July 08, 2007

ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்படவேண்டிய தருணம்

அதே வேளையில் இணைய தளத்தின் மூலமாகவும், எஸ்.எம்.எஸ் வாயிலாகவும் இன்னும் எந்த வகையிலெல்லாம் ஓட்டளித்தீர்களோ அத்தனை உணர்வுள்ள இந்தியனுக்கும்
ஒரு இந்தியன் என்ற முறையில் நன்றியுணர்வோடு எனது பதிவின் மூலமாக கைகுலுக்குகிறேன். ஏனெனில் நான் நன்றி சொல்லக்கூடாது. அது நாகரீகமன்று.

"நல்ல கவிதைகளைப் படித்தவுடன்,நான் எழுதியது ஒன்று கூடக் கவிதை இல்லையென்று புரிந்தது. அத்தனையையும் கிழித்துப் போட்டுவிட்டேன்."

• மின் ஊடகங்கள் மீது எனக்கு அவ்வளவாக மரியாதை இல்லை. மிக உயர்ந்த அளவில் வளர்ந்துள்ள விஞ்ஞானத்தை, வெறும் சினிமாவை வரவேற்பறைக்குக் கொண்டு வருவதற்குப் பயன்படுத்திக் கொச்சைப் படுத்திவிட்டார்களே என்பதுதான் வருத்தமாக இருக்கிறது.. பிரபஞ்சனுடன் ஒரு பேட்டி Please continue with link Tamil magazine Tamil news,poem,story,movie & song reviews

இன்றைய குறள்

அறத்தா றிதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோ டூர்ந்தான் இடை


அறவழியில் நடப்பவர்கள் பல்லக்கில் உட்கார்ந்து செல்பவர்களைப் போல வாழ்க்கையில் வரும் இன்ப துன்பங்கள் இரண்டையும் எளியவாகக் கருதி மகிழ்வுடன் பயணத்தை மேற்கொள்வார்கள். தீய வழிக்குத் தங்களை ஆட்படுத்திக் கொண்டவர்களோ பல்லக்கைத் தூக்கிச் சுமப்பவர்களைப் போல இன்பத்திலும் அமைதி கொள்ளாமல், துன்பத்தையும் தாங்கிக் கொள்ளும் மனப்பக்குவமின்றி வாழ்வையே பெரும் சுமையாகக் கருதுவார்கள்
அறத்துப்பால் : அறன் வலியுறுத்தல்

பெண் அடிமை என்பது மனித சமூக அழிவு என்பதை நாம் நினைக்காததாலேயே வளர்ச்சி பெற வேண்டிய மனித சமூகம் பகுத்தறிவு இருந்தும் நாள்தோறும் தேய்ந்து கொண்டே வருகின்றது

- பெரியார்

தமிழோசை

பாகிஸ்தானின் இஸ்லாமாபாதில் இருக்கின்ற செம்மசூதியை சுற்றி வளைத்துள்ள பாகிஸ்தானிய துருப்புகளுக்கும், மசூதிக்குள் இருக்கின்ற தீவிர எண்ணம் கொண்ட இஸ்லாமிய மாணவர்களுக்கும் இடையில் பதட்டமான மோதல் தொடர்ந்து வருகின்றது. இன்றைய "BBC" (ஜுலை 08 ஞாயிற்றுக்கிழமை) செய்திகள் கேட்க இணைப்பில் செல்க. கடந்த ஐந்து நாட்களில் மரணம் 335 பேர். தமிழோசை நிகழ்ச்சிகளைக் கேட்க கீழே 'க்ளிக்' செய்க BBCTamil.com Radio Player

"மக்களுக்கு செய்யும் சேவையே நிஜமான ஆன்மிகம்"

"தலைவனாவதற்காகவே பிறக்க வேண்டும்' இப்படி சொன்னவர் தான் வீரத்துறவி விவேகானந்தர். சொன்னதுடன் நிற்கவில்லை. மிகப்பெரிய ஆன்மிகத் தலைவராகவும் அவர் விளங்கினார். கோல்கட்டாவில் புகழ் பெற்ற தத்தா குடும்பத்தில் அவதரித்தவர் சுவாமி விவேகானந்தர். இவரது தாய் புவனேஸ்வரி காசி விஸ்வநாதரின் பக்தை. ஆண் குழந்தை இல்லாத இவர், விஸ்வநாதரிடம் தனக்கு ஒரு ஆண் குழந்தை பிறக்க வேண்டுமென வேண்டிக் கொண்டார். அவர் நினைத்தபடியே, 1863, ஜனவரி 12 காலை 6.49 மணிக்கு விவேகானந்தரின் அவதாரம் நிகழ்ந்தது. விவேகானந்தரின் தந்தை வக்கீல் விஸ்வநாதன் குழந்தைக்கு வைத்த பெயர் நரேந்திரநாத் தத்தா. "நரேன்' என செல்லமாக அழைப்பார். ஆனால், தாய் புவனேஸ்வரி "விரேஸ்வரன்' என்று பெயர் வைத்தார். இது காசி விஸ்வநாதரின் மற்றொரு பெயர். ஆனால், பள்ளியில் "நரேந்திரநாத்' என்ற பெயரில் சேர்த்து விட்டனர். பள்ளிப்படிப்புக்கு பிறகு, விவேகானந்தரை ஐ.சி.எஸ். பட்டப் படிப்புக்காக இங்கிலாந்துக்கு அனுப்ப விரும்பினார் தந்தை. பணக்கார பிள்ளைகள் எல்லாமே அந்தப் படிப்பின் மூலம் இந்தியாவில் மிகப்பெரிய பதவிகளை அடைந்து கொண்டிருந்த நேரம் அது. விவேகானந்தருக்கு படிப்பில் அதிக நாட்டமில்லை. மாறாக மத ஈடுபாடு அவரிடம் அதிகமாக இருந்தது. அப்போது "பிரம்ம சமாஜம்' என்ற இந்துமத அமைப்பு பிரபலமாக இருந்தது. ராஜாராம் மோகன்ராய் துவங்கிய இந்த இயக்கத்தில் தேசிய கீதம் தந்த ரவீந்திரநாத் தாகூரின் தந்தை தேவேந்திரநாத் தாகூர், கேசவ்சந்திர சென் போன்ற சீர்திருத்தவாதிகள் இடம் பெற்றிருந்தனர். அந்த இயக்கத்தில் இணைந்தார் விவேகானந்தர்.

விஸ்வநாதன் தன் மகனின் மனதை மாற்றுவதற்காக, திருமண முயற்சியில் ஈடுபட்டார். ஒரு செல்வந்தக் குடும்பம் நரேந்திரனுக்கு மிகப்பெரிய வரதட்சணையுடன் பெண் கொடுக்க முன்வந்தது. ஆனால், பணம், பெண் இவற்றிற்கெல்லாம் அப்பாற்பட்டிருந்த விவேகானந்தர் ஒரேயடியாக மறுத்து விட்டார். ஒருமுறை, விவேகானந்தர், பிரம்ம சமாஜத்தலைவர் ராஜாராம் மோகன்ராயிடம், "தலைவரே! நான் உங்கள் அமைப்பில் உறுப்பினர். இந்த அமைப்பு கடவுள் பற்றை வலியுறுத்துகிறது. யாரைப் பற்றி நாம் மக்களிடம் பேச வேண்டுமோ, அவரைப் பற்றி நன்றாகத் தெரிந்திருக்க வேண்டும். கடவுளைப் பற்றி பேசப்போகும் நாம், மக்கள் நம்மிடம் "கடவுள் எங்கே இருக்கிறார்' என்று கேட்டால் என்ன பதில் சொல்வது? நீங்கள் கடவுளைப் பார்த்திருக்கிறீர் களா?'' என்று கேட்டார். எதிர்பாராத இந்தக் கேள்வியால், மோகன் ராய் அசந்துவிட்டார். "இந்த இளைஞன் பிற்காலத்தில் சிறந்த ஞானியாவான்' என்று மட்டும் அவரது வாய் முணுமுணுத்தது. ஆனாலும், இந்த கேள்விக்கு மோகன் ராயால் பதில் சொல்ல முடியவில்லை. விடை கிடைக்காததால், பிரம்ம சமாஜத்தின் மீது விவேகானந்தருக்கு இருந்த பிடிப்பு தளர்ந்தது. "கடவுள் இல்லை என ஒரு கூட்டத்தார் சொல் கின்றனரே. அது உண்மைதானோ?' என்ற ரீதியில் அவரது மனம் சிந்திக்கத் தொடங்கி விட்டது. தனது உறவினரான ராமச்சந்திரதத்தரிடமும் இந்தக் கேள்வியைக் கேட்டார் விவேகானந்தர்.

அவர் விவேகானந்தரிடம், "நரேன்! நீ தட்சிணேஸ்வரம் போ. அங்கே ஒரு காளி கோயில் இருக்கிறது. அங்கே ராமகிருஷ்ணர் என்ற மகான் இருக்கிறார். அவரிடம் சென்றால், உன் கேள்விக்கு விடை கிடைக்கும்' என்றார். விவேகானந்தர் ராமகிருஷ்ணரிடம் சென்றார். ராமகிருஷ்ணர் அவரைத் தொட்டார். மின்சாரம் பாய்ந்தது போன்ற ஒரு உணர்வு ஏற்பட்டது. அவரிடமும் அதே கேள்வியைக் கேட்டார் விவேகானந்தர். "கடவுளைப் பார்த்திருக்கிறேன். நரேன். பார்த்ததென்ன...பேசவும் செய்திருக்கிறேன்' என்றார். "கடவுள் என்பவர் யார்? அவரிடம் கேட்க வேண்டியது என்ன?' என்பது பற்றி அவர் போதித்தார். அவரது போதனை விவேகானந்தருக்கு பிடித்து விட்டது. அதுவரை "நரேன்' என்ற பெயருடன் திகழ்ந்த அவர், தனக்கு "விவீதிஷானந்தா' என பெயர் சூட்டிக் கொண்டார். இந்தியாவை முழுமையாகச் சுற்றினார். கன்னியாகுமரி கடலில் குதித்து நடுவிலுள்ள பாறைக்குச் சென்று, மூன்று நாட்கள் அங்கேயே தியானத்தில் அமர்ந்து, "மக்களுக்கு செய்யும் சேவையே நிஜமான ஆன்மிகம்" என்ற உண்மையை உணர்ந்தார். இந்த விவேகம் தனக்கு கிடைத்ததற்கு அறிகுறியாக "விவேகானந்தர்' என்று பெயர் சூட்டிக்கொண்டார்.

அந்தப் பெயரே உலகத்தின் மூலை முடுக்கெல்லாம் பிரபலமானது. இந்தப் பெயருடனேயே சிகாகோ சென்று சர்வதேச மகாசபை நடத்திய, உலகின் அனைத்து மத தலைவர்களும் பங்கேற்ற கூட்டத்தில், இந்துமதத்தின் பெருமையை எடுத்துரைத்து, உலக மதங்களுக்கெல்லாம் இந்துமதமே வழிகாட்டியாக இருக்கிறது என்பதை ஆணித்தரமாக எடுத்துச் சொன்னார். அங்கேயே நிதிதிரட்டி, தன் குருநாதரின் பெயரால் "ராமகிருஷ்ண மடம்' என்ற அமைப்பை உருவாக்கினார். உலகெங்கும் அந்த மடத்தின் கிளைகள் உருவாயின. அவர் வாழ்ந்த காலம் 39 ஆண்டுகள் தான். ஆனால், செய்த பணிகள் அளவில்லாதவை. 1902 ஜூலை 4ல், அவர் காலமானார். "நாம் செலுத்துகின்ற பணிவுக்கும், மரியாதைக்கும் பிரதிபலனாக இறைவன் ஏதேனுமொரு நலனைத் தரவேண்டுமென்று, நாம் எதிர்பார்க்கும் வரை இறைவன் மீது உண்மையான பக்தி உண்டாகாது' என்கிறார் சுவாமிஜி.

