாவை விட்டு அவர் சமீபத்தில் வெளியேறிய பிறகு பிபிசியிடம் முதல் முறையாக பேசிய தஸ்லிமா அவர்கள், மதசார்பற்ற மனிதநேயம் பற்றி மட்டுமே தாம் எழுதி வந்ததாகவும், யாரையும் புண்படுத்தும் நோக்கம் தமக்கில்லை என்றும் கூறினார். கொல்கத்தாவில் சில முஸ்லிம் குழுக்கள் தஸ்லிமாவுக்கு எதிராக நடத்திய வன்முறை ஆர்பாட்டங்களுக்கு பிறகு, மேற்கு வங்க மாநில அரசு அவரை கொல்கத்தாவை விட்டு பலவந்தமாக வெளியேற்றியது. அவர் தற்போது, இந்திய தலைநகர் புது தில்லியில் ரகசிய இடம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்.
  • மத நிந்தனை குறித்து பிரிட்டன் உயர்நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு : பிரிட்டனில் நாடக அரங்குகளும், ஒலிபரப்பாளர்கள் மீது, தெய்வ நிந்தனை அல்லது மத நிந்தனை குற்றச்சாட்டுகளுக்காக வழக்கு தொடுக்கப்பட முடியாது என்று லண்டனில் உள்ள உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த முக்கியத்தீர்ப்பு, மதப்பிரச்சாரம் செய்யும் கிறித்தவர்கள் குழு ஒன்று பிபிசி மீது தொடுத்த வழக்கில் வருகிறது. அவர்கள் "ஜெரி ஸ்ப்ரிங்கர் ஒரு இசைநாடகம்" என்ற நிகழ்ச்சி குறித்து ஆட்சேபித்திருந்தனர். இந்த நிகழ்ச்சியில், ஏசு கிறிஸ்து, சிறு குழந்தைகளுக்கு அணிவிக்கப்படும் நேப்பியை அணிந்து கொண்டிருப்பதாக காட்டப்பட்டிருந்தார் மேலும் அவரை கொஞ்சம் ஆண் ஓரின உறவுகொள்பவராகவும் இந்த நிகழ்ச்சியில் கூறப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சி மத நிந்தனை புரிந்தே இருந்தாலும் கூட, பிரிட்டிஷ் சட்டத்தின் கீழ், நாடக அரங்குகளும் ஒலிபரப்பாளர்களும் மத நிந்தனை குற்றச்சாட்டுகளிலிருந்து பாதுகாக்கப்பட்டிருப்பதால், பிபிசி மீது இந்த குற்றச்சாட்டின் கீழ் வழக்கு தொடுக்க முடியாது என்று நீதிமன்றம் கூறியது
  • கச்சா எண்னை விலை உயர்வு : அபுதாபியில் ஓபெக் மாநாடுபெட்ரோலிய எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளின் குழுவான ஓப்பெக், கச்சா எண்ணெய் உற்பத்தி அளவுகளை மாற்றாமல் வைத்திருக்க முடிவு செய்ததை அடுத்து, கச்சா எண்ணெய் விலை உயர்ந்திருக்கிறது. அமெரிக்கா போன்ற எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகள் கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்குமாறு விடுத்த வந்த கோரிக்கையை பரிசீலிக்க, ஒப்பெக் அமைப்பு அபு தாபியில் கூடியது. அமெரிக்க வீடு மற்றும் கடன் சந்தைகளில் தொடங்கிய பொருளாதார பிரச்சினைகளை, எண்ணெய் விலைகள் உயர்வது மேலும் சிக்கலுக்கு உள்ளாக்கும் என்று அமெரிக்கர்கள் அஞ்சுவதாக பிபிசியின் பொருளாதார செய்தியாளர் கூறுகிறார்
  • அநுராதபுரத்தில் பொதுமக்கள் பேருந்து மீது தாக்குதல்: 15 பேர் பலி - இலங்கையின் அநுராதபுரம் மாவட்டம் கெப்பிட்டிக்கொல்லாவ பகுதியில் பொதுமக்கள் போக்குவரத்து பேருந்து ஒன்றின் மீது நடத்தப்பட்ட கிளெமோர் கண்ணிவெடித் தாக்குதலில் குறைந்தது 15 பேர் கொல்லப்பட்டதுடன், மேலும் 25 பேர் காயமடைந்ததாக அநுராதபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்
  • வட இலங்கையில் மோதல்கள் அதிகரிக்கின்றன: இரு தரப்பிலும் இழப்புகளும் அதிகரிப்பு : மோதல்கள் அதிகரித்துள்ளனஇலங்கையின் வடக்குப் போர்முனைகளில் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் அதிகரித்துச் செல்லும் மோதல்களில் இன்று மாத்திரம் குறைந்தது 7 இராணுவத்தினர் கொல்லப்பட்டிருப்பதாக இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் கூறியிருக்கின்றது
  • வவுனியாவில் தொண்டர் அமைப்பு பணியாளர்கள் பணிப்புறக்கணிப்பு : இதற்கிடையில், வவுனியா மாவட்டத்தில் மனிதாபிமான பணிகளில் ஈடுபட்டுள்ள தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்த பணியாளர்கள் தமது பாதுகாப்பை உறுதி செய்யக் கோரி இன்று ஒரு நாள் அடையாள பணிப் புறக்கணிப்பை மேற்கொண்டிருந்தனர்
  • மீண்டும் வவுனியாவுக்கு ரயில் சேவை : கடந்த ஒரு வார காலமாக மட்டுப்படுத்தப்பட்டிருந்த இலங்கையின் வடபகுதிக்கான ரயில் சேவை உடனடியாக வழமைக்குத் திரும்பும் எனவும், ஜனாதிபதியின் அனுமதியோடு இதற்கான பணிப்புரை ரயில் போக்குவரத்துத் துறை அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்டிருப்பதாகவும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் தெரிவித்தார்
  • அமெரிக்க அறிக்கையை பாராட்டுகிறார் இரானிய அதிபர் : இரான் தற்போது அணு ஆயுதங்களை தயாரிக்கும் பணியில் ஈடுபடவில்லை என்று அமெரிக்க புலனாய்வுத்துறையினர் தெரிவித்திருக்கும் முடிவை, இரானிய அதிபர் மஹ்மூத் அஹமதி நிஜாத் அவர்கள் பாராட்டியிருக்கிறார்
  • கொண்டலீசா ரைஸ் ஆப்பிரிக்கா விஜயம் : காங்கோவில் போராளிக் குழுவினர்அமெரிக்க அரசுத்துறை செயலர், கோண்டலீசா ரைஸ் அவர்கள், காங்கோ ஜனநாயகக் குடியரசு, சோமாலியா மற்றும் சூடான் ஆகிய நாடுகளில் சர்வதேச நாடுகளால் மத்யஸ்தம் செய்து ஏற்படுத்தப்பட்ட உடன்படிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தைகள் நடத்த ஆப்ரிக்காவுக்கு ஒரு நாள் விஜயமாக வந்திருக்கிறார்

December 04, 2007

"இசைஞானியின் இசையில் சில"

Powered by eSnips.com

"மாயாஜால மனிதன்"

கிரிஷ் - பின்னனிப் பாடகர்

இன்றைய குறள்

அஃகாமை செல்வத்திற் கியாதெனின் வெஃகாமை
வேண்டும் பிறன்கைப் பொருள்

தன்னுடைய செல்வச் செழிப்பு குறையாமலிருக்க வேண்டுமென்றால் பிறருடைய பொருளையும் தானே அடைய வேண்டுமென்று ஆசைப்படாமலிருக்க வேண்டும்


அறத்துப்பால் : வெஃகாமை

பொன்மொழிகள்

  • தன் மீது விழும் மண்ணைச் சுமையென நினைப்பதில்லை விதை


  • காயங்களுக்கு மருந்து வேண்டாம், கனிவான பார்வை போதும்


  • எதிர்பார்ப்பைக் குறைத்துக்கொள், ஏமாற்றத்தால் சோர்வடையமாட்டாய்

புத்திசாலி சிம்பன்சி குரங்குகள்

இன்றைய அனைவர்க்கும் அறிவியல் நிகழ்ச்சியில், கணித எண்களை நினைவு வைத்துக் கொள்வதில் மனிதர்களை விட புத்திசாலியாக செயல்பட்ட சிம்பன்சி குரங்கு பற்றிய ஒரு சுவாரஸ்யமான தகவலை பார்க்கலாம். அயுமு என்கிற சிம்பன்ஸி குரங்குக்கும் கியோடோ பல்கலைக் கழகத்தை சேர்ந்த ஒன்பது மாணவர்களுக்கும் இடையில் ஒரு போட்டி நடத்தப்பட்டது. அதாவது அவர்களுக்கு முன்னால் வைக்கப்பட்டிருக்கும் கணினியின் தொடு திரையில் வரிசையாக எண்கள் தோன்றி மறையும். ஒரு நொடியை விட மிகவும் குறைந்த காலத்திற்கு மட்டுமே இந்த எண்கள் திரையில் தோன்றி கண்ணிமைக்கும் நேரத்தில் மறைந்து விடும். அடுத்து, அந்த எண்கள் தோன்றி மறைந்த இடத்தில் இருக்கும் வெண் சதுர கட்டங்களை, எண்கள் தோன்றிய வரிசைக்கிரமப்படி தொட்டு அடையாளம் காணவேண்டும் என்பது தான் போட்டி. இதில், அயுமு சரியாக அடையாளம் காட்டி ஆராய்ச்சியாளர்களை அசத்தியது. ஆனால் 9 பல்கலைக்கழக மாணவர்களால் இதை செய்யமுடியவில்லை. அவர்கள் அனைவருமே அடையாளம் காணமுடியாமல் திணறினார்கள். இதிலிருந்து, குறுகியகால நினைவாற்றல் என்கிற திறனில், மனிதர்களைவிட, சிம்பன்சிகள் புத்திசாலிகளாக இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக, இந்த ஆய்வை மேற்கொண்ட கியோட்டோ பல்கலைக்கழக பேராசிரியர் மட்சுசாவா அவர்கள் தெரிவித்திருக்கிறார். இதில் சுவாரஸ்யமான விடயம் என்னெவென்றால், இந்த பல்கலைக்கழக மாணவர்கள் மட்டுமல்ல, ஆக்ஸ்போர்டிலிருக்கும் ப்ரூக்ஸ் பல்கலைக்கழகத்தின் குரங்கினங்கள் குறித்து ஆராயும் பேராசிரியரான சைமன் பியார்டர் அவர்களும் இந்த சிம்பன்சியிடம் இதற்கு முன்பு நடத்தப்பட்ட சோதனைகளில் தோற்றுவிட்டார் என்பதுதான். இப்படியான எண்களை நினைவில் வைத்துக் கொள்ளும் விடயத்தில், சிம்பன்சிகளைவிட மனிதர்களின் திறமை குறைவாக இருப்பதற்கு என்ன காரணம் என்று தற்போது ஆராய்ச்சியாளர்கள் விவாதித்து வருகிறார்கள். இதற்கு பதிலளிக்கும் விதத்தில் ஒரு கருத்து முன்வைக்கப்படுகிறது. அதாவது மனிதர்களுக்கும் முன்பு இது போன்ற எண்கள் தொடர்பான குறுகிய கால நினைவாற்றல் அதிகமாக இருந்ததாகவும், காலப்போக்கில் மனிதர்கள் மொழிகளைக்கற்றுக் கொண்டு பேசத் துவங்கியதால், மூளையில் மொழிகளுக்கான இடம் அதிகமானதால், எண்கள் தொடர்பான திறமை குறைந்து விட்டிருக்கலாம் என்று ஒரு கருத்து முன்வைக்கப்படுகிறது.
எது எப்படியோ, இனிமேல் குரங்கை விட மனிதன் புத்திசாலி என்று பொத்தாம் பொதுவாக சொல்லிக்கொள்ள முடியாது. எண்கணித நினைவாற்றலில் மனிதர்களின் மூதாதையர்களாக கருதப்படும் குரங்குகள், தற்கால மனிதர்களைவிட திறமையானவர்கள் என்று இந்த சிம்பன்சிகள் நிரூபித்திருக்கின்றன.