நல்லதை மட்டுமே பேசுங்கள்

* உலகில் பிறந்துள்ள மனிதர்கள் அனைவரும் ராஜகுமாரர்களே. அவர்கள் எதற்காகவும், யாரிடமும் கையேந்தி நிற்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த உலகம் மனிதர்களின் பயன்பாட்டிற்காகவே கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, அதை ரசித்து அனுபவியுங்கள். ஆனால், எதன் மீதும் பற்று மட்டும் வைத்து விடாதீர்கள். ஏனெனில், அதுவே உங்களது பலவீனமாக மாறிவிடும். ஆசை என்ற விதையை மனதில் விதைத்து விட்டால், அதுவே பல துன்பங்களை விளைவிப்பதாக அமைந்து விடும்.


* சமுதாயத்தை சீர்திருத்தும் முயற்சியை கையில் எடுத்துக் கொள்ளுங்கள். தீய வழிகளில் செல்வோரிடம் அவர்களது செயலால் ஏற்படும் தீமைகளை எடுத்துச் சொல்லுங்கள். அப்போது, அவர்களை "தீயவனே' என்று சொல்லாமல், "நீ நல்லவன்' என்று சொல்லி, அதைவிட இன்னும் நல்லவனாக மாறும்படி தன்மையாக எடுத்துக்கூறுங்கள். ஏனெனில், பலவந்தமாக செய்யப்படும் சீர்திருத்த முயற்சிகள், அதன் வேகத்தை தணித்து எதிர்மறை விளைவுகள் தருவதாகவே இருக்கும். எனவே, சொல்லப்படும் கருத்தின் தன்மை இனிதாக இருக்க வேண்டியது அவசியம்.


* இன்பம் இருக்கும் இடத்தில் துன்பமும் இருக்கிறது. இன்பமானது, தனது தலையில் துன்பம் எனும் மகுடத்தை சூட்டிக்கொண்டுதான் வருகிறது. எனவே, இன்பத்தை அனுபவிக்க தெரிந்தவர்கள் துன்பத்தையும் அனுபவிக்கும் அளவிற்கு பக்குவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். இதுவே மனோபலத்தைக் கொடுக்கும்.

July 07, 2007

சமீபத்திய மதுரை தேர்தலில் தி.மு.க.வின் பின்னடைவு, விஜயகாந்த் - தின் முன்னேற்றம், காங்கிரஸின் வெற்றிக்குரிய ரகசியங்கள்!?

சமீபத்திய தேர்தலில் மதுரையில் தி.மு.க.வின் பின்னடைவிற்குக் காரணம் என்ன? விஜயகாந்த் - தின் முன்னேற்றத்துக்குக் காரணம் என்ன?

பாட்டாளி மக்கள் கட்சி மருத்துவர் இராமதாசு அவர்கள்தான் 2011 - ல் தமிழக முதல்வர்!?

இன்றைய குறள்

அன்றறிவாம் என்னா தறஞ்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை

பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று நாள் கடத்தாமல் அறவழியை மேற்கொண்டால் அது ஒருவர் இறந்தபின் கூட அழியாப் புகழாய் நிலைத்துத் துணை நிற்கும்

அறத்துப்பால் : அறன் வலியுறுத்தல்

தமிழோசை

இன்றைய (ஜுலை 07 சனிக்கிழமை) "BBC" நிகழ்ச்சிகளைக் கேட்க 'க்ளிக்' செய்க BBCTamil.com Radio Player

எனை ஈன்ற தந்தைக்கும் தாய்க்கும் திணையளவு நலமேனும் கிடைக்குமென்றால், செத்தொழியும் நாள் எனக்கு திருநாளாகும்



- பாரதிதாசன்

தமிழுக்கும் அமுதென்று பேர்! -

அந்தத்தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்!

தமிழுக்கு நிலவென்று பேர்! - இன்பத்தமிழ்

எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர்!

தமிழுக்கு மணமென்று பேர்! - இன்பத்தமிழ்

எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்!

தமிழுக்கு மதுவென்று பேர்! - இன்பத்தமிழ்

எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்!

தமிழ் எங்கள் இளமைக்குப் பால்! - இன்பத்தமிழ்

நல்ல புகழ் மிக்க புலவர்க்கு வேல்!

தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்! - இன்பத்தமிழ்

எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்!

தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்! - இன்பத்தமிழ்

எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்!

தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்! - இன்பத்தமிழ்

எங்கள் வளமிக்க உளமுற்ற தீ!
தவறாமல் இந்தப் பாடலைக்கேட்கவும், இணைப்பில் செல்க.http://www.tamilnation.org/asx/thamizh.asx

காலத்தால் அழியாத பாடல்களைப் பாடிய எத்தனையோ பாடகர்களில் திருச்சி லோகநாதன் அவர்களின் குரலையும் தமிழ்பால் பற்றுள்ள எவரும் மறந்துவிட முடியாது
Powered by eSnips.com

July 06, 2007

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் இடம்பெறுமா??

இன்று 7.7.2007 தினத்தன்று 7 அதிசயங்கள் பற்றிய தகவல் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது! உலகின் 7 அதிசயங்களாக எகிப்து நாட்டை சேர்ந்த பிரமீடு உள்ளிட்ட 7 இடங்கள் கிரேக்க அறிஞரால் பல ஆண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. இவற்றில் 6 இடங்கள் இப்போது இல்லை. இந்நிலையில் புதிய கட்டடக்கலை வல்லுனர் குழு உலகின் 7 புதிய அதிசயங்களை தேர்ந்தெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இதையடுத்து உலகெங்கிலும் உள்ள மக்கள், மொபைல் போன் மூலமாகவும், ஈமெயில் மூலமாகவும் தங்கள் விருப்பத்தை தெரிவித்து வருகிறார்கள். ஆக்ராவில் உள்ள உலகப் புகழ்பெற்ற தாஜ்மஹால், அமெரிக்காவின் சுதந்திரதேவி சிலை, ஈபிள் டவர் உள்ளிட்ட 21 சின்னங்கள் இப்போதைய பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இவற்றில் 7 அதிசயங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு இன்று 7.7.2007 அன்று அறிவிப்பு வெளியிடப்படுகிறது. லிஸ்பன் நகரில் இந்த அறிவிப்பு வெளியாகவுள்ளது. உலகின் 7 அதிசயங்களை அறிவதற்காக உலகமக்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள். மதுரையில் உள்ள புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் கோயில் இதில் இடம்பெறவேண்டும் என்பது மதுரை மக்களின் எதிர்பார்ப்பு. ஏன்? ஒவ்வொரு தமிழனின் எதிர்பார்ப்பு! இதற்காக லட்சக்கணக்கான மக்கள் இணையதளத்தில் வாக்களித்தது நினைவிருக்கலாம்.

இன்றைய குறள்

அழுக்கா றவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்ற தறம்

பொறாமை, பேராசை, பொங்கும் கோபம், புண்படுத்தும் சொல் ஆகிய இந்த நான்கும் அறவழிக்குப் பொருந்தாதவைகளாகும்

அறத்துப்பால் : அறன் வலியுறுத்தல்

தமிழோசை

இன்றைய 'BBC' (ஜுலை 06 வெள்ளிக்கிழமை) செய்திகள் கேட்க இணைப்பில் செல்க BBCTamil.com Radio Player

சிவாஜி : அந்தக் கருமத்தை நானும் பார்த்தேன் : சுகுணா திவாகர்

நண்பர் சுகுணா திவாகர் அவர்களின் 'சிவாஜி' பற்றிய விமர்சனம்!
பத்துவருடங்களுக்கு முன்புவரை ரஜினி என்றால் மெண்டல் என்றும் பரட்டை என்றும் ஒரு இமேஜ் இருந்தது. ஆனால் அது திடீரென்று ஆன்மீகவாதியாக அரசியல் தீர்மானிப்பாளராக என்று பலவிதத் தோற்றங்களுக்கு மாறிவிட்டது. மேலும் ரஜினி ரசிகர்கள்தான் ரஜினி படம் பார்ப்பார்கள் என்கிற நிலை மாறி எல்லோருமே ரஜினி படத்தைப் பார்த்தாக வேண்டும் என்கிற ஒரு 'நிர்ப்பந்தம்' எப்படியோ உருவாகிவிட்டது. ஒருவேளை ரஜினியின் படம் 'எப்போதோ ஒருமுறை' வெளியாகாமல் மூன்று மாதத்திற்கு ஒருமுறை வெளியானால் அதை யாரும் சீந்தமாட்டார்கள் என்று நினைக்கிறேன்.

ரஜினியின் குறும்பும் ஸ்டைலும் பைத்தியக்காரத்தனமான சேட்டைகளும் நகைச்சுவைகளும் எனக்கும் பிடித்தமான ஒன்று. சமயங்களில் கமலின் படங்களில் உறுத்தும் நடுத்தர வர்க்கத்து புத்திசாலித்தனப் பாவனையும் போலி முற்போக்கும் எரிச்சலூட்டுபவை. இதனாலேயே ரஜினியை ரசிக்க வேண்டியிருக்கிறதோ என்ற எண்ணமும் எழுகிறது.

ஆனால் ரஜினி தத்துவஞானி ரேஞ்சிற்குப் பெண்களைப் பற்றி உதிர்க்கும் கருத்துக்கள் எப்போதும் எரிச்சலூட்டுபவை. இதோடு ஷங்கர் என்கிற விஷக் கிருமியும் சேர்ந்துவிட்டதால் எப்படியும் படம் மோசமாகத்தானிருக்கும் என்ற அரசியல் ரீதியான முன் தீர்மானத்தோடு சிவாஜி படத்திற்குச் சென்றால்..? ஏதோ தெலுங்குப் படத்திற்கு வந்துவிட்டோமோ என்று தோன்றியது. 'சிவாஜி - த லூஸூ' குழந்தைகள் பார்க்கவேண்டிய அனிமேஷன் படம். இனிச் சில அபத்தங்கள்.

* அமெரிக்காவில் மென்பொருள் பொறியாளராக இருந்தால் 200 கோடி சம்பாதிக்க முடியுமா என்பதை அமெரிக்கவாழ் நண்பர்கள்தான் சொல்ல வேண்டும். அப்படியே 200 கோடி சம்பாதித்தாலும் அத்தனையயும் இலவசச் சேவைக்கு ஒருவன் வழங்க முடியுமா என்ன? திட்டமிட்டு ஆதி (சுமன்) சிவாஜியை நடுத்தெருவிற்குக் கொண்டு வருகிறார் என்கிறது கதை. ஆனால் சுமன் அப்படியே விட்டுவிட்டால் கூட சிவாஜி இருக்கிற பணத்தையெல்லாம் இலவசச் சேவை செய்துவிட்டு நடுத்தெருவிற்குத்தான் வந்திருப்பார்.

* இந்தியாவில் அனைத்துத் துறைகளிலும் ஊழலும் லஞ்சமும் ஊடுருவியிருக்கிறது. ஆனால் இன்கம்டாக்ஸ் அலுவலகத்தில் மட்டும் நேர்மையான அதிகாரிகளே வேலை செய்கின்றனர். ரஜினி தகவல் கொடுத்தவுடனே கருப்புப்பணம் வைத்திருப்பவர்களைப் பிடித்துச் சென்று விடுகின்றனர். புல்லரிக்கிறது. அதேபோல அமெரிக்கா செல்லும் ரஜினி வெள்ளையாக மாற்றிய பணத்தை தன் அறக்கட்டளைக்கு அனுப்பச் சொன்னதும் அனைவரும் ஒரு பைசா கூட 'ஆட்டை' போடாமல் அனுப்பி வைக்கின்றனர். ஏ.வி.எம் செலவழித்த நூற்றுக்கணக்க்கான கோடிகளில் கால்வாசி சாக்கு வாங்குவதற்கே செலவாகியிருக்கும்.