இலங்கை கைதுகள் குறித்து அரசாங்கம் விளக்கம்

  • கொழும்பில் கைது செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான தமிழர்களில் பெரும்பாலானோரை விடுவித்து விட்டதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. தமிழர்களை இலக்கு வைத்து இந்தக் கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுவதையும் அரசு மறுத்திருக்கிறது. இலங்கையில் தலைநகர் கொழும்பிலும், புறநகர்ப் பகுதியிலும் கடந்த புதன்கிழமை இடம்பெற்ற குண்டுத்தாக்குதல்களைத் தொடர்ந்து கொழும்பிலும், அதனைச் சூழவுள்ள பகுதிகளிலும் கடுமையான சுற்றிவளைப்பு சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த படையினரும் பொலிஸாரும் பலநூற்றுக்கணக்கான தமிழர்களை கைது செய்திருந்தனர். இவர்களில் பலர் அந்தந்தப்பகுதி பொலிஸ் நிலையங்களில் தடுத்துவைக்கப்பட்டிருந்த அதேவேளை, மேலும் பலர் காலி மாவட்டத்திலுள்ள பூசா தடுப்புச் சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டிருந்தனர். அமைச்சர் பெர்ணாண்டோ புள்ளேதமிழர்கள் வகை தொகையின்றி கைதுசெய்யப்பட்டு ஆங்காங்கே அடிப்படை உணவு, உடை மற்றும் மலசலகூட வசதிகளின்றி தடுப்புக்காவலில் வைக்கப்பட்டதாக கூறும் தமிழ்க் கட்சிகள் பலவும் பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் அது குறித்து குரல் எழுப்பியிருந்தன. இதனைவிட பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியும், மக்கள் விடுதலை முன்ணணி எனப்படும் ஜே.வி.பியும் அரசின் இந்த நடவடிக்கை மனிதாபிமானமற்ற செயல் என்று தெரிவித்திருந்தன. அத்துடன் அவர்களை விடுவிப்பதற்கு உதவக்கோரி ஜனாதிபதியிடமும், சர்வதேச சமூகத்திடமும் முறையீடு செய்திருந்தனர். இந்த நிலையில் இந்த விடயம் குறித்து அரசாங்கத்தின் நிலைப்பாட்டினை ஊடகங்களிற்கு தெரியப்படுத்தும் வகையில் அரசாங்கத்தின் பிரதான கொறடாவும், அமைச்சருமான ஜெயராஜ் பெர்ணாண்டோபுள்ளே இன்றுமாலை கொழும்பிலுள்ள பாதுகாப்பு விவகாரங்களிற்கான ஊடக மத்திய நிலையத்தில் விசேட பத்திரிகையாளர் மாநாடொன்றினை நடாத்தினார். அங்கு எதிர்க்கட்சிகளும், தமிழ்ப்பாராளுமன்ற உறுப்பினர்களும் தெரிவித்த குற்றச்சாட்டுக்களை மறுத்த அமைச்சர் பெர்ணாண்டோபுள்ளே நாட்டினதும், சகல சமூகங்களினதும் பாதுகாப்பினை உறுதிசெய்யும் ஒரே நோக்குடனேயே இந்த நடவடிக்கை அரசினால் மேற்கொள்ளப்பட்டது என்றும், பொலிஸாரினாலும் பாதுகாப்புப் படையினராலும் வார இறுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் வேட்டையின்போது சிங்கள இனத்தவர்கள் சிலரும், முஸ்லிம் இனத்தவர் ஒருசிலரும்கூட விசாரணைகளிற்காக கைது செய்யப்பட்டனர் என்றும் தெரிவித்தார். அத்துடன் கைது செய்யப்பட்டவர்களில் 202 பேர் தவிர ஏனைய அனைவரும் விடுவிக்கப்பட்டுவிட்டதாகவும் அவர் தமிழோசைக்குத் தெரிவித்தார்.