* தமிழ்ப்பண்பாடுப்படி பெண் வேண்டும் என்கிறார் ரஜினி. உடனே தமிழ்ப் பண்பாட்டின்படி நயன்தாரா மாராப்பைக் கழற்றியெறிந்துவிட்டு 'பல்லேலக்கா' என்று ஆட்டம் போடுகிறார். ஸ்ரேயாவும் பாடல் காட்சிகளிலும் ரயிலை நிறுத்தும் காட்சிகளிலும் (இந்த ரயில் நிறுத்தும் காட்சி அனேகமாக 327வது தமிழ்ப் படத்தில் இடம் பெறுகிறது) 'மேற்படிப் பாணியில்' தமிழ்ப் பண்பாட்டைக்' காப்பாற்றுகிறார்.

* சாலமன் பாப்பையா 'சிவாஜியில் உங்களுக்கு நல்ல வேடம் என்றவுடன் நடிக்க வந்துவிட்டார்' போலும். கடைசியில்தான் தெரிகிறது, தமிழ் இலக்கியம், கலாச்சாரம் எல்லாம் பேசித் தன் இரண்டு பெண்களையும் கூட்டிக் கொடுக்க அலைகிறார். பாப்பையா மட்டுமில்லை, ரஜினியும் தன் புரொஜெக்ட் நிறைவேற அதிகாரிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் கூட்டிக் கொடுக்கிறார். இதுவரை ரஜினி ஏற்காத 'வித்தியாசமான' வேடம்.

* அந்த ஜோசியக்காரன் போன்ற கொடூரமான வில்லனை எந்தப் படத்திலும் பார்த்ததேயில்லை. ரஜினி ஸ்ரேயா ஜாதகத்தைப் பார்த்தவுடனே 'திருமணம் நடந்தால் ரஜினி உயிருக்கு ஆபத்து' என்கிறார். அத்தோடு விட்டாரா? திருமணத்திற்கும் வந்து 'சீக்கிரம் தாலியறுப்பாய்" என்று ஸ்ரேயாவை 'வாழ்த்துகிறார்'. பொருத்தம் பார்க்கும் ஜோசியக்காரனைத் திருமணத்திற்கு அழைக்கும் முதல் வீட்டுக்காரர்கள் இவர்களாகத் தானிருக்கும்.

* ரஜினி ஒரு 15 அடியாள்களை வைத்து தமிழ்நாட்டிலிருக்கும் தொழிலதிபர்களிலிருந்து அதிகாரிகள், அமைச்சர் வரை மிரட்டுகிறார். பாவம் அவர்கள் அனைவரும் அடியாட்கள் வைத்துக் கொள்ளாத, வன்முறையில் நம்பிக்கையில்லாத காந்தியவாதிகள்.

* ரகுவரன் என்னும் திறமையான கலைஞரை இந்தப் படம்போல எந்தப் படத்திலும் வீணடித்ததில்லை.

* ரஜினியின் சண்டைக் காட்சிகள் போகோ சேனலையும் ஜெட்டிக்ஸ் சேனலையும் ஒருசேரப் பார்த்ததைப் போல இருக்கிறது.

* படத்தில் விவேக் காமெடி என்ற பெயரில் எரிச்சல் ஏற்படுத்துகிறார் என்றாலும் மேலே சொன்னபடி பெரும்பான்மையான காட்சிகள் காமெடியாகத் தானிருக்கின்றன. அதில் உட்சபட்சம் கருப்புப் பணமெல்லாம் ஒழிந்து ரேஷன்கார்டு போல மணிகார்டு வந்து 2015ல் இந்தியா வல்லரசாவது. விழுந்து விழுந்து சிரிக்கலாம்.

* இந்தக் கதையைத்தான் லீக் ஆகிவிட்டது, லீக் ஆகிவிட்டது என்று பில்டப் கொடுத்தீர்களா, அடப்பாவிகளா, ராணி காமிக்ஸ், முத்து காமிக்ஸ் வாங்கி நாலு 'இரும்புக்கை மாயாவி' யைப் படித்து மிக்ஸ் செய்தால் அதுதானே சிவாஜி கதை!

* ஆனாலும் படத்தில் இரண்டு பெரிய வித்தியாசங்கள் இருப்பதை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். வழக்கமாக ஷங்கர் படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் சட்டவிரோதமாக 'சமூக சேவை' செய்யும் கதாநாயகன் 'மாட்டிக்' கொண்டவுடன் மக்கள் அவனை விடுதலை செய்யச் சொல்லி போராடோ போராடென்று போராடுவார்கள். அதேபோல ரஜினி படங்களின் கிளைமாக்சில் ரஜினியின் தங்கை, அம்மா, மனைவி என்று யாரையாவதோ அல்லது ஒட்டுமொத்தமாகவோ வில்லன் கடத்திக் கொண்டுபோய்க் கயிற்றில் கட்டித் தொங்கவிட்டிருப்பான். ஆனால் இந்த இரண்டு கருமாந்திரங்களும் இந்தப் படத்தில் இல்லை.

* அதேபோல சென்ற படத்தில் மலைகள், லாரி என்றெல்லாம் ஷங்கர் 'வித்தியாசமாக' பெயிண்ட் அடித்திருந்தார். ஆனால் இதில் மாறுதலாக தொப்பையுள்ள 50 பேரை அழைத்துவந்து அவர்களின் தொந்தியில் ரஜியின் முகத்தை பெயிண்ட் அடித்துக் குலுங்க விட்டிருக்கிறார். ஒரே கதையை வைத்து பல படங்களை எடுத்து இம்சைப்படுத்துவதைவிட பேசாமல் ஷங்கர் பெயிண்ட் அடிக்கப் போகலாம்.

இந்த அபத்தங்களையும் தாண்டி நிழலாடும் சில அரசியல் உறுத்தல்கள்:

* பராசக்தி படத்தின் தொடக்கக் காட்சியில் சிவாஜி ரங்கூனிலிருந்து சென்னையில் காலடி வைக்கும்போது ஒரு பிச்சைக்காரர் 'அய்யா தர்மம் போடுங்க' என்பார். 'தமிழ்நாட்டின் முதல் குரலே இப்படி இருக்கே' என்பார் சிவாஜி. அதில் ஒரு கூர்மையான அரசியல் விமர்சனமும் சமூகநிலை குறித்த எள்ளலும் இருக்கும். ஆனால் அதே காட்சியை சிவாஜியில் பார்க்கும்போது காறித் துப்பலாமென்றுதான் தோன்றுகிறது.

* ரஜினி மருத்துவமனை கட்டும்போது 'ஷாக்' அடித்து ஒரு சிறுவன் துடிக்கும் காட்சியில் 'சிவாஜி பார்ட்டி'யில் இறந்துபோன அந்த தொழில் நுட்பக் கலைஞன் ஞாபகத்திற்கு வந்துபோவது தவிர்க்க முடியவில்லை.

* கர்நாடகத்து ரஜினி 'காவேரி ஆறும் கைக்குத்தல் அரிசியும் மறந்துபோகுமா?' என்று பாடும்போது 'சும்மா எரியுதில்ல'.

- சுகுணா திவாகர்

கம்ப்யூட்டர் "கீ போர்டையும், மௌசையும்" மறந்து விடுங்கள்!! புதிய கம்ப்யூட்டர் புரட்சி!!

கம்ப்யூட்டர் "கீ போர்டையும், மௌசையும்" மறந்து விடுங்கள்!! புதிய கம்ப்யூட்டர் புரட்சி!!

May 30 - Microsoft co-founder Bill Gates unveils the Microsoft Surface, a tabletop computer that reacts to touch.The 30-inch display screen is mounted under a plastic tabletop and will initially cost $5,000 to $10,000. It will, at first, only be available in select hotels, casinos, and T-Mobile stores in November

July 05, 2007

பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான செவாலியே விருது நடிகர் திலகத்துக்கு பிறகு அவருடைய கலை வாரிசான கலைஞானி கமல் ஹாசனுக்கு வழங்கப்படவிருப்பதாக ஒரு உறுதிப்படுத்தப்படாத செய்தி கேள்விப்பட்டேன். இது எந்த அளவுக்கு உண்மை என தெரியவில்லை. ஆனால் இத்தகைய சிறப்பை நடிகர் திலகத்தை தொடர்ந்து பெறுவதற்கு கமல் ஹாசனை விட தகுதி படைத்தோர் இந்தியாவில் வேறு எவருமில்லை என்பதை மறுக்க முடியாது.

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, ஒரு நடன இயக்குநராக பின்னர் நடிகனாக வளர்ந்து கமல் படைத்த சாதனைகள் மலைக்க வைப்பவை. இன்று ஒரு தயாரிப்பாளராக, இயக்குநராக, கதை வசன கர்த்தாவாக, பாடலாசிரியராக, பாடகராக பல்வேறு பரிமாணங்களில் முத்திரை பதித்த ஒரு முழுக்கலைஞன், தென்னிந்திய மொழிகளில் மட்டுமல்ல, வட இந்தியாவிலும் வெற்றிக்கொடி கட்டிய மாபெரும் கலைஞன் என்பதை அவரது விமர்சகர்கள் கூட ஒத்துக்கொள்வார்கள். நடிகர் திலகத்தை அடுத்து செவாலியே விருதை கமல் பெறப்போவது உண்மையானால் கண்டிப்பாக தமிழர்க்கும் தமிழகத்துக்கும் பெருமையே!

தசாவதாரம் கதை - வழக்கு : கமல் கடிதம்

பெரிதாக்கிப் படிக்கப் பதிவின் மீது 'க்ளிக்' செய்து படிக்கவும்.



என் ஆசான், தந்தை, நடிப்புலகச் சக்ரவர்த்தி நடிகர் திலகம் அந்த "சிவாஜி" எங்கே! இன்றைய சிவாஜி எங்கே! அன்று நடந்தது ஆவி துடித்தது....இன்று நடப்பது நெஞ்சு துடிக்குது!!

அன்றல்ல, இன்றல்ல "தமிழன்" என்றுமே இளிச்சவாயன்தான்

தமிழ்த் திரையுலகில் ஒரு படத்தால் கடந்த 3 மாதங்களாக பீதி ஏற்பட்டது. இதனால் மற்ற படங்களைத் திரையிடுவதில் பாதிப்பு நீடிக்கிறது என "சிவாஜி' பற்றி நடிகர் நாசர் தெரிவித்தார்.

தஞ்சாவூரில் திங்கள்கிழமை நடைபெற்ற நியூ டவுன் ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழாவில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற நாசர் பேசியதாவது: தமிழ் சினிமாவில் வன்முறை குறித்து ஆய்வு செய்யப்பட்டால் குறைந்தபட்சம் 1,000 பக்கங்களுக்கு மேல் எழுதலாம்.

சுதந்திரப் போராட்டக் காலத்தைவிடவும் மிக முக்கியமான ஒரு நெருக்கடியில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்; அதிகமான பிரச்னைகள் நம்மைச் சூழ்ந்திருக்கின்றன. ஆனால், இங்கு சினிமா என்பது வியாபாரம் மட்டுமே. பணத்தைப்போட்டு பணத்தை அள்ளுவதற்கான ஒரு கருவி.

ஒரு சினிமா முழுமையாக கலைஞனுடைய ஆளுமைக்குள் வரும்போதுதான் அவனால் சாதிக்க முடியும். சில பேர் சேர்ந்து இதற்காக முயற்சி செய்து வருகிறோம். நான் ஒட்டுமொத்த சினிமா உலகத்தைப் பிரதிபலிப்பவன் அல்லன். இதற்கு மாறாக ஏதேனும் செய்தால் என்னை சாதியைவிட்டு (சினிமா) விலக்கி வைத்து விடுவார்கள்.

சிறந்த படங்கள் கேன்ஸ் விருது பெற வாய்ப்புள்ளது. விருதுக்காக படம் எடுக்க முடியாது. நல்ல படமாக இருந்தால் விருது கிடைக்கும். 'அவதாரம்' நல்ல படம் என்று என்னால் தைரியமாக சொல்ல முடியும். ஆனால், அந்த ஆண்டு சிறந்த படத்துக்கான விருதை 'அருணாசலம்' படத்துக்கு கொடுத்தார்கள். சொந்த மண்ணிலேயே தரமான படம் மதிக்கப்படவில்லை. அதைப்பற்றி நாம் யாரும் பேசவில்லை. ஆனால், ஆஸ்கரைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம்.

கடந்த 3 மாதங்களாக ஒரு படம் வருகிறது என்று ஏற்படுத்தப்பட்ட பீதியால் மற்ற படங்களை வெளியிட முடியவில்லை. அந்தப் படம் வெளியான பின்னரும் இதுவரை எந்த படத்தையும் திரையிட முடியவில்லை.

தமிழ் சினிமாவில் நடிப்பதையே விட்டுவிட்டோம். பாதி நேரம் சண்டை, மீதி நேரம் பாட்டு... நடிப்பதற்கு ஏது நேரம்?

சினிமா எப்படி இருக்க வேண்டும் என்பற்கு உலகளாவிய கோட்பாடு இருகிறது. உலக அளவில் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய சினிமா கோட்பாடுகள் எல்லாம் பொய்த்து - தோற்றுப் போகக்கூடிய ஓர் இடம் தமிழ் சினிமாதான்.

ஹிரோஷிமா

ஹிரோஷிமா சரித்திரத்தைச் சல்லடையாக்கி, வரலாறுகளைத் திருப்பிப்போட்ட ஒன்றை, யுகமாற்றங்கள் வந்து போனாலும் மனித ஜீவராசிகளின் மனதை விட்டு கிள்ளியெறிய முடியாத கிறுக்கல்கள்!! அதைச் சற்று பார்ப்போமே!

இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் வரதட்சணைக் கொடுமைக்கு எதிர்ப்பு தெரிவித்து தனது ஆடைகளைக் களைந்துவிட்டு, உள்ளாடைகளுடன் தெருவுக்கு இறங்கி நடந்து சென்ற பெண்ணின் கணவரையும் , கணவரின் பெற்றோரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
ஆப்காணிஸ்தானில் பழைய சிறைக் கூடம் கண்டுபிடிப்பு : இந்த சிறைக் கூடத்தில் கைகளும் கண்களும் கட்டப்பட்ட நிலையில் பல சடலங்கள்....மேலும் இன்றைய 'BBC' தமிழோசை(ஜுலை 05 வியாழக்கிழமை) செய்திகள் கேட்க இணைப்பில் செல்க .... BBCTamil.com Radio Player

இன்றைய குறள்

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற

மனம் தூய்மையாக இருப்பதே அறம்; மற்றவை ஆரவாரத்தைத் தவிர வேறொன்றுமில்லை

அறத்துப்பால் : அறன் வலியுறுத்தல்

நாலடியார்

1. அறத்துப்பால்

1.5 தூய தன்மை

ஊறி உவர்த்தக்க ஒன்பது வாய்ப்புலனும்
கோதிக் குழம்பலைக்கும் கும்பத்தைப் - பேதை
பெருந்தோளி பெய்வளாய் என்னுமீப் போர்த்த
கருந்தோலால் கண்விளக்கப் பட்டு


- சமண முனிவர்கள்

தமிழ் விளக்கவுரை

அழகிய தோலால் போர்த்தப் பட்ட இந்த உடம்பு அழகான ஒரு தோற்றத்தைக் கொடுத்தாலும் அறுவருப்புள்ள கழிவுகளை உடலின் 9 துவாரங்கள் வழியாக வெளியேற்றும் இந்த உடம்பை அறிவிலா மனிதர்கள் எத்தனை விரிந்த தோல்கள்! என்றும், இன்னும் பலவாறாய் அழகை வியந்து பாராட்டுவர்.


- ஆதியக்குடியான்

ஆங்கில விளக்கவுரை

By reason of the beautiful skin causing it to appear lovely to the eye, and which is the external covering of the body, which is like a pot ejecting liquid faeces and seething filth abominable, from nine orifices which ooze out with excrement matter, the foolish will say of this body, Oh, thou who hast wide shoulders! Oh, thou who art adorned with bracelets!


Translation of Selected Verses
by Rev.F.J.Leeper, Tranquebar

"நீதி மன்றம் விதித்த தண்டனையால், ஒரு மனித உயிர் பறிக்கப்படும் ஒவ்வொரு வைகறைப் பொழுதிலும் மனித உரிமைக் கொடி அரைக் கம்பத்தில் பறக்கிறது"



வி.ஆர்.கிருட்டிணய்யர்
உச்ச நீதிமன்ற முன்னாள் நீதி அரசர்
இந்திய மனித உரிமையின் முன்னோடி

July 04, 2007

ஒரு சேஞ்சுக்கு இதையுந்தான் கேட்டுப்பாப்போமே!!










நண்பர் தீபன் அவர்களின் தமிழ் ஈழம் பற்றிய பாடலைக் கேட்டுப்பாருங்கள்

தமிழோசை

இஸ்லாமியப் படையால் கடத்தி நான்கு மாதம் பிணையக் கைதியாக வைக்கப்பட்ட ஆலன் ஜான்ஸ்டன் விடுவிக்கப்பட்டார். மேலும் இன்றைய "BBC" (ஜுலை 04 புதன்கிழமை) செய்திகள் கேட்க இணைப்பைத் தொடரவும் BBCTamil.com Radio Player

இந்திய நாட்டில் பெண்கள் சகல துறைகளிலும் தீண்டப்படாத மக்கள் அடைந்துவரும் வேதனையையும், இழிவையும், அடிமைத்தனத்தையும் விட அதிகமாகவே அனுபவித்து வருகிறார்கள்.

- பெரியார்.

இன்றைய குறள்

ஒல்லும் வகையான அறவினை ஓவாதே
செல்லும்வாய் எல்லாஞ் செயல்

செய்யக்கூடிய செயல்கள் எவை ஆயினும், அவை எல்லா இடங்களிலும் தொய்வில்லாத அறவழியிலேயே செய்யப்பட வேண்டும்

அறத்துப்பால் : அறன் வலியுறுத்தல்

இந்தியா 2020

"அப்துல்கலாமின் இந்தியா 2020 ஏதோ அணுகுண்டாலும், ராணுவ பலத்தாலும் அடையப்பட வேண்டிய ஒன்று என்றும் அது ஏழைகளுக்கானது அல்ல என்றும் ஒரு திட்டமிட்ட பொய் பிரச்சாரம் தொடர்ந்து நடத்தப்படுகிறது. முதலில் கலாம் சொன்ன இந்தியா 2020 என்பது என்ன என்பதை பார்ப்போம்.

"2020ம் ஆண்டுக்குள் வறுமைக்கோட்டுக்கு கீழே இருக்கும் மகக்ளின் எண்ணிக்கை பூஜ்யமாக வேண்டும். எழுதப்படிக்க தெரிந்தோர் எண்ணிக்கை 100% ஆக வேண்டும்.இந்தியாவின் மனிதவள மேம்பாட்டு குறியீடு 127லில் இருந்து 50க்கு உயரவேண்டும்.ஒவ்வொரு இந்தியனும் ஒரு பல்கலைகழக டிகிரி படிப்பது சாத்தியமாக வேண்டும்.ஈ கவர்னன்ஸ் திட்டம் மூலம் அரசாங்கத்தை ஒவ்வொரு குடிமகனுக்கும் கொண்டு செல்ல வேண்டும்.ஒவ்வொரு கிராமத்துக்கும் இடையறா மின்சார சப்ளை கிடைக்க வேண்டும்.ஒவ்வொரு கிராமத்துக்கும் குடிநீர் கிடைக்க வேண்டும். இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் கழிவறை மற்றும் சுகாதாரம் கிடைக்க செய்திடல் வேண்டும்.பொறுப்பான செயல்திட்டம் மூலம் தொழிற்சாலைகளை நிறுவி நிறைய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும்.இந்தியாவின் மூலை முடுக்குகளில் இருக்கும் ஏழைகளுக்கும் மருத்துவ வசதி மிகக்குறைந்த செலவில் கிடைக்க செய்திடல் வேண்டும்.மேலே சொன்ன மக்கள் நல திட்டங்களை அடைந்தபின் இந்தியா உலக அமைதிக்கும் பாடுபடல் வேண்டும்.

மேலே சொன்ன திட்டங்களை அடைய ஒவ்வொரு இந்தியனும் பாடுபட வேண்டும். இதுவரை அரசு திட்டங்கள் சென்றடையாத ஏழைகளை நாம் சென்று அடைய முயலவேண்டும்.

விவசாயிகளுக்கு நபார்ட் மற்றும் பல வங்கிகள் மூலம் கடன் வழங்கி அவர்களை கடன்சுமையிலிருந்து மீட்க வேண்டும். ஆராய்ச்சியாளர்கள், அறிவாளிகள், பல்கலைகழகங்கள், தொழிற்சாலைகள் ஆகியோர் விவசாயிகளுடன் சேர்ந்து வேலை செய்து உனவு உற்பத்தி, தானியம் பதப்படுத்துதல், விவசாய உற்பத்தி ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும்.இன்சூரன்ஸ் கம்பனிகள் மைக்ரோ கிரெடிட், பயிர் இன்சூரன்ஸ் ஆகியவற்றை விவசாயிகளுக்கு செய்து தரவேண்டும்.