    தமிழர்கள் இலக்குவைத்து பாரியளவில் கைது செய்யப்பட்டார்கள் என்பதை மறுத்தலித்துப் பேசிய அமைச்சர் பெர்ணாண்டோபுள்ளே தேவையேற்படும் போதெல்லாம் அரசாங்கம் இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும் தெரிவித்தார்
  • வடபகுதிக்கான போக்குவரத்து நிலைமைகளில் முன்னேற்றம் இல்லை : இலங்கையின் தலைநகரப்பிரதேசத்தில் கடந்த வாரம் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல் சம்பவங்களையடுத்து, மட்டுப்படுத்தப்பட்ட வடபகுதிக்கான போக்குவரத்து நடைமுறைகளில் பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்
  • அமெரிக்க புலனாய்வுத் துறையின் அறிக்கை ஏற்புடையதல்ல என்கிறது இஸ்ரேல் : இரான் தனது அணு ஆயுதத் திட்டங்களை 2003 ஆம் ஆண்டிலேயே நிறுத்தி விட்டது என்கிற அமெரிக்க புலனாய்வுத் துறையின் மதிப்பீட்டுடன் தாம் முரண்படுவதாக இஸ்ரேல் கூறியுள்ளது
  • இரான் மீது அழுத்தம் தொடரவேண்டும் எனக் கூறுகின்றன பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் : இரான் தனது அணு ஆயுதத் திட்டத்தை நிறுத்திவிட்டதாக அமெரிக்க உளவு மதிப்பீடு கூறுகின்ற போதிலும், இரான் மீதான இராஜதந்திர அழுத்தத்தை சர்வதேச சமூகம் தொடரவேண்டும் என்று பிரிட்டிஷ் மற்றும் பிரான்ஸ் நாட்டு அரசுகள் கேட்டுள்ளன
  • வடகொரியாவுக்கு அமெரிக்காவின் சிறப்புத் தூதர் விஜயம் : வடகொரியாவுக்கான அமெரிக்கச் சிறப்புத் தூதர் கிறிஸ்டோபர் ஹில், அந்நாட்டு வெளியுறவு அமைச்சரான பாக் உய் சுன் அவர்களுடன் அபூர்வமான ஒரு சந்திப்பை நடத்தியுள்ளார்
  • தென் ஆப்பிரிக்காவில் சுரங்கத் தொழிலாளர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தம் : தென் ஆப்பிரிக்காவின் சுரங்கங்களில் பணியாற்றும் பல ஆயிரக்கணக்கன தொழிலாளர்கள், பணியிடங்களில் தமது பாதுகாப்புகள் குறித்த கரிசனைகளை வெளிப்படுத்தி இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்
  • காலநிலை மாற்றம் குறித்து பசிபிக் நாடுகள் பெருங்கவலை : கடல் மட்டம் அதிகரிப்பதைத் தடுப்பதற்கான அவசர நடவடிக்கைகளை எடுக்குமாறு, பாலியில், காலநிலை குறித்த சர்வதேச மாநாட்டில் கலந்துகொண்டுள்ள பிரதிநிதிகளுக்கு, பசிபிக் பெருங்கடலில் இருக்கும் தீவு நாடுகளின் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்