கார்ப்பரேட்டுகள் கிராமப்புற மக்களுக்கு சேவை செய்வதை தமது சமுதாய கடமையாக நினைக்கவேண்டும். தொலைதொடர்பு யுகம் என்று நாம் பெருமைகொள்வது உண்மை எனில் இதுவரை அணுகப்படடாத மக்களை நாம் அணுகவேண்டும்"

இதுதான்யா கலாம் சொல்லும் இந்தியா 2020. இதில் என்னய்யா மேட்டுகுடித்தனமும் இந்துத்வமும் இருக்கிறது? தொடர்ந்து இணைப்பில் செல்க..பூங்கா - இணையத் தமிழின் முதல் வலை�

வலதுசாரி இந்துத்துவவாதிகளின் கனவை மெய்ப்பித்த "முஸ்லிம்". அதுவும் எப்படிப்பட்ட முஸ்லீம் - ராமபிரானின் பக்தர். அதை அவரே வெளிப்படுத்திக் கொண்டார். ஆனாலும் இரண்டு வேளை தொழுபவர். காலை எழுந்தவுடன் அவர் படிப்பது "பகவத் கீதை". ஆனாலும் குரான் படித்து தொழுகை செய்யும் முஸ்லீம். இந்துத்துவவாதிகள் ஒரு "இந்திய முஸ்லீம்" இப்படித் தான் இருக்க வேண்டும் என்று அடையாளம் காட்ட நினைத்ததை விட அப்துல் கலாமிடம் அளவுக்கு அதிகமாகவே இந்துத்துவவாத தன்மைகள் காணப்பட்டன.இந்திய முஸ்லீம்கள் இப்படியாக இருந்தால் தான் அவர்களை வலதுசாரி இந்துத்துவவாதிகள் "இந்தியர்களாக" ஒப்புக்கொள்வார்கள். கலாம் அவ்வாறு இருந்ததால் தான் அவர் "200% இந்தியராக" ஒப்புக்கொள்ளப்பட்டார். இந்திய முஸ்லீம்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று கூறவே 2002ல் அவரை ஆதரித்த ஆர். எஸ்.எஸ், இன்றைக்கும் அவரை ஆதரிக்கிறது.தொடர்ந்து இணைப்பில் செல்க..பூங்கா - இணையத் தமிழின் முதல் வலை�

திருமதி.சபீதா IAS நேர்முகம் Part I

இன்றைய சூழலில் இந்தியாவில் IAS அதிகாரிகள் நிலை என்ன? IAS அதிகாரிகளின் முக்கியத்துவம் என்ன? இந்தியப் பொருளாதாரம் மற்றும் தொழில் வளர்ச்சியின் நிலைபாடு மற்றும் எதிர்காலத்தில் இந்தியாவின் வளர்ச்சி எப்படி இருக்கும் என்று மிகத்தெளிவாக விளக்கியிருக்கிறார். இது ஒரு உபயோகமான வீடியோப் பதிவு என்பதில் ஐயமில்லை

திருமதி.சபீதா IAS நேர்முகம் Part II

திருமதி.சபீதா IAS நேர்முகம் Part III

July 03, 2007

திருமதி.சபீதா IAS நேர்முகம் Part IV


தமிழோசை

இன்றைய "BBC" (ஜுலை 03 செவ்வாய்க்கிழமை) செய்திகள் கேட்க இணைப்பைத் தொடரவும் BBCTamil.com Radio Player

இன்றைய குறள்

அறத்தினூஉங் காக்கமும் இல்லை அதனை
மறத்தலின் ஊங்கில்லை கேடு

நன்மைகளின் விளைநிலமாக இருக்கும் அறத்தைப் போல ஒருவருடைய வாழ்க்கைக்கு ஆக்கம் தரக்கூடியது எதுவுமில்லை; அந்த அறத்தை மறப்பதை விடத் தீமையானதும் வேறில்லை

அறத்துப்பால் : அறன் வலியுறுத்தல்

'கல்யாணம் ஆகாமல் செத்து மடிந்தாலும் மடிவேனே யல்லாது, வரதட்சிணை கொடுக்க மாட்டேன்' என்று ஒவ்வொரு பெண்ணும் சொல்ல முன்வரவேன்டும்

- மகாத்மா காந்தி

மனிதனால் முடியாத ஏதாவதொன்று இருக்கிறதா? இந்த வீடியோவிற்கு விளக்கம் தேவையில்லையென நினைக்கிறேன்.

வாழ்க்கையின் உச்சத்துக்குச் செல்ல வேண்டுமெனில் எதையாவது மனிதன் சாதித்துக்கொண்டே இருக்கவேண்டும். இவர் பெயர் ஜிம் ஸ்பிக்லெர், உலகத்திலேயே மிக உயரமான மரத்தில் ஏறி அதன் உயரத்தைக் கணக்கிட்டுச் சாதனை படைத்திருக்கிறார். மரத்தின் உயரம் 115.55 மீட்டர் உயரம். இது ஒட்டாவா சமாதானக் கோபுரத்தின் உயரத்தைவிட 23 மீட்டர் அதிகம். சாதனைக்கு எல்லை ஏது?

மேட் மெக் அலிஸ்டர் 155 T - சர்ட்டுகளை நான்கு மணிநேரத்தில் தொடர்ந்து அணிவித்துக் கின்னஸ் சாதனை படைத்த வீடியோ

July 02, 2007

அவன் அன்று
நட்ட மரங்கள்
நிமிர்ந்து விட்டன
இவன் நடும்போது
குனிந்தவன்தான்,
இன்னும் நிமிரவே இல்லை...

எங்கள் அரசியல்வாதிகளின் அகராதியில் இல்லாத ஒரு வார்த்தை 'பந்தா'. இதற்கு பல உதாரணங்களை என்னால் சொல்லமுடியும். அந்தஸ்தில் ஒரு இந்திய அரசியல்வாதி இருந்தால் அவர் இருக்கும் பகுதிப் பக்கம் கூட என்னைப் போன்ற ஒருவர் போக முடியுமா என்பது சந்தேகம்.

மலேசிய எழுத்தாளர் வீ.செல்வராஜ் அவர்களின் நேர்முகம் Please visit the link Interview with V Selvaraj

மலேசியத் தமிழர்களைக் காப்பாற்றுங்கள்

மலேசியாவில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் சிறைக் கொட்டடியில் வாடும் செய்தி மனதைப் பதைக்க வைக்கிறது. சொந்த நாட்டில் பிழைக்க வழியின்றி, வருமானமின்றி, செய்வதறியாது, இருப்பவற்றை எல்லாம் அடகு வைத்தும் விற்றும், யார் யாரையோ நம்பிப் பிழைப்புத் தேடி அன்றாடம் பலரும் சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளுக்கு குடிபெயர்ந்து வருகின்றனர். பல கனவுகளோடும், எதிர்கால நம்பிக்கையோடும் அங்கு சென்று, இன்று சரியான ஆவணங்கள் இல்லை என்று குற்றம்சாட்டப்பட்டு சிறையில் தள்ளப்பட்டிருக்கும் எவரும், பெரிய படிப்புப் படித்து, பெரிய வேலைகளுக்குச் சென்றவர்கள் அல்லர். பெரும்பாலானோர் உடல் உழைப்பை உறிஞ்சும் வேலைகள் செய்யவே அங்கு சென்றனர். தொடர்ந்து படிக்க இணைப்பிற்குச் செல்க. Thenseide - HOME

பழ. நெடுமாறன் உரை

ஒரே ஒரு கைத்துப்பாக்கியுடன் தொடங்கப்பட்ட இயக்கம், அந்த ஒரு துப்பாக்கியும், அருமைத் தம்பி பிரபாகரனின் நெருங்கிய தோழன் பண்டிதர். பண்டிதரின் தாயார் ஒரே ஓரு பசுமாட்டை வைத்து பால் கறந்து விற்று குடும்பத்தை காத்து வந்த நிலையில், அந்த பசுமாட்டை தன் தாயாருக்கு தெரியாமல் பண்டிதர் ஓட்டிச் சென்று விற்று, அதில் கிடைத்த பணத்தில் வாங்கிய ஒரே ஒரு துப்பாக்கியுடன் தொடங்கப்பட்ட இயக்கம், இன்று மரபு வழி இராணுவமாக வளர்ந்து, சிங்கள கடற்படையை ஓட ஓட விரட்டியடிக்கும் கடற் புலிப்படையை தன்னகத்தேக் கொண்டு, இன்று வரன் புலிகளையும் பறக்க விடும் அளவிற்கு முப்படைகளோடு வளர்ந்திருக்கிறது.

தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு உறுதுணையாக நின்றோம் என்று ஒவ்வொரு உலகத் தமிழனும் பெருமைப்பட வேண்டும். இலண்டன் அய்பிசி தமிழ் வானொலி சேவையின் ஆண்டு விழாவில் பழ. நெடுமாறன் உரை தொடர்ந்து படிக்க இணைப்பிற்குச் செல்க. மேலும் ஒலிப்பதிவில் இடையிடையில் தடங்கல் இருக்கும் என்பதைத் தெரியப்படுத்திக்கொள்கிறேன். மன்னிக்கவும்.Thenseide - HOME

பெண்மக்களை இன்று ஆண்கள் நடத்தும் மாதிரியானது மேல் சாதிக்காரன் கீழ்சாதிக்காரனை நடத்துவதை விட, ஆண்டான் அடிமையை நடத்துவதை விட மோசமானதாகும்.
அவர்கள் எல்லாம் இருவருக்கும் சம்பந்தமேற்படும் சமயங்களில் மாத்திரம் தான் தாழ்மையாய் நடத்துகிறார்கள். ஆனால் ஆண்களோ பெண்களைப் பிறவி முதல் சாவுவரை அடிமையாகவும், கொடுமையாகவும் நடத்துகிறார்கள்.

- பெரியார்

தமிழோசை

அமெரிக்க அணு ஆயுதக் கப்பலை அனுமதித்ததால் ஆர்ப்பாட்டம் செய்யும் அரசியல் கட்சிகள் பற்றிய சென்னை செய்திகள் மற்றும் இன்றைய "BBC" (ஜுலை 02 திங்கட்கிழமை), செய்திகள் கேட்க இணைப்பைத் தொடரவும் BBCTamil.com Radio Player

நாலடியார்

1. அறத்துப்பால்

1.4 அறன் வலியுறுத்தல்

வைகலும் வைகல் வரக்கண்டும் அஃதுணரார்
வைகலும் வைகலை வைகுமென் றின்புறுவர்
வைகலும் வைகல்தம் வாழ்நாள்மேல் வைகுதல்
வைகலை வைத்துணரா தார்.


- சமண முனிவர்கள்

தமிழ் விளக்கவுரை

நாட்கள் வருவதையும் போவதையும் கண்டு, அதை உணராமல் எப்போதும் இப்படியே வந்துபோகும் என்று சந்தோசமாக இருப்பவர், தன் வாழ்நாளில் ஒரு நாள் கழிந்து போனது என்பதை அறிந்து உணராதவர்

- ஆதியக்குடியான்

ஆங்கில விளக்கவுரை

Although they daily see the passing away of days, yet they think not of it, and daily rejoice over the present day, as if it would last for ever, for they do not consider the past day to be one day added to the portion of their life that has expired.

Translation of Selected Verses
by Rev.F.J.Leeper, Tranquebar

இன்றைய குறள்

சிறப்பீனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு

சிறப்பையும், செழிப்பையும் தரக்கூடிய அறவழி ஒன்றைத்தவிர ஆக்கமளிக்கக் கூடிய வழி வேறென்ன இருக்கிறது?


அறத்துப்பால் : அறன் வலியுறுத்தல்

July 01, 2007

பட்டிமன்றப் பேச்சாளர் பேராசிரியர் திரு.ஞானசம்பந்தன் அவர்கள் அமெரிக்கப் பண்பலை வரிசையில் அளித்த நேர்முகத்தின் வானொலிப் பதிவு
Powered by eSnips.com

'ஒரு போதும் கடந்தகாலம் திரும்பி வராது. எதிர்காலத்தைப் பற்றியும் நமக்குத் தெரியாது. அவற்றை நினைத்து நேரத்தையும், ஆரோக் கியத்தையும் இழக்காமல் நிகழ்காலத்தைப் பயனுள்ளதாக்க முயற்சி செய். மூன்று காலங்களையும் பற்றி அறிந்தவர் பரமாத்மா ஒருவரே. அதனால் நீங்கள் மூன்று காலங் களையும் இறைவனுக்கு சமர்பித்துவிட்டு, அவரை நினைத்துக் கொண்டு முன்னோக்கிச் செல்ல முயற்சி செய்யுங்கள். அப்படிச் செய்தால் சதா நம் முகத்தில் புன்னகை மறையாமல் இருக்கும்.'

- மாதா அமிர்தானந்தமயி

தமிழோசை

இன்றைய (ஜுலை 01 ஞாயிற்றுக்கிழமை) "BBC", சர்ச்சைக்குரிய இராணுவக் கப்பல் சென்னை வருவது பற்றிய செய்தி கேட்க கீழுள்ள இணைப்பை அழுத்தவும். BBCTamil.com Radio Player

அபஸ்வரம் ராம்ஜி அவர்களுடன் ஒரு நேர்முகம்.

பிரபல இசைக்கலைஞர்கள் என்றால் அவர்களுள் போட்டி, பொறாமை இருக்கும். ஆனால் இந்த மழலைகள் இசையை ஒரு விளையாட்டாகக் கருதி அவர்களுக்குள் பாடல்களை எப்படிப் பாடவேண்டும், எப்படி மேலும் புதுமையாகப் பாடலாம் என்றெல்லாம் விவாதிக்கிறார்கள். ஒரு நிகழ்ச்சியில் ஒருவர் பாடியதை மற்றவர் ஆக்கப்பூர்வமாக விமர்சிக்கிறார். இதனால் எதிர்காலத்தில் போட்டி பொறாமையற்ற ஒரு இசைச் சமுதாயம் உருவாகும். Please 'click' the link
Tamil magazine Tamil news, poem, story, movie & song reviews

பெண்மக்களை இன்று ஆண்கள் நடத்தும் மாதிரியானது மேல் சாதிக்காரன் கீழ்சாதிக்காரனை நடத்துவதை விட, ஆண்டான் அடிமையை நடத்துவதை விட மோசமானதாகும்.

- பெரியார்

தாஜ்மகாலுக்கு ஓட்டு போடாதீர்கள்

புதிய உலக அதிசயங்கள் வரிசையில் தாஜ்மகாலும் இடம் பிடிக்க இந்த நம்பருக்கு SMS செய்து தாஜ்மகாலுக்கு ஓட்டளியுங்கள் என உங்களுக்கு உங்கள் நண்பர் SMS அனுப்புகிறாரா? நீங்களும் அதை நம்பி SMS ஓட்டு போட்டீர்களா?... போடாதீர்கள்.. இதெல்லாம் சுத்த ஏமாற்று வேலை..."உலகத்தின் புதிய ஏழு அதிசயங்கள் தீர்மாணிக்கப்படுகிறது.. அதற்கான ஓட்டெடுப்பு" என்று நடத்தப்படும் இந்த ஓட்டெடுப்பின் பின்னனி என்ன என்று பார்த்தோமானால் அதிர்ச்சியாக இருக்கிறது...
சுவிட்சர்லாந்தில் உள்ள NOWC (New Open World Cooperation) என்னும் தனியார் நிறுவனத்தின் தலைவர் Bernard Webber என்பவரால் முடுக்கி விடப்பட்டுள்ள இந்த வாக்கெடுப்பு உலகெங்கிலும் நடந்து கொண்டிருக்கிறது...இலவச மற்றும் கட்டண ஓட்டுக்கள் உதவியுடன் நடத்த படும் இந்த வாக்கெடுப்பு செல்பேசி SMS, தொலைபேசி அழைப்பு மற்றும் இணையத்தின் மூலம் நடத்தப்படுகிறது. இதை பற்றி மேலும் தகவல்கள்

1) இது முழுக்க முழுக்க தனியார் நடத்தும் வாக்கெடுப்பு... இதற்கும் எந்த நாட்டின் அரசுகளுக்கும் தொடர்பில்லை...

2) உலக பாரம்பரியங்களை அறிவிக்கும், சேர்க்கும், நீக்கும் அதிகாரம் உடையது ஐக்கிய நாடுகள் சபையின் துணை நிறுவனமான UNESCO (The United Nations Educational, Scientific and Cultural Organization) மட்டுமே... UNESCO இந்த வாக்கெடுப்பை அங்கீகரிக்க மறுத்துள்ளது... UNESCO இதன் வாக்கெடுப்பு நடத்தப்படும் முறைகள் மற்றும் அதன் நம்பகத்தன்மை குறித்து அவநம்பிக்கையும், கவலையும் தெரிவித்துள்ளது...

3) இந்த வாக்கெடுப்புக்கும் அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று நமது மத்திய அரசும் மறுத்துள்ளது...

4) இது முழுக்க முழுக்க லாப நோக்கோடு தனியார் நடத்தும் கருத்து கணிப்பு என்றும் இதை தடை செய்ய வேண்டும் என்று உலகெங்கிலும் எதிர்ப்பு குரல் கிளம்ப ஆரம்பித்துள்ளது... எகிப்து நாட்டில் ஏற்கனவே இதற்கு எதிராக, "ஓட்டளிக்காதீர்கள்" என்று பிரச்சாரம் கிளம்பி இருக்கிறது...

5) ஒவ்வொருவர் போடும் ஒரு SMS வோட்டுக்கும் மொபைல் நிறுவனங்களால் வசூலிக்கப்படும் கட்டணத்தில் ஒரு பகுதி இந்த தனியார் நிறுவனத்தை சென்றடையும் வகையில் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாம்...

நமது அரசாங்கத்தின் BSNL கூட இதற்கு விதிவிலக்கல்ல
6) இன்னும் T சர்ட்டுகள் மற்றும் மெலும் பல வியாபார பொருட்கள், உலக சுற்றுலா மற்றும் பல வியாபாரங்கள் இதன் மூலம் முடுக்கி விடப்பட்டுள்ளன... அதன் லாபங்களும் சர்வதேச நிறுவனங்களிடையே பங்கிடப்படுகின்றன...
அப்பாவி மக்களின் நாட்டுப்பற்றை கூட காசாக்கும் எண்ணம் கொண்ட இத்தகைய நிறுவனங்களை என்ன செய்வது...

இன்றைய குறள்

அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்


அனைத்து உயிர்களிடத்திலும் அன்பு கொண்டு அருள் பொழியும் சான்றோர் எவராயினும் அவர் அந்தணர் எனப்படுவர்

அறத்துப்பால் : நீத்தார் பெருமை

June 30, 2007

பெண்களைப் படிக்கக் கூடாது என்று ஏன் கட்டுப்பாடு ஏற்படுத்தினார்கள்? அவர்களுக்கு அறிவு இல்லை! ஆற்றல் இல்லை! என்று சொல்லிச் சுதந்திரம் கொடாமல் அடிமையாக்குவதற்காக


- பெரியார்

பாசப்பிணைப்பு : கவிஞர் சிநேகன்

பாசப்பிணைப்பு : கவிஞர் சிநேகன்

நான் கேட்ட கேள்வி "ரமேஷ்,சுரேஷ்,தினேஷ் என்று உனது தம்பிகளுக்குப் பெயர் வைத்துள்ளீர்கள். அதன் உண்மையான அர்த்தம் தெரியுமா என்பது தான் அந்தக் கேள்வி. "பேர் அழகா இருக்குன்னு வைச்சிருப்பாங்க..இதுக்கெல்லாம் அர்த்தம் எதுக்கு? சும்மா கூப்பிடத்தானே"..என்று சொன்ன மனைவியிடம் நான் அதற்கு அர்த்தம் சொல்லவா என்று கேட்டேன். மிகவும் ஆவலுடன் பதிலை எதிர்பார்த்த மனைவியிடம் வேடிக்கையாக அச்சில் ஏற்ற முடியாத ஒரு அசிங்கமான ஒரு பதிலைச் சொன்னேன்.அதுசமயம் நான் படித்த ஓஷோவின் சுயசரிதை தமிழாக்கத்தில் "பாபு" என்பதற்கு நாற்றம் என்று ஏதோ ஒரு இந்திய மொழிகளில் அர்த்தம் இருப்பதாக நான் படித்ததை சொல்லி ரமேஷ்,சுரேஷ்,தினேஷ் என்பதற்கு மூன்று வகை நாற்றங்களை வரிசைப்படுத்தினேன். பிறகு தமிழ் மொழியின்சுவையையும்,இனத்தின் பெருமையையும் பல்வேறு நேரங்களில் சொல்லி, பிறக்கப் போகும் குழந்தைகளுக்கு தமிழில் தான் பேர் வைக்க வேண்டும் என்று சொல்லி அதன்படி நான் எனது குழந்தைக்கு உதயநிலவன் என்று தமிழில் பெயர் சூட்டினேன்.பட்டப்படிப்பு அதுவும் சமூகவியல் படித்தவர் என்பதால், திராவிட இயக்கங்கள் குறித்த ஒருவகை அறிமுகம் இருந்ததால் எனது பணி இலகுவானது.அதன் பின்பு எனது மாமனார் இல்ல வாரிசுகள் பலரும் தமிழில் அகிலன்,எழில்,முகில் எனப் பெயர் சூட்டிகொண்டது எனக்கு ஒருவகை வெற்றியே எனலாம். தொடர்ந்து படிக்க இணைப்பை அழுத்தவும். Thinnai





உலகத்தில் சம்பாதிக்க எத்தனையோ நல்ல வழிகள் இருக்கின்றன. உலக அளவில் பிச்சைக்காரர்கள் குறைந்துகொண்டு வருகிறார்கள். பிச்சை எடுப்பதைத் தொழிலாக வைத்திருப்பவர்கள் கையாளும் உத்திகள் ஏராளம். அந்த உத்திகளில் அடுத்தவர்களின் கவனத்தை ஈர்க்கும் உத்திகள் என்று கொஞ்சம் இருக்கிறது. இரக்கப்படுவதற்காகவே சில உத்திகள் வைத்திருப்பார்கள். சிலர் புகை வண்டிகளில் செல்லும்போது நாம் அமர்ந்திருக்கும் இடங்களைச் சுத்தம் செய்து இறுதியாகக் கையேந்துவார்கள். சிலர் சிக்னல்களில் வாகனங்கள் நிற்கும்போது கைக்குழந்தைகளோடு பிச்சையெடுப்பார்கள். அமெரிக்கா போன்ற வளர்ந்துள்ள நாடுகளில் கூட ஸ்டைலாக உடையணிந்து கையில் ஒரு போர்டுடன் நின்றுகொண்டிருப்பார்கள். அந்தப் போர்டில் 'தயவு செய்து உதவி செய்யுங்கள், என்னால் எந்த வேலையும் செய்யமுடியாத நிலையிலிருக்கிறேன்" என்றெல்லாம் ஆங்கிலத்தில் எழுதி வைத்துக்கொண்டு நிற்பார்கள். இன்னும் சிலர் கையில் பூங்கொத்துடன் நின்றுகொண்டிருப்பார்கள். இனாமாகக் காசு கொடுத்ததாக இருக்கவேண்டாமென்ற உத்தி இது. இதெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும்.


சமீப காலங்களாக, எனக்குத்தெரிந்து 6 – 7 வருடங்களாக சிலர் இ-மெய்ல் மூலம் பிச்சையெடுக்கிறார்கள். இது ஒரு ரூபாய்க்கோ, ஒரு டாலருக்கோ அல்ல. பில்லியன் கணக்கான டாலர்களுக்கு. அதாவது இணையத்தை உபயோகிக்கும் ஒவ்வொருவரும் இது போன்ற அனுபவத்தைப் பெற்றிருப்பார்கள். முதலில் நண்பர்கள்போலத் தன்னை அறிமுகம் செய்து கொண்டு, வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் விசயத்தை மெதுவாக ஆரம்பித்து, கடைசியில் கோடிக்கணக்கான டாலர் மதிப்புள்ள பணம் வங்கியில் யாரோ போட்டுவிட்டு மறைந்துவிட்டதாகவும், இவர்தான் அந்த வங்கி, மேலாளர் அல்லது அந்தப் பணம் போட்டவருக்குத் தூரத்துச் சொந்தம் என்றெல்லாம் பல கதைகள் கூறி நம்மை அதற்கு உதவி செய்யச்சொல்லி, பிறகு நமது அடையாள அட்டை, வங்கிக் கணக்கு எண் வரை கேட்டு இறுதியில் நமது வங்கியில் இருக்கக் கூடிய பணத்தைச் சுருட்டிக் கொண்டு சென்றுவிடும் கூட்டம் இன்றைய கணிணி யுகத்தில் கொடிகட்டிப் பறந்து கொண்டிருக்கிறது. இவர்களுக்கு முதற்கண் நாம் இ-மெய்ல் மூலமாகப் பதில் அளிப்பதே தவறு. நமது ஐபி அட்ரஸ் என்று சொல்லக்கூடிய நமது இணையதள விவரங்களைச் சேகரித்துப் பின் நம்மை ஆழ்கடலில் தள்ளி விடுவார்கள். இதற்குப் பெயர் முகவரித்திருட்டு என்றுகூட சொல்லலாம். அவர்கள் அனுப்பும் மெய்ல் நைஜீரியா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலிருந்துதான் அதிகம் வரும். இவர்களை ஒழிக்க ஏராளமான நடவடிக்கைகள் எடுத்துவரப்படுகின்றன. இன்னும் சிலர் லாட்டரி மோசடி செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். நமக்கு ஏராளமான பணம் விழுந்திருப்பதாகவும், நமது இ-மெய்ல் ஐடி தேர்வு செய்யப்பட்டிருப்பதாகவும், அதில் பில் கேட்ஸ், அம்பானி, பின் லேடன், ஜார்ஜ் புஷ் போன்ற பிரபலங்களின்
இ-மெய்ல் முகவரியும் தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும் சொல்லி ஏமாற்றுவார்கள்.