December 03, 2007

"எண்ணற்ற தீங்குகளுடன் சுயநல வேட்டை நாய்களாகப் பெரும்பாலான அரசியல்வாதிகள் உலவுகிறார்கள்" அண்ணா கண்ணன் - நேர்முகம்" - நவின்

மதிப்பிற்குரிய திரு.அண்ணா கண்ணன் அவர்களை "நிலாச்சாரலுக்காக" நான் எடுத்த செவ்வி - கவிஞர், இதழாளர், ஆய்வாளர், 18 நூல்களின் ஆசிரியர் அண்ணா கண்ணன். இவரின் இரு கவிதைகள் 32 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. 'தமிழில் இணைய இதழ்கள்' என்ற தலைப்பில் ஆய்ந்து இளம் முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார். முனைவர் பட்ட ஆராய்ச்சிக்குத் 'தமிழில் மின்னாளுகை' என்ற தலைப்பைப் பதிந்திருக்கிறார். அமுதசுரபியில் இரண்டரை ஆண்டுகள் ஆசிரியப் பணியாற்றிவிட்டு, இப்போது இணைய இதழ் ஒன்றின் ஆசிரியராக இருக்கிறார். 'நான் பிறக்கும்போதே பேனாவோடுதான் பிறந்தேன், எனது லட்சியமே எழுத்து, எழுத்தே என் மூச்சு' என்றெல்லாம் பிதற்றும் பிசுபிசுப்பில் சிக்கிக்கொள்ளாத, ஒரு பாசாங்கில்லாத கவிஞனை, எழுத்தாளனை அண்ணா கண்ணன் மூலமாகப் பார்க்கிறேன்.
"கிழிந்த ஆடைகளை என் அம்மா தைத்துப் பயன்படுத்துவார், நான் அவர் வழியில் வருகிறேன். கிழிந்த ஆடைகளைக் கூடுமானவரை தைத்துப் பயன்படுத்துவது, பொருளை முழுமையாகப் பயன்படுத்தும், எதையும் வீணென்று தூக்கி எறியாத குணத்தினாலேயே. அந்த நேரங்களில் விரும்பி இருந்தால், இன்னும்கூட தாராளமாகச் செலவு செய்திருக்க முடியும். ஆயினும் ஒவ்வொன்றிலும் சிக்கனம் பேணும் விருப்பத்தினால் அவ்விதம் வாழ்ந்தோம், வாழ்கிறோம். கைக்குட்டை உருவானதும் ஜன்னல் விரிப்புகள், பழைய சேலையிலிருந்து உருவானதும் இந்தப் பின்னணியிலேயே" என்று அவர் கூறும்பொழுது, அவரின் எளிமை என்னை பிரமிப்புக்குள்ளாக்குகிறது. ஏழ்மையால் எளிமை என்பது வேறு, அது சாத்தியம். ஆனால் எல்லாம் இருந்தும் எளிமை என்பது வேறு, அது அசாத்தியம். அண்ணா கண்ணன் அசாத்தியமான எளிமை மிக்கவர். அவர் நிலாச்சாரலுக்காக என்னோடு சேர்ந்து நினைத்துப்பார்த்தவை...