எது எப்படியோ இதில் பலர் ஏமாற்றம் அடைந்து பல லட்சக்கணக்கான பணத்தை இழந்தவர்களும் உண்டு. இதனை ஒழிக்கவும், இது போன்ற தகவல்களைப் பதிவு செய்யவும், எப்படியெல்லாம் மோசடி செய்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ளவும் ஏராளமான சேவை செய்யக்கூடிய இணையதளங்கள் இருக்கின்றன. இப்படிப்பட்ட நரிகளையும், நாய்களையும் விடக் கேவலமான மாடர்ன் மந்திரவாதிகளைப் “பிச்சைக்காரர்கள்” என்று சொல்லாமல் வேறென்ன சொல்லமுடியும். எனவே இதையெல்லாம் கண்டு தயவு செய்து ஏமாந்து விடாதீர். இப்படி மெய்ல் உங்களுக்கு வந்தால் தயவு செய்து பதிலளிக்காதீர்கள். உடனே "Spam" ஃபோல்டருக்கு அனுப்பி விடுங்கள். உங்களுக்கு வரும் இ-மெய்லில் உள்ள ஒரு தலைப்பையோ, லட்டரி பேரையோ, உதாரணத்துக்கு "லோட்டோ லாட்டரி" ஆஸ்திரேலியா என்று கூட வரும். இவற்றை கூகிள் இணையத்தில் போட்டுத் தேடிப்பார்த்தீர்களென்றால் பெரிய கூத்தே நமக்குத் தெரியவரும். சமீபத்தில் எனக்கு வந்த ஒரு இ-மெய்லை உங்களுக்குத் தருகிறேன்.
Dear Winner,
This Email is to inform you that you emerged a winner of (£2,500.000.00 Million Pounds sterling in cash) on our online draws which was played on the 2nd JULY 2007.YOUR
DETAILSREFERENCE NUMBER:
UK/9420X2/68BATCH
NUMBER:074/05/ZY369TICKET
NUMBER:56475600545 188SERIAL NUMBER:5368/02
contacting our fiduciary agent using the details as given below:
Agent Name:Mr David Spencer.
Fiduciary/ Claims Agent.
Tell:(+44) 703 192 5024
Email Enquiry:info_lottoswinningcenter@yahoo.co.uk
Yours Truly,
Sir.Brian Hunt,
Co-ordinator
(Online Promo Co-Ordinator)

Dear Navneeth,

Compliments of the season. Please do not be dismayed over this letter since you do not know me or spoken to each other. With trust and mutual understanding,I write this letter of an appeal for assistance to you.

I am Mr Modiboh Sow Jnr, the son of late Chief Modiboh Sow,a one time minister of agriculture in the first government of Robert Mugabe and the former president general of Zimbabwe farmers Association( Z.F.A)who was murdered in a land crisis in Zimbabwe, Southern Africa Region.

The crisis erupted when the President Mr. Robert Mugabe introduced a new Land Reform Act that is currently affecting the white farmers and some black farmers who did not support his dictatorial regime. This resulted in killing, burning of houses and confiscation of properties. Probably you must have seen and heard these crises across the Cable Network News (CNN) and British Broadcasting Cooperation (BBC).

At the early stage of this crisis, my father sold most of our properties including Houses, agricultural equipments and the savings from our Gold and Diamond business of Seven Million, four hundred thousand US Dollars (US$7,400,000}and deposited it with a security firm in a form of consignment and valuables in the Republic of Ghana. This money was meant for refurbishing of poultry and animal husbandry buildings and to foster the implementation of agricultural equipments to a mechanized farming
At the time when the social, economic and political situation becomes deteriorated and the crisis reached its climax, unemployment have risen to 720% and inflation to 70% respectively. I, my brother and my mother moved to the Republic of Ghana , where we sought for political asylum.

My mother had been sick since because of the shock she got from my father's death and we have ben battling to see that she recovered but unfortunately, she died 3 months ago.

We have done the funeral ceremony as we can since we are not in our country and now we have decided to move out of Ghana to invest this money and settle down.
We are asking you to assist us in moving this money out of Ghana , since we encounter difficulties with the Ghanaian Exchange policy and bank regulations because of our refugee status.

The monetary law here does not permit refugees like me and my brother such a financial right to operate any form of bank account with their commercial banks and we are working on our travel document to come over to your country to settle there once this fund is transferred into your account.We have agreed to offer you twenty percent of this fund (20%) for your assistance and guidance. And we hope that you well be sincere and honest to us.
Thanking you in anticipation for your positive response.

Yours Sincerely,
Modiboh Sow Jnr.

இதயத்திற்கிதமானவை

இந்த வீடியோவை இங்கே பதிவு செய்ய இயலவில்லை, கீழுள்ள இணைப்பின் மூலம் நீங்கள் காணமுடியும்.2.En_Munnurai.wmv

கனடா - கலாபம் தொலைக்காட்சி சார்பாக பிரபல நாடகக் கலைஞர் திரு.பாலேந்திரா, திருமதி.பாலேந்திரா அவர்களின் நேர்முகம். நேர்முகம் செய்தவர்கள் கனடத்தமிழ்க்கவிஞர் திரு.கந்தசாமி மற்றும் கே.எஸ்.பாலச்சந்திரன் அவர்கள். ஒரு நேர்முகம் எப்படியிருக்கவேண்டும்? எப்படி நேர்முகம் செய்யவேண்டும் என்பதற்கு இதைவிட ஒரு உதாரணம் தேவையில்லையென நினைக்கிறேன். தொடர்ந்து பாருங்கள்! கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள்!!

காதலித்துப்பார்!

இந்த வீடியோவை இங்கே பதிவு செய்ய இயலவில்லை, கீழுள்ள இணைப்பின் மூலம் நீங்கள் காணமுடியும். 4.kadal_sei.wmv

தமிழோசை

சேது சமுத்திரக்கால்வாய் பற்றிய ஒரு செவ்வி மற்றும் இந்தியாவில் வெள்ளப்பெருக்கு. இன்றைய (ஜுன் 30 சனிக்கிழமை) 'BBC' செய்தி கேட்க இணைப்பை அழுத்தவும் BBCTamil.com Radio Player

கவிப்பேரரசு வைரமுத்துவின் நான் ரசித்த கவிதைகளில் ஒன்று
எரிக்கத் தெரிந்த நெருப்பு


கிழக்கே தீர்ந்தது வழக்கு -
இரண்டாய்க் கிழிந்து விடிந்தது கிழக்கு -
அட உழைத்த பிறகும் நிரம்ப வில்லையே
உழவன் வீட்டு உழக்கு.
கட்டி இருப்பது கந்தை -
அதுவும் ஒட்டி இருப்பது விந்தை -
இதைத் தட்டிக் கேட்கும்
தைரிய மில்லை மானுட மா இது? மந்தை.
கரும்பும் இங்கே இருக்கும் -
விலை கண்ணீர்போலக் கரிக்கும் -
இங்கே வருஷத் துக்கொரு திவசம்
மாதிரி பொங்கல் வைப்பது வழக்கம்.
வேர்வை வருமே அதைத்தான் -
நிஜ விதையாய் பூமியில் விதைத்தான் -
புது ஆர்வத் தோடவன் விளைத்த
பயிரை அறுத்தவனோ ஒரு சைத்தான்.
என்ன உழுதவன் நிலமை? -
அவனோ இறகை விற்கும் பறவை -
போடா புண்ணியம் என்ன பாவம் என்ன
பூவை விற்பவள் விதவை.
பொங்கி எழட்டும் நெருப்பு -
அந்த நெருப்புக் கென்ன பொறுப்பு? -
அட இங்கே தோழா
இனிமேல் வேண்டும்
எரிக்கத் தெரிந்த நெருப்பு.

மனிதன் பெண்களைத் தனக்குரிய ஒரு சொத்தாகக் கருதுகின்றானே ஒழிய தன்னைப் போன்ற உணர்ச்சிக்கு அருகதையுள்ள ஓர் உயிர் என்று மதிப்பதில்லை.


- பெரியார்

யூஸ்ஃபுல் டிப்ஸ்

  • செல்லில் பேட்டரி குறைவாக இருப்பதாக வைத்துக் கொள்ளுவோம். *3370# என்று அழுத்தினால் செல்லில் 50% பேட்டரி அதிகரிக்கும். அடுத்து எப்போது சார்ஜ் செய்கிறீர்களோ அப்போது இந்த 50% வீதமும் சார்ஜ் ஆகிவிடும்.
  • உலகளவில் அவசர கால அழைப்புக்கு 112 என்ற எண் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் தொடர்பு எல்லைக்கு வெளியே இருப்பதாக வைத்துக் கொள்ளுவோம். ஆபத்தான நேரங்களில் 112 எண்ணை அழைத்தால், அருகிலுள்ள தொடர்பு எல்லையின் அவசரகால எண்ணை அறியலாம். உங்களின் செல்போன் பூட்டப்பட்டிருந்தாலும் 112 என்ற எண்ணை அழைக்கலாம். தொடர்ந்து படியுங்கள்...
Tamil magazine Tamil news,poem,story,movie & song reviews

காலத்தால் அழியாத கருத்துள்ள பாடல்கள் எத்தனையோ பாடகர்களால் பாடப்பட்டிருக்கிறது. அதில் "திருச்சி லோகநாதன்" அவர்களும் ஒருவர். அவர் பாடிய சில பாடல்களை இங்கே உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்.
Powered by eSnips.com

இன்றைய குறள்

குணமென்னுங் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயுங் காத்தல் அரிது

குணக்குன்றுகளான பெரியவர்கள் கோபம் கொண்டால் அந்தக் கோபம் அவர்கள் உள்ளத்தில் ஒரு கணம் கூட நிலைத்து நிற்காது

அறத்துப்பால் : நீத்தார் பெருமை

June 29, 2007

நாலடியார்

1. அறத்துப்பால்

1.4 அறன் வலியுறுத்தல்

அரும்பெறல் யாக்கையைப் பெற்ற பயத்தால்
பெரும்பயனும் ஆற்றவே கொள்க - கரும்பூர்ந்த
சாறுபோல் சாலவும் பின்உதவி மற்றதன்
கோதுபோல் போகும் உடம்பு


- சமண முனிவர்கள்
தமிழ் விளக்கவுரை


அரிதுக்கு அரிதாக கிடைத்த மானுடப் பிறவியை, அரியவை செய்யவே பயன்படுத்தவேண்டும். அப்படிச் செய்யாவிடில் இந்த உடம்பு கரும்பின் சாற்றை எடுத்துவிட்டு அதன் சக்கையைக் கெடவிடுவது போலக் கெட்டுப்போகும்.
- ஆதியக்குடியான்

ஆங்கில விளக்கவுரை


Having obtained a human body, so difficult of attainment, so act as to procure great merit by it, for in the next birth charity will profit thee as the juice of the sugarcane when pressed, while thy body will decay like the refuse cane.

by Rev.F.J.Leeper, Tranquebar

தமிழோசை

வெள்ளிகிழமை மதியம் சிவகங்கையில் நடந்த ஒரு குண்டுவீச்சு சம்பவத்தில் அந்நகராட்சியின் தலைவரும் திமுகவைச் சேர்ந்தவருமான முருகனும் அவரது கார் ஓட்டுநரும் கொல்லப்பட்டுள்ளனர். மதுரை மேற்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி. இன்றைய (ஜுன் 29 வெள்ளிக்கிழமை) "BBC" செய்தி கேட்க கீழுள்ள இணைப்பை அழுத்தவும். BBCTamil.com BBCTamil.com Radio Player

சுவாமி போதானந்த சரஸ்வதி அவர்களின் நேர்முகம் அமெரிக்கப் பண்பலை It's different - News, Views & Music (KZSU Stanford 90.1 FM radio show) வரிசையில் ஒலிபரப்பானதன் ஒலிப்பதிவை இங்கு பதிவு செய்திருக்கிறேன். நேர்முகம் கண்டவர் எனது அருமை நண்பர் திரு.ஸ்ரீ அவர்கள், சான் ஃபிரான்சிஸ்கோ, கலிபோர்னியா - அமெரிக்கா. Please "Play" and Listen the Speech.
Powered by eSnips.com


நம் மக்கள் நிலை!

நம் நாட்டுப் பெரும்பாலான மக்களின் சமூக நிலைமையை எடுத்துக் கொண்டால் மனிதத் தன்மையின் ஆதிநிலை என்று சொல்லப்படும் காட்டுமிராண்டித்தனமும், சாவேஜஸ் என்னும் மிக்கப் பிராயத்தன்மையும், இன்னமும் இருந்து வருவதாகத்தான் நான் காண்கிறேன். நாம் முன்னேற்றம் அடைந்த மக்களால் மதச்சண்டை, சாதிச்சண்டை, வகுப்புச் சண்டை, உயர்வு தாழ்வுக் கொடுமை பத்தாயிரக்கணக்கான வருடங்களுக்கு முன் இருந்த மாதிரியே இன்றும் இருந்து வர முடியுமா? என்று யோசித்துப் பாருங்கள்
- பெரியார்

இன்றைய குறள்

நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்

சான்றோர்களின் பெருமையை, இந்த உலகில் அழியாமல் நிலைத்து நிற்கும் அவர்களது அறவழி நூல்களே எடுத்துக்காட்டும்

அறத்துப்பால் : நீத்தார் பெருமை

June 28, 2007

சேதி வந்தது : சிறுகதை - வாஸந்தி

அடுப்பில் அரிசியும் பருப்பும் சேர்ந்து வெந்ததும் கனகம்மா தயாராக இருந்த புளிக்குழம்பை அதில் ஊற்றி நன்றாகக் கலக்கினாள். கொப்பரையுடன் கூடிய மசாலாக் குழம்பின் வாசனை மிகச் சரியான பதத்தில் இருப்பதைக் கண்டு திருப்தி ஏற்பட்டது. எல்லாம் சேர்ந்து கொதித்து சுருளும்போது இறக்கி நெய்யில் கடுகையும் முந்திரிப்பருப்பையும் ஒரு பிடி கருவேப்பிலையும் தாளித்துப் மேலாகப் பரப்பியபோது ரமணா இதைச் சாப்பிட வந்தே ஆகவேண்டும் என்று தோன்றிற்று. அவனுக்குப் பிடித்த சேமியா பாயசம் தயாராகியிருந்தது.சேமியாவுடன் நான்கு கிராம்பையும் நெய்யில் வறுத்து பாலில் வேகவிடவேண்டும் அவனுக்கு.சாப்பாட்டில் அத்தனை வக்கணைப் பேசும் பிள்ளை. இதையெல்லாம் மறந்திருக்கமுடியாதுமைன்று காலை எழுந்திருக்கும்போது கனகம்மாவுக்குக் காரணம் புரியாமல் மனசு பரபரத்தது. நேற்று பின்னிரவிலோ இல்லை இன்று விடியலிலோ கண்ட கனவின் நினைவு ரம்யமாக மனசில் அமர்ந்திருந்தது.கனவு வீட்டில் கல்யாணக்களைக் கட்டியிருந்தது.தோரணமும் விளக்குகளுமாக.ரமணா கழுத்தில் மாலையுடன் நின்றான்.கனவு கலைந்த பிறகும் அந்தக் கனவுக் காட்சியில் அவள் மீண்டும் மீண்டும் திளைக்க முயன்றாள்.Please click the link
Thinnai

என்று மாறும் இந்த அவலம்??

ஒரு சினிமாவை எப்போது மனிதன் சினிமாவாகப் பார்க்கிறானோ அப்போதுதான் நமது தேசம் முன்னேறும். இன்றும் இப்படிப்பட்ட பரிதாபத்திற்குரிய பைத்தியக்காரர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

இங்கு அமெரிக்காவில் 'சிவாஜி' பார்க்க வந்த அனைவருக்கும் ஒருவர் பொங்கல் வழங்கினார் என்றால் பாருங்கள்! திரைகடலோடியும் திரவியம் தேடச்சொன்னால், இவர்கள் தியேட்டர் வாசலில் பொங்கல் வழங்குகிறார்கள். படித்த மேதாவிகளே இப்படி என்றால், பாவம் பாமரன் என்ன செய்வான்?

காலையிலிருந்து இரவுவரைக் கணவனின் வரவை நோக்கி பற்றவைத்த அடுப்போடு காத்துக்கிடக்கும் மனைவி, தந்தையின் மடிபார்த்து தட்டோடு காத்துக்கிடக்கும் குழந்தைகளை விட்டு திரையரங்கு வாசலிலும், வானவேடிக்கையிலும் தன்னை மறந்து திரியும் தமிழா! உன்னுடைய வியர்வையை வெள்ளிப்பணமாக்கி உயர்ந்த சினிமா நட்சத்திரங்களையும், அரசியல்வாதிகளையும் என்று நீ புறக்கணிக்கிறாயோ! அன்றுதான் தரணிபோற்றும் தமிழ் மண்ணில் ஏழ்மை மறையும்.
ஃப்ளாட்பாரங்களில் வாழ்க்கை நடத்தும் எனதருமைத் தோழனே! அடை மழைவந்தால் குழந்தை குட்டிகளோடு, பெட்டி, படுக்கையோடு எங்கே ஒதுங்குவதென்று சிந்தித்தாயா? உயரத்தில் இருக்கும் கூட்டத்தை உயர உயர உயர்த்திவிட்டு என் தோழனே நீ பாதாளம் நோக்கிப் பயணப்பட்டுக்கொண்டிருக்கிறாயே! என்று மாறும் இந்த அவலம்?

"சிவாஜி" பற்றி சங்கரின் நேர்முகம் 1


"சிவாஜி" பற்றி சங்கரின் நேர்முகம் 2

"சிவாஜி" பற்றி சங்கரின் நேர்முகம் 3

"சிவாஜி" பற்றிய "ரஜினி"யின் நேர்முகம்

திருமாவளவன்

முறுக்கிய மீசையுடன் முஷ்டி மடக்கி கர்ஜிக்கிறார். துப்பாக்கியால் எதிரியை குறி பார்க்கிறார். இரத்தம் வழியும் உடையுடன் கண் சிவக்கிறார். இவையெல்லாம் 'கலகம்' படத்துக்காக சிறுத்தைகளின் தலைவர் திருமாவளவன் காட்டும் திருமுகங்கள். இநதப் படத்தில் பாலசிங்கம் என்ற பேராசிரியராக நடிக்கிறார். ஏற்கனவே இவர் நடித்த 'அன்பு தோழி' சிக்கலில் உள்ளது. புலிகள் ஆதரவு பேச்சு மற்றும் காட்சிகள் இருப்பதாக சான்றிதழ் தர மறுக்கிறது சென்ஸார். இந்நிலையில் 'கலகம்' படத்தில் இவரது பெயர் பாலசிங்கம். புலிகளின் அரசியல் ஆலோசகர் மறைந்த ஆண்டன் பாலசிங்கத்தின் பெயர். Please click the link http://www.tamilbird.com/June'07/230607thiruma.html

Secret behind Rajini's colour

If you have watched Sivaji..You have observed the fair complexion of Rajinikanth in the song Oru Koodai Sunlight. Everyone thought it was make-up that made Superstar Rajinikanth look like a European in that song, but the secret is about a year of computer graphics.

"We used cutting edge grafting technology and it was Shankar's brain child," revealed the film's cinematographer KV Anand. "For the first time grafting technology has been used for an Indian film which was made possible by a Chennai based company Indian Arts who had worked in Shankar's earlier films," he said.

One of the dancers, Jacky, was chosen by Shankar and Rajini's skin tone was matched with her's. The six and a half minute song was shot in Spain. "Each shot of Rajni's in the song was once again shot with Jacky and was sent to Indian Arts.


Since the lighting varies in indoor and outdoor, to match the skin tone, expressions, lip and body movements of the two was a challenging task,"
explained Anand. A total of 6700 frames were been for post production. Rajinikanth himself was amazed after watching the song.

தமிழோசை

இன்றைய "BBC" (ஜுன் 28 வியாழக்கிழமை) செய்தி கேட்க இணைப்பை அழுத்துக BBCTamil.com Radio Player

கன்னியாகுமரி கடலோரக் கடலரிப்பு பற்றிய ஒரு பதிவு

இன்றைய குறள்

சுவையொளி ஊறோசை நாற்றமென் றைந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு

ஐம்புலன்களின் இயல்பை உணர்ந்து அவற்றை அடக்கியாளும் திறன் கொண்டவனையே உலகம் போற்றும்

அறத்துப்பால் : நீத்தார் பெருமை

வைத்தியத்திலேயே இரண்டு முறை சொல்வார்கள்
1 - Physicians Cure. 2 - Surgeons Cure. அதாவது மருந்து கொடுத்து வியாதியை சொஸ்தப்படுத்துவது ஒருமுறை. கத்தியைப் போட்டு அறுத்து ஆபரேஷன் செய்து நோயாளியைப் பிழைக்க வைப்பது இன்னொரு முறை. என்னைப் பொறுத்தவரையில் நான் நோயாளி செத்துப் போனாலும் பரவாயில்லை, நோய்க்குக் கஷ்டமில்லாமல் மருந்து மட்டுமே கொடுத்து சொஸ்தப்படுத்தலாம் என்று கருதுபவன் அல்ல. நோயாளிக்குக் கஷ்டம் ஏற்பட்டாலும் பரவாயில்லை, அவன் சாகக்கூடாது என்று கருதி அறுத்து ஆபரேஷன் செய்யும் இரண்டாவது முறையில் நம்பிக்கை உள்ளவன். எனது இலட்சியமெல்லாம் கஷ்டமாக இருந்தாலும் ஆள் பிழைக்க வேண்டுமே என்பது தான். நம்முடைய தோல் அப்படி லேசான தோல் அல்ல. 2 000- 3,000 வருஷங்களாக தடித்துப்போன கெட்டியான தோல். அதில் உறைக்க வேண்டுமென்றால் சிறிது கடினமாகத்தான் சொல்லியாக வேண்டும். உங்கள் நாட்டு மக்களைப் பாருங்கள்! உலகத்தையும் பாருங்கள்!சிந்தியுங்கள்! பரிகாரம் தேடுங்கள்!

- பெரியார் "குடிஅரசு"- 1947