தங்களின் நூல்கள், பரிசுகள், விருதுகள் பற்றிச் சொல்லுங்கள்...

'பூபாளம்' (1996), 'உச்சம் அடம் ஞானம் உயிர்ப்பு' (1997) ஆகிய கவிதைத் தொகுப்புகளை என் சொந்தச் செலவில் வெளியிட்டேன். 'காந்தளகம் - 20 ஆண்டுகள்' (நிறுவன வரலாறு), 'தகத்தகாய தங்கம்மா' (வாழ்க்கை வரலாறு), 'கலாம் ஆகலாம்', 'டம்டம் டமடம்' (சிறுவர் பாடல்கள்), 'நூற்றுக்கு நூறு' (சிறுவர் சிறுகதைகள்), 'தமிழில் இணைய இதழ்கள்' (எம்.ஃபில். ஆய்வேடு) ஆகிய நூல்களையும் படைத்துள்ளேன். கோலாலம்பூரில் உள்ள உமா பதிப்பகம், பழந்தமிழ்க் காப்பிய நூல்களை எளிய தமிழில் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டது. அதற்கு இணங்க, இராமாயணம், மகாபாரதம், சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி, நள தமயந்தி, சூளாமணி, பாகவதம் உள்ளிட்ட 10 காப்பிய நூல்களை எழுதி வழங்கினேன்.

மாணவப் பருவத்தில் கவிதை, கட்டுரை, பேச்சு, விளையாட்டு போன்றவற்றுக்காகப் பள்ளியிலும் மாவட்ட, மாநில அளவிலும் பல பரிசுகள் பெற்றேன். நீடாமங்கலம் இலக்கிய வளர்ச்சிக் கழகம் நடத்திய போட்டிகளில் வென்றேன். கல்லூரிப் பருவத்தில் பாரதியார் சங்கம், பாரதி இளைஞர் சங்கம் எனச் சில அமைப்புகள் நடத்திய கவிதைப் போட்டிகளில் கலந்து கொண்டு முதல் பரிசுகள் பெற்றேன். என் இருபதுகளில் பல கவியரங்குகளில் கலந்து கொண்டேன். அவை பெரும்பாலும், சிறந்த கவிதைக்குப் பரிசு வழங்கும் வழக்கம் கொண்ட அமைப்புகள். அப்படி கவிதை உறவு, அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் எனச் சில அமைப்புகளின் கவிதைப் போட்டிகளில் முதல் பரிசு பெற்றுள்ளேன். சில போட்டிகளுக்கு என்னை நடுவராக இருக்குமாறு அழைத்தார்கள். அதன் பிறகு, போட்டிகளில் கலந்து கொள்வதிலிருந்து விலகிக் கொண்டேன்.

கவியரசு கண்ணதாசன் கலை இலக்கியப் பேரவை என்ற அமைப்பு, 'இளந்தென்றல்' என்று அழைத்தது. பொன்னடியானின் தமிழ்க் கவிஞர் மன்றம், 'கடற்கரை கவிமுத்து' என்ற பட்டம் அளித்தது. வல்லிக்கண்ணன் முதலிய எழுத்தாளர்கள், கவிஞர்கள் பலரின் பாராட்டுகள் கிடைத்துள்ளன. ஒரு முறை ஒரு கவியரங்கில் நான் கவிதை வாசித்த உடன், அங்கு முன்னிலை வகித்திருந்த கவிஞர் சுரதா, ஒரு ரூபாயை எடுத்து எனக்குப் பரிசாக அளித்தார். வெறும் வாயால் பாராட்டக் கூடாது, ஒரு ரூபாயாவது கொடுத்துப் பாராட்ட வேண்டும் என்று அப்போது அவர் கூறினார். ஆயினும் அறிமுகம் இல்லாத ஒருவர், திடீரென நேரிலோ, தொலைபேசியிலோ, மின்னஞ்சலிலோ பாராட்டும்போது ஒரு புது உற்சாகம் ஏற்படுகிறது. என் சிறுவர் பாடல்கள் சிலவற்றைச் சில பள்ளிகளில் மாணவர்களுக்குக் கற்றுக் கொடுத்தும் விழாக்களில் பாடியும் வருகிறார்கள் என்று கேள்விப்படும்போது மகிழ்ச்சி உண்டாகிறது.

தங்களின் இரண்டு கவிதைகள் மட்டும் 32 மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டதன் விசேஷ காரணம் என்ன?

தொடர்ந்து வாசிக்க இணைப்பில் செல்க...http://www.nilacharal.com/ocms/log/12030709.asp

இன்றைய குறள்

வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் விளைவயின்
மாண்டற் கரிதாம் பயன்

பொருளைக் கவர்ந்து ஒருவன் வளம்பெற விரும்பினால் அந்த வளத்தின் பயன், நலம் தருவதாக இருக்காது

அறத்துப்பால் : வெஃகாமை

மனிதப்பெண் வெடிகுண்டு

முத்தையா முரளீதரன் உலக சாதனை

இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற் பந்துவீச்சாளரான முத்தையா முரளீதரன் உலக சாதனை படைத்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்கிற பெருமையை அவர் பெறுகிறார். கண்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முன்றாம் நாளான இன்று தனது 709ஆவது விக்கெட்டை வீழ்த்தி அவர் உலக சாதனையை படைத்துள்ளார். இதன் மூலம் ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்ண்னின் 708 விக்கெட்டுகள் என்கிற சாதனையை அவர் முறியடித்துள்ளார். ஞாயிறன்று வார்ண் அவர்களின் சாதனையை சமன் செய்திருந்த முரளீதரன் இன்று இங்கிலாந்து அணியின் பால் காலிங்வுட்டின் விக்கெட்டை வீழ்த்தியபோது உலகிலேயே அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற பெருமையை பெற்றார். சொந்த மண்ணில் தனது பெற்றோர்கள், மனைவி மற்றும் உறவினர்கள், நன்பர்கள் சூழ்ந்திருக்க இந்தச் சாதனையை படைத்தது குறிப்பிடத்தக்கது. இருந்தபோதிலும் அண்மைய ஆஸ்திரேலியச் சுற்றுப்பயணத்தின்போது இந்தச் சாதனை நிகழ்த்தப்பட்டிருந்தால் தாம் மிகவும் மகிழ்ச்சி அடைந்திருப்பேன் என்று சாதனைக்கு பிறகு கருத்துவெளியிட்டுள்ள முரளீதரன் கூறியுள்ளார். முத்தையா முரளிதரனின் உலக்ச் சாதனையைப் பாராட்டி இலங்கை அரசு அவரது உருவம் பதித்த தபால் தலை ஒன்றினை வெளியிட்டு கௌரவித்துள்ளது. இலங்கை அரசின் அதிபரும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமது பாராட்டினை முரளீதரனுக்கு தெரிவித்துள்ளனர். தனது சாதனையை முறியடித்துள்ள முரளீதரன் ஆயிரம் விக்கெட்டுகளை எடுக்கக்கூடிய திறமை வாய்ந்தவர் என்று ஷேன் வார்ண் தெரிவித்துள்ளார். அவ்வாறு அவர் ஆயிரம் விக்கெட்டுகளை வீழ்த்தினால், அந்தச் சாதனையை யாராலும் தகர்க்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்